Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மக்களாலேயே கோட்டாபய அரசு விரட்டப்படும் காலம் வரும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களாலேயே கோட்டாபய அரசு விரட்டப்படும் காலம் வரும்: சம்பந்தன்

November 18, 2021

புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்

 

ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர்.

இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது” என்றார்.

 

https://www.ilakku.org/the-time-will-come-when-the-gotabhaya-government-will-be-ousted-by-the-sinhalese-people-sampanthan/

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. பெரிய கண்டுபிடிப்பு. கோத்தபாயா இருக்கட்டும் நீங்கள் தமிழ் மக்களுக்கு என்னத்தை செய்கிறீர்கள் என்று முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

ம்.. பெரிய கண்டுபிடிப்பு. கோத்தபாயா இருக்கட்டும் நீங்கள் தமிழ் மக்களுக்கு என்னத்தை செய்கிறீர்கள் என்று முடியுமா?

அவர் மட்டும் இல்லை எவரும் எதுவும் செய்யவில்லை செய்யவும் மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை சுட்டிகாட்டினால் தங்களை மக்கள் அடையாளங்காண மாட்டார்கள் என்று நினைத்திருப்பார் தலீவர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கிருபன் said:

ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயா!   கோத்தபாயவை  சனம் விரட்டியடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நீங்கள் நல்லாட்சியிலை கூடிக்குலாவிக்கொண்டு என்னத்தை செய்தனியள்? 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கோத்தபாய இருக்கட்டும் இவரும் சும்மும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் யாழ் வீதியில் வைத்து தாங்கள் தான் தமிழர்களின் உண்மையான அரசியல்வாதி என்று  சொல்லமுடியுமா ?

 

கிழவனென்றும் பார்க்காமல் அடித்து துவைத்து விடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் கோத்தபாய இருக்கட்டும் இவரும் சும்மும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் யாழ் வீதியில் வைத்து தாங்கள் தான் தமிழர்களின் உண்மையான அரசியல்வாதி என்று  சொல்லமுடியுமா ?

 

கிழவனென்றும் பார்க்காமல் அடித்து துவைத்து விடுங்கள் .

ஐயா, அடுத்த  தீபாவளிக்கு என்று சொல்வதேயில்லை. தீபாவளி கொண்டாடுவதுமில்லை, அதிலிருந்து விளங்க வேண்டாமோ? அவர் மானஸ்தன்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சனம் துரத்தியடிச்சாலும் நீங்கள் முண்டுகுடுக்கிறதை நிப்பாட்ட மாட்டியள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது” என்றார்.

ஐயா ரணகளத்திலயும் கிளுகிளுப்பேற்றுகிறார்.
ஐயா மறந்திட்டார் போல ஐயா போன்ற கையாலாகாத Proxy களையே ஈழத்தமிழர்கள் ஆசனத்தில் ஏற்றியேற்றி அழகு பார்க்கும்போது சிங்களவர் கோத்தாவை தூக்கியெறிந்து விடுவர் என்று எப்படி எதிர்பார்க்கிறார் , ஒருவேளை சிங்களவர்கள் மானஸ்தர்கள் என்பது ஐயாவுக்கு தெரியும் போல, அதனால் தான் பொங்கல் தீபாவளி என்று தமிழர்களுக்கு குடுகுடுப்பையடித்து எதிர்வு கூறிய ஐயாவுக்கு சிங்களவனை பற்றி எதிர்வுகூற படு கஷ்ட்டமாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய வீடு போனால் இன்னொரு சிங்களவர்தானே ஆட்சிக்கு வருவர்.... 😔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கோட்டாபய வீடு போனால் இன்னொரு சிங்களவர்தானே ஆட்சிக்கு வருவர்.... 😔

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? எதுக்கும் சுமந்திரனின் டீல் முடியுமட்டும் கோத்தா இருக்கட்டும் என்கிறீர்களா? ஆனால் ஐயா அவசரப்படுகிறாரே? பயப்படாதீர்கள், சுமந்திரன் நாடு திரும்புமட்டும் அவர் பதவிக்கு கேடு வராது, மாத்தையாதான் சனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களால் தமிழ் அரசுகட்சியையும்,அதன் தலையையும்  துரத்தியடிக்கும் காலம் வெகுவிரைவில் வரும் .......புத்தன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? எதுக்கும் சுமந்திரனின் டீல் முடியுமட்டும் கோத்தா இருக்கட்டும் என்கிறீர்களா? ஆனால் ஐயா அவசரப்படுகிறாரே? பயப்படாதீர்கள், சுமந்திரன் நாடு திரும்புமட்டும் அவர் பதவிக்கு கேடு வராது, மாத்தையாதான் சனாதிபதி!

என்ன சாத,

அம்பலப்பட்டுப்போனேன் என்கின்ற கோபமோ....?

பயப்படாதீர்கள். எல்லாம் சுபமாகவே முடியும். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

என்ன சாத,

அம்பலப்பட்டுப்போனேன் என்கின்ற கோபமோ....?

பயப்படாதீர்கள். எல்லாம் சுபமாகவே முடியும். 

😀

இது என்ன புதுக்கதை எழுதுகிறீர்கள்? யாரும் போண் போட்டு சொன்னாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.