Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்புரவு செய்ய தயாரில்லை என  கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்த வரவு செலவு திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் கிளப்புகின்ற சுயலாப அரசியல் செயற்பாடுகள்  தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது.

அதேபோல் போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல் போன்ற மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது. 

எம்மைப் பொறுத்தவரையில், கிடைக்கின்ற வளங்களை எல்லாம் பயன்படுத்தி எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம்.

ஆனால், மயானங்களை துப்புரவு செய்கின்ற போலித் தமிழ் தேசியவாதிகள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை.  வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றார். 

 

https://www.virakesari.lk/article/94929

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஆடு கத்துன்னு.. ஓநாய் அழுகிறது. 

ஆமாம் ஆமாம் தாங்கள் ஒரு கல்லறைகளையும் உருவாக்கவில்லை.. பல கருவறைகளை கல்லறையாக்கி.. சிங்களவனுக்கு சமர்ப்பணமாக்கினீர்கள் போலும்.

அதுதான் எஜமானத்துக்கு இந்தளவு விசுவாசம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது.

ஐயா டக்ளசு, இந்த அனைத்து இன மக்களிலுள்ள தமிழினத்தில் மட்டும் 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை எத்தனை இலட்சம் மக்களை இந்தச் சிங்கள அரசுகள் கொன்றழித்தன, எத்தனை கோடி மக்களை நாட்டைவிட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கும் சூழலை ஏற்படுத்திப் பாதுகாத்தன என்ற கணக்கையும், ஒருக்காப் பார்த்துச் சொல்லுங்கோ அப்பு. 

ஒன்றுமட்டும் சொல்கிறேன் உங்களைப் போன்றவர்களுக்கும் இறப்பு நிச்சயம். நீங்கள் எப்படி இறப்பீர்களோ அது வேறு, ஆனால் நீங்கள் இறந்தபின் உங்களைப் புதைத்தால் மண் மாசுபடும், எரித்தால் காற்று மாசுபடும். இரண்டுமே இல்லையென்றால்.... புழு, பூச்சி, விலங்குகள், பறவைகள் அல்லலுறும். 😲   

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவிற்கு ஒரு சண்முகநாதன் மாறி 

செயலலிதாவிற்கு ஒரு பூங்குன்றன் மாதிரி ஆரோ பின்னால் எழுதி தருகினம் 

யாரென்று கண்டுபிடித்து பியூஸ் பிடுங்கினால் சரி வரும் . .👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு

நீங்கள் கல்லறைகளாக்கிய வாழவேண்டியவர்களின் கதைகளையும் கூறலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

அதேபோல் போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல்

தமிழ் பிரதேசங்களில் இளைய தலைமுறைக்கு போதைவஸ்து விற்பனையை செய்வதும், அங்கு வறுமை ஒழிப்பு செய்வதுபோல் காட்டி தமிழரின் பொருளாதார முன்னேற்றத்தை தடுப்பதும், கடலோர பாதுகாப்பு என்ற போர்வையில்  போதைவஸ்த்து கடத்தல் செய்வதும், தொல்பொருள்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் பூர்வீக காணிகளை அபகரித்து அங்குள்ள தமிழரின் பண்டைய மரபு சின்னங்களை அழிப்பதும், தமிழர் பகுதிகளில் குடிசனம் நெருக்கமான இடங்களில் கொரோனா தொற்று பீடித்தவர்களுக்கு அடாத்தாக தங்குமிடம் அமைத்து கொடுப்பவர்கள் உங்கள்  இராணுவத்தினர் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

உண்மை தான் 

எது உண்மைதான்!!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Paanch said:

ஐயா டக்ளசு, இந்த அனைத்து இன மக்களிலுள்ள தமிழினத்தில் மட்டும் 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை எத்தனை இலட்சம் மக்களை இந்தச் சிங்கள அரசுகள் கொன்றழித்தன,


சிங்களவர்களையும் 1970களிலும் பின்னர் 1990லும் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மிக மோசமாக பெரும் தொகையில் இலங்கை அரசு கொன்றொளித்தது. 

22 hours ago, Paanch said:

எத்தனை கோடி மக்களை நாட்டைவிட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கும் சூழலை ஏற்படுத்திப் பாதுகாத்தன என்ற கணக்கையும், ஒருக்காப் பார்த்துச் சொல்லுங்கோ அப்பு. 

போர் நடக்கும் பிரதேசத்தை விட்டு மக்கள் வெளியேற காரணமான ஆயுதப்போரட்டத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் உந்துதலையும் வழங்கிய இந்தியாவும் தமிழ்நாட்டு மற்றும் இலங்கை அரசியல்வாதிகளும் இலங்கை அரசு போல காரணமாக இருந்தார்கள்.  எமது மக்களின் அழிவுக்கு இவர்கள் அனைவருமே காரணம்.

18 hours ago, Eppothum Thamizhan said:

எது உண்மைதான்!!

அக்கா டக்லசின் அடுக்கு மொழியில் மயங்கி அதை உண்மை என்று சொல்லுற மாதிரி இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.