Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A

By Shana
jaffna-hindhu-college.jpg

 

நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
 

 

http://www.battinews.com/2021/09/56-9a.html

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் முன்னணி பாடசாலைகளில் 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை…
 
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி/Hartley College-21பேர்.
யாழ் இந்துக் கல்லூரி/Jaffna Hindu College-56பேர்.
வேம்படி மகளிர் கல்லூரி/Vembadi Girls' High School-58பேர்.
மகாஜனக் கல்லூரி/Mahajana College-2பேர்
 
வேம்படி முகநூலில் இருந்து.. 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டிடம், குமாரசாமி மண்டபம்....

இனிய நிணைவுகள்....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:
யாழ் முன்னணி பாடசாலைகளில் 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை…
 
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி/Hartley College-21பேர்.
யாழ் இந்துக் கல்லூரி/Jaffna Hindu College-56பேர்.
வேம்படி மகளிர் கல்லூரி/Vembadi Girls' High School-58பேர்.
மகாஜனக் கல்லூரி/Mahajana College-2பேர்
 
வேம்படி முகநூலில் இருந்து.. 

தம்பி கலியாணம் கட்டினாப் பிறகும்

வேம்படி முகநுhலுக்குள்ள தான் அலையிறீங்க போல.

நல்லது நல்லது.

உங்கள் கட்சி தொகையை போட்டு விட்டீர்கள்.

எங்கள் கட்சி தொகையை யாரும் போடலையே?

அதையும் ஒருக்கா போடுங்களேன் பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த கட்டிடம், குமாரசாமி மண்டபம்....

இனிய நிணைவுகள்....

நாங்கள் படித்த காலத்தில் குமாரசாமி மண்டபம் சங்கீதம் வரைதல் ஆகிய இரு பாடங்கள் மட்டுமே நடந்தன.

மேல்மாடி ஏதாவது வெளியார் அல்லது ஓஎல் சோதனைகளுக்காக மட்டுமே திறக்கப்படும்.

கட்டடங்கள் முடிவடையாத நிலையிலேயே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகள் கிடைப்பதில்லை வடகிழக்கில் இதை வைத்து உயர்தரம்  மட்டும் படிக்கலாம் அவ்வளவுதான்.

உயர்தர பரீட்சை முடிவுகளே தொழிலையும் மேற்படிப்பை உறுதி செய்கிறது

வாழ்த்துகள் அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகள் கிடைப்பதில்லை வடகிழக்கில் இதை வைத்து உயர்தரம்  மட்டும் படிக்கலாம் அவ்வளவுதான்.

உயர்தர பரீட்சை முடிவுகளே தொழிலையும் மேற்படிப்பை உறுதி செய்கிறது

வாழ்த்துகள் அனைவருக்கும்

பிரிடனில்.... சாதாரண தரம் வரை கட்டாயம் பள்ளிக்கு போவதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

அதன் பிறகு பெடி, பெட்டயள் தமது காரை தாமே ஓடவேண்டியது தான் நிலை.... (இது வெள்ளைகள் கதை).

ஆனாலும், இலங்கை, இந்தியா போலல்லாமல், இங்கே ஜம்பது வயதிலும் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடி கரை சேர முடியும்.

உங்களுக்கு வயசு போட்டுதே என்று, முதலாளி சொன்னால், சட்டப்படி குற்றம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
 
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
May be an image of 1 person and standing
 
fb
  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 16:27, ஈழப்பிரியன் said:

தம்பி கலியாணம் கட்டினாப் பிறகும்

வேம்படி முகநுhலுக்குள்ள தான் அலையிறீங்க போல.

அப்போதும் சரி.. இப்பவும் சரி... இந்த பின்னால அலையுறது நமக்கு சரிப்பட்டு வராத விடயம்.

தகவல் திரட்ட அங்கால எட்டிப்பார்ப்பதுண்டு. அவ்வளவும் தான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா .....எல்லோருக்கும் சித்தி கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி விவசாயம் மீன்பிடிதான் தமிழர்பகுதியின் வேலைவாய்ப்பை பெறுகின்ற பிரதான மூலவளங்கள்.

எல்லோராலும் அனைத்து தொழிலும் செய்யமுடியாது,

ஏழை நடுத்தர வர்க்க  இளம்  சந்ததிக்கு இனி படிப்பைவிட்டால் எதிர்காலத்தில் தலைநிமிர வேறு வழியே இல்லை, அதனாலதான் வெறிதனமா படிச்சு தாறு மாறா ரிசல்ட் எகிறுதெண்டு நினைக்கிறன்.

தனிக்காட்டு ராஜா சொன்னமாதிரி A/L'லிலும் கலக்கினாதான் இலக்குகள் ஓரளவிற்கு முற்றுப்பெறும்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 21:05, nunavilan said:
வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
 
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
May be an image of 1 person and standing
 
fb

 

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும், ஏன் அந்த 3-4 பாடசாலைகள்?

குறிப்பாக, அந்த பாடசாலைகள் கற்பித்ததா, அல்லது மாணவர் தனியார் வகுப்புகளில் கற்று தேறியதை பாடசாலைகள் மூலம் accreditation செய்து உள்ளார்களா?   
 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text that says "AL Qualified Based on OL 2020 Results Jaffna 69.62% Kilinochchi 65.79% Legend Total 13,000 Mullaitivu 69.18% Vavuniya 69.51% Mannar 75.25 FirstTime Repeat Districts ALQualified% 65.79 66.66 69.18 Anuradapura Puttalam 72.16% Trincomalee 66.66% 71.70 71.71 Kurunegala 76.53% Polonnaruwa 71.7% 72.77 72.78 73.68 Batticaloa 71.71% Matale 71.34% Gampaha 72.77% 75.25 75.27 75.60 Kegalle 75.6% Kandy 76.84% Nuwara Eliya 72.78% Colombo 76.53 76.84 Ampara 76.13% Badulla 74.62% Ratnapura 73.74% Kalutara 73.6 3.68% 78.94 Monaragala 75.65% 81.93 78.94% Matara 81.17% This was produced based basemap& included praccals Hambantota 81.93% 1:1,500,000 0510 30 https://ctmcq.home.blo October 2021"

கடந்த ஜி சி ஈ சாதாரண தர முடிவுகளில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பொதுவாகப் பின்னடைந்துள்ளன.. சொறீலங்காவின் ஏனைய தெற்கு.. மேற்கு... மத்திய.. மாகாணங்களோடு ஒப்பிடும் போது.

இதற்கு வழமை போல் வெளிநாட்டுக் காசு.. சொகுசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் காது புளிக்கக் கேட்க முடியுது..

வெளிநாட்டுக் காசு தான் காரணம் என்றால்..

வடக்குக் கிழக்கில்.. போதிய மாணவர்கள் இன்மையால் ஏன்.. பாடசாலைகளை மூட வேண்டி இருக்குது..??!

எத்தனை பாடசாலைகள் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளன..?!

எத்தனை பாடசாலைகள்.. குறிப்பாக பிந்தங்கிய பிரதேசப் பாடசாலைகள்.. போதிய ஆசிரியர்கள் இன்றி உள்ளன..?!

எத்தனை போரால் சேதமாக்கப்பட்ட பாடசாலைகள் மீள திருத்தி.. போதிய வசதிகளோடு கையளிக்கப்பட்டுள்ளன..?!

எத்தனை வடக்குக் கிழக்கு மாணவர்கள்.. உள்ளூரில் இன்னும் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்..??!

எத்தனை மாணவர்கள் போரில் பெற்றோரை அல்லது காவலர்களை இழந்து.. தனிமைப்பட்டு அல்லது போதிய ஆதரவின்றி வாழ்கின்றனர்..?! இவர்களுக்கு என்ன அடிப்படைவசதிகள் அரசினால் செய்யப்பட்டுள்ளன.. மீண்டும் பாடசாலைக்கு போவதற்கு..??!

என் கண்ணால் கண்டேன்.. யாழ் நகரில் ஒரு பிரல்பல்ய பாடசாலை மாணவன்.. பாடசாலை முடிந்த கையோடு.. அதே சீருடையில் நின்று ஊதிபத்தி விற்கிறான். அவனிடம் விசாரித்த போது தனது தங்கைக்கு புத்தகப் பை இல்லை.. அதனை வாங்கிக் கொடுக்கவே உழைக்கிறேன் என்றான். அவனுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவினேன்.. அவன் சொன்னதை உண்மை என்றே நம்புகிறேன்.. ஏனெனில்.. அவன் கண்ணீர் அதனை செப்பியது.

இப்படி எத்தனை பிள்ளைகள்.. மேலும்.. போரில் கணவரை அல்லது மனைவியை இழந்து பிள்ளைகளை சரியாகக் கவனிக்க முடியாத பெற்றோர்..??! அவர்களின் வருவாய்க்கு.. பிள்ளைகளைப் படிப்பிக்க.. என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன...??!

எல்லாத்துக்கும் வெளிநாட்டுக்காரரும்.. வெளிநாட்டுக்காசும்.. வெளிநாட்டுப் பகட்டும்.. அல்ல பதில்..!

அவை காரணமில்லை என்று சொல்லவில்லை.. ஆனால்.. அதையும் தாண்டிய உள்ளூரில்.. சீரமைக்கப்பட வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியம் ஆகும்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தான் அதிகம் கல்வி வீழ்ச்சியை காண்பிக்கிறது குறிப்பாக 2009 மே க்குப் பின்.. ஏன்..??!

இதன் பின்னணியில்.. இராணுவ பிரசன்னம்.. அது சார்ந்து.. கஞ்சா.. பாலியல்.. பொழுதுப்போக்கு அம்சங்கள் என்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கும் நடவடிக்கைகளும்.. தாக்கம் செய்கின்றன. 

இவை எல்லாம் சேர்த்துப் பார்க்கப்பட்டு சீரமைக்கப்பாட்டால் இன்றி.. தமிழர் பிரதேச கல்வித்தரம் திடீர் என்று உயர்வு காண்பது சாத்தியமில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரீட்சையில் யாழ் தான் கடைசி இடமாமே:shocked: [நம்ப முடிகிறதா ? மட்டு அதற்கு முன் உள்ளது ...இணைய மூலம் கற்பதில் குறைபாடுகள் இருக்கலாம் ...ஆசியர்களும் சூமில் சும்மா நேரத்தை கடத்தி இருப்பர்[அவர்களை கண்காணிக்க ஒருத்தரும் இல்லை.] அல்லது எப்படி படிப்பிப்பது  என்று தெரியாமல் இருக்கும்...பெற்றோர்களும் கவனமில்லை .பிள்ளைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதேயில்லை ....எல்லா மாணவர்களுக்கும் இணைய வசதி இல்லை ....எல்லாவற்றையும் விட வெளிநாட்டு காசு போன்றவை வீழ்ச்சிக்கு காரணம்  

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

அவை காரணமில்லை என்று சொல்லவில்லை.. ஆனால்.. அதையும் தாண்டிய உள்ளூரில்.. சீரமைக்கப்பட வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியம் ஆகும்.

நீங்கள் யாழ் இணையத்தில் இந்த இணைப்பை இணைத்திருந்தீர்கள்.. நன்றாக ஆராய்ந்து பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.. 

இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? 

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவ சங்கங்கள் தொடங்கி சில பொறுப்புகளை உணர்ந்து செயல்களை செய்வதற்கு எது தடைபோடுகிறது? 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.