Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் பொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

 

 

 

On 22/3/2021 at 17:22, nunavilan said:

 

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

 

 

 

இணைப்புக்கு மிக்க நன்றி நுணா. மிக காத்திரமான அரசியல் நிகழ்வு. எமது இளையோரின் அரசியல் அறிவு வியக்க வைக்கிறது. கற்பனா வாத‍த்தில் இருந்து வெளியே வந்து நடைமுறை சாத்தியமான வகையில் அரசியல் தெளிவு இளையோரின் கேள்விகளில்  வெளிப்பபடுகிறது. 1980 களில் இவ்வாறான தெளிவாக சிந்திக்கும் இளையோர் இருந்திருந்தால் எமது நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் பட்டறிவின் அடிப்படையில் இளையோர் அரசியல் தெளிவை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல அனைத்து  பல்வேறு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு இவ்வாறாக சிந்தனை வளம் கொண்டு இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்வாங்கபடுவது எமது அரசியலுக்கு வலுச்சேர்க்கும். அத்துடன் இவ்வாறான கலந்துரையாடல் கேள்வி பதில்கள் அடிக்கடி நடத்தப்படல் வேண்டும்.  தமிழ் அரசியல் அறிவு சார் அரசிலாக எதிர்காலத்தில் மாற்றம் பெற  இவ்வாறான இளையோரின் வருகை அவசியம். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு சுமந்திரன், திரு சாணக்கியன் ஆகியோர் வழங்கிய பதிலையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  இளையோரின் கேள்விகளை எதிர் கொண்டு பதில் வழங்கிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்களே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துல்பன். நான் நினைத்தேன் பத்தோடு பதினொன்றாக இப்பதிவு போய் விடும் என்று.  

துல்பனின் பதிலைப் பார்த்த பின் நான் அரைவாசி வரைக்கும் பார்த்து விட்டேன்.

உண்மையில் யாழ் இளைஞர்களின் கேள்விகளும் பார்வைகளும் ஆரோக்கியமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளன.

பகிர்வுக்கு நன்றி நுணா. ருல்பனுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பால் அடித்தது மாதிரி இளைஞர்களின் கேள்வி.

நான் அரசியல்வாதியாக இருந்தால் மெதுவாக மேடையை விட்டு போயிருப்பேன்.

இணைப்புக்கு நன்றி நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அரசியல்வாதிகளின் பதில் எப்ப தான் வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

இளையவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள் சுமத்திரனும் சாணக்யனும்  பதில் சொல்லும் ஒளிநாடா  உள்ளதா நுணாவிலான் ? இருந்தால் அதையும் இணைத்து விடுங்களேன் நன்றி .

எங்களின்  வலியும்  ரெத்த  சகதியும்  எங்களோடு போகட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இளையவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள் சுமத்திரனும் சாணக்யனும்  பதில் சொல்லும் ஒளிநாடா  உள்ளதா நுணாவிலான் ? இருந்தால் அதையும் இணைத்து விடுங்களேன் நன்றி .

எங்களின்  வலியும்  ரெத்த  சகதியும்  எங்களோடு போகட்டும் .

அமைதி அமைதி தேடிக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைதி அமைதி தேடிக் கொண்டிருக்கிறார்.

இதில் பேசியவர்  20000 பேர் சுமத்திரனை  நிராகரித்து உள்ளனர் எனும் போது  ஐயா சுமத்திரன்  முகத்தை வீடியோ காரர் காட்டவில்லை எனும் பெரும் குறை எனக்குண்டு 😁அந்த 30 ஆயிரமும்  நேர்மையான வழியில் வந்தா வென்றார் ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  இளைஞர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், புலம்பெயர் இளைஞர்கள் போல்  வன்முறையை கையில் எடுக்காமல் கேக்க வேண்டிய கேள்விகளை சுமந்திரன், சாணக்கியன் முகத்துக்கு நேர் கேட்டதுக்கு. மேலும் இப்படடிப்பட்ட கந்துரையாடல்கள் மற்றைய அரசியல்வாதிகளுடனும் (பொன்னம்பலம்,  விக்கினேஸ்வரன்)நடத்தப்படவேண்டும்.
 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இதில் பேசியவர்  20000 பேர் சுமத்திரனை  நிராகரித்து உள்ளனர் எனும் போது  ஐயா சுமத்திரன்  முகத்தை வீடியோ காரர் காட்டவில்லை எனும் பெரும் குறை எனக்குண்டு

எனக்கும் தான்.
ஆனாலும் கற்பனையில் காண வேண்டியது தான்.
இவைகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்லி சமாளிக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

1980 களில் இவ்வாறான தெளிவாக சிந்திக்கும் இளையோர் இருந்திருந்தால் எமது நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.

அன்றைய அரசியல்/அடக்குமுறை கால கட்டத்தின் படி....... அன்றைய கால இளைஞர்களுக்கு அவர்கள் எடுத்த முடிவு சரியாகத்தான் இருந்தது.
இன்றைய அரசியல் நிலைகளும் மக்கள் மனப்பான்மையும் வேறுபட்டவை.உலக அரசியலும் மாறி விட்டது.

மாறாக தனியே தமிழினம் சார்ந்து இருக்கும் அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்வி அரங்கங்களை போல்  சிங்கள இனம் சார்ந்த அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கும் அரங்கங்களையும்  ஏற்படுத்த வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளின் பின்னால் நிற்பதை பெருமையாக நினைக்கும் தமிழ் அரசியல் வாதிகளையும் கேள்விகேட்கும் அரங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் பதிலுரை 
https://fb.watch/4sOlEkWwjC/

சாணக்கியனின் பதிலுரை

https://fb.watch/4sOnYMP_we/

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அன்றைய அரசியல்/அடக்குமுறை கால கட்டத்தின் படி....... அன்றைய கால இளைஞர்களுக்கு அவர்கள் எடுத்த முடிவு சரியாகத்தான் இருந்தது.
இன்றைய அரசியல் நிலைகளும் மக்கள் மனப்பான்மையும் வேறுபட்டவை.உலக அரசியலும் மாறி விட்டது.

மாறாக தனியே தமிழினம் சார்ந்து இருக்கும் அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்வி அரங்கங்களை போல்  சிங்கள இனம் சார்ந்த அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கும் அரங்கங்களையும்  ஏற்படுத்த வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளின் பின்னால் நிற்பதை பெருமையாக நினைக்கும் தமிழ் அரசியல் வாதிகளையும் கேள்விகேட்கும் அரங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

திரிக்கு திரி புளித்த வாய்ப்பன் மாவை வைத்து இழுத்து கொண்டு இருப்பதுக்கெல்லாம் பதில் எழுதி 
நேரத்தை விரயம் செய்யலாகாது. அன்றைய இளைஞர்களின் அறிவும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் 
ஒருவேளை இவர்கள் இப்போ சிங்களத்தில்தான் பேசிக்கொண்டு இருந்து இருப்பார்கள். 


கேள்விகளை கேட்பதால் என்ன பயன்?
எதையாவது நடைமுறை படுத்துகிறார்களா? என்பதுதான் முதல் கேள்வி 
சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதையாவது செய்ய முடிகிறதா?
இப்போதைய உலகமயமாதல் எவ்வளவோ சாத்தியமான கதவுகளை திறந்து விட்டு இருக்கிறது 
அங்கெல்லாம் நாம் தட்டுகிறோமா? என்பதுதான் இரண்டாவது கேள்வி 
உள்ளூர் பொருளாதார விருத்தியில் ஏதாவது எதிர்கால சிந்தனையுடன் செயல்படுகிறார்களா?

30 வருட சிங்கள பேரினவாததின் பொருளாதார தடைக்குள் 
ஒரு பட்டினி சாவு நிகழ்ந்ததா? 

இன்று உணவுக்கு அல்லல்படும் மக்கள் படங்கள் முகநூலை அலங்கரித்து நிற்கிறதே 
உள்ளூரில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

திரிக்கு திரி புளித்த வாய்ப்பன் மாவை வைத்து இழுத்து கொண்டு இருப்பதுக்கெல்லாம் பதில் எழுதி 
நேரத்தை விரயம் செய்யலாகாது. அன்றைய இளைஞர்களின் அறிவும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் 
ஒருவேளை இவர்கள் இப்போ சிங்களத்தில்தான் பேசிக்கொண்டு இருந்து இருப்பார்கள். 


கேள்விகளை கேட்பதால் என்ன பயன்?
எதையாவது நடைமுறை படுத்துகிறார்களா? என்பதுதான் முதல் கேள்வி 
சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதையாவது செய்ய முடிகிறதா?
இப்போதைய உலகமயமாதல் எவ்வளவோ சாத்தியமான கதவுகளை திறந்து விட்டு இருக்கிறது 
அங்கெல்லாம் நாம் தட்டுகிறோமா? என்பதுதான் இரண்டாவது கேள்வி 
உள்ளூர் பொருளாதார விருத்தியில் ஏதாவது எதிர்கால சிந்தனையுடன் செயல்படுகிறார்களா?

30 வருட சிங்கள பேரினவாததின் பொருளாதார தடைக்குள் 
ஒரு பட்டினி சாவு நிகழ்ந்ததா? 

இன்று உணவுக்கு அல்லல்படும் மக்கள் படங்கள் முகநூலை அலங்கரித்து நிற்கிறதே 
உள்ளூரில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? 

ஆமாம் ஆமாம்

தற்போதைய இளைஞர்களுக்கு மூளை வெளியே தெரிகிறது 

அந்தக்காலத்தில் எல்லோருக்கும் மூளை கருதிப் போயிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

ஆமாம் ஆமாம்

தற்போதைய இளைஞர்களுக்கு மூளை வெளியே தெரிகிறது 

அந்தக்காலத்தில் எல்லோருக்கும் மூளை கருதிப் போயிருந்தது.


இவர்களிடம் இந்த கேள்விகள் வருவதுக்கு  அடித்தளம் என்ன?
இது கூட புரியாதவர்களுடன் பேசுவதில் நேரம் மட்டுமே வீண் 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:


இவர்களிடம் இந்த கேள்விகள் வருவதுக்கு  அடித்தளம் என்ன?
இது கூட புரியாதவர்களுடன் பேசுவதில் நேரம் மட்டுமே வீண் 

அது வரலாற்றோடு நடந்தவர் பேசுவது

வானத்தில் இருந்து குதித்த குடும்பிகளுக்கு அது புரிய வாய்ப்பில்லை ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

18 hours ago, nunavilan said:

 

 

நன்றி நுணா. மிக சிறந்த கலந்துரையாடல். சிறப்பாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்ததியை ஒட்டுமொத்தமாக மூடர்கள், சிந்தனையற்றவர்கள் என்று மிக எளிதாக ஒருவரால் சொல்லிவிட்டுச் செல்ல முடிகிறது. மிகவும் கண்டிக்கத்தக்க கருத்து.

அந்தக் காலத்தில் (70 களின் இறுதியிலிருந்து) தமிழர்கள் போராடுவதற்கான காரணங்களும், தேவைகளும் இன்று அதனைக் காட்டிலும் பன்மடங்காக விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன என்பது கருத்திட்டவரால் மிகச் சுலபமாக மறைக்கப்பட்டு, அதே சந்ததியை மீண்டும் தனது புலியெதிர்ப்பு விசத்தினை "அறிவற்ற சமூகம்" எனும் வெல்லத்தினால் தடவி வெளியே விற்க முயல்வதாகவே இந்தத் திரியில் அவரால் முன்னெடுக்கப்படும் வாதத்தினையும் நோக்குகிறேன்.

இவையெல்லாமே, புலிகள் போராடியிருக்காவிட்டால் தமிழருக்கான நீதியும், உரிமைகளும் தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும், எல்லாவற்றினையும் போராடிக் கெடுத்துவிட்டார்கள் எனும் மனதின் அடிப்படை வஞ்சினத்திலிருந்து வருவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

உதாரணத்திற்கு இன்றுவரை தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பிற்கு,  "சிங்களம் தானாகத் தந்திருக்கும்" என்று கூறுபவர்களின் பதிலென்ன? பாரம்பரிய தமிழரின் வாழ்வாதார மேய்ச்சல் நிலங்களாகட்டும், அவர்களின் சரித்திர வணக்கத்தலங்களாகட்டும் இன்று சிங்களத்தினால் தொல்லியல் அமைச்சினால் சிங்களமயமாக்கப்படுவதுபற்றி இவர்களின் கருத்தென்ன? இலங்கை என்பது பெளத்த சிங்கள நாடு என்று சிங்களப் பேரினவாதம் தற்போது நிரந்தரமாகவே நிறுவிவருவதற்கான இவர்களின் எதிர்வினையென்ன? எதுவுமேயில்லை. ஆனால், இவையெல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமே அறிவற்ற சமூகமும் அவர்களைக் கொண்டு போராடிய புலிகளும் தான் என்பது அவர்களின் வாதமாக எப்போதும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தலைமுறை அரசியல் அறிவுபெறுவது அவசியம். ஆனால், அது சரணாகதியடையும் அரசியல் அல்ல, மாறாக மறுக்கப்பட்ட தமது உரிமைகளை, ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கும் தமது தாயகத்தை, இனக்கொலை செய்யப்பட்ட தமது இனத்தை இன்றிருக்கும் பத்தாம்பசலித்தனமான நூற்றாண்டுப் பழமைவாத "சாணக்கிய" அரசியலை தூக்கியெறிந்து புதிதாகப் படைக்கும் அரசியலைக் கொண்டு மீட்டெடுப்பதுதான். 

 

Edited by ரஞ்சித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.