Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி!

May 18, 2021

1-1.jpeg

யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி காலினால் தட்டி அகற்றியுள்ளார். 

இச் செயலை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டித்து உள்ளத்துடன் , தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி உயிரிழந்த எம் உறவுகளுக்கு நாங்கள் உணர்வு பூர்வமாக ஏற்றிய சுடரினை காவலாளி காலினால் தட்டி அப்புறப்படுத்திய செயலானது எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும். என கவலையுடன் மாணவர்கள் தெரிவித்தனர். 

பல்கலைக்கழக வளாகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவிடாது தடுக்கும் நோக்குடன் நேற்றைய தினம் முதல் , பல்கலை கழக சூழலில் இராணுவம் மற்றும் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, புலனாய்வாளர்களின்  கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இன்றைய தினம் மதியம் மாணவர்கள் தடைகளை தாண்டி வளாகத்தினுள் உள்ள நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இருந்தனர். 

அந்நிலையில் அதனை அவதானித்த பல்கலைக்கழக காவலாளி நினைவிடத்திற்கு வந்து மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளார். 
 

https://globaltamilnews.net/2021/161118/

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் தமிழரின் சாபக்கேடு 

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

இவ்வினம் எப்படி விடுதலை பெற தகுதி பெறும்???

இப்பொழுது புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா?

அப்படியானால் இவ்வினம் எப்படி ஜனநாயக ரீதியில் இலக்கை அடையும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் சிங்களத்தின் காவலாளிகள் எமது இனத்துக்குள் இருந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 😁🤢

ஆழ்ந்த அனுதாபங்கள். 🤢😆

33 minutes ago, குமாரசாமி said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது தான் தமிழரின் சாபக்கேடு 

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

இவ்வினம் எப்படி விடுதலை பெற தகுதி பெறும்???

இப்பொழுது புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா?

அப்படியானால் இவ்வினம் எப்படி ஜனநாயக ரீதியில் இலக்கை அடையும்??

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள காவலாளிகள் Security  offices ல் பெரும்பான்மையானோரில் EPDPயினரால் நிரப்பப்பட்டவர்களே . இது மட்டுமல்ல,  பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பாலான ஆளணிகள் இவர்களால்தான் நிரப்பப்படுகிறது..

இவ்வாறானவர்களிடம் இதனைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள், பணியாற்றும்  ஊழியர்கள் (விரிவுரையாளர்கள் உட்பட..) சதவீதம் வெகுவாக குறைதுவிட்டது என அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

இவனைப் பார்த்தால் தமிழனைப்போல் தெரியவில்லையே..... ??

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றிய சுடர், தமிழன் ஒருவனால்....  காலால் தட்டி விட்ட செயலை நினைக்க, 
மிகுந்த ஆத்திரமும், மனவேதனையும் ஏற்படுகின்றது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

புலிகள் அழிந்து போனாலும் 
அவர்கள் வால்கள் இந்த துரோகி பட்டம் கட்டுவதை விட போவதில்லை 

கல்விமான்கள் கவரி மான்கள் என்று இது தொடர்ந்துகொண்டே இருக்கும் 
இன்று பல்கலைக்கழகத்தை பாதுக்காக்கும் ஒரு காவலாளி.
நாளை யாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள காவலாளிகள் Security  offices ல் பெரும்பான்மையானோரில் EPDPயினரால் நிரப்பப்பட்டவர்களே . இது மட்டுமல்ல,  பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பாலான ஆளணிகள் இவர்களால்தான் நிரப்பப்படுகிறது..

இவ்வாறானவர்களிடம் இதனைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்

☹️

இவர்களைப் பாதுகாக்க தேசியரீதியில் தமிழர்களும் அடங்கிய 61.464 பேர் உள்ளனர். அதாவது வாக்களித்தவர்கள் உள்ளனர். ஏன் யாழ்களத்திலும் சிலர் வெளிப்படலாம்.😲

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவுக்கு ஒருமுறை டக்ளஸ்,சித்தார்த்தன், அப்புறம் திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் துரைரட்ணமோ ஏதோனு நினைக்கிறேன் , மூவரும்  ஒரு வானொலிக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்,

அப்போது நேயர் ஒருவர் டக்ளசை கேட்டார்,

எத்தனையோ ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் இனவிடுதலைக்காக வெடித்து சிதறி தற்கொடை புரிகின்றார்களே இறந்து போகின்றார்களே அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று,

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று. தியாகம் என்று பார்க்கப்படவேண்டியதும் இல்லை என்று எகத்தாளமாக சொன்னான்.

அப்போது ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.

அந்தநேரமே சிங்கள அடிப்பொடிகளாக எக்காளமிட்டு திரிந்த இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களும், இப்போது முழுக்க முழுக்க அவர்களின் நேசத்துக்குரிய சிங்களவனின் ஆட்சியின் கீழ் வாழும்போது எம்மவர்களின் தியாகத்தை பொருட்படுத்துவார்களா?

அவன் கையால் தட்டுறானோ,

காலால் தட்டிவிடுறானோ தட்டிவிட்டுபோகட்டும்,

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தின் முன் ஏற்றும் நினைவேந்தல் சுடர் ஒவ்வொரு வருடமும்  ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்போதும் வந்து தட்டினால் தட்டிவிட்டு போகட்டும்.அவர்கள் அவர்களது தொழிலை செய்கிறார்கள்  .மாணவர்கள் தமது  கடமையை செய்யட்டும்.

தட்டிவிடுகிறார்கள் என்று எப்போது சுடர் ஏற்றப்படாமல் விடுகிறதோ அன்றுதான் தமது இலக்கை அடைந்துவிட்டோம்  என்ற மகிழ்வில் அவர்களுக்கு வெற்றி, இப்போது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, valavan said:

ஐரோப்பாவுக்கு ஒருமுறை டக்ளஸ்,சித்தார்த்தன், அப்புறம் திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் துரைரட்ணமோ ஏதோனு நினைக்கிறேன் , மூவரும்  ஒரு வானொலிக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்,

அப்போது நேயர் ஒருவர் டக்ளசை கேட்டார்,

எத்தனையோ ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் இனவிடுதலைக்காக வெடித்து சிதறி தற்கொடை புரிகின்றார்களே இறந்து போகின்றார்களே அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று,

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று. தியாகம் என்று பார்க்கப்படவேண்டியதும் இல்லை என்று எகத்தாளமாக சொன்னான்.

அப்போது ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.

அந்தநேரமே சிங்கள அடிப்பொடிகளாக எக்காளமிட்டு திரிந்த இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களும், இப்போது முழுக்க முழுக்க அவர்களின் நேசத்துக்குரிய சிங்களவனின் ஆட்சியின் கீழ் வாழும்போது எம்மவர்களின் தியாகத்தை பொருட்படுத்துவார்களா?

அவன் கையால் தட்டுறானோ,

காலால் தட்டிவிடுறானோ தட்டிவிட்டுபோகட்டும்,

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தின் முன் ஏற்றும் நினைவேந்தல் சுடர் ஒவ்வொரு வருடமும்  ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்போதும் வந்து தட்டினால் தட்டிவிட்டு போகட்டும்.அவர்கள் அவர்களது தொழிலை செய்கிறார்கள்  .மாணவர்கள் தமது  கடமையை செய்யட்டும்.

தட்டிவிடுகிறார்கள் என்று எப்போது சுடர் ஏற்றப்படாமல் விடுகிறதோ அன்றுதான் தமது இலக்கை அடைந்துவிட்டோம்  என்ற மகிழ்வில் அவர்களுக்கு வெற்றி, இப்போது அல்ல.

ஆனால் இதே டக்ளஸ் தேவானந்தா, ஜெயசுக்குறு முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட, காயப்பட்ட இராணுவத்தினரை கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளில் பார்த்துவிட்டு(தற்செயலாக பார்க்க வேண்டி ஏற்பட்டது) வந்து, தனிப்பட்ட ரீதியில்  "புலிகள் நல்ல அடிதான் குடுத்திருக்கிறாங்கள்" என்று கூறிப் புளகாங்கிதமடைந்தது எனக்கு மிக நன்றாகவே தெரியும். 

புலிகளின் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பும் மரியாதையும் தங்களுக்கில்லையே என்கின்ற கோபம்தான் புலிகளின் மீதான வெறுப்பிற்கு பிரதான காரணம். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Paanch said:

இவனைப் பார்த்தால் தமிழனைப்போல் தெரியவில்லையே..... ??

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

ஒரேயொரு வித்தியாசம் தான்

அவன் எழும்பி நிற்பான் 

இவன் குனிந்து நிற்பான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

யாழில் உலகத் தமிழாராய்ச்சி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது சிவாஜியின் கையை பிடித்து த இழுத்து தள்ளிய ஸ்ரீலங்கா இராணுவம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

வித்தியாசம் ஒன்றுமில்லை
ஆனால் இவர்களுக்கிடையில் இருக்கும்  ஒற்றுமை
என்றால் சிங்கள மக்களில் 10  வீத   மக்கள் இனத்துவேசம் கொண்டவர்களாக இருப்பார்கள்
அதே வேளையில் தமிழ் மக்களிலும் 10  வீதம் இனத்துரோகிகள் இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

யாழில் உலகத் தமிழாராய்ச்சி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது சிவாஜியின் கையை பிடித்து த இழுத்து தள்ளிய ஸ்ரீலங்கா இராணுவம்.

 

இது எப்போது நடைபெற்ற சம்பவம்? 

கண்டிக்கப்பட வேண்டிய இழி செயல் இது. சட்டவிரோதமாக ஏதும் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். அக வணக்கம் செய்வதை, ஈகை சுடர் ஏற்றுவதை தடுப்பது வெறித்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சிங்களம் செய்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் இருந்த இளைஞர்களை குறிவைத்து இந்தப்பேயும் செய்துகொண்டிருந்தது என்பது எத்தனை பேர் அறிவர்.

 

7 hours ago, தமிழ் சிறி said:

காலால் தட்டி விட்ட செயலை நினைக்க, 
மிகுந்த ஆத்திரமும், மனவேதனையும் ஏற்படுகின்றது

அதை விடுங்கள்! இன்னும் ஐந்து ஆண்டுகளில் (ஒருவரின் கூற்றுப்படி)கணிசமான எண்ணிக்கையில் தமிழ் போலீஸ், ஆமி, கடற்படை, விமானப்படை என்று நிறைந்து இதைத்தான் செய்யபோகினம். அப்போ இந்த ஒட்டுக்குழுக்களின் துரோகம் மறைந்து எம் இளைய சந்ததி பலியாகிவிடும், எனும் பேராசையில் கைதட்டி வரவேற்கினம்.  அவர்களும் அதே பொறியில் உள்ளனர் என்பது புரியாமல்.

3 hours ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

சாதாரணமாக எரிந்து துயர் களையும் சுடரை கொழுந்து விட்டெரிய தூண்டுபவர்கள் இவர்கள் தாம். இவர்களும் நமது வீரத்தை விரிந்து  பரப்ப  வித்திட்டவர்களே. தங்களை அறியாமல் தூண்டிகளாக  உதவிக்கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.