Jump to content

என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, யாயினி said:

தடி வேண்டும் என்றால் பார்சலில் அனுப்பி விடுறன்..பூவரசு கிடையாது..😊🤭

மூங்கில் ஓகே

16 hours ago, suvy said:

Top 30 The Fisherman GIFs | Find the best GIF on Gfycat

தூண்டிலா போடுறீங்கள்.......நான் நழுவிடுவேன்......யாரிட்ட ........!   😎

அப்ப மனைவிக்கு உதவுவது கேவலம் என்று எண்ணுகிறீர்கள் ???

18 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படித் தான் கரணமடித்தாலும் பெண்களைப் போல வீட்டுவேலைகள் பொறுமையாக செய்ய முடியாது.
 

வெட்கப்பட்டுக் கதையை மாத்தாமல் வெட்டுறது உரிக்கிறதுகளைச் சொல்லுங்கோ அண்ணா

16 hours ago, சுவைப்பிரியன் said:

இது பேசாப் பொருள் பகுதியில் வர வேண்டியது.😂

அப்ப அங்காலை மாத்தினால்த்தான் எழுதுவியளோ???

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

paavam.jpg

ஒவ்வொரு மங்கையருக்கும் வந்து வாய்க்கும்  மன்னவர்கள் எப்படி எப்படி இருக்க வேண்டும்?  எந்த விடயங்களில் உதவி ஒத்தாசையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? வேலைக்கு செல்லும் பெண்கள். வேலைக்கு செல்லாத பெண்கள். வேலைக்கு செல்லும் ஆண்கள். வேலைக்கு செல்லாத ஆண்கள்  அல்லது இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒரு சிறு பட்டியல் இட முடியுமா? 😁

உது பெரிய வேலையே.

வேலைவெட்டிக்குப் போகாமல் இருக்கக் கூடாது.

நல்ல சம்பளத்துக்கு வேலை செய்யவேண்டும். 

பார்க்க நாலு பெண்கள் சைட் அடிக்கும்படி இருக்கக்கூடாது

அவரும் மற்றவரைப் பார்த்து லொள்ளு விடுபவராக இருக்கக் கூடாது.

சுவையான தேநீர் தயாரிக்கத் தெரியவேணும்.

கஞ்சப் பிசினாரியாக இல்லாமல் நாம் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கித் தராவிட்டாலும் வாங்க ஆசைப்பட்டதைத் தடுக்காது இருக்கவேண்டும்.

அதை உண்ணாதே இதை உண்ணாதே என்று கடுப்பைக் கிளப்பக் கூடாது.

வாரம் ஒருநாளாவது முழு வேலைகளையும் அவர் செய்யவேண்டும்.

சும்மா இருக்கிறாய் என்னும் வசனத்தை மறந்தும் பாவிக்கக் கூடாது.

வீட்டில இருந்து என்ன வெட்டி முறிக்கிறாய் என்று சொல்லவே கூடாது.

கணக்குவளக்கெல்லாம் ஒழுங்கக்காக காட்ட வேணும்.

எமக்குத் தெரியாமல் தன் பேரில தனியா பணம் சேர்த்து வைக்கவே கூடாது.

வீணாச் செலவழிக்கிறாய் என்ற கதையே கதைக்கக்கூடாது.

மற்றப்படி ஓகே

 

 

 

 

 

16 hours ago, புங்கையூரன் said:

அத்தாரை நினைக்கத் தான் எனக்கு அழுகை...அழுகையா வருகுது....!😆

ம் .. நல்லா அழுவியள். அழுகிற சாட்டில எழுதாமல் போகாமல் என்ன உதவி செய்யிறது எண்டு எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நான் போட்ட இந்தப் படத்தை நிர்வாகம் நீங்கியது????

paavam.jpg

 

15 hours ago, குமாரசாமி said:

என்ன கதை இது? கொத்தார் என்ன குறை வைச்சவர் எண்டு கேக்கிறன்? போன கிழமையும் பிரியாணி செய்து குடுத்தவர். பூ தொட்டி செய்து குடுத்தவர். கமராவிலை சமையல் படம் எடுக்க தடியிலை ஸ்ரான்ட் செய்து குடுத்தவர்.😂

மிச்ச வீட்டு வேலையும் கொத்தார் தான் செய்யிறார் எண்டு இஞ்சாலை ஒரு கதை கசியுது🤣

நான் என் அத்தாரைப் பற்றிச் சொல்லவில்லை. மற்றவையைத்தான் சொல்லுறன்,கேட்கிறன்.😎

14 hours ago, Kandiah57 said:

நானும் பல வருடங்களுககுமுன் வெங்காயம் உரிந்துக்கொருத்தேன் ....நான் உரிந்தது சரியில்லையென  மனிசி. ஒரு தோலை மேலதிகமாக உரிநது குப்பையில்போட்டார். . நானும் அப்படியே இன்னெரு தோலை உரிந்த

உரித்து  குப்பையில் போட்டேன் ......இப்படியாக....முழு வெங்காயமும்.  குப்பையில் போட்டுது.....அதன்பின்.  தனித்தனி சமையல் தான்.  

 

சிரித்து முடியவில்லை 😂🤣

12 hours ago, சாமானியன் said:

காலையில ஒவ்வொரு நாளும் பெட் காஃபி போட்டுக் குடுத்தியளெண்டால் , மிச்ச வேலையெல்லாம் அப்பிடி சுண்டி சுண்டி நடக்கும் - 😀

ஆருக்கு எண்டு சொல்லவேயில்லை 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

அக்காவுக்கு தெரியாது அல்லது மறந்து விட்டா போல் உள்ளது ஆரம்பத்தில் வந்தவர்கள் சமையல் முறைவைத்து சமைத்தவர்கள்  நாங்கள் அதே போல் கிழமையில் ஒரு நாள் வீடு கிளீனிங் நடக்கும் . இப்பகூட வீட்டில் நின்றால்  பழைய நினைவுகளை மறக்காமல் உண்டன  தூளை போட்டு பக்கத்து வீட்டு  வெள்ளையை அழவைப்பது உண்டு .இங்கு என்ன ஊர் போல்  புனல் வைத்து ஊதியா  சமைப்பது ? தேங்காய் திருவும்  வேலைகிடையாது சின்ன வெங்காயம் உடைக்க தேவையில்லை எல்லாம் பெரிய வெங்காயம் ஊரில் காலையில் 9 பத்துக்கே  மதிய சமையல் தொடங்கிவிடும் பகிடி நாலைந்து பேர் ஊர்கதை  உலககதை எல்லாம் கதைத்து ஒவ்வொரு நேரம் விதம் விதமாய் வாசம் வேறு வரும் இப்படி ஒரு பெரிய வேலையாய் செய்து முடிப்பார்கள் .

இங்கு அப்படியா ?ஒருமணிநேரத்தில் மூன்று கறி  ரைஸ் ரெடியாகும் .இந்த நாட்டில் வந்து சமையல் கஷ்ட்டம் என்பவர்களை ஊரில் புனலுடன் மழை பட்ட விறகை கொடுத்து சமைக்க  சொல்லணும் அப்ப தெரியும் .

சமையல் மட்டும்தான் வேலையா?? அப்பா நீங்கள் சமையலைத் தவிர ஒன்றும் செய்யவில்லைப் போல. கிளீனிங் என்றால் குளியலறை, குஷினி எல்லாம் செய்வதுண்டா ??? தேங்காய்ப் பூவும் பாவிப்பதில்லையோ ????

9 hours ago, Nathamuni said:

அப்ப, படுக்கை.... ஒண்டோ.... தனித்தனியோ?🤭

அதுபற்றி இதில கேட்கக் கூடாது 🤫

4 hours ago, சாமானியன் said:

சமையலைப் பற்றி கதைக்க கை  துரு துறுக்குது…

 நண்பனொருவன் கேட்டு விட்டான் இராச்  சாப்பாடு தோசை என்கும்  போது அது ரொட்டி இல்லை என்று நிச்சயம் தெரியுமா என்று ……….

 அதற்கு பதில் தான் இது  …….

 

ஆறு நாட்களுக்கு முன்னர் அரைத்து - இரவு முழுவதும்

23deg செல்ஷியஸில் பொங்க  வைத்து

குளிர்ப்பெட்டியினுள் நுரை ததும்ப

காத்திருந்த தோசை மா ..

 

கேரட்டையும் வெங்காயத்தையும் பொடிசாக  நறுக்கி

 வீட்டு கடை கோடியில் ஆய்ந்த பிஞ்சு மிளகாய் தூவி

 சற்றே சோயா Sauceம்  கிங்ஸ் தூளும்

 எள்ளுப்பன் நல்லெண்ணெயும் கலந்த  மசாலா ..

 

இரண்டு ஊர் முட்டையை தட்டி விட்டு

ஒரு பின்ச் Mt Everest உப்பும் சேர்த்து

ஒரு கரண்டி  நற்  பசும் பாலும் கலந்து

நன்கு நுரை ததும்ப அடித்த முட்டை …

 

காஸ் அடுப்பில் அளவான சூட்டில் தோசை மா வார்த்து

மேலே நுரை பொங்கும் முட்டையை ஊற்றி

மசாலா கலவையை அடங்கலாக பரவி

மறுபக்கம் பிரட்டி போட  வந்தது தான் இரா சாப்பாடு ..

 

துரையவர்கள் இன்று கேட்கிறார்

ரொட்டியா தோசையா என்று

வெங்காயம் உடைத்தீரா அல்லது மறு தோசை வார்க்க முன்னர்

தோசை தட்டில் தண்ணீர் தெளித்தீரா …

 

தப்பி விட்டீர்கள்  துரை அவர்களே

கேட்டிருக்க  வேண்டும் இந்த  கேள்வியை நீங்கள் வேறிடத்தில்

வந்து பாருங்கள் துரை அவர்களே பிரிஸ்பேனுக்கு

உண்மை தோசை என்பது என்னவென்று அறிவீர்கள் நீங்கள் ..

முகநூலில் சுட்டதா????

1 hour ago, உடையார் said:

சுமே இங்கு தூண்டில் போடுகின்றார் நாங்கள் வீட்டில் என்ன வேலை செய்கிறோமென தெரிந்து அத்தாருக்கு காட்டி, அத்தாரை படாத படுபடுத்த😎

அத்தார் சும்மா வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருந்தால் செத்தார். நல்ல காலம் ஒழுங்காக வேலை செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

அது ஒரு கனா  காலம் சமைத்து  முடிய ஒரு குளியல் ஒன்று போட்டு விட்டு வந்து பார்த்தால் திடீர் விருந்தினர்கள் வந்து கறி  இருக்காது பிறகென்ன அந்த கறி சட்டிக்குள்ளே  முட்டையை வெங்காயம் பச்சை மிளகாயுடன் அடித்து ஊத்தி இருக்கிறதுகளை ஒரு பிரட்டு பிரட்டி அப்படியே சட்டிக்குள் இருக்கிற  ரைஸ்  மேலும் பாண் துண்டுகள் எல்லாத்தையும் போட்டு பகிர்ந்து உண்டோம் அந்த சுவையை இடையிடையே தேடுவது உண்டு தற்போதும் .

பகிடி என்னவெண்டால் ஊரிலை சமையலறை வீட்டில் எந்த திசையில் இருக்குது எண்டு தெரியாத ஆட்கள் இங்கு யூடியூபில் சமையல் குறிப்பு கொடுப்பது கொடுமையிலும் கொடுமை .சுமே அக்காவை சொல்லவில்லை சண்டைக்கு வரக்கூடாது . சமையல் குறிப்பு கொடுக்கும்போது புத்தகத்தை பார்த்து சொல்லினமா அல்லது அனுபவத்தில் சொல்கினமா  என்று தெரிந்து விடும் .

பெருமாள் அந்தக் காலங்களில் எத்தனை பேர் இருந்தும் தனித்தனி இயக்கங்களும் இருந்தும் எல்லோரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.
போட்டி பொறாமை எல்லாம் அதன் பிறகே முளைத்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில கொலரை தூக்கி விட ஒன்றுமில்லை

வீட்டுக்கு வீடு வாசற்படி.

வந்த புதிதில் குறிப்பிட்ட ஒரு மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கூடிய சமையல்காரன் நான்.

ஆனால் அந்த வெறுப்போ என்னவோ குசினிப் பக்கம் போனதில்லை.

அதேபோல் துவைக்கும் மிசினை போடக்கூட தெரியாது.

அதற்கு காரணம் நான் இன்றும் 7 நாளும் குறைந்தது 15 மணித்தியாலங்கள் வெளியே வேலை செய்பவன்.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து வரும் நிலையில் என்னால் முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து வருகின்றேன் 

காரணம் எனது இந்த பழக்கம் அவர்களை பற்றி விடக்கூடாது. ஏனெனில் அவர்களது வாழ்க்கை என் போன்று இருக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சமையலறையில் சந்தோசம் இல்லை என்றால்

படுக்கை அறையிலும் அது பிரதிபலிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சமையல் மட்டும்தான் வேலையா?? அப்பா நீங்கள் சமையலைத் தவிர ஒன்றும் செய்யவில்லைப் போல. கிளீனிங் என்றால் குளியலறை, குஷினி எல்லாம் செய்வதுண்டா ??? தேங்காய்ப் பூவும் பாவிப்பதில்லையோ ????

உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?

அருமையான தேங்காய்ப்பூ பிரீசர் பண்ணி வாறதாலை, இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடாகி, வேறு என்ன எண்ணெய் பாவிக்கலாம் எண்டு அரசு ஆய்வு செய்யுது.

நாடு விட்டு ஓடினால், மீனும், கிழங்குப் பொரியலும் அடிச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

எங்கட பறிக்கிளையோ கைய போடுறது எண்டு, புஞ்சி பண்டாவும், கந்தையரும், மொஹமட்டும் புறுபுறுக்கினம்.

அக்கா வேறை, சின்ன வெங்காயம் உரிச்சு வெட்ட வேணுமாம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

சமையலறையில் சந்தோசம் இல்லை என்றால்

படுக்கை அறையிலும் அது பிரதிபலிக்கும்.

அடிபட்டு  துவண்டு தவண்டு போன காய். அனுபவம் பெரிசு ராசா..😁 👍🏽
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அடிபட்டு  துவண்டு தவண்டு போன காய். அனுபவம் பெரிசு ராசா..😁 👍🏽
 

நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதில கொலரை தூக்கி விட ஒன்றுமில்லை

வீட்டுக்கு வீடு வாசற்படி.

வந்த புதிதில் குறிப்பிட்ட ஒரு மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கூடிய சமையல்காரன் நான்.

ஆனால் அந்த வெறுப்போ என்னவோ குசினிப் பக்கம் போனதில்லை.

அதேபோல் துவைக்கும் மிசினை போடக்கூட தெரியாது.

அதற்கு காரணம் நான் இன்றும் 7 நாளும் குறைந்தது 15 மணித்தியாலங்கள் வெளியே வேலை செய்பவன்.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து வரும் நிலையில் என்னால் முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து வருகின்றேன் 

காரணம் எனது இந்த பழக்கம் அவர்களை பற்றி விடக்கூடாது. ஏனெனில் அவர்களது வாழ்க்கை என் போன்று இருக்கப்போவதில்லை.

நல்ல காரியம் அண்ணா. குடும்பத்தில் உள்ளவர்களைப்பார்த்துப் பழக்குவதுதானே பிள்ளைகள் குணம்.

4 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?

யார் எப்பிடித் திருவி எப்பிடி பக் பண்ணுகிறார்களோ??? இருமுறை வாங்க்கிப் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதன்பின் பத்துத் தேங்காயை வாங்கிவந்து மனிசன் துருவித் தருவார். பொலித்தீன் பையில் அளவாகப் போட்டுக் கட்டி வைப்பேன். tin கூட கெமிக்கல் என்று பவுடர் தான் கறிக்கும் அப்பத்துக்கும் பயன்படுத்துவது.

தேங்காய் திருவும் மிஷின் தான் தேடித் திரியிறன். எனக்காவது இருந்தால் கூறுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அருமையான தேங்காய்ப்பூ பிரீசர் பண்ணி வாறதாலை, இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடாகி, வேறு என்ன எண்ணெய் பாவிக்கலாம் எண்டு அரசு ஆய்வு செய்யுது.

நாடு விட்டு ஓடினால், மீனும், கிழங்குப் பொரியலும் அடிச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

எங்கட பறிக்கிளையோ கைய போடுறது எண்டு, புஞ்சி பண்டாவும், கந்தையரும், மொஹமட்டும் புறுபுறுக்கினம்.

அக்கா வேறை, சின்ன வெங்காயம் உரிச்சு வெட்ட வேணுமாம்.:grin:

சின்ன வெங்காயம் போட்டால் சுவையே தனிதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தேங்காய் திருவும் மிஷின் தான் தேடித் திரியிறன். எனக்காவது இருந்தால் கூறுங்கள். 

ஏற்கனவே வீட்டிலே ஒன்றை வைத்து (அத்தாரை பாவப்பட்ட மனிசன்)கொண்டு இருக்கிறியள்.😁 

குசினியில் வேலை செய்யாட்டி யாழில் எழுதி போட்டிடுவா  என்று அந்த மனிசன்  உள்ளுக்குள் அழுது  கொண்டு இருப்பது ஆண்கள்க்குத்தான் கேட்க்கும் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2021 at 16:58, Maruthankerny said:

போட்டு பாருங்க வாக்கை 
அப்புறம் பாருங்க நாட்டை 

கட்டி தாருங்கள் ஒரு பெண்ணை 
அப்புறம் பாருங்கள் லிஸ்டை 

இவர் சட்டப்படி மனைவியுடன்  வாழ்கிறார்.

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுக்கும் உங்கள் குறிப்பையும் ஒரு முழுப்படத்தையும் அனுப்பிவிடுங்கள்.

எற்கனவே. மனைவியுடன். இருப்பவார்களும்.  குறிபபும். படமும். அனுப்பமுடியுமா?

Link to comment
Share on other sites

எனக்கென்னவோ அதிகமான வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் போல் தெரிகிறது. காரணம் என் சமையல் பதிவுகளை பார்த்து அது சம்மந்தமான நுட்பங்களை அழகாக எனக்கு சொல்லி கொடுத்தவர்கள் களத்தில் உள்ள ஆண்கள்தான். எங்கள் வீட்டில் என் அப்பாவில் தொடங்கி கணவர் வரை சமைக்கத் தெரிந்தவர்களே... எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

எனக்கென்னவோ அதிகமான வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் போல் தெரிகிறது. காரணம் என் சமையல் பதிவுகளை பார்த்து அது சம்மந்தமான நுட்பங்களை அழகாக எனக்கு சொல்லி கொடுத்தவர்கள் களத்தில் உள்ள ஆண்கள்தான். எங்கள் வீட்டில் என் அப்பாவில் தொடங்கி கணவர் வரை சமைக்கத் தெரிந்தவர்களே... எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

இது  பலருக்கு தெரிவதில்லை...புரிவதில்லை...அப்படித் தெரிந்து...புரிந்தாலும். வாய்விட்டு  சொல்வதில்லை  பாராட்டுவதுமிலலை...உண்மையில்..உங்கள்  கணவர. அதிஷ்டசாலி.    நன்றி பல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nige said:

எனக்கென்னவோ அதிகமான வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் போல் தெரிகிறது. காரணம் என் சமையல் பதிவுகளை பார்த்து அது சம்மந்தமான நுட்பங்களை அழகாக எனக்கு சொல்லி கொடுத்தவர்கள் களத்தில் உள்ள ஆண்கள்தான். எங்கள் வீட்டில் என் அப்பாவில் தொடங்கி கணவர் வரை சமைக்கத் தெரிந்தவர்களே... எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

நன்றி nige ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என் அம்மா அப்பாவோடு வாழ்ந்த காலங்களில் அம்மாவுக்கு என்னென்ன உதவிகளைச் செய்தனோ.. அவற்றை என் துணைவிக்கும் பாகுபாடின்றி.. எனக்கு வேளைகள் வாய்க்கும் போதெல்லாம்... செய்கிறேன்.

இதில் துணைவிக்கு என்று விசேடமாக உதவிகள் செய்யனும் என்ற பொருள்பட எழுதப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 22:13, Kandiah57 said:

இவர் சட்டப்படி மனைவியுடன்  வாழ்கிறார்.

எற்கனவே. மனைவியுடன். இருப்பவார்களும்.  குறிபபும். படமும். அனுப்பமுடியுமா?

மருதங்கேணியா ???? அப்ப எங்களுக்கு பொய்யா சொன்னவர்????

மனைவியுடன் இருப்பவரும் குறிப்பு அனுப்பலாம். ஆனால் மனைவியின் குறிப்பும் சேர்த்து அனுப்பவேணும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 03:01, nige said:

எனக்கென்னவோ அதிகமான வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் போல் தெரிகிறது. காரணம் என் சமையல் பதிவுகளை பார்த்து அது சம்மந்தமான நுட்பங்களை அழகாக எனக்கு சொல்லி கொடுத்தவர்கள் களத்தில் உள்ள ஆண்கள்தான். எங்கள் வீட்டில் என் அப்பாவில் தொடங்கி கணவர் வரை சமைக்கத் தெரிந்தவர்களே... எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

என் கணவர் புரியாணி, மீன் பொரியல் மட்டும் நன்றாகச் செய்வார். மற்றப்படி வீட்டில் பல வேலைகளுக்கும் உதவுவார். ஆனால் தேநீர் மட்டும் கட்டாயம் நான்தான் ஊற்றிக் கொடுக்க வேண்டும் காலையில். எல்லா ஆண்களும் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை நிகே.

On 4/4/2021 at 07:55, Kandiah57 said:

இது  பலருக்கு தெரிவதில்லை...புரிவதில்லை...அப்படித் தெரிந்து...புரிந்தாலும். வாய்விட்டு  சொல்வதில்லை  பாராட்டுவதுமிலலை...உண்மையில்..உங்கள்  கணவர. அதிஷ்டசாலி.    நன்றி பல...

நீங்கக்கள் கூறுவ தைப் பார்த்தால் எல்லா ஆண்களும் வாய்விட்டுப் பாராட்டுபவர்கள் என்பதுபோல் இருக்கே. பலரும் கடமைக்கு இன்னுமே வாழந்துகொண்டிருக்கிறார்கள்.

On 4/4/2021 at 19:31, nedukkalapoovan said:

நான் என் அம்மா அப்பாவோடு வாழ்ந்த காலங்களில் அம்மாவுக்கு என்னென்ன உதவிகளைச் செய்தனோ.. அவற்றை என் துணைவிக்கும் பாகுபாடின்றி.. எனக்கு வேளைகள் வாய்க்கும் போதெல்லாம்... செய்கிறேன்.

இதில் துணைவிக்கு என்று விசேடமாக உதவிகள் செய்யனும் என்ற பொருள்பட எழுதப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

எல்லோரும் மேலோட்டம்மாக நானும் செய்கிறேன் என்கிறீர்கள். மனைவி செய்யும் வேலையையும் நீங்கள் செய்யும் வேலையையும் பட்டியலிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் புரியும். பல்கிப் பெருக்கிக் குடும்பம் பெரிதாக்கி பிள்ளைகள் வளரவளர வேலைகளும் அதிகரிக்கும் பெண்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கக்கள் கூறுவ தைப் பார்த்தால் எல்லா ஆண்களும் வாய்விட்டுப் பாராட்டுபவர்கள் என்பதுபோல் இருக்கே. பலரும் கடமைக்கு இன்னுமே வாழந்துகொண்டிருக்கிறார்கள்.

மன்னிக்கவும். சுமே.   நீங்கள். பிழையாக  விளக்கிவிடடீர்கள்....இங்கே.  njge.  .தனது  கணவரைப்  பாராட்டிகிறார்...(கணவன் குசினியில் உதவியதை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

மன்னிக்கவும். சுமே.   நீங்கள். பிழையாக  விளக்கிவிடடீர்கள்....இங்கே.  njge.  .தனது  கணவரைப்  பாராட்டிகிறார்...(கணவன் குசினியில் உதவியதை)

நீங்கள் தானே பலருக்கூம்புரிவதில்லை என்றீர்கள் 🤔😀

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கணவர் புரியாணி, மீன் பொரியல் மட்டும் நன்றாகச் செய்வார். மற்றப்படி வீட்டில் பல வேலைகளுக்கும் உதவுவார். ஆனால் தேநீர் மட்டும் கட்டாயம் நான்தான் ஊற்றிக் கொடுக்க வேண்டும் காலையில். எல்லா ஆண்களும் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை நிகே.

உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல்கிப் பெருக்கிக் குடும்பம் பெரிதாக்கி பிள்ளைகள் வளரவளர வேலைகளும் அதிகரிக்கும் பெண்களுக்கு.

வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். 

எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் அயன் பண்ணுவதை தவிர.. வளர்ந்த பின் அயனும் நானே தான் செய்வேன். இப்படிப்பல.

ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. மாடு மாதிரி வளர்ந்த பிள்ளைகளுக்கு வாசிங் மிசினில் உடுப்புப் போடுவது கூட அம்மாமார். சாப்பிடுற கோப்பை கழுவிறது அம்மாமார். அறை துப்புரவு செய்வது அம்மாமார். ஏன் பாடசாலை உபகரணங்களை தேடிக் கொடுத்து.. பாடசாலைக்கு கொண்டு போய் விடுவது வரை அம்மாமார். இப்படித்தான்.. புலம்பெயர் நாடுகளில்.. அதிக ஓவரா பிள்ளை வளர்க்கினம். இறுதியில்.. அந்தப் பிள்ளைகள் ஒரு வேலையில் கூட ஒழுங்கா தாக்குப்பிடிக்க முடியாமல்.. தவிப்பதை பார்க்கிறோம். காரணம்... பெற்றோர் பிள்ளைகளின் சுயத்தை அவர்களுக்கான சுய வாழ்க்கை ஒழுங்கை தீர்மானிக்கும் வகைக்கு வழிநடத்தாமையே.

கோழி கூட ஒரு காலத்துக்கு தான் குஞ்சுக்கு உணவூட்டும். அதன் பின்.. குஞ்சே தான் கிளறி.... உணவு தேடிச் சாப்பிட்டாகனும். ஆனால் நம்மவர்கள்.. ஏதோ காணாததை கண்ட கணக்கு. 

இது தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே தவிர...

வேலைப் பகிர்வு என்பது.. இயல்பானதாக அமைய வேண்டுமே தவிர.. மனைவிக்கு செய்யுறன்.. கணவனுக்கு செய்யுறன் என்ற பாகுபாட்டு அடிப்படையில் அமைவது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கான அறிகுறியல்ல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.