Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

Screenshot-2021-01-30-18-38-05-667-org-m

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

 தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.

அந்தக் காணி திஸ்ஸ விகாரைக்குரிய காணி என தெரிவிக்கப்பட்ட போதும் அதனுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை நேற்றய தினம் குறித்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படுவதாக தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதுடன், குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்ககதாகும்.

https://jaffnazone.com/news/23019

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தையிட்டி சிங்கள மக்கள் அல்லது பௌத்த மத மக்கள் வாழும் பிரதேசமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தையிட்டி சிங்கள மக்கள் அல்லது பௌத்த மத மக்கள் வாழும் பிரதேசமா?

குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

 

கூட்டமைப்புக்கு  வாக்கு போட்டாலும் நடந்திருக்கும் மீரா அண்ண

கிழக்கு போச்சு என்று கத்தி கூப்பாடு  போட்ட ஆட் களை இன்னும் காணல இந்த திரிக்கு  அபே ரட்ட  

( சிங்களவர் மைண்ட் வாய்ஸ்)
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

Screenshot-2021-01-30-18-38-05-667-org-m

சிங்கள இராணுவத்தினர் ஏன் தமிழ்மக்களுக்கு வீடுகள் கட்டும் பணிக்குச் சென்று மேசன் தொழில் பயின்றார்கள் என்பதற்கு இன்று நல்ல விளக்கம் கிடைத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, MEERA said:

குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

 

இதேதான் கிழக்கு மாகாணத்திலும் நடக்கின்றது. தகுதியில்லாதவர்களுக்கும் தரகர்களுக்கும் வாக்களித்தால் தமிழர்களின் கோவணத்தையும் உருவிப்போட்டுத்தான் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் காணியில் 100 அடி உயரத்தில் விகாரை

 
Capture-13-696x320.jpg
 70 Views

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

வலி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த விகாரை தனியார் காணியில் 100 அடி உயரத்தில் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில்  சமீபகாலமான தொடர்ந்து சைவ ஆலயங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ராஜபக்சே அரசாங்கத்தால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=40860

  • கருத்துக்கள உறவுகள்

 

144368717_230908252001957_24951687304293

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 10:55, தனிக்காட்டு ராஜா said:

கூட்டமைப்புக்கு  வாக்கு போட்டாலும் நடந்திருக்கும் மீரா அண்ண

கிழக்கு போச்சு என்று கத்தி கூப்பாடு  போட்ட ஆட் களை இன்னும் காணல இந்த திரிக்கு  அபே ரட்ட  

( சிங்களவர் மைண்ட் வாய்ஸ்)
 

நக்கலா அல்லது மகிழ்ச்சியா.. 🤥

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 08:59, Kapithan said:

நக்கலா அல்லது மகிழ்ச்சியா.. 🤥

கருத்து என்னது அதை எடுத்துக்கொள்பவர்களை பொறுத்து 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Capture-13-696x320.jpg

144368717_230908252001957_24951687304293

சிறிலங்காவின் வடபகுதியில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

Edited by குமாரசாமி
படங்கள் சரி செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில் தடக்கப்பட்டதுக்கு  காரணம் பிரபாகரன் என்று அழும்  கூட்டம் இந்த திரிப்பக்கம்  எட்டியும் பார்க்க மாட்டினம் ஆக்கும் .😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு யாழில் தடக்கப்பட்டதுக்கு  காரணம் பிரபாகரன் என்று அழும்  கூட்டம் இந்த திரிப்பக்கம்  எட்டியும் பார்க்க மாட்டினம் ஆக்கும் .😃

அவர்கள் விரும்பியதுதானே நடைபெறுகிறது. இனி அவர்களுக்கு இங்கு என்ன வேலை? திறப்புவிழாவுக்கு வருவார்கள் ஆரவாரமாக திறப்போடு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு யாழில் தடக்கப்பட்டதுக்கு  காரணம் பிரபாகரன் என்று அழும்  கூட்டம் இந்த திரிப்பக்கம்  எட்டியும் பார்க்க மாட்டினம் ஆக்கும் .😃

அது ஒரு தராசு மாதிரி. நீங்கள் தமிழ்த் தேசியத்தையும், புலிகளையும், தமிழ் மக்கள் அவலங்களையும் பற்றிப் பேசுங்கோ. நாங்கள் அதைச் சமப்படுத்த புலிகளைன்ர மனிதவுரிமை மீறல்களைப் பற்றி மட்டும் பேசுறம். நாங்களும் உதுக்குள்ள வந்து சிங்கள அரசின்ர, அவயின்ர ராணுவத்தின்ர கொடுமைகளைப் பற்றிப் பேசினால் இக்களத்தின்ர நடுநிலமை என்னாவது? அதனாலதான் நாங்கள் புலிகளைப்பற்றி மட்டும் பேசுறம். என்ன , நான் சொல்றது சரிதானே? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.