Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானா பல்கலைக்கழகத்தில் இருந்து 'இனவெறி' காந்தி சிலை அகற்றப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி சிலையை அகற்றும் ஆண்கள்

கானாவின் தலைநகரான அக்ராவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புகழ்பெற்ற இந்திய சுதந்திரத் தலைவரான மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டுள்ளது.

 

மகாத்மா காந்தி 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அகிம்சை எதிர்ப்பை முன்னெடுப்பதில் அவர் மிகவும் பிரபலமானவர்.

இருப்பினும், ஒரு இளைஞனாக அவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து பணிபுரிந்தார், மேலும் அவர் உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தியிருந்தாலும், கறுப்பின ஆபிரிக்கர்கள் குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை.

தனது ஆரம்பகால எழுத்துக்களில் அவர் கறுப்பின தென்னாப்பிரிக்கர்களை "kaffirs" என்று குறிப்பிட்டார் - இது மிகவும் ஆபத்தான இனவெறி. கறுப்பின மக்களை விட இந்தியர்கள் "சிறந்தவர்கள் " என்றும் அவர் கூறினார்.

சிலை அகற்றப்பட்ட பின்னர் கானா பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் (12 டிசம்பர் 2018)

சிலை அகற்றப்பட்ட பின்னர் புதிதாக காலியாக இருந்த அஸ்திவாரத்தின் முன் விரிவுரையாளர்களும் மாணவர்களும் கொண்டாடினர்

 

 

மொழியாக்கம் பெருமாள் மூலம் https://www.bbc.co.uk/news/world-africa-46552614?fbclid=IwAR1JmrfyFzu0LbydsI85jnsZTCCFOXv5-WTJa7g1jeA500EBh6WKLUs_FdI

'Racist' Gandhi statue removed from University of Ghana https://www.bbc.co.uk/news/world-africa-46552614?fbclid=IwAR1JmrfyFzu0LbydsI85jnsZTCCFOXv5-WTJa7g1jeA500EBh6WKLUs_FdI

 

 

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் கொஞ்சமாய் சனம் களத்திலை இறங்குது.
சிலோனிலை கிடக்கிற  நேரு மாமா சிலை காந்தி தாத்தா சிலையெல்லாத்தையும் கடலுக்கை தூக்கி எறியவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி சிலை..... அகற்றப் பட்டதைப் பற்றி, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடாமல் கம்மென்று இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...ஆகா

இன்ப்த் தேன் வந்து பாயுது காதினிலே.😂😂😂😂😂😂😂😂😂😂😂😀😀😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆகா...ஆகா

இன்ப்த் தேன் வந்து பாயுது காதினிலே.😂😂😂😂😂😂😂😂😂😂😂😀😀😂😂😂

ஆகா ஆகா ஆகா
மற்றக் காதுக்குள்ளால் வெளியே வந்து எங்களது காதுக்குள்ளும் பாஞ்சிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபுரக் கோவில் இராச கோபுரத்திலும் காந்தித்தாத்தா நிக்கிறாராம்...அப்ப அவரை எப்ப இறக்கிறது..

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

வல்லிபுரக் கோவில் இராச கோபுரத்திலும் காந்தித்தாத்தா நிக்கிறாராம்...அப்ப அவரை எப்ப இறக்கிறது..

 

திலீபன் போகேக்கை அனுப்பியிருக்க வேண்டும் விட்டுட்டம்.

2018ம் செய்தி. இன்றைய நிலவரத்தோடு ஒத்துபோகிறபடியால் மீண்டும் வந்துள்ளது போலும் 

https://www.bbc.com/news/world-africa-46552614

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, puthalvan said:

2018ம் செய்தி. இன்றைய நிலவரத்தோடு ஒத்துபோகிறபடியால் மீண்டும் வந்துள்ளது போலும் 

https://www.bbc.com/news/world-africa-46552614

அதுதான் தமிழ் பிபிசி ஏன் இதைப்பற்றி மூச்சு விடுதில்லை இந்த செய்தியை தமிழில் தேடிக்கொண்டு இருக்கிறன் பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு காலம் சிந்தனை ஓட்டமும், தேவைகளும் மாறும்போது சிலைகளும் மாறலாம். எல்லாம் மனிதனின் சிருஷ்டி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கொஞ்சம் கொஞ்சமாய் சனம் களத்திலை இறங்குது.
சிலோனிலை கிடக்கிற  நேரு மாமா சிலை காந்தி தாத்தா சிலையெல்லாத்தையும் கடலுக்கை தூக்கி எறியவேணும்.

வேற மாமா தாத்தாக்கள் சிலைகளும் இருந்தா தேடிப்பிடிச்சு கடலுக்க ஏறிய வேணும் 

  • கருத்துக்கள உறவுகள்

மிக வன்மையாக கண்டிக்கறன் .. 👍 இவ்வளவு  நாளா சும்மா இருந்திருக்கினம்.. 💐

6 hours ago, குமாரசாமி said:

கொஞ்சம் கொஞ்சமாய் சனம் களத்திலை இறங்குது.
சிலோனிலை கிடக்கிற  நேரு மாமா சிலை காந்தி தாத்தா சிலையெல்லாத்தையும் கடலுக்கை தூக்கி எறியவேணும்.

அதுக்கு எங்கட அரசியல்வாதிகள் இடம் கொடுக்க வேணுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை

  • 14 டிசம்பர் 2018
 
காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.

கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலைபடத்தின் காப்புரிமைEMMANUEL DZIVENU/JOYNEWS

அகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் மத்தியப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் சிலை புதன்கிழமை அன்று நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலை உறுதிசெய்த பல்கலைக்கழக நிர்வாகம், சிலையை இடம் மாற்றிய சம்பவத்துக்கு வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

"காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவதே அவரது சிலை வைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம். ஆனால், அவர் இதுபோன்ற (இனவெறி கொண்டவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது) விடயங்களுக்கு ஆதரவானவர் என்றால், அவரது சிலை எங்களது வளாகத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்."

காந்தியின் சிலை அகற்றப்பட்ட இடத்தில் நிற்கும் மாணவர்கள்.படத்தின் காப்புரிமைEMMANUEL DZIVENU/JOYNEWS Image captionகாந்தியின் சிலை அகற்றப்பட்ட இடத்தில் நிற்கும் மாணவர்கள்.

20ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர்களில் காந்தியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதற்காக அவர் அறியப்படுகிறார்.

காந்தி தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள மக்களுக்காக போராடினாலும் கூட, கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது.

தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் இனவெறி மிக்க வார்த்தையை (கஃபீர்ஸ்) பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை "மேலானவர்கள்" என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-46563262

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

காந்தி சிலை..... அகற்றப் பட்டதைப் பற்றி, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடாமல் கம்மென்று இருக்கிறார்கள்.

தற்புகழ்ச்சி கொண்ட கிந்திக்கு இதெல்லாம் வேப்பங்காய் மாதிரி கசக்கும்.
என்னெண்டு வெளியிலை சொல்லுவினம்? 

இந்து மதத்தின் நச்சு கருத்தான வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்ட காந்தி  இனவெறிக்கு ஆதரவாக தான் இருப்பார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு இந்திய அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கார்  பிரிட்டிஷ் ஆட்சியாளர் நடத்திய முக்கிய  ஆலோசனை மகாநாட்டில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுகான் சில உரிமைகள் தொடர்பாக பேசி  அதை சட்டமாக முற்படுகையில்   அந்த மக்களின் உரிமைகளை வழங்கும் சட்ட ஷரத்ததுகளை  தடுப்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்க புறப்பட்டு அம்பேத்காரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி அந்த ஷரத்துகளை தடுத்து நிறுத்தியவர் காந்தி. இப்படியான எண்ணக்கரு சுமக்கும் காந்தி ஆபிரிக்கர்கள்க்கு எதிராக இன வெறிக் கருத்து சொல்லியிருப்பார் என்பது விளங்கி கொள்ளக்கூடியதே. அதனால் அவருகெதிரான ஆபிரிக்க மாணவர்களின் கோபம் நியாயமானதே.

இருந்தாலும், மறுபுறத்தில்  சுதந்திரப்போராட்ட பாதையான் அகிம்சை, அவரது அர்பணிப்பு, சமுதாய பணி ஆகியவற்றால் இன்றும் உலகத் தலைவர்களால், மக்களால் கெளரவமாக பார்க்கபடும் உலக தலைவர்களில் ஒருவராகவே அவர் இருக்கிறார். 

 பொதுவாக  தெற்காசிய நாடுகளில்  தேசபக்தி,  தேசியம்  என்பவற்றை முன்னிறுத்தி அவர்கள் விரும்பும் தலைவர்களை  அவர்களின் இயல்பிற்கு மீறி  மிகைப்படுத்தி புகழ்வது மிக அதிகம். அதுவே இந்தியர்கள் காந்தியை புகழ்வதற்கு காரணம்.  எமது ஈழத்தில் இருந்து காந்தியின் சிலைகளை அகற்றுவதானால் அத்துடன் காந்தி  விரும்பும் இந்து மத வருணாசிரம நச்சு மரத்தையும் காந்தியோடு  தூக்கி வீசுவதே எமக்கு நன்மை தரும். இந்து மத வருணாசிரம‍த்தை எம்முடன் வைத்து கொண்டு காந்தி சிலையை மட்டும் தூக்கி வீசுவது தனியே காழ்புணர்ச்சியை தீ்ர்க்க மட்டுமே உதவும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை கடந்த வார இறுதியில் இங்கிலாந்து முழுவதும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து ஏறப்பட்டுள்ளது

லண்டனின் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை கடந்த வார இறுதியில் இங்கிலாந்து முழுவதும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து மற்றைய சிலைகளை போல் இனவாதி காந்தியின் சிலையும் பெட்டியடிக்கப்படுது .

https://www.dailymail.co.uk/news/article-8415101/BLM-activists-DEFY-Boris-Johnsons-calls-abandon-protests.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.