Jump to content

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

நன்றி முல்லை நிலவன்

இதுக்கு பதில் வராது. காரணம் அது, பதிந்தவரின் சொந்த ஆக்கம் இல்லை.

சொந்தமாக, பதிய கூடிய திறமை இருப்பினும், ஏனோ, வெட்டி, ஒட்டும் வேலைகள் செய்வதும், தான் வாசித்தவை அபத்தமோ, இல்லையோ, அடுத்தவர்களும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம்.

தயவு செய்து, உங்கள் கருத்துக்களை சொந்தமாக, எழுதி பதியுங்கள். நாமும் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

Thanks

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 16:02, tulpen said:

சீமானின் போலித்தனத்தை தர்க்ககரீதியில் சுட்டிக்காட்டும் சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். 

இதே போலவே அண்மைய செந்தில் வேலின் தமிழ் கேள்வி நேர காணலும் அமைந்திருந்தது.  சீமான் மீது எந்த வசை மாரியும்  பொழியாமல் ஆதாரங்களுடன் சீமானின் இரட்டை வேடங்களை சுட்டிக் காட்டுகிறார். விரிவான மிக சிறந்த அரசியல் நேர் காணல். இதற்கு சீமான் தரப்பில் இருந்து தகுந்த பதிலை வழங்க முடியாது.  வழமை போல் செந்தில்வேல் ஒரு வந்தேறி என்றோ துரோகி திட்ட மட்டுமே முடியும். 

 பா.ஜ. க போல சீமானின் இனவெறி தேசியவாதமும் அழிக்கப்படவேண்டிய ஒன்றே.

  

 அண்ண‌ன் சாட்டை துரைமுருக‌ன் செந்தில் வேலின் திராவிட‌ முட்டுகொடுப்பை ப‌ற்றி ந‌ல்ல‌ விள‌க்க‌மாய் சொல்லி இருக்கிறார் இதையும் கொஞ்ச‌ம் பாருங்கோ  ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 20:15, Nathamuni said:

எதை எதையோ பேசி இன்னும் சொதப்ப வேண்டாமே. நகர்வோம். 🤦‍♂️

 

2 hours ago, நிழலி said:

நீங்கள் எழுதும் மொழியும் பாங்கும் நன்றாகவும் ஆரோக்கியமான உரையாடலுக்குரியதாகவும் உள்ளது.

யாழுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MullaiNilavan said:

 

🙏

புதிதாக வந்துளீர்கள். எனது கருத்து உங்களுக்கானது அல்ல.

இணைத்திருங்கள். நல்ல கருத்துக்களை இணைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

புதிதாக வந்துளீர்கள். எனது கருத்து உங்களுக்கானது அல்ல.

இணைத்திருங்கள். நல்ல கருத்துக்களை இணைத்திருங்கள்.

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

அட, இது வேறயா...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

எப்பொழுதும் தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

சீமான் எல்லோரும் விவசாயம் செய்யவேண்டும் என்று சொல்கிறாரா?
விவசாயிகளும் விவசாயமும் பாதுக்காக்க பட வேண்டும் என்று சொல்கிறாரா?  

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பயல்கள் திராவிட வேலுக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டினம், திராவிட வேல் எறிந்த குப்பைகளை பார்த்து , நெக்குருகி போன சார்வாள்கள் எல்லாம் இனி ஓட வேண்டியது தான். 

அன்பான சர்வாதிகாரம் என்பது சிங்கப்பூரில் லீ குவான் யூ செய்தது லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கும்

 

 

 

https://www.facebook.com/100002407389959/posts/4012899868800220/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார்.

அப்போ டென்மார்க் ஆட்சி, லண்டன் ஆட்சி  ஜனநாயக ஆட்சிகள் எல்லாம்  தரமாட்டார் 😂  தமிழக மக்கள் கெட்டிகாரர்கள் அவரை தேர்ந்து எடுக்க போவதில்லை. ஊழலற்ற ஆட்சி டென்மார்க் ஆட்சி  சர்வாதிகார ஆட்சி அது இது என்று அள்ளி அள்ளி  இறைக்க வேண்டியது தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நிறுத்தல் குறியையும் முற்று புள்ளியையும் கவனியுங்கள் பழைய ஆள்தான் 😀

பெருமாள் கண்டுபிடித்துவிட்டார். பெருமாள் சிறி, அண்ணாவுடன் அட்மிசன் எடுத்தவர் இவர் . இது யாழ்கள பொறுப்பாளர் நிழலிக்கு தெரியவில்லை 🤦‍♂️ புதியவரே வருக என்று வரவேற்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

 

 

சீமான் இப்போது ஆரம்ப படிகளில் தான் நிற்கின்றார்.  அவர் அரசவைக்கு வந்த பின்னர் உங்கள் கருத்துக்களை தாராளமாக வைக்கலாம்,வெளுக்கலாம். கார் உற்பத்தியின் பின் உள்ள விக்கனங்களை பல மேடைகளில் சொல்லி விளங்கப்படுத்தியுள்ளார்.

ஜேர்மன் செய்திகளின் தரவின் படி இஸ்ரேல் தோடம்பழ ஏற்றுமதியை நிற்பாட்டி விட்டது அல்லது குறைத்துக்கொண்டது. காரணம் அதிகளவு தண்ணீர் தேவைதான் முக்கிய காரணம்.

ஜேர்மனியில் டெல்சா கார்  உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடந்தன. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர்தான். உங்களுக்கு பல மொழிகள் தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். ஒரு கார் உற்பத்திக்கும் ஒரு இயந்திர உற்பத்துக்கும்  எத்தனைல  இலட்சம் லீட்டர் நீர் தேவையென வலைத்தளங்களில் தேடிப்பாருங்கள். அந்த நீரை விவசாயத்திற்கு/குடி நீருக்கு பயன் படுத்தினால்??????

முதலில்  ஒரு மனிதனுக்கு மூன்று வேளையும் உணவு உண்ண விவசாயம் வேண்டும். சகல உயிரினங்களுக்கும் குடிக்க நீர் வேண்டும்.அதில் தன்னிறைவு அடைந்த பின்  காரில் பறப்பதை பற்றி கதைக்கலாம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்ம பயல்கள் திராவிட வேலுக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டினம், திராவிட வேல் எறிந்த குப்பைகளை பார்த்து , நெக்குருகி போன சார்வாள்கள் எல்லாம் இனி ஓட வேண்டியது தான். 

அன்பான சர்வாதிகாரம் என்பது சிங்கப்பூரில் லீ குவான் யூ செய்தது லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கும்

 

 

 

https://www.facebook.com/100002407389959/posts/4012899868800220/

 

அது சிங்கப்பூரில் செய்யலாம்..  அடிமை மாநிலம். தமிழ்நாட்டில் மிக. மிக கஸ்டம். முதலில் தமிழ் நாடு தனிநாடு ஆகவேண்டும் அல்லது. கூடுதல்  அதிகாரம் தேவை.  முக்கியாமாக. மத்தியரசு  நினைத்தவுடன். கலைக்கும் சட்டம். அகற்றப்படவேண்டும். ஆட்சிக்காலம் முடியும்வரை. தெரிவுசெய்யப்பட்ட அரசு பதவியில்இருக்கவேண்டும்😎😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

 

 

ஐயா,

தமிழ்நாடு ஒப்பீட்டளவில் அதிக கிராமங்களையும், சிற்றூர்களையும், சொற்ப நகரங்களையும் கொன்ற ஒரு மாநிலம்.

கிராமங்களையும், சிற்றூர்களையும்- ஏழைகள் 82-86%

நகரங்கள்-பணக்காரர்கள் 14-18%.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை- 8.50 கோடி.

சீமானின் அன்பான சர்வா சர்வாதிகார அரசு அமைப்பு என்பது, சிங்கப்பூரை ஒத்த தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான நிர்வாக சீர்திருத்த சட்டங்கள். அவர்களுடைய ஆட்சி கால சீர்திருத்தம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மாதிரியை நான் விளங்கிய வரையில் உங்களுக்கு இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கிராமங்கள், சிற்றூர்களில் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்க தூண்டுதல்.

2. தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்தில் ஏழைகள் சார்ந்த திட்டமிடல் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தலும், மத்திய ஆட்சியாளர்களுடன் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

3. அடிப்படைத் தேவைகள் இன் நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதை கண்காணித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, உற்பத்தி நடவடிக்கைகள் மக்கள் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாகவும், சேவைகளை ஒழுங்குபடுத்தி மேம்படுத்தி சென்றடைய வைத்தல்.

4. நன்மைகளும் பெறுபவர்களும், சலுகைகளும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பேதமின்றி பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்; குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதோர் கண்டறிதல்.

5. கிராமப்புற சமூகங்களில் காணப்படுகின்ற நூலகத்தைப் மூலதனத்தை பெருக்கக் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்.

6. கண்டறியப்பட்ட சமூக கட்டமைப்புகளுக்கு ,சமமான பாதுகாப்பான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தல்; நிலங்களை பாதுகாத்தலும் பெண்கள் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளை மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

7. பெண்கள் பழங்குடி மக்கள் மற்றும் சிவ பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோருக்கு நிலம், நீர், நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களும் சமமான அளவில் கிடைக்க ஒரு அணுகு முறையை உருவாக்கிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.

8. கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அறிவியலுடன், நிலையான நவீன தொழில்நுட்பங்களை சேர்ப்பது ஒத்திசைந்து ஆதரித்து ஊக்குவித்தல்.

9. உற்பத்திகளின் விலை, வானிலை, சந்தைப் போக்கு, கடன் அடிப்படையில் ஆதாரங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

10. இயற்கை பேரழிவுகளை சந்திப்பதற்கு பழக்கப்படுத்தி, அதுவே நிவர்த்தி செய்வதற்கான உடனடி வேலைத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.

11. மாநில அரசு சார்ந்து காலநிலை மாற்றத்தின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கி விடுதல்.

12. கிராமப்புற தலைமைகளே உருவாக்கி, நிர்வாகத் திறனை ஊக்குவித்தல்.

13. பாதுகாப்பான நீர், புதிய வடிகால் அமைப்புகள் சீர் செய்தல்.

14.நிலையான எரிபொருள் வசதிகளை, மின்மயமாக்கல் வசதிகளை செய்து கொடுத்தல், தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தது கொடுத்தல்.

15. நகர, கிராமங்களுக்கு இடையேயான சுகாதார கட்டமைப்புகளை விஸ்தரித்து சமமான முறையில் நிர்வகித்தல்.

16.கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்தல்.

17.கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் நகர் ,கிராம ஒரே அளவில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது கட்டாயப்படுத்தியது.


 


 

இன்னம் சில கூறுகள் இதில் உள்ளடக்கலாம், ஆனால் நேர பளு காரணமாக நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்போ டென்மார்க் ஆட்சி, லண்டன் ஆட்சி  ஜனநாயக ஆட்சிகள் எல்லாம்  தரமாட்டார் 😂  தமிழக மக்கள் கெட்டிகாரர்கள் அவரை தேர்ந்து எடுக்க போவதில்லை. ஊழலற்ற ஆட்சி டென்மார்க் ஆட்சி  சர்வாதிகார ஆட்சி அது இது என்று அள்ளி அள்ளி  இறைக்க வேண்டியது தானே.

 

உண்மை தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

காரணங்கள்,

1. இப்போ இருக்கின்ற தலைமுறைகள்; கூட வாழுகின்ற அல்லது அயல் மாநிலங்களில் வாழுகின்ற இனக்குழுக்களின் எந்தவிதமான பெரிய அடக்குமுறைகளையும், உயிர்ச் சேதங்களையும் உணர்ந்தவர்களாக இல்லை. ஒரு இளம் பராயத்தினர் அதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது நன்றாகவே புரியும் நாங்கள் காயப்பட்டு அடிபட்டு அழிந்துபோன தமிழ் குடிகள் இலங்கையில்.

2. தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

3. கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தான் அவர்களுக்கு வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டது அதுவும் தமிழக வரலாறு அடங்கவில்லை.

4. தமிழக வரலாறு, ஆட்சி முறைகள் வெளிய உள்ளவர்களினால் பிரசுரிக்கப்பட்டது. அது எல்லோரையும் சென்றடையவும் இல்லை.

5. ஆங்கில மோகமும், தமிழ் மொழிமூல கற்களும் அவசியமற்ற போனதால் அவர்களுடைய கல்வி மேம்படும் வேலைகளும் வேலைகளும் வேலைவாய்ப்புகளும் ஒரு சமூக இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

6. தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பின்னான ஆட்சியில் வந்தவர்கள் கிட்டத்தட்ட காமராஜர் கல்விக்கு, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

7.அதன் பின்னால் வந்த கருணாநிதியின் ஆரம்பகால கல்வி தெலுங்கிலேயே இருந்தது அவரின் ஆரம்ப காலம் முற்றுமுழுதாக தெலுங்கு சார்ந்த ஒரு கட்டமைப்புக்குள் வளர்ந்த கிட்டத்தட்ட 20 வயதுகளில் அவர் தமிழ் சார்ந்தது சிந்திக்கத் தொடங்கினர்.

8. எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

9. ஜெயலலிதா தமிழ் தெரிந்த வாசிக்கத் தெரியாது ஒரு கன்னடத்து முதலமைச்சர்.

இவர்களுடைய அந்தப் பொன்னான ஆட்சிக்காலத்தில் இவ்வாறு தமிழம் தழைத்தோங்கி இருக்கும். ஆனால் பொருளாதாரத்துக்கான ஒரு கல்வி முறையை உருவாக்கிக் கொடுத்து விட்டார்கள். அது சுவையற்ற ஒரு உணவு பதார்த்தம் ஆக இருப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமன்றி சினிமா சார்ந்த ஒரு அரசியல் போக்கை உருவாக்கி கேளிக்கைகளும், பெண் மோகத்தையும் கிடைக்கச் செய்தனர்.

குறிப்பாக பார்த்தீர்கள் ஆனால் அவர்களின் சினிமாக்கள் காதலை மையப்படுத்தி, பெண்களை மையப்படுத்தி இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. சமீப காலத்தில் சில மாறுதல்களை அவர்களுடைய திரைப்படங்கள் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எங்கள் நாட்டிலும் தமிழர்களை அழித்தொழிக்க துணை போனவர் ஆகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

உண்மை தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

காரணங்கள்,

1. இப்போ இருக்கின்ற தலைமுறைகள்; கூட வாழுகின்ற அல்லது அயல் மாநிலங்களில் வாழுகின்ற இனக்குழுக்களின் எந்தவிதமான பெரிய அடக்குமுறைகளையும், உயிர்ச் சேதங்களையும் உணர்ந்தவர்களாக இல்லை. ஒரு இளம் பராயத்தினர் அதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது நன்றாகவே புரியும் நாங்கள் காயப்பட்டு அடிபட்டு அழிந்துபோன தமிழ் குடிகள் இலங்கையில்.

2. தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

3. கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தான் அவர்களுக்கு வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டது அதுவும் தமிழக வரலாறு அடங்கவில்லை.

4. தமிழக வரலாறு, ஆட்சி முறைகள் வெளிய உள்ளவர்களினால் பிரசுரிக்கப்பட்டது. அது எல்லோரையும் சென்றடையவும் இல்லை.

5. ஆங்கில மோகமும், தமிழ் மொழிமூல கற்களும் அவசியமற்ற போனதால் அவர்களுடைய கல்வி மேம்படும் வேலைகளும் வேலைகளும் வேலைவாய்ப்புகளும் ஒரு சமூக இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

6. தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பின்னான ஆட்சியில் வந்தவர்கள் கிட்டத்தட்ட காமராஜர் கல்விக்கு, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

7.அதன் பின்னால் வந்த கருணாநிதியின் ஆரம்பகால கல்வி தெலுங்கிலேயே இருந்தது அவரின் ஆரம்ப காலம் முற்றுமுழுதாக தெலுங்கு சார்ந்த ஒரு கட்டமைப்புக்குள் வளர்ந்த கிட்டத்தட்ட 20 வயதுகளில் அவர் தமிழ் சார்ந்தது சிந்திக்கத் தொடங்கினர்.

8. எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

9. ஜெயலலிதா தமிழ் தெரிந்த வாசிக்கத் தெரியாது ஒரு கன்னடத்து முதலமைச்சர்.

இவர்களுடைய அந்தப் பொன்னான ஆட்சிக்காலத்தில் இவ்வாறு தமிழம் தழைத்தோங்கி இருக்கும். ஆனால் பொருளாதாரத்துக்கான ஒரு கல்வி முறையை உருவாக்கிக் கொடுத்து விட்டார்கள். அது சுவையற்ற ஒரு உணவு பதார்த்தம் ஆக இருப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமன்றி சினிமா சார்ந்த ஒரு அரசியல் போக்கை உருவாக்கி கேளிக்கைகளும், பெண் மோகத்தையும் கிடைக்கச் செய்தனர்.

குறிப்பாக பார்த்தீர்கள் ஆனால் அவர்களின் சினிமாக்கள் காதலை மையப்படுத்தி, பெண்களை மையப்படுத்தி இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. சமீப காலத்தில் சில மாறுதல்களை அவர்களுடைய திரைப்படங்கள் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எங்கள் நாட்டிலும் தமிழர்களை அழித்தொழிக்க துணை போனவர் ஆகின்றனர்.

அருமையான கருத்து... முல்லை நிலவன். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அது சிங்கப்பூரில் செய்யலாம்..  அடிமை மாநிலம். தமிழ்நாட்டில் மிக. மிக கஸ்டம். முதலில் தமிழ் நாடு தனிநாடு ஆகவேண்டும் அல்லது. கூடுதல்  அதிகாரம் தேவை.  முக்கியாமாக. மத்தியரசு  நினைத்தவுடன். கலைக்கும் சட்டம். அகற்றப்படவேண்டும். ஆட்சிக்காலம் முடியும்வரை. தெரிவுசெய்யப்பட்ட அரசு பதவியில்இருக்கவேண்டும்

ஒருவேளை ஜெகன் மோகன் ரெட்டி சிங்கப்பூரிலிருந்து கொண்டு  சீமான் சொல்வதையெல்லாம் கொப்பியடிக்கிறாரோ 😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MullaiNilavan said:

ஐயா,

தமிழ்நாடு ஒப்பீட்டளவில் அதிக கிராமங்களையும், சிற்றூர்களையும், சொற்ப நகரங்களையும் கொன்ற ஒரு மாநிலம்.

கிராமங்களையும், சிற்றூர்களையும்- ஏழைகள் 82-86%

நகரங்கள்-பணக்காரர்கள் 14-18%.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை- 8.50 கோடி.

சீமானின் அன்பான சர்வா சர்வாதிகார அரசு அமைப்பு என்பது, சிங்கப்பூரை ஒத்த தமிழ்நாட்டுக்கு பிரத்தியேகமான நிர்வாக சீர்திருத்த சட்டங்கள். அவர்களுடைய ஆட்சி கால சீர்திருத்தம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மாதிரியை நான் விளங்கிய வரையில் உங்களுக்கு இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கிராமங்கள், சிற்றூர்களில் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்க தூண்டுதல்.

2. தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்தில் ஏழைகள் சார்ந்த திட்டமிடல் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஊக்குவித்தலும், மத்திய ஆட்சியாளர்களுடன் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

3. அடிப்படைத் தேவைகள் இன் நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதை கண்காணித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, உற்பத்தி நடவடிக்கைகள் மக்கள் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாகவும், சேவைகளை ஒழுங்குபடுத்தி மேம்படுத்தி சென்றடைய வைத்தல்.

4. நன்மைகளும் பெறுபவர்களும், சலுகைகளும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பேதமின்றி பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்; குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதோர் கண்டறிதல்.

5. கிராமப்புற சமூகங்களில் காணப்படுகின்ற நூலகத்தைப் மூலதனத்தை பெருக்கக் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல்.

6. கண்டறியப்பட்ட சமூக கட்டமைப்புகளுக்கு ,சமமான பாதுகாப்பான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தல்; நிலங்களை பாதுகாத்தலும் பெண்கள் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளை மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

7. பெண்கள் பழங்குடி மக்கள் மற்றும் சிவ பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோருக்கு நிலம், நீர், நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களும் சமமான அளவில் கிடைக்க ஒரு அணுகு முறையை உருவாக்கிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.

8. கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அறிவியலுடன், நிலையான நவீன தொழில்நுட்பங்களை சேர்ப்பது ஒத்திசைந்து ஆதரித்து ஊக்குவித்தல்.

9. உற்பத்திகளின் விலை, வானிலை, சந்தைப் போக்கு, கடன் அடிப்படையில் ஆதாரங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

10. இயற்கை பேரழிவுகளை சந்திப்பதற்கு பழக்கப்படுத்தி, அதுவே நிவர்த்தி செய்வதற்கான உடனடி வேலைத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.

11. மாநில அரசு சார்ந்து காலநிலை மாற்றத்தின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கி விடுதல்.

12. கிராமப்புற தலைமைகளே உருவாக்கி, நிர்வாகத் திறனை ஊக்குவித்தல்.

13. பாதுகாப்பான நீர், புதிய வடிகால் அமைப்புகள் சீர் செய்தல்.

14.நிலையான எரிபொருள் வசதிகளை, மின்மயமாக்கல் வசதிகளை செய்து கொடுத்தல், தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்கிக் கொடுத்தது கொடுத்தல்.

15. நகர, கிராமங்களுக்கு இடையேயான சுகாதார கட்டமைப்புகளை விஸ்தரித்து சமமான முறையில் நிர்வகித்தல்.

16.கிராமப்புற முதலீடுகளை ஊக்குவித்தல்.

17.கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் நகர் ,கிராம ஒரே அளவில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது கட்டாயப்படுத்தியது.


 


 

இன்னம் சில கூறுகள் இதில் உள்ளடக்கலாம், ஆனால் நேர பளு காரணமாக நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

கிராமங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றப்படவேண்டும். கிராம மக்கள் தொழில்வாய்ப்புக்களுக்காக நகரங்களை நோக்கி படையெடுப்பதை குறைக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொருளாதாரத் திட்டங்களில் radical மாற்றங்களைச் செய்யமுடியாத நிலை இருக்கின்றது. அது சீமானுக்கும் தெரியும், ஆனால் வெளியே சொல்லமாட்டார்.

Make in India என்ற பெயரில் மோடி சொல்லும் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவர்கள் சொல்லாமல் மறைப்பது என்னவென்றால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வாங்கிய கடன்களால் அவர்களின் நிபந்தனைகளை மீறி ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான். மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசும் கடன் வாங்கி வருகின்றது. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும். மேற்கு நாடுகளின் மீது சாய்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும், மேற்கு நாடுகளின் சந்தைகளில் கால்பதிக்க முனையும் தமிழக முதலாளிகளும், மேற்கு நாடுகளின் சுயலாபக் கொள்கைகளை மீறி எதுவும் செய்யமுடியாது.

மேற்கு நாடுகளின் சந்தைப் பொருட்களை வாங்கினால்தான், மேற்குநாடுகளின் சந்தைகளில் ஓரளவாவது காலூன்றலாம்.. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றை மீறி உள்ளூரில் கடன் கொடுப்பதும், மானியங்கள் கொடுப்பதும் சரிவராது. சுருக்கமாகச் சொன்னால், தற்போதைய திறந்த தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும், நுகர்வோர் கலாச்சாரத்தையும் தக்கவைக்கும் பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அதிகம் விலகிச் செல்லமுடியாத தளைகள் உள்ளன. எனவே நாம் தமிழரின் “தற்சார்பு” பொருளாதாரமும் எழ முதலே தடுக்கிவிழும் அல்லது விழுத்தப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

எம்ஜிஆர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றது அதனால் அவர் கேள்வி கல்வி அறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை கொண்டிருக்கவில்லை.

படித்தவர்கள்  எல்லாம் சிறந்த நிர்வாகிகலில்லை சிறந்த நிர்வாகிகள் எல்லாம். படித்தவர்களைமல்ல. எம்ஜிஆர் அடிமட்டத்திலிருந்து வந்தவர் சிறந்த அனுபவசாலி ..சிறந்த நிரவாகியும் கூட..பல முறை. முதலமைச்சாராயிருந்து இருக்கிறார்.இந்திரா அமமையார் சட்டமன்றத்தைக்கலைததபோதும். மீண்டும் தமிழகமக்கள். அவரையே தெரிவு செய்தார்கள். இன்றும் கூட  அவர் உயிருடனிருந்து  தேர்தலில் நிற்பாராயின்..தமிழகமக்கள் மிகப்பெரும்பான்மையுடன் அவரை. முதலமைச்சராக. தெரிவுசெய்வார்கள்.இந்தப் படககாதவனைப் படித்தவர்களும் வாக்குப்போட்டு தெரவுசெய்துள்ளார்கள். சீமான் எனனும் படித்தவனுக்கு படிககதவனும் வாக்குபபோடப்போவதிலலை. படிப்பில்லை என்ற ஒரே காரணத்துக்காக எம்ஜிஆரை மட்டாமாக எழுதுவது எற்புடையதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

தமிழகத்தில் உள்ளவர்கள் அயல் இனங்களில் உருவாகின்ற ஆக்கிரமிப்புகளை உணர தெரியாமல் இருக்கின்றார்கள். அத்தோடு அதனைச் சார்ந்து எழுதுபவர்களை அல்லது கொடுப்பவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்து விடுவார்கள்.

தமிழகம் இந்தியாவின் ஒர் பகுதி...இந்தியாவின் ஒர் பகுதியில் ..எந்த இந்தியானும் வந்து  குடியிருக்கமுடியும்..அந்தப்பகுதியிலிருப்பவனே  கேள்வி கேட்கமுடியாது  ..நீங்கள். எப்படி கேட்க முடியும்?🤓🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

இப்படிப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, ஒரு எழுச்சி விஞ்ஞானத்தின் தேவை எப்படி உருவாக்குவீர்கள். ஆகவே அவர்கள் சீமானை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

என்ன சொல்லவருகிறிர்கள்? மக்கள் தகுதியற்றாவர்கள்..சீமான் தகுதியான வேட்பாளர்..அப்படியா? பிறகு  எப்படி  காமராஐர்...அண்ணத்தரை....எம்ஜிஆர்...தெர்வு செய்தார்கள்?இன்றும் தமிழகமக்கள். இந்த முதலமைச்சர்மாரை  புகழ்கிறார்கள்.தகுதியான வேட்பாளர் போட்டியிடவிடில். மக்கள்  எப்படி. நல்ல முதலமைச்சரைத்தெரிவு  செய்ய முடியும்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

என்ன சொல்லவருகிறிர்கள்? மக்கள் தகுதியற்றாவர்கள்..சீமான் தகுதியான வேட்பாளர்..அப்படியா? பிறகு  எப்படி  காமராஐர்...அண்ணத்தரை....எம்ஜிஆர்...தெர்வு செய்தார்கள்?இன்றும் தமிழகமக்கள். இந்த முதலமைச்சர்மாரை  புகழ்கிறார்கள்.தகுதியான வேட்பாளர் போட்டியிடவிடில். மக்கள்  எப்படி. நல்ல முதலமைச்சரைத்தெரிவு  செய்ய முடியும்..?

வெரி சிம்பிள்! போட்டியிடுவோரில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கவேண்டும்!!

தகுதியானவர் போட்டியிடவில்லை என்று யாரை சொல்லவருகிறீர்கள்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியையா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

படித்தவர்கள்  எல்லாம் சிறந்த நிர்வாகிகலில்லை சிறந்த நிர்வாகிகள் எல்லாம். படித்தவர்களைமல்ல. எம்ஜிஆர் அடிமட்டத்திலிருந்து வந்தவர் சிறந்த அனுபவசாலி ..சிறந்த நிரவாகியும் கூட..பல முறை. முதலமைச்சாராயிருந்து இருக்கிறார்.இந்திரா அமமையார் சட்டமன்றத்தைக்கலைததபோதும். மீண்டும் தமிழகமக்கள். அவரையே தெரிவு செய்தார்கள். இன்றும் கூட  அவர் உயிருடனிருந்து  தேர்தலில் நிற்பாராயின்..தமிழகமக்கள் மிகப்பெரும்பான்மையுடன் அவரை. முதலமைச்சராக. தெரிவுசெய்வார்கள்.இந்தப் படககாதவனைப் படித்தவர்களும் வாக்குப்போட்டு தெரவுசெய்துள்ளார்கள். சீமான் எனனும் படித்தவனுக்கு படிககதவனும் வாக்குபபோடப்போவதிலலை. படிப்பில்லை என்ற ஒரே காரணத்துக்காக எம்ஜிஆரை மட்டாமாக எழுதுவது எற்புடையதில்லை.

வணக்கம் ஐயா,


நிர்வாகம் என்பது ஒரு வரையறைகளை கொண்டது. அது பல படிமுறைகள் கொண்ட ஒரு வலுவான, செயல்முறை அடுக்குகளை கொண்டு, தொடர்ந்து இயங்கும்.


எனது கருத்து எம்ஜிஆர் சிறந்த நிர்வாகி அல்ல என்பதை சுட்டிக்காட்டுவது அல்ல.


அரசு நிர்வாகம் என்பது சாதாரண நிர்வாக முறைகளை விட ஒரு வலுவான எதிர்கால சிந்தனையுடன் திட்டங்களை உருவாக்கி, அதனை அடைவதற்கான தந்திரோபாயங்கள் சிக்கல்களை ஆராய்ந்து முதன்மையான வெற்றியை நிலைப்படுத்தி, அதனைத் தொடர்ந்து செய்வதற்கான ஒரு விதிமுறைகளை அல்லது  ஒரு கட்டமைப்புகளை உருவாக்கி விடும். 


இங்கே சிக்கல் எம்ஜிஆரின் தூர நோக்கு, கல்வி முறை மாற்றம் ஒன்றை புகுத்த முடியவில்லை என்பதே. இதில்தான் தலைமைத்துவத்தின் ஆளுமையும், சிறந்த பார்வையும் வெளிப்படும்.


உதாரணமாக ஒரு குடும்பத்தில், தாய் அல்லது தகப்பனார் தங்களது பிள்ளைகள் மீதான அக்கறை எதை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.  நான் உங்கள சிந்தனைக்காக அதை விட்டு விடுகிறேன். நீங்களே  உங்களைச் சுற்றி நடந்த குடும்பங்களின் வளர்ச்சி அல்லது தாழ்வு யாரை மையப்படுத்தி இருந்தது என்பதை ஒரு முறை சிந்தியுங்கள். அதில் சில விடைகள் உங்களுக்கு புரியும். அதுவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு ஒத்து போகும்.


சமூக கட்டமைப்பு அதுவும் குறிப்பாக தமிழர்களுடைய சமூக கட்டமைப்பு, மிக மிக வலிமையான  உணர்வுகளின் உணர்வுகளின் அடிப்படையில் அமையப்பெற்றது. குடும்பம், உறவு, உறவுகளின் பினைப்பு, பரம்பரை ,ஊர்,  கிராமம் நகரம் அதுவே பின்பு நாடாகி இறுக்கமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளார்கள். ஒரு குடும்பத்தில் எடுக்கின்ற முடிவுகள் எவ்வாறு  ஒரு பரம்பரை ஆளுகின்றது என்பதை நீங்கள் கண்கூடாக உணர்வீர்கள்.

இது தான் கிட்ட தட்ட 2000 ஆண்டுகள் முன்பு ஒரு இறுக்கமான ஒரு சமூக கட்டமைப்பை வைத்திருந்தார்கள் அது பின்னாளில் மெதுவாக கலையத் தொடங்கி இவ்வளவு சீர்கேடுகளுக்கு ஆளாகி உள்ளோம்.

இங்கே குறைபாடு எம்ஜிஆர் வெளிப்படுத்தியநிர்வாகப் சம்பந்தப்பட்டதல்ல, எனது தனிப்பட்ட கருத்து எம்ஜிஆர் என்ன தேவை என்பதை தூர நோக்கோடு, கடந்து வந்த அதாவது வரலாறை புரிந்துகொள்ளாமல் விட்டதே. அது  சார்ந்து தனது திட்டங்களை விடவில்லை என்பதே. தனது குடிவாழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர் உணரவில்லை, உணர்த்த இல்லை.

நீங்கள் குறிப்பிட்டது போல தமிழக மக்கள் அவர் இருந்திருந்தால் மீண்டும் மீண்டும் அவருக்கு வாக்கு செலுத்தி அவரை முதல்வராக்கி இருப்பார்கள். இதனையே அவரது நுணுக்கமான அவருக்குத் தெரியாத "கட்டுப்படுத்தல்" என்கின்ற ஒரு சொல்லாடலில் ஒருபொருள் முறையில் வருகிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

வெரி சிம்பிள்! போட்டியிடுவோரில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கவேண்டும்!!

தகுதியானவர் போட்டியிடவில்லை என்று யாரை சொல்லவருகிறீர்கள்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியையா ??

உங்களுக்கு அது மிகவும் இலகுவாகயிருக்கிறது.  ஆனாலும். நீங்கள். சென்னமாதிரித்தான் செய்யவேண்டும் ...அப்படித்தெரிவுசெய்யும் முதலமைச்சர்  எப்படி நல்ல முதலமைச்சராக முடியும்?. உங்கள் நட்சத்திர நடிகர். ரஜினி வாக்குப்போடவே. தகுதியற்றவர்...உந்த வயதில் ஜேர்மனியில். அரசியலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.😍😍😎😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
    • ஏன் இந்த‌ ச‌ந்தேக‌ம் 😁 போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் எழுதின‌து ந‌ட‌ந்து விட்ட‌து அண்ணா தென் ஆபிரிக்க‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு என்று எழுதினேன்  அதோட‌ இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி குறைந்த‌ ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சிர‌ம‌த்தை கொடுத்தவை இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவ‌ர்க‌ள் வெளிய‌ யாழில் ப‌ல‌ர் இல‌ங்கையால் புள்ளிக‌ளை இழ‌க்க‌ கூடும் எல்லா குருப்பிலும் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணி என்ற‌ கேள்விக்கு க‌ண்டிப்பாய் அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்காவை ம‌ற்றும் இல‌ங்கையை தான் தெரிவு செய்து இருப்பின‌ம்.............................. இல‌ங்கை குருப் 8க்கை வ‌ந்தாலும் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ர‌க் கூடும்......................................... 2014க்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பையிலும் இல‌ங்கை அணியின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்.......................................
    • ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.