Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த வெளியேற்றம்

 

கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.தென்மராட்சி, தனங்களப்பு பகுதியில் 20 வயற்காணிகளான சுமார் 6 ஏக்கர் வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் 6 ஏக்கர் நெற் செய்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/தென்மராட்சி-கடல்-நீரேரி/

இந்தப் பகுதிகளில் தானே மிக மோசமான அளவுக்கு மண் அகழ்வும் களவாக மண் எடுப்பதும் நிகழ்கின்றது? மண்ணை அகழ்ந்து அகழ்ந்து வாழ்வாதாரமே நாசமாகிக் கொண்டு போகுது.

ஆனால் அப்படி மண் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களில் ஒருவரான டக்கிளசை எம் பி ஆக்கி அழகும் பார்க்கின்றனர் எம் சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

ஒருவரான டக்கிளசை எம் பி ஆக்கி அழகும் பார்க்கின்றனர் எம் சனம்.

அவரைத்தான் உண்மையான மக்கள் போராளி என்று யாழில் ஒருவர்  வந்து புகழ் பாடிக்கொண்டு இருக்கின்றார்.

இந்த கொரனோ  ஆட்டம் ஒருபக்கம் கடல்தண்ணி ஒருபக்கம் அந்த சனத்துக்கு .

Edited by நிழலி
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வான பகுதிகளை கண்டறிந்து தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் 
நெதர்லாந்து கரையோர பகுதிகள் கடல் மட்டத்திலும் பதிவானவி என்பதால் 
சுற்றி தடுப்பு சுவர் அமைத்து இருக்கிறார்கள். 

அங்கு ஏற்ற தாழ்வு இருப்பதால் ஏழைமக்களின் பாதிப்புகளை யாரும் 
கண்டுகொள்ள போவதில்லை ... கடல் தண்ணி யாழ் நகருக்குள் புகும்வரை 
யாரும் அக்கறைப்பட போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

“ஆறு பிறந்து திரிந்து வயல்கள் அடைந்து
பயிர்கள் விளைந்திட
ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன
இருந்தன தோள்கள் என்று
கூறி உழைத்துப் பின் ஆறிக் கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்.”

மஹாகவி (உருத்திரமூர்த்தி)யின் கூற்றுக்கு இணங்க,

1. கூழாறு :- இது வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிரிக்கின்றது
2. உப்பாறு:- இது தென்மராட்சியையும் தீவகத்தையும் பிரிக்கின்றது.
3. தொன்டமானாறு :- இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கின்றது.
4. வழுக்கியாறு :- இது வலிகாமத்தையும் தீவகத்தையும் பிரிக்கின்றது

இப்படியாக யாழ்ப்பாணத்தை நான்கு இயற்கையான ஆறுகள் நான்கு பிரிவுகளாக பிரித்து நிற்கின்றன. ஆனால் இதில் எந்தவொரு ஆறும் நன்னீர் ஆறுமல்ல. மலையில் இருந்து விழவுமில்லை. பயிர் விளையப் பயன் தரவுமில்லை. மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய கரையோர மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற இன்னோரன்ன பயன்களைத் தருகின்றன. 

இப்பிடியே மணல் கொள்ளை, திட்டமிடப்படாத கரையோர சுண்ணாம்புப் படிவ அகழ்வு, சிலிக்கன் மணல் (கண்ணாடிப் பிட்டி) அகழ்வு போன்ற செயற்பாடுகளால் காலப்போக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரப் பகுதிகள் மட்டுமன்றி கடல் நீரேரிகளை அண்டிய பல பகுதிகள் நிரந்தரமாகவே கடலில் மூழ்கும் வாய்ப்பு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, theeya said:

“ஆறு பிறந்து திரிந்து வயல்கள் அடைந்து
பயிர்கள் விளைந்திட
ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன
இருந்தன தோள்கள் என்று
கூறி உழைத்துப் பின் ஆறிக் கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்.”

மஹாகவி (உருத்திரமூர்த்தி)யின் கூற்றுக்கு இணங்க,

1. கூழாறு :- இது வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிரிக்கின்றது
2. உப்பாறு:- இது தென்மராட்சியையும் தீவகத்தையும் பிரிக்கின்றது.
3. தொன்டமானாறு :- இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கின்றது.
4. வழுக்கியாறு :- இது வலிகாமத்தையும் தீவகத்தையும் பிரிக்கின்றது

இப்படியாக யாழ்ப்பாணத்தை நான்கு இயற்கையான ஆறுகள் நான்கு பிரிவுகளாக பிரித்து நிற்கின்றன. ஆனால் இதில் எந்தவொரு ஆறும் நன்னீர் ஆறுமல்ல. மலையில் இருந்து விழவுமில்லை. பயிர் விளையப் பயன் தரவுமில்லை. மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய கரையோர மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற இன்னோரன்ன பயன்களைத் தருகின்றன. 

இப்பிடியே மணல் கொள்ளை, திட்டமிடப்படாத கரையோர சுண்ணாம்புப் படிவ அகழ்வு, சிலிக்கன் மணல் (கண்ணாடிப் பிட்டி) அகழ்வு போன்ற செயற்பாடுகளால் காலப்போக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரப் பகுதிகள் மட்டுமன்றி கடல் நீரேரிகளை அண்டிய பல பகுதிகள் நிரந்தரமாகவே கடலில் மூழ்கும் வாய்ப்பு உண்டு. 

1. கூழாறு :- இது வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிரிக்கின்றது

இது எங்கு இருக்கிறது?
தொண்டமனாறுதானே வடமாரட்ச்சியையும் தென்மராட்ச்சியையும் பிரிகிறது? 

Jaffna Muslims History - Sri Lanka Muslims

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

1. கூழாறு :- இது வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிரிக்கின்றது

இது எங்கு இருக்கிறது?
தொண்டமனாறுதானே வடமாரட்ச்சியையும் தென்மராட்ச்சியையும் பிரிகிறது? 

Jaffna Muslims History - Sri Lanka Muslims

எந்தப் புத்தகம் என்று நினைவில் இல்லை. "கூளாறு"😇 வடமராட்சி கிழக்கில் இருந்து மணற்படிவங்களால் கடலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக எங்கேயோ படித்ததாக ஞாபகம், 'ஆறுமுகம் திட்டம்' வந்தபோது மற்றய ஆறுகளுக்கான முக்கியத்துவம் குறைந்ததாகவும் படித்த ஞாபகம் தேடிப் பார்க்கிறேன். நீங்களும் தேடுங்கள் 

Screenshot%2B2020-11-03%2B111302.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இந்தப் பகுதிகளில் தானே மிக மோசமான அளவுக்கு மண் அகழ்வும் களவாக மண் எடுப்பதும் நிகழ்கின்றது? மண்ணை அகழ்ந்து அகழ்ந்து வாழ்வாதாரமே நாசமாகிக் கொண்டு போகுது.

ஆனால் அப்படி மண் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களில் ஒருவரான டக்கிளசை எம் பி ஆக்கி அழகும் பார்க்கின்றனர் எம் சனம்.

அவர் முந்தி மணற் கொள்ளையில் ஈடுப்பட்டு இருக்கலாம். ஆனால் இப்ப செய்வது முழுக்க புலம் பெயர் வியாபாரிகள் ...ஆட்களை கூலிக்கு அமர்த்தி செய்கிறார்கள் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ரதி said:

அவர் முந்தி மணற் கொள்ளையில் ஈடுப்பட்டு இருக்கலாம். ஆனால் இப்ப செய்வது முழுக்க புலம் பெயர் வியாபாரிகள் ...ஆட்களை கூலிக்கு அமர்த்தி செய்கிறார்கள் 

 

பிறந்த/சொந்த மண்ணிலேயே துரோகம் செய்பவர்களுக்கு மிண்டு கொடுப்பதை எப்போதுதான் நிறுத்துவீர்களோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பிறந்த/சொந்த மண்ணிலேயே துரோகம் செய்பவர்களுக்கு மிண்டு கொடுப்பதை எப்போதுதான் நிறுத்துவீர்களோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

யார் செய்தாலும் சரி என்றால் சரி , பிழை என்றால் பிழை ...என்னுடைய பொலுசி ....அவருக்கு  வால் பிடிக்க வேண்டிய தேவையில் நான் இல்லை ...அவருக்கு மட்டுமல்ல எவருக்கும் 🙂 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ரதி said:

யார் செய்தாலும் சரி என்றால் சரி , பிழை என்றால் பிழை ...என்னுடைய பொலுசி ....அவருக்கு  வால் பிடிக்க வேண்டிய தேவையில் நான் இல்லை ...அவருக்கு மட்டுமல்ல எவருக்கும் 🙂 

 

நீங்களும் என்னைப்போல் சாதாரண மனிதர். உங்களுக்கு சரியென தெரிவது மற்றவர்களுக்கு பிழையென தெரியும். அதையும் ஏன் எதற்கு என தாங்கள் உணர வேண்டும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் என்னைப்போல் சாதாரண மனிதர். உங்களுக்கு சரியென தெரிவது மற்றவர்களுக்கு பிழையென தெரியும். அதையும் ஏன் எதற்கு என தாங்கள் உணர வேண்டும். 😎

அங்கிருக்கும் மக்களே அவரை மன்னித்து ஏற்று விட்டார்கள் ...அவரும் போராட போனார் அதில் சறுக்கி விட்டார் ...அதையே நினைத்து இப்பவும் அவரை துரோகி என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை ...இப்ப ஏதோ கொஞ்சமாவது அங்குள்ள மக்களுக்கு செய்கிறார் அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இந்தப் பகுதிகளில் தானே மிக மோசமான அளவுக்கு மண் அகழ்வும் களவாக மண் எடுப்பதும் நிகழ்கின்றது? மண்ணை அகழ்ந்து அகழ்ந்து வாழ்வாதாரமே நாசமாகிக் கொண்டு போகுது.

ஆனால் அப்படி மண் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களில் ஒருவரான டக்கிளசை எம் பி ஆக்கி அழகும் பார்க்கின்றனர் எம் சனம்.

இங்கை தான் எமது துய்மையான அரசியல்வாதிகளின் பிழை.மக்களின் விருப்பு அறிந்து அரசியல் செய்திருக்க வேணும்.அப்படி செய்திருந்தால் மக்களின் வாக்கு இப்பயொனவர்களுக்கு போயிருக்காது.எப்ப பாத்தாலும் மக்களை குறை சொல்லக்குடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ரதி said:

அங்கிருக்கும் மக்களே அவரை மன்னித்து ஏற்று விட்டார்கள் ...அவரும் போராட போனார் அதில் சறுக்கி விட்டார் ...அதையே நினைத்து இப்பவும் அவரை துரோகி என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை ...இப்ப ஏதோ கொஞ்சமாவது அங்குள்ள மக்களுக்கு செய்கிறார் அல்லவா 

தன்னுடைய மக்களுக்கு மட்டும்.

அப்படி பெரிய நல்லவராய் இருந்தால் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும் அல்லவா? 

தன்னுடைய மக்களுக்கு மட்டும் உதவி செய்கின்றார்.
 அப்படி பெரிய நல்லவராய் இருந்தால் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும் அல்லவா? 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

தன்னுடைய மக்களுக்கு மட்டும்.

அப்படி பெரிய நல்லவராய் இருந்தால் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும் அல்லவா? 

தன்னுடைய மக்களுக்கு மட்டும் உதவி செய்கின்றார்.
 அப்படி பெரிய நல்லவராய் இருந்தால் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும் அல்லவா? 

யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்த போராளிகளை காசை வாங்கி விட்டு வெளியில் எடுத்து விட்ட பெருமை டக்கி போன்றவர்களை சாரும் 

15 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை தான் எமது துய்மையான அரசியல்வாதிகளின் பிழை.மக்களின் விருப்பு அறிந்து அரசியல் செய்திருக்க வேணும்.அப்படி செய்திருந்தால் மக்களின் வாக்கு இப்பயொனவர்களுக்கு போயிருக்காது.எப்ப பாத்தாலும் மக்களை குறை சொல்லக்குடாது.

சுவை,

இங்கு டக்கிளசின் அரசியலைப் பற்றிக் கதைக்கவில்லை. அது தமிழ் தேசிய அரசியலா அல்லது அதற்கு நேர் எதிரானதா என்பது பற்றி அல்ல இங்கு நான் குறிப்பிடுவது. டக்கிளஸ் செய்வது மண் அள்ளும் களவு, அங்கீகரிக்கப்பட்ட அளவிலும் அதிகமாக மண்ணை அகழ்வதும் அப்படித் தடுக்கின்றவர்களை பொலிஸாரையும் குண்டர்களையும் ஏவி அச்சுறுத்துவதும்.

தனது மக்களுக்கு அபிவிருத்தியை கொடுக்கின்றேன் என்று விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையையே காவு கொள்வது எந்தவிதமான போக்கு?

மக்கள் ஒருவரை தேர்ந்து எடுத்து விட்டால் மட்டும் அவர்களின் தெரிவு சரியாகி விடுமா? அது விமர்சனங்களுக்கு அப்பால் பட்டதா?கோத்தாவில் இருந்து ட்ரம் வரை இப்படி மக்கள் வாக்களித்து தெரிவானவர்களே,.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ரதி said:

யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்த போராளிகளை காசை வாங்கி விட்டு வெளியில் எடுத்து விட்ட பெருமை டக்கி போன்றவர்களை சாரும் 

காசு வாங்காமல் செய்ய முடியாதா? 😁 🤣😋

மாந்தை பிரதேச செயலக உத்தியோகத்தர் இனந்தெரியாதவர்களால் படுகொலை

மன்னார் மாந்தை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் விஜயேந்திரன் இனம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அலுவலக பணி முடிந்து வீடு திரும்பிககொண்டிருந்த வேளை இனந்தெரியாதவர்கள் விஜயேந்திரனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

crime-3-300x168.jpg
மாந்தை மேற்கில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு உட்பட் சமூகவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் விஜயேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/85923

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

சுவை,

இங்கு டக்கிளசின் அரசியலைப் பற்றிக் கதைக்கவில்லை. அது தமிழ் தேசிய அரசியலா அல்லது அதற்கு நேர் எதிரானதா என்பது பற்றி அல்ல இங்கு நான் குறிப்பிடுவது. டக்கிளஸ் செய்வது மண் அள்ளும் களவு, அங்கீகரிக்கப்பட்ட அளவிலும் அதிகமாக மண்ணை அகழ்வதும் அப்படித் தடுக்கின்றவர்களை பொலிஸாரையும் குண்டர்களையும் ஏவி அச்சுறுத்துவதும்.

தனது மக்களுக்கு அபிவிருத்தியை கொடுக்கின்றேன் என்று விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையையே காவு கொள்வது எந்தவிதமான போக்கு?

மக்கள் ஒருவரை தேர்ந்து எடுத்து விட்டால் மட்டும் அவர்களின் தெரிவு சரியாகி விடுமா? அது விமர்சனங்களுக்கு அப்பால் பட்டதா?கோத்தாவில் இருந்து ட்ரம் வரை இப்படி மக்கள் வாக்களித்து தெரிவானவர்களே,.

கோத்தாவை சரி , டிரம்ப்பை சரி மக்கள் தெரிவு செய்வதற்கு அதுவும் பெரும்பான்மையினர் தெரிவு செய்வதற்கு காரணம் இருக்குது அல்லவா ...எங்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை என்பதற்காக மக்களது தீர்ப்பு பிழை என்றாகி விடாது 
பி;கு ; அதே மக்கள் தான் புலிகளை நம்பி பின்னால் போனார்கள் 🙂

11 hours ago, குமாரசாமி said:

காசு வாங்காமல் செய்ய முடியாதா? 😁 🤣😋

மற்றவர்களை மாதிரி ஓடி ஒளியாமல்,தொலைபேசியை அணைத்து விட்டு பதுங்கி இருக்காமல் அட்லீஸ்ட் காசை வாங்கி விட்டாவது அவர்களை வெளியில் எடுத்து விட்டாரே என்று சந்தோசப்படுங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.