Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்? கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த சட்டமூலத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி கலாநிதி சுரேன் ராகவன் சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றியிருந்த உரை தொடர்பாகவே கனடா வாழ் தமிழ் மக்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றார்கள்.

 

கனடா தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்த கலாநிதி ராகவன், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள 4800 பாடசாலைகளிலும் மே 18 முதல் 25ம் திகதி வரையிலான ஒரு வார காலத்திற்கு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டல்கள் இடம்பெறும் ஆபத்து உள்ளதென்று எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.

மிக முக்கியமாக குறிப்பிட்ட அந்த சட்டமூலம் 104 இனை முன்மொழிந்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒரு முன்னாள் இலங்கைப் பிரஜை என்பதையும், அவர் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதையும் அவர் சிறிலங்கா நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

ராகவனின் குறிப்பிட்ட இந்தச் செயல் ராகவனின் உள்நோக்கம் பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகச் சுட்டிக்காண்பிக்கும் கனேடிய தமிழ் மக்கள், சட்டமூலம் பற்றிய எச்சரிக்கையை எழுப்பபுவதே ராகவனின் நோக்கமாக இருந்தால் சட்டமூலத்தை முன்மொழிந்தவரின் பூர்வீகம் பற்றி சிறிலங்கா நாடாளுமன்றில் வெளிப்படுத்தவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை என்ற அடையாளத்தைச் சுமத்தி, அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை ராகவன் பெற்றுக்கொள்ள முயல்கின்றாரா என்ற கேள்வியையும் சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றார்கள்.

இது அப்பட்டமான ஒரு காட்டிக்கொடுப்பு என்று கனேடிய தமிழ் மக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டு தமிழ் இனத்திற்கு எதிராகச் செயற்படும் பலர் வரிசையில் கலநிதி ராகவன் பெயரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடக்கூடாது என்றும் கருத்துப் பதிவிட்டுவரும் தமிழ் மக்கள், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சைக் குறிவைத்து காய்நகர்த்தும் ராகவன் போன்ற தமிழ் புத்தஜீவிகள் அந்த காரணத்திற்காக தமிழ் மக்களின் நலன்களை அடகுவைப்பதானது ஏற்கனவே வேதனையில் இருக்கும் தமிழ் மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும் ஒரு செயல் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

https://www.tamilwin.com/canada/01/265836?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனது கடமையை தானே செய்திருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

அவர் தனது கடமையை தானே செய்திருக்கிறார்!

எலும்புத்துண்டுக்கு வாலாட்டுவது கடமையல்ல, அது உணர்வு, இந்த உணர்வுள்ள சிலர் நாங்களும் தமிழினத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்று தங்களைக் காட்டிவருவது ஒன்றும் புதியதல்ல, புதுமையுமல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னைத் தமிழரென்று எப்போதாவது கூறினாரா அல்லது தமிழன் என்றால் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று பொருளா.. ? 

எங்கள் கண் முன்னே எத்தனை நூறு உதாரண புருசர்கள்(😏) தற்போதும் உயிரோடு உலாவுகிறார்கள். 😡

இவர் தமிழர்கழுக்கு ஆதரவாக கதைத்திருந்தால்தான் நான் ஆச்சரியமடைந்திருப்பேன்.. 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

அவர் தன்னைத் தமிழரென்று எப்போதாவது கூறினாரா அல்லது தமிழன் என்றால் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று பொருளா.. ? 

எங்கள் கண் முன்னே எத்தனை நூறு உதாரண புருசர்கள்(😏) தற்போதும் உயிரோடு உலாவுகிறார்கள். 😡

இவர் தமிழர்கழுக்கு ஆதரவாக கதைத்திருந்தால்தான் நான் ஆச்சரியமடைந்திருப்பேன்.. 😂😂

சிங்களவர் தான் சிறுபான்மையினர் என உரக்க கூறியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூழான் கற்களை எல்லாம் கல்விமான் நொல்லிமான் என்று கொண்டு வைரக் கற்களாக பாவனை செய்து.. கூப்பிட்டு வைச்சு பொன்னாடை போர்த்திய கனடாக்காரருக்கு வேணும்.

இன்னும் எம்மவர்களுக்கு எவன் துரோகி எவன்...நண்பன் என்று அடையாளம் காண முடியவில்லை என்றால்.. அது துரோகிகளின் தவறல்ல.. எதிரிகளின் தவறல்ல..  எமது முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அவர் தன்னைத் தமிழரென்று எப்போதாவது கூறினாரா அல்லது தமிழன் என்றால் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று பொருளா.. ? 

எங்கள் கண் முன்னே எத்தனை நூறு உதாரண புருசர்கள்(😏) தற்போதும் உயிரோடு உலாவுகிறார்கள். 😡

அது தானே, என்னையே தமிழரா, இல்லையா, நானேதான் Kapithanஆ என்று உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சுரேன் ராகவனை எப்படி அடையாளம் காணப்போகிறீர்கள்? 😁 நடக்கிற காரியமா?

8 minutes ago, nedukkalapoovan said:

இன்னும் எம்மவர்களுக்கு எவன் துரோகி எவன்...நண்பன் என்று அடையாளம் காண முடியவில்லை என்றால்.. அது துரோகிகளின் தவறல்ல.. எதிரிகளின் தவறல்ல..  எமது முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு

ஆகா...... கொஞ்சக்காலமாக நெடுக்கரின் கருத்துக்களை பார்க்கும்போது எங்கோ அரசமரத்துக்கு கீழே அமர்ந்துவிட்டரோ அல்லது கைலாசாவில் நித்தியானந்தம் அடைந்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்😇

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

ஆகா...... கொஞ்சக்காலமாக நெடுக்கரின் கருத்துக்களை பார்க்கும்போது எங்கோ அரசமரத்துக்கு கீழே அமர்ந்துவிட்டரோ அல்லது கைலாசாவில் நித்தியானந்தம் அடைந்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

ஏன் வேப்பமரத்துக்கு கீழே அமர்ந்தால் என்னாகும்..??! நீங்களும்.. அதே குட்டையில் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

அது தானே, என்னையே தமிழரா, இல்லையா, நானேதான் Kapithanஆ என்று உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சுரேன் ராகவனை எப்படி அடையாளம் காணப்போகிறீர்கள்? 😁 நடக்கிற காரியமா?

நீங்கள் ஏன் காலை காலைத் தூக்குகிறீர்கள்.. 😂

"சுரேன் ராகவ"  க்கு குறிப்பிட்டதற்கு நீங்கள் அனுங்குவதன் காரணம் என்ன.. ?

Blood is thicker than water என்பது  பொருந்திப் போகிறதோ.. 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

ஆகா...... கொஞ்சக்காலமாக நெடுக்கரின் கருத்துக்களை பார்க்கும்போது எங்கோ அரசமரத்துக்கு கீழே அமர்ந்துவிட்டரோ அல்லது கைலாசாவில் நித்தியானந்தம் அடைந்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்😇

 

6 minutes ago, nedukkalapoovan said:

ஏன் வேப்பமரத்துக்கு கீழே அமர்ந்தால் என்னாகும்..??! நீங்களும்.. அதே குட்டையில் தான். 

யோகசுவாமிகளாகி விடுவீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

 

யோகசுவாமிகளாகி விடுவீர்கள். 

அவர் வில்வ மரத்துக்கு கீழ எல்லோ இருந்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அவர் தனது கடமையை தானே செய்திருக்கிறார்!

இல்லை..அவர் தனது. வேலையைச்செய்துள்ளார்..விஐய். தணிகாசலம். தனது கடமையைச்செய்துள்ளார். விஐயைப்பாரட்டுகிறேன். சட்டமூலம். 104. எதிர்ப்பின்றி வெற்றிபெற்று. நடைமுறைக்குவரவேண்டும்.😁👍👍👍👍👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இந்தக் கூழான் கற்களை எல்லாம் கல்விமான் நொல்லிமான் என்று கொண்டு வைரக் கற்களாக பாவனை செய்து.. கூப்பிட்டு வைச்சு பொன்னாடை போர்த்திய கனடாக்காரருக்கு வேணும்.

கனடா காரர் என்று பொதுவா சொல்லதீங்க அங்கு பென்ஷன் எடுத்துவிட்டு இருக்கிறதுகளில் சிலதுகளுக்கு பொழுது போகணும் எல்லே அதுகளுக்கு விளையாட்டு எங்களுக்கு உயிர் போகுது .

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

கனடா காரர் என்று பொதுவா சொல்லதீங்க அங்கு பென்ஷன் எடுத்துவிட்டு இருக்கிறதுகளில் சிலதுகளுக்கு பொழுது போகணும் எல்லே அதுகளுக்கு விளையாட்டு எங்களுக்கு உயிர் போகுது .

உண்மை..இந்தக் கூட்டத்தின் வேலையே இதுதான்...அதாவது தமிழர்களுக்கு எதிராக இயங்குவது...அதாவது சிங்கள பட்டர் பூசின தமிழர்..இவை கூடுதலாக ரோயல் கல்லூரி வாசனைபட்டவை ...எப்போதுமே அந்தப் பக்கம்தான்..சுரேனுக்கு பொன்னாடை மட்டுமல்ல முழுதகவல்களும்..போகும்..அதைவிட பெப்ருவரி 4ந் திகதி கொடியேத்திற இடத்தில் நுனிவிரலாலை மதுக்கிளாசைப் பிடித்தபடி..நுனிநாக்கில் இங்கிலீசும் பேசிக்கொண்டு நிப்பினம்...பிறகு தமிழ் திருவிழாவில் வேட்டி பட்டுச்சட்டையோடை நிப்பினம்...மாவீரர் நாளென்றால் அங்கையும் பூவோடை நிப்பினம்...போதாக்குறைக்கு எந்த கோயில் கூட்டம் தமிழர் நலம்சார் நிகழ்வில் பங்கு கொண்டு பதவியும் எடுப்பினம்.... அதுக்குள்ளை தில்லுமுல்லு செய்து நாலாக உடைச்சுப் போடுவினம்...இதுக்கெல்லாம் உதவி அந்த றோயல் கல்லூரி இங்கிலீசுதான்...முன்னமே ஒருஇடத்தில் சொல்லியிருக்கிறன்...விரைவில் எல்லா தமிழ் கோவிலிலும் புத்தர் இருப்பார் என்று..

Edited by alvayan

On 8/1/2021 at 23:22, nedukkalapoovan said:

இந்தக் கூழான் கற்களை எல்லாம் கல்விமான் நொல்லிமான் என்று கொண்டு வைரக் கற்களாக பாவனை செய்து.. கூப்பிட்டு வைச்சு பொன்னாடை போர்த்திய கனடாக்காரருக்கு வேணும்.

இன்னும் எம்மவர்களுக்கு எவன் துரோகி எவன்...நண்பன் என்று அடையாளம் காண முடியவில்லை என்றால்.. அது துரோகிகளின் தவறல்ல.. எதிரிகளின் தவறல்ல..  எமது முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு. 

ஏற்றுக்கொள்கிறேன்.நிச்சயமாக எமது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு தான். யார் உண்மையான துரோகி  என்பதை சரியாக இனங்காண  விரும்பாமல் எமது வசதிக்காக பிடிக்காதவர்கள் எல்லோரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி எம்மை விட்டு அனுப்பியதன் விளைவு இது. ஆயுத போருக்கு முன்பிருந்தே  இந்த முட்டாள்தனத்தை தொடங்கிவிட்டோம். ஆயுதப்போரில் இந்த முட்டாள்தனத்தின் உச்சத்தை தொட்டோம். சும்மா இருந்தவர்களையும் ஆத்திரப்படுத்தி துரோகியாக்கினோம். இன்றும் வாயால் அதைத் தொடருகிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன கதிர்காமர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.