Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.!

FB_IMG_1607445229033.jpg

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் பொறியாளர்  மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் .

இவர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

பொறியியல் துறையில் சாதிக்க புறப்பட்டு தான் செய்த குற்றம் என்ன வென்று தெரியாது 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எஸ்.அரூரன் போன்ற இளைஞர்களுக்கு நீதி செய்ய இந்த நாட்டின் சட்டங்களும் அரச நிருவாகமும் அனுமதி மறுக்கின்றன.

இந்த நிலையில் சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் சிறந்த முன் மாதிரி பணியை செய்து வரும் ஆரூரனை விடுவிக்க வேண்டும் என்று கலை இலக்கிய ரசிகர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

https://vanakkamlondon.com/literature/2020/12/93751/

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பெரும் பெரும் சிந்தனையாளர்களையும், மகான்களையும் உருவாக்கியதில் சிறைச்சாலைகளுக்கும் பங்குண்டு. அப்படி ஒரு பெருமையை இலங்கையிலுள்ள கொடியவர்களின் சிறைச்சாலைக்கும் தேடிக்கொடுத்த பெருமைக்கு உரியவராகிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன். அவர் விரைவில் விடுதலையடையப் பிரார்த்திக்கின்றேன். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

தான் உள்ளுக்கிருப்பது போதாது இனி வெளியில் இருப்பவர்களும் 
உள்ளுக்குபோனால்தான் இப்படியானவர்களுக்கு திருப்தி 
மாண்புமிகு ஐயா கோத்தபாயா அவர்கள் அரச அதிபராக பதவி ஏற்றத்தில் 
இருந்து பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகிறார் 
இவர்களுக்கு ஏன் தமிழில் எழுதும் இந்த தேவையில்லாத வேலை? 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2020 at 12:30, Maruthankerny said:

தான் உள்ளுக்கிருப்பது போதாது இனி வெளியில் இருப்பவர்களும் 
உள்ளுக்குபோனால்தான் இப்படியானவர்களுக்கு திருப்தி 
மாண்புமிகு ஐயா கோத்தபாயா அவர்கள் அரச அதிபராக பதவி ஏற்றத்தில் 
இருந்து பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகிறார் 
இவர்களுக்கு ஏன் தமிழில் எழுதும் இந்த தேவையில்லாத வேலை? 

அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

கன பேருக்கு இவரைப்போல இன்னும் கனபேர் உள்ளே இருக்க வேண்டுமென ஆசை  என எனக்கு சில நேரம்  நினைக்க தோன்றுகிறது பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கடைகளிலும் , வீட்டில் , விவசாய நிலங்களிலும் வேலை செய்கிரார்கள் காரணம் நம்மவர்களே அவர்களை ஒதுக்கி  வைத்துள்ளார்கள் இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

 பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2020 at 08:00, Maruthankerny said:

தான் உள்ளுக்கிருப்பது போதாது இனி வெளியில் இருப்பவர்களும் 
உள்ளுக்குபோனால்தான் இப்படியானவர்களுக்கு திருப்தி 
மாண்புமிகு ஐயா கோத்தபாயா அவர்கள் அரச அதிபராக பதவி ஏற்றத்தில் 
இருந்து பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகிறார் 
இவர்களுக்கு ஏன் தமிழில் எழுதும் இந்த தேவையில்லாத வேலை? 

ஆகா அருமையான பின்னூட்டம். சிங்கள அரசாங்கத்தில் அடுத்த ஒரு மந்திரிப்பதவி உங்களுக்கு நிச்சயம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

கன பேருக்கு இவரைப்போல இன்னும் கனபேர் உள்ளே இருக்க வேண்டுமென ஆசை  என எனக்கு சில நேரம்  நினைக்க தோன்றுகிறது பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கடைகளிலும் , வீட்டில் , விவசாய நிலங்களிலும் வேலை செய்கிரார்கள் காரணம் நம்மவர்களே அவர்களை ஒதுக்கி  வைத்துள்ளார்கள் இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

 பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

அண்மையில் அமல் அங்கயன் இருவரும் சேர்ந்து அலி சப்ரியியிடம் விடுதலை மகஜர் கொடுத்ததாக செய்தி வாசித்தேன்.

இதை மட்டும் செய்தால் உண்மையில் இருவரும் விசயகாரர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 கைதிகள் தொடர்பாகவும் (அரசியல்)  கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அரசுதான் இன்னும் செவிசாய்க்க வில்லை அப்படி விட்டாலும் முன்னாள் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்கிற அரசியல் வாதிகளும் உண்டு தானே 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விரைவில் விடுதலையடைய வேண்டும்......குற்றம் என்ன என்று தெரியாமலே தண்டனை அனுபவிப்பதுதான் கொடுமை......!   

  • கருத்துக்கள உறவுகள்

ஆரூரன் பற்றி நான் அறிவேன்....அமைதியான ஆழ்ந்த அறிவாழன்...ஏனோ இந்த துன்பம் தெரியவில்லை...இவருடைய தந்தையும் சிறை சென்று மீண்டவர்...அவரும் மொரட்டுவை மாணவர்தான்...கட்டுனாயக்காவில் விமான பொறியியலாளர் ஆக பணிபுரிந்தவர்...புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மிக இளம் வயதில் சிறையில் போட்டு அவருடைய வேலையையும் பறித்தார்கள்... இப்போது மகனுக்கும் அதே நிலைமை...தந்தையார் கட்டுனாயக்காவில் பணி புரிந்த சமயம்...அங்கு அடிக்கடி சந்தித்துதொழில்சார் நுட்பங்களய் அறிந்து கொண்ட அனுபவமும் உண்டு...இறைவன் செயல்...விரைவில் அவர் சிறை மீளவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
 

நீங்கள் சொல்லும் வகையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் இல்லை. 

நீதித்துறை பலவீனங்கள் அதன் வரையறை பற்றி விளக்கம் தர முடியாமைக்கு மன்னிக்கவும் ஜஸ்ரின். 

வெளியே இருந்து நாம் கருத்தாடுவது போல தமிழ் அரசியல் கைதிகள் நிலமை இல்லை என்ற துயர் தரும் நிலமை அதிகம். 

கருத்தால் அரசியல் கைதிகள் மீதான அக்கறையை விட அவர் வழக்குகளுக்கு தேவையான பண உதவி இல்லாமலேயே பலரது வாழ்வு வழக்கு ஊடாக 20 வருடங்களுக்கு மேலாக கூட இழுபடுகிறது. 

On 12/12/2020 at 18:32, goshan_che said:

அண்மையில் அமல் அங்கயன் இருவரும் சேர்ந்து அலி சப்ரியியிடம் விடுதலை மகஜர் கொடுத்ததாக செய்தி வாசித்தேன்.

இதை மட்டும் செய்தால் உண்மையில் இருவரும் விசயகாரர்தான்.

சிங்கள கைதிகள் விடுதலைக்காக சிங்கள அரசியல்வாதிகள் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு விடுதலை பெற்ற சிங்களக் கைதிகள் இருக்கிறார்கள். 

அமல் அங்கயன் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Justin said:

தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
 

இது எனக்கும் புரியவில்லை. பல பெரும் தளபதிகளே வெளியில் வந்தபின்னும் இவர்கள் ஏன் உள்ளே?

அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, குமார் பொன்னம்பலம், மனோ கணேசன் (காசு வாங்கி கொண்டுதான் என்றாலும்) பலரை வெளியில் கொண்டு வந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2020 at 16:47, தனிக்காட்டு ராஜா said:

அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

 பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

ஆரூரனின் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். 

தம்பியா இங்கு வந்து கருத்து செல்லாமல் அவர்கள் விடுதலைக்காக பலர் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

 

37 minutes ago, goshan_che said:

இது எனக்கும் புரியவில்லை. பல பெரும் தளபதிகளே வெளியில் வந்தபின்னும் இவர்கள் ஏன் உள்ளே?

அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, குமார் பொன்னம்பலம், மனோ கணேசன் (காசு வாங்கி கொண்டுதான் என்றாலும்) பலரை வெளியில் கொண்டு வந்தவர்கள்.

அவர்கள் வெளியில் கொண்டு வந்த வழக்குகளின் தன்மையும் இன்னும் விசாரணைக் கைதிகளாகவும் ஆண்டு கணக்கில் தண்டனை பெற்றிருக்கும் கைதிகள் வழக்குகள் போலானது இல்லை. 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவிடம் சும்மும்.. டக்கியரும் போட்டி போட்டுக்கொண்டு போச்சினம்.. இந்தா லிஸ்ட் கொடுத்து விடுதலை வாக்கிறம் என்று.. இன்னும் ஒன்றையும் காணவில்லை.

ஆனால்.. படுகொலைக் குற்றவாளிகள் எல்லாம் பிணையில் விடுதலை. ஏன்னா.. முஸ்லிம்களை எதிர்க்க பிள்ளையான் அவசியமாம்... என்று அதற்கும் நம்மவர்கள் ஒரு அநியாய வியாக்கியானம். 

இவர் என்றல்ல.. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு எல்லாம் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் என்றுள்ள பலரும் சோடிக்கப்பட்ட குற்றவாளிகளே அன்றி உண்மையான குற்றவாளிகள் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

ஆரூரனின் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். 

தம்பியா இங்கு வந்து கருத்து செல்லாமல் அவர்கள் விடுதலைக்காக பலர் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

இப்படியானவர்களின் புத்தகங்களைத்தான் தேடிப்படிப்பது அண்மையில் பிள்ளையானின் வேட்கை , வெற்றி செல்வியின் புத்தகங்கள் ஒன்று கிடைத்தது இன்னும் இருக்கிறது இன்னும் கையில் கிடைக்கவில்லை ,இவரின் புத்தகங்கள் கிடைக்கல கிடைத்தால் வாசிப்பேன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியானவர்களின் புத்தகங்களைத்தான் தேடிப்படிப்பது அண்மையில் பிள்ளையானின் வேட்கை , வெற்றி செல்வியின் புத்தகங்கள் ஒன்று கிடைத்தது இன்னும் இருக்கிறது இன்னும் கையில் கிடைக்கவில்லை ,இவரின் புத்தகங்கள் கிடைக்கல கிடைத்தால் வாசிப்பேன் 

வேட்கை ஒன்லைனில் வாங்கலாமோ? அல்லது லண்டனில் எங்கு வேண்டலாம்  யாருக்காவது தெரியுமோ 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

வேட்கை ஒன்லைனில் வாங்கலாமோ? அல்லது லண்டனில் எங்கு வேண்டலாம்  யாருக்காவது தெரியுமோ 

என்னிடம் இருந்தது வேற ஒரு நாட்டுக்கு சென்று விட்டது  ஒன்லைனில் இல்லை ஆனால் கிடைத்தால் பார்சல் அனுப்பலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎-‎12‎-‎2020 at 15:27, தனிக்காட்டு ராஜா said:

என்னிடம் இருந்தது வேற ஒரு நாட்டுக்கு சென்று விட்டது  ஒன்லைனில் இல்லை ஆனால் கிடைத்தால் பார்சல் அனுப்பலாம் 

ஆமாம் எனக்கொரு புத்தகம் வேண்டும் ....வேண்டி அனுப்ப முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2020 at 23:33, ரதி said:

ஆமாம் எனக்கொரு புத்தகம் வேண்டும் ....வேண்டி அனுப்ப முடியுமா?

ம் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் புத்தகம் விநியோகித்தவர் கிடைத்தால் தகவல் தருகிறேன் எல்லாம் தீர்ந்து விட்டதாகவும் ஒன்லையில் வெளியிட்டு இருந்தார்கள் ஒரு சில காலங்கள் முடிந்த பின்னர் கூகீள் நிறுவனம் தூக்கி விட்டது பணம் கட்ட சொல்லி எனவும் கூறினார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் புத்தகம் விநியோகித்தவர் கிடைத்தால் தகவல் தருகிறேன் எல்லாம் தீர்ந்து விட்டதாகவும் ஒன்லையில் வெளியிட்டு இருந்தார்கள் ஒரு சில காலங்கள் முடிந்த பின்னர் கூகீள் நிறுவனம் தூக்கி விட்டது பணம் கட்ட சொல்லி எனவும் கூறினார்

நன்றி ...கிடைத்தால் அனுப்பி வையுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.