Jump to content

கொரோனாத் தாக்கத்துக்குள்ளானவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது இரண்டு விட்ட சகோதரனும் குடும்பத்தவர்களும் மொத்தமாக  ஒன்பது பேர் கரோ நகரில் கொரோனாத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனது சகோதரன் 40 வயது.மனைவி 35 வயது, ஒரு மகன் 10 வயது.மற்றும் எனது சின்னம்மா, சிற்றப்பா, மகள், கணவன், ஒரு மகன் ( வைத்தியர்). மற்றைய மகன் ஆகியோர் ஒன்றாக இரு வீடுகளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நோய் வைத்தியராகக்  கடமைபுரியும் மகனுக்கும் மற்றைய மகனுக்கும் ஒன்றாக தொற்றியுள்ளது. இருவருக்கும் வந்து அவர்கள் 30,33 வலதுகளை உடையவர்கள் என்பதால் குணமாகிவிட்டனர். அவர்களுக்கு வந்து பத்தாம் நாள் மற்றவர்களுக்கும் வந்துள்ளதாம். சின்னம்மாவுக்குத்தான் டயாபற்றிஸ் உள்ளது. மற்றவர்கள் ஓரளவு பரவாயில்லை.

இன்று அவர்களுடன் பேசியபொழுது சகோதரன்தான் பேசினார். கொஞ்சம் மனத்திடமம் ஆரோக்கியமான குடும்பங்கள் என்பதனால் பெரிதாக்கத் தாக்கவில்லை. இன்று நான்காம் நாள். உடல் வழிதான் தாங்க முடியாது இருப்பதாகத் தம்பி கூறுகிறான். பசியே இல்லையாம். ஆனால் உணவு உண்பது நல்லது என்று கூறியபடியால் புளிக்கஞ்சி, பால்கஞ்சி, தோடம்பழம், எலுமிச்சை தேன்விட்டுக் கரைத்தது. என்று உண்கின்றனராம். வாயில் எலுமிச்சை குடிக்கும்போது மற்றும் புளிப்புச் சுவை தெரிவதாகவும், மற்றையவை உண்ணும்போது எல்லாமே இனிப்பதுபோல் இருப்பதாகவும் கூறினார். நாரி உழைவுதானாம் தாங்க முடியவில்லை. எலும்புகளை போட்டு முறித்தெடுப்பதுபோல் இருப்பதாகக் கூறினார். சிலருக்கு வயிற்றோட் டமும் இருக்கிறதாம். டொய்லெற்றுக்குப் போய் வந்த பின்னர் சிறிது உடல்வலி குறைவதுபோல் உணர்வதாகக் கூறுகிறார்.  

வீடடை விட்டு யாரும் வெளியில் செல்லவில்லை. வைத்தியரும் வைத்தியசாலைக்கும் சகோதரர் பொருட்கள் சிலது வாங்கவும் வெளியே சென்றதாகக் கூறினார். இன்னும் நான்கு நாட்களில் தனக்குச் சுகமாகிவிடும் என்று நம்புவதான நம்பிக்கையுடன் இருக்கிறார். சின்னம்மாவும் சிற்றப்பாவும் பத்துவயது சிறுவனும் தான் அதிக நேரம் படுத்திருக்கின்றனராம். பரசிற்றாமோல் மட்டும்தான் தற்போது அனைவரும் எடுக்கின்றனராம். வெளியே மட்டும் போய்விடாதீர்கள் அக்கா என்கிறார். வீட்டுக்குள் ஒரு மருத்துவர் இருப்பதனால் கொஞ்சம் நின்மதியாக இருக்கின்றனர்.        
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியரும் வைத்தியசாலைக்கும் சகோதரர் பொருட்கள் சிலது வாங்கவும் வெளியே சென்றதாகக் கூறினார்.

நோய் உள்ளது என்று தெரிந்தால் ஏன் பொருட்கள் வாங்கவும், வேலைக்கும் செல்கின்றனர்.

அடுத்தவர்களுக்கும் ஆபத்தினை தராமல், உங்களிடம் அல்லது பக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டால், வாங்கி வாசலில் வைத்து விட்டு போவார்கள் தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோய் மாறியவர் தான் பொருட்கள் வாங்கச் சென்றது. பாதுகாப்புக்கு கவசங்கள் அணிந்து பக்கத்த்தில் சுப்பமாக்கற் இருப்பதனால் சென்றுவிட்டு உடனே வந்துள்ளார். நான் கூட அதைக்கூறினேன். ஓடர் செய்தால் வாசலில் கொண்டுவந்து வைத்துட்டுவிட்டுச் செல்வார்கள் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நோய் மாறியவர் தான் பொருட்கள் வாங்கச் சென்றது. பாதுகாப்புக்கு கவசங்கள் அணிந்து பக்கத்த்தில் சுப்பமாக்கற் இருப்பதனால் சென்றுவிட்டு உடனே வந்துள்ளார். நான் கூட அதைக்கூறினேன். ஓடர் செய்தால் வாசலில் கொண்டுவந்து வைத்துட்டுவிட்டுச் செல்வார்கள் என.

டாக்டருக்கு தெரியவேண்டும் அல்லவா... அவருக்கு வருத்தம் மாறினாலும் அவர் ஒரு காவி தான்....

அவர் வீட்டுக்கு கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டார்.... 

வீட்டில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி இருந்தால் அடுத்தவர்கள் தப்பி இருப்பார்கள் அல்லவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

டாக்டருக்கு தெரியவேண்டும் அல்லவா... அவருக்கு வருத்தம் மாறினாலும் அவர் ஒரு காவி தான்....

அவர் வீட்டுக்கு கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டார்.... 

வீட்டில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி இருந்தால் அடுத்தவர்கள் தப்பி இருப்பார்கள் அல்லவா....

வைத்தியர் பாதுகாப்பாய்த்தானாம் இருந்தவர். அந்த சகோதரனால்த்தான் மற்றவைக்கும் வந்ததாக இவர்கள் நினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு,

தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. 

 சிலர் எந்தத் துன்பத்திலும் உறவுகளிடம்கூட உதவிகேட்காதவர்கள் என்றொருபகுதியினரையும் உள்ளடக்கியதே எமது குமுகாயமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் பாதுகாப்பாய்த்தானாம் இருந்தவர். அந்த சகோதரனால்த்தான் மற்றவைக்கும் வந்ததாக இவர்கள் நினைக்கிறார்கள்.

எனது உறவினர் ஒருவர், ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போய், அவரது மனைவி காச்சல் என்று இரண்டு கிழமையாக பெரும் பாடு. வைரஸாக இருக்கும் என்று சந்தேகத்தில் நான் அந்த பக்கமே போகவில்லை. இரண்டு முறை ஆம்புலன்ஸ் வந்து செக் பண்ணி வைரஸ் இல்லை எண்டு சொல்லி, நிமோனியா என்று மருந்து கொடுத்தும் மாறாமல், ஆஸ்பத்திரிக்கு நேர போய், பிளட் டெஸ்ட் எடுத்து, ஒரு நாள் வைத்திருந்து light நிமோனியா என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இது மூன்றாவது கிழமை.  எனக்கெண்டால் சந்தேகம் இருந்தது.

அந்த பர்த்டே பார்ட்டி கொண்டாடியவர்  வைரஸால் பாதிக்கப்பட்டு ICU வில் என்று இன்று செய்தி வந்தது. 

திண்ணையில் மீரா சொன்ன கதையைக் கேட்டு யோசனையாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகள் ஒரு வைத்தியர்
இருந்தும் இந்தக் கொரோனா  வைரஸின் முடிவு வரை அவரை வீட்டிற்கு  
வரவேண்டாம் என்றும் தனிமையிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றும்படி வேண்டியுள்ளேன்.
இப்படியான நேரத்தில் ஒரே குடும்பமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் அவசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எல்லோரும் கவனமாக இருங்கள். கொரோன மட்டுமல்ல வேறு வருத்தங்களும் கவனிக்க முடியாமல் இறப்புக்கள் நடக்கின்றன.

இன்று என் நண்பன்/ சகோதரனின் தாயின் இழப்பு (நிமோனியா?)

நேற்று என்னுடன் கூட படித்தவரின் சகோதரியின் கணவன் (மாரடைப்பு)

நாளை யாரோ????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடமும் துக்ககரமானதாகவும் கவலைதரும் செய்திகளாகவே இருக்கின்றது.இவைகள் கூடிக்கொண்டு போகின்றதே தவிர குறையும் போல் தெரியவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nochchi said:

மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு,

தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. 

 சிலர் எந்தத் துன்பத்திலும் உறவுகளிடம்கூட உதவிகேட்காதவர்கள் என்றொருபகுதியினரையும் உள்ளடக்கியதே எமது குமுகாயமாகும்.

உண்மைதான். இன்று அவர்களுக்கு சிறிது உணவுப்பொருட்களை கவுன்சில் அனுப்பிவைத்ததாம்.

20 hours ago, Nathamuni said:

எனது உறவினர் ஒருவர், ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போய், அவரது மனைவி காச்சல் என்று இரண்டு கிழமையாக பெரும் பாடு. வைரஸாக இருக்கும் என்று சந்தேகத்தில் நான் அந்த பக்கமே போகவில்லை. இரண்டு முறை ஆம்புலன்ஸ் வந்து செக் பண்ணி வைரஸ் இல்லை எண்டு சொல்லி, நிமோனியா என்று மருந்து கொடுத்தும் மாறாமல், ஆஸ்பத்திரிக்கு நேர போய், பிளட் டெஸ்ட் எடுத்து, ஒரு நாள் வைத்திருந்து light நிமோனியா என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இது மூன்றாவது கிழமை.  எனக்கெண்டால் சந்தேகம் இருந்தது.

அந்த பர்த்டே பார்ட்டி கொண்டாடியவர்  வைரஸால் பாதிக்கப்பட்டு ICU வில் என்று இன்று செய்தி வந்தது. 

திண்ணையில் மீரா சொன்ன கதையைக் கேட்டு யோசனையாக இருக்கு.

வீட்டை விட்டு வெளியே போகாதிருப்பதே அவரே வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வாத்தியார் said:

எனது மகள் ஒரு வைத்தியர்
இருந்தும் இந்தக் கொரோனா  வைரஸின் முடிவு வரை அவரை வீட்டிற்கு  
வரவேண்டாம் என்றும் தனிமையிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றும்படி வேண்டியுள்ளேன்.
இப்படியான நேரத்தில் ஒரே குடும்பமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் அவசியம்

உண்மைதான். இங்கு வீட்டில் உள்ள ஒருவருக்கு நோய் இருப்பதை அறிந்தவுடன் வைத்தியர்கள் தாதியர்களை வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தங்குமிடங்களை வைத்தியசாலைக்கு அருகிலேயே ஒழுங்கு செய்து கொடுக்கின்றது NHS.  
என்றாலும் உங்கள் மனவுறுதி பாராட்டத்தக்கது. மகள் நலமுடன் தொடந்து சேவையாற்ற வாழ்த்துக்கள்.

18 hours ago, குமாரசாமி said:

எல்லா இடமும் துக்ககரமானதாகவும் கவலைதரும் செய்திகளாகவே இருக்கின்றது.இவைகள் கூடிக்கொண்டு போகின்றதே தவிர குறையும் போல் தெரியவேயில்லை.

குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ட‌ த‌ம்பி குடும்ப‌ம் கொரோனாவில் இருந்து மீண்டு வ‌ந்த‌து ம‌கிழ்ச்சி /  10வ‌ய‌து சின்ன‌ பைய‌ன் மேல் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்லுங்கோ / அதுங்க‌ளுக்கு தாங்கி கொள்ளும் ச‌க்தி கிடையாது /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக கவனமாக இருக்க வேண்டும், கெட்டித்தனம் வேலைக்காகாது.பகிவுக்கு நன்றி சகோதரி.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

53 minutes ago, பையன்26 said:

உங்க‌ட‌ த‌ம்பி குடும்ப‌ம் கொரோனாவில் இருந்து மீண்டு வ‌ந்த‌து ம‌கிழ்ச்சி /  10வ‌ய‌து சின்ன‌ பைய‌ன் மேல் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்லுங்கோ / அதுங்க‌ளுக்கு தாங்கி கொள்ளும் ச‌க்தி கிடையாது /

ஓம் கவனமாகத்தான் இருக்கினம்

53 minutes ago, suvy said:

மிக மிக கவனமாக இருக்க வேண்டும், கெட்டித்தனம் வேலைக்காகாது.பகிவுக்கு நன்றி சகோதரி.....! 

உண்மைதான் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான். இங்கு வீட்டில் உள்ள ஒருவருக்கு நோய் இருப்பதை அறிந்தவுடன் வைத்தியர்கள் தாதியர்களை வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தங்குமிடங்களை வைத்தியசாலைக்கு அருகிலேயே ஒழுங்கு செய்து கொடுக்கின்றது NHS.  
என்றாலும் உங்கள் மனவுறுதி பாராட்டத்தக்கது. மகள் நலமுடன் தொடந்து சேவையாற்ற வாழ்த்துக்கள்.

குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம் 

அக்கா சொன்னதை பிழையா விளங்கப்படாது.

இரண்டு மாதத்தில கோரோனோ வேர்ல்ட் டூரை முடித்து கிளம்பிரும்.

பிறகு, யார், யார் மிச்சம் இருக்கினம், எண்டு யாழ் தளம் இயங்கினால் விசாரிக்கலாம் எண்டுறதை மறைமுகமா சொல்லுறா.. 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.

சாத்திர பலன்களும் அதைத்தான் சொல்லுது.😁
21.09.2019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சாத்திர பலன்களும் அதைத்தான் சொல்லுது.😁
21.09.2019

😀நீங்களும் வாசிச்சிட்டியளாக்கும். இங்கு இனிப் பள்ளிக்கூடங்கள் செப்டெம்பர் தான் என்று கதைக்கின்றார்கள் ஆசிரியர்கள்.

4 hours ago, Nathamuni said:

அக்கா சொன்னதை பிழையா விளங்கப்படாது.

இரண்டு மாதத்தில கோரோனோ வேர்ல்ட் டூரை முடித்து கிளம்பிரும்.

பிறகு, யார், யார் மிச்சம் இருக்கினம், எண்டு யாழ் தளம் இயங்கினால் விசாரிக்கலாம் எண்டுறதை மறைமுகமா சொல்லுறா.. 😥

😃😎

4 hours ago, பையன்26 said:

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம் 

இங்கு மாவீரர் தினம் நடக்கும் பிரமாண்டமான மண்டபமான Excel இல் நோயாளர்களுக்காக கட்டில்கள் போடப்படுகின்றது. என்றால் இப்போதைக்கு நிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

 

பையா
எனது மனைவி நான் சன்பிரான்சிஸ்கோவில் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறா.

ஆனால் அவ நியூயோர்க்கில் நிற்பதை எண்ண கவலையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

 

 

 

நல்ல நல்ல உணவுகளாக இருக்கே

1 minute ago, ஈழப்பிரியன் said:

பையா
எனது மனைவி நான் சன்பிரான்சிஸ்கோவில் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறா.

ஆனால் அவ நியூயோர்க்கில் நிற்பதை எண்ண கவலையாக இருக்கிறது.

இந்த நேரம் தான் மனம் பதைக்கும். அவர் நலமாக இருப்பார் அண்ணா கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2020 at 02:44, ஈழப்பிரியன் said:

..எனது மனைவி நான் சன்பிரான்சிஸ்கோவில் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறா..

வீட்டில் சும்மா இருக்காமல், குடைச்சல் குடுத்தால் அப்படிதானே எண்ணத் தோன்றும்..? :)

'நல்ல வேளை, 'குடும்ப வன்முறை(DV)' கேஸில் உள்ளே தூக்கி போடாமல் விட்டார்களே..!' என சந்தோசப்படுங்கள்..!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

வீட்டில் சும்மா இருக்காமல், குடைச்சல் குடுத்தால் அப்படிதானே எண்ணத் தோன்றும்..? :)

'நல்ல வேளை, 'குடும்ப வன்முறை(DV)' கேஸில் உள்ளே தூக்கி போடாமல் விட்டார்களே..!' என சந்தோசப்படுங்கள்..!😋

ஐயா
இதேதான் உங்களுக்கும்.ஊரில் இல்லையே என்று வீட்டில் சந்தோசமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா
இதேதான் உங்களுக்கும்.ஊரில் இல்லையே என்று வீட்டில் சந்தோசமாக இருக்கும்.

அதுதானே இல்லை..?

நான் வீட்டிலிருந்தால் எல்லா வேலைகளையும்(except cooking) நானே செய்து முடித்துவிடுவேன், அவர்கள் வெளியே அதிகம் செல்வது இல்லை..கோவிலை தவிர.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.