Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஜி, கஜேந்திரன் இம்முறை பெற்ற வாக்குகள் 24,794 மணிவண்ணன் பெற்றது 22,741. அவர்களுக்கு ஓர் ஆதரவு தளம் உருவாகின்றது.

டக்ளஸின் ஈபிடிபி போல ஒன்றிரண்டுக்கு மேல் போகாது. அங்கயன் யாழ்ப்பாணத்தில் அதிவிருப்பு வாக்குகளையும், பிள்ளையான் மட்டக்களப்பில் அதிவிருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மக்களைக் “கவனித்து” தம் வாக்குவங்கியை இன்னும் வளர்ப்பார்கள். தாமரைமொட்டு அரசும் சகல ஊக்குவிப்புக்களையும் செய்யும்.

எனவே, மக்கள் முன்னணி கூட்டமைப்பு, மக்கள் கூட்டணி வாக்குகளைத்தான் பங்குபிரிக்கலாம். உதிரிக்கட்சியாகத்தான் தொடர்ந்தும் இருக்கும்.

  • Replies 129
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 ?...அவர் உண்மையிலேயே குதிரையோடியிருக்கா விட்டால் நீங்கள் நிரூபியுங்கள் ...நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ..

ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

டக்ளஸின் ஈபிடிபி போல ஒன்றிரண்டுக்கு மேல் போகாது. அங்கயன் யாழ்ப்பாணத்தில் அதிவிருப்பு வாக்குகளையும், பிள்ளையான் மட்டக்களப்பில் அதிவிருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மக்களைக் “கவனித்து” தம் வாக்குவங்கியை இன்னும் வளர்ப்பார்கள். தாமரைமொட்டு அரசும் சகல ஊக்குவிப்புக்களையும் செய்யும்.

எனவே, மக்கள் முன்னணி கூட்டமைப்பு, மக்கள் கூட்டணி வாக்குகளைத்தான் பங்குபிரிக்கலாம். உதிரிக்கட்சியாகத்தான் தொடர்ந்தும் இருக்கும்.

021-FF8-CA-CEBF-4-AA8-93-BA-1-DDEB7-E592
 

ஓர் சீரான இடைவெளியில் வாக்குகளை பெற்றிருப்பது கூட்டமைப்பும் முன்னணியுமே.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 

உப்ப என்ன அண்ணா ,அவர் குதிரை ஓடவில்லை . சுத்தமான ,பத்திர மாத்து தங்கம் போதுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

போதாது அக்கா. நீங்களும் உங்கட வாயால வாழ்த்து கூற வேணும் அப்போத்தான் நாங்க அடங்குவம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இல்லை மீரா அண்ணை. அக்காவும் முயலுக்கு மூன்று கால் என்று நிக்கிறா. வேற என்ன தான் செய்கிறது.

எல்லாரும் முந்தி என்ன செய்தவை என்றது கூட இப்போ தேவை இல்லை.

யார் யார் வெண்டப்பிறகு என்ன செய்யப்போகினம் எண்டு ஒரு கொஞ்சநாள் பொறுத்திருந்து பார்த்தால் தான் என்ன.

அதுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு புடுங்குப்பாடு.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

அப்படி இல்லை மீரா அண்ணை. அக்காவும் முயலுக்கு மூன்று கால் என்று நிக்கிறா. வேற என்ன தான் செய்கிறது.

எல்லாரும் முந்தி என்ன செய்தவை என்றது கூட இப்போ தேவை இல்லை.

யார் யார் வெண்டப்பிறகு என்ன செய்யப்போகினம் எண்டு ஒரு கொஞ்சநாள் பொறுத்திருந்து பார்த்தால் தான் என்ன.

அதுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு புடுங்குப்பாடு.😁

தன்ர கொண்ணர் முந்தி ஒன்றும் செய்யவில்லை ஆனால் இந்த முறை அவருக்கு ஓர் சந்தர்ப்பம் தாருங்கள் என்று கெஞ்சினார். ஆனால் மக்கள் புத்திசாலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சண்ணே.

அக்காவுக்கும் அவவின் அண்ணையை ஆதரிக்க ஒரு நியாயமான காரணம் இருக்கும் தானே.

ஆக குறைஞ்சது தமிழ் தேசியத்தை ஆதரிப்போரை எதிர்க்கவேணும் என்று கூட அக்கா அவவின் அண்ணையை ஆதரிக்கலாம்.

இல்லை புலி எதிர்ப்பாக கூட இருக்கலாம். இவ்வளவு தூரம் வந்தாப்பிறகு திரும்பி போக ஈகோ கூட தடுக்கலாம். 

பாப்பம் என்னதான் நடக்குதெண்டு. 

நாங்கள் இஞ்சை இருந்து குத்தி முறிஞ்சு அங்கே ஒண்டுமே நடக்கப்போறதில்லை.😁

  • கருத்துக்கள உறவுகள்

@ரதி நான் நீங்கள் எழுதிய “ அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம்” என எழுதியதற்கே எனது கருத்தை உங்களுக்கு எழுதியிருந்தேன்.. 

மற்றபடி குதிரையோடி கருத்து பொதுவாகவே எழுதினேன்.. முறையான வழியில் பல்கலைகழகம் சென்று அரசியலில் நுழைந்தவர்கள் தங்களது சாணக்கியத்தால்  மக்களுக்கு என்ன செய்தார்கள், அவர்களை நம்பி வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்? இன்று எங்களது வாக்குகள் பிரிக்கப்பட்டு சிதறுண்டு போவதற்கு வித்திட்டார்கள் அவ்வளவுதான். ஆனால் கஜனிற்கு பதவியை கொடுத்தவுடன் மட்டும் ஏன் இந்த குதிரையோட்டகதை? 

மேலும், அரசியலில் பலகாலம் அனுபவம் பெற்றவர்களே கண்களை திறந்தபடி தூங்கும் போது, கஜன் ஒரு முறைதானே அப்படி நடந்துகொண்டார்...இனி அவரும் கண்கள் திறந்தபடி நித்திரை கொள்ள பழகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனெனில் கடந்த 11 வருட காலத்தில் அரசியலில் கஜனும் சில பாடங்களை கற்றிருக்கலாம். அனுபவமிக்க அரசியல்வாதிகள்,விசயம் தெரிந்தவர்களோ நம்பி ஏமாறுகையில் விசயம் தெரியாத சிறியவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. 

ஆய்வாளர் நிலாந்தனின் எழுதியது போல 2009ற்கு பின் எங்களுக்குள் ஒரு சரியான திட்டங்களோ, ஒற்றுமையோ இல்லை..அது அரசியலில் மட்டுமல்ல சாதாரன பொருளாதார, சமூக, கல்வி வளர்ச்சியில் கூட  எங்களது குழுக்களுக்கிடையில் ஒற்றுமை, ஒழுங்கான கட்டுக்கோப்பு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. எப்பொழுதும் போல இந்த தேர்தலில் இருந்தாவது இவர்கள் அனைவரும் ஒரு பாடத்தை கற்றிருப்பார்கள் என நம்புவோமாக!!!. 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உப்ப என்ன அண்ணா ,அவர் குதிரை ஓடவில்லை . சுத்தமான ,பத்திர மாத்து தங்கம் போதுமா ?

ஆதாரம் இல்லாத போது கேள்வி வரும். குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் முன் வைப்பது எல்லோரும் அறிந்து கொள்ளவும் தவறுகள் தொடர்ந்து நடப்பதை தடுக்கவும் உதவுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

போதாது அக்கா. நீங்களும் உங்கட வாயால வாழ்த்து கூற வேணும் அப்போத்தான் நாங்க அடங்குவம்.

எனக்கு மக்கள் முன்னணி சார்பில் பெரிதாக எதுவும் இல்லை பிரபாகரனால் முடியாத எதையும் இவர்களிடம் இருந்து எதிர் பார்க்கும் அளவுக்கு போராட்டத்தில் இருந்து தள்ளி நின்றவன் அல்ல. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீது கிருபன் போன்ற நம்பிக்கையான சகோதர கருத்தாளர் ஒருவர் வைத்த கருத்து சார்ந்தே எல்லோரும் தெரிந்து கொள்ள ஆதாரம் கேட்டேன். அவ்வளவுதான். நன்றி மீள் வருகைக்கு தம்பி. 

1 hour ago, முதல்வன் said:

போதாது அக்கா. நீங்களும் உங்கட வாயால வாழ்த்து கூற வேணும் அப்போத்தான் நாங்க அடங்குவம்.

எனக்கு மக்கள் முன்னணி சார்பில் பெரிதாக எதுவும் இல்லை பிரபாகரனால் முடியாத எதையும் இவர்களிடம் இருந்து எதிர் பார்க்கும் அளவுக்கு போராட்டத்தில் இருந்து தள்ளி நின்றவன் அல்ல. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீது கிருபன் போன்ற நம்பிக்கையான சகோதர கருத்தாளர் ஒருவர் வைத்த கருத்து சார்ந்தே எல்லோரும் தெரிந்து கொள்ள ஆதாரம் கேட்டேன். அவ்வளவுதான் 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அண்ணே. ஆனால் எல்லாருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கு. பார்ப்பம் கொஞ்ச நாளைக்கு பொறுத்திருந்து. 😃

  • கருத்துக்கள உறவுகள்

சட்டக் கல்லூரியில் குதிரை ஓடிய மஹிந்த ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இலங்கை சனநாயக குடியரசில் வரமுடியும் என்றால், பல்கலைக்கழத்தில் குதிரை ஓடிய கஜத்திரனால், ஏன் எம்பியாக வரமுடியாது?.
இதனால் தமிழர்கள் ஆகிய எமக்கு பெருமை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

தேசிய உணர்வால் எதிர்ப்பரசியல் செய்து எதையும் பெறவில்லை. இணக்க அரசியல் செய்து முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் அடிமட்டத்தில் இல்லாமல் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்று இளைஞர்களே ( இளைஞர்கள்தான் எதிர்ப்பு அரசியல் செய்வதில் முன்னின்றவர்கள்) கூட்டமைப்புக்கு, தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களின் பின்னால் போகும்போது மீண்டும் தேசியத்தைக் கட்டி எழுப்புவது இலகுவானதல்ல.

ஆனால் சிங்களவர்களால் கிழக்கு கபளீகரம் செய்யப்படும்போது காலங்கடந்து இதை உணரும் நிலையும் வரும். அப்போது வடக்கிலும் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்!

தமிழ் டேசியம் என மக்களை ஏமாற்றியது போது இனியும் மக்கள் ஏமாற தயார் இல்லை மற்ற இனங்கள் முன்னேறுகிறது நாம் அந்த இடத்தில் அதே இடத்தில்தான் நிற்கிறோம் சிறு மாற்றம் கூட இல்லாமல் 

மன்னிக்கவும் கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது  உகந்தையிலிருந்து , திரிகோணமலை வரைக்கும் 

வடக்கு மிக விரைவில்  நாங்கள் உணர்ந்து விட்டோம் வடக்கு மக்கள் உணர்ந்தால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் டேசியம் என மக்களை ஏமாற்றியது போது இனியும் மக்கள் ஏமாற தயார் இல்லை மற்ற இனங்கள் முன்னேறுகிறது நாம் அந்த இடத்தில் அதே இடத்தில்தான் நிற்கிறோம் சிறு மாற்றம் கூட இல்லாமல் 

மன்னிக்கவும் கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது  உகந்தையிலிருந்து , திரிகோணமலை வரைக்கும் 

வடக்கு மிக விரைவில்  நாங்கள் உணர்ந்து விட்டோம் வடக்கு மக்கள் உணர்ந்தால் சரி 

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

நிட்சயமாக தனி தமிழ் மாவட்டங்களால் இருப்பதாலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலும் அவர்கள் உணர வாய்ப்பில்லை என்றே சொல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் டேசியம் என மக்களை ஏமாற்றியது போது இனியும் மக்கள் ஏமாற தயார் இல்லை மற்ற இனங்கள் முன்னேறுகிறது நாம் அந்த இடத்தில் அதே இடத்தில்தான் நிற்கிறோம் சிறு மாற்றம் கூட இல்லாமல் 

மன்னிக்கவும் கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது  உகந்தையிலிருந்து , திரிகோணமலை வரைக்கும் 

வடக்கு மிக விரைவில்  நாங்கள் உணர்ந்து விட்டோம் வடக்கு மக்கள் உணர்ந்தால் சரி 

உண்மையில் தமிழ் தேசியத்தையும் தமிழரின் ஈழக்கோரிக்கையையும் இயக்கும் அல்லது உந்து சக்தியாக இருப்பது சிங்களமே. வயிற்றுத்தேவைகள் தற்காலிகமானவை அவை கிடைத்ததும் மனம் தனது அடிமை நிலையை உடைக்கவே தூண்டும். அத்தனை வசதிகளையும் பெற்ற புலத்தில் பிறந்த எமது பிள்ளைகள் தான் தாம் வாழும் மண் தமது சொந்த மண் அல்ல என்று எம்மை விட அதிகமாக உணர்கிறார்கள் அல்லது உணர வைக்கப்படுகிறார்கள். 

எனவே தாயகத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தேசிய சிந்தனை அற்றுப் போய்விட்டது என்பது உண்மை அல்ல

3 hours ago, MEERA said:

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

வந்து விட்டது. மன்னார் போய் விட்டது,வவுனியா போக தொடங்கி விட்டது. முல்லைத்தீவில் கைவைக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ஆட்சிமாறியபடியால் தப்பியது;ஆனால் இப்ப மீண்டும் ஆட்சி மாறியபடியால் அமைச்சர் மீண்டும் பதவிக்கு வந்தால் அது மீளவும் தொடங்கும். யாழ்ப்பாணம் கூட அவர்களின் வீச்செல்லைக்குள் வந்து பல காலம். புனித மதத்துக்கான மத மாற்ற அறிவிப்புக்களை பார்த்தால் தெரியும்.பண்டத்தரிப்பு வரை சென்று விட்டார்கள். வவுனியா படு மோசம்.

நானும் நீங்களும் 2017 ஆரம்பத்தில் இது சம்பந்தமாக தர்க்கம் செய்த்தது ஞாபகம் இருக்கலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது ஏமாற்று என்கிறீர்களா ☹️

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 

அதுக்குதான் வேட்டி சேலை கட்டி இருந்தால் 
முள்ளு மரங்களுக்குள்ளால் நடக்கும்போது கொஞ்சம் எட்டி நடப்பது 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 02:20, Kapithan said:

தமிழ்த் தேசியம் என்பது ஏமாற்று என்கிறீர்களா ☹️

தமிழ் தேசியம் எழுதுக்கு மட்டும் உன்மை 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் தேசியம் எழுதுக்கு மட்டும் உன்மை 

தனி, கற்ப்ஸ்,

தமிழ் தேசியம் ஏமாற்று இல்லை. அது ஒரு கொள்கை நிலைப்பாடு.

 77-09 அது செயலிலும் இருந்தது. ஆகவே அது எழுத்தில் மட்டும் இருந்த ஒன்றும் அல்ல. 

ஆனால் 77 இல் இருந்தே இந்த கொள்கையை முன்நகர்த்துவதில் நாம் களயதார்த்தம் அறிந்து செயல்படாததால் 2009 இது பாரிய வீழ்ச்சியை கண்டது. 

2009 ற்கு பின்னான தலைமைகள் நிச்சயமாக தமிழ் தேசியத்தை முன் தள்ள வழி தெரியாதவர்களா, முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் தேசியத்தின் எதிரிகளோ - தமிழ் தேசிய உணர்வு மக்கள் மத்தியில் கோமா நிலைக்கு போக போவதை தெளிவாக உணர்ந்து once and for all இலங்கையில் தமிழ் தேசியத்தை முடித்து வைக்க மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள். 

 ஆனால் தமிழ் தேசியம் பேசும் தலைமைகளோ இதை ஏற்று கொள்ளாமல் - தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை மக்களுக்கு சொல்லாமல், அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று ஏமாற்று அரசியல் செய்கிறார்கள்.

அவர்களுக்கு மாற்றாக தமிழ் தேசிய அரசியல் செய்பவர்களோ, நடைமுறை சாத்தியம் இல்லாதவற்றை நடக்க முடியும் (ஒரு நாடு இருப்தேசம், சர்வஜன வாக்கெடுப்பு) என இன்னொரு வகை ஏமாற்று அரசியல் செய்கிறார்கள்.

ஆக தமிழ் தேசிய அரசியல் 2009 பின் சகல வகைகாலிலும் ஒரு ஏமாற்று அரசியலாகவே முன்னெடுக்கபடுகிறது.

உண்மையில் இந்த தேர்தலில் தமிழ் தேசியத்துக்கு விழுந்த மரண அடி கிழக்கில் இல்லை. மாறாக வடக்கிலேயே விழுந்துள்ளது.

கிழக்கில் பிள்ளையானின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. தவிரவும் இப்பவும் 13 இல் தொங்குவதில் அவர் ஓரளவுக்கேனும் தமிழ் தேசியம் சார் அரசியலை முன் எடுப்பதாக கருதவும் கூடும்.

ஆனால் வன்னியில் திலீபனின் தெரிவு, யாழில் அங்கஜனின், டக்லசின் தெரிவு கிழக்கில் வியாழேந்திரனின் தெரிவு இவையே மக்கள் மனம் மாறியதற்கான தெளிவான காட்டிகள்.

ஆனல் இந்த அபிவிருத்தி அரசியல்வாதிகளாலும் ஒன்றையும் பெரிதாக, பேரினவாத நிகழ்சி நிரலை மீறி சாதிக்க முடியாது.

வியாழேந்திரனிற்கு தபால் - இதை வைத்து என்ன பெரிதாக செய்ய முடியும்? 

பிள்ளையான், அங்கயன் - மாவட்டத்துக்கு என ஒதுக்கபடும் நிதியை தமது/அரசின் பெயரில் செய்து பேர் வாங்காலாம். முஸ்லீம்களுக்கு போகாமல் தமிழர் பக்கம் திருப்பலாம் ஆனாலும் மிகவிரைவில் முகா ஆட்சியில் இணைய இருப்பதாலும், இவை அதிகாரிகளாலே (சிங்கள/முஸ்லிம்) முடிவாவதாலும் பிள்ளையான் இதில் பெரிதாக என்ன செய்ய முடியும்? ஒன்றுமில்லை. முதலமைச்சராக இருந்த போது 3 கல்யாண மண்டபம், நூலக திருத்தம், பட்டிகளோ கேட் என்பவற்றை கட்டியது போல் மேலோட்டமாக சிலதை செய்ய முடியும் அவ்வளவே.

முடிவில் தமிழ் தேசிய அரசியல், அபிவிருத்தி அரசியல் ரெண்டும் ஏமாற்றே.

தனி,

ஒன்றை கவனித்தீர்களா -தமிழர் செறிந்து வாழும் யாழிலும் மட்டகளப்பிலும் அபிவிருத்தி அரசியல் எடுபட்டது போல, பறிபோன அல்லது பறி போக கூடிய மாவட்டங்களான அம்பாறை, திருமலை வன்னியில் அபிவிருத்தி அரசியல் எடுபடவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஒன்றை கவனித்தீர்களா -தமிழர் செறிந்து வாழும் யாழிலும் மட்டகளப்பிலும் அபிவிருத்தி அரசியல் எடுபட்டது போல, பறிபோன அல்லது பறி போக கூடிய மாவட்டங்களான அம்பாறை, திருமலை வன்னியில் அபிவிருத்தி அரசியல் எடுபடவில்லை. 

அம்பாறையில்  30000 வாக்குக்கள் மக்கள் அளித்திருந்தார்கள் எங்கே கர்ணா என்பவர் வென்று விடுவாரோ என்ற காரத்தினால் பல வாக்கு சிட்டைகள் காசுக்கு வாங்கி கிழிக்கப்பட்டது 

திருகோணமலையில் ஊசல் தான் 132 வாக்குகளால் ஐயா வென்றார் அடுத்த தடவை மாறலாம் வன்னியிலும் பாரிய வாக்கு வீழ்ச்சிதான்  இனியும் தேசியம் என இருந்தால் குடிலிலிருக்கும் கிடுகு கூட மிஞ்சாது மக்களுக்கு 

இனிவரும் காலங்கள் இன்னும் மாறும் பொறுத்திருந்து பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அம்பாறையில்  30000 வாக்குக்கள் மக்கள் அளித்திருந்தார்கள் எங்கே கர்ணா என்பவர் வென்று விடுவாரோ என்ற காரத்தினால் பல வாக்கு சிட்டைகள் காசுக்கு வாங்கி கிழிக்கப்பட்டது 

திருகோணமலையில் ஊசல் தான் 132 வாக்குகளால் ஐயா வென்றார் அடுத்த தடவை மாறலாம் வன்னியிலும் பாரிய வாக்கு வீழ்ச்சிதான்  இனியும் தேசியம் என இருந்தால் குடிலிலிருக்கும் கிடுகு கூட மிஞ்சாது மக்களுக்கு 

இனிவரும் காலங்கள் இன்னும் மாறும் பொறுத்திருந்து பாருங்கள் 

அப்போ என்னைபோல் இது இலங்கையில் தமிழ் தேசிய அரசியலின் முடிவின் ஆரம்பம் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்?

இரு கேள்விகல்.

1. இது நடக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் கூட்டமைப்பு, சைக்கிள், விக்கி ஆகியோர் அடுத்த 5 வருடத்தில் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தல் அரசியலில் தமிழ் தேசியம் அகற்றபடாமல் காப்பாற்ற முடியும்?

2. யாழிலும், மட்டுவிலும் அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் நடக்கும். ஒரு காலத்தில் திருமலையை போல் இங்கும் தமிழர் சிறுபான்மையாக்க படுவர் என்பதை தெரிந்தும் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பதாக மக்கள் இப்போ அபிவிருத்தி அரசியலை நாடுகிறார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்போ என்னைபோல் இது இலங்கையில் தமிழ் தேசிய அரசியலின் முடிவின் ஆரம்பம் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்?

இரு கேள்விகல்.

1. இது நடக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் கூட்டமைப்பு, சைக்கிள், விக்கி ஆகியோர் அடுத்த 5 வருடத்தில் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தல் அரசியலில் தமிழ் தேசியம் அகற்றபடாமல் காப்பாற்ற முடியும்?

2. யாழிலும், மட்டுவிலும் அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் நடக்கும். ஒரு காலத்தில் திருமலையை போல் இங்கும் தமிழர் சிறுபான்மையாக்க படுவர் என்பதை தெரிந்தும் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பதாக மக்கள் இப்போ அபிவிருத்தி அரசியலை நாடுகிறார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?

நடக்கலாம் ஒரு எதிர்வு கூறலே  தமிழ் தேசியம் என கூறிக்கொண்டு சிங்கள அரசிடம் எதையும் பெற  முடியாது பாராளுமனறத்திலே கஜேந்திர குமாருக்கும் , விக்கினேஸ்வரன் ஐயாக்கும் கடிவாளம் போட சிங்களம் காத்திருக்கிறது .

அது மட்டுமல்லாமல் சிங்கள அரசின்  நிகழ்ச்சி நிரலில் அவர்கள் அமைத்த வியுகத்தின் திட்டத்தில் தமிழர்கள் விழ தொடங்கிவிட்டார்கள் அதாவது அரசியலை இளவயதினருக்குள் விதைத்து அவர்களை கட்சி ரீதியாக ஏன் மாவட்டம் மாகாணம் எறு பிரித்து அவர்களை அரசியல் எனும் வளையத்திற்குள் பிரித்து எடுத்துள்ளார்கள் நாளை கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்  இலங்கை நிலை அப்படி இப்படி இருக்க ஒற்றை குடை பிடித்து  ஓரமாய் வாங்கோ நனையாமல் என்பது சாத்தியம் இல்லை கோஷான் அண்ண

நான் எனது பார்வையில் இன்றுவரை அதாவது போர் முடிந்து 11 வருடங்கள் தமிழ் உணர்வு என்ற சொன்னவர்கள் தமிழ் மக்களுக்கு ( இங்குள்ளவர்களுக்கு ) பெற்றுக்கொடுத்தது என்ன? மற்றய சமூகம் அரசின் அமைச்சராகி வளர்ச்சியடைந்து போகும் போது நாம்  மட்டும் அவர்களை பார்த்து அங்கே காணி பிடிக்கிறான் தொழில் கொடுக்கிறான் என எத்தனை காலத்துக்கு காத்திருப்பது. வடகிழக்கில் வந்து பார்த்தால் சில இடங்களை தமிழர் நிலம் எனவும் முஸ்லீம்கள் நிலம் எனவும் சிங்களவர் நிலமெனவும் கண்டு பிடிக்கலாம் 

வந்து பார்த்தவர்களுக்கு விளங்கும் இன்றுள்ள இளஞ்சமுதாயம் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்கிறார்கள்  அவர்களின் வாழ்க்கை பொழுது போக்கு தொழில் உலக நாட்டில் நடக்கும் கேளிக்கைகள் விளையாட்டுகள் என்பனவற்றை நுகர தொடங்கிவிட்டார்கள் அவர்களுக்கு  நாம் படிப்பிக்க முடியாது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.