Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

அது சரி புலிகள் காலத்தில் அவர்கள் சாதியை அடக்கியது, ஒன்றும் அவர்கள் செய்த சாதனை அல்ல - காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை (🍌இல்💉). 

அதுவும் பாலா அண்ணை எழுதினதை நம்பமாட்டியள் ஆனால் பல சிங்களவர் எழுதியுள்ளார்கள் அதை நம்புவீர்கள்.

மீண்டும் சொல்கிறேன் நாதம் 80களில் நாட்டை விட்டு வந்தவர்கள் அல்ல நாம். இங்கே புலிகள் ஆட்சியில் வாழ்ந்த பலர் இருக்கிறோம். 

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது.

 

  • Replies 132
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

இதில் எங்கும் தன் பிரச்சனையை தீர்த்தது முதல்வர் என வடிவேலு சொல்லவில்லை. முதல்வரை பார்த்த பின் எனக்கு எல்லாம் நல்லதாக நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கமும் செயல்பட்டது, நானும் சுபாஸ்கரனுடன் பேசினேன் என்கிறார்.

ஆனால் சீமானோ மிக தெளிவாக இந்த பிரச்சனையை தீர்த்தது முதல்வர் இல்லை. தானே என்கிறார்.

ஆகவே இங்கே அடித்து விடாத ஒருவர் வடிவேலு.

எனக்கு இன்னும் விளங்காதது, அடித்து விட்டது நீங்களா இல்லை சீமானா என்பதே.

உலக நாகரீகங்கள் எல்லாவற்றிலும் உள்ளது போன்றே, பழந்தமிழர் நாகரீகங்களிலும் தொழில் வழி குடிகள் இருந்தன... சங்க இலக்கியங்கள் அவற்றிற்கு சான்று....

ஆனால் இன்றும், மேலை நாட்டவர்கள் தொழில்வழி பெயர்களை தமது குடும்ப பெயர்களாக கொண்டுள்ளார்கள்... அதில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.. இந்திய துணைக்கண்டத்தில் அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அப்படியென்றால், இந்திய துணைக்கண்டத்தில் எப்படி வந்தது...

ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்துள் நுளைந்த போது பூர்வ குடிகளை முதலில் அழித்தார்கள்... பின்னர் அவர்களுடைய வழிபாட்டு கடவுள்களையே பாவித்து, மனிதர்கள் சமனற்றவர்கள் எனும் சனாதன தர்ம கோட்பாட்டை உருவாக்கினார்கள்.. தாம் தலையிலே பிறந்த உயர்ந்தவர்கள், நீங்கள் காலில் பிறந்தமையால் நமக்கு தேவையான உடலுழைப்பை நீங்கள் தான் தர வேண்டும், இது கடவுள் படைப்பு விதி என்றனர்... பின்னாளில், மகாபாரத்தின் இடைச்செருகலான பகவத் கீதையில் கண்ணன் சொன்னார், நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்...

இந்த மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாடு தான் சங்கம் மருவிய காலத்தில் தமிழ்நாட்டினில் புகந்து ஜாதிகளாக, தொழில் வழி குடிகள் சமனற்றவர்கள என்ற கருத்தியலாக வடிவம் பெற்றது.. மிக அற்ப எண்ணிக்கையில் இருந்த ஆரியரிற்கு தமிழர் ஜாதிகளாக, உட்பிரிவுகளாக உடைவது மிகவும் தேவையாக இருந்தது.. அரசவைக்குள் புகுந்து, ஜாதியை நிறுவனமயப்படுத்தி, அசைக்கமுடியாத ஒன்றாக மாற்றினார்கள்....

அம்பேத்கரின் வரிகளில் சொல்வதெனின், சனாதன வர்ணாசர மூலக்கோட்பாடுதான், பிற்காலத்தில் கொடிவிட்டு படர்ந்த ஜாதிகளின் தாய்...

ஜாதி என்பது ஒரு கருத்தியலாக மூளைக்குள் பதிக்கப்பட்டுவிட்டது... அதனை வலுவிக்க செய்ய, வழிகள் பல கண்டறிவது மிக அவசியமானது...

தலைவர் போல் அதை அடக்கி வைக்கலாம்... பெரியார் போல் சனாதனத்தின் நடுமண்டையிலே போட்டுத் தாக்கலாம்... அம்பேத்கார்/பெரியார் போன்று ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த (empowerment) இட ஒதுக்கீட்டை கொண்டுவரலாம்... எல்லா வழிகளும் நல் வழிகளே...

நீ என்ன ஜாதியாக வேண்டுமானாலும் இருந்து விட்டுபோ ஆனால் தமிழராக ஒன்றிணைவோம் என்னும் கருத்தியல் மிக ஆபத்தானது... சனாதனத்தின் கருகிய வாடை இதிலும் அடிக்கின்றது...

Edited by பராபரன்

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோலட்சுமி, வடிவேலு.... ரொம்ப முக்கியம்......

கடைசீல.... சீமானை இழுக்குறதில்லை தானே போய்  நிக்குது.... 

சுத்தி, சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள....

இதுக்கு தான்.... நான் இப்போது விவாதிக்க விரும்புவதில்லை...

விசயத்துக்கு வாங்கய்யா..... 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வீடியோலட்சுமி, வடிவேலு.... ரொம்ப முக்கியம்......

கடைசீல.... சீமானை இழுக்குறதில்லை தானே போய்  நிக்குது.... 

சுத்தி, சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள....

இதுக்கு தான்.... நான் இப்போது விவாதிக்க விரும்புவதில்லை...

விசயத்துக்கு வாங்கய்யா..... 🤗

நான் ஒரு வரி விஜய லக்சுமி பற்றி எழுதினேன், அதுவும் ஏன் இராகவன் மீது வழக்கு பாயவில்லை என்பதை விளக்க - ஏராளன் கேட்ட கேள்விக்கு. 

அதற்கு பக்கம் பக்கமாக விளக்கம் எழுதியவர் நீங்கள்.

ஆனாலும் உங்கள் விஜயலச்சுமி அந்தாதியை நான் கணக்கில் எடுக்கவும் இல்லை 🤣 - அதன் பிறகு அதை பற்றி கதைக்கவும் இல்லை.

அதே போலத்தான் வடிவேலும். திராவிட சிந்தாந்தம் பற்றி பல ஆழமாக கருத்தெழுதும் உறவுகள் கலந்துரையாடுகையில் - இடையில் வடிவேலை இழுத்து வந்தவர் நீங்கள்.

அதில் நான் சுட்டி காட்டியது - நீங்களோ அல்லது சீமானோ இருவரில் ஒருவர் - யார் வடிவேலு பஞ்சாயத்தை தீர்தார்கள் என்பது பற்றி அடித்து விட்டதை பற்றி.

நீங்கள் திரிக்கு சம்பந்தம் இல்லாததை இழுத்து வந்து, மனம் போன படி அடித்துவிட்டு விட்டு - அதை கேள்வி கேட்டால் திரி திசை மாறுவதாக அழப்படாது🤣.  

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2021 at 06:47, ஏராளன் said:

anto paul (@AntonyPaulraj6) | Twitter

இதில் இருப்போர் எல்லாரும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், துறைசார் வல்லுனர்கள் என்று சொல்லத்தக்கவர் எவருமில்லை என நினைக்கிறேன்

(ஆய்வாளர் என்று அழைக்கப் படும் மா.சோ விக்ரர் குமரிக் கண்டம் இருந்ததாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு போலி ஆய்வாளர்!😎).

இப்படியான கருத்தரங்குகளால் சிலரது அரசியல் வளரும், தமிழர் வரலாறு தெளிவாகாது!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

 

அடுத்தது.... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

நித்திரை வருவதால்....  பிறகு எப்போதாவது பார்க்கலாம்.

சாதிப் பிரச்சினை பற்றி, தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் அழைப்பில் ஈழம் வந்த ஒருவருக்கு பிரபாகரன் சொன்னதும் நம்ப முடியாது, பாலசிங்கத்தார் சொன்னதும் நம்ப முடியாது, ஆனால் இலங்கையில் இருந்த சிங்களவர்கள் சிலர் எழுதியது நம்பத் தக்கதாக இருக்குது! 

அடிக்கடி நரிக்கு பெயின்ற் கழுவப் பட்டுக் கலைந்து விடுகிறது, ஆனால் சளைக்காமல் மீண்டும் பூசிக் கொண்டு வந்து நடமாடுகிறது!  🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

சாதிப் பிரச்சினை பற்றி, தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் அழைப்பில் ஈழம் வந்த ஒருவருக்கு பிரபாகரன் சொன்னதும் நம்ப முடியாது, பாலசிங்கத்தார் சொன்னதும் நம்ப முடியாது, ஆனால் இலங்கையில் இருந்த சிங்களவர்கள் சிலர் எழுதியது நம்பத் தக்கதாக இருக்குது! 

அடிக்கடி நரிக்கு பெயின்ற் கழுவப் பட்டுக் கலைந்து விடுகிறது, ஆனால் சளைக்காமல் மீண்டும் பூசிக் கொண்டு வந்து நடமாடுகிறது!  🤣

தன் நிலை தாழ்ந்து வந்து கொழுவி வாங்கி கட்டிக்கொண்டு போவதே பிழைப்பா?

ஓமோம்..... நரிகள் நோய்வாய்ப் பட்டால் வருகிறோம்.... மருந்தெடுக்க...😏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சாதீயம் குறித்து பலர் எழுதி உள்ளனர்.

ரட்ணஜீவன் கூல் முதல், பலர்.....

அண்மையில் பாராளுமன்றில் கூட, சரத் வீரசேகர பேசினார்....

அதனை சொன்னால்..... அதை ஏற்கிறேன் என்ற அர்த்தம் கற்பிக்கும்..... அறளைக் கேசுகள்....

என் வீட்டு பிரச்சணை எனக்கு தெரியும்.... நெடுமாறனும், சிங்களவரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாண சாதீயம் குறித்து பலர் எழுதி உள்ளனர்.

ரட்ணஜீவன் கூல் முதல், பலர்.....

அண்மையில் பாராளுமன்றில் கூட, சரத் வீரசேகர பேசினார்....

அதனை சொன்னால்..... அதை ஏற்கிறேன் என்ற அர்த்தம் கற்பிக்கும்..... அறளைக் கேசுகள்....

என் வீட்டு பிரச்சணை எனக்கு தெரியும்.... நெடுமாறனும், சிங்களவரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

எது உங்க வீட்டு பிரச்சனையா🤣.  கொழும்பில் சாதி அவ்வளவு மோசமான பிரச்சனையா🤣.

இரெட்ண ஜீவன் கூல் - தான் ஏதோ நல்லூர் கோவில் பரம்பரை - கத்தோலிக்கராய் மாறினாலும் தான் பெரிய சாதிமான் என்று கதைக்கும் ஆள்.

அவர் எழுதினதை எல்லாம் ஆதாரம் எண்டு வச்சு, கதை சொல்லவும் ஆக்கள்🤦‍♂️.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, goshan_che said:

இதைதான் நான் கூறினேன். எப்போதும் யாழ்கள உறவுகள் அடித்து கொள்வதாக எழுதவில்லை. தமிழ் தேசியத்தின் பால் அணைத்துகொள்பவர்கள் கூட மதம் என்று வந்தால் அடித்து கொள்வார்கள் என்பதுதான் கூறினேன். 

உதாரணத்திற்கு ஒரு திரியை வெளியிலை இழுத்து விடுங்கோ பாப்பம்?  😁

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

தன் நிலை தாழ்ந்து வந்து கொழுவி வாங்கி கட்டிக்கொண்டு போவதே பிழைப்பா?

ஓமோம்..... நரிகள் நோய்வாய்ப் பட்டால் வருகிறோம்.... மருந்தெடுக்க...😏

நரிக்கு வரி இருந்தால் புலி மருந்து கொடுக்கலாம்! வரி இல்லா விட்டால் நரி மருந்து கொடுக்கலாம்! (வைத்தியரிடம் உண்மையை மறைக்கக் கூடாது!😎)

 சீரியசாக: வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர்கள் இருக்கும் களத்தில் வந்து சாதி நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கற்பனைகளைச் சொல்ல வெளிக்கிட்டால் வேசம் கலையாமல் வேறென்ன நாதம் நடக்கும்?   

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

அதெப்படிக் கேள்வி கேட்பர்? ஏனைய விடயங்களில் தாங்கள் எதிர்பார்க்கும் செவிக்கினிய பொய்களை அள்ளி விடுவோரை என்ன வேசதாரியாக இருந்தாலும் தலையில் வைத்து கொண்டாடுவது தானே தீவிர தேசியர்களின் குணாம்சம்?😊 

எனவே கள்ள மௌனம் தான்!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உதாரணத்திற்கு ஒரு திரியை வெளியிலை இழுத்து விடுங்கோ பாப்பம்?  😁

இழுத்து விட்டு திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

பண்டதரிப்பு மதப்போதகர், திருகேதீஸ்வர வளைவு, போதகர் அடிவாங்கியது இப்படி பல திரிகள்.

ஆனால் இதை இன்னொரு எதிர்கால திரியில் சுட்டி காட்டி பதில் எழுதிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நரிக்கு வரி இருந்தால் புலி மருந்து கொடுக்கலாம்! வரி இல்லா விட்டால் நரி மருந்து கொடுக்கலாம்! (வைத்தியரிடம் உண்மையை மறைக்கக் கூடாது!😎)

விலங்குகள் பேசி, உண்மைகளை மறைக்காதோ, விலங்கு வைத்தியரிடம்?

ஒரு கருத்தினை வைத்தால், அதனை குறித்து விவாதித்து, சரியா, தவறா என்று முடிவுக்கு வருவதே விவாதம்.

கருத்தினை விடுத்து, கருத்து வைப்பவரை தாக்குவது வைத்தியரிடம் போக வேண்டிய மனநோய் தான்.... சிலருக்கு அவசியம் தேவை... 

நீங்களும் ஒரு சிறந்த வைத்தியரை பார்ப்பது நல்லது, விரைவாக....

சாதியம் என்றால், பேசும் whole sale உரிமை எனக்குதான்... வேறு யாருமே என்னைப் போல பேசி பீத்திக்க முடியாது என்று அலம்பறை பண்ணும் ஒரு சிலரில், நீங்களும் ஒருவரோ?

Quote

சீரியசாக: வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர்கள் இருக்கும் களத்தில் வந்து சாதி நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கற்பனைகளைச் சொல்ல வெளிக்கிட்டால் வேசம் கலையாமல் வேறென்ன நாதம் நடக்கும்?   

நான் வடக்கு கிழக்கில் வாழவில்லை என்று எதை வைத்து அடித்து விடுகிறீர்கள். சும்மா ஒருவர் தனிமனித தாக்குதலில் அலம்பறை பண்ணினால், படித்ததாக சொல்லும் நீங்களும் அப்படியே அலம்பறை பண்ணுவதா?

அல்லது, நீங்கள் படித்தவர் என்று பொய் சொல்லி பீலா விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவரா?

இதுதான் சொன்னேன், தனது கல்வி, தகுதிகள் மறந்து, தெருவில் இறங்கி மப்பில் இருப்பவர் போல அலம்பறை பண்ணினால், அதற்குரிய மரியாதையே திரும்பிக் கிடைக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விலங்குகள் பேசி, உண்மைகளை மறைக்காதோ, விலங்கு வைத்தியரிடம்?

ஒரு கருத்தினை வைத்தால், அதனை குறித்து விவாதித்து, சரியா, தவறா என்று முடிவுக்கு வருவதே விவாதம்.

கருத்தினை விடுத்து, கருத்து வைப்பவரை தாக்குவது வைத்தியரிடம் போக வேண்டிய மனநோய் தான்.... சிலருக்கு அவசியம் தேவை... 

நீங்களும் ஒரு சிறந்த வைத்தியரை பார்ப்பது நல்லது, விரைவாக....

சாதியம் என்றால், பேசும் whole sale உரிமை எனக்குதான்... வேறு யாருமே என்னைப் போல பேசி பீத்திக்க முடியாது என்று அலம்பறை பண்ணும் ஒரு சிலரில், நீங்களும் ஒருவரோ?

நான் வடக்கு கிழக்கில் வாழவில்லை என்று எதை வைத்து அடித்து விடுகிறீர்கள். சும்மா ஒருவர் தனிமனித தாக்குதலில் அலம்பறை பண்ணினால், படித்ததாக சொல்லும் நீங்களும் அப்படியே அலம்பறை பண்ணுவதா?

அல்லது, நீங்கள் படித்தவர் என்று பொய் சொல்லி பீலா விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவரா?

இதுதான் சொன்னேன், தனது கல்வி, தகுதிகள் மறந்து, தெருவில் இறங்கி மப்பில் இருப்பவர் போல அலம்பறை பண்ணினால், அதற்குரிய மரியாதையே திரும்பிக் கிடைக்கும்.

பேசுவதை வைத்துக் கொண்டே சொல்லி விடலாமே நாதம்? கொல்லன் தெருவில் ஊசி விற்ற கணக்காக எங்களுக்கே வடக்கு கிழக்கைப் பற்றிக் கதையளக்கிறீர்களே சகோதரம்?😂

 சாதிப் பிரச்சினைக்கு புலிகளின் துலங்கல் என்ன மாதிரி இருந்தது? ஏன் ட்ராக்டரில் தேர் கட்டியிழுக்கப் படவில்லை அந்தக் காலத்தில்? ஏன் ஜே.சி.பி இயந்திரம் இப்போது தேரிழுக்கும் நிலை? இதெல்லாம் தெரியாமல் "யுத்த காலத்தில் சாதியை மக்கள் மறந்தனர்!" என்றால் இடம்பெயர்வு காலங்களில் மேலதிக அவலங்கள் சாதி ரீதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்டதைக் கூட அறியாமல் எந்த "வடக்கு கிழக்கில்" இருந்தீர்கள் மகன்?🤣 

உங்கள் போன்ற அப்பாடக்கர் பேர்வழியின் மரியாதையை நான் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ரொய்லெற் பேப்பர் முடிந்தால் பாவிப்பதா? சொறி, நான் தண்ணீர் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 02:55, goshan_che said:

அப்போ நான் வேறு ஒரு யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறேன் போலும்🤣

நான் அறிந்தபடி உண்மையான யாழ்பாணத்தில் தான் நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள்

On 10/9/2021 at 21:55, valavan said:

திராவிடம் ஆரியம் தமிழ்தேசியம்  என்று மேடைகளில் முழங்கி பாமரனின்  நரம்பை சூடாக்கும்    கட்சிகள் தேர்தல் என்று வரும்போது தமிழ்தேசியத்தை வெறுக்கும் பார்ப்பனியர்களுடன் கூட்டு வைக்கின்றன, மதத்தை உயர்குலத்தை  முன்னிறுத்துபவர்களுடன் கை கோர்த்து நடக்கின்றன.

இது எல்லாம் தமிழ்நாட்டில் தானே

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

பேசுவதை வைத்துக் கொண்டே சொல்லி விடலாமே நாதம்? கொல்லன் தெருவில் ஊசி விற்ற கணக்காக எங்களுக்கே வடக்கு கிழக்கைப் பற்றிக் கதையளக்கிறீர்களே சகோதரம்?😂

 சாதிப் பிரச்சினைக்கு புலிகளின் துலங்கல் என்ன மாதிரி இருந்தது? ஏன் ட்ராக்டரில் தேர் கட்டியிழுக்கப் படவில்லை அந்தக் காலத்தில்? ஏன் ஜே.சி.பி இயந்திரம் இப்போது தேரிழுக்கும் நிலை? இதெல்லாம் தெரியாமல் "யுத்த காலத்தில் சாதியை மக்கள் மறந்தனர்!" என்றால் இடம்பெயர்வு காலங்களில் மேலதிக அவலங்கள் சாதி ரீதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்டதைக் கூட அறியாமல் எந்த "வடக்கு கிழக்கில்" இருந்தீர்கள் மகன்?🤣 

உங்கள் போன்ற அப்பாடக்கர் பேர்வழியின் மரியாதையை நான் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ரொய்லெற் பேப்பர் முடிந்தால் பாவிப்பதா? சொறி, நான் தண்ணீர் தான்! 

மரியாதை பெறப்படுவதல்ல, வழங்கப்படுவது.

உங்களைப் போன்ற அப்பாடக்கர் அரைக்குடங்களை தவிர்த்து போனாலும், அதை தெளிவாக சொன்னாலும் கூட, புரியாமல் வந்து, முதுகில் தட்டி நம்மையும் கவனித்தீர்களா, என்று கேட்பதை என்னென்பது? 🙄

***

நான் சொன்னது, சாதியம் இல்லாமல் போனது என்றல்ல.

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

நான் சொன்னது வேறு.... நடக்கும் கருத்துருவாக்கம் வேறு

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

இதைதான் தவறு என்கிறோம்…புலிகள் வெளிப்படையாக சாதிய ஒழிப்பை தமது கொள்கையாக அறிவித்தார்கள்.

நுட்பமாக இதை நடைமுறைபடுத்தினார்கள்.

ஆகம கோவில்களில் உள்ளே விட்டாலும் சாமி ஊர் சுத்தும் போது சில வீதி/வீடுகளின் முன் சாமி நிற்காது - எங்கள் ஊரில் இதை மாற்றினார்கள்.

ஏரியா பொறுப்பாளர்களை தகுதி அடிப்படையில் நியமித்தார்கள். புளொட்டை போல் சாதி பார்த்து அல்ல. சாதியவாதிகள் பொறுப்பாளரை மாற்ற கோரியபோது - பாடம் எடுத்து அனுப்பினார்கள்.

இயக்கத்தில் பல சாதி மறுப்புத் திருமணங்களை - (காதல் அல்ல - இயக்கம்/தலைவர் பேசிய திருமணங்கள்) நடத்தினார்கள். 

மேலே பாலா அண்ணை சொன்ன கிணற்று விடயத்தில் என்ன தீர்ப்பு கொடுத்து இருப்பார்கள்? உங்களை போல வட கிழக்கு அந்நியமானவருக்கு இதை ஊகிக்க கஸ்டமாயிருக்கலாம்- ஆனால் அங்கே வாழ்ந்தோருக்கு அப்படி அல்ல.

மொத்தத்தில் சாதிய ஒடுக்குமுறையை பொது வாழ்வில் இருந்து “பெடியளிட்ட சொல்லி போடுவாங்கள்” என்ற அளவில் அடக்கி வைத்திருந்தார்கள்.

25 minutes ago, Nathamuni said:

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

ஆனால் அவர்களால் சாதியை அடக்கத்தான் முடிந்ததே தவிர ஒழிக்க முடியவில்லை.

இதைதான் மேலே நானும் கு.சா அண்ணையும் வேறுபட்ட வழிகளில் கூறினோம்.

95 யாழ் இடப்பெயர்வின் பின் அவர்கள் அகல சாதியம் மீண்டும் தன் தலையை தூக்கியது.

புலிகள் நடுநிலையாக நின்று சாதியத்தை அடக்கினார்கள். ஏனைய இயக்கம்/அரசு அப்படி செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

தலைவரும்,போராளிகளும் நரிகள் ஊளையிடுவதை கண்டுகொள்வதில்லை...கோசானும் இதை பின்பற்றினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

சாதி என்றால் என்ன😆

தின்னவேலிக்கே அல்வாவா😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

தலைவரும்,போராளிகளும் நரிகள் ஊளையிடுவதை கண்டுகொள்வதில்லை...கோசானும் இதை பின்பற்றினால் நல்லது.

உங்கள் கருத்தில் நியாயமிருந்தாலும், தற்போதிருக்கும் சூழ் நிலையில் ஊளைகளுக்கும் உரிய பதில் அளிக்க வேண்டியது அவசியமென நினைக்கிறேன்.

இந்த சாதி ஒழிப்பு பற்றிய கருத்து மட்டுமன்றி, வேறு பல இடங்களிலும் ஒரு நூதனமான கருத்துப் பரப்பல் நாதமுனியால் செய்யப் படுகிறது: "ராசீவ் கொலையோடு புலிகள் தமிழகத்தில் ஆதரவிழந்தனர், ஒரு அரசியல் கட்சி வந்து தூக்கி நிறுத்தியது" , "புலிகள் சாதியை ஒழிக்க பெரிதாக எதுவும் செய்யவில்லை - ஆனால் இப்ப இருக்கும் புலிவால் தலைவர் செய்கிறார்" 😎

இதெல்லாம் ஒரு narrative building இன் ஒரு பகுதி! இதை நம்பி பின்னால் போகும் காரசாரம் மிகுந்த தேசியர்கள் ஒரு peep கூட இல்லாமல் கப்சிப்! 

2 hours ago, Nathamuni said:

மரியாதை பெறப்படுவதல்ல, வழங்கப்படுவது.

உங்களைப் போன்ற அப்பாடக்கர் அரைக்குடங்களை தவிர்த்து போனாலும், அதை தெளிவாக சொன்னாலும் கூட, புரியாமல் வந்து, முதுகில் தட்டி நம்மையும் கவனித்தீர்களா, என்று கேட்பதை என்னென்பது? 🙄

***

நான் சொன்னது, சாதியம் இல்லாமல் போனது என்றல்ல.

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

நான் சொன்னது வேறு.... நடக்கும் கருத்துருவாக்கம் வேறு

நாதம், அதான் மேலே சொன்னேனே சொந்தம்? வேண்டாமென்று ஒதுக்கி வைக்க வேண்டிய மருவாதையும் இருக்கிறது! "இல்லை , என் மருவாதை உனக்கு வேண்டுமென்றால் நான் பரப்பும் கற்பனையை ஆதரித்து முதுகு சொறி!" என்பது என்ன கணக்கு? 

நாதத்தின் கற்பனையும் வேணாம், மருவாதையும் வேணாம்!😇

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.