Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
Ranil_SoniyaL.jpg
 
 


இனவாதம்

-நடராஜா முரளிதரன்-

தமிழ், சிங்கள இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் காடுக்காத சூழ்நிலையிலே காணப்பட்ட போதிலும் ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகளுக்கான நோர்வே அரசின் முயற்ச்சியைப் புறந்தள்ள முடியாத கட்டத்திலேயே இரு தரப்பினரும் அங்கு சென்றதாகக் கருதிக் கொள்ளலாம். அங்கு நோர்வே எதிர்பார்த்தது நிகழவில்லை. அதன் விளைவுகளை மக்கள் வேறு கட்டங்கள் வாயிலாக அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. தொடர்ந்து கொண்டிருக்கும் படுகொலைகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. குறுங் காலத்துக்குள்ளாகவே அல்லைப்பிட்டி, வங்காலை, பேசாலைப் படுகொலைகள் என நீட்சி பெற்று உச்சக் கட்டமாக கெப்பிற்றிக்கொலாவைப் படுகொலைகள் என நடந்தேறியுள்ளன.கெப்பிற்றிக்கொலாவையில் அரசியல் அதிகாரத்தில் எத்தகைய பாத்திரங்களையும் வகிக்காத 15 குழந்தைகள் அடங்கலாக 65க்கும் அதிகமான சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. எனவே இவ்வாறான மனிதப் படுகொலைகளைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்ச்சிகளையே அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் அதிகார சக்திகள் மேற்கொள்ளும். உலக வரலாறுகள் எங்கணும் மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இனத்தின் பேரால், மதத்தின் பேரால், மொழியின் பேரால், ஊரின் பேரால், உறவுகளின் பேரால் என இப் படுகொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நாடுகள், இனங்கள், மக்கள் கூட்டம் போன்றவை பிறிதொரு ஆக்கிரமிப்பாளனால் ஆக்கிரமிக்கப்படும் போதும், பலம் பொருந்திய நாடுகள் பொருளாதாரச் சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகள் மனித மாண்பினைச் சிதைக்கின்றன. காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.ஆகவேதான் நாகரீக சமுதாயங்கள் மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் காப்பதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளை, யாப்புக்களை, சட்டங்களை இயற்றி வந்துள்ளன. ஆனாலும் ஆளுமை படைத்த சமுதாயங்களால் இத்தகைய சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து வௌ;வேறு விதங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கத்தையும் இன்றைய உலகில் நாம் காணுகின்றோம்.இந்தச் சூழ்நிலையில் இன முரண்பாடு கூர்மையடைந்து முற்றிப் போயிருக்கும் இத் தருணத்தில் சராசரிச் தமிழ், சிங்கள மக்களிடையே இவ்வாறான மனிதப் படுகொலைகள் தீவிர இனவாதத்தையே மேலோங்கச் செய்யும். தமிழர் படுகொலைகளால் சிங்களவர்கள் மனம் மகிழ்வதும், சிங்கள உயிரிழப்புக்களால் தமிழர்கள் குதூகலம் அடைவதும் ஒப்பீட்டு அடிப்படையில் மேலோங்கி நிற்கும். எல்லா இனங்களையும் சேர்ந்த நல்ல மனிதர்கள் கூட இத்தகைய மனோபாவத்துள் ஆழ்ந்து, அமிழ்ந்து விடும் போது இனவாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. சிங்கள இனவாதம் மேலும், மேலும் தீவிரம் அடைதல் தமிழ் மக்களுடைய தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை வலுவான வாதமாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதமானது ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச சக்திகளைப் பகைத்துக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தும், தந்திரோபாய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டும், அரைகுறைத் தீர்வுகளுக்கு இணங்கியும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடரும் என்ற உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” புரிந்த ரணிலிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முற்படுகையில் கிணறு வெட்டப் பூதம் எழுந்த கதையாய் இன்னுமொரு இனவாதப் பூதம் மேலும் வலுவான நிலையில் சர்வதேசத்தைத் தனக்குத் துணையாக அழைத்துள்ளமையை இங்கு நாம் நோக்க வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக அரசின் நிலைப்பாடுமாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டுக்கு இந்த வருடம் இது வரையில் 3500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சென்றுள்ளார்கள். கடந்த பல வருடங்களாகத் தமிழகத்திற்குச் சென்று தஞ்சமடைந்து முகாம்களில் வாழும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் துயர் தோய்ந்த வாழ்வு சொல்லில் விபரிக்க முடியாதது. ஆயினும் இந்திய மத்திய அரசானது இலங்கையின் இறைமைக்குட்பட்டு இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் இலங்கை அரசுடன் முரண்படாது செல்கின்ற போக்கையே இன்று பட்டும் படாமலும் கடைப்பிடித்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதே உத்தியையே இந்திய அரசு கையாளும். அதே சமயத்தில் இந்திய அரசானது மறை முகமாக ஈழப் பிரிவினைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல இராணுவ உதவிகளையும் வழங்கும். குறிப்பாகக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கும்.எனவே இன்றைய உலகச் சூழலும், இந்தியச் சூழலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமாயில்லாத சூழலில் எதைத்தான் செய்வது? ஏன்ற கேள்வி எழுகின்றது. மேற்குலகின் நண்பன் என்று கருதப்படும் ரணில் ஈழத் தமிழ்; மக்களுக்குத் தீர்வை வழங்கியிருப்பார் என்பதை நான் நம்ப மறுத்தாலும் ரணில் அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலைமைகள் மேலும் சிறப்பாகத் தமிழர் தரப்புக்கு அமைந்திருக்கும் என்பதையே இங்கு நான் கூற விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மிலிந்த மொறகொட வழங்கிய பத்திரிகைப் பேட்டியில் “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” என்ற பொறி தமிழர் தரப்புக்கு எதிராக அமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் விளை பொருட்களில் ஒன்றுதான் “கருணா” என்பதும் அப் பேட்டியில் உள்ளடங்கியிருந்தது. இதனால் எழுந்த சர்ச்சையே ரணில் விக்கிரமசிங்கா சூட இருந்த மகுடத்தைக் குப்புறக் கவிழ்த்தது. ரணிலின் “பாதுகாப்பு வலைப்பின்னலில்” நாடு துண்டாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழி மேற்குலகினால் வழங்கப்பட்டிருக்கும் என்ற உண்மைக்கு அப்பால் தமிழர் தரப்பு அச்சப்படுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லையென்றே நான் எண்ணுகின்றேன். “கருணா” குறித்த மிலிந்த மொறகொடவின் கூற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்த மொழியப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களாக அமையும் வாய்ப்புக்களையும் ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் மறுபுறத்தில் ரணில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பிடித்திருந்தால் தமிழர் தரப்பு சர்வ தேச மட்டங்களிலே இன்னும் ஆற்ற வேண்டியிருந்த அரசியல் பணிகளுக்கான கால அவகாசம் கிடைத்திருக்கும்.ஐரோப்பியத் தடை நிகழ்ந்திராது. உலகெலாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும், தாய் நிலத்துக்குமான உறவு அமைதிச் சூழல் காரணமாக அதிகரிக்கும் பயணப் போக்குவரத்துக்களினால் மேலும், மேலும் இறுக்கமடைந்திருக்கும்.சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ரணில் பெற்ற நிலையில் ரணிலை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் தமிழர் தரப்புக்குக் கிடைத்திருக்கும்.இதற்கும் அப்பால் இனவாதப் படுகொலைக் களங்களிலே தற்காலிக அமைதிக்கான கால இடைவெளி இன்னும் சிறிது நீண்டு விரிந்திருக்கும்

http://nmuralitharan.blogspot.com/2006/07/blog-post.html

  • Replies 50
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

பிந்திய பிழை, முந்திய பிழையை சரியாக்காது.

இங்கே  கேள்வியும்

தப்புதலும்  அதுவன்று

அங்கே  முடிவெடுத்தது  புலிகள்  என்றால்

இப்போ  முடிவெடுப்பது தமிழ் மக்கள்?

அப்படியாயின் தவறு  புலிகளிடமோ  தமிழ்  மக்களிடமோ  இல்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இங்கே  கேள்வியும்

தப்புதலும்  அதுவன்று

அங்கே  முடிவெடுத்தது  புலிகள்  என்றால்

இப்போ  முடிவெடுப்பது தமிழ் மக்கள்?

அப்படியாயின் தவறு  புலிகளிடமோ  தமிழ்  மக்களிடமோ  இல்லை

 

அன்று தவறு புலிகளிடம், மக்களிடம் அல்ல. அது மக்களாக எடுத்த முடிவல்ல. மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, மறு சிந்தனையின்றி அவர்கள் சொல்படி நடந்தார்கள்.

இன்று கிழக்கில் அப்படி ஒரு தலைமை இல்லை. ஆனால் சில்லறைகள் செய்யும் கோத்தா-முஸ்லீம் எதிரி, எனவே எம் நண்பன் எனும் சிறு பிள்ளைதனமான பிரசாரத்தால் பெருமளவு மக்கள் ஈர்க்கப் பட்டு, தாமாகவே கோத்தாவுக்கு போடப் போகிறார்கள்.

இதுதான்2005/2019 வித்தியாசம்.

ஆகவே அன்று தவறு புலிகளிடம் இன்று தவறு மட்டு/அம்பாறை மக்களிடம்.

ஆனால் இதில் வெளியில் இருந்து நாம் சொல்ல ஏதுமில்லை. ஜனநாயகம் அல்லவா? அவர்கள் தம் விருப்புக்கு ஏற்ப ஒரு முடிவை எடுப்பதுதான் முறை.

அதை சுட்டிக்காட்டும் அருகதை கூட எமக்கு இல்லை. கருத்து மட்டும் தெரிவிக்கலாம்.

Edited by goshan_che

2015 இன் முடிவுகளின் பின் தென்னிலங்கையில், குறிப்பாக சிங்கள கடும்போக்காளர்கள், சிங்கள புத்திசீவிகள், பேராசிரியர்கள், பிக்குகள் மத்தியில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்தும் அவர் வெல்ல முடியாமல் போனதன் காரணம் சிறுபான்மை இனங்கள் ஒன்று திரண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தமையால் தான் எனபதை ஜீரணிக்க முடியாமல் இருந்தனர். வெளிப்படையாகவே இதற்கு எதிராக தம் கருத்துகளை மிதவாத பத்திரிகளைகளான லங்காதீப போன்றவற்றில் கூட எழுதி வந்தனர்.

இது சிங்கள நாடு, இது சிங்கள பூமி, தமிழர்கள் சோனகர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என மகாவம்ச கோட்பாட்டை அப்படியே நம்பும் அவர்களால் சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமை தம் ஒன்றுபட்ட தெரிவை நிராகரிக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த 4 வருடங்களில் அந்த ஒற்றுமையை ரிசாட், ஹிஸ்புல்லா, முரளிதரன் எனும் கருணா, அத்தாவுல்லா, அலிசாஹிர் மெளலானா, கல்முனை பிரதேச சபை, உள்ளூர் அரசியல்வாதிகள் போன்றோரின் ஆதரவுடன் சிறுக சிறுக அசைத்து விட்டு ஈற்றில் சஹ்றானைக் கொண்டு பாரியளவில்  குலைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர்.

கோசான் ஒரு இடத்தில் குறிப்பிட்ட போன்று, மட்டக்களப்பு தேவாலயத்துக்கு குண்டு ஏன் கொண்டு கொண்டு வரப்பட்டது என்பதன் காரணம் இப்பொழுது எம் கண் முன் விரிகின்றது.

கிழக்கு மக்கள் கோத்தா வந்தால் முஸ்லிம்களை அடக்கி ஆள அது தமிழர்களுக்கு சார்பாக அமையும் என நினைத்தால் அது மிகத் தவறான முடிவாகவே கண்டிப்பாக நூற்றுக்கு நூறு விகிதம் அமையும். கோத்தா  + மகிந்த + விமல் வீரவன்ச +உதய கம்பல போன்ற கடும் இனவாத அணி தமிழர்களுக்கு சார்பாகவும் நடக்க போவதில்லை, முஸ்லிம்களுக்கு சார்பாகவும் நடக்கப் போவதில்லை. இரண்டையும் பிரித்து வைப்பதற்காக முன்னை விட இன்னும் அதிகமாகவே செயலாற்றும். இதில் அதிகம் பலியாகப் போவது கிழக்கு தமிழ் மக்கள் தான். ஏனெனில் முஸ்லிம்களுக்கு என்று கொஞ்சமாவது குரல் கொடுக்க இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றின் உதவிகளும் இலங்கைக்கு தேவை.

வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான பிரிவு கோத்தாவின் வெற்றியுடனே ஆரம்பிக்க போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான பிரிவு கோத்தாவின் வெற்றியுடனே ஆரம்பிக்க போகின்றது.

அதே எனது பயமும் வேதனையும் கூட

யாழ் களக்கருத்தாளர்களிடமே அதை  காணமுடிகிறது

இனிவரும்  காலம் யாழ்களமும் இரு துருவங்களாகலாம்????😥😥

  • கருத்துக்கள உறவுகள்

இன்று குர்திஸ் இன மக்களை  சிரியா ரஸ்யா  துருக்கி  ஈராக் என்று வரிசை கட்டி அடிக்கிறார்கள்.
ஐ எஸ் எல் எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பல உயிர் இழப்புகளுக்கு மத்தியில் இவர்கள்தான் போராடி 
பல இடங்களில் இருந்து அவர்களை விரட்டினார்கள்.

குர்திஷ் போராளிகளின் தவறு ( 2019இல் விட்ட) ? என்று கட்டுரை வடிக்க பல தமிழருக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாதுதான் உண்மை நிலை. கொஞ்சம் என்றாலும் தெரிந்துகொண்டால் .....
விட்ட தவறை திருத்துகிறோம் ..... வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்று கிளம்பி விடுவார்கள். 

பிரபாகரன் பிடிவாதம் பிடிக்காமல் இருந்து இருந்தால் 87இல் இந்தியா சுதந்திரம் தந்திருக்கும் என்று 
பல இந்திய இராணுவ தளபதிகள் என்ன நடந்தது என்று புத்தகங்கள் எழுதிய பின்னும் ... கூச்சம் இன்றி எழுதுகிறார்கள். புலிகள் இல்லாவிட்டால் விடிவு வந்திருக்கும் என்று முணுப்பும் 2009தோடு காணவில்லை.

புலிகளுக்கு எதிரி என்பது சிங்கள அரசு என்ற நிலையில்தான் இங்கே பலரும் தமது கருத்தை நிறுவ நிற்கிறார்கள். இப்படி ஒரு மனித பேரவலத்தை 2009 ஏப்ரலில் செய்ய கோத்தாவே தயங்கியதாகவும்  சோனியாகாந்தி நிறுத்தவேண்டாம் என்று கூறியதாகவும் சில முக்கிய சிங்கள இராணுவ அரசியல் ஆட்கள் சொல்கிறார்கள்.

பின்பு 2005 தேர்தலில் இருந்து பின் நகர்ந்து ......... ராஜீவை கொன்றதால்தான் முள்ளிவாய்க்கால் வந்தது என்று 
தந்திரமாக 13-14 வருடம் பின்போவார்கள் .......... அதுக்கும் ஏதும் எழுதினால் ....... பிரபாகரன் 77இல் பஸ்ஸை கொளுத்தியதுதான்  எல்லாத்துக்கும் காரணம் என்ற இடத்துக்குதான் பொய் சேருவார்கள்.

இப்படி நான் எழுதியதால் .... சிலர் உங்களை போன்றவர்களால்தான் முள்ளிவாய்க்காலே வந்தது என்று எழுதுவார்கள் இல்லை......  பலர் எழுதியே இருக்கிறார்கள். 

2005 தேர்தல் புறக்கணிப்பு இல்லது இருப்பின் ரணிலை ஜனாதிபதியாக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புற காரணிகளை எவ்வாறு மாற்றியிருக்கும்?  எந்த இடத்தில் போர் முடிந்து இருக்கும்? ஏன் அந்த இடத்தில்  முடிய வேண்டும்? என்ற எந்த கேள்வியும் அவர்களிடம் பதில் இருக்காது ..... ஆனால் இப்படி முடிந்திருக்காது  என்று மட்டும் நம்புகிறார்கள்.  கடந்த 3000-4000 வருடமாக பில்லியன் கணக்கான மக்கள் கடவுள்  மேலே இருக்கிறார் என்றுதான் நம்புகிறார்கள் ...... ஏன் இருக்கிறார்? ஏன் நாம் அவரை வணங்க வேண்டும்  என்பதுக்கான பதில்கள் மட்டும் வெறும் சர்வாதிகார  போக்காக இருக்கிறது... ஆனால் கருணை மிகுந்தவர்  என்று இங்கே முரண்படுகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

இன்று குர்திஸ் இன மக்களை  சிரியா ரஸ்யா  துருக்கி  ஈராக் என்று வரிசை கட்டி அடிக்கிறார்கள்.
ஐ எஸ் எல் எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பல உயிர் இழப்புகளுக்கு மத்தியில் இவர்கள்தான் போராடி 
பல இடங்களில் இருந்து அவர்களை விரட்டினார்கள்.

குர்திஷ் போராளிகளின் தவறு ( 2019இல் விட்ட) ? என்று கட்டுரை வடிக்க பல தமிழருக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாதுதான் உண்மை நிலை. கொஞ்சம் என்றாலும் தெரிந்துகொண்டால் .....
விட்ட தவறை திருத்துகிறோம் ..... வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்று கிளம்பி விடுவார்கள். 

பிரபாகரன் பிடிவாதம் பிடிக்காமல் இருந்து இருந்தால் 87இல் இந்தியா சுதந்திரம் தந்திருக்கும் என்று 
பல இந்திய இராணுவ தளபதிகள் என்ன நடந்தது என்று புத்தகங்கள் எழுதிய பின்னும் ... கூச்சம் இன்றி எழுதுகிறார்கள். புலிகள் இல்லாவிட்டால் விடிவு வந்திருக்கும் என்று முணுப்பும் 2009தோடு காணவில்லை.

புலிகளுக்கு எதிரி என்பது சிங்கள அரசு என்ற நிலையில்தான் இங்கே பலரும் தமது கருத்தை நிறுவ நிற்கிறார்கள். இப்படி ஒரு மனித பேரவலத்தை 2009 ஏப்ரலில் செய்ய கோத்தாவே தயங்கியதாகவும்  சோனியாகாந்தி நிறுத்தவேண்டாம் என்று கூறியதாகவும் சில முக்கிய சிங்கள இராணுவ அரசியல் ஆட்கள் சொல்கிறார்கள்.

பின்பு 2005 தேர்தலில் இருந்து பின் நகர்ந்து ......... ராஜீவை கொன்றதால்தான் முள்ளிவாய்க்கால் வந்தது என்று 
தந்திரமாக 13-14 வருடம் பின்போவார்கள் .......... அதுக்கும் ஏதும் எழுதினால் ....... பிரபாகரன் 77இல் பஸ்ஸை கொளுத்தியதுதான்  எல்லாத்துக்கும் காரணம் என்ற இடத்துக்குதான் பொய் சேருவார்கள்.

இப்படி நான் எழுதியதால் .... சிலர் உங்களை போன்றவர்களால்தான் முள்ளிவாய்க்காலே வந்தது என்று எழுதுவார்கள் இல்லை......  பலர் எழுதியே இருக்கிறார்கள். 

2005 தேர்தல் புறக்கணிப்பு இல்லது இருப்பின் ரணிலை ஜனாதிபதியாக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புற காரணிகளை எவ்வாறு மாற்றியிருக்கும்?  எந்த இடத்தில் போர் முடிந்து இருக்கும்? ஏன் அந்த இடத்தில்  முடிய வேண்டும்? என்ற எந்த கேள்வியும் அவர்களிடம் பதில் இருக்காது ..... ஆனால் இப்படி முடிந்திருக்காது  என்று மட்டும் நம்புகிறார்கள்.  கடந்த 3000-4000 வருடமாக பில்லியன் கணக்கான மக்கள் கடவுள்  மேலே இருக்கிறார் என்றுதான் நம்புகிறார்கள் ...... ஏன் இருக்கிறார்? ஏன் நாம் அவரை வணங்க வேண்டும்  என்பதுக்கான பதில்கள் மட்டும் வெறும் சர்வாதிகார  போக்காக இருக்கிறது... ஆனால் கருணை மிகுந்தவர்  என்று இங்கே முரண்படுகிறார்கள்.  

ஏனென்றால் அநேகமான தமிழர்கள்  பார்வையாளர்களகவே  இருந்தார்கள்

அல்லது  மதில்  மேல்  பூனையாக  மட்டும்...?

அதனுடன் பயணித்தவர்களுக்கு  அந்த  நேரம்  கோத்தபாய யாரென்றே  தெரியாது

மகிந்த  சண்டை  விரும்பி  என்றும்  தெரியாது

ரணிலின் நரித்தந்திரத்துக்குள்ளிருந்து  விடுபடணும்

போர் நிறுத்த  ஒப்பந்தத்தை  பாவித்து

எதையாவது  பெற்று  விடணும்

அவ்வளவு  தான் அன்றைய   நிலமை  தேவையும்  கூட.

 

  • கருத்துக்கள உறவுகள்

""சஜித் - சோறில்லை எனச் சொல்வார்.

கோட்ட - சோறில்லை “போடா” எனச் சொல்லி ரெண்டு அடியும் போடுவார்.

இருவரிடமும் சோறு கிடையாது ஆனால் ஒருவரிடம் அடி கிடைக்கும்.

இதுதான் நான் சொல்ல வந்த கிழக்கு மக்கள் விடப்போகும் பிழை. 2005 இல் அப்போ சொன்னது விளங்காதது போல, 2019 இல் இப்போ சொல்வதும் விளங்காது""

 

Che,

உங்களின் எதிர்வுகூறல் சரியோ பிழையோ தெரியாது ஆனால் உங்கள் விளக்கம் அலாதியானது.  😃

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பிந்திய பிழை, முந்திய பிழையை சரியாக்காது.

கிருபன் சொன்னதுபோல் 2029 இல் ரகு திறக்க போகும் திரியில் சொல்கிறேன்.

சஜித் - சோறில்லை எனச் சொல்வார்.

கோட்ட - சோறில்லை “போடா” எனச் சொல்லி ரெண்டு அடியும் போடுவார்.

இருவரிடமும் சோறு கிடையாது ஆனால் ஒருவரிடம் அடி கிடைக்கும்.

இதுதான் நான் சொல்ல வந்த கிழக்கு மக்கள் விடப்போகும் பிழை. 2005 இல் அப்போ சொன்னது விளங்காதது போல, 2019 இல் இப்போ சொல்வதும் விளங்காது.

கோசான், நாமலும் அரசியலில் நுழைவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்...அவருக்கும்,அங்குள்ள இளம் வயதினர்,தமிழரோடான நற்பு நன்றாகத் தான் இருக்குது ..

 .ஒருத்தரிடம் இருந்து ஒன்றை பெற வேண்டுமானால் கட்டாயம் நேருக்கு ,நேர் மோத வேண்டிய அவசியமில்லை....பணிந்து போயும் காரியத்தை சாதிக்கலாம் 


சோறு தாறது, சாப்பிடுவது எல்லாம் இரண்டாம் பட்சம்...அதை இருந்து சாப்பிட நிலம் வேண்டும் அல்லவா 😶

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

2015 இன் முடிவுகளின் பின் தென்னிலங்கையில், குறிப்பாக சிங்கள கடும்போக்காளர்கள், சிங்கள புத்திசீவிகள், பேராசிரியர்கள், பிக்குகள் மத்தியில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்தும் அவர் வெல்ல முடியாமல் போனதன் காரணம் சிறுபான்மை இனங்கள் ஒன்று திரண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தமையால் தான் எனபதை ஜீரணிக்க முடியாமல் இருந்தனர். வெளிப்படையாகவே இதற்கு எதிராக தம் கருத்துகளை மிதவாத பத்திரிகளைகளான லங்காதீப போன்றவற்றில் கூட எழுதி வந்தனர்.

இது சிங்கள நாடு, இது சிங்கள பூமி, தமிழர்கள் சோனகர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என மகாவம்ச கோட்பாட்டை அப்படியே நம்பும் அவர்களால் சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமை தம் ஒன்றுபட்ட தெரிவை நிராகரிக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த 4 வருடங்களில் அந்த ஒற்றுமையை ரிசாட், ஹிஸ்புல்லா, முரளிதரன் எனும் கருணா, அத்தாவுல்லா, அலிசாஹிர் மெளலானா, கல்முனை பிரதேச சபை, உள்ளூர் அரசியல்வாதிகள் போன்றோரின் ஆதரவுடன் சிறுக சிறுக அசைத்து விட்டு ஈற்றில் சஹ்றானைக் கொண்டு பாரியளவில்  குலைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர்.

கோசான் ஒரு இடத்தில் குறிப்பிட்ட போன்று, மட்டக்களப்பு தேவாலயத்துக்கு குண்டு ஏன் கொண்டு கொண்டு வரப்பட்டது என்பதன் காரணம் இப்பொழுது எம் கண் முன் விரிகின்றது.

கிழக்கு மக்கள் கோத்தா வந்தால் முஸ்லிம்களை அடக்கி ஆள அது தமிழர்களுக்கு சார்பாக அமையும் என நினைத்தால் அது மிகத் தவறான முடிவாகவே கண்டிப்பாக நூற்றுக்கு நூறு விகிதம் அமையும். கோத்தா  + மகிந்த + விமல் வீரவன்ச +உதய கம்பல போன்ற கடும் இனவாத அணி தமிழர்களுக்கு சார்பாகவும் நடக்க போவதில்லை, முஸ்லிம்களுக்கு சார்பாகவும் நடக்கப் போவதில்லை. இரண்டையும் பிரித்து வைப்பதற்காக முன்னை விட இன்னும் அதிகமாகவே செயலாற்றும். இதில் அதிகம் பலியாகப் போவது கிழக்கு தமிழ் மக்கள் தான். ஏனெனில் முஸ்லிம்களுக்கு என்று கொஞ்சமாவது குரல் கொடுக்க இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றின் உதவிகளும் இலங்கைக்கு தேவை.

வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான பிரிவு கோத்தாவின் வெற்றியுடனே ஆரம்பிக்க போகின்றது.

நிழலி  உதை எல்லாம் யார் செய்தது?....தூண்டி விட்டது யார்?...எய்தவனான ஜ.தே.கட் சியை விட்டுப் போட்டு அதை செய்து முடித்த  அம்பை நொந்து என்ன பயன்?...கோத்தா வந்தால் மட்டு மக்களுக்கு/தமிழர்களுக்கு  சார்பாக செயற்படுவார் என்பதால் அவர் வர வேண்டும் என ஒருத்தரும் அங்கு எதிர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் .
கோத்தா என்டால் முஸ்லீம்களுக்கு ஒரு பயம் இருக்குது...அவர்களை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சக்தி சஜீத்தை விட இவருக்கு உள்ளது...முஸ்லீம் ,தமிழ் கலவரத்தை தூண்டினாலும் அதை அடக்கும் சக்தியம் இவருக்கு உண்டு.
இரண்டாவது அபிவிருத்தி...நீங்கள் விரும்பினாலோ/விரும்பா விட்டாலோ வடக்கை அபிவிருத்தி செய்தது முழுக்க மகிந்தா  தான் ...கிழக்கை கோத்தா மூலம் அபிவிருத்தி செய்யலாம் என்று அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
மற்றப்படி ஏற்கனவே வேற திரிகளில் எழுதின மாதிரி இருவரும் அரசியல் ரீதியாய் ஒரு துரும்பை கூட அசைக்கப் போவதில்லை ...சஜீத் சார்ந்த கட்சி அமசடக்காய் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் 
கிழக்கில் தொடர்ந்தும் வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கபடுகின்றனர்,நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கபடுகின்றன...ஜ.தே.க  கட்டுப்படுத்த முடியாத படியால் கோத்தா அவர்களை கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன் 
வட ,கிழக்கு பிரிவு என்பது உங்களை மாதிரி கண பேர் கிழக்கு மக்களது பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ளாமையில் இருந்து தொடங்குகிறது  

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையாக உள்ளது. தமிழ் மக்களுக்கென்று ஒருவரும் இல்லை. நேற்று ஒரு காணொலியில் கோத்தவுக்கு வாக்களிக்கா விட்டால், ஹம்பானைக்கு (செம்மையாக) அடி வாங்க வேண்டும் என ஒருவர் சொல்ல அதை ஒர் சட்டத்தரணியும் ஆமோதிக்கின்றார் எல்லோரும் சிரிக்கின்றார்கள்.  என்ன ஒரு ஆணவமான பேச்சு.

தன் குடும்பத்தை அழித்த கோத்தவிற்கே மலைய‌கத்திலும், கொழும்பிலும் வடக்கு கிழக்கிழும் தமிழர்கள் வாக்களிக்கின்றார்கள் என்றால் எது இவர்களை அவ்வாறு தூண்டுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோசான், நாமலும் அரசியலில் நுழைவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்...அவருக்கும்,அங்குள்ள இளம் வயதினர்,தமிழரோடான நற்பு நன்றாகத் தான் இருக்குது ..

 .ஒருத்தரிடம் இருந்து ஒன்றை பெற வேண்டுமானால் கட்டாயம் நேருக்கு ,நேர் மோத வேண்டிய அவசியமில்லை....பணிந்து போயும் காரியத்தை சாதிக்கலாம் 


சோறு தாறது, சாப்பிடுவது எல்லாம் இரண்டாம் பட்சம்...அதை இருந்து சாப்பிட நிலம் வேண்டும் அல்லவா 😶

 

நீங்கள் நெடுண்சாண் கிடையாக விழுந்தாலும் - மகிந்த தரப்பில் ஒன்றும் தரமாட்டார்கள். மட்டகளப்புக்கு மகிந்த தரப்பு செய்யும் அபிவிருத்தி என்பது சில பிரதி அமைசர்களை தந்து ஒரு ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதோடு முடிந்து விடும். 

கோட்டா வென்ற மறுகணமே நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடெங்கும் உள்ள முஸ்லீம் வாக்குகளை கவரும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும். மட்டு-அம்பாறையின் 3 மிஞ்சிப்போனால் 4 எம்பிகளுக்காக, நாடெங்கும் உள்ள முஸ்லீம் வாக்குகளை மகிந்த தரப்பு பகைக்காது. மட்டு அம்பாறை எம்பிகளாக வருபவர்களை ரெண்டு பஜரோவை கொடுத்து மடக்கி விடுவார்கள்.

கடைசியில் நீரும் இல்லை நிலமும் இல்லை சோறும் இல்லை என்றே ஆகும்.

இருந்து பாருங்கள் ஒவ்வொரு பகுதியாக சிங்கள மயப்பட்டுத்தி அதனூடே அபிவிருத்தி வரும். 

வடக்கில் மகிந்த செய்த அத்தனை அபிவிருத்தியும் இராணுவ முகாமம்களை மையப்படுத்தியே இருந்தது.

யாரும் பயணிக்காத பொன்னாலை கீரிமலை வீதியை கார்பெட் ஆக்குவார்கள் (ஆமி போக) ஆனால் மக்கள் அதிகம் பாவிக்கும் வீதிகளை 90 இல் இருந்த நிலையிலே விடுவார்கள். 

தேனீர் கடை முதல் நட்சத்திர விடுதி வரை ராணுவமே நடத்தியது. வடக்கில் குறிப்பாக யாழில் உண்மையிலேயே ரணில் அரசு ஒப்பீட்டளவில் கொடுத்த சுதந்திரமும் அபிவிருத்தியும் அதிகம். 

நான் முன்பே சொன்னது போல 2015 தோற்ற நாள் முதலே கிழக்கில் முஸ்லீம்களை தமிழருடன் சிண்டு முடிந்து விட்டு தமிழ் வாக்குகளை அள்ளும் திட்டம் தொடங்கி விட்டது. 

2005 இல் எப்படி “யதார்தவாதி, குள்ள நரி இல்லை” எனும் முகமூடியை போட்டு புலியை ஏமாறினார்களோ அதேபோல, 2019 “முஸ்லீம் விரோதி” எனும் முகமூடியை போட்டு மட்டு-அம்பாறை தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நாயாற்றில், நீராவியடியில் கோவிலில் பிணத்தை எரிக்கும் பேரினவாதத்தோடு சமரசமாய் போ சாதிக்க முடியும் என்பது வெறும் பகற்கனவு. 

இது நாளைக்கு மாமாங்கத்தில் பிக்குவை எரிக்கும் நிலையில் கொண்டு வந்து விடும்.

ராஜபக்சேக்கள் 100% துவேசிகள். யுஎன்பி 80% துவேசிகள். 

ஆனால் ஒன்று தமிழருக்கு மொட்டை அடித்து  அலகு குத்துவதில் ராஜபக்சேக்கள் அசகாய சூரர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

சோறு தாறது, சாப்பிடுவது எல்லாம் இரண்டாம் பட்சம்...அதை இருந்து சாப்பிட நிலம் வேண்டும் அல்லவா 😶

வளர்ச்சி அடைந்த நாடுகளில் செல்வந்தர்களின் விருந்துகளில் கூட நின்று கொண்டும், நடந்து கொண்டும், மற்றவர்களுடன் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக, வாடகை நிலத்தில் சாப்பிடும் வழக்கத்தை படங்களிலாவது பார்த்திருப்பீர்களே?

வேறு வார்த்தைகளில் சொன்னால், பழைய பயங்களும், பழக்கங்களும் உங்கள் அழிவுக்கு காரணங்களாக வரும் போல தெரிகிறது.

napoleonbonaparte1-2x.jpg

fear-quote-1.jpg

 

Edited by Gowin

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நீங்கள் நெடுண்சாண் கிடையாக விழுந்தாலும் - மகிந்த தரப்பில் ஒன்றும் தரமாட்டார்கள். மட்டகளப்புக்கு மகிந்த தரப்பு செய்யும் அபிவிருத்தி என்பது சில பிரதி அமைசர்களை தந்து ஒரு ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதோடு முடிந்து விடும். 

கோட்டா வென்ற மறுகணமே நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடெங்கும் உள்ள முஸ்லீம் வாக்குகளை கவரும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும். மட்டு-அம்பாறையின் 3 மிஞ்சிப்போனால் 4 எம்பிகளுக்காக, நாடெங்கும் உள்ள முஸ்லீம் வாக்குகளை மகிந்த தரப்பு பகைக்காது. மட்டு அம்பாறை எம்பிகளாக வருபவர்களை ரெண்டு பஜரோவை கொடுத்து மடக்கி விடுவார்கள்.

கடைசியில் நீரும் இல்லை நிலமும் இல்லை சோறும் இல்லை என்றே ஆகும்.

இருந்து பாருங்கள் ஒவ்வொரு பகுதியாக சிங்கள மயப்பட்டுத்தி அதனூடே அபிவிருத்தி வரும். 

வடக்கில் மகிந்த செய்த அத்தனை அபிவிருத்தியும் இராணுவ முகாமம்களை மையப்படுத்தியே இருந்தது.

யாரும் பயணிக்காத பொன்னாலை கீரிமலை வீதியை கார்பெட் ஆக்குவார்கள் (ஆமி போக) ஆனால் மக்கள் அதிகம் பாவிக்கும் வீதிகளை 90 இல் இருந்த நிலையிலே விடுவார்கள். 

தேனீர் கடை முதல் நட்சத்திர விடுதி வரை ராணுவமே நடத்தியது. வடக்கில் குறிப்பாக யாழில் உண்மையிலேயே ரணில் அரசு ஒப்பீட்டளவில் கொடுத்த சுதந்திரமும் அபிவிருத்தியும் அதிகம். 

நான் முன்பே சொன்னது போல 2015 தோற்ற நாள் முதலே கிழக்கில் முஸ்லீம்களை தமிழருடன் சிண்டு முடிந்து விட்டு தமிழ் வாக்குகளை அள்ளும் திட்டம் தொடங்கி விட்டது. 

2005 இல் எப்படி “யதார்தவாதி, குள்ள நரி இல்லை” எனும் முகமூடியை போட்டு புலியை ஏமாறினார்களோ அதேபோல, 2019 “முஸ்லீம் விரோதி” எனும் முகமூடியை போட்டு மட்டு-அம்பாறை தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நாயாற்றில், நீராவியடியில் கோவிலில் பிணத்தை எரிக்கும் பேரினவாதத்தோடு சமரசமாய் போ சாதிக்க முடியும் என்பது வெறும் பகற்கனவு. 

இது நாளைக்கு மாமாங்கத்தில் பிக்குவை எரிக்கும் நிலையில் கொண்டு வந்து விடும்.

ராஜபக்சேக்கள் 100% துவேசிகள். யுஎன்பி 80% துவேசிகள். 

ஆனால் ஒன்று தமிழருக்கு மொட்டை அடித்து  அலகு குத்துவதில் ராஜபக்சேக்கள் அசகாய சூரர்.

கோசான்.நாங்கள் இங்கே இருந்து கொண்டு யாழில் குத்தி முறிவதால் எதுவும் மாறி விடப் போறது இல்லை...கோத்தாவா ? சஜீத்தா என்பதை அங்கிருப்பவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...தமிழர்கள் சஜீத்தை தெரிவு செய்தால் அது அவர்களது விருப்பம் என்று விட்டு விடுவேன்...அங்கு வாழ்வது அவர்கள் அல்லவா.


நீங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரம்,அபிவிருத்தி செய்தது ரணில் அரசு என்று எழுதியுள்ளீர்கள்...உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் தமிழர் பகுதியில் அவர்கள் செய்தவற்றை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்..இப்போதைய இவர்களது அரசாசசியில் தானே பிக்குகள் கோயில்களை அபகரிப்பது எல்லாம் நடந்து கொண்டு இருக்குது 


நாயாற்றில், நீராவியடி,கல்முனை பிரச்சனை எல்லாம் யாருடைய ஆட்சியில்  நடக்குகின்றது .
தமிழ்,முஸ்லீம் இடையே சீண்டி விடுவதை  ராஜபக்ச சகோதரர்கள் மட்டும் செய்யவில்லை... ரணிலின் கட் சியம் தான் செய்யுது ..அவர்கள் அமசடக்காய்  செய்து போட்டு அமைதியாய் இருந்து விடுவார்கள்...இவர்கள் நேரே செய்து சண்டித்தனமாய் தங்களை காட்டிக் கொடுத்து விடுவார்கள் 


மைத்திரியின் ஆடசியை மேலால பார்த்தால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாய் தெரியும்...ஆனால் உள்ளே போய் பார்த்தால் அவரது ஆட்சியின் கீழ் தான் தமிழரது நிலங்கள் கொஞ்சம்,கொஞ்சமாக அபகரிப்படுவது ,தமிழர்கள் புறக்கணிப்படுவது நடந்து கொண்டு இருந்தது...சஜீத்  ஆட் சிக்கு வந்தால் இதே மாதிரித் தான் நடக்கும்.


கடைசியில் தமிழர்கள் கோவணமும் இல்லாமற் தான் நிக்க வேண்டும் 

9 hours ago, Jude said:

வளர்ச்சி அடைந்த நாடுகளில் செல்வந்தர்களின் விருந்துகளில் கூட நின்று கொண்டும், நடந்து கொண்டும், மற்றவர்களுடன் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக, வாடகை நிலத்தில் சாப்பிடும் வழக்கத்தை படங்களிலாவது பார்த்திருப்பீர்களே?

வேறு வார்த்தைகளில் சொன்னால், பழைய பயங்களும், பழக்கங்களும் உங்கள் அழிவுக்கு காரணங்களாக வரும் போல தெரிகிறது.

நீங்கள் தான் அப்படி பயப்படுகிறீர்கள்... அதனால் தான் கோத்தாவுக்கு பயந்து சஜீத்துக்கு உங்கள் ஆதரவை கொடுக்குறீர்கள்  😐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோசான்.நாங்கள் இங்கே இருந்து கொண்டு யாழில் குத்தி முறிவதால் எதுவும் மாறி விடப் போறது இல்லை...கோத்தாவா ? சஜீத்தா என்பதை அங்கிருப்பவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...தமிழர்கள் சஜீத்தை தெரிவு செய்தால் அது அவர்களது விருப்பம் என்று விட்டு விடுவேன்...அங்கு வாழ்வது அவர்கள் அல்லவா.


நீங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரம்,அபிவிருத்தி செய்தது ரணில் அரசு என்று எழுதியுள்ளீர்கள்...உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் தமிழர் பகுதியில் அவர்கள் செய்தவற்றை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்..இப்போதைய இவர்களது அரசாசசியில் தானே பிக்குகள் கோயில்களை அபகரிப்பது எல்லாம் நடந்து கொண்டு இருக்குது 


நாயாற்றில், நீராவியடி,கல்முனை பிரச்சனை எல்லாம் யாருடைய ஆட்சியில்  நடக்குகின்றது .
தமிழ்,முஸ்லீம் இடையே சீண்டி விடுவதை  ராஜபக்ச சகோதரர்கள் மட்டும் செய்யவில்லை... ரணிலின் கட் சியம் தான் செய்யுது ..அவர்கள் அமசடக்காய்  செய்து போட்டு அமைதியாய் இருந்து விடுவார்கள்...இவர்கள் நேரே செய்து சண்டித்தனமாய் தங்களை காட்டிக் கொடுத்து விடுவார்கள் 


மைத்திரியின் ஆடசியை மேலால பார்த்தால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாய் தெரியும்...ஆனால் உள்ளே போய் பார்த்தால் அவரது ஆட்சியின் கீழ் தான் தமிழரது நிலங்கள் கொஞ்சம்,கொஞ்சமாக அபகரிப்படுவது ,தமிழர்கள் புறக்கணிப்படுவது நடந்து கொண்டு இருந்தது...சஜீத்  ஆட் சிக்கு வந்தால் இதே மாதிரித் தான் நடக்கும்.


கடைசியில் தமிழர்கள் கோவணமும் இல்லாமற் தான் நிக்க வேண்டும் 

நீங்கள் தான் அப்படி பயப்படுகிறீர்கள்... அதனால் தான் கோத்தாவுக்கு பயந்து சஜீத்துக்கு உங்கள் ஆதரவை கொடுக்குறீர்கள்  😐

அடிக்கோடிட்ட கருத்தோடு எனக்கும் 100% உடன்பாடே. அதனால்தான் நான் குத்தி முறியவில்லை. ஆனால் எனக்கு என்று ஒரு கருத்து இருக்கும்தானே? யாரையும் அப்படி போடுங்கள் போடாதீர்கள் என நான் சொல்லவில்லை. 

மட்டு-அம்பாறை சொந்தங்கள் தாமாக போய் ஆப்பில் இருக்கிறார்கள் என என் மனதுக்கு படுகிறது. அதை மட்டுமே சொல்கிறேன்.முடிவு எப்போதும் அவர்களுடையதே.

மைத்திரி, மகிந்த-கோட்ட, சஜித் மூவருக்கும் வேறுபாடுகள் உண்டு. இப்போ இலங்கையில் இருக்கும் சிங்கள தலைவர்களில் ஒப்பீட்டளவில் தமிழருக்கு கெடுதி குறைவாக செய்ய கூடியவராக எனக்கு சஜித் தெரிகிறார். அவ்வளவே.

நீராவியடி விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் - ஞானசாரவின்-கோட்டவின் ஆட்கள். 

இதுதான் கோட்டவின் கேம். தமக்கு விசுவாசமான பிக்குகளை விட்டு தமிழரை, முஸ்லீமை நோண்டுவது. அதற்கு யுஎன்பி நடவடிக்கை எடுத்தால்- ஐயோ பெளத்ததை அரசு காக்கவில்லையே என சிங்கள மக்களிடம் ஓலமிடுவது.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில்- அயே வாயால் பார்தீர்களா யுஎன்பி ஆட்சியில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிறுபான்மையினரிடம் சொல்லுவார்கள்.

இந்த நாடகத்துக்கு

எப்போதும் இரையாபவர்கள் - சிங்கள மக்கள். 

இதுவரை இரையாகாதவர்கள்- தமிழர்கள்.

இடையிடையே இரையாபவர்கள் - முஸ்லீம்கள்.

இந்த தேர்தலில் வடக்கு, திருமலை தமிழர்களும், நாடளாவிய முஸ்லீம்களும் இந்த நாடகத்துக்கு இரையாக மாட்டார்கள் என நினக்கிறேன்.

சிங்கள மக்களில் பலர் வழமை போல் இரையாகிவிட்டனர்.

என் தரவுகளின் அடிப்படையில் மட்டு-அம்பாறை தமிழர்களும் இரையாவார்கள் போலபடுகிறது.

இதற்காகவே 2015 ஜனவரியில் இருந்து அவர்கள் பதப்படுத்தபட்டு வந்தார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அடிக்கோடிட்ட கருத்தோடு எனக்கும் 100% உடன்பாடே. அதனால்தான் நான் குத்தி முறியவில்லை. ஆனால் எனக்கு என்று ஒரு கருத்து இருக்கும்தானே? யாரையும் அப்படி போடுங்கள் போடாதீர்கள் என நான் சொல்லவில்லை. 

மட்டு-அம்பாறை சொந்தங்கள் தாமாக போய் ஆப்பில் இருக்கிறார்கள் என என் மனதுக்கு படுகிறது. அதை மட்டுமே சொல்கிறேன்.முடிவு எப்போதும் அவர்களுடையதே.

மைத்திரி, மகிந்த-கோட்ட, சஜித் மூவருக்கும் வேறுபாடுகள் உண்டு. இப்போ இலங்கையில் இருக்கும் சிங்கள தலைவர்களில் ஒப்பீட்டளவில் தமிழருக்கு கெடுதி குறைவாக செய்ய கூடியவராக எனக்கு சஜித் தெரிகிறார். அவ்வளவே.

நீராவியடி விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் - ஞானசாரவின்-கோட்டவின் ஆட்கள். 

இதுதான் கோட்டவின் கேம். தமக்கு விசுவாசமான பிக்குகளை விட்டு தமிழரை, முஸ்லீமை நோண்டுவது. அதற்கு யுஎன்பி நடவடிக்கை எடுத்தால்- ஐயோ பெளத்ததை அரசு காக்கவில்லையே என சிங்கள மக்களிடம் ஓலமிடுவது.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில்- அயே வாயால் பார்தீர்களா யுஎன்பி ஆட்சியில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிறுபான்மையினரிடம் சொல்லுவார்கள்.

இந்த நாடகத்துக்கு

எப்போதும் இரையாபவர்கள் - சிங்கள மக்கள். 

இதுவரை இரையாகாதவர்கள்- தமிழர்கள்.

இடையிடையே இரையாபவர்கள் - முஸ்லீம்கள்.

இந்த தேர்தலில் வடக்கு, திருமலை தமிழர்களும், நாடளாவிய முஸ்லீம்களும் இந்த நாடகத்துக்கு இரையாக மாட்டார்கள் என நினக்கிறேன்.

சிங்கள மக்களில் பலர் வழமை போல் இரையாகிவிட்டனர்.

என் தரவுகளின் அடிப்படையில் மட்டு-அம்பாறை தமிழர்களும் இரையாவார்கள் போலபடுகிறது.

இதற்காகவே 2015 ஜனவரியில் இருந்து அவர்கள் பதப்படுத்தபட்டு வந்தார்கள்.

 

 

யாழில் யதார்த்தமாய் எழுத கூடியவர்கள் என்ற லிஸ்ட்டில் உங்களையம்  நினைத்து இருந்தேன்...நீங்கள் எழுதுவதை பார்த்தால் சஜீத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ட  உங்கட விருப்பத்தால் ஒப்புக்கு மல்லு கட்டுவது போல்  தெரிகிறது.


ரணில் அரசு தான் ஒப்பிடடளவில் அபிவிருத்தி செய்தது என்று சொன்னீர்கள்...ஆதாரத்தை கேட்டால் அடுத்த கருத்தில் வந்து ஏதோ சாலாப்புகிறீர்கள்.


நீங்கள் சொன்ன மாதிரி  ஞானசாரர் வேண்டுமானால் கோத்தாவின் ஆளாகா இருக்கலாம்,பிக்குவாக இருக்கலாம்...அவர்களை உந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை...அதற்கு நொண்டிக் காரணம் வேறு சொல்கிறீர்கள்... உதைத் தான் நானும்முதலில் இருந்து  சொல்கிறேன் 


ஞானசேரர் தொடங்கி முஸ்லீம்கள் வரைக்கும் தன்ட  கட்டுபாட்டுக்குள் எல்லோரையும் வைத்திருக்கும் சக்தி கோத்தாவுக்கு மட்டுமே உண்டு.


எமது தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு...எனக்கு தனிப்பட்ட ரீதியில் எகோத்தாவை பிடிக்காது...எனக்கு பிடிக்காது என்பதற்காக உண்மை,இல்லை என்றாகி விடாது.

இந்த திரியில் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடமோ அல்லது நிழலியிடமோ ஒழுங்கான பதில் இல்லை...ஆனால் அவர் மறறொரு திரியில் போய் புலம்பிக் கொண்டு நிக்கிறார்.

மட்டு மக்கள் ஏதாவது தங்கள் உரிமை பற்றி கேட்டால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கினம் என்று சொல்லி,சொல்லி அவர்களை அடக்கி இந்த நிலைக்கு அவர்களை கொண்டு வந்தது கூட்டமைப்பும்,உங்களைப் போல ஆட்களும் தான் ...இதில் சிங்கள இனவாதம் இரண்டாவதாய் தான் வருகிறது...முதலில் உங்களை திருத்துங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

மட்டு மக்கள் ஏதாவது தங்கள் உரிமை பற்றி கேட்டால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கினம் என்று சொல்லி,சொல்லி அவர்களை அடக்கி இந்த நிலைக்கு அவர்களை கொண்டு வந்தது கூட்டமைப்பும்,உங்களைப் போல ஆட்களும் தான் ...இதில் சிங்கள இனவாதம் இரண்டாவதாய் தான் வருகிறது...முதலில் உங்களை திருத்துங்கள் 

இங்கே  பிரதேசவாதம்  முன்னிலையில்  இல்லை  சகோதரி

அளப்பெரிய  இழப்புக்கள்

தியாகங்கள் 

அத்தனையும் வீணாகி நடுத்தெருவில்  நிற்கும்

ஒரு  இனத்தின்  முடியாமை  மட்டுமே...

 

இந்த  முடியாமை  நிலைக்கு  வடக்கும்  வரலாம்

கிழக்கைவிட கொஞ்சம் அடுத்தவர்  துன்பம்  குறைவென்பதாலும்

கொஞ்சம் கைவசம்  இருப்பதாலும் சிறிது  காலமெடுக்கலாம்

மற்றும்படி  அடுத்த  அடுத்த  தேர்தலில்  தேசியக்கட்சிகளின்  வெற்றி   தாயகமெங்கும்  பலம் பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

 ""மட்டு மக்கள் ஏதாவது தங்கள் உரிமை பற்றி கேட்டால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கினம் என்று சொல்லி,சொல்லி அவர்களை அடக்கி இந்த நிலைக்கு அவர்களை கொண்டு வந்தது கூட்டமைப்பும்,உங்களைப் போல ஆட்களும் தான் ...இதில் சிங்கள இனவாதம் இரண்டாவதாய் தான் வருகிறது...முதலில் உங்களை திருத்துங்கள் ""

 

அம்மணி ரதி, 

எமது விடுதலை போராட்டத்தில் பிரதேசவாதம் என்ற ஒரு விடயத்தை விநாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவின் பின்னரே நான் அறிந்தேன்.  

 உங்கள் வாதம் முழுவதும் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுக்கப்பட்டதற்க்கான  முழுக் காரணமும் பிரதேசவாதம் என்பதாயும்,  அது சரிதான் என்பது போலவும் அல்லவா இருக்கிறது. 

தமிழ் இனம் காட்டிக்கொடுக்கப்பட்டது  சரிதான் என்கிறீர்களா ??  

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யாழில் யதார்த்தமாய் எழுத கூடியவர்கள் என்ற லிஸ்ட்டில் உங்களையம்  நினைத்து இருந்தேன்...நீங்கள் எழுதுவதை பார்த்தால் சஜீத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ட  உங்கட விருப்பத்தால் ஒப்புக்கு மல்லு கட்டுவது போல்  தெரிகிறது.


ரணில் அரசு தான் ஒப்பிடடளவில் அபிவிருத்தி செய்தது என்று சொன்னீர்கள்...ஆதாரத்தை கேட்டால் அடுத்த கருத்தில் வந்து ஏதோ சாலாப்புகிறீர்கள்.


நீங்கள் சொன்ன மாதிரி  ஞானசாரர் வேண்டுமானால் கோத்தாவின் ஆளாகா இருக்கலாம்,பிக்குவாக இருக்கலாம்...அவர்களை உந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை...அதற்கு நொண்டிக் காரணம் வேறு சொல்கிறீர்கள்... உதைத் தான் நானும்முதலில் இருந்து  சொல்கிறேன் 


ஞானசேரர் தொடங்கி முஸ்லீம்கள் வரைக்கும் தன்ட  கட்டுபாட்டுக்குள் எல்லோரையும் வைத்திருக்கும் சக்தி கோத்தாவுக்கு மட்டுமே உண்டு.


எமது தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு...எனக்கு தனிப்பட்ட ரீதியில் எகோத்தாவை பிடிக்காது...எனக்கு பிடிக்காது என்பதற்காக உண்மை,இல்லை என்றாகி விடாது.

இந்த திரியில் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடமோ அல்லது நிழலியிடமோ ஒழுங்கான பதில் இல்லை...ஆனால் அவர் மறறொரு திரியில் போய் புலம்பிக் கொண்டு நிக்கிறார்.

மட்டு மக்கள் ஏதாவது தங்கள் உரிமை பற்றி கேட்டால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கினம் என்று சொல்லி,சொல்லி அவர்களை அடக்கி இந்த நிலைக்கு அவர்களை கொண்டு வந்தது கூட்டமைப்பும்,உங்களைப் போல ஆட்களும் தான் ...இதில் சிங்கள இனவாதம் இரண்டாவதாய் தான் வருகிறது...முதலில் உங்களை திருத்துங்கள் 

 

ரதி,

1. சஜித் என்ன என்ர சகலையே? அவர் வெண்டா என்ன கெட்டா எனக்கென்ன. ஆனால் 2009-2015, 2015-2019 வரை வடக்கு-கிழக்கு எங்கும் சுற்றியவன் என்அ வகையில். பின்னைய ஆண்டுகளில் நெருக்குவாரம் குறைந்ததை கண்டுள்ளேன்.

2. அபிவிருத்தி- யாழில் நில விடுவிப்பு- இதை ராணுவம் எப்படி எதிர்த்தது என்பது பலருக்கு தெரியாது. மகிந்த இருந்திருந்தால் 2015 ற்கு பின் ஒரு அங்குலமும் விட்டிருக்க மாட்டார்கள். உயர் பாதுகாப்பு வலயத்தை ஒரு ராணுவ cantonment ஆக்கி, அதை ஒரு சிங்கள ஊராக்குவதே திட்டம். இதில் கணிசமான முன்னேற்றம் ரணில் காலத்தில்.

3. அரச நிர்வாகத்தில் ராணுவ தலையீடு வெகுவாக குறைப்பு.

4. முன்னாள் போராளிகள் துன்பிக்க படுவது (harassment) குறைவு.

5. நினைவு கூறும் உரிமை

6. பலாலி விமான நிலையம்

7. உள்ளூர் வீதிகள் புனரமைப்பு

இவை மிக அற்பமான விடயங்கள்தாம் ஆனால் மகிந்த ஆட்சியில் மறுக்கப்பட்ட, கோட்ட ஆட்சியில் மறுக்கப் பட போகும் விடயங்கள் இவை. ஆகவே ஒப்பீட்டளவில் சஜித் ஆட்சிக்காலம் வடக்கு மக்களுக்கு பரவாயில்லை என்பதே என் கருத்து.

மட்டு-அம்பாறை

கிழக்கில் 2009-15, 2015-19 இடையே பாரிய மாற்றம் இல்லை. சொல்லப்போனால் பிள்ளையான் முதல்வர், கருணா பிரதி அமைச்சர் என இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரமும் 2015 இன் பின் இல்லை. 

முஸ்லீம்களுடனா வளப்போட்டி, அவர்கள் பக்கம் இருக்கும் சமனற்ற பலம் - இவை எல்லாவறுக்கும் மேலாக கூட்டமைப்பின் மட்டு-அம்பாறை எம்பிகளின் சோம்பேறித்தனம், செயற்திறனின்மை இவை எல்லா சேர்ந்து, வளர்தெடுக்கப் பட்ட முஸ்லிம் குரோதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் உணர்வுடன் சேர்ந்து மட்டு மக்களை கோட்ட பக்கம் தள்ளியது.

அந்த மக்களை குறை சொல்லி பயனில்லை. கூட்டமைப்பை நம்பி பயனில்லை. ஹிஸ்புல்லாவிடம் இருந்து பாதுகாப்பு யார் தருவார்கள் எனப் பார்க்கும் போது வியாழன் கோட்டவை காட்டுகிறார். அவர்களும் நம்பி போகிறார்கள். ஆனால் இது ஆடுகள் ஓநாயிடம் அடைக்கலம் தேடிய கதை என்பது போக போகத்தான் புரியும்.

பிரதேசவாதம் 

என் தனிப்பட்ட வாழ்வை உங்களுக்கு தெரியாது - எனவே என் கருத்துகளை வைத்து நீங்கள் கூறிய இந்த அபாண்டத்தை இட்டு நான் அதிகம் அலட்டி கொள்ளவில்லை.

ஆனால் கூட்டமைப்பின் குறிப்பாக சுமந்திரனின் அணுகுமுறை யாழ் மையப்பட்டு உள்ளது கண்கூடு. கிழக்கில் உள்ள மக்களின் முதல் பிரச்சினை முஸ்லீம்களுடனா வளப் போட்டி என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. ராணுவத்திடம் இருந்து பலாலி காணிகளை மீட்கும் ஆர்வம், வாழைச்சேனை ஏறாவூரில் கள்ள உறுதி முடித்து பறிபோகும் காணிகளை மீட்பதில் இல்லை. தம் பிரச்சினையை தூக்கி பேச ஒரு ஆமான எம்பி மட்டகளப்பிலும் இல்லை.

இதை இவர்கள் வேண்டும் என்றே செய்கிறாகளா அல்லது unconscious bias ஆக இவர்கள் புத்தி யாழை மையப்படுத்தி ஓடுகிறதா தெரியவில்லை.

திருமலையை சேர்ந்த சம்பந்தருக்கும் இது ஏன் விளங்கவில்லை? 

இப்படி மட்டு-அம்பாறை மக்கள் கோத்தாவை ஆதரிக்க யாழ்மையவாதம் உட்பட பல காரணிகள் உளன.

முஸ்லீம்கள் மீதான கட்டுக்கடங்கா கோபத்தை விட ஏனைய காரணிகள் வலுவானவையும் கூட.

ஆனால் மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தாலும்- இந்த சிக்கல்கள் எல்லாம் கோட்ட வருவதால் கூடுமே ஒழிய குறையப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இங்கே  பிரதேசவாதம்  முன்னிலையில்  இல்லை  சகோதரி

அளப்பெரிய  இழப்புக்கள்

தியாகங்கள் 

அத்தனையும் வீணாகி நடுத்தெருவில்  நிற்கும்

ஒரு  இனத்தின்  முடியாமை  மட்டுமே...

 

இந்த  முடியாமை  நிலைக்கு  வடக்கும்  வரலாம்

கிழக்கைவிட கொஞ்சம் அடுத்தவர்  துன்பம்  குறைவென்பதாலும்

கொஞ்சம் கைவசம்  இருப்பதாலும் சிறிது  காலமெடுக்கலாம்

மற்றும்படி  அடுத்த  அடுத்த  தேர்தலில்  தேசியக்கட்சிகளின்  வெற்றி   தாயகமெங்கும்  பலம் பெறும்.

விசுகு அண்ணா, கீழே மகாராஜாவின் கருத்திற்கு பச்சை போட்டது மூலம் உங்களுக்கு தெரியாமலே அல்லது தெரிந்தோ  நீங்கள் பிரதேசவாதம் கதைக்கிறீ ர்கள் அல்லது உங்களுக்கு அவர்களது பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. புரியவும் மாட்டுது.நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ரதி,

1. சஜித் என்ன என்ர சகலையே? அவர் வெண்டா என்ன கெட்டா எனக்கென்ன. ஆனால் 2009-2015, 2015-2019 வரை வடக்கு-கிழக்கு எங்கும் சுற்றியவன் என்அ வகையில். பின்னைய ஆண்டுகளில் நெருக்குவாரம் குறைந்ததை கண்டுள்ளேன்.

2. அபிவிருத்தி- யாழில் நில விடுவிப்பு- இதை ராணுவம் எப்படி எதிர்த்தது என்பது பலருக்கு தெரியாது. மகிந்த இருந்திருந்தால் 2015 ற்கு பின் ஒரு அங்குலமும் விட்டிருக்க மாட்டார்கள். உயர் பாதுகாப்பு வலயத்தை ஒரு ராணுவ cantonment ஆக்கி, அதை ஒரு சிங்கள ஊராக்குவதே திட்டம். இதில் கணிசமான முன்னேற்றம் ரணில் காலத்தில்.

3. அரச நிர்வாகத்தில் ராணுவ தலையீடு வெகுவாக குறைப்பு.

4. முன்னாள் போராளிகள் துன்பிக்க படுவது (harassment) குறைவு.

5. நினைவு கூறும் உரிமை

6. பலாலி விமான நிலையம்

7. உள்ளூர் வீதிகள் புனரமைப்பு

இவை மிக அற்பமான விடயங்கள்தாம் ஆனால் மகிந்த ஆட்சியில் மறுக்கப்பட்ட, கோட்ட ஆட்சியில் மறுக்கப் பட போகும் விடயங்கள் இவை. ஆகவே ஒப்பீட்டளவில் சஜித் ஆட்சிக்காலம் வடக்கு மக்களுக்கு பரவாயில்லை என்பதே என் கருத்து.

மட்டு-அம்பாறை

கிழக்கில் 2009-15, 2015-19 இடையே பாரிய மாற்றம் இல்லை. சொல்லப்போனால் பிள்ளையான் முதல்வர், கருணா பிரதி அமைச்சர் என இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரமும் 2015 இன் பின் இல்லை. 

முஸ்லீம்களுடனா வளப்போட்டி, அவர்கள் பக்கம் இருக்கும் சமனற்ற பலம் - இவை எல்லாவறுக்கும் மேலாக கூட்டமைப்பின் மட்டு-அம்பாறை எம்பிகளின் சோம்பேறித்தனம், செயற்திறனின்மை இவை எல்லா சேர்ந்து, வளர்தெடுக்கப் பட்ட முஸ்லிம் குரோதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் உணர்வுடன் சேர்ந்து மட்டு மக்களை கோட்ட பக்கம் தள்ளியது.

அந்த மக்களை குறை சொல்லி பயனில்லை. கூட்டமைப்பை நம்பி பயனில்லை. ஹிஸ்புல்லாவிடம் இருந்து பாதுகாப்பு யார் தருவார்கள் எனப் பார்க்கும் போது வியாழன் கோட்டவை காட்டுகிறார். அவர்களும் நம்பி போகிறார்கள். ஆனால் இது ஆடுகள் ஓநாயிடம் அடைக்கலம் தேடிய கதை என்பது போக போகத்தான் புரியும்.

பிரதேசவாதம் 

என் தனிப்பட்ட வாழ்வை உங்களுக்கு தெரியாது - எனவே என் கருத்துகளை வைத்து நீங்கள் கூறிய இந்த அபாண்டத்தை இட்டு நான் அதிகம் அலட்டி கொள்ளவில்லை.

ஆனால் கூட்டமைப்பின் குறிப்பாக சுமந்திரனின் அணுகுமுறை யாழ் மையப்பட்டு உள்ளது கண்கூடு. கிழக்கில் உள்ள மக்களின் முதல் பிரச்சினை முஸ்லீம்களுடனா வளப் போட்டி என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. ராணுவத்திடம் இருந்து பலாலி காணிகளை மீட்கும் ஆர்வம், வாழைச்சேனை ஏறாவூரில் கள்ள உறுதி முடித்து பறிபோகும் காணிகளை மீட்பதில் இல்லை. தம் பிரச்சினையை தூக்கி பேச ஒரு ஆமான எம்பி மட்டகளப்பிலும் இல்லை.

இதை இவர்கள் வேண்டும் என்றே செய்கிறாகளா அல்லது unconscious bias ஆக இவர்கள் புத்தி யாழை மையப்படுத்தி ஓடுகிறதா தெரியவில்லை.

திருமலையை சேர்ந்த சம்பந்தருக்கும் இது ஏன் விளங்கவில்லை? 

இப்படி மட்டு-அம்பாறை மக்கள் கோத்தாவை ஆதரிக்க யாழ்மையவாதம் உட்பட பல காரணிகள் உளன.

முஸ்லீம்கள் மீதான கட்டுக்கடங்கா கோபத்தை விட ஏனைய காரணிகள் வலுவானவையும் கூட.

ஆனால் மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தாலும்- இந்த சிக்கல்கள் எல்லாம் கோட்ட வருவதால் கூடுமே ஒழிய குறையப் போவதில்லை.

கோசான்,நீங்கள் கிழக்கை பற்றி சொன்ன கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு  ஆனால் அந்த கடைசி பந்தியைத் தவிர... சஜீத் ஒன்றும் எனக்கு எதிரி இல்லை😉

இதை ஒருவர் தனது மு.பு எழுதி இருந்தார்...இத்தனைக்கும் அவர் ஒரு டொக்ரர்.;
1. சகோதர இனத்தின் ஒட்டுமொத்த ஆதிக்கம்
2. கிழக்கின் பிராந்திய நலன்களில் அசட்டையீனம்
3. தமிழரசின் நெகிழ்வற்ற பிடிவாதம்
4. பதவி ஆசையும் கட்சியின் கட்டமைப்புக்குள் புதியவர்களை உள்வாங்காத தன்மையும்
5. நடப்பு கால பிரச்சனைகளில் ஈடுபாடின்மையும் உதாசீனமும்
6. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புக் கொடாமை
7. வடமாகாண உறுப்பினர்களிடம் தங்கியிருக்கும் போக்கு
8. சுயநலம் சார்ந்த அரசியல்
9. இயலாமை
10. எதேச்சாதிகார போக்கு
இவைகளை எல்லோரையும் அரவணைத்து கொண்டு நம்பிக்கை வைத்து சரியான திட்டமிடலுடன் முன்னெடுக்க முடியாவிட்டால் நீண்டகாலத்தில் தமிழ் தேசியத்திற்கான பாதிப்புகள் உருவாவதற்கு அல்லது வேறு சக்தி மூலங்களை நோக்கி திசை திருப்ப படுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏதுவாகின்றன.
இதற்கு உங்களால் இலகுவாக கொடுக்கக்கூடிய பெயர் #துரோகி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

கோசான்,நீங்கள் கிழக்கை பற்றி சொன்ன கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு  ஆனால் அந்த கடைசி பந்தியைத் தவிர... சஜீத் ஒன்றும் எனக்கு எதிரி இல்லை😉

இதை ஒருவர் தனது மு.பு எழுதி இருந்தார்...இத்தனைக்கும் அவர் ஒரு டொக்ரர்.;
1. சகோதர இனத்தின் ஒட்டுமொத்த ஆதிக்கம்
2. கிழக்கின் பிராந்திய நலன்களில் அசட்டையீனம்
3. தமிழரசின் நெகிழ்வற்ற பிடிவாதம்
4. பதவி ஆசையும் கட்சியின் கட்டமைப்புக்குள் புதியவர்களை உள்வாங்காத தன்மையும்
5. நடப்பு கால பிரச்சனைகளில் ஈடுபாடின்மையும் உதாசீனமும்
6. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புக் கொடாமை
7. வடமாகாண உறுப்பினர்களிடம் தங்கியிருக்கும் போக்கு
8. சுயநலம் சார்ந்த அரசியல்
9. இயலாமை
10. எதேச்சாதிகார போக்கு
இவைகளை எல்லோரையும் அரவணைத்து கொண்டு நம்பிக்கை வைத்து சரியான திட்டமிடலுடன் முன்னெடுக்க முடியாவிட்டால் நீண்டகாலத்தில் தமிழ் தேசியத்திற்கான பாதிப்புகள் உருவாவதற்கு அல்லது வேறு சக்தி மூலங்களை நோக்கி திசை திருப்ப படுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏதுவாகின்றன.
இதற்கு உங்களால் இலகுவாக கொடுக்கக்கூடிய பெயர் #துரோகி

 

 

large.24DEB9A7-53F7-4672-A334-814A13322B43.jpeg.64e763f70180df43223b5c2c4cfe4d28.jpeg

மட்டு-அம்பாறை மட்டுமல்ல மேலே நீங்கள் முகபுத்தகத்தில் இணைத்த நிலைதான் வன்னியிலும்.

ஆனால் முஸ்லீம்களை பயங்காட்டி, கூட்டமைபின் கையாலாகாததனத்தை காட்டி, தமிழர் அரசியலை மாவட்டம், மாவட்டமாக சிதைக்கிறார்கள்.

இந்த நோட்டீஸ் சொல்லாமல் சொல்லும் செய்தி:

வன்னி நிலம் முஸ்லீம் நிலமாகாமல் தடுத்து, சிங்கள நிலமாக்குங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விசுகு அண்ணா, கீழே மகாராஜாவின் கருத்திற்கு பச்சை போட்டது மூலம் உங்களுக்கு தெரியாமலே அல்லது தெரிந்தோ  நீங்கள் பிரதேசவாதம் கதைக்கிறீ ர்கள் அல்லது உங்களுக்கு அவர்களது பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. புரியவும் மாட்டுது.நன்றி 

ரதி, 

நீங்கள் எனது கருத்த்திற்கு பதில் ஒன்றும் கூறவில்லையே.  எந்த அடிப்படையில் பிரதேசவாதம் சம்பந்தமாக புரியாதென்கிறீர்கள் ? 

மனம் திறந்து கூறுங்கள்,  ஒட்டுமொத்த இனத்தின் நலனை விட பிரதேசவாதம் முக்கியமாகப் படுகிறதா  ?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.