Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்: சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் ஆபரேஷன் செய்யவில்லை: டாக்டர் முருகேசன்

திருச்சி, ஜூன் 22-: எனது மகன் பிரசவ ஆபரேஷன் செய்யவில்லை. நானும் எனது மனைவியும்தான் ஆபரேஷன் செய்தோம் என்று மணப்பாறை டாக்டர் முருகேசன் கூறினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை&திண்டுக்கல் ரோட்டில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் முருகேசன். இவரது ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக வந்த வீராலூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் மனைவி லீலாவதிக்கு டாக்டர் முருகேசனின் மகனும், பிளஸ்-1 படிக்கும் மாணவருமான திலீப் ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்த்ததாக பரபரப்பு செய்தி வெளியானது.

இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆர்.டி.ஓ. ரமணீதரனுக்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ்வச்சானி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. நேற்று டாக்டர் முருகேசனின் ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டர் முருகேசன், அவரது மனைவி டாக்டர் காந்திமதி, மகன் திலீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது டாக்டர் முருகேசன், தங்கள் மகன் இந்த ஆபரேஷனை செய்யவில்லை என்றும், தானும் தனது மனைவியும்தான் ஆபரேஷன் செய்ததாகவும், ஆபரேஷனின்போது தங்கள் மகன் உடன் இருந்ததாக மட்டுமே கூறியதாகவும் தெரிகிறது. ஆர்.டி.ஓ. விசாரணைக்குப் பிறகு டாக்டர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணப்பாறை நகரில் நானும் எனது மனைவி டாக்டர் காந்திமதியும் கடந்த 17 வருடங்களாக ஆஸ்பத்திரியை நடத்தி வருகிறோம். நாங்கள் இரண்டு பேரும் இந்த பகுதியில் பிறந்து இந்த பகுதியிலேயே வளர்ந்தவர்கள். இந்த பகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் கஷ்ட நஷ்டங்களை முழுமையாக உணர்ந்தவர்கள். இதனால் இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ பணியின் மூலமாக எங்களால் எந்த அளவுக்கு உதவி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உதவி செய்து வருகிறோம்.

எங்கள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆபரேஷன்களை நானும் எனது மனைவியும் தவிர வேறு யாரும் செய்ததில்லை. தேவைப்பட்டால் சிறப்பு டாக்டர்களை எங்கள் ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து அவர்கள் மூலம் ஆபரேஷன் செய்து உள்ளோம். எங்கள் மகன் சிறு வயதில் இருந்தே எங்கள் சிகிச்சை முறைகளை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள ஆசைப்படுவான்.

இப்போது எழுந்து உள்ள பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு நானும் எனது மனைவியும்தான் ஆபரேஷன் செய்தோம். எனது மகன் ஆபரேஷன் செய்யவில்லை. எங்களை நம்பி வரக்கூடிய கிராமப்புற மக்களின் நம்பிக்கைக்கேற்ப எங்களது பணி தொடர்ந்து நடைபெறும். இது தொடர்பாக நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு டாக்டர் முருகேசன் கூறினார்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தலைப்பில் சாணக்கியனுக்கும் இன்னுமொருவனுக்குமிடையில் நடந்த கருத்தாடல் மிகவும் யாதார்த்தபூர்வமாகவும் ஆழமாகவும் இருந்ததுடன் ஆரோக்கியமான கருதாடல்களுக்கு முன்னுதாரனமாகவும்

இருந்தது.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தலைப்பில் சாணக்கியனுக்கும் இன்னுமொருவனுக்குமிடையில் நடந்த கருத்தாடல் மிகவும் யாதார்த்தபூர்வமாகவும் ஆழமாகவும் இருந்ததுடன் ஆரோக்கியமான கருதாடல்களுக்கு முன்னுதாரனமாகவும்

இருந்தது.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நானும் கவனித்தேன்.

கருத்துகளை பகிர்ந்த விதம் அழகு.

இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

இந்தத்தலைப்பில் சாணக்கியனுக்கும் இன்னுமொருவனுக்குமிடையில் நடந்த கருத்தாடல் மிகவும் யாதார்த்தபூர்வமாகவும் ஆழமாகவும் இருந்ததுடன் ஆரோக்கியமான கருதாடல்களுக்கு முன்னுதாரனமாகவும்

இருந்தது.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நானும் கவனித்தேன்.

கருத்துகளை பகிர்ந்த விதம் அழகு.

இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

உங்களிருவரதும் ஊக்குவிப்புக்கு நன்றி

இந்தக் கருத்தாடல் ஆக்கபூர்வமாக அமைந்தமைக்கு இன்னொருவனின் பின்வரும் கருத்தாடல் பாணியே காரணம்,

1) வாதங்களை திசை திருப்பாமை. உதாரணமாக,

இங்கு குற்றம் சாட்டியவர்கள் டாக்டர்கள். மக்கள் மீதுள்ள பற்றுக்காரணமாகவே அல்லது அந்த பெண்ணின் மீதுள்ள அக்கறை காரணமாகவோ அவர்கள் அதை செய்யவில்லை.

என்ற இடத்தில் "டாக்டர்களில் நல்ல சேவை செய்யும் டாக்கடர்கள் பலர் உள்ளனர். அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்" என டாக்டர்களின் சார்பாக வாதாடி வாதத்தை திசைதிசை திருப்பாமல் தலைப்பின் கீழ் நல்ல விளக்கங்களுடன் கொண்டு சென்றமை.

2) தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமை. உதாரணமாக,

புலிகளில் கனரக வாகனகனமோட்டிகளும் விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

"புலிகளை பற்றி நீங்கள் கதைக்காதீர்கள். அவர்களை இங்கு ஒப்பிட முடியாது....." என்ற வகையில் பதிலளிக்காது, நான் கூறிய கருத்தின் பொருளை மாத்திரம் கருத்திற் கொண்டு பதிலளித்தமை.

எனவே ஒருவர் மனம்வைத்தால் மாத்திரம் நல்ல கருத்தாடலாக அமைந்து விடாது. அனைவரும் முயற்சிக்க வேண்டும். பாராட்டியவர்களுக்கு நன்றிகள்!

அன்புடன்,

இந்தக் கருத்தாடல் ஆக்கபூர்வமாக அமைந்தமைக்கு இன்னொருவனின் பின்வரும் கருத்தாடல் பாணியே காரணம்,

1) வாதங்களை திசை திருப்பாமை. உதாரணமாக,

என்ற இடத்தில் "டாக்டர்களில் நல்ல சேவை செய்யும் டாக்கடர்கள் பலர் உள்ளனர். அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்" என டாக்டர்களின் சார்பாக வாதாடி வாதத்தை திசைதிசை திருப்பாமல் தலைப்பின் கீழ் நல்ல விளக்கங்களுடன் கொண்டு சென்றமை.

2) தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமை. உதாரணமாக,

"புலிகளை பற்றி நீங்கள் கதைக்காதீர்கள். அவர்களை இங்கு ஒப்பிட முடியாது....." என்ற வகையில் பதிலளிக்காது, நான் கூறிய கருத்தின் பொருளை மாத்திரம் கருத்திற் கொண்டு பதிலளித்தமை.

எனவே ஒருவர் மனம்வைத்தால் மாத்திரம் நல்ல கருத்தாடலாக அமைந்து விடாது. அனைவரும் முயற்சிக்க வேண்டும். பாராட்டியவர்களுக்கு நன்றிகள்!

அன்புடன்,

நல்ல கருத்துக்கள். ஒரு விவாதத்தின் போது உதாரணங்களினதும், உவமைகளினதும் நோக்கத்தை திசைதிருப்பாமல் கருத்தாட வேண்டியது அவசியம். அப்படி செய்யாதவர்கள் விவாதத்தின் கருப்பொருள் பற்றி சரியான தகவலோ அறிவோ இல்லாதவர்கள் அல்லது உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அற்றவர்கள்

இந்தக் கருத்தாடல் ஆக்கபூர்வமாக அமைந்தமைக்கு இன்னொருவனின் பின்வரும் கருத்தாடல் பாணியே காரணம்,

1) வாதங்களை திசை திருப்பாமை. உதாரணமாக,

2) தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமை. உதாரணமாக,

நன்றி சாணக்கியன்.

இந்த இரண்டு உதாரணங்களையும் கவனத்தில் கொண்டால் கருத்தாடல் ஆக்கபூர்வமாகவும் இரசிக்கும்படியாகவும் இருக்குமென்பது உண்மையே.

முயற்சி செய்வோம்.

-இணையவன்

நன்றி சாணக்கியன்.

இந்த இரண்டு உதாரணங்களையும் கவனத்தில் கொண்டால் கருத்தாடல் ஆக்கபூர்வமாகவும் இரசிக்கும்படியாகவும் இருக்குமென்பது உண்மையே.

முயற்சி செய்வோம்.

-இணையவன்

அப்படியே நீங்களும் உங்கள் ஆக்க பூர்வமான கருத்தை முன் வைக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சிசேரியன்' சர்ச்சை: டாக்டர் தம்பதி கைது மகன் தலைமறைவு

ஜூன் 25, 2007

திருச்சி: கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவன் பிரசவம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய மணப்பாறை டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மனைவி டாக்டர் காந்திமதி ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 15 வயதே ஆகும் 11வது வகுப்பு படிக்கும் திலீபன் ராஜ் என்பவர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ததாக அவரது தந்தை டாக்டர் முருகேசன் சமீபத்தில் டாக்டர்கள் சங்க கூட்டத்தில் அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கின்னஸ் சாதனைக்காக இந்த பிரசவத்தை திலீபன் ராஜ் பார்த்ததாக அவரது தந்தை கூறியது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. சிறுவனை விட்டுப் பிரசவம் பார்க்க வைத்த டாக்டர் தம்பதியை கைது செய்ய வேண்டும், அவர்கள் டாக்டர் தொழில் பார்க்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ ரமணீதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது.

கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் டாக்டர் தம்பதி, திலீபன் ராஜ், பிரசவத்திற்கு வந்த பெண் நீலா, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இதுதவிர முருகேசனின் மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பிரசவங்கள், சிசேரியன் அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் சேகரித்தனர்.

பிரசவம் செய்து கொண்ட பெண்களிடமும் நேரில் போய் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.

விசாரணையின் முக்கிய திருப்பமாக, திலீபன்ராஜ் சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுப்பது போன்ற விசிடியையும் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விசாரணை அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில், டாக்டர் தம்பதியைக் கைது செய்யுமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை முருகேசனும், காந்திமதியும் கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக வளநாடு காவல் நிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் மணப்பாறை போலீஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் டாக்டர் தம்பதிகள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திலீபன் ராஜ் தலைமறைவு

இதற்கிடையே, டாக்டர் தம்பதியின் மகனும், சிசேரியன் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளவருமான திலீபன் ராஜ் தலைமறைவாகி விட்டார். உறவினர்கள் யாருடைய வீட்டிலாவது அவர் பதுங்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/25/doctors.html

உயிர் தொடர்பான விடயத்தில் கோதனை செய்வதற்|கு யாருக்கும் உரிமை இல்லை..

எதாவது தவற நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்..

இருந்தாலும்..

செஞ்சோற்றுக்கடனில் சிறந்தவர் கர்ணனா.. கும்பகர்ணனா என்று வாதிடுகையில் கர்ணன்தான் என்பது வெளிப்படையாக சொல்லமுடிந்தது என்றாலும் இல்லை கம்பகர்ணன்தான் என்று தன் வாதத்திறமையை நம்பி போட்டியில் குதிப்பவர்களை பாராட்டலாம்..

உங்கள் கருத்தாடல் தரமானது..

நன்றி.

விகடகவி மாமா ஒரு நாள் எல்லாரும் போக வேண்டும் தானே ஆனபடியா பயப்பிடாம செய்யலாம் எல்லாம் நேரம் தான்........................ :( :P

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதுமாக வாசிக்கவில்லை. ஆனால் சாணக்கியன் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டதிட்டங்கள் இப்படி மருத்துவ சாதனைகள் செய்ய அனுமதிக்கும் என்பது போலக் கருத்துக் கூறியிருப்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. கனடாவில் விலங்கு மருத்துவம் படித்து விட்டு இங்கு வரும் ஒருவர் மூன்று பரீட்சைகள் ஒருவருடம் செலவு செய்து சித்தியெய்தினால் தான் இங்கே செல்லப் பிராணிகளைத் தொடவே அனுமதிப்பார்கள். சில அமெரிக்க மருத்துவமனைகளில் சீனா அல்லது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் எம்டி பட்டம் பெற்ற மருத்துவர்களை வதிவிடப் பயிற்சிக்கே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சாதனைகளில் தமது உயிரைப் பணயம் வைப்பது நியாயமானது. இன்னொருவர் உயிரைப் பணயம் வைத்து ஒரு சாதனையா? ஏற்றுக் கொள்ள முடியாதது, கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகன் சாதனைக்காக சட்டத்தை மீறினாரா மருத்துவர்?

‘‘உயிர் என்றால் இளப்பமா?

திருச்சி மாவட்டம்

மணப்பாறையில் ‘மதி சர்ஜிகல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை’யை டாக்டர் முருகேசன் என்பவரும் அவரது மனைவி டாக்டர் காந்திமதியும் நடத்திவருகிறார்கள். இவர்களுக்கு திலீபன்ராஜ் என்ற ஒரே மகன். பத்தாம் வகுப்பு முடித்து தற்போது பதினோராம் வகுப்புக்குப் போயிருக்கும் திலீபன்ராஜை சாதனைக்காக(!) சிசேரியன் ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார் முருகேசன். அதை வீடியோவாகவும் எடுத்து கடந்த மாதம் 6-ம் தேதி மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) கிளைக் கூட்டத்தில் சக4 டாக்டர்களுக்குப் போட்டுக் காண்பித்திருக்கிறார் டாக்டர் முருகேசன். அதைப் பார்த்து திகைத்துப்போன சக டாக்டர்கள், முருகேசனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இதையடுத்து இந்த விவகாரம் மருத்துவ உலகில் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.எம்.ஏ-வின் மணப்பாறை செயலாளர் டாக்டர் பிரசாத்திடம் பேசியபோது, ‘‘அன்று முருகேசன் அந்த சி.டி-யை போட்டுக் காட்டியதும் அதிர்ந்து போனோம். ‘நீங்கள் செய்திருப்பது மருத்துவத் துறைக்கே எதிரான செயல். டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமா இது..?’ என்று அவரைக் கண்டித்தோம். அவரோ, ‘உங்களால் என் மகனின் சாதனையை ஜீரணிக்க முடிய வில்லை. உங்கள் பிள்ளை இப்படி செய்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடுவீர்கள்...’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். அதன் பிறகுதான் எங்கள் மாநிலத் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக இது குறித்து புகார் அனுப்பினோம். இந்நிலையில், இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை போய் இப்போது ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது...’

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொருவன்,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

முதலில் எனக்கு மருத்துவத்துறை அல்லது அதுசார்ந்த சட்ட திட்ட அறிவு கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு சாதாரண பாமரன். என் கேள்விகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் கருத்தில் உள்ள யதார்த்த நடைமுறையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு அப்பால் ஒரு இலட்சிய உலகை நோக்கிய பயணத்தில் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

மேலைநாடு என்பதைதான் நான் இங்கு அமெரிக்கா என குறிப்பிட்டேன். ஆனால் அமெரிக்க அணுகு முறை மிகவும் வேறுபட்டது, யதார்த்தமானது, அளவு மீறிய சட்டதிட்டங்களற்றது. நான் அத்தகைய ஒரு நிறுவனத்தில் அந்த அணுகுமுறையை பெற்றிருக்கிறேன். அது போலவே பிரித்தானியர் பல சட்டதிட்டங்களையும் ஒழுங்குகளையும் திணிப்பார்கள். ஆரம்பத்தில் தோல்வியடைவது போல் தோன்றினாலும் இறுதியில் நல்ல பெறுபேறுகளை அமெரிக்க பாணி ஏற்படுத்துகின்றது. பிரித்தானிய பாணி நாட்செல்லச் செல்ல இறங்குமுகத்தையும் சோர்வையுமே தருகிறது.

பொதுவாகவே டாக்டர்கள் எதோ தெய்வங்கள் போலவும், சத்திரசிகிச்சை கூடம் சன்னிதானம் போலவும், நர்சுகள் எல்லாம் புசாரிகள் போலவும் ஒரு ஐதீகத்தை சாதரணமாக எல்லா வைத்தியசாலைகளிலும் பார்க்கலாம். ஏன் இந்த பித்தலாட்டம்?

அண்மையில் ஒரு குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு பெரிய புள்ளிக்கு மருத்துவர் அல்லாதவர்கள் அவசர சிகிச்சை செய்து அவரை சத்திரசிகிச்சை கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கே இருந்த டாக்டர்கள் அந்த ஏனையவர்கள் வெளியேறினால்தான் சிகிச்சை தரமுடியும் என்று கூற (வந்தவர்கள் யார் என்று தெரியாமல்) பின்னர் துப்பாக்கி முனையில் சிகிச்சை செய்யவேண்டி நேர்ந்தது ( வசூல்ராஜா MBBS ஸ்டைலில்)

பட்டம் பெற்வர்கள் மாத்திரம் மற்றவர்கள் பிரைவேசியில் தலையிடலாம் என்றால், ஒரு அவசரமான அனாதரவான நிலையில் யாருமே உதவ வரமாட்டார்கள்.

மேற்குறித்த செய்தியில் தரவுகள் போதாது, சிறுவனின் வயது காரணமாகவே இந்த பரிதாப நிலை. அவனின் திறமை குறித்து ஆராயமல் / போதிய தரவுகள் இல்லாமல் கண்டிக்க முடியாது.

வயது வந்த பட்டம் பெற்ற டாக்டர்களின் கவனக்குறைவு பணத்தாசை என்பவற்றாலும், வயது வந்த கள்ள டாக்டர்களின் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்த பின் செய்யும் கொலைகளுக்கு மத்தியில் இது பெரிய குற்றமாக தெரியவில்லை. (அத்துடன் இங்கு கொலை செய்யும் நோக்கமும் இருக்கவில்லை)

மேற்குறித்த அனைத்து குற்றங்களுக்குமாக ஒரு கேள்வி,

புலிகளின் கனரக வாகனமோட்டிகளும், விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

முட்டாள் தனமான வாதம், இந்த ஆபிரேசனை சரியாக செய்ய ஆந்த சிறுவன் எத்தனை ஆபிரேசன்களை செய்து பழகி இருக்க வேண்டும் அதில் இறந்தவர்கள் எத்தனைபேர் , பாதிக்கபட்டவர்கள் எத்தனைபேர், அந்த உண்மைகளை அந்த சிறுவனது தாயும் தந்தையும் வெளிக்கொண்டு வருவார்களா? :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களின் பெயரை வெளிப்படுத்துறதற்காக ஒரு பெண்ணின் உயிரோட விளையாடுகின்ற செயலை ஏற்க முடியாது. மருத்துவப் பயிற்சி முடிக்காத ஒருவர், ஒரு பெண்ணின் உடலில் கத்தியால கீறினார் என்றால், அதைக் கொலை முயற்சி என்று வழக்குப் போட முடியும்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் சிசேரியன்: வழக்கில் புது திருப்பம் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம்

ஆகஸ்ட் 23, 2007

திருச்சி: துபாய் டாக்டர் வந்து அறுவைச் சிகிச்சை செய்வார் என்று கூறி ஏமாற்றி விட்டு, டாக்டர் தம்பதியினர் தங்களது மகனை விட்டு தனக்கு சிசேரியன் செய்ததாகவும், சில நாட்களில் குழந்தை இறந்து போய் விட்டதாகவும், மணப்பாறையில் 15 வயது சிறுவனால் சிசேரியன் செய்யப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு நாட்டையே உலுக்கிய சம்பவம் மணப்பாறையில் 15 வயது சிறுவன் சிசேரியன் செய்த விவகாரம். மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் தம்பதியான முருகேசன், காந்திமதி ஆகியோரின் மருத்துவமனையில், அவர்களது 15 வயது மகன் திலீபன் ராஜ் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினான்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் யார் என்பதில் முதலில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடமிருந்து பரபரப்பான வாக்குமூலத்தையும் வாங்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜகுமாரி (35). திருச்சி, பேட்டவாய்த்தலை, அண்ணா நகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் குமாரசாமி. இவர் ஒரு கூலித் தொழிலாளர்.

டாக்டர் தம்பதி நடத்தி வரும் மதி சர்ஜிகல் மற்றும் பேறு கால மருத்துவமனையில் கடந்த மே 4ம் தேதி அட்மிட் ஆனார் ராஜகுமாரி. அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் முதுகெலும்பில் குறைபாடு உள்ளதாக அவரிடம் டாக்டர் தம்பதியினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் 7ம் தேதி குழந்தை இறந்து விட்டது. 11ம் தேதி ராஜகுமாரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மதி மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை ராஜகுமாரி போலீஸாரிடம் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், என்னை ஆபேரஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர். அங்கு முதுகில் மயக்க மருந்து செலுத்தினர். இதனால் எனக்கு உணர்வு போய் விட்டது. ஆனால் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் பின்னர் எனக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை நடக்கப் போவதாகவும், துபாயிலிருந்து டாக்டர் வந்துள்ளதாகவும் கூறினார் டாக்டர் முருகேசன். ஆனால் ஒரு சிறுவன்தான் எனக்கு வந்து அறுவைச் சிகிச்சை செய்தார். டாக்டர் தாம்பதியினர் கூறியபடி அவர் அறுவைச் சிகிச்சை செய்தார். பின்னர்தான் அந்த சிறுவன் டாக்டர் தம்பதியின் மகன் என்று தெரிய வந்தது என்று கூறியுள்ளார் ராஜகுமாரி.

சிறுவன் செய்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்ைத சில நாட்களில் இறந்துள்ளது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துபாய் டாக்டர் என்று கூறி டாக்டர் தம்பதியினர் அந்த அப்பாவிப் பெண்ணை ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மணப்பாறை டி.எஸ்.பி. வி.ஜி.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/08...s-new-turn.html

இன்னும் இந்த வழக்கு போகுதா குழந்தையும் இறந்து போயிட்டா நடகட்டும்........நடகட்டும்.......... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.