Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

  மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும்   காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டிலும், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் மேற்கு சரிவிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

  இதற்கிடையில், கடல் பகுதிகளைப் பொறுத்தவரை, கொழும்பு முதல் காலி வரை கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் தென்மேற்கு திசையில் காற்று வீசும் என்றும் தீவின் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

காலி முதல் பொத்துவில் வரை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாகவும், புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 60 கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.

காலி முதல் பொத்துவில் வரை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாகவும், புத்தளம் முதல் மன்னார் வழியாக கங்கசேந்துறை வரையிலான கடல் பகுதிகளிலும் சில நேரங்களில் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், தீவைச் சுற்றியுள்ள மற்றும் கடல் பகுதிகளும் சில நேரங்களில் கடினமானதாக இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. .

இதன் விளைவாக, இது தொடர்பாக கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொழும்பை பொறுத்தவரையில் காலையிலிருந்து தொடர்ச்சியாக சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக கடுமையாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால், பிரதான வீதிகளிலும் தாழிநில பகுதிகளிலும் காட்டாறு வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதைப்போல, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மழையும்  சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருக்கின்றது.

வீதிகள் பல வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் காணப்படுகின்றன. வீதியோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் பல, கவிழ்ந்து விழுந்துகிடக்கின்றன.  (படம்: சமூக வலைத்தளம்)

image_6d6f6a5655.jpgimage_ac5ad81019.jpgimage_abf79b1ac4.jpgimage_ab949fb765.jpg


  • Replies 61
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

சா... லீவுல போக இருக்கிற, இரண்டொரு சினேகிதருக்கு, கைக்காசை போட்டு, சிறி லங்காவுக்கு கொலிடே அனுப்புவம் எண்டு இருந்தன்....

மழை வந்து கெடுத்துப்போட்டுது...  😰

***

நேற்று பின்னேரம், கிழக்கு லண்டன் போனேன்.

45 நிமிட பயணம், 3 மணி நேரம் எடுத்தது, திரும்பி வரும் போது, போன பாதை பூட்டி, வேறு பெரு வழி பாதை வழியே திருப்பி, விட்டார்கள். அது 2 மணிநேர பயணம்.

காரணம் இரு மணிநேர பேய் மழை.

****

அத விடுவோம்...

இந்த உலகம்.... மனிதத்துக்கு எதோ ஒரு தகவல் சொல்கிறது என்று மட்டும் தெரிகிறது.

பாவம், மனிதனால், இப்புவியில், சேர்ந்தே வாழும், அனைத்து விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.

மனிதனின் இயற்க்கைக்கு எதிரான வேலைகளில் ஒன்று.... கோழிகளில் பெண் கோழிகள், மாடுகளில் பெண் மாடுகள் மட்டுமே, ஒரு கிழமைக்கு மேலே வாழும்.

வாழும் போது, முட்டை, பால், வாழ்ந்து முடியும் போது இறைச்சி.

இந்த போக்கில், மனித இனத்துக்கு ஆணே தேவையில்லை என்று வரலாம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா.
ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம்.
இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா.
ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம்.
இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது. 

கலியுகம் முடிய புது யுகம் வரும். அப்போது கல்கி அவதாரம் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.... ஆனால் கலியுகம் எப்போது முடியும் என முடியும் போது தான் தெரியவரும். 🥴

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இது லண்டனில் நேற்று.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

இங்கும் பலத்த காற்றுடன் நல்ல மழை😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Nathamuni said:

இந்த உலகம்.... மனிதத்துக்கு எதோ ஒரு தகவல் சொல்கிறது என்று மட்டும் தெரிகிறது.

இதை நீங்கள் நான் மட்டுமல்ல......
சகல ஆன்மீக வாதிகளும் இதைத்தான் சொல்கின்றார்கள்.
விஞ்ஞானிகளும் எதிர்காலத்தில் வரப்போகும் அழிவுகளைப்பற்றி முன்னெச்சரிக்கை விடுகின்றார்கள்.

ஏன் பாமர மக்கள் கூட இனம்புரியாத அச்சுறுத்தல் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, வாத்தியார் said:

இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா.
ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம்.
இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது. 

மனித குலத்திற்கு நான் என்ற அகங்காரம் கூடிவிட்டது.
உதாரணத்திற்கு தேவையில்லாத விண்வெளி போட்டிகள்.

https://www.bild.de/video/clip/news-ausland/tierischer-terror-affen-gangs-legen-stadt-lahm-viralpress-77197572,auto=true.bild.html

உணவை தேடி நகரம் வரும் காட்டு விலங்குகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதை நீங்கள் நான் மட்டுமல்ல......
சகல ஆன்மீக வாதிகளும் இதைத்தான் சொல்கின்றார்கள்.
விஞ்ஞானிகளும் எதிர்காலத்தில் வரப்போகும் அழிவுகளைப்பற்றி முன்னெச்சரிக்கை விடுகின்றார்கள்.

ஏன் பாமர மக்கள் கூட இனம்புரியாத அச்சுறுத்தல் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள்.

பிரிட்டனில் மட்டும் தாவர உணவு, மிருக கொழுப்பில்லாத (நெய், தயிர், பால், முட்டை) உணவுகளின் மீதான மக்களின் ஆர்வம் 750% அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 3 வருடங்களில்.

அப்படி ஒரு உணவு உண்ணும் ஒரு வெள்ளையிடம் பேசியபோது தான், மெல் உள்ள தகவல் சொல்லி (பெண் கோழி, ஆடு, மாடு), மனிதனின் பேராசை அளவு மீறி விட்டது என்றும் சொன்னார்.

19ம் நூறாண்டு வரை, மலட்டு ஆண்கள் இருந்தார்கள் என்று தெரியாமல், பெண்களை மலடிகள் என்று உலகம் சொன்னது.

20ம் நூறாண்டில், பரிசோதனைக் குழாய் குழந்தை, ivf சிகிச்சை என்று மருத்துவம் வளர்ந்தது.

இனி ஆண்களே உலகத்துக்கு தேவை இல்லை என்று நிலைமை வந்து விட்டது.

இதுவே, மனிதன் இயற்கைக்கு விடும் அதி உச்ச சவால். இயற்கை தன்னை உறுதி செய்யும்.

மனிதனால் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த மணல் புயல்.

https://www.bild.de/video/clip/news-ausland/sichtweite-unter-5-meter-sandsturm-verschlingt-chinesische-stadt-reuters-cctv-77193822.bild.html

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்து விட்டோம் இன்னும் விதைத்து கொண்டும் உள்ளோம் மனிதனுக்கு பூமி சொந்தம் அல்ல பூமிக்கே மனிதன் சொந்தம் என்பதை அடிக்கடி மறந்து போகின்றோம் இனி காலம் தப்பிய  மழை அதுவும் ஓரிடத்தில் வெள்ளப்பெருக்கை உருவாக்கும் அளவுக்கு கொட்டி தீர்க்கும் உலகெங்கும் இது வழமையாகும் திருத்துவத்துக்கு வழியில்லை .

7 hours ago, Nathamuni said:

நேற்று பின்னேரம், கிழக்கு லண்டன் போனேன்.

45 நிமிட பயணம், 3 மணி நேரம் எடுத்தது, திரும்பி வரும் போது, போன பாதை பூட்டி, வேறு பெரு வழி பாதை வழியே திருப்பி, விட்டார்கள். அது 2 மணிநேர பயணம்.

காரணம் இரு மணிநேர பேய் மழை.

அந்த மூன்றுமணிநேர காரின்  கரியமிலவாயுவின் பங்கை குறைப்பதுக்கு  இங்கு வழியில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, பெருமாள் said:

வினை விதைத்து விட்டோம் இன்னும் விதைத்து கொண்டும் உள்ளோம் மனிதனுக்கு பூமி சொந்தம் அல்ல பூமிக்கே மனிதன் சொந்தம் என்பதை அடிக்கடி மறந்து போகின்றோம் இனி காலம் தப்பிய  மழை அதுவும் ஓரிடத்தில் வெள்ளப்பெருக்கை உருவாக்கும் அளவுக்கு கொட்டி தீர்க்கும் உலகெங்கும் இது வழமையாகும் திருத்துவத்துக்கு வழியில்லை .

மனிதன் என்று இயற்கை தந்த காலநிலையை மாற்ற முயற்சி செய்தானோ அன்று தொடங்கியது இயற்கை அனர்த்தங்கள்.

சீனாவில் மேக கூட்டங்களை கலைப்பது வழமையான ஒன்றாம். அது போல் ஜேர்மனியிலும் நடக்கின்றதாக கேள்விப்பட்டது.

அண்மையில் அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப் அவர்கள்  சூறாவளி மேக கூட்டங்களை அணுகுண்டு மூலம் நிற்பாட்ட முனைந்த நிகழ்வு அனைவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கலியுகம் எப்போது முடியும் என முடியும் போது தான் தெரியவரும்

வானம் கறுத்தால் மழை வரும் என்று எதிர்வு கூறுகிறோம். நடக்கும் நிகழ்வுகள்  உலகம் முடிவை நோக்கி நகருகிறதோ, அருகில் உள்ளதோ, தொலைவில் உள்ளதோ என்று அங்கலாய்க்க வைக்கிறது.பஞ்சம், போர், இயற்கை அனர்த்தங்கள், வானிலும் தோன்றலாம். கடவுள் ஆணும் பெண்ணுமாக மனிதனை படைத்து, பலுகி பெருகி உலகை வழிநடத்துங்கள் என்று விட்டார். மனிதனோ ஓரின கலியாணம், பரிசோதனைக்குழாய் குழந்தை, பால் மாற்றம் என்று கடவுளுக்கு சவால் விட்டு தன்னைத்தானே அழிக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் வயிற்றில் புளியைக் கரைக்கப் போகும் ஐபிசிசி அறிக்கை: எழுதும் பணி தொடங்கியது - BBC News தமிழ்

 

பருவநிலை மாற்றம்: உலகின் வயிற்றில் புளியை கரைக்க போகும் ஐபிசிசி அறிக்கை: விஞ்ஞானிகள் எழுத தொடங்கினர்

 

  • மேட் மெக்கிராத்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர்

26 ஜூலை 2021

lake

பட மூலாதாரம், Justin Sullivan

 
படக்குறிப்பு,

வரலாறு காணாத வகையில் வற்றிய கலிபோர்னியா ஏரி ஒன்று.

பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன.

இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? தீர்வு என்ன என்பது குறித்து மிக மிக முக்கியமான, விரிவான அறிவியல் அறிக்கையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது ஓர் ஐ.நா. அமைப்பு.

இந்த அறிக்கை இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகும்.

இது போன்ற தீவிர பேரிடர்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன? பருவநிலை மாற்றத்துக்கும் அவற்றுக்கும் என்ன தொடர்பு? எந்த அளவுக்கு பருவநிலை மாற்றம் ஆபத்தான கட்டத்துக்கு பூமியை கொண்டு சென்றிருக்கிறது? தீர்வு என்ன என்பது குறித்தெல்லாம் உலக அளவில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி ஒரு அறிக்கையை உருவாக்குகிறார்கள்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு என்ற ஐ.நா. அமைப்பு இந்த விரிவான அறிக்கையை உருவாக்கி வருகிறது. பருவநிலை மாற்றம் புவியை எதிர்நோக்கும் அடுத்த கட்ட ஆபத்தாக உருவாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் கருதும் நிலையில், இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல நாடுகளுக்குமான கையேடு போல இந்த அறிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

2013ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமாக அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி இந்த அறிக்கை விரிவாகப் பேசும்.

195 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறார்கள். விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை வரிக்கு வரி விவாதித்து இந்த அறிக்கையை உருவாக்குவார்கள்.

அரசுகளுக்கு இந்த 40 பக்க அறிக்கை ஒரு அறைகூவலாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்து வரும் புவி வெப்ப நிலையை ஆராயும் மைய அமைப்பாக ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு இருக்கிறது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதி தீவிர இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையை தற்போது தயாரிக்கிறது ஐபிசிசி. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் பற்றிய கேள்வி இப்போது முன்னெப்போதையும் விட உரத்து கேட்கிறது.

ஐபிசிசி என்றால் என்ன?

1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆர்க்டிக்

பட மூலாதாரம், Reuters

 
படக்குறிப்பு,

ஆர்க்டிக் பனிப்பாறைகள் எப்படி இருக்கின்றன என்பது தொடர்பாகவும் ஐபிசிசி ஆராயும்.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.

6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.

ஜப்பான் ஸ்பிரே

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஜப்பானில் ஸ்பிரே அடிக்கப்படுகிறது.

"காரணம், இந்த அறிக்கை எல்லோரைம் ஆச்சரியப்படுத்தி, சிந்திக்கவைத்தது. இது எதிர்காலப் பிரச்னை அல்ல. இப்போதைய பிரச்னை என்ற எண்ணத்தை இந்த அறிக்கை தந்தது" என்கிறார் ஐபிசிசி துணைத் தலைவரும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான கோ பாரெட்.

ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக உள்ள ஐபிசிசி அறிவியல் அறிக்கையும் அதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. புவி வெப்பமாதல் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் கிளாஸ்கோவில் சந்திக்க உள்ளார்கள். COP26 மாநாட்டில் பங்கேற்கும் பலரும் இந்த அறிக்கையை படித்துவிட்டு வரவேண்டியிருக்கும்.

"தூக்கத்தில் இருந்து எழுப்புகிற அறைகூவலாக இது இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை," என்கிறார் ரிச்சர்ட் பிளாக் என்ற விஞ்ஞானி. லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள கிரான்தம் இன்ஸ்டிடியூட்டில் கௌரவ ஆய்வாளராக இருக்கிறார் இவர்.

ஐபிசிசி வெறும் விஞ்ஞானிகள் அமைப்பா?

ஐபிசிசி என்பது வெறும் விஞ்ஞானிகள் அமைப்பு என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. 195 நாடுகளின் பிரதிதிநிகள் இதில் இருக்கிறார்கள். பல கல்விப் புல ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இவர்கள் அறிக்கைகளை கோரிப் பெறுகிறார்கள் என்கிறார் ரிச்சர்ட் பிளாக்.

ஏதோ சில விஞ்ஞானிகள் எழுதுகிற அறிக்கை அல்ல ஐபிசிசி அறிக்கை. மாறாக இது அரசுகள் கோரிப் பெறுகிற அறிக்கை. அரசுகளுக்கு உரிமையான அறிக்கை. இது மிகவும் தனித்துவமானது என்கிறார் அவர்.

ஐபிசிசி எப்படி செயல்படுகிறது?

ஐபிசிசி-க்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. ஆனால், இது தாமாக ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஐபிசிசி அறிக்கை தயாரிக்கிறது. முதல் அறிக்கை இயல் அறிவியல் அறிக்கை. இரண்டாவது தாக்கம் தொடர்பான அறிக்கை. மூன்றாவது அறிக்கை, தீர்வுகள் தொடர்பான அறிக்கை. தாக்கம், தீர்வுகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியாகும். மூன்று அறிக்கைகளையும் இணைத்து அளிக்கப்படும் அறிக்கையும் அடுத்த ஆண்டு வெளியாகும்.

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

காட்டுத்தீ

ஆகஸ்ட்டில் வெளியாகப்போகும் இயல் அறிவியல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் 200 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகைகளில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து அறிக்கையை உருவாக்குகிறார்கள்.

வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கலாம், அரசுகள் கருத்து கூறலாம். இதைப் போல இந்த வரைவு அறிக்கை தொடர்பாக 75 ஆயிரம் கருத்துகள் வந்தன. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கருத்துகளை எல்லாம் கணக்கில் கொண்டு இறுதி அறிக்கை 40 பக்கங்களில் தயாராகும்.

தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரியை தாண்டக்கூடாது அது மிக முக்கியம் என்று ஐபிசிசி வாதிட்டுவருகிறது. கடந்த ஆண்டு புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்பவே, இந்த ஆண்டு தீவிர இயற்கைப் பேரிடர்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், இந்த அமைப்பின் அறிக்கை கடுமையான உண்மைகளைப் பேசுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது அரசுகளுக்கு உண்மையில் களத்தில் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்த அழுத்தத்தை உண்டாக்கும்.

https://www.bbc.com/tamil/science-57973004?at_custom4=F2DEE260-EE23-11EB-974C-75FC39982C1E&at_custom3=BBC+Tamil&at_medium=custom7&at_custom2=facebook_page&at_custom1=[post+type]&at_campaign=64&fbclid=IwAR09iZEMWog0RqiKUohi8Zd9CE16i-MuXCOzcvwnSy4YB0hsi269rWGx9ZM

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம், வெப்பம் கூடி பனிக்கட்டிகள் உருகும் நிலை ஏற்பட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நீரில் மூழ்கும் நிலையேற்படும் என்று. அப்போ அது நம்ப முடியாததாக இருந்தது, இப்போ நடப்பவற்றைப் பார்த்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்கண்டம் மூழ்கும்போது நம்ம ஹவுஸ்கன்றி காணாமல் போயிருக்கும்.....!  😢

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

ஒரு சில வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம், வெப்பம் கூடி பனிக்கட்டிகள் உருகும் நிலை ஏற்பட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நீரில் மூழ்கும் நிலையேற்படும் என்று. அப்போ அது நம்ப முடியாததாக இருந்தது, இப்போ நடப்பவற்றைப் பார்த்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

 

7 minutes ago, suvy said:

அவுஸ்கண்டம் மூழ்கும்போது நம்ம ஹவுஸ்கன்றி காணாமல் போயிருக்கும்.....!  😢

யாழ்ப்பாணம் கடல் மட்டத்திலிருந்து, அரை மீற்றர் உயரத்தில் தான் இருக்கின்றது.

விலைகூடின காணிகள் வைத்திருக்கிற ஆட்கள், இப்பவே…. சிங்களவன், சோனகனுக்கு…. கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்று விடுங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாணம் கடல் மட்டத்திலிருந்து, அரை மீற்றர் உயரத்தில் தான் இருக்கின்றது.

விலைகூடின காணிகள் வைத்திருக்கிற ஆட்கள், இப்பவே…. சிங்களவன், சோனகனுக்கு…. கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்று விடுங்கள். 😂

இஞ்சேரும் சும்மா வயித்தில உப்பைக் கரைக்க வேண்டாம்......!   😢

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இஞ்சேரும் சும்மா வயித்தில உப்பைக் கரைக்க வேண்டாம்......!   😢

 

வயிற்றில இல்லையண்ணா

காணிக்க  உப்பு  தண்ணி  வரப்போகுதாம்???😢

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

இஞ்சேரும் சும்மா வயித்தில உப்பைக் கரைக்க வேண்டாம்......!   😢

வயித்தில புளியை கரைத்தது போல என்றுதானே சொல்வாக, ஒருவேளை உங்க ஊரு வழக்கில இப்படி உலாவுதோ? அல்லது கடல் நீர் புகப்போகுது என்கிற பயத்தில் வாய் உளறுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் விக்க வேண்டாம்.

ஒரு ஐடியா சொல்லுறன் கேளுங்கோ.

இப்பவே நல்ல கருங்கல்லு, கொங்ரீட் எல்லாம் போட்டு, காணியை ஒரு 3 அடி உயத்தி விடுங்கோ. பிறகு கடல் உயர், உங்கட காணி மட்டும் தீவு மாரி ஆயிடும். 

பிறகென்ன luxury private island in the Indian Ocean only a boat ride away from Killinochchi எண்டு சொல்லி நல்ல காசு பாக்கலாம்🤣

14 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாணம் கடல் மட்டத்திலிருந்து, அரை மீற்றர் உயரத்தில் தான் இருக்கின்றது.

விலைகூடின காணிகள் வைத்திருக்கிற ஆட்கள், இப்பவே…. சிங்களவன், சோனகனுக்கு…. கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்று விடுங்கள். 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஒண்டும் விக்க வேண்டாம்.

ஒரு ஐடியா சொல்லுறன் கேளுங்கோ.

இப்பவே நல்ல கருங்கல்லு, கொங்ரீட் எல்லாம் போட்டு, காணியை ஒரு 3 அடி உயத்தி விடுங்கோ. பிறகு கடல் உயர், உங்கட காணி மட்டும் தீவு மாரி ஆயிடும். 

பிறகென்ன luxury private island in the Indian Ocean only a boat ride away from Killinochchi எண்டு சொல்லி நல்ல காசு பாக்கலாம்🤣

 

சா. ஜே. வே. செல்வநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா  நம்ம Jaffna - #யாழ் மணிக்கூட்டு கோபுரம். | Facebook 

அந்தத் தீவில் இருந்தபடியே....
செல்வநாயகம் நினைவு தூபி, யாழ். மணிக்கூட்டு கோபுரம்.... 
எல்லாம் பார்க்கலாம் என்று சொன்னால்,
புலம் பெயர் தமிழர்களே....  உடனே ரிக்கற்  “புக்”  பண்ணி விடுவார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வயித்தில புளியை கரைத்தது போல என்றுதானே சொல்வாக, ஒருவேளை உங்க ஊரு வழக்கில இப்படி உலாவுதோ? அல்லது கடல் நீர் புகப்போகுது என்கிற பயத்தில் வாய் உளறுதோ?

ஊருக்குள்ளே பழமொழியில் புளியைத்தான் கரைக்கிறது.....ஆனால் கடல்நீர் காணிக்குள் வந்தால் அது உப்பைத்தான் கொண்டுவரும் சாத்தன் புளியை அல்ல......அதுவும் பக்கத்தில நாவற்குழி தரவைக் கடல் இருக்கு........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

பிறகென்ன luxury private island in the Indian Ocean only a boat ride away from Killinochchi எண்டு சொல்லி நல்ல காசு பாக்கலாம்

பண முதலைகளுக்கு எப்பவுமே பணத்திலதான் கண்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.