Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு!

InShot_20200906_182706662-1-960x578.jpg?189db0&189db0

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தலைவராக, வீராப்புள்ள இராணுவத் தளபதியாக விளங்கினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை அவரிடம் இருந்தது. எங்கெல்லாம் போர்நிறுத்தம் செய்தாரோ அங்கெல்லாம் அவர் தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை – என்று தெரிவித்தார் நோர்வேயின் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

” உண்மையில் தலைவர் பிரபாகரன் அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவன் நானாகத்தான் இருக்க வேண்டும். தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை வீராப்புள்ள ஒரு தலைவராக செயற்பட்டார். உலகிலேயே சொந்த விமானப்படையையும், கடற்படையையும் நிறுவிய அரசு அல்லாத தரப்பாக விடுதலைப் புலிகளே இன்று வரை உள்ளனர்.

normal_10.jpg?189db0&189db0gettyimages-637672614_web-1.jpg?189db0&1

ஆனால், துரதிஷ்டவசமாக அவரின் அரசியல் விளக்கப்பாடு இதைவிட பெரிதும் குறைவானதாகவே இருந்தது. இந்தியா மற்றும் வெளியுலகம் குறித்த இணக்கப்பாடு பெரிதாக இல்லை. புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்த பலர் அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். இதுவே தீர்வொன்றைக் காணாது தொடர்போராட்டத்துக்கு வழிவகுத்தது.

அவரது படைகள் குறித்து அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தது. பாலசிங்கம் தான் அவருக்கு முழுமையான ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கனார். பாலசிங்கத்தின் அறிவுரைகள்படி நடக்கும் வரை அனைத்தும் சரியாகவே நடந்தது. ஆனால், அவரின் ஆலோசனைகளைக் கேட்காத நேரத்தில் எல்லாம் பிழையாகிப் போனது.

பாலசிங்கம் நல்ல சமையல்காரர். நானும், பாலசிங்கமும் ஒன்றாக இருந்து நல்ல உணவு உட்கொண்டிருக்கிறோம். நாம் முன்வைத்த யோசனையின்மூலம் அந்த நேரத்தில் பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும் என நம்பினேன். எமது யோசனையை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியன ஆதரித்தன.

ஆயினும் அது ஒரு வலிமையான யோசனை. நீங்கள் போரில் வலுவிழந்து கொண்டு போகிறீர்கள். வெற்றி பெற எந்த வழியுமில்லை என தலைவர் பிரபாகரனிடம் கூறினோம். ஒவ்வொரு போராளியும் பதிவு செய்யப்பட்டு தெற்குக்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதே எமது யோசனை ஆகும்.

சரணடைந்த பின் எவருமே கொடுமைப்படுத்தப்பட மாட்டர்கள் என்பதற்கு அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. இந்த யோசனை நிறைவேறும் என நானும், அன்ரன் பாலசிங்கமும் நம்பிக்கையுடன் தான் இருந்தோம்.

எனினும், 2009 ஏப்ரலில் தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து விட்டார்” என்றார்.

 

https://newuthayan.com/வீராப்புடைய-தலைவர்தான்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமாதான முயற்சியின் போது சிறீலங்கா அரசே தன்னை அதிகம் பலப்படுத்திக் கொண்டது – எரிக் சொல்கெய்ம்

solhei-696x553.jpg

 

விடுதலைப்புலிகள் அதி உச்ச பலமாக இருந்தபோதே பேச்சக்களில் ஈடுபட்டனர், போர்நிறுத்த காலத்தில் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளை விட அதிகமாக தன்னை பலப்படுத்திக்கொண்டது என நோர்வே தலைமையிலான சமாதான தூதுக்குழுவின் பிரதிநிதி எரிக் சொல்கெய்ம் அவர்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு இந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:

இந்த சமாதான முயற்சியின் போது நாம் எந்த தரப்பிடம் இருந்தும் நன்மைகளையோ அன்பளிப்புக்களையோ பெறவில்லை. அது தென்னிலங்கையில் நிலவும் தவறான கருத்து. சமாதான காலத்தில் சிறீலங்கா படையினரே தம்மை அதிகம் பலப்படுத்திக் கொண்டனர் விடுதலைப்புலிகள் அல்ல.

இதனை நாம் போரின் இறுதி ஆண்டுகளான 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கண்டிருந்தோம். உலகில் உள்ள அத்தனை நாடுகளின் ஆதரவையும் சிறீலங்கா அரசு பெற்றிருந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அடங்கும். இந்த நாடுகள் சமாதனத்தை விரும்பின, அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன விடுதலைப்புலிகளா அல்லது சிறீலங்கா அரசா என்பதே. ஆனால் அவர்கள் சிறீலங்கா அரசின் பக்கம் சென்றதால் சிறீலங்கா அரசு தன்னை நன்கு பலப்படுத்திக் கொண்டது.

நாம் 2002 ஆம் ஆண்டு இந்த முயற்சியை ஆரம்பித்த போது, விடுதலைப்புலிகள் 11,000 இராணுவச் சிப்பாய்களைக் கொண்ட ஆனையிறவுத்தளத்தை வீழ்த்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நிலையில் இருந்தனர். யாழில் சிக்கியிருந்த படையினரை மீட்பதற்கு இந்திய உதவ முனவந்திருந்தது. பாகிஸ்தானின் உதவியால் யாழ்குடாநாட்டை சிறீலங்கா அரசு காப்பாற்றியபோதும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருந்தது.

அதாவது 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அதி உச்ச பலத்தில் இருந்தனர். அவர்கள் உச்சபலத்தில் இருந்தபோது தான் சமாதானத்திற்கு வந்தனர். அந்த பலத்தை விடுதலைப்புலிகள் முன்னர் எப்போதும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/சாமாதான-முயற்சியின்-போது/

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நாம் 2002 ஆம் ஆண்டு இந்த முயற்சியை ஆரம்பித்த போது, விடுதலைப்புலிகள் 11,000 இராணுவச் சிப்பாய்களைக் கொண்ட ஆனையிறவுத்தளத்தை வீழ்த்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நிலையில் இருந்தனர். யாழில் சிக்கியிருந்த படையினரை மீட்பதற்கு இந்திய உதவ முனவந்திருந்தது. பாகிஸ்தானின் உதவியால் யாழ்குடாநாட்டை சிறீலங்கா அரசு காப்பாற்றியபோதும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருந்தது.

அதாவது 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அதி உச்ச பலத்தில் இருந்தனர். அவர்கள் உச்சபலத்தில் இருந்தபோது தான் சமாதானத்திற்கு வந்தனர். அந்த பலத்தை விடுதலைப்புலிகள் முன்னர் எப்போதும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நீங்கள்  சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததே இதனால்தானே...
குரங்கு திரும்ப அப்பம் பிரிக்க வந்திருக்குதே என்னவாக இருக்கும் ...?
Mr. குரங்கு இம்முறை உங்களை அப்பம் பக்கத்திலேயே விடமாட்டினம் அப்பம் பூரா சப்ப மூக்கன்கள் வசம் 
தூர இருந்து பார்த்து  நாவில் வீணி வடிச்சுப்போட்டு நடையை கட்டவேண்டியதுதான்   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள்  சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததே இதனால்தானே...
குரங்கு திரும்ப அப்பம் பிரிக்க வந்திருக்குதே என்னவாக இருக்கும் ...?
Mr. குரங்கு இம்முறை உங்களை அப்பம் பக்கத்திலேயே விடமாட்டினம் அப்பம் பூரா சப்ப மூக்கன்கள் வசம் 
தூர இருந்து பார்த்து  நாவில் வீணி வடிச்சுப்போட்டு நடையை கட்டவேண்டியதுதான்   

வெள்ளைக்காரனை நம்பி ஏமாந்து விட்டோம் 

வடிவேலுக்கு சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று 

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் எம்முடனேயே சேர்ந்து வளர்ந்துவருகிறார்கள். பிறகு ஏன் எமக்கு வெள்ளைக்காரனும், கறுப்பனும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

சரணடைந்த பின் எவருமே கொடுமைப்படுத்தப்பட மாட்டர்கள் என்பதற்கு அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. இந்த யோசனை நிறைவேறும் என நானும், அன்ரன் பாலசிங்கமும் நம்பிக்கையுடன் தான் இருந்தோம்.

எனினும், 2009 ஏப்ரலில் தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து விட்டார்” என்றார்.

பாலா அண்ணன் தான் 2005 இலேயே சாவை தழுவிவிட்டார். பிறகு இது எப்படி சாத்தியமாகும். 🤣 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முதல்வன் said:

பாலா அண்ணன் தான் 2005 இலேயே சாவை தழுவிவிட்டார். பிறகு இது எப்படி சாத்தியமாகும். 🤣 

 

சகோ 2006

  • கருத்துக்கள உறவுகள்

நூல் எழுதும் முன் ஏதாவது எதிர்ப்பு வருகுதா என்டு நூல் விட்டு பார்க்கிறார் போல கிடக்கு  ..

ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாறியும் கருத்துகளை வெளியிடுகிறார் ..

70c48e88c3990b36d52a55e3dab11cf5.jpg

"சமாதானமும்.. போரும்" எரிக்கண்ணே தலைப்பு நல்லா இருக்கா..?

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டிலையும் ஆட்டி ....

பிள்ளையையும் கிள்ளி.....

☹️

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியை சொல்ஹெய்ம் என்கிருந்து அளித்தார்? 

கொழும்பில் இருந்தா? அப்படி ஆயின் கொழும்பு வர காரணம் என்ன? 

நோர்வே சொறி சிங்களத்தின் கடல் எல்லையை அகட்டும் முயற்சியில் முன்னுக்கு நிக்கிறது.   
 
இந்த பேட்டியை, இவரே தேடித் சென்று கொடுத்ததாக தோற்றம் இருக்கிறது.

நோர்வேயை முதல் இறக்கியதும் கிந்தியாவே, சிங்களத்துக்கு மூச்சு வாங்க இடை வெளி கொடுப்பதற்கும், பலப்படுத்தவும், புலி அழிப்பின் பேரில் ஈழத்தமிழரை அழிக்கவும்.

இதில் என் பிரபா புகழ் புராணம் சொல்ஹெய்ம் க்கு? 

அண்மையில் நான் கேள்விப்பட்டது, தமிழ் நாடு தான் கூட இருந்த    கிந்தியாவின் கேந்திர கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உளவுப் பிரிவினர் குழிபறித்தததான உணர்வு மேலோங்கி வருவதை, இந்த   கேந்திர கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உளவுப் பிரிவினர் நாடி பிடித்து அறிந்துள்ளனர் என்றும் அதை எப்படியாவது தணித்து விட முயல்வதாகவும்.

இப்பொது youtube  இல் வரும் விடீயோக்கலின் பின்னாலும், இந்த தமிழ்நாட்டை தணிப்பு  என்பதே பின்னணியில் இருப்பதாக தோன்றுகிறது 
 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முதல்வன் said:

பாலா அண்ணன் தான் 2005 இலேயே சாவை தழுவிவிட்டார். பிறகு இது எப்படி சாத்தியமாகும். 🤣 

 

விடுதலைப் புலிகளை, பொதுமக்களை பாதுகாப்பதற்கு இவர்கள் முன்வைத்த நிபந்தனைகள் என்ன என்பதை சூல்கெய்ம் (😏) கூறுவாரா ? அதற்கான துணிவும் நேர்மையும் இவருக்கு இருக்கிறதா ? 

இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை ☹️

1) அவர்கள் முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது ""பொட்டரை இந்தியாவிடம் உயிருடன் ஒப்படைக்க வேண்டும்""

உண்மை முழுவதும் வெளியே கூறப்பட்டால் இந்தியாவையும் மேற்கையும் குறிப்பாக நோர்வேயையும் ஈழத் தமிழர் காறித் துப்புவர். 

😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.