Jump to content

திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

 

01__1_.jpeg

 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை  கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல்  பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதற்கு பொலிஸார் தடை விதித்தனர். 

 

20210923_143650.jpg

 

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வாக்கு மூலம் பெற்ற பின்னரே பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

என்.ராஜ்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு  கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து மூவரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Tamilmirror Online || திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க அரசுதடுப்பதை மக்கள் எதிர்ப்பது எல்லாம் உணர்வுபூர்வமான் விடயங்கள்.. ஆனால் கஜெந்திரன் நேற்று செய்ததை பார்த்தேன் அது ஒரு காமெடி வீடியோ.. இந்திய அரசியல்வாதிகள் செய்வதுபோல் அரசியல் ஸ்டண்டுக்கு அனுதாப ஆதரவு உண்டாக்க செய்ததுபோல் இருந்தது.. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு.. உப்பிடி எண்டா அந்த சண்டை நேரம் வீடுவீடா ஆமிஒட்டுக்குழு காடையனுவள் சுட்டுக்கொண்டு திரியேக்க கைதுகள் நடேக்கேக்க எங்கட பிள்ளையளிண்ட தாய்தேப்பன் கத்திகுழறினத என்னெண்டு சொல்லுறது.. இது இந்தாள் பொலிஸ் கைதுசெய்வான் எண்டு தெரிஞ்சு அரசியலுக்காக வீம்புக்கு அங்கபோய் கைதுசெய்யப்படுவதற்காக செய்ததுபோல் செய்றகையாக அப்பிடியே தெரியுது.. உதிலஒரு ஜீவன் இல்ல உண்மை இல்லை.. ஒரு வேளை மேலிடத்தால பொலிஸ்க்கு இதெல்லாம் அரசியலுக்குதான் வாறன் ரெடியா இருங்கோ எண்டு சொல்லிட்டுதான் வரப்பட்டதோ தெரியல..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க அரசுதடுப்பதை மக்கள் எதிர்ப்பது எல்லாம் உணர்வுபூர்வமான் விடயங்கள்.. ஆனால் கஜெந்திரன் நேற்று செய்ததை பார்த்தேன் அது ஒரு காமெடி வீடியோ.. இந்திய அரசியல்வாதிகள் செய்வதுபோல் அரசியல் ஸ்டண்டுக்கு அனுதாப ஆதரவு உண்டாக்க செய்ததுபோல் இருந்தது.. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு.. உப்பிடி எண்டா அந்த சண்டை நேரம் வீடுவீடா ஆமிஒட்டுக்குழு காடையனுவள் சுட்டுக்கொண்டு திரியேக்க கைதுகள் நடேக்கேக்க எங்கட பிள்ளையளிண்ட தாய்தேப்பன் கத்திகுழறினத என்னெண்டு சொல்லுறது.. இது இந்தாள் பொலிஸ் கைதுசெய்வான் எண்டு தெரிஞ்சு அரசியலுக்காக வீம்புக்கு அங்கபோய் கைதுசெய்யப்படுவதற்காக செய்ததுபோல் செய்றகையாக அப்பிடியே தெரியுது.. உதிலஒரு ஜீவன் இல்ல உண்மை இல்லை.. ஒரு வேளை மேலிடத்தால பொலிஸ்க்கு இதெல்லாம் அரசியலுக்குதான் வாறன் ரெடியா இருங்கோ எண்டு சொல்லிட்டுதான் வரப்பட்டதோ தெரியல..

 

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
 
Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
 

கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் ஆசனத்தை பறித்து தனதாக்கிக் கொண்டது உட்பட....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் சபையில் கேள்வி ஏழுப்புவோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 (எம்.நியூட்டன்)

தனிமைப்படுத்தல் சட்டத்தை பொலிசாரே மீறினர் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி ஏழுப்புவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில்  கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவுத் தூபிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடா வருடம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அது போல இம்முறையும் கடந்த நாட்களில் அஞ்சலி செலுத்திவந்தார்.

ஆனால் 23 ஆம் திகதி  அஞ்சலி செலுத்த முயன்ற போது அங்கிருந்த பொலிஸார் தடுத்தனர். எதற்காக தடுக்கிறீர்கள்? நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர்  பொலிஸாரிடம் வினாவினார். எனினும் பொலிஸார் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவு கூற முடியாது என கூறியே அவ்விடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை கைது செய்தனர்.

எனினும் கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில்  நினைவுகூறுவது தவறு என நாங்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைது செய்தோம் என பொலிஸார் கூறினர்.

கஜேந்திரன் எம்.பி சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். பொலிஸாருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால் பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டனர்.

அராஜகமாக கஜேந்திரனின் உடலை பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவ்விடத்திற்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் பொலிஸாரால் சட்டவிரோதமாக கையாளப்பட்டனர்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அவ் நினைவிடத்திற்குச் சென்ற பொழுதே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் கற்பூரம் ஏற்றி நினைவேந்தல் செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

கஜேந்திரன் எம்.பியை கைது செய்தமைக்கு கொரோனா விதிமுறைகள் காரணமல்ல, நினைவேந்தல் செய்தமையே காரணம் என தெரிகிறது. ஏனெனில் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்தில் கஜேந்திரன் எம்.பி மாத்திரம் இருக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இருந்தார்கள், திலீபனின் நினைவிடத்தில் பொலிஸார் வந்தததை அறிந்ததும் பல பொதுமக்களும் கூடினார்கள்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருந்தார்கள் எனில் ஏன் அங்கு கூடிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையில் கஜேந்திரன் எம்.பி சுகாதார விதிமுறைகளை மீறவில்லை. அவர் நினைவேந்தல் மேற்கொண்டமைக்காவே கைதுசெய்யப்பட்டார்.

யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ மற்றும்  சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். 27 ஆம் திகதி பொலிஸாரின் நடவடிக்கைகளை பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம் .

சபாநாயகருக்கும் தெரியாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரன் எம்.பியின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம்.

ஐ.நா. அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் கூட பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கஜேந்திரனை கண்ணியமாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது கற்பூரம் கொளுத்தும் போதே பொலிஸார் நினைவேந்தலை தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

தமிழ் தேசத்து மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் சபையில் கேள்வி ஏழுப்புவோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
 

நான் அந்தக்காலங்களில் புலிகள் இருந்த நேரத்தில் அவரின் நடவடிக்கைகள் பற்றி பேசவில்லை.. அப்பொழுதெல்லாமிவரிடமும் இன்னும் பல அந்த நேரத்தில் இளம் அரசியல்துடிப்புகொண்ட பொதுவிடயங்களுக்காக போராடிய ஒவ்வொருவரிடமும் உண்மை இருந்தது.. ஓர்மம் இருந்து.. மண்ணையும் மக்களையும் நேசித்த நேர்மை இருந்தது.. இவற்றுக்கெல்லாம் பின்னால் போராளிகளின் வீரம் செறிந்த போராட்டம் தந்த உணர்வு,உத்வேகம்,வீரம்,அடங்காப்பற்று இருந்தது.. ஆனால் இன்று போராளிகளும் இல்லை போராட்டமும் இல்லை.. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்.. இவர் வேறு இன்று முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.. முன்னர் செய்த நல்லவற்றுக்காக இன்று அவர் அரசியல்வாதியாக செய்யும் விடயங்கள் மேல் விமர்சனம் வைக்ககூடாது என்றால் கருணாவை இவரை விட 1000ம் மடங்கு கருணா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் ஆகிவிடுவார்.. 

நான் எந்த விருப்புவெறுப்புமில்லாமல் சாதாரண பொதுமகனாக அந்த வீடியோவை பாத்துதான் எனமனசில் பட்டதை சொன்னேன்.. ஈழத்து அரசியல்மேல் நம்பிக்கை புலிகளோடு எனக்கு போய்விட்டது.. இப்ப இருக்கும் எந்த அரசியல்வாதியும் எமக்கு அரசியல் தீர்வு எதையும் பெற்றுக்கொடுக்கபோவதில்லை என்பது என் நம்பிக்கை.. தீர்வு பெற்று தருவேன் என்று உசுப்பேத்தல் அரசியல்செய்பவர்களைவிட மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினையை தீர்த்துவைக்கும் அரசியல்வாதிமேல் தீர்வுபெற்றுதருவதாக சொல்லி ஏமாற்றி வாக்குவாங்கும் அரசியல்வாதிகளை விட பலமடங்கு நல்ல அபிப்பிராயம் இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நேற்று மு.பு பார்த்ததும் சிரிப்பு ,சிரிப்பாய் இருந்தது ...இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தமிழ்ப் படம் எடுக்க போகலாம் .. அவற்ற தம்பியைகாப்பாற்ற  மகிந்தாவின் காலில் விழுந்து எப்படி மீட்டார் என்று தெரியும்  ...அண்மையில்  கூட மகிந்தாவின் அலுவலகத்தில் போய் கூழை கும்பிடு போட்ட படம் வந்திருந்தது ....இவரை விட சும் எவ்வளவோ மேல். 

பொதுசனத்தையாவது அமைதியாய் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த விட்டு இருக்கலாம் ...எல்லாத்தையும் தன சுயநலனுக்காய் குழப்பிக் கொண்டு ...கேடு கெட்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதை நேற்று மு.பு பார்த்ததும் சிரிப்பு ,சிரிப்பாய் இருந்தது ...இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தமிழ்ப் படம் எடுக்க போகலாம் .. அவற்ற தம்பியைகாப்பாற்ற  மகிந்தாவின் காலில் விழுந்து எப்படி மீட்டார் என்று தெரியும்  ...அண்மையில்  கூட மகிந்தாவின் அலுவலகத்தில் போய் கூழை கும்பிடு போட்ட படம் வந்திருந்தது ....இவரை விட சும் எவ்வளவோ மேல். 

பொதுசனத்தையாவது அமைதியாய் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த விட்டு இருக்கலாம் ...எல்லாத்தையும் தன சுயநலனுக்காய் குழப்பிக் கொண்டு ...கேடு கெட்டவர்கள் 

எனக்கு பிள்ளைகுட்டி குடும்பம் அம்மா அப்பா இருந்தும் எதிலும் ஒட்டாமல் எப்பவும் மரணம் அதன் பின் நான் இனிமேல் இல்லை என் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் அழிந்துவிடும் எதுவுமே நிரந்தரம் இல்லை எனும்போது எதுக்கிந்த உலகம் உருவானது போன்ற எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு ஒரு ஞானிபோல் சூனியத்துள் எதிலும் ஒட்டாமல் வாழ்ந்தன்.. புல்லா எதிர்மறை எண்ணங்களால் சூழ்ப்ப்பட்டு.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளியவர முயற்சிக்கிறன் அதுக்கு யாழும் யாழ் உறவுகளும்கூடஒருகாரணம்.. இன்னொரு திரியில் பல உறவுகள் சொன்னதுபோல் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த நிறைய முயற்சி எடுக்கிறன்..

அதுபோலத்தான் இவரும் இவர் கூட்டாளிகளும்.. பூரா எதிர்ப்பரசியலிலேயே காலத்தை ஓட்டுவது.. அவர்கள் காலம் பதவியில் இருந்தபடியே முடிந்துவிடும்.. ஆனால் இவர்கள் எதிர்ப்பரசியலை நம்பி பின்னால் போன மக்கள் காலத்துக்கும் ஏழைகளாகவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சத்தியமான, உண்மையைச் சொன்னால் எனக்கும் உதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது...

😒😂

நான் முதலில் அந்த அன்ரிமார் கத்திக்குழற ஏதோ ஒரு ஐயாவை இழுத்துக் கொண்டு போறாங்களே சிங்களவர் என்டுதான் நினைச்சனான். உடன வேசுபுக்கில் ஓடிப்போய் கைதுசெய்யப்பட்டவர் யாரென தேடிப் பார்த்தாப் பிறகுதான் தெரிந்தது, உது ஒரு முசுப்பாத்தி நாடகம் என்டு.🤦

குறிப்பா அந்த குனிஞ்சு எழும்புறதைப் பார்க்க தமிழ்நாட்டில சசிகலா சத்தியம் செய்தது போல இருக்கு😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.ndtv.com/world-news/3-arrested-for-holding-remembrance-event-for-ex-ltte-terrorist-get-bail-2552399

 

இந்தியாக்காரனின் பகிடிகள்😆

 

Thileepan, The Ex-Terrorist🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் ஆசனத்தை பறித்து தனதாக்கிக் கொண்டது உட்பட....

@தனிக்காட்டு ராஜா எலக்சன் வெண்ட பின் ஒருக்கா அம்பாறைக்கு வந்து போன நியாபகம்.

அதுக்கு பிறகு இவர் அந்த பக்கம் ஏதேனும் எம்பி நிதி ஒதுக்கீட்ட செலவழித்தாரா? வந்தாரா? குறை கேட்டரா?

இவரை அம்பாறைக்கு ஜூனியர்-ஜூனியர் பொன்னர் நேந்து விட்டவர்🤣, அதுதான் கேக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

@தனிக்காட்டு ராஜா எலக்சன் வெண்ட பின் ஒருக்கா அம்பாறைக்கு வந்து போன நியாபகம்.

அதுக்கு பிறகு இவர் அந்த பக்கம் ஏதேனும் எம்பி நிதி ஒதுக்கீட்ட செலவழித்தாரா? வந்தாரா? குறை கேட்டரா?

இவரை அம்பாறைக்கு ஜூனியர்-ஜூனியர் பொன்னர் நேந்து விட்டவர்🤣, அதுதான் கேக்கிறன்.

 

ஒரு தடவை வந்தவர்  என நினைக்கிறன் மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக அதன் பிறகு ஆளே இல்ல. 

இங்கு அரசு தரும் நிதிகளை கூட திட்டமிட்டு செலவு செய்ய மாட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா காலம் உதவி செய்வார்கள் என பார்த்ததால் எல்லா அரசியல் வாதிகளையும் தான் சொல்கிறேன் யாரும் பெரிதாக  உதவி செய்ய வில்லை செய்வது அனைத்தும் புலம்பெயர்ந்த மக்களே இந்த இடத்துல அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இங்கு உள்ளவர்கள் எச்சி கையால்கூட காக்கை விரட்டாத ஆட்கள்.(செல்வந்தர்கள்).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தடவை வந்தவர்  என நினைக்கிறன் மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக அதன் பிறகு ஆளே இல்ல. 

இங்கு அரசு தரும் நிதிகளை கூட திட்டமிட்டு செலவு செய்ய மாட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா காலம் உதவி செய்வார்கள் என பார்த்ததால் எல்லா அரசியல் வாதிகளையும் தான் சொல்கிறேன் யாரும் பெரிதாக  உதவி செய்ய வில்லை செய்வது அனைத்தும் புலம்பெயர்ந்த மக்களே இந்த இடத்துல அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இங்கு உள்ளவர்கள் எச்சி கையால்கூட காக்கை விரட்டாத ஆட்கள்.(செல்வந்தர்கள்).

 

இவர்கள்தான் வாய் கிழிய வடக்கு-கிழக்கு ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

80 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் கஜேந்திரனின் தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க முழுகாரணம் கிழக்கில் அவர்கள் கட்சிக்கு விழுந்த வாக்குகளே.

நியாயாமாக இந்த சீட்டை கிழக்குக்கு கொடுத்திருக்க வேண்டும்.

அந்த கோரிக்கை எழுந்த போது - கஜேந்திரன் அம்பாறையின் எம்பி போல செயற்படுவார் என்றார்கள்.

குறைந்த பட்சம் வருடம் ஒரு தரம் வந்து, தன் நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களையாவது செய்திருப்பார் என நினைத்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இவர்கள்தான் வாய் கிழிய வடக்கு-கிழக்கு ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

80 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் கஜேந்திரனின் தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க முழுகாரணம் கிழக்கில் அவர்கள் கட்சிக்கு விழுந்த வாக்குகளே.

நியாயாமாக இந்த சீட்டை கிழக்குக்கு கொடுத்திருக்க வேண்டும்.

அந்த கோரிக்கை எழுந்த போது - கஜேந்திரன் அம்பாறையின் எம்பி போல செயற்படுவார் என்றார்கள்.

குறைந்த பட்சம் வருடம் ஒரு தரம் வந்து, தன் நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களையாவது செய்திருப்பார் என நினைத்தேன்.

 

நல்ல எதிர்பார்ப்பு ஆனால் எல்லா அரசியல் வாதியும் தன்னையும் தன் நலன் சார்ந்த அனைத்தையும் திறம்பட செய்வதில் முக்கியமாக இருக்கிறார்கள் உதாரணமாக கொரியா வேலைவாய்பு, அரச சலுகைகள், அரசாங்கம் ஒதுக்கும் அபிவிருத்திக்காக வேலைத்திட்டங்களில் பங்கு இவர்களை நம்பி பலன் இல்லை இதில் யாவரும் அடக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 03:19, பாலபத்ர ஓணாண்டி said:

. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு..

பாலபத்ர ஓணாண்டி, 

நீங்கள்தான் வீடியோவை போட்டனீங்கள். திரும்ப ஒருக்கா பாருங்கோ, கஜன் கற்பூரம் கொளுத்த, காவலர்கள் காலால  தட்டிவிடத்தான் பொம்பிளையள் கத்ததொடங்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

கஜேந்திரன்MP கைது திட்டமிட்ட செயலா?

 

திட்டமிட்டபடி திட்டத்தோடு போயிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.   இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.   ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.   மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.   'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.