Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்!

நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்…

  • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 109 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 162 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 48% அதிகமாகும்.
  • கடந்த ஆண்டு 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 183 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 259 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 550 ரூபாயாக இருந்த ஒரு கிலோ உலர் மீன் தற்போது, 935 ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2020 நவம்பரில் 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கடந்த ஆண்டை விட 400 கிராம் பால் பவுடர்கள் 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி விலை 164%, வெண்டைக்காய் 188%, போஞ்சி 70%, கேரட் 70%ஆக அதிகரித்துள்ளது.
  • கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று 1257 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

 

https://athavannews.com/2021/1254013

  • கருத்துக்கள உறவுகள்

“கருவாடு” உள்ளபோது உலர் மீன் எதற்கு???? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விலை உயர்வுகள் சிறீலங்காவின் கடன் சுமையைக் கூட்டுமா...? குறைக்குமா...?? 🤔

1 hour ago, Paanch said:

இந்த விலை உயர்வுகள் சிறீலங்காவின் கடன் சுமையைக் கூட்டுமா...? குறைக்குமா...?? 🤔

இலங்கையின் கடன்சுமை கூடுவதுதையும் குறைவதையும் வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.

இலங்கையின் பண வீக்கம் எங்கள் உறவுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இலங்கையின் கடன்சுமை கூடுவதுதையும் குறைவதையும் வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.

இலங்கையின் பண வீக்கம் எங்கள் உறவுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில், சிங்கள அரசின் பெரும் தடைகளுக்கு முகம் கொடுத்த எங்கள் உறவுகள் இதை சமாளிப்பர்.

இ்போது, சுமந்திரன் உள்பட, நெல் உற்பத்தி, வீட்டுக்கு வீடு மரக்கறி தோட்டம் என்று கிடைக்கும் இடமெல்லாம் விவசாயம்.

போனவருடம், கொழும்பில் இருக்கும் எனது மச்சான், ஊரில் விதைத்து..... வித்தது போக மிச்சத்தை பன்னிரண்டு மூடை அரிசியாய் கொழும்பு கொண்டு போய் வைத்துள்ளார். அவருக்கும், தங்கை குடும்பத்துக்கும் மாதம் அரை மூடை வீதம் போதுமாம்.

கொழும்பில் கூட வீட்டின் பின் மரக்கறி போட்டுள்ளார்.

சிங்களவர் சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போனவருடம், கொழும்பில் இருக்கும் எனது மச்சான், ஊரில் விதைத்து..... வித்தது போக மிச்சத்தை பன்னிரண்டு மூடை அரிசியாய் கொழும்பு கொண்டு போய் வைத்துள்ளார். அவருக்கும், தங்கை குடும்பத்துக்கும் மாதம் அரை மூடை வீதம் போதுமாம்.

நெல்லாக வைத்திருந்தால் நீண்டகாலம் வைத்திருக்கலாம்.
ஆனால் அரிசி அப்படி வைத்திருக்கலாமோ?
இல்லை என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நெல்லாக வைத்திருந்தால் நீண்டகாலம் வைத்திருக்கலாம்.
ஆனால் அரிசி அப்படி வைத்திருக்கலாமோ?
இல்லை என்றே எண்ணுகிறேன்.

உங்கை கப்பலில வாற, புழங்கல் அரிசி... சிவத்தைப் பச்சையரிசி நம்மட பிளேட்டுக்கு வந்து சேர....எட்டில இருந்து பதினைந்து மாசம் ஆகுதே...

விக்காட்டி, ஸ்ரிக்கரை மாத்தி, புது எக்பயரி டேற்டோட வேற வருகுது.....

நம்ம பெருமாளை கேட்டால் கதை, கதையா சொல்லுவார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

உங்கை கப்பலில வாற, புழங்கல் அரிசி... சிவத்தைப் பச்சையரிசி நம்மட பிளேட்டுக்கு வந்து சேர....எட்டில இருந்து பதினைந்து மாசம் ஆகுதே...

விக்காட்டி, ஸ்ரிக்கரை மாத்தி, புது எக்பயரி டேற்டோட வேற வருகுது.....

நம்ம பெருமாளை கேட்டால் கதை, கதையா சொல்லுவார். :grin:

நாதம்ஸ் கப்பலில் வாற பொருட்களுக்கு fumigation என்ட ஒண்டு இருக்குதல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இலங்கையின் கடன்சுமை கூடுவதுதையும் குறைவதையும் வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.

இலங்கையின் பண வீக்கம் எங்கள் உறவுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

 

நீங்கள் சொல்வது எவ்வளவு  உண்மையோ

அதே  அளவு  உண்மை

அடிக்கொரு  குண்டை எம்  மக்கள்  மீதும் மண்மீதும் கொட்டி 

எம்மக்களையும்  மண்ணையும்  ஆக்கிமித்துக்கொண்டிருந்தபோது.....

இந்த  நிலை  வரும்  என தமிழர்  ஒப்பாரியிட

சிங்களவர்கள் வெடி  கொழுத்திக்கொண்டாடிக்கொண்டிருந்ததும்...........

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

நாதம்ஸ் கப்பலில் வாற பொருட்களுக்கு fumigation என்ட ஒண்டு இருக்குதல்லோ

பயிர் பச்சை வளரும் போதே, அடிக்கிற மருத்துக்களால வாற சுகாதார பிரச்சினையால் தானே கோத்தா, ஆர்கானிக் விவசாயம் எண்டு கிளம்பினவர்.

ஈழப்பிரியன் சொன்னது... பழைய காலத்து... அரிசி.... நெல்லு கதை.

இது இப்ப... Genetically Modified DNA காலம்... 

இறைச்சி, மீன் வகைகளுக்கு ஒரு கதை சொல்லுவினம். உயிரோட இருந்த காலத்திலும் பார்க்க, பிரீஸிருக்க கனகாலம் இருக்கும் எண்டு.... அந்த காலத்திலை பிரீஸிர் இருக்கவில்லையே... அது போல தான்...🤑

  • கருத்துக்கள உறவுகள்

விலை உயர்வு அங்கு மட்டுமல்ல இங்கு கனடாவிலும் தான்.  பல பொருட்கள் Covid  க்கு முன்னர் இருந்த விலையிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நெல்லாக வைத்திருந்தால் நீண்டகாலம் வைத்திருக்கலாம்.
ஆனால் அரிசி அப்படி வைத்திருக்கலாமோ?
இல்லை என்றே எண்ணுகிறேன்.

அரிசியாய் கனகாலம் வைச்சிருக்கேலாது.....புளு கூடு கட்டீடும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

யுத்தகாலத்தில், சிங்கள அரசின் பெரும் தடைகளுக்கு முகம் கொடுத்த எங்கள் உறவுகள் இதை சமாளிப்பர்.

இ்போது, சுமந்திரன் உள்பட, நெல் உற்பத்தி, வீட்டுக்கு வீடு மரக்கறி தோட்டம் என்று கிடைக்கும் இடமெல்லாம் விவசாயம்.

போனவருடம், கொழும்பில் இருக்கும் எனது மச்சான், ஊரில் விதைத்து..... வித்தது போக மிச்சத்தை பன்னிரண்டு மூடை அரிசியாய் கொழும்பு கொண்டு போய் வைத்துள்ளார். அவருக்கும், தங்கை குடும்பத்துக்கும் மாதம் அரை மூடை வீதம் போதுமாம்.

கொழும்பில் கூட வீட்டின் பின் மரக்கறி போட்டுள்ளார்.

சிங்களவர் சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்குவார்கள்.

இந்த விலையேற்றம் பலரையும் இந்திய நாடகங்களை மறந்து இருக்கும் துண்டு நிலங்களில் வீட்டுத்தோட்டம் போட வைத்து விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

“கருவாடு” உள்ளபோது உலர் மீன் எதற்கு???? 

உலர்ந்த மீன் கருவாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.