Jump to content

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கைத் தமிழர்கள் இந்தத் தேர்தல் குறித்து என்ன கருதுகிறார்கள் என்று ஆராய்ந்தது பிபிசி தமிழ்.

இலங்கை தமிழர் தொடர்பிலான பிரச்னை இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் அது தற்போது இந்தியாவின் வட பகுதி வரை ஆக்கிரமித்துள்ளதாக இலங்கையின் அரசியல் விமர்சகரான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

'இன்று இந்தியப் பிரதமர், இலங்கைக்கு வருவது, தனக்கு பெருமை என சொல்வதை விட, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வருவது பெருமை என்று சொல்லியிருப்பது இந்த மாற்றத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனகன் விநாயகமூர்த்தி
 
படக்குறிப்பு,

ஜனகன் விநாயகமூர்த்தி

இலங்கை தொடர்பிலான பிரச்சினைகளை, தமிழக முன்னாள் தலைவர்கள், தேர்தல் காலப் பகுதியில் அடுக்கு மொழிகளில் பேசுவது வழக்கமாக வைத்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இன்றைய தலைவர்களாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் போன்றவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினைகளை, தேர்தல் மேடைகளில் பேசி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் அகதிகளாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பது, இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் முக்கிய கருப் பொருளாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த இலங்கை தமிழர்களின் பார்வை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா, இலங்கையில் தங்களுடைய நல்லிணக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தங்களுடைய ஆதரவு இருக்கு என்பதை ஆணித்தனமாக சொல்ல வேண்டிய தேவைப்பாடு புவியியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தமிழகத்தில் இருந்த திராவிட கட்சிகள் மாத்திரமன்றி, இன்று போட்டியிடுகின்ற மக்கள் நீதி மய்யம் கூட, ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறை கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளரின் பார்வை

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் கடந்த 10 வருட காலமாக தமிழகத்திலிருந்து பெரிதாக குரல் எழுப்பப்படவில்லை என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

ஆர்.சிவராஜா
 
படக்குறிப்பு,

ஆர்.சிவராஜா

இவ்வாறான நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டு, அதனூடாக இலங்கை தமிழர் பிரச்சினையில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அவர் கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க கடந்த காலங்களில் சட்ட சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்ததாக கூறும் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அவ்வாறான திட்டகாத்திரமான தீர்மானங்களை எடுத்ததாக தெரியவில்லை என குறிப்பிடுகிறார்.

இலங்கை பிரச்சினையில் தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்டாலின் கடுமையான நெருக்கடிகளை கொடுப்பார் என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

அதேபோன்று, மீனவப் பிரச்சினையிலும் மத்திய அரசு, இலங்கையுடன் நட்புறவு அடிப்படையில் தீர்வுகளை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.

இந்த பின்னணியில், மீனவப் பிரச்சினையிலும், ஸ்டாலினின் அழுத்தம் மிக கடுமையாக இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

அதேபோல, இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்துவார் என அவர் தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தொடர்ச்சியாக ஏதோ வகையில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்த வண்ணமே இருந்ததாக கூறும் அவர், தற்போதைய தலைவர்கள் அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என குறிப்பிடுகிறார்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் போன்று, இலங்கை தமிழர் தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவிலான நெருக்குதல்களை கொடுக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

எனினும், ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்சினையில் சற்று முன்னோக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர்களின் பார்வை

பிரேம்
 
படக்குறிப்பு,

பிரேம்

தமிழக சட்ட மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டோம்.

தற்போது இலங்கை தொடர்பில் பேசுபவர்கள், ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உறுதி மொழிகளை நிறைவேற்றுவார்களா என்ற கேள்வியை மனதில் எழுகின்றது என கொழும்பு - வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பிரேம் தெரிவிக்கிறார்.

எங்களுடைய கைகளை நாங்களே நம்பி இருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகிறது எனவும் அவர் கூறுகின்றார்.

தனக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மீது நம்பிக்கை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, மற்றுமொரு தமிழரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

புஷ்பநாதன்
 
படக்குறிப்பு,

புஷ்பநாதன்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசியல்வாதிகளினாலேயே தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், இந்திய அரசியல்வாதிகளினால் அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என அவர் கேட்கிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி கூறிய விடயங்களையே, இன்று வரை கூறி வருவதாகவும், ஆனால் தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மலையகத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் தெரிவிக்கிறார்.

சதிஷ்
 
படக்குறிப்பு,

சதிஷ்

தேர்தல் காலப் பகுதியிலாவது, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவது வரவேற்கத்தக்கது என கிளிநொச்சியைச் சேர்ந்த சதிஷ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் வழங்கப்படும் வாக்குறுதிகள் இலங்கையில் தாக்கத்தை செலுத்தாது என்ற போதிலும், இந்திய அரசியலில் மாத்திரமே அது தாக்கத்தை செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் கெட்டிக்காறர்கள் தான்

ஒருத்தரும் சீமான் பெயரை உச்சரிக்க கூட இல்லை

ஊரில இருக்கின்ற ஒருத்தரும் சீமானை கணக்கெடுப்பதும் இல்லை. படிச்ச சனம் படிச்ச சனம் தான்.

முதல் வெடி வெடிக்க முன் ஊரை விட்டு கிளம்பியவர்களும்
அப்படி கிளம்பியும் ஊரில காணியை வைச்சு கொண்டு அதன் பெறுமதி கூடிக் குறைவதை பார்த்து வியர்த்து கொட்டுகின்றவர்களும்
தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
**********

அப்ப நான் வரட்டே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

எங்கட சனம் கெட்டிக்காறர்கள் தான்

ஒருத்தரும் சீமான் பெயரை உச்சரிக்க கூட இல்லை

ஊரில இருக்கின்ற ஒருத்தரும் சீமானை கணக்கெடுப்பதும் இல்லை. படிச்ச சனம் படிச்ச சனம் தான்.

முதல் வெடி வெடிக்க முன் ஊரை விட்டு கிளம்பியவர்களும்
அப்படி கிளம்பியும் ஊரில காணியை வைச்சு கொண்டு அதன் பெறுமதி கூடிக் குறைவதை பார்த்து வியர்த்து கொட்டுகின்றவர்களும்
தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
தெலுங்கு மலையாள சஞ்சிகைகளை லண்டனில பாரிசில விற்கின்றவர்களும் தான் அவர தூக்கிப் பிடிக்கினம் பாருங்கோ

அப்ப நான் வரட்டே

உங்கள் அறிவோ, அறிவு.... இதை எங்களுக்கு போதனை செய்யவே கிளம்பி வந்தனியள்?

பிரபாகரன் மற்றும் சீமான் பெயரை யாராவதும் ஊரிலை உச்சரித்தால், நாலாம் மாடி தான் எண்டு தெரியுமா? இது தெரியாமல்.... என்னத்தை எழுதுறியளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

உங்கள் அறிவோ, அறிவு.... இதை எங்களுக்கு போதனை செய்யவே கிளம்பி வந்தனியள்?

பிரபாகரன் மற்றும் சீமான் பெயரை யாராவதும் ஊரிலை உச்சரித்தால், நாலாம் மாடி தான் எண்டு தெரியுமா? இது தெரியாமல்.... என்னத்தை எழுதுறியளோ?

ஊரில இருந்து தலைவரின் படத்தில் இருந்து போராளிகளின் வீரவணக்கம் வரைக்கும் முக நூலில் போடும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் தெரியுமா?

ஜெரா தம்பி, காவலூர் அகிலன், தீபச்செல்வன், பிரின்ஸ் காசினாதர், சுப்பிரமணிய பிரபா போன்ற ஆட்களின் பெயர்களை எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியலோ

தலைவரின் படத்தை போட்டதால பேசு புக்கு முடக்கப்பட்ட பலர் அங்குதான் அண்ணை உள்ளனர்.

இடைக்கிடை ஊர்ச் செய்திகளையும் பாருங்கோ.

இலவசக் கல்வியில் பயின்ற பாசம் மட்டும் இருந்துட்டால் போதாது பாருங்கோ ஊர்ச் செய்திகளையும் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்னவென்றால் ஊரில ஒருவரும் சீமானை கணக்கெடுப்பதில்லை என்பது தான். முதல் வெடிக்கு முன் ஓடி வந்தவர்கள் தான் காவிக் கொண்டு திரிகினம்.

இந்த உண்மை சகக்கும் தான் பிரோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வைரவன் said:

ஊரில இருந்து தலைவரின் படத்தில் இருந்து போராளிகளின் வீரவணக்கம் வரைக்கும் முக நூலில் போடும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் தெரியுமா?

ஜெரா தம்பி, காவலூர் அகிலன், தீபச்செல்வன், பிரின்ஸ் காசினாதர், சுப்பிரமணிய பிரபா போன்ற ஆட்களின் பெயர்களை எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியலோ

தலைவரின் படத்தை போட்டதால பேசு புக்கு முடக்கப்பட்ட பலர் அங்குதான் அண்ணை உள்ளனர்.

இடைக்கிடை ஊர்ச் செய்திகளையும் பாருங்கோ.

இலவசக் கல்வியில் பயின்ற பாசம் மட்டும் இருந்துட்டால் போதாது பாருங்கோ ஊர்ச் செய்திகளையும் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்னவென்றால் ஊரில ஒருவரும் சீமானை கணக்கெடுப்பதில்லை என்பது தான். முதல் வெடிக்கு முன் ஓடி வந்தவர்கள் தான் காவிக் கொண்டு திரிகினம்.

இந்த உண்மை சகக்கும் தான் பிரோ.

தகவலை சரியாக பதியுங்கள். சும்மா பத்தி, பத்தியாக பதிந்து பிரயோசனம் இல்லை.

பிரபாகரன் குறித்து பதிந்த 30 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து சாணக்கியன் பாராளுமன்றிலேயே பேசி உள்ளார். 

போனவாரம் யாழ்ப்பாணத்தில், புலிகள் குறித்த பதிவுகளால் இருவர் கைது.

http://www.dailymirror.lk/breaking_news/Two-arrested-in-Jaffna-for-operating-website-promoting-LTTE/108-208840

நீங்கள் எத்திணையாவது வெடிக்கு கிளம்பினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தகவலை சரியாக பதியுங்கள். சும்மா பத்தி, பத்தியாக பதிந்து பிரயோசனம் இல்லை.

பிரபாகரன் குறித்து பதிந்த 30 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து சாணக்கியன் பாராளுமன்றிலேயே பேசி உள்ளார். 

போனவாரம் யாழ்ப்பாணத்தில், புலிகள் குறித்த பதிவுகளால் மூவர் கைது.

http://www.dailymirror.lk/breaking_news/Two-arrested-in-Jaffna-for-operating-website-promoting-LTTE/108-208840

நீங்கள் எத்திணையாவது வெடிக்கு கிளம்பினீர்கள்?

ஆக

தலைவரை குறித்து அங்கு இன்னும் எழுதுகின்றார்கள் தானே?
புலிகளை பற்றி எழுதுகின்றனர் தானே
நீங்கள் சொன்ன மாதிரி எழுதாமல் இல்லையே

நான் முதல் வெடிக்கும்
இரண்டாம் வெடிக்கும்
இடையில் கிளம்பினனான்

ஆனால் கிளம்பி வந்து
தமிழக சீமான்களுக்கு
காவடி தூக்கவில்லை

அது சரி

ஆகக் குறைஞ்சது தலைவர் என்று கூட அவரை குறிப்பிட மாட்டீர்களா?
வெறுமனே அவர் பெயரை தான் குறிப்பிடுவீர்களா?
அந்தளவுக்கு அவர் மரியாதைக்குரியவர் இல்லையா?


சீமான் தான் உங்கள் தலைவர் ஆச்சே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

ஆக

தலைவரை குறித்து அங்கு இன்னும் எழுதுகின்றார்கள் தானே?
புலிகளை பற்றி எழுதுகின்றனர் தானே
நீங்கள் சொன்ன மாதிரி எழுதாமல் இல்லையே

நான் முதல் வெடிக்கும்
இரண்டாம் வெடிக்கும்
இடையில் கிளம்பினனான்

ஆனால் கிளம்பி வந்து
தமிழக சீமான்களுக்கு
காவடி தூக்கவில்லை

அது சரி

ஆகக் குறைஞ்சது தலைவர் என்று கூட அவரை குறிப்பிட மாட்டீர்களா?
வெறுமனே அவர் பெயரை தான் குறிப்பிடுவீர்களா?
அந்தளவுக்கு அவர் மரியாதைக்குரியவர் இல்லையா?


சீமான் தான் உங்கள் தலைவர் ஆச்சே

 

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில், பிரபாகரன் போட்டோ பயன்படுத்தும் youtube, முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கும்.

இங்கிருந்து, நான், யாழ்ப்பாணம் போயிருந்த போது ஒரு முகப்புத்தக கணக்கு திறந்தேன். அது இலங்கை கணக்கா, வெளிநாட்டு கணக்கா என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் பிரபாகரன் படம் போடடால், இருக்கும், இலங்கை போலீஸ் என்னை போய் தேடி பிடிக்கேலுமே?

ஓமோம்... சீமான் தான் .... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில், பிரபாகரன் போட்டோ பயன்படுத்தும் youtube, முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கும்.

இங்கிருந்து, நான், யாழ்ப்பாணம் போயிருந்த போது ஒரு முகப்புத்தக கணக்கு திறந்தேன். அது இலங்கை கணக்கா, வெளிநாட்டு கணக்கா என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் பிரபாகரன் படம் போடடால், இருக்கும், இலங்கை போலீஸ் என்னை போய் தேடி பிடிக்கேலுமே?

ஓமோம்... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

பிளாக்கில் பழைய பதிவை தேடிப்பிடித்து விசாரிக்க வந்தவர்கள் போனை வேண்டி வாட்ஸ் அப் குழுமங்களை  பார்க்க இங்குள்ள நபர்களின் பதிவுகளை பார்த்து பயந்து போய்  நண்பர் வாட்சப் என்ற ஒன்றே வேண்டாம் என்று வெறுத்து போய் உள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

ஓமோம்... சீமான் தான் .... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

கருத்து எழுத வேறு வழி இல்லாட்டி
இருக்கும் ஒரே குறுக்கு வழி
காட்டிக் கொடுக்கின்றீரோ என்று கேட்பது
டக்கியோ கோத்தாவோ டைரக்டர் என்பது

நான் குறிப்பிட்ட அனைவரும் இன்றும்
இந்த வினாடியும் முக நூலில் உயிர்ப்புடன்
உள்ளவர்கள்
உங்களை மாதிரி என்னை மாதிரி முகம் காட்டாமல்
இருப்பவர்கள் அல்ல
அதிலும் ஒருவர் 3 வரிசம் பூசாவில் இருந்தவர்

சீமான் தான் தலைவர் என்று
ஒத்துக் கொண்டதுக்கு
நன்றிங்கோ

ஆனாலும் தேசிய தலைவரை
வெறுமனே பெயரை சொல்லி
குறிப்பிடுவது சரி இல்லை.
அவரது தியாகங்களுக்கான
நேர்மையும் இல்லை,

 

2 hours ago, வைரவன் said:

தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
**********

அப்ப நான் வரட்டே

நான் எழுதியதை நீக்கிய நிழலி
என்னை கோத்தா ஆளோ என்று கேட்டதை
நீக்க மாட்டார்

நாதம் அவர்ட செல்லம்
என்று தெரியும்

ஆனாலும் நீக்க வேண்டாம்

கருத்துக்கு பஞ்சம் வந்தால்
துரோகி என்று முத்திரை குத்த
முனைவது
கருத்தாளனுக்கு வெற்றி தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

கருத்து எழுத வேறு வழி இல்லாட்டி
இருக்கும் ஒரே குறுக்கு வழி
காட்டிக் கொடுக்கின்றீரோ என்று கேட்பது
டக்கியோ கோத்தாவோ டைரக்டர் என்பது

நான் குறிப்பிட்ட அனைவரும் இன்றும்
இந்த வினாடியும் முக நூலில் உயிர்ப்புடன்
உள்ளவர்கள்
உங்களை மாதிரி என்னை மாதிரி முகம் காட்டாமல்
இருப்பவர்கள் அல்ல
அதிலும் ஒருவர் 3 வரிசம் பூசாவில் இருந்தவர்

சீமான் தான் தலைவர் என்று
ஒத்துக் கொண்டதுக்கு
நன்றிங்கோ

ஆனாலும் தேசிய தலைவரை
வெறுமனே பெயரை சொல்லி
குறிப்பிடுவது சரி இல்லை.
அவரது தியாகங்களுக்கான
நேர்மையும் இல்லை,

 

வந்த வேகத்திலை, கத்தி வெட்டு வாங்கிப் போட்டீர்கள், பார்த்து எழுதுங்கோ.

எனது தலைவன் சீமான் தானே என்று நீங்கள் சொல்லலாம். திருப்பி உங்கள் தலை, டக்கியா அல்லது, நேரடியாக கோத்தாவே என்று கேட்டால் கோபம் வருகுது.

உங்களுக்கு எண்டால் ரத்தம், அடுத்தவனுக்கு தக்காளி சாறு..... அப்படித்தானே.  🙄

உங்க கண பேர், தீடீர் தேசிய தலைவர் ஆதரவு வேசம் போட்டுக்கொண்டு வருகினம்.😁

நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்கு தெரியுமே.

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

சூசை சொன்னதை கேட்பதா, வைரவன் சொல்வதை கேட்பதா... சொல்லுங்கோ, வைரவா, சொல்லுங்கோ.

அல்லது, சூசை, வாய்ஸ் டப்பிங்... எண்டாவது சொல்லுங்கோ.... நம்புறேன்

அந்த கோரிக்கை, ஏன், வைகோவுக்கோ, கலைனருக்கோ, ஜெயலலிதாவுக்கோ, திருமவளவனுக்கோ போகவில்லை என்று விளக்கப்படுத்துங்கள், பார்ப்போமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

 

சூசை அண்ணையின் ஒலிப்பதிவு முழுமையாக வெளியிடப்படாமல் இருந்ததாக ஒரு கதை வந்தது. உண்மையா?

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

வந்த வேகத்திலை, கத்தி வெட்டு வாங்கிப் போட்டீர்கள், பார்த்து எழுதுங்கோ.

எனது தலைவன் சீமான் தானே என்று நீங்கள் சொல்லலாம். திருப்பி உங்கள் தலை, டக்கியா அல்லது, நேரடியாக கோத்தாவே என்று கேட்டால் கோபம் வருகுது.

உங்களுக்கு எண்டால் ரத்தம், அடுத்தவனுக்கு தக்காளி சாறு..... அப்படித்தானே.  🙄

உங்க கண பேர், தீடீர் தேசிய தலைவர் ஆதரவு வேசம் போட்டுக்கொண்டு வருகினம்.😁

நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்கு தெரியுமே.

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

சூசை சொன்னதை கேட்பதா, வைரவன் சொல்வதை கேட்பதா... சொல்லுங்கோ, வைரவா, சொல்லுங்கோ.

அல்லது, சூசை, வாய்ஸ் டப்பிங்... எண்டாவது சொல்லுங்கோ.... நம்புறேன்

அந்த கோரிக்கை, ஏன், வைகோவுக்கோ, கலைனருக்கோ, ஜெயலலிதாவுக்கோ, திருமவளவனுக்கோ போகவில்லை என்று விளக்கப்படுத்துங்கள், பார்ப்போமே.

நீங்கள் என் என்னை பைரவன் என்று அழைக்கிறீர்கள் என்பது இப்பதான் விளங்குது. நான் அவர் அல்ல.

Btw, கே.பி(பத்மநாதன்) ஐ  கூட இயக்கம் கடைசி நேரத்தில் சர்வதேச தலைவராக நியமித்திருந்தனர்.
அதற்காக இயக்கம் கை காட்டி விட்டு சென்றவர்கள் எல்லாம் தேவதூதர்களா?. அவர்கள் பாதை மாரமாட்டார்களா?

9 minutes ago, nunavilan said:

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=28224

உங்களுடைய தர்க்கத்தின்  படி K P இப்பவும்  இயக்கத்தின் சர்வதேச தலைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணை 25, 000 பேர் காயப்பட்டதாகவும் இறந்துகொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அது எல்லாம் முக்கியமில்லை. ஆனால் போகிற போக்கில் வைகோ, நெடுமாறன், சீமான் என்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயரின் சீன்மானின் பெயரும் இருந்ததை அப்படியே தூக்கி தங்கள் பரப்புரைக்கு பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூசை அண்ணை குறிப்பிட்ட வைகோ துரோகி, பத்மநாதன் துரோகி.. ஆனால் சீன்மான் அடுத்த தேசியத் தலைவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நீங்கள் என் என்னை பைரவன் என்று அழைக்கிறீர்கள் என்பது இப்பதான் விளங்குது. நான் அவர் அல்ல.

உங்களை, பைரவா என்று அழைத்தேன் என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்களா? என்னத்தை சொல்ல? தொப்பி அளவா இருந்தோன்ன, தூக்கி தலையில போடுறதே? 😁 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சூசை அண்ணை 25, 000 பேர் காயப்பட்டதாகவும் இறந்துகொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அது எல்லாம் முக்கியமில்லை. ஆனால் போகிற போக்கில் வைகோ, நெடுமாறன், சீமான் என்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயரின் சீன்மானின் பெயரும் இருந்ததை அப்படியே தூக்கி தங்கள் பரப்புரைக்கு பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூசை அண்ணை குறிப்பிட்ட வைகோ துரோகி, பத்மநாதன் துரோகி.. ஆனால் சீன்மான் அடுத்த தேசியத் தலைவர்!

பத்மநாதன் குறித்த உங்கள் புரிதல் என்ன? அவர் துரோகி என்று தலைவர் கடைசி வரை அறிந்திருக்கவில்லை என்று தெரியுமா? வெறும் கப்பலை அனுப்பி, கூடவே தகவலையும் கசிய வைத்து, அதனை தாக்க வைத்து, ஆயுதங்களுடன் மூழ்கிவிட்டது என்று சொன்னதும், கோத்தாவுடன் டீலை போட்டு, கொழும்புக்கு விமானம் ஏறமுன்னர், நடேசன் மகனை கோலாலம்பூரில் சந்தித்து, சாட்சியாக வைத்துக்கொண்டே நாடகம் போட்டது துரோகம் இல்லையா?

மலேசியாவினால், கைது செய்து அனுப்பப்பட்டு, ஒரு நாள் கூட சிறையில் இருக்காத பத்தர், உங்களுக்கு பத்தரை மாற்று தங்கம். அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறீர்களே, கிருபன் அய்யா.

ஒரு பெரும் அரசியல்வாதி வைக்கோ எங்கே, அப்போது பெரிதாக யாருக்கும் தெரியாத சீமான் எங்கே? வைக்கோவுக்கு சொல்லுங்கோ என்பது புரிகிறது. நெடுமாறனுக்கு சொல்லுங்கோ என்பதும் புரிகிறது. 

ஆனால் சீமானுக்கு சொல்லுங்கோ, சீமான் சாருக்கு சொல்லுங்கோ, தொடர்ந்து முன் எடுக்க சொல்லி. அவரை நம்பித்தான் விட்டுவிட்டு போறோம் என்று சொல்லுங்கோ என்று சொன்னதன் காரணம் என்ன? பத்திரிகைகளுக்கு கொடுக்கலாமா என்று கேட்க, கொடு என்கிறாரே, அப்படியானால், இயக்க தலைமை முடிவை வெளியே அறிவிப்பதில் தயக்கம் இல்லை என்பது தானே.

தொடர்ந்து முன் எடுக்க சொல்லிய கோரிக்கையில், இன்றளவும் உறுதியாக நிலைத்து இருப்பது யார்?

திருமுருகன் காந்தி என்ற ஒரு சந்தர்ப்பவாதியும் இருக்கிறாரே. இயக்கத்துக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் போட்ட சத்தத்தில், நம்பிய ஆட்கள் சுவிசுக்கு அழைத்து இருந்தார்கள். அப்படியே, சுபவியையும், திருமாவையும்..... எங்கே அவர்கள்?

கூட்டமாக, திமுக, காங்கிரசில் ஐக்கியம். அவர்களுக்கு உங்கள் ஆதரவு.... விளங்கும்!...

சீமானை இங்கே யாரும் தேசிய தலைவர் என்று தூக்கி கொண்டாடவில்லை. உங்களை தவிர.

சீமான், பிரபாகரனை தூக்கி வீசினால், நாமும் அவரை தூக்கி வீசுவோம். அவ்வளவு தான்.

தொடர்ந்து முன் எடுக்க சொல்லி - அப்படியானால் அங்கே முன்னதாக ஒரு புரிதல் இருந்திருக்கிறது, இல்லையா?

Link to comment
Share on other sites

மேலை நாடுகளின் சமூக பாதுகாப்பு நன்மைகளை (இன்றைக்கு தொழில் இல்லையேல் அல்லது இழப்பில், அரசு நாளை முதல் வங்கியில் நிதி வைப்பிலிடும்) முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு, எந்தவொரு சமூக பாதுகாப்புமற்ற நாட்டில் ஓரு ரூபாய் அரிசியை இலவசம் (freebies) என்று சொல்லக்கூடிய, ஒரு ஏழைத்தொழிலாளி பிள்ளையின் பசியை துச்சமென நினைக்கும் கயவர்களுக்கு,

தம் மாநில சுயாட்சி தொடர்ந்தும் பறிக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக, ராம ராஜ்ஜியம் எனும் பார்ப்பன ராஜ்ஜத்திற்கு எதிராக, சனாதனம் என்ற மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாட்டிக்கு எதிராக, மனுநீதியை நிலைநாட்டி, சமூக நீதியை சூறையாடும் சித்தாந்தத்திற்கு எதிராக, ஒடுக்கபட்ட சமூகத்தின் கல்வியை அபகரிக்கும் பொறிமுறைக்கு எதிராக... இன்னும் பலவற்றிக்கும் எதிராக.. தாம் நம்பும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கப் போகும்... 3 கோடிக்கும் மேலான தமிழர்களும் துரோகிகளே.....

Link to comment
Share on other sites

சில புலம்பெயர் விசில் அடிச்சான் குஞ்சுகளால், தமிழகத்தில் இருக்கும்  கொஞ்சம் நஞ்சம் ஆதரவையும் இழக்கப்போகிறேம். எமக்கு கட்சி பேதம் இன்றிய ஆதரவு தான் தேவை, அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

சில புலம்பெயர் விசில் அடிச்சான் குஞ்சுகளால், தமிழகத்தில் இருக்கும்  கொஞ்சம் நஞ்சம் ஆதரவையும் இழக்கப்போகிறேம். எமக்கு கட்சி பேதம் இன்றிய ஆதரவு தான் தேவை, அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது போல்.

முதலில் உங்களுக்குள் இருக்கும் பேதத்தை நீக்கி சர்வசாதாரண பொது மகனாக உரையாட பழகுங்கள். 
 

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

முதலில் உங்களுக்குள் இருக்கும் பேதத்தை நீக்கி சர்வசாதாரண பொது மகனாக உரையாட பழகுங்கள். 
 

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

முதலில் யார் பக்கமும் சாராமல் பொது கருத்துக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, zuma said:

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

உங்கள் கருத்துக்கள் நீக்கப்படுவதால், உதாரணம் காட்டிட முடியவில்லை. ஆகவே துணிந்து என்ன குற்றம் கண்டீர் என்று சொல்கிறீர்கள். 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பத்மநாதன் குறித்த உங்கள் புரிதல் என்ன?

கேபி பத்மநாதன் தலைவர் பிரபாகரனின் திருமணத்தில் தோழனாக இருந்தவர். புலிகள் இந்தியாவை உச்சி ஆயுதப் போராட்டத்தில் முன்னேற தனது உழைப்பை செலுத்தியவர்.

இப்போது இலங்கையில் சிறை செல்லாமல் பல அநாதரவான குழந்தைகள், முதியோரை பராமரிக்கும் இல்லங்களை நடாத்துபவர். 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அவர் துரோகி என்று தலைவர் கடைசி வரை அறிந்திருக்கவில்லை என்று தெரியுமா?

ஆமாம். ஆமாம். ஆமாம்.

தலைவர் போராட்டத்திற்கு ஆயுதக்கொள்வனவு செய்து தந்த கேபியை இறுதிவரை நம்பினார் என்று Daily Mirror ஆங்கில இணையத்தளத்தில் சிங்கள அறிவுஜீவி Umberto Eco எழுதியிருந்தார்!  அவர் காஸ்ரோவின் வீண்பேச்சைக் கேட்டு கேபியை 2000 ஆண்டளவில் ஒதுக்கத் தொடங்கியிருந்தார். தகடு வைப்பவர்களின் பேச்சைக் கேட்டு 2003 இல் கேபியை ஆயுதக் கொள்வனவு பொறுப்பில் இருந்து மாற்றியிருந்தார். ஆனால் தனது நண்பனை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்று சிங்கள அறிவுஜீவி Umberto Eco இன்னும் விளக்கமாக எழுதியிருந்தார்!

நாதம்ஸ், நீங்கள் யாழில் தமிழில் வரும் பெரும் கட்டுரைகள், பேட்டிகளைக் படிப்பதில்லை என்று தெரியும். குறைந்தபட்சம் சூடான திரிகளில் என்னவெல்லாம் அலசியிருப்பார்கள் என்றாவது பார்த்தால் மேலே மேற்கோள் காட்டியதை எழுதியிருக்கம்மாட்டீர்கள்😬

 

11 hours ago, Nathamuni said:

சீமான், பிரபாகரனை தூக்கி வீசினால், நாமும் அவரை தூக்கி வீசுவோம். அவ்வளவு தான்.

இல்லை! உங்களால் முடியாது.!!

உங்களது விசுவாசம் தலைவர் பிரபாகரன் மீது இல்லை என்பதை யாழ் களத்தில் நீங்கள் இதுவரை காலமும் வைத்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.