Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளை பதிவு செய்து கப்பல் மூலம் வெளியேற்ற பிரபாகரன் மறுத்தார் – சொல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை பதிவு செய்து கப்பல் மூலம் வெளியேற்ற பிரபாகரன் மறுத்தார் – சொல்ஹெய்ம்

Erik_Solheim_1_UNJC-McIlwaine_800.jpg?189db0&189db0

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமரான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு தான் தயார் என மஹிந்த தன்னிடம் கூறியதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது என குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், அனைத்து பொது மக்களையும் விடுதலைப் புலி போராளிகளையும் பதிவு செய்ய வேண்டும் என தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பெயர்களின் அடிப்படையில் கப்பல் மூலம் அவர்களை தென்பகுதிக்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை தாம் முன்வைத்தபோதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்துவிட்டார் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமாதன முன்னெடுப்பில் உறுதியாக நின்ற இந்தியா, 2008ம் ஆண்டுக்கு பின்னர் அதிலிருந்து மாறியதுடன், இராணுவ ரீதியான தீர்வு வேண்டும் கருதினர். அதாவது இலங்கை அரசு போரை வெல்ல வேண்டும் என்று விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/போராளிகளை-பதிவு-செய்து-க/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எலி ஏன் அம்மணமா ஓடுது

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  இவ்வளவு நாளும் கோமாவில் இருந்துவிட்டு பத்து வருடங்கள் கழிந்தபின் நிறைய குற்றசாட்டுகளை  கொண்டுவந்து குவிக்கிறார் ?

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் எழுதி காசு பார்க்கப்போறார் போல கிடக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

புத்தகம் எழுதி காசு பார்க்கப்போறார் போல கிடக்கு 

ஏற்கனவே ஒன்று எழுதீட்டார். அடுத்த பாகம் வரப்போதோ?

அல்லது அமெரிக்கா/இந்தியா கேட்டு கொண்டபடியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, வாதவூரான் said:

எலி ஏன் அம்மணமா ஓடுது

2 hours ago, பெருமாள் said:

ஏன்  இவ்வளவு நாளும் கோமாவில் இருந்துவிட்டு பத்து வருடங்கள் கழிந்தபின் நிறைய குற்றசாட்டுகளை  கொண்டுவந்து குவிக்கிறார் ?

சனம் இப்ப கொஞ்சம் நிம்மதியாய் இருக்கெல்லோ.....அதுதான்

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ குசிப்படுத்த இப்படி அறிக்கையை விடுகிறார். ஐ.நாவை நிற்க சொன்ன போது ஓடி விட்டார்கள். இவரின் கப்பல் உதவியை புலிகள் மறுத்தார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

யாரையோ குசிப்படுத்த இப்படி அறிக்கையை விடுகிறார். ஐ.நாவை நிற்க சொன்ன போது ஓடி விட்டார்கள். இவரின் கப்பல் உதவியை புலிகள் மறுத்தார்களாம்.

நான் நினைக்கிறன் இலங்கையில் 
ஒரு ஓய்வுகால வீடு வேண்டப்போகிறார் என்று 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நினைத்ததுக்கு  எதிர்மாறா விடயங்கள் நடந்தேறி உள்ளன கடந்த பத்து வருடங்களில் அதுவும் கடந்துபோன தேர்தலில் கிடைத்த பெறுபேறுகள் சகித்து கொள்ள கூடியதாக அவர்களால் முடியவில்லை அதுவும் இந்த கோவிட்  பொருளாதார அடியில் uk பிரென்ச்  போன்ற நாடுகளே தலையெடுக்க முடியாத அளவுக்கு கிடக்கினம் சுண்டக்காய் இலங்கை நாலுபக்கமும் முன்பு கடல் இருந்தது இப்ப எட்டு பக்கமும் கடனாளி தேசம் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் அப்படியான ஆளின் கையில் நாடு .

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

தலைமையில் விக்கியர்

இவர் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறார். யாருக்காகவும் எதையும் மாற்றிப்பேசவில்லையே?

அவரடம் கொழும்பு ஆங்கில ஊடகம் எடுத்த ஒரு பேட்டி தமிழில் பல தலைப்புக்களில் புதிய பேட்டிகள் போல்  வெளியிடப்படுவதாகவே நான் நினைக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.