Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

 

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

Edited by zuma

  • Replies 179
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

சேறடிப்பதற்குவிலாவாரியான ஆராச்சி...

🥴

39 minutes ago, zuma said:

 

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

இந்தியாவில் தேசியக் கட்சிகழுக்கு புறோக்கர் வேலை செய்தால் (உங்கள் அர்த்தத்தில்) உங்களுக்குக் கடுப்பு ஆனால் இலங்கையில் இந்திய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தங்களைப் போன்றோரின் ஒன்பது துவாரங்களுக்கும் பூட்டு...... 🤣

🥴

ஏன் திறப்பு தொலைஞ்சு போச்சோ... 😂😂😂😂😂😂😂😂😂😂😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

7ம் திகதி நடந்த கூட்டத்தில், மிக நேர்த்தியாக நடந்ததாக பத்திரிகைகள் எழுதி உள்ளன.

அந்த பக்கமே, எந்த வாகனமும் வராத படி, தமது வாகனங்களை, தூரத்தில், கடற்கரை ஓரத்தில், இடம் எடுத்து, பார்க் பண்ணி, நடந்து வந்துள்ளார்கள்.

தண்ணி அடிக்கும் கூட்டங்களுக்கு  மத்தியில், ரத்த தானம், புத்தக வியாபாரம் நடந்துள்ளது.

குப்பைகளை அள்ளி, சுத்தமாக்கி ஒழுங்கா விட்டு சென்றுள்ளனர்.

தொண்டர்கள், வரும் ஆட்களை ஒழுங்கு முறையில் உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.

போலீசார், இந்த நிகழ்வுகளை பார்த்து, ஆச்சரியத்தில் குழம்பி போய் இருந்தார்களாம்.

 

Edited by Nathamuni

6 hours ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

Edited by பராபரன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பராபரன் said:

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

அய்யா, ஒரு மாநில அரசினை, அரசியல் காரணங்களுக்காக, டிஸ்மிஸ் பண்ணுவது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது. அண்மை காலத்தில், இந்த வகை டிஸ்மிஸ் நடக்கவில்லை.

பிரபாகரன் படம் கொண்டு திரிவது சட்ட விரோதம் அல்ல என்றும் அதே உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது அய்யா.

ஆனாலும், youtube, சமூக வலைத்தளங்கள், இலங்கை அரசின் அழுத்தத்தினால், பிரபாகரன் படங்கள் வந்தால், அந்த சானலையே மூடி விடுவதால், நேரலை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. 

ஆகவே மேடையில் வைக்கவில்லை. பதிலாக, பக்கவாட்டில் பெரிதாக இருந்ததே.

இது நியாயமானது தான்.

***

அதிலும் முக்கியமானது, தலைவர் இவர் என்பது பேச்சு. அது ஆவணத்தில் இல்லை. மேலும், அவரது வெளிப்படையான அறிவிப்பின் மீதே, தேர்தலில் போட்டி இட அனுமதியும், 17 லட்ச்சம் வாக்குகளை வெல்லும் நிலையும் இருந்தது.

முதல் அமைச்சரானால் மட்டும், கொடுத்த அனுமதி எப்படி ரத்தாகும்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பராபரன் said:

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு வேண்டாம் எனும் உங்கள் வாதம் சரியானதுதான். 

தற்போதைய சூழலில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மறக்காமல் நினைவுபடுத்தி  வைத்திருக்கும் ஒரே ஒரு அமைப்பு என்கின்ற வகையில் நாதக வினர் தொடர்புபட்ட செய்திகளைப் பார்ப்பதும் அவர்களுக்கெதிரான சேறடிப்பை எதிர்ப்பதும் இயல்பானதுதானே. 😀

இலங்கைத் தமிழர் எவரும் சீமான் ஈழம் பெற்றுத் தருவார் என்கின்ற ரீதியில் அவரை எதிர்பார்க்கிறார்கள் என நான் நம்பவில்லை. 

சற்று கற்பனை செய்யுங்கள்...

நா த க வினர் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் பகிரங்கமாக நினைவுபடுத்தவில்லை என வைத்துக் கொண்டால்  தற்போதைய நிலையில் உலகில் வேறு யாராவது அவர்களை நினைவு கூருகின்றனரா (நாளாந்தம்)..?

இன்னும் பத்து வருடங்களில் நாமே எங்கள் வரலாற்றை மறந்து விட்டிருப்போம். 

எமது நிலை  அப்படியிருக்க,  அவர்கள் பகிரங்கமாக நாளாந்தம் நினைவுபடுத்தும் போது நாம் புழகாங்கிதம் அடைவது இயல்பானதுதானே. 

இதில் குறை காண்பதற்கு ஏதும் இல்லை.

நாம் தமிழர் கட்சியினரை எதிர்ப்பவர்களை எரிச்சலடைய வைப்பதும் இந்த விடுதலைப் புலிகளை போற்றும் புராணமே. 

அவர்களும் புலிகளை மறந்துவிட்டால் எங்கள் விடுதலை போராட்டத்தை உலகமே மறந்துவிடும் என்பது இந்த சேறடிப்பாளர்களுக்கு நன்கு தெரியும். 

 

☹️

நன்றி நாதமுனி, நன்றி கபிதன்...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதுமட்டுமில்லை....

முன்பு வேறு இயக்கங்களில் இருந்தவர்கள், புலிப் பாசம் கொண்டவர்கள் போல், சீமானை திட்டுகிறார்கள்..... தலைவர் பெயரை கெடுகிறாராம். உண்மையில், தலைவர் பெயரை கொண்டு செல்வதால் பயங்கர கொதி....

இவையளை மாதிரி கண பேர் திரியினம்... 😎

உண்மையில் அந்த சுயநலமற்ற மனிதனின் பெயர்தான் பிரச்சனையே. அவரின் பெயரை உச்சரிக்காதவிடத்து சேறடிப்பு ஏதும் நிகழுமென நான் நினைக்கவில்லை. 

 

நாம் யார்...

தமிழ் நண்டுகள்தானே.... ☹️

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பராபரன் said:

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால் இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

5 hours ago, Kapithan said:

இலங்கையில் இந்திய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தங்களைப் போன்றோரின் ஒன்பது துவாரங்களுக்கும் பூட்டு

நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள். அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்? கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 

எலிப்புழுக்கை தன்னை எள்ளு மாதிரி கெட்டிக்காரராகவும் நினைத்துக்கொள்ளலாம். எள்ளும் எலிப்புழுக்கையாக காய்ந்து எலிப்புழுக்கைகள் எல்லாத்தையும் தாங்கள் எள்ளுதான் என்று தன்நம்பிக்கையை அடைய வைக்கலாம்😬

 

அண்மையில் வந்த அலசலில் இருந்து.. 

 

அமெரிக்க கோனெல் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆய்வாளர்களாக இருந்த டேவிட் டன்னிங், ஜஸ்டின் க்ரூகர் ஆகியோர் ஓர் ஆய்விதழை, 1999ஆம் ஆண்டு வெளியிடுகிறார்கள். அதில் அவர்கள் வௌிப்படுத்திய விடயம் தற்போது ‘டன்னிங்-க்ரூகர’”விளைவு என்று அறியப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ‘டன்னிங்-க்ரூகர்’ விளைவு என்பது, ஒரு வகையான அறிவாற்றல் பக்கச்சார்பு. இதில் நபர்கள்,ஒரு விடயம் தொடர்பான தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டுக்கொள்வதன் விளைவாக, தமது அறியாமை பற்றி அறியும் திறனின்மையின் காரணத்தால், தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டு, ஒரு வகையான மாயமான உயர்வுமனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள். மிகச்சுருக்கமாகச் சொல்வதனால், இது அவர்களுக்குத் தெரியாது என்பது, அவர்களுக்குத் தெரியாத நிலை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரபாகரன் படம் கொண்டு திரிவது சட்ட விரோதம் அல்ல என்றும் அதே உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது அய்யா.

ஆனாலும், youtube, சமூக வலைத்தளங்கள், இலங்கை அரசின் அழுத்தத்தினால், பிரபாகரன் படங்கள் வந்தால், அந்த சானலையே மூடி விடுவதால், நேரலை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. 

ஆகவே மேடையில் வைக்கவில்லை. பதிலாக, பக்கவாட்டில் பெரிதாக இருந்ததே.

அண்ணன் இப்படிச் சொல்கின்றாராம். தேர்தல் என்று வந்துவிட்டால் மாஸ் ரீச் வேணும் என்பது வாஸ்தவம்தான்!

மேடை பதாகையில் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள். இவ்வளவு கடினமான சூழலில் தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என சீமான் என்று குறிப்பிட்டுள்ளார்”

12 hours ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

இதயமும் காது பிரச்சினை என்றால் நல்ல வைத்தியர் பார்ப்பது  நல்லது   என் அன்பான வேண்டுகோள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

1) ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால்

2) இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

3) ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

4) நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள்.

5) அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்?

6)கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

1) சேறடிப்பதை தொழிலாகச் செய்பவர்களை விட இது எவ்வளவோ மேல் என்கிறேன். 

2) தமிழகத்தவனும் உங்களைப் போல என்னைப் போல அடையாளமற்று அலைய வேண்டும் என்பதில்தான் உங்களுக்குத் திருப்தியோ அல்லது நாத க வினரும் DMK ADMK DDMK or DADADADA DMk......... போன்று அரிசி ஒரு ரூபாய் பால் அரை அணா முட்டை இரண்டு பைசா என்கின்ற கணக்கில் இலவசங்களை கொடுக்க வேண்டும் அல்லது வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என்பதில்தான் சிக்கலோ (உங்களுக்கு)

😂

3) பருவத்தே பயிர் செய் என்பதன் அர்த்தமும் தனி மரம் தோப்பாகாது என்பதும் உண்ணாவிரதமிருக்கும் அம்மையாரின் பெயரை அறிந்த பலருக்கு தெரியாதோ. 

4) ""பாரதிய"." இலங்கையில் இருந்து செயற்பட ஆரம்பிக்கும் ஒரு அரசியல் கட்சியின் பெயர் இந்தியாவின் பெயரில் ஆரம்பிக்கிறது... 🤥

(கிருபனின் பார்வையில்..( 🤣).. மக்களின் அறிவை வளர்க்க... (😂)... மதச் சார்பில்லாத (🥴) விளையாட்டை ஊக்குவிக்க... (😩) ஓர் அரசியல் கட்சி ...

இதற்கெல்லாம் ஏன் அரசியற் கட்சி ஆரம்பிக்க வேண்டும் ? பேசாமல் ஒரு NGO அல்லது ஒரு விளையாட்டுக் களகமோ ஆரம்பித்தால் என்ன.. ? 

(கிருபன் நீங்கள் கூறுவதை தஞ்சை பெரிய கோவில் வாசலில் கல்வெட்டாக பதிந்துவிட்டால் பின்வரும் நம் சந்ததிகள் அதை வாசித்து வியந்து போற்றுவார்கள். வரலாறு முக்கியம் கிருபன்)

5) நாதக வினரும் ஒரு ஓரமாகவிருந்து தட்டை ஏந்த விடுவதில் உங்களுக்கு என்ன சிக்கல்.. 🤥

6) கிடைக்கிற செப்புக் காசில் நாதக யினருக்கும் ஏதாவது விழட்டிமே. குடியா முழுகிவிடும்.. 🤥

 

*** மலையகத் தமிழ் வர்த்தகரைக் கொண்டு, யாழ்ப்பாணத்தின் மையத்தில் நின்று, பாரதத்தின் பெயரில், மதச் சார்பில்லாத(🤣), விளையாட்டையும் கல்வியையும் ஊக்குவிக்க(🥴) ஒரு கட்சி, இந்தியன் Embassy யால் தொடங்கப்படுகிறது.***

இதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு கிருபன் குழந்தை அல்லவே 

😀

(பலர் BJP யின் இலங்கை வருகையை உள்ளூர வரவேற்கிறார்கள் என உணரக்கூடியதாக உள்ளது.. ம்ம்ம்ம்ம்.)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஊடகங்கள் சீமான் குறித்து பேசுகின்றன.

நல்ல ஒரு ஆய்வு.

 

இந்த ஆய்வாளர்களில் பலர், சும்மா அடிச்சு விடுவார்கள்.

திமுக 67ல் வந்தது எப்படி? 77ல் எம்ஜிஆர் வந்தது எங்கனம் என்று சொல்ல மாட்டார்கள்?

ரவீந்திரன் துரைசாமி எண்டு ஒருத்தர், சீமான் கட்சி படுக்கும் என்று பாராளுமனற தேர்தலின் முன்பு சொன்னார்.

4% எடுத்தபின்னர், நானே எதிர்பார்க்கவில்லை என்றார். 

தமிழகம், எப்போதுமே, கவர்ச்சியான தலைமைக்கு வாக்களிக்கும் என்பது பழைய கதை. இவர்கள் நினைக்கும் தமிழகம் இப்போது இல்லை. இணைய, சமூக தள  புரட்சி. அவனவன், அமெரிக்கா, ஐரோப்பா என்று ஓடி, ஓடி பணம் சம்பாதிக்கும் போது, பழைய திமுக சுத்துமாத்து தியரி வேலைக்காகாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 00:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

 

உண்மையில் எதற்காக  இக்கேள்வியை  வைத்தீர்கள் என்று  தெரியவில்லை

இங்கே  சீமான் மீது 

தலைவரை  வைத்து  பிழைக்கிறார்  என்ற  கருத்தை  கொண்டவராக  நீங்கள் இருந்தால்??

தலைவர் படத்தை இப்பொழுதாவது எடுத்தது உங்களுக்கு  திருப்தியாகவும்  ஆறுதலாகவும் தானே  இருக்கணும்???

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  கட்சியினர் வெல்ல வாழ்த்துக்கள்,  இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வெல்லவும் வாழ்த்துக்கள்    சொல்லிவைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால் இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள். அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்? கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சீமான்  கட்சியினர் வெல்ல வாழ்த்துக்கள்,  இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வெல்லவும் வாழ்த்துக்கள்    சொல்லிவைப்போம்

அந்த சீதா அம்மன் கோயில்.... நினைவிலே இருக்கட்டும்...😜

2 minutes ago, பையன்26 said:

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

உங்கண்ட பெரியப்பர், இதுக்கு பதிலை, வெட்டி, ஒட்ட, மின்னம்பலத்தில், தேடிக்கொண்டிருப்பார், பொறுங்கோ.  😜

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

அந்த சீதா அம்மன் கோயில்.... நினைவிலே இருக்கட்டும்...😜

ம்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கண்ட பெரியப்பர், இதுக்கு பதிலை, வெட்டி, ஒட்ட, மின்னம்பலத்தில், தேடிக்கொண்டிருப்பார், பொறுங்கோ.  😜

அது நீங்கள் பார்க்கும் நாலாந்தர யூடியூப் சனல்களையும் ரப்லொயிட் தளங்களையும் (இங்கிலீஷயும் சேர்த்துத்தான்) விட பரவாயில்லை😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

 

 

 

 

 

 

பாலா அண்ணையை தவற விட்டாச்சோ....? 

அப்போ விசில் அடித்தவர்களில் தவறில்லை, அடிக்க வைத்தவர்களில் தான் தவறு என்கிறீர்களா?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

பாலா அண்ணையை தவற விட்டாச்சோ....? 

அப்போ விசில் அடித்தவர்களில் தவறில்லை, அடிக்க வைத்தவர்களில் தான் தவறு என்கிறீர்களா?

பாலசிங்கத்தார் விசிலடிக்க வைத்த காலத்தில் புலிகளின் தலைமையும், தலைவரும் இருந்தார்கள். அவர் கொள்கை விளக்க உரைகள் மீது உன்னிப்பான கவனத்தைக் கொண்டுவர இடையிடையே விசிலடிக்க வைக்கக்கூடிய கதைகளைச் சொன்னார்.  2009 மாவீரர் தினத்தில் புலிகளின் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை. ஆனால் அன்றும் தலைவர் உரை வருமென்று கதையும் மண்டபத்திலும் உலவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் சீன்மான் திரையில் தோன்றி குஞ்சுகளை விசிலடிக்கச் செய்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

இதை இப்படி முடிக்க தானே மேலே எழுதிய வர்ணிப்புக்கள் அனைத்தும். முடிவுரையை தயார் செய்து அதற்கேற்ப முகவுரை எழுதுதல்??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதை இப்படி முடிக்க தானே மேலே எழுதிய வர்ணிப்புக்கள் அனைத்தும். முடிவுரையை தயார் செய்து அதற்கேற்ப முகவுரை எழுதுதல்??

நான் பலதடவை யாழில் சொல்லியதுதான். திரும்பவும் நினைவுபடுத்தவேண்டியிருக்கின்றது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தாங்களும் போராளிகள் என்று நினைத்து லெப்டினன்ட் கேர்ணல் மதிப்பு வேணும் என்பவர்களையும் சட்டை செய்வதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.