Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Vankalayan said:

அப்படி இருந்தாலும் , அவரின் மணடயில் போடும் திடடத்தை தோற்கடித்தவர்களும் புலிகள்தான்। புலிகளுக்குளேயே இரண்டு பிரிவுகள்। இது எப்படி இருக்குது? பொட்டு அம்மன் விசாரணைக்கு கூப்பிட்டும் ஒரு அரச அதிபர் போகவில்லை। அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் எண்டு தடுத்தவர்களும் புலிகள்தான்। அளவுக்கதிகமாக வெள்ளையடித்தால் அது வெள்ளையடிக்கப்படட கல்லறையாக மாறி விடும்। அதாவது அதட்குள் நாற்றமும் , எலும்புக்கூடுகளுமாகத்தான் இருக்கும்।

வங்காலையான்,

நீங்கள் சில அனுமானங்களை பொது வெளியில் கூறும்போது மிகப் பொறுப்போடு கூறவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கூறியதற்கு வலுச் சேர்க்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தற்போது  புலிகள் இல்லாத சூழலில் அதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது ? சும்மா புழுதி வாரித் தூற்றுவதாகத்தான் இறுதியி முடியும்.☹️

போராட்ட வரலாற்றில் எல்லோரும் பிழை விட்டுள்ளனர். ஆனால் இறுதியில் எங்களுக்கான அடையாளம் புலிகள் என்றாயிற்று. ஏனெனில் அவர்களது நோக்கத்திலும் சரி அர்ப்பணிப்பிலும் சரி ஒருவரும் சந்தேகம் கொள்ளவில்லை. 👍

நாங்கள் எமக்குள்ளே எவ்வாறுதான் பிணக்குற்றாலும் உலகமே தமிழர் என்றவுடன் புலிகளாகத்தான் பார்க்கிறார்கள். பயங்கரவாதி என்று கூறினாலும் போராளிகள் என்று கூறினாலும் நாம் எல்லோருமே புலிகள்தான், பிறர் கண்களுக்கு. இதுதான் உண்மை. எனவே தேவையற்ற விவாதங்களை நீங்கள் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 🙂

  • Replies 100
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

வங்காலையான்,

நீங்கள் சில அனுமானங்களை பொது வெளியில் கூறும்போது மிகப் பொறுப்போடு கூறவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கூறியதற்கு வலுச் சேர்க்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தற்போது  புலிகள் இல்லாத சூழலில் அதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது ? சும்மா புழுதி வாரித் தூற்றுவதாகத்தான் இறுதியி முடியும்.☹️

போராட்ட வரலாற்றில் எல்லோரும் பிழை விட்டுள்ளனர். ஆனால் இறுதியில் எங்களுக்கான அடையாளம் புலிகள் என்றாயிற்று. ஏனெனில் அவர்களது நோக்கத்திலும் சரி அர்ப்பணிப்பிலும் சரி ஒருவரும் சந்தேகம் கொள்ளவில்லை. 👍

நாங்கள் எமக்குள்ளே எவ்வாறுதான் பிணக்குற்றாலும் உலகமே தமிழர் என்றவுடன் புலிகளாகத்தான் பார்க்கிறார்கள். பயங்கரவாதி என்று கூறினாலும் போராளிகள் என்று கூறினாலும் நாம் எல்லோருமே புலிகள்தான், பிறர் கண்களுக்கு. இதுதான் உண்மை. எனவே தேவையற்ற விவாதங்களை நீங்கள் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 🙂

சாதாரண ரக்சி ஓட்டுனர்கள் கூட எது செந்த இடமென்று கேட்டுவிட்டு, ஓ நீ புலி...இதுதான் அவர்களின் முதல் வார்த்தை. அவர்களின் பார்வையில் புலிகள் ஒரு வியப்புமிக்க போராளிகள், போரட்ட காரணங்கள் தெரியாவிட்டாலும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

சாதாரண ரக்சி ஓட்டுனர்கள் கூட எது செந்த இடமென்று கேட்டுவிட்டு, ஓ நீ புலி...இதுதான் அவர்களின் முதல் வார்த்தை. அவர்களின் பார்வையில் புலிகள் ஒரு வியப்புமிக்க போராளிகள், போரட்ட காரணங்கள் தெரியாவிட்டாலும். 

தமிழர் = புலிகள் 😀

புலிகள் = தமிழர் 😀

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இதுதான் நிதர்சனம். 😀

1 hour ago, Kapithan said:

வங்காலையான்,

நீங்கள் சில அனுமானங்களை பொது வெளியில் கூறும்போது மிகப் பொறுப்போடு கூறவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கூறியதற்கு வலுச் சேர்க்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தற்போது  புலிகள் இல்லாத சூழலில் அதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது ? சும்மா புழுதி வாரித் தூற்றுவதாகத்தான் இறுதியி முடியும்.☹️

போராட்ட வரலாற்றில் எல்லோரும் பிழை விட்டுள்ளனர். ஆனால் இறுதியில் எங்களுக்கான அடையாளம் புலிகள் என்றாயிற்று. ஏனெனில் அவர்களது நோக்கத்திலும் சரி அர்ப்பணிப்பிலும் சரி ஒருவரும் சந்தேகம் கொள்ளவில்லை. 👍

நாங்கள் எமக்குள்ளே எவ்வாறுதான் பிணக்குற்றாலும் உலகமே தமிழர் என்றவுடன் புலிகளாகத்தான் பார்க்கிறார்கள். பயங்கரவாதி என்று கூறினாலும் போராளிகள் என்று கூறினாலும் நாம் எல்லோருமே புலிகள்தான், பிறர் கண்களுக்கு. இதுதான் உண்மை. எனவே தேவையற்ற விவாதங்களை நீங்கள் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 🙂

இது அனுமானம் இல்லை। உண்மையாத்தான் எழுதுகிறேன்। மற்றவர்கள் தவறாக  எழுதும்போது அதை சுட்டிக்காட்டிட வேண்டி உள்ளது। மற்றப்படி விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை। மற்ற இயக்கமெல்லாம் சுயநலத்துக்காகவும், காட்டிக்கொடுக்கவும் உருவாக்கப்படடவையே।  

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Vankalayan said:

இது அனுமானம் இல்லை। உண்மையாத்தான் எழுதுகிறேன்। மற்றவர்கள் தவறாக  எழுதும்போது அதை சுட்டிக்காட்டிட வேண்டி உள்ளது। மற்றப்படி விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை। மற்ற இயக்கமெல்லாம் சுயநலத்துக்காகவும், காட்டிக்கொடுக்கவும் உருவாக்கப்படடவையே।  

நீங்கள் பொய் சொல்லுவதாக நான் கூறவில்லை.

ஆனால் தற்போதைய சூழலில் அனாவசியமானவற்றைத் தவிர்க்கலாம் என்பதுதான் என்கருத்து. இவை பிளவுகளை மேலும் ஆழமாக்கக்கூடியவை. 

(மாற்று இயக்கங்களிலிருந்த 90 % மானோர் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டவர்களே. ஆனால் தலைமைப் பீடத்திலிருந்தோரே எல்லாவற்றையும் அழித்தது.)

உங்களிடம் ஒரு கேள்வி.

Lieutenant Colonel. Victor (மரிசலின் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு, மன்னார்) க்குப் பின்னர் மன்னார் மாவட்டத்திற்கு யாராவது மாவட்டத் தளபதியாக  நியமிக்கப்பட்டார்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் பொய் சொல்லுவதாக நான் கூறவில்லை.

ஆனால் தற்போதைய சூழலில் அனாவசியமானவற்றைத் தவிர்க்கலாம் என்பதுதான் என்கருத்து. இவை பிளவுகளை மேலும் ஆழமாக்கக்கூடியவை. 

(மாற்று இயக்கங்களிலிருந்த 90 % மானோர் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டவர்களே. ஆனால் தலைமைப் பீடத்திலிருந்தோரே எல்லாவற்றையும் அழித்தது.)

உங்களிடம் ஒரு கேள்வி.

Lieutenant Colonel. Victor (மரிசலின் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு, மன்னார்) க்குப் பின்னர் மன்னார் மாவட்டத்திற்கு யாராவது மாவட்டத் தளபதியாக  நியமிக்கப்பட்டார்களா ? 

ஆம் இரண்டு நாளிலேயே ராதா மன்னார் மாவட்ட தளபதியாக நியமிக்க பட்டார் 
பின்பு கிட்டு அவர்கள் கைக்குண்டு வெடித்து கால் இழந்த போது 
ராதா யாழ் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்று யாழ் வந்தார்.
அப்போது சலீம் அவர்கள் மன்னார் மாவட்ட தளபதியாக நியமிக்கபட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நெடுக்ஸ் நீங்கள் எத்தனை பக்கம் எழுதி தள்ளினாலும் சாமான்ய  மக்களுக்கு தெளிவாக தெரியும் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்று. நீங்கள்  பக்கம் பக்கமாக எழுதுவதில் பெரும் பகுதியை உங்கள் மனச்சாட்சி கூட  நம்பாது. 

புலிகள் சார்பாக இதுக்கு எதிர் கருத்து எழுதவில்லை ...
பல மரண தண்டனைகள் அனாவசியமாகவும் அவசரமாகவும் நடந்து உண்மைதான் 
ஆனால் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்பது சும்மா ஒரு நம்பிக்கையே ....
புலிகள் செய்யாத பல கொலைகள் இன்றும் பலரால் அவர்கள் செய்ததாக நம்பப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தமிழீழ விடுதலைக்கான தடைகள் எனக்கூறியோ அல்லது உண்மையான காரணம் இன்றியோ சிலரையோ அல்லாது எல்லோரையுமோ போட்டுத்தள்ளியது உண்மைதான் சரி நீங்கள் குற்றம் சாட்டும் அவர்கள் இப்போது களத்தில் இல்லை இப்போது எல்லாம் சரியாகப்போய்விட்டதா 

அண்ண்ன்மார் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் போட்டுத்தள்ளியவர்கள் எல்லோரும் உயிடுடன் இருந்தால் அவர்கள் தமிழினத்துக்கு சேவையோ சேவை செய்து  இப்போது தமிழ் பகுதிகளில் பாலாறும் தேனாறும் ஓடிவிடும் என நினைக்கிறீர்கள்போல்.

ரஜனி திரணகம ஆனந்தராசா ஆகியோரை அதி மேதாவிகள் காக்கவந்த காவலர்கள் இவர்கள் இல்லாததால் அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் இழுத்துமூடப்பட்டிருக்கு எங் கற்பனைப் படுத்தவேண்டாம்..

இங்கு எவரைப்பற்றியும் எழுதுபவர்களோ விமர்சனம் செய்பவர்களோ எதோ சுத்தமானவர்கள் என எப்படி அறுதியிட்டுக் கூறமுடியும்  சரி உங்களுக்குள் எத்தனைபேரின் மனதுக்குள் புலி சிங்கம் பாம்மு கீரி புலிமுகச்சிலந்தி பல்லி ஓணான் கரடி காட்டுமிராண்டி இவைகள் இல்லாதவர்கள் கூறமுடியுமா என்னையும் சேர்த்துத்தான் (நான் ஒன்றும் யோகியன் இல்லை) 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 04:14, Vankalayan said:

அளவுக்கதிகமாக வெள்ளையடித்தால் அது வெள்ளையடிக்கப்படட கல்லறையாக மாறி விடும்। அதாவது அதட்குள் நாற்றமும் , எலும்புக்கூடுகளுமாகத்தான் இருக்கும்।

சாட்டையடி, மீண்டும் பைபில் வசனம்

5 hours ago, Maruthankerny said:

புலிகள் சார்பாக இதுக்கு எதிர் கருத்து எழுதவில்லை ...
பல மரண தண்டனைகள் அனாவசியமாகவும் அவசரமாகவும் நடந்து உண்மைதான் 
ஆனால் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்பது சும்மா ஒரு நம்பிக்கையே ....
புலிகள் செய்யாத பல கொலைகள் இன்றும் பலரால் அவர்கள் செய்ததாக நம்பப்படுகிறது 

மருதங்கேணி போராடிய அனைத்து  இயக்கங்களிலும்  புலிகள் போராட்டத்திற்கு நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து களத்தில் நின்றதால் ஶ்ரீலங்கா அரசின் அறிக்கைகளில் எல்லா பழியையும் புலிகள் மீது போட்டது உண்மை. நான் கூறியது அதை அல்ல.   சாதாரண பொது மக்கள் பார்வையில் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்பது அவ்அவ் பகுதி மக்களுக்கு பெரும் பாலும் தெரிந்திருந்தது என்பதையே. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

மருதங்கேணி போராடிய அனைத்து  இயக்கங்களிலும்  புலிகள் போராட்டத்திற்கு நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து களத்தில் நின்றதால் ஶ்ரீலங்கா அரசின் அறிக்கைகளில் எல்லா பழியையும் புலிகள் மீது போட்டது உண்மை. நான் கூறியது அதை அல்ல.   சாதாரண பொது மக்கள் பார்வையில் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்பது அவ்அவ் பகுதி மக்களுக்கு பெரும் பாலும் தெரிந்திருந்தது என்பதையே. 

1987-1989 இல் ஒருவர் சுடப்பட்டு ரோட்டில் கிடந்தால் 
அது எல்லாமே புலிகள் மன்டையில் போட்டார்கள் என்ற பெயரில்தான் 
எல்ல ஊரிலும் இருந்தது ....எனது ஊரில் குறிப்பிட்ட புலி பொறுப்பாளர் சுட்டுவிட்டு சென்றதை 
கண்ணால் கண்ட சாட்சிகள் கூட உண்டு ....... குறித்த நபரை சுட்டவர் ஈப்பி ஐ சேர்ந்தவர் 
இப்போது டென்மார்க்கில் இருக்கிறார். குறிப்பிட்ட நபரின் குடும்பத்தாருக்கு சுட்டவரையும் தெரியும் 
காரணமும் தெரியும். ஊரில் இருப்பவர்கள் சும்மா புரளியை கிளப்பிக்கொண்டே இருந்தார்கள்.

நான் குறிப்பிட்ட கால பகுதியில் பல கொலைகள் முன்னாள் சாதி தகராறு 
காரணமான முன்விரோத பழிவாங்கலாக இருந்தது  ... தெல்லிப்பளை சுன்னாகம் ஏழாலை 
கட்டுவன் பகுதியில் நடந்த பல கொலைகள் மருதானமடத்தில் இருந்த ஈ என் டி எல் காரர்களால் 
மேற்கொள்ளபட்டது ஒரு குறிப்பிட்ட நபர்களை தவிர ... அவை அனைத்தும் புலிகள் பெயரிலேயே இப்போதும் உண்டு. 

ரஜனி தினகனறம கொலை பழியும்  இன்றளவும் புலிகள் பெயரில் உண்டு 
(அவரின் சொந்த குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும் உண்மை தெரியும்  காரணம் அவர்களுக்கு  
புலிகளுடன் மேலிடம் வரை தொடர்பு உண்டு..... இடையில் இருந்த சில படித்த மேதாவிகள்தான்  அடியும் தெரியாது   முடியும்தெரியாது  புலிகளுடன் பின்னாளில் வீண் விரோதம் வளர்த்து வந்தார்கள் ... இப்போதும் தவறை  ஒத்துக்கொள்ள சங்கடம் இருப்பதால் பொதுவெளியில் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்)

அதுக்கும் காண்டீபன் சுட்டுவிட்டு போனதை கண்ணால் கண்டவர்களும் உண்டுதானே?  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

சாட்டையடி, மீண்டும் பைபில் வசனம்

கொழும்பான்,

ரஜினி திரணகம, அதிபர் ஆனந்தராஜா வின் மரணம் தொடர்பில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இன்னும் பதிலில்லையே 🤔

ஏன் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

புலிகள் சுட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைச்சுக் கொண்டு.. இதுதான் நியாயம் என்கிறீர்கள்.

இப்படித்தான் எல்லாக் கொலைகளையும் புலிகள் மேல் போட்டுவிட்டு.. உலகம் பூராவும் அவர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டீர்களே. ஏன் எத்தனை பொய் கதைகளை எம்மவர்கள் உலகம் பூராவும் நீதிமன்றங்களில் சமர்ப்பித்து தங்கள் அகதி விண்ணப்பம் வெல்ல உழைத்தார்கள்..இதனால் பாதிக்கப்பட்டது புலிகள் தான். 

ஆதாரத்தை காட்டுங்கள்..?!

சிங்களவன் ஒரு இனப்படுகொலையை செய்து போட்டே இல்லை எங்கிறான்.

புளொட் காரன் வவுனியாவில் நின்று காட்டிக்கொடுத்தும் சுட்டும் கொன்று விட்டு இன்று சனநாயகவாதி ஆகிட்டான்.

முழுக் கூலிக்கொலைகளையும் செய்த டக்கிளஸ் கும்பல்.. சனநாயகம் பேசுது.

இன அழிப்புக்கு ஒத்தூதிய கருணா என்ற கொலைஞன்.. சனநாயகவாதி.

இதில் யாரை எல்லாம் நீங்கள் எந்தக் கொலைக்கு பொறுப்பாக்கினீர்கள்.

அதேன் புலிகள் என்றவுடன் மட்டும்.. காதால் கேட்டது.. சிங்களன் சொன்னது.. ஒட்டுக்குழு பேப்பரில் வந்தது.. ஹிந்தியன் கட்டிவிட்டது.. அமெரிக்க அவிழ்த்துவிட்டது எல்லாம் உங்களுக்கு ஆதாரமாகிறது.

புலிகள் சொன்னார்களா..??! அல்லது ஏற்றுக் கொண்டார்களா...??? ஆதாரம் இருக்கா இதற்கு. 

நெடுக்ஸ் உங்கட கருத்திலேயே விடையும் இருக்கு ...புலிகள் தாங்கள் செய்த கொலைகளை தாங்கள் தான் செய்தோம் என்று ஒத்துக் கொண்டு இருந்தால் , செய்யாத கொலைகளை புலிகள் மேல் சுமத்தி இருக்க முடியாது ...புலிகள் நேர்மையானவர்கள் .செய்த கொலைகளை [நியாயமில்லா கொலைகளாயினும் ] அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் ..எனவே இந்த கொலைகளை புலிகள்  செய்திருக்க மாட்டார்கள் என்ற முடிவிற்கு வருவார்கள் 
மற்ற இயக்கங்கள் தாங்கள் செய்த கொலைகளை கூட இவர்கள் தலையில் ஈசியாய் சுமத்தினர் ...புலிகள் மறுத்தாலும் கூட ஒருத்தரும்   ஏற்றுக் கொள்ள தயாரில்லை ..இவர்கள் இப்படித் தான் செய்து போட்டு பேசாமல் இருந்து விடுவர் என்ற பிம்பம் வந்து விட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நெடுக்ஸ் உங்கட கருத்திலேயே விடையும் இருக்கு ...புலிகள் தாங்கள் செய்த கொலைகளை தாங்கள் தான் செய்தோம் என்று ஒத்துக் கொண்டு இருந்தால் , செய்யாத கொலைகளை புலிகள் மேல் சுமத்தி இருக்க முடியாது ...புலிகள் நேர்மையானவர்கள் .செய்த கொலைகளை [நியாயமில்லா கொலைகளாயினும் ] அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் ..எனவே இந்த கொலைகளை புலிகள்  செய்திருக்க மாட்டார்கள் என்ற முடிவிற்கு வருவார்கள் 
மற்ற இயக்கங்கள் தாங்கள் செய்த கொலைகளை கூட இவர்கள் தலையில் ஈசியாய் சுமத்தினர் ...புலிகள் மறுத்தாலும் கூட ஒருத்தரும்   ஏற்றுக் கொள்ள தயாரில்லை ..இவர்கள் இப்படித் தான் செய்து போட்டு பேசாமல் இருந்து விடுவர் என்ற பிம்பம் வந்து விட்டது.

 

மீண்டும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு ஒரு பிம்பம்.. பிம்பம் கொடுக்கிறவன் கொடுத்திட்டே இருக்கட்டும். இதனால்.. உண்மையான குற்றவாளியை தப்பிக்க விடுறீங்க என்பது தான் அர்த்தம். 

ரஜனியை கொல்ல வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லை. ஆனால்.. அவரைப் பழிவாங்க வேண்டிய தேவை.. றோவுக்கும்.. உலக அரங்கில் வடமராட்சிப் படுகொலைக்குப் பின் மனித உரிமை மீறல் நெருக்கடியை சந்தித்து வந்த ஹிந்தியப் படைகளுக்கும்.. பல்வேறு அநியாயங்களை மானுடக் கொடுமைகளைப் புரிந்து வந்த ஒட்டுக்குழுக்களுக்கும்.. இருந்தது. ஏனெனில்.. ரஜனியே இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்திய முறிந்த பனைகளின் தோற்றுவாயாக இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

மீண்டும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு ஒரு பிம்பம்.. பிம்பம் கொடுக்கிறவன் கொடுத்திட்டே இருக்கட்டும். இதனால்.. உண்மையான குற்றவாளியை தப்பிக்க விடுறீங்க என்பது தான் அர்த்தம். 

ரஜனியை கொல்ல வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லை. ஆனால்.. அவரைப் பழிவாங்க வேண்டிய தேவை.. றோவுக்கும்.. உலக அரங்கில் வடமராட்சிப் படுகொலைக்குப் பின் மனித உரிமை மீறல் நெருக்கடியை சந்தித்து வந்த ஹிந்தியப் படைகளுக்கும்.. பல்வேறு அநியாயங்களை மானுடக் கொடுமைகளைப் புரிந்து வந்த ஒட்டுக்குழுக்களுக்கும்.. இருந்தது. ஏனெனில்.. ரஜனியே இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்திய முறிந்த பனைகளின் தோற்றுவாயாக இருந்தார். 

அப்பா ......ஒன்றிலிருந்து இன்னொன்றா🤯 ...தமிழில் தானே எழுதினேன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அப்பா ......ஒன்றிலிருந்து இன்னொன்றா🤯 ...தமிழில் தானே எழுதினேன் :unsure:

அப்பா.. உங்க அப்பாவா போட்டார் ரஜனியை. என்ன கொடுமை இது. அப்ப ஏன் புலிகள் மீது பழி. மக்கள் எல்லாம் அறிவார்கள் என்றதன் பொருள் இதுவோ..??! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

அப்பா.. உங்க அப்பாவா போட்டார் ரஜனியை. என்ன கொடுமை இது. அப்ப ஏன் புலிகள் மீது பழி. மக்கள் எல்லாம் அறிவார்கள் என்றதன் பொருள் இதுவோ..??! 

புலிகள் தாங்கள் செய்த வேற  கொலைகளை ஒத்துக் கொண்டிருந்தால்,[கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி எத்தனை தரம் சொல்றது:67_head_bandage: ] ரஜனியை அவர்கள் உண்மையிலேயே கொலை செய்திருக்கா விட்டால் , இந்த பழி அவர்கள் மேல் வீழ்ந்திருக்காது.
 ஏன் செய்யாத கொலைக்கு பழி சுமந்தவர்களாகிறார்கள் .
ரஜனியின் கொலையில் எனக்கு சந்தேகம் இருக்கு 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

புலிகள் தாங்கள் செய்த வேற  கொலைகளை ஒத்துக் கொண்டிருந்தால்,[கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி எத்தனை தரம் சொல்றது:67_head_bandage: ] ரஜனியை அவர்கள் உண்மையிலேயே கொலை செய்திருக்கா விட்டால் , இந்த பழி அவர்கள் மேல் வீழ்ந்திருக்காது.
 ஏன் செய்யாத கொலைக்கு பழி சுமந்தவர்களாகிறார்கள் .
ரஜனியின் கொலையில் எனக்கு சந்தேகம் இருக்கு 

 

நீங்கள் பேசாமல்.. லங்காபுவத்திடம் போய் வேலை கேளுங்கள் தருவார்கள்.

புலிகள் தான் முதன்மையான எதிரி சிங்களவனுக்கு.. ஹிந்தியனுக்கு.. ஏன் ஒட்டுக்குழுகளுக்கு..ராசிக்குழுக்களுக்கு.. அரச கூலிகளுக்கு...! புலிகள் மீது இவை எல்லாமே பழியை கொண்டு வந்து போடும். இது அந்தக் காலத்தில் பள்ளிக்குப் போன சின்னக் குழந்தைக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாமல் போனதுக்கு காரணம் புலிகள் மீது விசத்தைக் கக்குவதே குறிக்களோன்னு இருக்கிற கும்பலோட சகவாசம். அவ்வளவும் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் பேசாமல்.. லங்காபுவத்திடம் போய் வேலை கேளுங்கள் தருவார்கள்.

புலிகள் தான் முதன்மையான எதிரி சிங்களவனுக்கு.. ஹிந்தியனுக்கு.. ஏன் ஒட்டுக்குழுகளுக்கு..ராசிக்குழுக்களுக்கு.. அரச கூலிகளுக்கு...! புலிகள் மீது இவை எல்லாமே பழியை கொண்டு வந்து போடும். இது அந்தக் காலத்தில் பள்ளிக்குப் போன சின்னக் குழந்தைக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாமல் போனதுக்கு காரணம் புலிகள் மீது விசத்தைக் கக்குவதே குறிக்களோன்னு இருக்கிற கும்பலோட சகவாசம். அவ்வளவும் தான். 

உண்மையில் புரியாதவர்களுக்கு விளங்க வைக்கலாம் ....நடிப்பவர்களுக்கு ?... குட் நைட் 🥰
 

எவ்வளவு காலத்துக்குத்தான் இவற்றை பேசிக்கொண்டு இருக்கப்போறியல். நானும் பலவருடங்களாக  பார்த்தவரைக்கும் ஒருவர் வந்து அந்த திரிக்கே சம்பந்தமில்லாத விடய(}த்தை தூவிவிட்டு சென்றுவிடுவார் நீங்களும் இதுதான் தருணமென்று தொடங்கிவிடுவீர்கள். இடையில் வந்து கொஞ்சம் எண்ணெயும் ஊதிவிட்டு போவார் நீங்களும் உங்களுக்குள் தொடர்ந்து தர்க்கப்பட்டு கொண்டிருப்பீர்கள்  
                   நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் கடந்த பத்து வருடத்தில் எத்தனை முறை இவ்விடையத்தை பற்றி பேசியிருப்பீர்கள். இதனால் எதாவது நன்மை நடந்ததா?
இந்த பத்துவருடத்தில் இப்படிபடடவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கும் உங்களையெல்லாம் ………..

23 hours ago, Kapithan said:

நீங்கள் பொய் சொல்லுவதாக நான் கூறவில்லை.

ஆனால் தற்போதைய சூழலில் அனாவசியமானவற்றைத் தவிர்க்கலாம் என்பதுதான் என்கருத்து. இவை பிளவுகளை மேலும் ஆழமாக்கக்கூடியவை. 

(மாற்று இயக்கங்களிலிருந்த 90 % மானோர் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டவர்களே. ஆனால் தலைமைப் பீடத்திலிருந்தோரே எல்லாவற்றையும் அழித்தது.)

உங்களிடம் ஒரு கேள்வி.

Lieutenant Colonel. Victor (மரிசலின் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு, மன்னார்) க்குப் பின்னர் மன்னார் மாவட்டத்திற்கு யாராவது மாவட்டத் தளபதியாக  நியமிக்கப்பட்டார்களா ? 

எனக்கு அந்த விபரம் சரியாக தெரியவில்லை। சுரேஷ் என்பவர் (இயக்க பெயர்) ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தது தெரியும்। பின்னர் மடடக்கலப்பில் ஒரு தாக்குதலில் காயமடைந்ததாக அறிந்தேன்। மற்றப்படி எனக்கு அவ்வளவாக தெரியாது। அந்த காலங்களில் நான் அங்கு இருந்ததும் குறைவு।

22 hours ago, Maruthankerny said:

ஆம் இரண்டு நாளிலேயே ராதா மன்னார் மாவட்ட தளபதியாக நியமிக்க பட்டார் 
பின்பு கிட்டு அவர்கள் கைக்குண்டு வெடித்து கால் இழந்த போது 
ராதா யாழ் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்று யாழ் வந்தார்.
அப்போது சலீம் அவர்கள் மன்னார் மாவட்ட தளபதியாக நியமிக்கபட்டார். 

இவர்கள் யாருமே மன்னரை சேர்ந்தவர்களோ தெரியவில்லை। சலீம் திருகோணமலையை சேர்ந்தவர்। ராதாவைப்பற்றி தெரியவில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

எனக்கு அந்த விபரம் சரியாக தெரியவில்லை। சுரேஷ் என்பவர் (இயக்க பெயர்) ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தது தெரியும்। பின்னர் மடடக்கலப்பில் ஒரு தாக்குதலில் காயமடைந்ததாக அறிந்தேன்। மற்றப்படி எனக்கு அவ்வளவாக தெரியாது। அந்த காலங்களில் நான் அங்கு இருந்ததும் குறைவு।

இவர்கள் யாருமே மன்னரை சேர்ந்தவர்களோ தெரியவில்லை। சலீம் திருகோணமலையை சேர்ந்தவர்। ராதாவைப்பற்றி தெரியவில்லை। 

ஆம். தளபதிகளில் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்களில்லை. 🙂

உரிமைகள் மனிதத்தின் அடையாளம், அவை சலுகைகள் அல்ல,.

1948இல் ஐ.நா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பட்டயம் பின்வருமாறு சொல்கிறது.

WHEREAS recognition of the inherent dignity and of the equal and inalienable rights of all members of the human family is the foundation of freedom, justice and peace in the world,
மனிதக் குடும்பத்தினைச் சேர்ந்த யாவரதும் உள்ளார்ந்த மரியாதையையும், அவர்கள் யாவரதும் சமமான, மாற்றத்திற்குட்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாதலாலும்,

WHEREAS disregard and contempt for human rights have resulted in barbarous acts which have outraged the conscience of mankind, and the advent of a world in which human beings shall enjoy freedom of speech and belief and freedom from fear and want has been proclaimed as the highest aspiration of the common people,
மனித உரிமைகளை அவமதித்தலும் இகழ்தலும், மனிதகுலத்தின் மனசாட்சியை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாதலாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுதலை ஆகியனவற்றை மனிதன் முழுமையாக அனுபவிக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்களின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாதலாலும்,

WHEREAS it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law,
கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதித் தீர்வாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க வேண்டுமெனில் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாக்கப்படுவது இன்றியமையாததாக உள்ளதாதலாலும்,

சரி மனித உரிமைகள் பட்டயத்தின் அறிமுகரையின் முதல் மூன்று பகுதிகளே, உலகளாவிய மனித வாழ்வு பல சிக்கல்களுக்கு (குறிப்பாக முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர்) உள்ளான பின்னணியில், மனித வாழ்வை மேம்படுத்தவென பல முதன்மை மனித உரிமை விடயங்களை முதன்மைப்படுத்துகிறது.

முதலாம் பகுதி, சமத்துவமான மாற்றத்திற்கு உட்படுத்த முடியாத மனித உரிமைகளை வலியுறுத்துகிறது. இது நடந்தேறியிருந்தால் ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்காக போராடும் நிலை எழுந்திருக்குமா? இலங்கையில் என்று மாற்றத்திற்கு உட்படுத்த முடியாத சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன?

இரண்டாம் பகுதியில் குறிப்பிடுகின்ற, "மனிதகுலத்தின் மனசாட்சியை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்கள்", ஈழத்தமிழருக்கு எதிராக நடந்தேறினவா? இல்லையா? எத்தனை ஆண்டுகளாக அவை நடந்தேறின? அவற்றைத் தானே 2011இல் ஐ.நா குழுவே, போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுத்ததே! மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை எனவும் பின்னர் அதை வகைப்படுத்தியதே.

மூன்றாம் பகுதி சொல்கிறது.. கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதித் தீர்வாக எதிரெழுச்சியை கோடிட்டுக் காட்டுகிது. பேசியும் பார்த்தார்கள்.. ஒப்பந்தங்களை செய்தும் பார்த்தார்கள்.. அகிச்சையாக போராடியும் பார்த்தார்கள்... எல்லாம் ஆயுத வன்முறைக்கு உள்ளான போதும், சட்டத்தின் ஆட்சி பொய்துப் போன போதுமே, ஈற்றில் தமிழ்த் தலைவர்கள் 1976இல் பிரிந்து போகின்ற உரிமையை கையில் எடுத்தனர்.

அப்போது அதிகரித்த ஆயுத ஒடுக்குமுறையையும், அது சார்ந்த கொடுங்கோன்மையையும் எதிர்கொள்ளவே இளைஞர்கள் தற்காப்பு ஆயுத போராட்டத்தை எதிரெழுச்சியாக கையில் எடுத்தனர். அதுவும் தார்மீக அடிப்படையில், நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம் என்பதைத் தெரிந்து, தமிழ் மக்களின் போராட்ட இலட்சியம் நியாயமானது: சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது என்பதைப் புரிந்து அதை வெளிப்படையாக குறிப்பிட்டே முன்னகர்ந்தனர்.

உலகில் உரிமைப் போராட்டத் தலைமையாகப் இன்று போற்றப்படும் ஆயுத எதிரெழுச்சி தலைமை நெல்சன் மண்டேலா குறிபிடுகிறார், "எமது எதிரெழுச்சியின் வடிவத்தை ஒடுக்கப்படுகின்ற மக்கள் தீர்மானிப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களே அதைத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் ஆயுத வன்முறையை ஏவிவிடுகின்ற போது வேறு வழியின்றி ஒடுக்கப்படுகின்ற மக்களும் ஆயுதவலுகொண்டே தம்மை தற்காத்துக் கொண்டாக வேண்டும்", என்கிறார். இவ்வுல வழமையே ஈழத்திலும் நடந்தேறியது.

இதனை தமிழர் தலைமை தனது உரைகளில் பலமுறை சுட்டிக்காட்டியும் உள்ளார். "நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ கருதவில்லை. சனநாயக அரசியல் மரபிற்கு நாம் விரோதமானவர்கள் அல்லர். எமது மக்களின் அடிப்படையான சனநாயக அரசியல் உரிமைகளுக்காகவே நாம் போராடி வருகின்றோம்".

"சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது".

"சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கர வாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது", என்கிறார்.

இதை உலகில் எவருக்கும் எந்தச் சூழலிலும் அடித்துச் சொல்வதற்கு எமக்குத் தயக்கம் ஏன் வேண்டும்? எதற்காக வேண்டும்? அறத்தை, உலகில் ஏற்க்கப்பட்ட நியதியை அதன் வழிநின்று விளக்கிச் சொல்ல வேண்டுமென்றால் நாம் முதலில் எம்மை அது குறித்த புரிதலுக்கும் அது சார்ந்த கருத்து வெளிப்பாட்டிற்கும் தயாரித்துக் கொள்ளவில்லை என்று வேண்டுமானால் உண்மையை ஒத்துக் கொள்வோம். அதைவிடுத்து யாருக்கும் பயந்து அவர்கள் எம்மை தப்பாக புரிந்துவிடுவார்கள் என நாமே எம்மை ஏமாற்றி எவ்வளவு நாட்கள் அடிமை வாழ்வே வாழப்போகின்றோம்?

உண்மையை உரத்துச் சொல்வதற்கே எமக்கு தயக்கம் என்றால், எதற்கு எமக்கு கல்வி?

அதுவும் சிறந்த வழக்கறிஞர்கள் எனப் பீத்திக் கொள்பவர்களுக்குமா வாதத்தை கற்றுத்தரவேண்டும்? கல்வியாளர்களாக உலகின் உச்சாணிக் கொம்பில் உள்ள எம்மவர்களுக்குமா இந்தத் தடுமாற்றம்? வரலாறு எம்மை விடுவிக்குமானால் எமது வரலாற்றை முதலில் முழுமையாக படியுங்கள். முழுகெலும்புள்ள மனிதர்களாக உண்மையை நெஞ்சை நிமிர்த்தி உரத்துச் சொல்லுங்கள்! அது ம்னிதருககு அழகு! மனிதத்திற்கு அழகு!

-- முகநூல் பதிவில் இருந்து  ---

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 11:26, Kapithan said:

எங்களுக்குள்ள தெரிவுகள் மிக  மிகச் சொற்பம். சுமந்திரனது ஆழுமைக்கு Personality ) நிகரான அல்லது அதிகமான ஆழுமையுள்ள யார் தமிழரது பக்கத்தில் உள்ளனர் ?

ஆளுமையின் லட்ஷணம் தான் தெரியுது. அப்பப்ப தேவையில்லாமல் வாயைக் குடுத்து  சர்ச்சையில் மாட்டி மழுப்புவதிலேயே காலத்தைக் கழிக்கிறார். அவர் ஓர் தமிழர் என்பதால் அவரை எட்டப்பனாக சிங்களம் பாவிக்குது. அவ்வளவே. வக்கத்த சம்பந்தரும் சேர்த்து வைச்சு கொஞ்சுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஆளுமையின் லட்ஷணம் தான் தெரியுது. அப்பப்ப தேவையில்லாமல் வாயைக் குடுத்து  சர்ச்சையில் மாட்டி மழுப்புவதிலேயே காலத்தைக் கழிக்கிறார். அவர் ஓர் தமிழர் என்பதால் அவரை எட்டப்பனாக சிங்களம் பாவிக்குது. அவ்வளவே. வக்கத்த சம்பந்தரும் சேர்த்து வைச்சு கொஞ்சுகிறார். 

சிங்களம் ஒருபோதும் தமிழரை தனது தேவைக்கு வலிந்து இழுக்கவில்லை. எம்மில் சிலர் பதவி, அதிகாரம், பொருளாதார நலன்களுக்காக அவர்களுடன் ஒட்டிக்கொண்டு நிற்கிறோம். ☹️

காலம் காலமாக இதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோமே. 😡

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.