Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து

Featured Replies

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவராக இருந்தாலும் கூட அவர் தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரை போராட்டத்தை நடத்தியவர் என்ற விதத்தில் அவர் மீது ஒரு மரியாதை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க எந்த எண்ணமும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் இன்று அவரும் அரசியலில் ஈடுபட்டிருப்பார்.

கே.பி இன்று என்ன செய்கின்றார், கருணா என்ன செய்கின்றார், பிள்ளையான் என்ன செய்கின்றார்? இவர்கள் அனைவரும் இன்றைய அரசியல் தலைவர்களின் தோழில் கைபோட்டு அரசியல் செய்வதை நாம் பார்க்கின்றோம். பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று ராஜபக்ஷக்களுடன் அரசியல் செய்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்று அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபராக இருந்திருப்பார். ஆகவே அவர் கொல்லப்பட்டதே சரியென நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சர்வதேசத்துடன் தொடர்புகள் இருந்தது. அவர்களுக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகள் சர்வதேச நாடுகளின் மூலமாக கிடைத்தது.

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை. இந்தியாவிற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. இந்தியாவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டது, அவர்களின் பிரதமரும் கொல்லப்பட்டார். இந்தியா கூறியதை விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.
ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

யுத்தத்தை யாராலும் வெற்றிகொள்ள முடித்து, இதனால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலையில் இருந்தனர். சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாக பேசி சமாதான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தினர். ஆனால் யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம் என்றார்.

https://www.virakesari.lk/article/83207

  • Replies 55
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

வாசிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போக்கு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். 👍

  • தொடங்கியவர்
7 hours ago, ampanai said:

ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை.

பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

  • தொடங்கியவர்
8 minutes ago, ampanai said:

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் முகநூலில் போட்ட கருத்து படம் !

78630834_10158105390136855_4880540444192145408_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=guWll7heghUAX_LoRUK&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=7da075760a454af228f98cba1025247f&oe=5EFCA1D7

Source photo?fbid=10217396987104778&set=a.11131

சுதந்திர தமிழீழமே இந்தியாவிற்கு பலம் என்பதை டெல்லி உணர மறுக்கும் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் + சீனா + சிறிலங்கா இந்தியாவை உடைக்கும் நாட்களை நெருங்கிய நாட்களாகவே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா யுத்தத்தை முடிக்க வேண்டும் என விரும்பியது அந்தக் காலம் 

ஆனால் 

இந்தியாவை முடிக்க வேண்டும் என தமிழர்  விரும்புவது இந்தக் காலம் 

 

(ஆமியைக் கண்டு புலிகளோடியது அந்தக் காலம் என்கின்ற பாட்டு யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா 😀)

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... தான் விட்ட  தவறை, உணர்வது மாதிரி தெரியவில்லையே...
அல்லது  உணர்ந்தும்... வெளியில் காட்டிக் கொள்ளாமல், இருக்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை.

அகண்ட பாரதம் வேண்டும் என்றால் பிரிவினை இயக்கங்களை ஆதரிக்க முடியாது பொன்சேக்கா மாத்தையா....அரசியலில் எதுவும் நடக்கும் ....ஈழம் என்ற நாட்டை உருவாக்கி லாபமடைவதைவிட சிறிலங்கா என்ற நாட்டை இந்தியாவுடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் உருவாகியிருக்கலாம்.....சிங்கள பகுதிக்கு இந்தியாவின் யுனியன் பிரதேசத்த்தின் அதிகாரத்தை வழங்க நினைத்திருக்கலாம் .....ஒரு நாடு இரு அரசியல் சாசனம் என்று சொல்லலாம்....கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

  • தொடங்கியவர்
14 hours ago, ampanai said:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

நீங்கள் இப்படி இங்கு எழுதலாம். தாக்கம் ஒன்றுமில்லை.

ஆனால், எமது பிரச்சனையை, இலங்கைத்தீவின் அரசியல் ஒழுங்கு முறை கிந்தியா  விரும்பிய படி தான் இருக்கவேண்டும் என்பதை ,    ஹொங் காங் மற்றும் தைவானின் வரலாறு தெரியாமல் ஒப்பிட்டு வேறு வெளியாருடன் உரையாடாதீர்கள்.

ஹொங் காங் மற்றும் தைவான் இன் பிரச்சனைகளும் வரலாறும் முற்றிலும் வேறு பட்டது.

ஹாங் காங் மக்கள் சீன Han இனத்தவரின் புராதன பிரிவினர். புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில்,  Guangzhou உம அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பெருமளவில் உள்ளனர். Guangzhou இந்த இன்னொரு பெயர் Canton.

hong காங் எப்போதுமே சீனாவின் இறைமை உள்ள இடம், ஒப்பிய யுத்தத்தில் பிரித்தானியா ஆக்கிரமிக்க, பின்பு நீண்ட குத்தகையாக கொடுக்கப்பட்டு, சீனாவுக்கு மீண்டது 1999 இல்.   

Taiwan உம் சீனாவின் இறைமை உள்ள இடம். சீ   Taiwan தனிநாடு என்பதற்கு ஒரு வரலாற்று, இன, மொழி, மானிடவியல், ஏன் அரசியல் தனித்துவம் கூட இல்லை. சீனாவில், மாசேதுங் தொடங்கிய long march இன்னும் உத்தியோகபூர்வமாக முடியவில்லை. இதை வைத்து அமெரிக்கா புகுந்தது,. அந்த லோங் மார்ச் தைவானில் இப்பொது இருக்கும் ஆளும் குழாமை தூக்கி எறிந்த போது, தப்பி தைவான்  இற்கு சென்றார்கள். அமெரிக்கா  பாதுகாப்பு கொடுக்க. சீனாவிடம் பலம் இப்பொது, வரலாற்று மறுவான அப்போது முடிக்க முடியாமல் போன long march ஐ அடுத்த 10-20 ஆண்டுகளுக்குள் முடிவு செய்யும். 

On 1/6/2020 at 23:44, ampanai said:

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

தமிழின விரோத ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழர் பலம் பெறுவதை விரும்பாது தமிழின அழிப்பில் கூடிய நாட்டம் கொண்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழீழ மண்ணில் நடத்திய சமூகவிரோத செயற்பாடுகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் தெரியாததல்ல.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தமிழின படுகொலைகளில் பல்வேறு விதங்களில் பங்களித்தமையும் தெரியாததல்ல. இதற்கான விலையை ஹிந்திய அரச பயங்கரவாதிகள் கொடுத்தே ஆவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில், 

 

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...
(எமக்கு பக்கத்தில் இருக்கும் இந்தியா , சீனாவை போன்று இராணுவபலத்தை பாவிக்ககூடிய தைரியம் இருந்தால் சிறிலங்காவை முழுதாக கையகப்படுத்தலாம் ....கையக படுத்தினாலும்...கேட்க சர்வதேசம் வந்தாலும் சீனாவை போன்று துணிந்து நிற்க வேண்டும்)தீபேத்தை கைப்பற்றி தன்னகத்தே வைத்திருப்பது போன்று..

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ampanai said:

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

  • தொடங்கியவர்
2 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

தெரிந்த சக உறவு ஒருவர். ஒரு தமிழீழ புலப்பெயர் போராட்டங்களில் வெளிப்படையாக பங்குபற்றாதவர். 

14வயது மகள் டொரோண்டோ மத்திய நகர பகுதியில் ஆர்பாட்டத்தில் அவள் கலந்து கொள்ள கேட்டதை அலட்சியப்படுத்த அவளோ அவரை, 'உங்களுக்கு இந்த பெண் இறந்ததை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம், ஆனால், நான் போயாக வேண்டும்", என கேட்க இவரும் கோவிட் 19குள்ளும் அழைத்து சென்றுள்ளார். 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

  • தொடங்கியவர்
3 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

78099272_10159488373316037_4404178547581648896_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=giSVAIW-eS8AX8JI0Om&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=a30cb094986f36c4d08676903a9427bc&oe=5EFC92CD

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

Picture 1) a Srilankan woman in United States , bravely standing up with humanity and supporting the protesters against the racism and brutality .
#blacklivesmatter

Picture 2)Srilankan military brigadier making throat slitting gesture towards the tamil protestors in London .
He was convicted by UK court , but, then brought back to srilanka as a national hero and given promotions in military for his “brave achievements “!
#tamilslivesmatter too

#black_lives_matter
#tamils_lives_matter_too

Source : FB 

1 hour ago, ampanai said:

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

சான்ஸே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை....மாவோவும் சித்தாந்தவாதிகளும் தங்களது அரசியலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகுத்த பல வருடங்களாக முயன்றுவருகின்றனர்...1975 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர அமைப்புக்களை உருவாக்கி ஆயுத போராட்டங்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்கள் ...தற்பொழுது சோசலிசம் பேசும் முதலாளிகளை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்...

"மொழி, இனம் ஒன்றா? "
தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கினறது..

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு 800 வருடங்களுக்கு முந்திய சரித்திரம் பேச முடியாது தானே....

இனிவரும் காலங்களில் இனம் மொழி பிரிவினையை விட ,புதிய அரசியல் ஆக்கிரமிப்புக்கு மதங்களை .... பயன்படுத்துவார்கள்...மொழி இனங்களை விட மதங்கள் இலகுவாக மக்களை வெறிகொள்ள வைக்கும்...

இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பெளத்தம் நாகரீக போர்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

unarmed black 

சர்வதேச ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வோரு தடவையும்unarmed black man என்ற வசனத்தை பாவிப்பார்கள்.....இது புலம் பெயர்ந்த எமது சிறார்களுக்கு மனதில் இலகுவாக படிந்து விடுகிறது...

எமது மக்கள் இறந்த கதையை கேட் கவோ சொல்லவோ யாருமில்லை...

எமது மக்களே அடுத்த சந்ததிக்கு சொல்ல முயலவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்...

கறுப்பர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர் என்று மார்டின் லூதர் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருப்பதால் ஒரு சிறு சம்பவம் பெரிய எழுச்சியை உண்டாக்கின்றது....

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 20:25, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

பாகிஸ்தானில் இருந்து பிரித்துக்கொடுத்த பங்காளதேசுடனும் நல்லுறவில்லை.  பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பது ஒருகுறுகிய வட்டம். அதன் விளைவே சுற்றிவரப் பகைநாடுகளை உருவாக்கிவருகிறது. தமிழீழத்தை அங்கீகரிப்பதூடாகத்   தமிழகத்திற் தனக்கொரு பாதுகாப்பான தளவமைவை உருவாக்குவதே இந்தியத் தென்பகுதியில் பாதுகாப்பிற்கான உறுதியினை வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

4 hours ago, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும்

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 07:55, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:16, Kadancha said:

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

அந்த வகையான ஆக்கிரமிப்பை இந்தியா சிறிலங்கா மீது செய்து விடுவார்கள் என்ற பயம் சிங்கள கொள்கை வகுப்பாளர்களுக்கு அன்றே(சுதந்திரத்திற்கு பின்பு) ஏற்பட்டுவிட்டது அதன் விளைவு தமிழர்கள் மீதும் தமிழர்கள் பகுதிகள் மீதும் அதிக கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார்கள் ...தமிழர்  பகுதியில் சிங்கள குடியேற்றம்(சீனாவின் கொள்கை)தமிழர் பகுதியை இராணுவ மயப்படுத்தல் முக்கியமாக தமிழருக்கு என்ற ஒரு பகுதி அது மாகாணசபையாகவோ ,மாவட்ட சபையாகவோ இருக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்....இந்து மதம் ,இஸ்லாம் மதங்கள் போன்றவை ஒரு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இருப்பதை சிறிலங்கா அரசு விரும்பவில்லை....அதன் தொடர்ச்சிதான் கொத்தாபாய அடிக்கடி பேசும் பொழுது சொல்வது வடபகுதி மக்களுக்கு பொருளாதார பிர்ச்சனை மட்டுமே உண்டு மற்றவை பயங்கரவாதிகளால் உருவானவை என்று....

காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்து இணைந்து விட்டார் அத்துடன் மேற்கு நாடுகள் ,நாடுகளை உருவாக்கும் பொழுது மதங்களின் அடிப்படையிலயே உருவாக்கினார்கள் .
இந்தியாவை உருவாக்கும் பொழுது பல திசைகளிலும் செக் வைத்து தான் உருவாக்கினார்கள் ,முக்கியமாக இந்தியாவின் கிழக்கேயும் மேற்கேயும் ஒரே நாட்டை உருவாக்கினார்கள் இரு பிராந்திய மக்களினதும் மதம் ஒன்றாக இருந்தாலும் கலாச்சாரம் ,மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தார்கள். தெற்கே சிறிலங்கா பெளத்தம்  நினைத்திருந்தால் வட பகுதி தீவுகளையும் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ்பேசும் இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை தமிழ்நாட்டுடன் இணைத்திருக்கலாம்...ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் அந்தமான்,மற்றும் லட்ச தீவுகளை இந்தியாவுடன் இணைத்தார்கள் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் தமிழர் பகுதி ?????
காஷ்மீரின் இஸ்லாமிய பகுதியை பாகிஸ்தான் படைஎடுத்து தனது  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அந்த பகுதியில் சீனா தனது பெரிய அபிவிருத்தி திட்டத்தை தொடங்கிவிட்டது பாகிஸ்தானின் அரபிக் கடலில் இருக்கும் துறைமுகத்துக்கு சீனாவிலிருந்து நேரடியாக வர முடியும்....காஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்பை இந்தியா,சீனா,பாகிஸ்தான் கணக்கில் எடுக்கவில்லை...பாகிஸ்தானால்  சீனாவின் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாவிடின் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சீனாவுக்கு ....(இந்தியா அந்த பகுதியை தங்கள் வசம் எடுப்போம் என குத்தி முறிகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம்).
கொவா..போர்த்துகீசர் காலணித்துவத்தின் கீழ் இருந்த பகுதி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களும் மேற்கத்தைய கலாச்சாரத்தை உள்வாங்கியோரும் அதிகமாக இருந்தனர் ..இந்த நாடு மேற்குலகினால் இந்தியாவுக்கு வைக்கப்பட்டை ம்ற்றுமொரு செக்..
சீக்கிம் இதுவும் கோவா போன்ற ஒர் நாடு கிஸ்தவமும் இந்துக்களும் அதிகமாக இருந்த நாடு 
இதே போன்று சீனாவுக்கு செக் வைக்கப்பட்ட பிரதேசஙள் தான் கொங்கொங்,தைவான்,மாக்கே(போர்த்துகீஸ்)இந்த பிரதேசங்களுக்கு தனி நாணயங்கள் புலக்கத்தில் உண்டு ....மாக்கே க்கு தற்பொழுது இல்லை.

இந்தியாவுக்கு  மேற்குலகு செக் வைத்தமைக்கு காரணம் பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு போராட்டங்கள் மூலம் வெள்ளையரை வெளியேற்றிய படியாலும் எதிர்காலத்தில் காந்தீயம் என்ற கொள்கையை உலகம் பின்பற்றினால் உலக வியாபாரம் படுத்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே)
ஆனால் இந்தியா மேற்குலகின் ஆசைப்படியே மாறிகொண்டு வந்தது (ஜனநாயகம் என்று  உரக்க சொல்ல தொடங்கியது...

இந்தியாவிக்கு செக் வைக்கப்பட்ட நாடுகளில் சிரிலங்காவை தவிர எனையவற்றை தனகப் படுத்தியது ...
நேபாளமும் அதில் ஒன்று தற்பொழுது ,நேபாளமும் சிறிலங்காவும் இந்தியாவுக்கு பெரிய தலையிடியாக உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:24, Rajesh said:

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

20லட்சம் தமிழ்மக்களின் ஆசை  இதில் நானும் ஒருத்தன்.....இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை ..
ஐரோப்பாவில் அப்படி இல்லை ...

On 5/6/2020 at 19:14, Kadancha said:

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

இதற்கு பிறகு பதில போடுகிறேன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.