Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவிலிருந்து சேகரித்து தமிழ் அரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட 20 கோடி பணம் எங்கே?: மகளிர் அணி பரபரப்பு கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்கவும் இல்லை, கேட்டவவுக்கு ஆதரவாக அறிக்கை விடவும் இல்லை, ஏன்? காசு கொடுத்தவர்களுக்கு காசு போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்திட்டுது என்று ஆதாரம் கிடைச்சிருக்கும். இல்லாவிட்டால் கனேடிய தமிழரும் நிறுவனங்களும்  சுமேந்திரனை கள்ளன் என்று கொழும்பில்  வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருப்பார்களே? இவவுக்கு ஒருத்தரும் கணக்கு காட்டாததற்கு காரணம் இவவுக்கும் அந்த காசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது.

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கொடுத்த பணம் எப்படி கட்சியின் கணக்கில் வரும்? கட்சி காசை களவெடுத்து தேர்தல் விளம்பரத்துக்கும்,  மேடை, போக்குவரத்து செலவுகளுக்கும் பயன்படுத்தியிருந்தால்தானே கட்சியின் கணக்கில் வரும்? இங்கே காசை கனடாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுபோய் சுமேந்திரன் அந்த நலன்புரி நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறார். இப்படியே போனால் காசோலையை   தபாலில் அனுப்பும் தமிழர் எல்லாம் தபால் கந்தோரின் கணக்கிலெல்லோ காசை தேட வேண்டும்? எங்கள் மக்களின் அறிவு இவ்வளவு மட்டமா?😩

 

2 hours ago, Rajesh said:

இதன் மூலம் இவர்கள் பணத்தை சுருட்டியது ஆணித்தரமாக நிரூபிக்கப்படுகிறது!
மக்கள் அறிவு மட்டமானவர்கள் என்று கயவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

காசு பற்றி உங்களுக்கு எதுவும் புரியாது போல தெரிகிறதே? யாரோ இருக்க இடமும் சாப்பாடும் தருகிறார்கள் போல? புரியாத சங்கதிகளில் மூக்கை நுளைத்து ஏன் இப்படி மற்றவர்கள் முன் அவமானப்படுகிறீர்கள்? உங்களுக்கு புரிகிற விடயமாக பார்த்து எழுதலாமே?😃

Edited by கற்பகதரு

3 minutes ago, கற்பகதரு said:

காசு பற்றி உங்களுக்கு எதுவும் புரியாது போல தெரிகிறதே? யாரோ இருக்க இடமும் சாப்பாடும் தருகிறார்கள் போல? புரியாத சங்கதிகளில் மூக்கை நுளைத்து ஏன் இப்படி மற்றவர்கள் முன் அவமானப்படுகிறீர்கள்? உங்களுக்கு புரிகிற விடயமாக பார்த்து எழுதலாமே?😃

கொள்ளைக் கோஷ்டியை காப்பாற்ற நினைக்கிற ஆக்கள் தான் அவமானப்பட வேணும்.

எல்லாரையும் உங்களைப்போல மற்ற ஆக்களின் காசுல பிழைப்பு நடத்துவீனம் என்டு நினைக்கிறது உங்க வழமையாச்சே!

🥱

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உறவுகளின் நேரமும் வீனடிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2020 at 21:44, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

ஓலை வீடா தரட்டுமோ
ஓட்டு வீடா வேணுமோ
சொல்லுங்க மருமகனே
கூசாம சொல்லுங்கோ மருமகனே

ஓலை வீடும் வேண்டாம் மாமி
ஓட்டு வீடும் வேண்டாம் மாமி
ஆளை விட்டாப் போதும் மாமி
அம்மாவாண
ஆளை விட்டாப் போதும் மாமி. 

பொரியல் மீனாய் வைக்கவோ
அரைச்ச குழம்பு வைக்கவோ
சொல்லுங்கோ மருமகனே
கூசாம
சொல்லுங்கோ மருமகனே

பொரியல் மீனும் வேண்டாம் மாமி
அரைச்ச குழம்பும் வேண்டாம் மாமி
வயித்தெரிச்சல் வேண்டாம் மாமி
அம்மாவாண
வயித்தெரிச்சல் வேண்டாம் மாமி

கீரோ சைக்கிள் வேணுமா
கொண்டா சைக்களா கொண்டரட்டா
சொல்லுங்கோ மருமகனே
ஆசையா
சொல்லுங்கோ மருமகனே

கீரோ சைக்கிளும் வேண்டாம் மாமி
கொண்டாவும் வேண்டாம் மாமி
கொன்று போடும் திட்டமோ மாமி
அம்மாவாண கொண்டு போடும் திட்டமோ மாமி

வீணை வாங்கித் தரட்டுமோ
கானம் ஒன்று இசைக்கவோ
சொல்லுங்கோ மருமகனே
பயமில்லாமல் 
சொல்லுங்கோ மருமகனே

வீணை யானை வேண்டாம் மாமி
கானம் மொட்டும் வேண்டாம் மாமி
வாழ விட்டாப் போதும் மாமி
எங்களை
வாழவிட்டாப் போதும் மாமி

 

 

On 28/6/2020 at 04:06, பெருமாள் said:

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியைச் சேர்ந்த செயலாளர் ஒருவரே எழுப்பியிருக்கும் கேள்வியை வெறுமனே தட்டிக்கழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2020 at 00:41, கற்பகதரு said:

நீங்கள் சுமந்திரனிடம் காசு கொடுத்ததற்கு ஆதாரத்தை தந்தால் மேற்படி விடயங்களை தரலாம். காசு கொடுத்தவர்களுக்குத் தான் மேற்படி தகவல்கள் வழங்கப்படும் - மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லையே?

இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎06‎-‎2020 at 03:39, பெருமாள் said:

பிறகு யாரிடம் குடுத்தவராம் அறிவு ஜீவிக்கு மறதி வந்திட்டுதாம் நம்புங்கள் மக்களே நம்புங்கள்.

 

முன்பு தவிபு களுடன் அரசு பேச்ச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரம். திருகோணமலையில் அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன் .

தவிபு உறுப்பினர் ஒருவர்,  எதோ இயக்க அதிர்ஷ்ட லாப சீட்டு இழுப்பு என்று சொல்லி , இயக்க இலச்சினைகளுடன் கூடிய கட்டு ஒன்றை கொடுத்து எல்லோருக்கும் கொடுத்து விடுமாறு கேட்டிருந்தார் .

அலுவலக சிற்றூழியரிடம் கொடுத்து ( ம்ம்இப்ப இருக்கும்இந்த ஊரில் எங்கே அந்த வசதிகள் , மனம் ஏங்குதே ...)  விருப்பமானவர்களுக்கு குடுத்து பணத்தை சேர்த்து தருமாறு சொல்லியிருந்தேன் .

அதற்கு இரண்டு நாட்களின் பின் பேச்சவார்த்தை முறிவடைந்து , தவிபு  திருகோணமலையை விட்டு  வெளியேற , 90% இற்கு மேற்பட்ட ஊர்சனமும்  அவர்களுடன் இடம்பெயர்ந்து , எஞ்சியிருந்தவர்களுடன் ஆமிக்காரன் ஊழித் தாண்டவம்  ஆடி , அதிலேயும் எஞ்சிய ஒருவனாக,  பல கிழமைகள் கழித்து அலுவலகம் போனால் , அந்த சிற்றூழியரும் தப்பி பிழைத்து அலுவலகம் வந்திருந்தார் . ticket இற்கு என்ன நடந்தது என்று கேட்டேன் . " வலு பத்திரமாக வீட்டு கூரைக்குள்ளே செருகி வைத்திருக்கிறேன் ஐயா " என்கிறார் அவர் . "நீங்கள் வருவீர்களோ என்று தெரியாததால் கொண்டுவரவில்லை , நாளை கொண்டுவந்து தருகிறேன் , ஒரு 90  ரூபாய்  காசும் இருக்குது " என்றும் தொடர்ந்தார் அவர் .   

எனக்கோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு சொன்னேன் அவரிடம் " இங்க பாருங்கோ , இரண்டு வேலை செய்யுங்கோ , வீட்டை போனவுடனும் அந்த டிக்கெட் கட்டையை எடுத்து , கிழித்து அடுப்பில போட்டு எரித்து விடுங்கோ , அந்த கலெக்சன் 90  ரூபாவையும்   உங்கட ஊர் கோயில் உண்டியலில் போட்டு விடுங்கோ " என்று .

 

சுமந்திரன் ஏன் மறந்து போனார் எண்டால் அவர் அந்த 210 மில்லியனையும் கோயில் உண்டியலில் போட்டிருப்பார் .. ( சுபம் )      

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்யும் போது ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார்கள்.
இலங்கையில் இது கடைப்பிடிக்கப்படுதா தெரியவில்லை.
எப்படியும் ஏதாவது ஒரு தொகை எழுதுவார்கள் தானே.
கடந்த தேர்தலிலும் நடக்க இருக்கும் தேர்தலிலும் தமிழ் வேட்பாளர்கள் எழுதிய தொகை சொத்து மதிப்பு யாருக்காவது தெரியுமா? பொதுமக்கள் பார்க்கலாமா?பார்க்கலாம் என்றால் யாராவது எடுத்து வெளியிட முடியுமா?

On 28/6/2020 at 13:44, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

தேர்தலும் வந்திட்டுது இன்னும் விலைப்படல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சாமானியன் said:

 

தவிபு உறுப்பினர் ஒருவர்,  எதோ இயக்க அதிர்ஷ்ட லாப சீட்டு இழுப்பு என்று சொல்லி , இயக்க இலச்சினைகளுடன் கூடிய கட்டு ஒன்றை கொடுத்து எல்லோருக்கும் கொடுத்து விடுமாறு கேட்டிருந்தார் .

அலுவலக சிற்றூழியரிடம் கொடுத்து ( ம்ம்இப்ப இருக்கும்இந்த ஊரில் எங்கே அந்த வசதிகள் , மனம் ஏங்குதே ...)  விருப்பமானவர்களுக்கு குடுத்து பணத்தை சேர்த்து தருமாறு சொல்லியிருந்தேன்.    

 

1 hour ago, சாமானியன் said:

இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..

இப்படி எத்தனை பேர் அவர்களின் பெயரால் ..... வளர்ந்ததும் வாழ்வதும் .... 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..

சாமானியன், உங்கள் ஏமாற்றம் புரிகிறது! ஆனால், இந்தப் பதில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது சேறு பூசும் போது வரும் rhetoric ஆன பதில் தான்! எனக்கு நியாயமாகத் தான் படுகிறது!

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)! 

எனவே, ஜூட்டின் பதில் சரியென நான் நினைக்கிறேன்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் நல்லவரா கெட்டவரா வெளியில் இருக்கவேண்டியவரா வெளியே விட்டால் பொது மக்களுக்கு பாதிப்பு உண்டா  என்று நீதிபதி சிந்தித்து தீர்ப்பு கூறும் நேரம் போல் மக்களுக்கும் அதுவும் எங்கள்  உடன்பிறப்புகளுக்கு தங்கள் ஆள்பவர்களை நியமித்து கள்ளர் காடையாரை ஆட்சியில் இருந்து இறக்கி  ஆட்சியில் இருந்த நேரம் தமிழ் மக்களை ஏமாத்தியவர்கள் போர் குற்ற விசாரணை முடியாமல் முடிந்தது என்று பித்தலாட்டம் காட்டியவர்கள் போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கும் நேரம் இந்த தேர்தல் நேரம் அப்படியான நேரம்களில் உங்கள் திருட்டுத்தனம்களை மக்களுக்கு சொல்லாமல் தேர்தல் முடிந்த பிறகா சொல்லுவது ?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)

அண்ணா இங்கொரு துண்டு வெட்டித்தான் ..அங்கு மிச்சம் போகும்...அப்ப இவை அமசடக்குவினம்தானே..இதுதான் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஒருத்தர் நல்லவரா கெட்டவரா வெளியில் இருக்கவேண்டியவரா வெளியே விட்டால் பொது மக்களுக்கு பாதிப்பு உண்டா  என்று நீதிபதி சிந்தித்து தீர்ப்பு கூறும் நேரம் போல் மக்களுக்கும் அதுவும் எங்கள்  உடன்பிறப்புகளுக்கு தங்கள் ஆள்பவர்களை நியமித்து கள்ளர் காடையாரை ஆட்சியில் இருந்து இறக்கி  ஆட்சியில் இருந்த நேரம் தமிழ் மக்களை ஏமாத்தியவர்கள் போர் குற்ற விசாரணை முடியாமல் முடிந்தது என்று பித்தலாட்டம் காட்டியவர்கள் போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கும் நேரம் இந்த தேர்தல் நேரம் அப்படியான நேரம்களில் உங்கள் திருட்டுத்தனம்களை மக்களுக்கு சொல்லாமல் தேர்தல் முடிந்த பிறகா சொல்லுவது ?

 

7 minutes ago, alvayan said:

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)

அண்ணா இங்கொரு துண்டு வெட்டித்தான் ..அங்கு மிச்சம் போகும்...அப்ப இவை அமசடக்குவினம்தானே..இதுதான் உண்மை...

கட்டாயம் எந்த நேரத்திலும் கேட்க வேண்டும்!

ஆனால், உங்கள் இருவருக்குமே என் கேள்வி: ஆதாரம் எங்கே? உங்கள் பதில்  என்னவென்று தெரியும், திருடன் சாட்சி வைத்துக் கொண்டா திருடுவான்? என்பீர்கள். ஆனால் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆழுக்கு எல்ல இடத்திலும் விரோதிகள் விமர்சகர்கள்! ஒருவரிடம் கூட ஆதாரம் கண்டு பிடிக்கும் இயலுமை இல்லை என்பது நம்பக் கொஞ்சம் கடினம் தான்! 

ஆனால், நீங்கள் தொடருங்கள்! இது வரை, இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டிய சந்தர்ப்பங்களில் அது சாட்டியோரின் முகத்தில் தான் மீள வந்து அடித்திருக்கிறது! இந்த ஆகஸ்டில் அது மீள நடக்கிறதா என்று பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎07‎-‎2020 at 00:03, Justin said:

சாமானியன், உங்கள் ஏமாற்றம் புரிகிறது! ஆனால், இந்தப் பதில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது சேறு பூசும் போது வரும் rhetoric ஆன பதில் தான்! எனக்கு நியாயமாகத் தான் படுகிறது!

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)! 

எனவே, ஜூட்டின் பதில் சரியென நான் நினைக்கிறேன்! 

மன்னிக்க வேண்டும் Justin , உங்களின் கருத்துடன் ஓத்த்துப் போக முடியவில்லை . ராஜரத்தினம் இருந்தார் , தனியே கொடுத்தார் , சேர்ந்ததா இல்லையா என்ற கேள்விக்கே அங்கே இடமில்லை , இந்த தொகை ( மிக சிறியது அல்ல ) , பல பேர் சேர்ந்து கொடுத்திருந்திருக்க தான் முடியும் . அவர்கள் எல்லோருக்கும் பணம் சேர்ந்ததா இல்லையா என்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்று நீங்கள் கூற வரவில்லை என்றே நம்புகின்றேன் . 2009 வைகாசி மாதமும் இவ்வாறே பெருமெடுப்பில் நடந்ததும் , அதன் பின் என்ன நடந்தது / நடக்காமல் விட்டது என்பதும் ????  பாதிக்கப் பட்ட ஒருவன் என்ற முறையில் கேள்வி எழுப்பும் தார்மீக உரிமைகளுமா இல்லாமல் போயிற்று இந்த களவாணிக் கூட்டத்தின் மனப்பான்மையில்  !!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.