Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் விடுதி ஒன்று முற்றுகை! 6 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் விடுதி ஒன்று முற்றுகை! 6 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நல்லுார் கோவிலுக்கு அருகில் விபச்சார விடுதி சற்று முன் முற்றுகை!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத்
தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள்
மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன்
தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த
விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

“நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள்
இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான
அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டது.

இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள்
மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு இருந்தனர். விடுதி உரிமையாளரும் மாறுபட்ட
தகவல்களை வழங்கினார். அதனால் அவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்” என்று
பொலிஸார் தெரிவித்தனர்.

https://vampan.net/30530/

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

யாழ் நல்லுார் கோவிலுக்கு அருகில் விபச்சார விடுதி சற்று முன் முற்றுகை!!

கொழும்பானுக்கு கொஞ்சம் குளு குளு என்று இருக்குமே என்ன

ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணி  இருப்பாங்கள் நீங்கள் வேற தப்பாய் நினையாதீங்க

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

உப பொலிஸ் பரிசோதகர் மேனன்

இந்த பெயரும் இப்பொழுது நம்மவர்களில் உள்ளதா? நான் இதுவரை இந்த பெயர் மலையாளிகல்ன் பெயர் என நினத்திருந்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, putthan said:

இந்த பெயரும் இப்பொழுது நம்மவர்களில் உள்ளதா? நான் இதுவரை இந்த பெயர் மலையாளிகல்ன் பெயர் என நினத்திருந்தேன்

இப்பவெல்லாம் பெயரை வைச்சு ஆக்களை கண்டு பிடிக்கேலாது கண்டியளோ.

சாருக்கான்,சிந்துஜான் எண்டால் கிந்தி ஆக்கள் எண்டு நினைப்பியள். அதுதான் இல்லை.அது வடலியடி  கனகசபை அண்ணையின்ரை பொடியளின்ரை பெயர்.

நாதன் எண்ட பெயரையே வெள்ளைக்காரன் ஸ்ரையிலிலை நாத்தான் எண்டுதான் உச்சரிக்கினம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் பெயரை வைச்சு ஆக்களை கண்டு பிடிக்கேலாது கண்டியளோ.

சாருக்கான்,சிந்துஜான் எண்டால் கிந்தி ஆக்கள் எண்டு நினைப்பியள். அதுதான் இல்லை.அது வடலியடி  கனகசபை அண்ணையின்ரை பொடியளின்ரை பெயர்.

நாதன் எண்ட பெயரையே வெள்ளைக்காரன் ஸ்ரையிலிலை நாத்தான் எண்டுதான் உச்சரிக்கினம். 😎

நான் நினைச்சேன் வெளிநாட்டில தான் அப்படி எண்டு .....ஊரிலும் அப்படியா?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, putthan said:

நான் நினைச்சேன் வெளிநாட்டில தான் அப்படி எண்டு .....ஊரிலும் அப்படியா?🤣

 ஊரிலை ஒரு பிள்ளையார்  கோயில் 5ம் திருவிழா உபயகாரர் பெயர் டயானா 😎
 நீங்கள் பிரிட்டிஷ் டயானாவை நினைச்சால் அது உங்கடை பிழை 😁

நாங்கள் முன்னேற்றம் அடைஞ்சு கொண்டு வாறமாம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

 ஊரிலை ஒரு பிள்ளையார்  கோயில் 5ம் திருவிழா உபயகாரர் பெயர் டயானா 😎
 நீங்கள் பிரிட்டிஷ் டயானாவை நினைச்சால் அது உங்கடை பிழை 😁

நாங்கள் முன்னேற்றம் அடைஞ்சு கொண்டு வாறமாம் :cool:

பக்தி பரவசத்தில்   பிள்ளையாரை சாள்ஸ் என்று பெயரை மாற்றி வைக்காவிட்டால் சரி....
அப்படி மாற்றி வைச்சால் என்ன ....கணபதி,விக்கினேஸ்வரன் ,வினாயகன் ...இந்த வரிசையில் சாள்ஸ் என்று வைச்சா என்ன தப்பு ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, putthan said:

பக்தி பரவசத்தில்   பிள்ளையாரை சாள்ஸ் என்று பெயரை மாற்றி வைக்காவிட்டால் சரி....
அப்படி மாற்றி வைச்சால் என்ன ....கணபதி,விக்கினேஸ்வரன் ,வினாயகன் ...இந்த வரிசையில் சாள்ஸ் என்று வைச்சா என்ன தப்பு ? 

Ist möglicherweise ein Bild von 3 Personen

அப்படியே வள்ளி தெய்வானைக்கும் தகுந்த ஆங்கில பெயர்களை சூட்டி பக்தி பரவசத்தில் நீந்த அழைப்பு விடுக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

Ist möglicherweise ein Bild von 3 Personen

அப்படியே வள்ளி தெய்வானைக்கும் தகுந்த ஆங்கில பெயர்களை சூட்டி பக்தி பரவசத்தில் நீந்த அழைப்பு விடுக்கின்றேன் 

தெம்ஸ் நதிக்கரையில் முருகனை காதல் கொண்டமையால் தெய்வாணையை தெம்சி என்றும்.
வேல்ஸ் மாநிலத்தைல் வேல்முருகனை அரவணைத்மையால் வள்ளியை வெல்சி என்று இன்று முதல் அறிவிக்கிறோம் ....இதேவே கட்டளை இதுவே சாசனம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, putthan said:

தெம்ஸ் நதிக்கரையில் முருகனை காதல் கொண்டமையால் தெய்வாணையை தெம்சி என்றும்.
வேல்ஸ் மாநிலத்தைல் வேல்முருகனை அரவணைத்மையால் வள்ளியை வெல்சி என்று இன்று முதல் அறிவிக்கிறோம் ....இதேவே கட்டளை இதுவே சாசனம்....

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது அன்னதான மடத்திலை சாம்பாருக்கு பதிலாய் மட்டன் சிக்கன்  கட்டாயம் எண்டு சட்டத்தை கொண்டு வரவேணும் எண்டு கும்பிட்டு கேட்டுக்கொள்ளுறன். ஏனெண்டால் சனம் அங்காலை பாயுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மட்டன் சிக்கன்  கட்டாயம் எண்டு சட்டத்தை கொண்டு வரவேணும் எண்டு கும்பிட்டு கேட்டுக்கொள்ளுறன். ஏனெண்டால் சனம் அங்காலை பாயுது.

இதில பெரிய உண்மை இருக்கு கு,சா ...சாம்பாரும் சோறும் ஒரு நாளும் மதத்தை காப்பாற்றாது

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது அன்னதான மடத்திலை சாம்பாருக்கு பதிலாய் மட்டன் சிக்கன்  கட்டாயம் எண்டு சட்டத்தை கொண்டு வரவேணும் எண்டு கும்பிட்டு கேட்டுக்கொள்ளுறன். ஏனெண்டால் சனம் அங்காலை பாயுது.

உங்களுக்கு பல்லு கடுக்குதென்று நான் நினைக்கிறன். சும்மா பழியை சனத்தின் மேல் வையாதீங்கோ சாமியோவ்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, satan said:

உங்களுக்கு பல்லு கடுக்குதென்று நான் நினைக்கிறன். சும்மா பழியை சனத்தின் மேல் வையாதீங்கோ சாமியோவ்!

வெள்ளிக்கிழமை மரக்கறி சாப்பாடு உரு வரத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

இந்த பெயரும் இப்பொழுது நம்மவர்களில் உள்ளதா? நான் இதுவரை இந்த பெயர் மலையாளிகல்ன் பெயர் என நினத்திருந்தேன்

எங்கள் ஊரில் இந்த பெரிய உண்டு 
நான் தமிழ் பெயர் என்று எண்ணி இருந்தேன் 
 

"குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர்."

பாவங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

எங்கள் ஊரில் இந்த பெரிய உண்டு 
நான் தமிழ் பெயர் என்று எண்ணி இருந்தேன் 
 

"குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர்."

பாவங்கள் 

ஊடகங்கள் பல்கிபெருகியதால் கோழி முட்டை போட்டாலும் செய்தியாகிவிட்டது....அன்றும் மானிப்பாயில் ஒரு சிலதுகள் இருந்ததுகள் ஆனால் வேலிபொட்டுகளூடாக மட்டுமே விடுப்பாக பேசப்பட்டது இன்று சர்வதேச அளவில் பேசுகிறோம்...

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது அன்னதான மடத்திலை சாம்பாருக்கு பதிலாய் மட்டன் சிக்கன்  கட்டாயம் எண்டு சட்டத்தை கொண்டு வரவேணும் எண்டு கும்பிட்டு கேட்டுக்கொள்ளுறன். ஏனெண்டால் சனம் அங்காலை பாயுது.

எங்கட  ஊரில பிள்ளையார்  கோயில் திருவிழாவில்

பகலில் அன்னதானமும் (சோறும்)

இரவில் நூடிலும் கொடுத்தார்களாம்

நாமளும்  போகலாம் போல  இருக்கண்ணே???😪

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

தெம்ஸ் நதிக்கரையில் முருகனை காதல் கொண்டமையால் தெய்வாணையை தெம்சி என்றும்.
வேல்ஸ் மாநிலத்தைல் வேல்முருகனை அரவணைத்மையால் வள்ளியை வெல்சி என்று இன்று முதல் அறிவிக்கிறோம் ....இதேவே கட்டளை இதுவே சாசனம்....

உடான்ஸ்சாமியார் இந்த வரலாற்று புனைவை வன்மையாக கண்டிக்கிறார்.

இதில் நடுவில் இருப்பவர் Morgan. இவரை பின்னாளில் தமிழர்கள் முருகன் என்றழைத்தார்கள்.

இவரின் மனைவி பெயர் Diana. அதை தமிழர்கள் டை ஆனா …. தை வானா…. தெய் வானா… என்று மருவி இப்போ தெய்வானை என்கிறார்கள்.

இவரின் துணைவி பெயர் Valeri இதே வள்ளி என்று மருவியது. 

டயானா, வலரி சமேத மோர்கன் போற்றி போற்றி.

13 hours ago, Maruthankerny said:

எங்கள் ஊரில் இந்த பெரிய உண்டு 
நான் தமிழ் பெயர் என்று எண்ணி இருந்தேன் 
 

மலையாளப் பெயர்தான். Malabar inhabitants என்று முன்பொருமுறை யாழில் ஒரு கலவரம் நடந்து எல்லாரும் கோசானை போட்டு கும்மியது நினைவுக்கு வரலாம்🤣

20 hours ago, putthan said:

இந்த பெயரும் இப்பொழுது நம்மவர்களில் உள்ளதா? நான் இதுவரை இந்த பெயர் மலையாளிகல்ன் பெயர் என நினத்திருந்தேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கு சா அண்ணை சொல்றமாரி இப்ப யாழ்பாணத்தில் கபில் தேவ், சஹானா (பேகம்) எல்லாரும் இருப்பதால் தெளிவாக சொல்ல முடியாது.

19 hours ago, putthan said:

பக்தி பரவசத்தில்   பிள்ளையாரை சாள்ஸ் என்று பெயரை மாற்றி வைக்காவிட்டால் சரி....
அப்படி மாற்றி வைச்சால் என்ன ....கணபதி,விக்கினேஸ்வரன் ,வினாயகன் ...இந்த வரிசையில் சாள்ஸ் என்று வைச்சா என்ன தப்பு ? 

உங்கட ஆள் சேர்ச்ச கண்டு, காண்டாகி அட்டகிரி பக்கம் திரும்பின ஆள். உந்த பேர் மாத்திர மேட்டர் கேட்டால் என்ன செய்வாரோ🤣

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ் சிறிசுகள் சந்தோசமாக இருக்க விடுகிறாங்களில்லை. கலி முத்திப் போச்சு.😲 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

 

உங்கட ஆள் சேர்ச்ச கண்டு, காண்டாகி அட்டகிரி பக்கம் திரும்பின ஆள். உந்த பேர் மாத்திர மேட்டர் கேட்டால் என்ன செய்வாரோ🤣

அவர் புலம் பெயர்ந்து அவர்களின்ட சேர்ச்சுக்குள்ள இருக்கிறார்....ஒரு காலத்தில் திரும்பினவர் ....அப்படி செய்தது  தப்பு என உணர்ந்து அவரும் இணக்க அரசியலை சர்வதேச அளவில் செய்கின்றார்...மக்களையும் தன்னை பின்பற்றும்படி க‌டும் கட்டளை இட்டுள்ளார்.அது தான் மக்கள் மதம்மாறினால் கண்டு கொள்வதில்லை🤣

 

ஓம் நமச்சிவாய.... கொரானா சிட்னியில் அட்டகாசம் பண்ண தொடங்கிவிட்டது ....நம்மட சாமிகளுடன் சேட்டை விடக்கூடாது .....
 மருதடியானே சும்மா பகிடிக்கு கிறுக்கிறேன் வெற்றியா எடுத்திடாதேயப்பா மருதடியானே.....நான் உன்னடியின் கீழ் .....🙏

  • கருத்துக்கள உறவுகள்

    சத்தமில்லாமல் துமிந்தவை விடுதலை செய்வதற்காக விடுதலை என்கிற பெயரில்  வெளியில் வந்த தமிழரை மீண்டும் உள்ளுக்கை கொண்டுபோவதற்கு சிங்களமே செய்திருக்கும். இன்னும் சில நாளில் கைகுண்டுகள் கண்டுபிடித்தல், ஒன்றுகூடல்கள், முகநூல் பிரச்சாரங்கள் என்று சொல்லி கைது ஆரம்பிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.