Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிழக்கு மக்கள் தங்கள் உரிமைகளுக்குகாய் கதைத்தால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கிறார்கள் என சொல்லி அவர்கள் எப்பவும் உங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்பதே வடக்கர்களின் விருப்பம் .
சிங்களவர்கள் ,கிழக்கு மக்கள் மீது பரிதாபப்பட்டு கிழக்கு மண்ணுக்கு நல்லது செய்ய விழைந்தாலும் உங்களை மாதிரியான ஆட்கள் விட மாட்டீர்கள் .
எப்பவும் உங்கள் காலடியில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதே நீங்கள் நினைப்பது  .
அது முடியாதவிடத்து துரோகி ,பிரதேசவாதம் கதைக்கிறார் என்னும் பட்ட பெயர்கள் 

இரதி,

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள். இங்கே நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை. கதைப்பவர்கள் யாரென்று வாசித்துப் பாருங்கள் தெளிவாகப் புரியும். ☹️

மிகச் சிலரின் குறுகிய கண்ணோட்டத்திற்காக எல்லோர் மீதும் ஒரே சாயத்தை பூசமாட்டேன். நீங்கள் எப்படியென்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ☹️

உங்கள் சொந்த உலாபத்திற்காக ஒட்டுமொத்த தென் தமிழரையும் சோரம் போனவர்களாகக் காட்டாதீர்கள். 😏

5 hours ago, கற்பகதரு said:

எத்தியோப்பியா எங்கள் மண்ணிலும் பார்க்க எவ்வளவோ  உயர்வான நிலையில் இருக்கிறது. 

இந்தக் கருத்து விதண்டாவாதமாகப்படுகிறது. சொல்லிய விடயம் என்ன என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். ☹️

4 hours ago, கிருபன் said:

சம்பந்தர் செய்த முட்டாள்தனமான முடிவு கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக வர ஒத்துக்கொண்டது. இது சாணக்கிய அரசியலுக்குள் வராது.  கிழக்கு மாகாண/தென் தமிழீழ மக்களின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இதைவிட ஆளுநர் ஆட்சிக்குள் போக அனுமதித்திருக்கலாம்.

கிழக்குவாழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஒரு பாடம் கொடுத்து இரண்டு எம்பிகளுக்கு மேல் அவர்களுக்கு கிடைக்காமல் பண்ணவேண்டும். 

மட்டக்களப்பில் பிள்ளையானும், அம்பாறையில் கருணாவும், திருகோணமலையில் ஒரு தமிழரும் இல்லாமலும் முடிவுகள் இருக்கவேண்டும்

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கவலையான விடயம். ☹️

  • Replies 138
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கிழக்கு மக்கள் தங்கள் உரிமைகளுக்குகாய் கதைத்தால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கிறார்கள் என சொல்லி அவர்கள் எப்பவும் உங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்பதே வடக்கர்களின் விருப்பம் .
சிங்களவர்கள் ,கிழக்கு மக்கள் மீது பரிதாபப்பட்டு கிழக்கு மண்ணுக்கு நல்லது செய்ய விழைந்தாலும் உங்களை மாதிரியான ஆட்கள் விட மாட்டீர்கள் .
எப்பவும் உங்கள் காலடியில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதே நீங்கள் நினைப்பது  .
அது முடியாதவிடத்து துரோகி ,பிரதேசவாதம் கதைக்கிறார் என்னும் பட்ட பெயர்கள் 

சம்பந்தன் திருகோணமலையில் 2,217 மில்லியன்களுக்கு அபிவிருத்தி செய்திருக்கிறாராமே!

221 கோடி.... அடேங்கப்பா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கிருபன் said:

அம்பிகா அவர்கள் போனஸ் ஆசனம் மூலம் தேசியப்பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்யப்படுவது நல்லதே. பாராளுமன்றம் சட்டவாளர்களுக்கானது. விவாதம் செய்யத் தெரியாமல் எழுதியதையே வாசிக்கத் தெரியாமல் நித்திரை கொள்ளப் போவர்களைவிட ஆளுமையுள்ளவர்கள், புலமையுள்ளவர்கள் போகலாம்தானே.

35,35 வருசமாய்  தமிழ் எம்பி பிரக்கிராசிமார் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிச்சவையள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இரதி,

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள். இங்கே நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை. கதைப்பவர்கள் யாரென்று வாசித்துப் பாருங்கள் தெளிவாகப் புரியும். ☹️

மிகச் சிலரின் குறுகிய கண்ணோட்டத்திற்காக எல்லோர் மீதும் ஒரே சாயத்தை பூசமாட்டேன். நீங்கள் எப்படியென்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ☹️

உங்கள் சொந்த உலாபத்திற்காக ஒட்டுமொத்த தென் தமிழரையும் சோரம் போனவர்களாகக் காட்டாதீர்கள். 😏

 

நான் வாசித்த படியால் தான் சொல்கிறேன்...எனக்கு உங்கள் கருத்தும் ,உங்களை ஆதரிப்பவர்களது கருத்தும்  அவர்களை உங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தாகவேபடுகுது 
 

 நான் எப்பப்பட்டவள் என்று என்  மன சாட்சிக்குத் தெரியும்

3 hours ago, கிருபன் said:

சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. அப்படி எங்காவது கூறியிருந்தால் இணைப்பைக் காட்டுங்கள்.

இனப்படுகொலை என்று ஐ.நா.இல் நிரூபிப்பது கடினம் என்பதால்தான், அவர் கஜேந்திரகுமாரைப் போல ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குப் போய் வடையும் ரீயும் குடிப்பது ஒரு பலனையும் தராது என்று சட்டரீதியாக அபிப்பிராயப்படுகின்றார்.

அம்பிகா சற்குணநாதன் மனிதயுரிமை ஆணையாளராக வேலை செய்ததால், இலங்கை யாப்பில் அடிப்படை உரிமைகளுக்குள் அடங்கி இருக்கும் மனிதயுரிமைச் சட்டங்களை மகிந்த/கோத்தபாய புதிய யாப்பை உருவாக்கும்போது தனித்துவமான சட்டமாகக் கொண்டுவர வேலைசெய்வார்.

உலகில் பாராளுமன்றங்களின் வேலையே சட்டங்களை ஆராய்ந்து, திருத்துவதும், புதிய சட்டங்களை ஜனநாயகமுறைப்படி உருவாக்குவதும்தான். 

மக்களைப் பிரதிநிதிப்படுத்துவர்கள், மக்களின் நலன்களை முன்னிறுத்தி சரியான சட்டங்களை, யாப்புத் திருத்தங்களை உருவாக்க பாடுபடவேண்டும். அனுபவம் இல்லாத சுயநலமிகளைவிட, துறைசார் அனுபவம் உள்ளவர்கள் போவதால் நன்மைதான் கிட்டும்.

இதைக் கேட்டால் நிதி சேர்க்கவும், பினாமியாக பிஸினஸ் செய்யவும் ஒரு கூட்டம் குஷியாக வெளிக்கிடும்.

நீங்கள் சொல்வது சரி . இனப்படுகொலை என்று நிறுவ முடியாது என்று தான் சொல்கிறார்...இவ்வளவு காலமும் அரசியலில் இருக்கிறார் . வக்கீல் தொழிலில் பிரபல்யமானவராய் இருக்கிறார் ...அவருக்கே இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நிறுவ முடியாது உள்ள போது அம்பிகா என்னத்தை கிழிப்பார்?...இவ்வளவு நாளும் மனிதவுரிமை ஆணைக்குழுவில் வேலை செய்தவர் ...எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழருக்கு ஆதரவாய் கதைத்தவவா?...ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் போதே சந்தர்ப்பத்தை  சரியாய் பயன்படுத்தாதவ ஒய்வு பெற்றதும் ஏதாவது செய்திட்டாலும் ...விக்கியை கொண்டு வந்து விட்ட மாதிரித் தான் இருக்கும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 22:37, nunavilan said:

 
இப்படியான   விதிகளை நீங்களே போட்டுக்கொள்வீர்களா  அல்லது யாரோ சொல்ல கேட்டு எழுதுகிறீர்களா?

பேருந்து     நிலையத்தையே  மட்டக்களப்பில் கட்ட முடியாதவர் அம்பாறையில் நிறைய செய்வார் என் கிறீர்கள்?

நான் சொன்னது கூத்தமைப்பால் நுணா 

23 hours ago, Kapithan said:

திரும்பபும் முதலிலிருந்தா ? ☹️

கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனை தனித்துவமானது என்பது உண்மை. அதற்குள் ஏன் பிரதேச வேறுபாட்டை வலிந்து திணிக்கிறீர்கள்(எனது கருத்திற்கு). உண்மையில் வேதனையாக இருக்கிறது. ☹️

நான் சொல்வது உங்களுக்கு பிரதேச வாதம் என நீங்கள் உணர்ந்தால் அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது கபிதன் இதுதான் நிலை நிலமையும் 

 

8 hours ago, கிருபன் said:

சம்பந்தர் செய்த முட்டாள்தனமான முடிவு கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக வர ஒத்துக்கொண்டது. இது சாணக்கிய அரசியலுக்குள் வராது.  கிழக்கு மாகாண/தென் தமிழீழ மக்களின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இதைவிட ஆளுநர் ஆட்சிக்குள் போக அனுமதித்திருக்கலாம்.

கிழக்குவாழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஒரு பாடம் கொடுத்து இரண்டு எம்பிகளுக்கு மேல் அவர்களுக்கு கிடைக்காமல் பண்ணவேண்டும். 

மட்டக்களப்பில் பிள்ளையானும், அம்பாறையில் கருணாவும், திருகோணமலையில் ஒரு தமிழரும் இல்லாமலும் முடிவுகள் இருக்கவேண்டும்

நீங்கள் சொல்வதுதான் வாக்களிப்பின் முடிவும்  இனியும் மக்கள் விளங்க்கிக்கொள்ளாவிட்டால் கிழக்கு மக்களுக்கு ஒரு அரோகரா அவ்வளவுதான் கிருபன்

7 hours ago, MEERA said:

இவர் மண்ணையும் மக்களையும் நேசிப்பவராக இருந்தால் 2004 சம்பவம் நடைபெற்று இருக்காது.

மேலும் பிரதி அமைச்சராக இருந்த போது ஒன்றும் செய்யாதவர் / புடுங்தகாதவர் தற்போது செய்வார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்??

தவறு பலருக்கு வேலை வாய்ப்பு அதாவது லேபர் என்று சொல்லுகின்ற அனைத்து அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் , போன்ற இடங்களுக்கு பல தமிழ் இளைஞ்சர் யுவதிகளுக்கு வேலை பெற்றுக்கொடுத்தார்  அண்ண  ஆனால் இது ஊடகங்களுக்கு தெரியாது தெரியவராது  அப்படித்தான் நடந்தது அரசியல் சூழ்நிலை காரணமாக கல்முனை ஆஸ்பத்திரியில் விசாரித்தால் 100 மேற்பட்டவர்களுக்கு இவரால் தொழில் வழங்கப்பட்டது அதே போல வேறு அரச அலுவலகங்களிலும்  வழங்கப்பட்டது  அவருக்கு ஆதரவாக இல்லை நடந்ததை சொல்ல வேண்டுமல்லவா

3 hours ago, MEERA said:

சம்பந்தன் திருகோணமலையில் 2,217 மில்லியன்களுக்கு அபிவிருத்தி செய்திருக்கிறாராமே!

221 கோடி.... அடேங்கப்பா....

சொல்லவே இல்ல சம்பந்தர கேள்வி மேல கேட்கிறது சனம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நான் வாசித்த படியால் தான் சொல்கிறேன்...எனக்கு உங்கள் கருத்தும் ,உங்களை ஆதரிப்பவர்களது கருத்தும்  அவர்களை உங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தாகவேபடுகுது 

 

மன்னிக்கவும் சகோதரி, 

உங்கள் தவறான புரிதலுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. உங்களுடைய புரிதலைப் பார்த்தபின் சிரித்துவிட்டு அப்பால் நகர்ந்து செல்ல வேண்டியதுதான். 

வேற்றுமை பாராட்டாது, ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும்  நான் உங்கள் கண்களுக்கு அடக்கி ஒடுக்குபவனாகத் தெரிந்தால், அதைப் பார்த்து என்னால்  சிரிக்கத்தான் முடியும்.  😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

35,35 வருசமாய்  தமிழ் எம்பி பிரக்கிராசிமார் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிச்சவையள்? 😎

அதைத்தான் நானும் கேக்கிறன். ஒரு அமைச்சு பதவி பெற்ற்றாவது அபிவிருத்தி செய்தார்களா.

இப்ப பாக்கப் போனால் ஊர்ப்புதினம் என்ட பகுதியே ஊரில் உள்ளவர்களை புறக்கனித்தை அரங்கேறுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

#இங்கு எழுதப்படும்  கருத்துக்களை  பார்க்க மீண்டும் ஆயுதமே வெற்றி தரும்.அல்லது சிறந்த தேர்வு என்பதாக  படுகிறது#

இதைக் கேட்டால் நிதி சேர்க்கவும், பினாமியாக பிஸினஸ் செய்யவும் ஒரு கூட்டம் குஷியாக வெளிக்கிடும்.

கட்டாயம் காசு சேர்க்க ஒரு கூட்டம் குஷியாக வெளிக்கிடும்.ஆனால் சனம் இப்போது படு உஷார். ஆயுதபோராட்டத்தினால் பட்டது போதும் என்ற தெளிவு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சுவைப்பிரியன் said:

அதைத்தான் நானும் கேக்கிறன். ஒரு அமைச்சு பதவி பெற்ற்றாவது அபிவிருத்தி செய்தார்களா.

இப்ப பாக்கப் போனால் ஊர்ப்புதினம் என்ட பகுதியே ஊரில் உள்ளவர்களை புறக்கனித்தை அரங்கேறுது.

எதிர்ப்பு அரசியல் செய்தால் அமைச்சராக முடியாது. டக்ளஸ்,  விஜயகலா மகேஸ்வரன்,  கருணா அம்மான் போன்றோர் அமைச்சர்களாக இருந்து தங்களைத்தான் பார்த்துக்கொண்டார்கள்.

பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க சபை. ஆளுங்கட்சி கொண்டுவரும் சட்டங்களை பலமிக்க எதிர்க்கட்சி மாற்றங்களுக்கு உள்ளாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டும் இடும். இதை அரசியல்வாதிகளே சொல்லாமல் வெற்று வாக்குறுதிகளை வழங்கி பதவிகளை எடுக்கின்றார்கள்.

ஒரு தீர்வுப்பொதியை தயாரிக்கவும்,  வாசித்து விளங்கி திருத்தங்களை சமர்பிக்கவும் அவை பற்றிய அனுபவம் உள்ளவர்களால் முடியும். மற்றையோர் கை உயர்த்த மட்டும்தான் லாயக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
  •  

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தவறு பலருக்கு வேலை வாய்ப்பு அதாவது லேபர் என்று சொல்லுகின்ற அனைத்து அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் , போன்ற இடங்களுக்கு பல தமிழ் இளைஞ்சர் யுவதிகளுக்கு வேலை பெற்றுக்கொடுத்தார்  அண்ண

எவ்வளவு லஞ்சம் வாங்கினார் வேலை பெற்றவர்களிடம் இருந்து?  இல்லை, இலங்கையில் பெரிய பணக்காரராய் உள்ளார். அறியலாமே என்று கேக்கிறேன். எதுக்கும் ஒரு வேலைக்கு மனு போட்டு வைப்போம் தொகை தெரிந்தால். 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை ஆதரிக்க முன்வைக்கப்படும் காரணங்கள் என்ன? வேலை வாய்ப்பு, அபிவிருத்தி போன்றவை மட்டும் தானா? சரி, அப்படியே இருந்தாலும் அவரை ஆதரிப்பதால், அவரைப் பின்னால் இருந்து இயக்கும் நவீன சிங்கள இனவாதத்தின் இன்றைய அரசியலை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதாக இது ஆகிவிடாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் தமிழரில் ஒரு பகுதியினர் தமது உறவுகள்மேல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிற்கு பொறுப்பானவர்கள் என்று கருணாவின் இயக்குநர்களை நீதியின் முன் கொண்டுவர எத்தனிக்கும்பொழுது, தமிழரின் இன்னொரு பகுதியினர் நடந்த அநியாயங்களுக்கான காரணகர்த்தாக்களை ஆதரிப்பதென்று எடுத்திருக்கும் முடிவானது, தமிழரின் நிலையினை இன்னும் பலவீனமாக்காதா?

அல்லது, இவை எதுவுமேயில்லாமல் வடக்கு - கிழக்கு என்கிற பார்வையின்பால் மட்டுமே நின்று சிங்களவருடன் இணைவதென்று கிழக்குத் தமிழர்கள் எடுக்கும் முடிவா இது? 

முஸ்லீம்களுக்கெதிரான அரசியலினை சிங்களத்துடன் சேர்வதன்மூலம் அவர்கள் செய்ய நினைப்பது சரியான முடிவுதானா?

சிறுபான்மையினங்கள் ஒற்றுமையாக பொதுவான எதிரிக்கெதிராக அரசியல் செய்யவேண்டிய தருணத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? சிங்களவர்கள் தமக்குள் என்னதான் அரசியல் ரீதியான, பிரதேச ரீதியிலான வேற்றுமைகளைக் கொண்டிருந்தபோதும், பொது எதிரியான தமிழர்களை அழிப்பதற்காக முழுச் சிங்கள இனத்தையும் ஒன்றுசேர்த்து செயற்பட்டார்கள். அவர்கள் அபிவிருத்தியென்றோ, அரசியல் ரீதியான லாபங்கள் என்றோ சிறிய அற்ப விடயங்களுக்காகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக மாறவில்லை. அவர்களின் இலக்கு ஒன்றுதான், தமிழனை அடக்கி, ஒடுக்கி இறுதியில் அழிப்பது. 

எம்மை அழித்தவர்களே தமது வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்டு செயற்படும்போது, அழிக்கப்பட்ட நமதினம் இன்னும் எவ்வளவு தூரத்திற்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்? செய்கிறோமா?

இறுதியாக, கருணாவை தனது சார்பாக அம்பாறையில் இறக்கியிருப்பதன் மூலம் சிங்களம் அடைய போகும் நண்மைகள்,

1 தமிழர்களும் முஸ்லீம்களும் மீண்டும் இணைந்து தனக்கெதிரான அரசியலை முன்னெடுப்பதை முற்றாகத் தடுத்து நிறுத்துதல்.

2. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று பிரதேச ரீதியாகத் தமிழர்களை பிரித்தது மட்டுமல்லாமல், நிரந்தர பிளவொன்றினை ஏற்படுத்தும் கைங்கரியத்தினைத் தொடக்கி வைத்திருப்பது.

3. தமிழரின் ஒரு பகுதியினர் தமக்கு ஆதரவளிப்பதனால், இன்னொருபகுதியினர் தொடர்ந்து கோரிவரும் போர்க்குற்றவிசாரணைகள், நிரந்தர அரசியல்த் தீர்வு ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்வதுடன், தமிழர்கள் தம்முடன் இருக்கிறார்கள் எனும் மாயத்தோற்றத்தை சர்வதேசத்தில் ஏற்படுத்தியது. 

4. தமிழர் தாயகத்தின் தென்பகுதியில் தமிழரில் ஒரு பகுதியினரின் ஆதரவுடனேயே தங்குதடையற்ற சிங்கள மயமாக்கலினை கொண்டு நடத்துவது.

 

இதைவிட இதுபற்றி விளக்க முடியாது. புரிந்தால் நல்லது, இல்லையென்றால் ஒன்றுமே செய்யமுடியாது. கிழக்குத் தமிழர்கள் கருணாவை ஆதரிப்பதால் , ஏனைய தமிழர்கள் வெறுமனே இருக்கப்போவதில்லை. அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கன நீதிப்போராட்டமும், அரசியல் ரீதியிலான விடுதலைக்கான போராட்டமும் உங்களின் உதவியின்றியே தொடர்ந்தும் நடைபெறும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

 

5 hours ago, கிருபன் said:

எதிர்ப்பு அரசியல் செய்தால் அமைச்சராக முடியாது. டக்ளஸ்,  விஜயகலா மகேஸ்வரன்,  கருணா அம்மான் போன்றோர் அமைச்சர்களாக இருந்து தங்களைத்தான் பார்த்துக்கொண்டார்கள்.

பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க சபை. ஆளுங்கட்சி கொண்டுவரும் சட்டங்களை பலமிக்க எதிர்க்கட்சி மாற்றங்களுக்கு உள்ளாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டும் இடும். இதை அரசியல்வாதிகளே சொல்லாமல் வெற்று வாக்குறுதிகளை வழங்கி பதவிகளை எடுக்கின்றார்கள்.

ஒரு தீர்வுப்பொதியை தயாரிக்கவும்,  வாசித்து விளங்கி திருத்தங்களை சமர்பிக்கவும் அவை பற்றிய அனுபவம் உள்ளவர்களால் முடியும். மற்றையோர் கை உயர்த்த மட்டும்தான் லாயக்கு!

கருணாவும் பிள்ளையானும் பதவிக்கு வருவதே சரியென்று கூறும் நீங்களே இப்படியும் கூறுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஆதரவாளர்களிடம் இரு கேள்விகள்.

முதலாவது : போர்க்குற்ற விசாரணைகள் , நிரந்தர அரசியல்த் தீர்வுபற்றி கருணாவினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு என்ன?

இரண்டாவது :"பழையதை மறப்போம்" என்பதன் மூலம் இவர்கள் சொல்ல விழைவது கருணாவின் துரோகத்தை மறப்போம் என்பதையா, போர்க்குற்றங்களை மறப்போம் என்பதையா அல்லது நிரந்தர அரசியல்த் தீர்வை மறப்போம் என்பதையா?

கருணாவை ஆதரித்துக்கொண்டும் தமிழ்த்தேசியத்தை இன்னும் காவுபவர்கள் போலவும் சிலர் போடும் வேஷங்கள் உண்மையாகவே அருவருப்பைத்தான் தருகிறது. ஏனென்றால், இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

கருணாவும் பிள்ளையானும் பதவிக்கு வருவதே சரியென்று கூறும் நீங்களே இப்படியும் கூறுகிறீ

கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தொடர்பாக எடுத்த தவறான முடிவினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குவாழ் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு எதிராக நிற்கும் ஆளுமைகளான கருணா, பிள்ளையான் போன்றோருக்கு வாக்களிக்கும் நிலை உள்ளது. இது கூட்டமைப்பின் தவறினால் ஏற்பட்டது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தொடர்பாக எடுத்த தவறான முடிவினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குவாழ் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு எதிராக நிற்கும் ஆளுமைகளான கருணா, பிள்ளையான் போன்றோருக்கு வாக்களிக்கும் நிலை உள்ளது. இது கூட்டமைப்பின் தவறினால் ஏற்பட்டது.

 

 

இதைத்தான் கருணாவை ஆதரிப்பவர்களும் காரணமாகக் காட்டுகிறார்கள். கூட்டமைப்பிற்கு மாற்றாக போர்க்குற்றவாளிகளினால் களமிறக்கப்பட்டிருக்கும், போராட்டத்திற்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்திய ஒருவரை ஆதரிப்பது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

அல்லது, தமது இருப்பிற்கு நிரந்தரமான ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை, கூட்டமைப்பிற்குப் பாடம் புகட்டினால்ப் போதும் என்கிற சில தமிழர்களின் மன நிலையினை குறிப்பிடுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

சிறுபான்மையினங்கள் ஒற்றுமையாக பொதுவான எதிரிக்கெதிராக அரசியல் செய்யவேண்டிய தருணத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

பொது எதிரி இந்தியா. அனைத்து இலங்கை மக்களும் இந்த பொது எதிரியை தகுந்த முறையில் கையாள ஒன்றுபட வேண்டும்.

3 hours ago, ரஞ்சித் said:

சிங்களவர்கள் தமக்குள் என்னதான் அரசியல் ரீதியான, பிரதேச ரீதியிலான வேற்றுமைகளைக் கொண்டிருந்தபோதும், பொது எதிரியான தமிழர்களை அழிப்பதற்காக முழுச் சிங்கள இனத்தையும் ஒன்றுசேர்த்து செயற்பட்டார்கள்.

இந்தியாவின் நலங்களுக்காக றோவின் கூட்டுடன் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதாலேயே சிங்களவர்கள் தமிழரையும் எதிரிகளாக பார்க்கிறார்கள். உள்நாட்டு யுத்தமும், பொது எதிரியான இந்தியாவின் வெளிநாட்டு சதி   பிரிவான றோவுக்கு தேவையான அழிவுகளை செய்ததும் இனக்கலவரங்களுக்கு தீர்வாக அமையவில்லை.  பொது எதிரியான இந்தியாவை கையாள தமிழர்கள் ஒத்துழைப்பார்கள் என்று சிங்களவர் நம்பும் சூழ்நிலை உருவானால் பிரேமதாசா காலத்து ஒத்துழைப்பு சாத்தியம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

பொது எதிரி இந்தியா. அனைத்து இலங்கை மக்களும் இந்த பொது எதிரியை தகுந்த முறையில் கையாள ஒன்றுபட வேண்டும்.

இந்தியா எவ்வாறு பொது எதிரியாக இருக்க முடியும்? 2009 இல் இலங்கைக்கு நிகராக யுத்தத்தை நடத்திய இந்தியாவை சிங்களவர்கள் ஒருபோதுமே எதிரியாகப் பார்க்கப்போவதில்லை.

1 hour ago, கற்பகதரு said:

இந்தியாவின் நலங்களுக்காக றோவின் கூட்டுடன் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதாலேயே சிங்களவர்கள் தமிழரையும் எதிரிகளாக பார்க்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்லவே? தமிழர்க்கெதிராக சிங்கள பெளத்தர்களின் அடக்குமுறையென்பது சுதந்திரக் காலம் தொட்டே இருந்துவருகிறதொன்றுதானே? அடுத்தது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர்தானே றோவின் வேலைகள் ஆரம்பித்தன? அப்படியிருக்க சிங்களவர்கள் இந்தியாவினைக் காரணம் காட்டியே தமிழர்களை அழித்தார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

 

1 hour ago, கற்பகதரு said:

பொது எதிரியான இந்தியாவை கையாள தமிழர்கள் ஒத்துழைப்பார்கள் என்று சிங்களவர் நம்பும் சூழ்நிலை உருவானால் பிரேமதாசா காலத்து ஒத்துழைப்பு சாத்தியம்.

சிங்களவர்கள் இந்தியாவை எதிரியாக ஏன் கருதவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இந்தியாவின் உதவியில்லாமல் புலிகளை வென்று தமிழர்களை முற்றாக அடிமைகளாக்கியிருக்கமுடியாதென்பது சிங்களவர்களுக்கு நன்கு தெரிந்திருக்க, இந்தியாவை எதிர்க்கவேண்டிய தேவை அவர்களுக்கு ஏன்? நீங்கள் கூறும் பிரேமதாச காலத்து ஒத்துழைப்பு என்பது எதனை? யாருக்கெதிராக தமிழர்கள் செயற்படவேண்டும், அதற்கு என்னவகையான ஒத்துழைப்பினைச் சிங்களம் நல்கும் என்று கூறுகிறீர்கள்? தமிழருக்குச் சார்பாக இனிமேல் இந்தியா ஒருபோதுமே செயற்படாதென்பது 2009 யுத்தத்தின்பொழுதும், அதன்பின்னரான ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணைகள் தீர்மானங்களை எதிர்த்தபொழுதும் உங்களுக்குத் தெரியவில்லையா? 

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இதைத்தான் கருணாவை ஆதரிப்பவர்களும் காரணமாகக் காட்டுகிறார்கள். கூட்டமைப்பிற்கு மாற்றாக போர்க்குற்றவாளிகளினால் களமிறக்கப்பட்டிருக்கும், போராட்டத்திற்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்திய ஒருவரை ஆதரிப்பது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

அல்லது, தமது இருப்பிற்கு நிரந்தரமான ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை, கூட்டமைப்பிற்குப் பாடம் புகட்டினால்ப் போதும் என்கிற சில தமிழர்களின் மன நிலையினை குறிப்பிடுகிறீர்களா?

கருணா, பிள்ளையானுக்கான ஆதரவு தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியால்தான் வந்தது. கிழக்கு  மக்களுக்கு தமது உடனடிப் பிரச்சினையான முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு, காணி விடயத்திலும், வியாபார, பொருளாதார விடயங்களிலும் பெரிய பாதிப்பைக் கொடுக்கின்றது. முஸ்லிம்கள் அரசியல் பலம் உள்ளதால் தமது மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுகின்றார்கள். அவர்கள் எப்படியும் அவர்களுக்கும் பிடிக்காத கோத்தபாயவுடன் ஒரு டீலுக்குப் போய் தம் இருப்பை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள். 

கிழக்கில் தமிழர்கள் ஓரங்கட்டுப்படுவதற்கும், பொருளாதார விடயங்களில் ஒதுக்கப்படுவதற்கும் உடனடித் தீர்வாக பலமான ஆளுமையாகத்தான் பிள்ளையானையும் கருணாவையும் பார்க்கின்றார்கள். அவர்கள் மகிந்த/கோத்தபாயவுடனான உறவின் மூலம் கிழக்கு தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையும், முஸ்லிம்களுக்கு செக் வைப்பார்கள் என்ற நம்பிக்கைக்கும் முன்னால் இனவழிப்பு, தேசியம், ஒற்றுமை எல்லாம் காணாமல் போய்விடும்.

எனவே, இந்த நிலையை உருவாகத் துணைபோன கூட்டமைப்புக்கு கிழக்கு மக்கள் பாடம் புகட்டுவது தமிழ் தேசியத்திற்கு ஒரு தற்காலிகப் பின்னடைவாகத் தோன்றினாலும்,  எதிர்காலத்தில் வடக்கையும் கிழக்கையும் சரிசமமாகப் பார்க்கும் புதிய தேசிய அரசியல் தலைமைகள் உருவாக வழிவகுக்கும் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

வடக்கையும் கிழக்கையும் சரிசமமாகப் பார்க்கும் புதிய தேசிய அரசியல் தலைமைகள் உருவாக வழிவகுக்கும் என்று நம்புகின்றேன்.

ஆனால் 1980 இலிருந்து 2009 வரை எல்லாதமிழர்களையும் ஒன்றாக வழிநடத்த ஒரு தலைவர் இருந்தாரே? அவரையும் எதிர்த்துக்கொண்டுதானே எதிரியுடன் போய்ச் சேர்ந்து துரோகமிழைத்தார்கள்? 

31 minutes ago, கிருபன் said:

கிழக்கு  மக்களுக்கு தமது உடனடிப் பிரச்சினையான முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு, காணி விடயத்திலும், வியாபார, பொருளாதார விடயங்களிலும் பெரிய பாதிப்பைக் கொடுக்கின்றது.

ஆக, தமிழர்களுக்குச் சிங்களவர்களால் பாதிப்பில்லையென்று சொல்கிறீர்கள். இதே முஸ்லிம்களை தமிழர்களுக்கெதிராகக் கொம்புசீவி, பிரித்தாண்டு , இன்று தமிழர்களுக்கெதிரான சக்தியாக மாற்றியது யாரென்று நினைக்கிறீர்கள்? அன்று தமிழர்க்கெதிராக முஸ்லீம்களை ஆதரித்தவர்களே இன்று முஸ்லீம்களுக்கெதிராக தமிழரை நிறுத்துகிறார்கள். இது மீளவும் மாறாதென்னும் உங்களின் நம்பிக்கையினை நான் பாழாக்க விரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

அவர்கள் எப்படியும் அவர்களுக்கும் பிடிக்காத கோத்தபாயவுடன் ஒரு டீலுக்குப் போய் தம் இருப்பை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள். 

கோத்தபாயவுக்குத் தமிழர்களைப்பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள் பாருங்கள், அங்கேதான் அசத்துகிறீர்கள். ஒரு பதினொரு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். முள்ளிவாய்க்கால் எனுமிடத்தில் கோத்தபாய எனும் பெயரில் ஒருவர் லட்சக்கணக்கான தமிழர்களை சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான வகையில் கொன்றுகுவித்தார். இன்று நீங்கள் தமிழர்களுக்குச் சார்பாகவும் முஸ்லீம்களுக்கெதிராகவும் களமிறங்குவார் என்று கிழக்கு தமிழர்கள் நம்பும் கோத்தாவும் முள்ளிவாய்க்காலில் தமிழர் மீது “அன்பைப் பொழிந்து தள்ளிய” கோத்தாவும்  ஒரே ஆளாக இருக்காது என்று நம்புகிறேன்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

மன்னிக்கவும் சகோதரி, 

உங்கள் தவறான புரிதலுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. உங்களுடைய புரிதலைப் பார்த்தபின் சிரித்துவிட்டு அப்பால் நகர்ந்து செல்ல வேண்டியதுதான். 

வேற்றுமை பாராட்டாது, ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும்  நான் உங்கள் கண்களுக்கு அடக்கி ஒடுக்குபவனாகத் தெரிந்தால், அதைப் பார்த்து என்னால்  சிரிக்கத்தான் முடியும்.  😂😂

கற்பித்தன் , எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் சமமாய் இருக்க வேண்டும் ...அதற்கான முயற்சி இது வரை ஒரு வரும் எடுக்காததனால் தான்  எங்கட பாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அவர்கள் கிளம்பியுள்ளார்கள் ...பிழையை உங்கள் மீது வைத்துக் கொண்டு பழியை அவர்கள் மீது போடாதீர்கள் 
 

6 hours ago, ரஞ்சித் said:

கருணா ஆதரவாளர்களிடம் இரு கேள்விகள்.

முதலாவது : போர்க்குற்ற விசாரணைகள் , நிரந்தர அரசியல்த் தீர்வுபற்றி கருணாவினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு என்ன?

இரண்டாவது :"பழையதை மறப்போம்" என்பதன் மூலம் இவர்கள் சொல்ல விழைவது கருணாவின் துரோகத்தை மறப்போம் என்பதையா, போர்க்குற்றங்களை மறப்போம் என்பதையா அல்லது நிரந்தர அரசியல்த் தீர்வை மறப்போம் என்பதையா?

கருணாவை ஆதரித்துக்கொண்டும் தமிழ்த்தேசியத்தை இன்னும் காவுபவர்கள் போலவும் சிலர் போடும் வேஷங்கள் உண்மையாகவே அருவருப்பைத்தான் தருகிறது. ஏனென்றால், இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. 

ரஞ்சித் ,ஒரு வேளை இந்த தடவையும் வட கிழக்கில் கூட்டமைப்பு வெற்றி பெற்று விடுகிறார்கள் என்று வையுங்கோ அல்லது இவர்களது ஆட்சி தான் தொடர்ந்து இருக்க போகுது என்று வையுங்கோ . இவர்கள் நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று நீங்கள் உண்மையிலே நம்புகிறீர்களா?
மகிந்தா சகோதரர்கள் மீது போர் குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கா, சீனா, இந்தியா இந்த மூன்று நாட்டில் ஒரு நாட்டையாவது இவர்கள் பகைக்க வேண்டும். அல்லது இந்த 3 நாட்டையும் பகைக்க வேண்டும்...என்ன தான் எதிரியாய் இருந்தாலும் அவர்கள் சாணக்கியர்கள் என்பதை ஒத்துக்க கொண்டேயாகணும்...உலக நாடுகள் சேர்ந்து புலியை அழித்தாலும், எல்லா நாடுகளையும் தம் கைக்குள் போட்டு கொண்ட திறமை இவர்களுக்கு இருந்தது.
மிஞ்சி போனால் இன்னும் 10 அல்லது 15 வருடங்கள் இவர்கள் உயிரோடு இருப்பார்கள் [அதுவும் சந்தேகம்]...அதற்குள் இவர்களுக்கு தண்டனை பெற்று கொடுப்பீர்கள் என்று நம்புகிறீர்களா?
மூன்றாம் உலக மா யுத்தம் அல்லது ஏதாவது அதிசயம் நடந்தாலோ ஒழிய இவர்களுக்கு தண்டனை கிடையாது.
உலக நாடுகள் ஏதோ ஒரு வழியில் எமது அழிப்புக்கு துணை போயின ..அவர்களால் எப்படி இவர்களுக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்?
நிரந்தர அரசியல் தீர்வு பெற இருப்பு முக்கியம் ...முழு நிலங்களையும் பறி கொடுத்து விட்டு யாருக்கு நிரந்தர தீர்வு?...நீங்கள் போய் இருக்க போறீர்களா?
உணரவசப்படும் பேச்சை  விடுத்து யதார்த்தமாய் சிந்தியுங்கோ.
இருக்க இடமில்லாமல் ,வேலையில்லாமல் வறுமையில் இருப்போரிடம் போய் நிரந்தர அரசியல் தீர்வு பற்றி பேசப் போறீர்களா?
இது ஏற்கனவே எழுதியது தான் திரும்பவும் உங்களுக்காக உங்களால் முடிந்தால் ஒரு வருடம், குறைந்தது 6 மாசம் ஊரில் போய் நின்று விட்டு வாங்கோ ...அதில் 3 மாசமாவது நீங்கள் மட்டு, அம்பாறை போய் நின்று விட்டு வாங்கோ ...அதற்கு பிறகும் நீங்கள் இதே கருத்தை கொண்டு இருந்தால் நான் யாழில் அரசியல் எழுதுறதையே விடுறன்  
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

கருணாவை ஆதரிக்க முன்வைக்கப்படும் காரணங்கள் என்ன? வேலை வாய்ப்பு, அபிவிருத்தி போன்றவை மட்டும் தானா? சரி, அப்படியே இருந்தாலும் அவரை ஆதரிப்பதால், அவரைப் பின்னால் இருந்து இயக்கும் நவீன சிங்கள இனவாதத்தின் இன்றைய அரசியலை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதாக இது ஆகிவிடாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் தமிழரில் ஒரு பகுதியினர் தமது உறவுகள்மேல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிற்கு பொறுப்பானவர்கள் என்று கருணாவின் இயக்குநர்களை நீதியின் முன் கொண்டுவர எத்தனிக்கும்பொழுது, தமிழரின் இன்னொரு பகுதியினர் நடந்த அநியாயங்களுக்கான காரணகர்த்தாக்களை ஆதரிப்பதென்று எடுத்திருக்கும் முடிவானது, தமிழரின் நிலையினை இன்னும் பலவீனமாக்காதா?

அல்லது, இவை எதுவுமேயில்லாமல் வடக்கு - கிழக்கு என்கிற பார்வையின்பால் மட்டுமே நின்று சிங்களவருடன் இணைவதென்று கிழக்குத் தமிழர்கள் எடுக்கும் முடிவா இது? 

முஸ்லீம்களுக்கெதிரான அரசியலினை சிங்களத்துடன் சேர்வதன்மூலம் அவர்கள் செய்ய நினைப்பது சரியான முடிவுதானா?

சிறுபான்மையினங்கள் ஒற்றுமையாக பொதுவான எதிரிக்கெதிராக அரசியல் செய்யவேண்டிய தருணத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? சிங்களவர்கள் தமக்குள் என்னதான் அரசியல் ரீதியான, பிரதேச ரீதியிலான வேற்றுமைகளைக் கொண்டிருந்தபோதும், பொது எதிரியான தமிழர்களை அழிப்பதற்காக முழுச் சிங்கள இனத்தையும் ஒன்றுசேர்த்து செயற்பட்டார்கள். அவர்கள் அபிவிருத்தியென்றோ, அரசியல் ரீதியான லாபங்கள் என்றோ சிறிய அற்ப விடயங்களுக்காகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக மாறவில்லை. அவர்களின் இலக்கு ஒன்றுதான், தமிழனை அடக்கி, ஒடுக்கி இறுதியில் அழிப்பது. 

எம்மை அழித்தவர்களே தமது வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்டு செயற்படும்போது, அழிக்கப்பட்ட நமதினம் இன்னும் எவ்வளவு தூரத்திற்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்? செய்கிறோமா?

இறுதியாக, கருணாவை தனது சார்பாக அம்பாறையில் இறக்கியிருப்பதன் மூலம் சிங்களம் அடைய போகும் நண்மைகள்,

1 தமிழர்களும் முஸ்லீம்களும் மீண்டும் இணைந்து தனக்கெதிரான அரசியலை முன்னெடுப்பதை முற்றாகத் தடுத்து நிறுத்துதல்.

2. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று பிரதேச ரீதியாகத் தமிழர்களை பிரித்தது மட்டுமல்லாமல், நிரந்தர பிளவொன்றினை ஏற்படுத்தும் கைங்கரியத்தினைத் தொடக்கி வைத்திருப்பது.

3. தமிழரின் ஒரு பகுதியினர் தமக்கு ஆதரவளிப்பதனால், இன்னொருபகுதியினர் தொடர்ந்து கோரிவரும் போர்க்குற்றவிசாரணைகள், நிரந்தர அரசியல்த் தீர்வு ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்வதுடன், தமிழர்கள் தம்முடன் இருக்கிறார்கள் எனும் மாயத்தோற்றத்தை சர்வதேசத்தில் ஏற்படுத்தியது. 

4. தமிழர் தாயகத்தின் தென்பகுதியில் தமிழரில் ஒரு பகுதியினரின் ஆதரவுடனேயே தங்குதடையற்ற சிங்கள மயமாக்கலினை கொண்டு நடத்துவது.

 

இதைவிட இதுபற்றி விளக்க முடியாது. புரிந்தால் நல்லது, இல்லையென்றால் ஒன்றுமே செய்யமுடியாது. கிழக்குத் தமிழர்கள் கருணாவை ஆதரிப்பதால் , ஏனைய தமிழர்கள் வெறுமனே இருக்கப்போவதில்லை. அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கன நீதிப்போராட்டமும், அரசியல் ரீதியிலான விடுதலைக்கான போராட்டமும் உங்களின் உதவியின்றியே தொடர்ந்தும் நடைபெறும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

 

கருணாவும் பிள்ளையானும் பதவிக்கு வருவதே சரியென்று கூறும் நீங்களே இப்படியும் கூறுகிறீர்கள். 

1}தமிழரும் ,முஸ்லீம்களும் இணைந்து அரசியலா ?
மீண்டும் கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு அங்குள்ள தமிழ் மக்கள் அவர்களது காலை நக்கிட்டு இருக்க வேண்டும் என்பது தான் உங்கள் எதிர்பார்ப்போ ?
2} வட ,கிழக்கு என்று ஏற்கனவே பிரிந்து விட்டது ...அது பற்றி இங்கு முதலே எழுதி விட்டோம் 
3} முதலில் தமிழரின் இருப்பை தக்க வைப்போம் 
4} ஓம்... இப்ப கூட்டமைப்பு தானே இருக்கினம் ...அவர்கள் கண்டும் ,காணாமல் இருந்ததால் தான் பிள்ளையானும் ,கருணாவும் வரோணும் என்று நினைக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

கற்பித்தன் , எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் சமமாய் இருக்க வேண்டும் ...1)அதற்கான முயற்சி இது வரை ஒரு வரும் எடுக்காததனால் தான்  எங்கட பாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அவர்கள் கிளம்பியுள்ளார்கள் .

2)..பிழையை உங்கள் மீது வைத்துக் கொண்டு பழியை அவர்கள் மீது போடாதீர்கள்  
 

அக்கோய்,

கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் சகல பிரச்சனைக்கும் வடக்கன்கள்தான் காரணமா ? 😂😂

தனிப்பட்ட ரீதியிலான (குடும்ப) தோல்விகளும் வடக்கன்கள்தான் காரணம் என்பீர்கள் போல...😏

சுயனலத்திற்காக,  யாருடனும் சமரசம் செய்துகொள்வதற்கு ஆயத்தமான மன நிலை தொடர்  தோல்விகளைத்  தருகிறது. தோல்வியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாதபோது அதனை  யார்மேலாவது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. 

கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் சுயநலத்திற்காக விற்றுதின்னுங்கள். தின்று முடித்தவுடன் பழியை யார் மீதாவது போட்டுத் தப்பிக்கப் பருங்கள் 😏

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இந்தியா எவ்வாறு பொது எதிரியாக இருக்க முடியும்? 2009 இல் இலங்கைக்கு நிகராக யுத்தத்தை நடத்திய இந்தியாவை சிங்களவர்கள் ஒருபோதுமே எதிரியாகப் பார்க்கப்போவதில்லை.

கச்சதீவில் சீனாவுக்கு தளத்தையும், ஹம்பாந்தோட்டையில் துறைமுகத்தையும் இலங்கை அரசு கொடுத்திருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சீன - இந்திய எல்லையில் யுத்தம் ஆரம்பமாகி இருக்கிறது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளில் முக்கியமான புலஸ்தினி ராஜேந்திரன் “றோ” வின் உளவாளி என்று இலங்கை அரசு அடையாளம் கண்டுள்ளது. தாக்குதலின் பின் புலஸ்தினி வெற்றிகரமாக தப்பி இந்தியா சென்றுவிட்டார். விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் றோவின் முன்னாள் ஆயுததாரிகள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்கள். றோவின் நோக்கம் 70களில் இருந்து இன்றுவரை சிங்களவரை சீனாவுடன் நெருங்க விடாமல் செய்வதாகும்.அதற்கு தமிழரை தாராளமாக பயன்படுத்தி, தேவையானால் அழித்து விடுவது றோவுக்கு தேவையான ஒன்று. சிங்களவரின் பெரிய பிரச்சினை இப்படி றோவுக்கு பலியாகும் தமிழரின் முட்டாள்தனத்தை தடுக்க முடியாமல் இருப்பதாகும். தம்மை அழிக்கும் இந்தியாவை எதிரி அல்ல என்று நினைப்பதற்கு சிங்களவர்கள் தமிழர் போல முட்டாள்கள் அல்ல. அவர்களுக்கு அவர்களின் எதிரிகளை மிகச்சரியாக அடையாளம் தெரியும். கூட்டமைப்பு சிங்களவரோடு, றோவின் விருப்பத்துக்கு மாறாக சமாதானமாகி போவார்கள் என்பதால்தான், விக்னேஸ்வரன் தலைமையில் றோவின் கூலிகள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். சுமந்திரனை கொலை செய்யும் முயற்சியும் றோவின் கைவண்ணம். இலங்கை அரசுக்கு அனைத்தும் தெரியும். சிங்களவர்கள் மிகவும் புத்திசாலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளில் முக்கியமான புலஸ்தினி ராஜேந்திரன் “றோ” வின் உளவாளி என்று இலங்கை அரசு அடையாளம் கண்டுள்ளது.

ஒரு சின்னத் தகவல். இந்தக் குண்டுவெடிப்பு நடந்த அன்று குறைந்த  மூன்று  முறையாவது இதுபற்றிய எச்சரிக்கையினை இலங்கைக்கு வழங்கியதே இந்திய உளவுத்துறைதான். தானே செய்யப்போகும் தாக்குதல்பற்றி தானே சொல்லவேண்டிய தேவையென்ன?

 

18 minutes ago, கற்பகதரு said:

விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் றோவின் முன்னாள் ஆயுததாரிகள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்கள்

இவர்கள் யார்? உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா? பரந்தன் ராஜனைச் சொல்கிறீர்களா? அவர் கருணா பிரிந்தவுடனேயே இலங்கைவந்து இலங்கையின் ராணுவ புலநாய்வுப் பிரிவுடனல்லவா இயங்கிவருகிறார்? ரோவின் ஆள் என்றால், அவரை இலங்கையரசு சேர்த்துவைத்திருப்பது எங்கனம்?

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

சிங்களவரின் பெரிய பிரச்சினை இப்படி றோவுக்கு பலியாகும் தமிழரின் முட்டாள்தனத்தை தடுக்க முடியாமல் இருப்பதாகும்

ஆக, ரோவின் சூழ்ச்சிக்குத் தமிழர் பலியாகி, தமக்கெதிராகப் போராடியதால்த்தான் தமிழரை சிங்களவர்கள் அழிக்கவேண்டி வந்ததென்று சொல்கிறீர்கள். ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய தமிழர் மீதான தாக்குதல்கள்பற்றி மிக வசதியாக மறந்துவிட்டீர்கள்.

23 minutes ago, கற்பகதரு said:

றோவின் நோக்கம் 70களில் இருந்து இன்றுவரை சிங்களவரை சீனாவுடன் நெருங்க விடாமல் செய்வதாகும்.அதற்கு தமிழரை தாராளமாக பயன்படுத்தி, தேவையானால் அழித்து விடுவது

சிங்களவரை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் நோக்கமென்றால், அதை நேரே செய்யாமல், ஈழத்தமிழரைக் கொன்று அதைச் செய்யவேண்டிய தேவை என்ன? ஈழத்தமிழரை அழித்ததன்மூலம் இலங்கையைச் சீனாவிடமிருந்து இந்தியாவால் பிரிக்க முடிந்ததா? இல்லையே, இன்னும் இன்னும் அல்லவா உள்ளே நுழைய விட்டிருக்கிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.