Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை உணரவைக்க வந்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை உணரவைக்க வந்ததா?
-------------------------------------------------------------------
இறுமாப்பில் எழுந்தாய்  
நீ மானிடனே 
என்னை வென்றதாய்
என்னைப் புறந்தள்ளி
இமயத்தையும் கடந்தாய்
ஈரேழு உலகும் பறந்தாய்
மறந்தாய் உன்னை;
உன்னை மட்டுமல்ல
என்னையும் மறந்தாய்
எங்கெங்கோ பறந்தாய்
என்னைப் பாதுகாக்க
என்னோடு இணைந்து செல்ல
சிந்திக்கவும் மறந்தாய்
காணும் பொருளெங்கும்
கண்கள் அலைபாய
விண்ணையும் மண்ணையும்
உன் எண்ணப்படி கடந்தாய்
உன்னை அளப்பாய்
என்னையும் அளப்பாய்
ஆனால் அழிக்காதே! 
முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம் 
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!
பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!
சிந்தை கொள்வாய்
சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

உறவுகளே  
நட்புடன்
நொச்சி
 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது கவிதை

யாழ்கள 22 வது அகவைப் பகுதியில் பதிந்திருக்கலாமே நீங்கள் இக் கவிதையை

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கவிதை நொச்சி....பாராட்டுக்கள்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கிறது கவிதை

யாழ்கள 22 வது அகவைப் பகுதியில் பதிந்திருக்கலாமே நீங்கள் இக் கவிதையை

பாராட்டி ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றி.

நீங்கள் சுட்டியபடி  22ஆவது அகவை நிறைவுச் சுய ஆக்கப் பகுதிக்கு மாற்றிய நிர்வாகத்தினருக்கும் நன்றி.

29 minutes ago, suvy said:

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கவிதை நொச்சி....பாராட்டுக்கள்.....!  👍

பாராட்டி ஊக்குவிக்கும் சுவியவர்களுக்கு எனது நன்றி. என்றாலும் உங்கள் சிந்தனையை விடவா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nochchi said:

பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!

உண்மை தான் நொச்சி.
தனியே வந்த மாதிரி தனியே போக வேண்டியது தான்.
கடைசி வழிக்கு கண்ணால் பார்க்கவும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை. கொரோனா போக மீண்டும் மரத்தில் ஏறி விடுவோம். 
பாராட்டுக்கள்  நொச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதம் இயற்கையை வைத்து பாடம் படிக்க வேண்டும்.
மாறக இயற்கைக்கு பாடம் படிப்பிக்கக்கூடாது.
பாராட்டுக்கள் நொச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் நொச்சி.
தனியே வந்த மாதிரி தனியே போக வேண்டியது தான்.
கடைசி வழிக்கு கண்ணால் பார்க்கவும் கிடையாது.

நன்றி . எனது கவிதையை விட உங்கள் கருத்தின் வரிகள் வலிக்கிறது. கடந்த சில வாரங்களாக மக்கள் ஓடும் ஓட்டம்.தேடும் தேடல்கள். நீர் மற்றும் பொருட்களின் கொள்வனவு. மலகூடக்காகிதம் உட்பட காலியான பெருவணிக நிலையங்கள்.....................என்று இந்த உலகுபடும் பாடு. என்ன கரணியம்  புரியாத உலகல்ல. புரிந்தும் அடங்காத உலகு. அடக்க முயலும் இயற்கை............. மீண்டும் நன்றி.

7 minutes ago, Kavallur Kanmani said:

நல்லதொரு கவிதை. கொரோனா போக மீண்டும் மரத்தில் ஏறி விடுவோம். 
பாராட்டுக்கள்  நொச்சி.

உண்மை.தங்களின் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.  
மரங்களையாவது மனிதர் பாதுகாத்தால் மட்டுமே இந்த உலகு வாழும். செய்வோமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

மனிதம் இயற்கையை வைத்து பாடம் படிக்க வேண்டும்.
மாறக இயற்கைக்கு பாடம் படிப்பிக்கக்கூடாது.
பாராட்டுக்கள் நொச்சி.

உண்மை.தங்களின் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. 

எப்போது உணரும் இந்த உலகு. இயற்கையோடு ஒத்துவாழும் உலகு  தொலைந்து தொலைவுக்குப் போக மனிதரை நோக்கி அழிவு நெருங்கிவந்து அப்பப்போ உணர்த்தகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

என்னை உணரவைக்க வந்ததா?

எங்களை உணர வைக்கவே வந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

எங்களை உணர வைக்கவே வந்தது

தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் உணர்ந்துகொள்ளுமா உலகு என்பதே விடைகாணமுடியாத வினா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளான

சண்டமாருதன்

குமாரசாமி

காவலூர் கண்மணி

ஈழப்பிரியன்

நுணாவிலான் ஆகியோருக்கு பாராட்டியதோடு படித்துப் பிடித்துப் புள்ளிகளையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை பதிவில் இந்த காணொளியையும் இணைப்பது பொருத்தமானது  என நினைக்கின்றேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

வணக்கம் நிலாமதி
நீண்ட காலத்தின் பின் உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.

On 3/23/2020 at 7:02 AM, nochchi said:

உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!
பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!

உலக மகாயுத்தங்கள், பிரளயத்துக்கு நெருங்கிய காலங்களுக்கு ஒப்பானது இன்றைய கொறோனா வைரஸ் உலகெங்கும் பரவிய நிலை. பலரையும் சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் நீங்கள் இந்த அழகிய கவிதை மூலம் வெளிக்காட்டியது போல். 

நோய் ஒழிந்து உலக ஒழுங்கு மாறும் போது, மனித மனங்களில் நல்லபடியான மாற்றங்கள் ஏலவே ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 9:02 PM, nochchi said:

பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!
சிந்தை கொள்வாய்
சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

உறவுகளே  
நட்புடன்
நொச்சி
 

இந்த நோயை.. நினைத்து, வீதியில்... காண்பவர் முகங்களில் எல்லாம்.. 
மிகப் பெரிய சோகம்  குடி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சித்திக்க வைத்த... அருமையான கவிதை. நொச்சி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை பதிவில் இந்த காணொளியையும் இணைப்பது பொருத்தமானது  என நினைக்கின்றேன்

 

 சண்டமாருதன் அவர்களே  பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்
.
நன்றி.

6 hours ago, நிலாமதி said:

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

நிலாமதியவர்களே

பாராட்டி மகிழும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. படித்துப் பதிவிட்டமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

உலக மகாயுத்தங்கள், பிரளயத்துக்கு நெருங்கிய காலங்களுக்கு ஒப்பானது இன்றைய கொறோனா வைரஸ் உலகெங்கும் பரவிய நிலை. பலரையும் சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் நீங்கள் இந்த அழகிய கவிதை மூலம் வெளிக்காட்டியது போல். 

நோய் ஒழிந்து உலக ஒழுங்கு மாறும் போது, மனித மனங்களில் நல்லபடியான மாற்றங்கள் ஏலவே ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். 🙂


மல்லிகை வாசம்  அவர்களே படித்துக் கருத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.

 மக்கள் முகங்களில்  ஒருவித அமைதியும் கேள்வியுமான தோற்றம் தெரிவதுபோல் மாற்றங்களும் தோன்றும் என்று நம்புவோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த நோயை.. நினைத்து, வீதியில்... காண்பவர் முகங்களில் எல்லாம்.. 
மிகப் பெரிய சோகம்  குடி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சித்திக்க வைத்த... அருமையான கவிதை. நொச்சி. 

தமிழ்சிறிஅவர்களே படித்துப் பாராட்டிக் கருத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:02 PM, nochchi said:

சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

சிறகு விரிப்பதால்தானே சிகரம் தொடமுடிகின்றது. கொரோனாவுக்கு அடிபணியாமல் உலகம் வெல்லும்தான். ஆனால் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

சிறகு விரிப்பதால்தானே சிகரம் தொடமுடிகின்றது. கொரோனாவுக்கு அடிபணியாமல் உலகம் வெல்லும்தான். ஆனால் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.

முதலில் படித்து கருத்திட்டமைக்கு நன்றி. 

உண்மை. தனியே இருந்து யோசித்தால் அச்சமூட்டுவதாக நிலமை இருக்கிறது. ஆனால் இந்த உலகு இன்னும் உணர்வதாகத் தெரியவில்லை. சில காணொளிகளைப் பார்த்தேன் இளைய தலைமுறையினர் கூட உணராதநியைைக் காண்கின்றேன்.  இந்த அவலத்தில் இருந்து உலகம் விடுபட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம். நீங்கள் கூறியதுபோல் உலகு கொடுத்துக் கொண்டிருக்கும் விலை தாங்கமுடியாததாக இருக்கிறது. 

கிருபன், தமிழ் சிறி, தமிழினிஆகியோரே உங்கள் அனைவருக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி உற்சாகமூட்டியமைக்கும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் மற்றும் இணையவன் ஆகியோரே உங்கள் இருவருக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி உற்சாகமூட்டியமைக்கும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.