Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்; போய்க் கூறும்படியும் காட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Editorial   / 2022 ஜனவரி 18 , பி.ப. 07:35 - 0      - 61

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறியிருக்கிறார் சம்பந்தன்

9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

"ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து பாராளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். அதற்காக எழுந்தார். எனினும், யோசித்தவர், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார். 

ஆனால், பாராளுமன்றை விட்டு வெளியே வரும்போது 'லொபி'யில் தமக்கு முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் தமது கோபத்தை சம்பந்தன் ஐயா காட்டினார்.

'ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன். 

இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை. 

இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது. உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்'' என்று சம்பந்தன் ஐயா சீற்றத்துடன் கூறினார்.

இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பெசில் ராஜபக்ச விடயத்தைச் சமாளித்து, 'தாங்க்யூ, தாங்க்யூ...!' என்று கூறி அங்கிருந்து அகன்றார்" - என்று தகவல் வெளியிட்டார் சுமந்திரன் எம்.பி.

Tamilmirror Online || கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்; போய்க் கூறும்படியும் காட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு…. கோபம் வந்திட்டுது. 🧐
இனி… நாலுகால் பாய்ச்சலில், எல்லாரையும் கடிச்சு… குதறப் போறார். 🤪

 

இந்தப் பாய்ச்சலில், பசில் ராஜபக்ச…. நிலை குலைந்து போனது, அதிசயம்.
இப்பவாவது…. மகிந்த சகோதரருக்கு,
சம்பந்தனின் கோபம் எப்படிப் பட்டது என்று புரிந்திருக்கும்.😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, பிழம்பு said:

ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறியிருக்கிறார் சம்பந்தன்

அலைகள் ஓய்வதில்லை. அது அதே இடத்தை விட்டு நகர்வதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்


இந்த அபூர்வ செய்தியை….  பசிலுக்கு, பக்கத்தில்  நின்று… 
சேகரித்துக் தந்த…. “தமிழ்மிரருக்கு” நன்றி. 😁🤪

ஐயா சம்பந்தரின் வெருட்டலில் கோத்தா பயந்து போய் அநேகமாக அமெரிக்காவுக்கு திரும்ப போய் ஒழிந்து கொண்டலும் ஆச்சரியம் இல்லை. ஆரு கண்டது, தமிழ் ஈழம் தரக் கூட வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் கையாளும் உத்திகளை கொண்ட ஆய்வாளர்களுக்கு ஒரு துப்பு கிடைத்து விட்டது! இனி யென்ன தரனன்ன தரனன்னா தான்👀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அது சிங்கள ஆட்சியாளர்களை மிரட்டுவதற்காக ஒன்றும் சொல்லப்பட்டதல்ல,

நாங்கள் இன்னமும் தமிழர்களுக்காக சிங்களவர்களை  எதிர்த்து போராடுகிறோம் என்று தமிழர்களை பேய்க்காட்ட காலம் காலமாக இவர்களால் காண்பிக்கப்படும் வழக்கமான சோடனை.

 

அடிப்படையில் காலம் காலமாக தமிழர்களை ஏமாற்றுவது சிங்கள தலைமைகள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம், அடிப்படையில் தமிழ் அரசியல் தமைமைகளே அவர்களைவிட பலமாக நம்மை ஏமாற்றியவர்கள்,

அதனால்தான் ஆயுத போராட்டம்  முதலில் தமிழ் அரசியல் தலைமைகளை குறி வைத்தது.

இனி எவர் வேண்டுமென்றாலும் ஈழ தமிழர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தலாம்,  அதனை புலத்தில் உள்ள தமிழர்கள் கை விரல்களால் இலத்திரனியல் ஊடகங்களில் தட்டி கேட்டு போர் தொடுப்பார்கள்,

அதே கருத்தாளர்கள் தாயகம் நோக்கி விடுமுறைக்கு போனால் எங்கேயாவது தம்மை யாரும் கண்டு பிடித்து விடுவார்களோ என்று நடுங்கி கொண்டே போவார்கள்

தாயகத்தில் காலம் காலமாய் உள்ளவர்கள் இது எல்லாம் முழுநீளை நகைச்சுவை என்று தெரிந்ததினால் கை கட்டி வாய்மூடி பேசாமல் தமது அன்றாட வேலைகளை கவனிக்க போவார்கள்.

மொத்ததில் சிங்களவர் தமிழர்  அனைவருமே ஒருவகை சந்தர்ப்ப சூழ்நிலை நகைசுவையாளர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் திருகோணமலையில் முன்பு  பெரிய சண்டியராம்.  அது தான் பசிலுக்கு லைட்டா ஒரு வெருட்டு கொடுத்து இருக்கிறார். இனி விளையாட்டை  பாருங்கோ.😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

சம்பந்தர் திருகோணமலையில் முன்பு  பெரிய சண்டியராம்.  அது தான் பசிலுக்கு லைட்டா ஒரு வெருட்டு கொடுத்து இருக்கிறார். இனி விளையாட்டை  பாருங்கோ.😂

சம்பந்தர்….   முந்தி பெரிய சண்டியர் என்றால், இடைப் பட்ட காலங்களில் ஏன்…
சாமத்தியப் பட்ட… குமர்ப் பிள்ளை மாதிரி, இருந்தவர். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது புதிய அணுகுமுறையை புதிய வருடத்தின் பிரகடனமாக ஐயா சம்பந்தர் எடுத்திருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தர்….   முந்தி பெரிய சண்டியர் என்றால், இடைப் பட்ட காலங்களில் ஏன்…
சாமத்தியப் பட்ட… குமர்ப் பிள்ளை மாதிரி, இருந்தவர். 🤣

அந்த பிழையை உணர்ந்திட்டார் இப்போ.🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

 

'தாங்க்யூ, தாங்க்யூ...!' என்று கூறி அங்கிருந்து அகன்றார்" - என்று தகவல் வெளியிட்டார் சுமந்திரன் எம்.பி.

 

சோர்ஸ் பை நம்ப தகுந்த வட்டாரம்..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சம்பந்தர் திருகோணமலையில் முன்பு  பெரிய சண்டியராம்.  அது தான் பசிலுக்கு லைட்டா ஒரு வெருட்டு கொடுத்து இருக்கிறார். இனி விளையாட்டை  பாருங்கோ.😂

கடவுளே சம்பந்தர் குழம்பீட்டார் இனி ரணகளம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:


இந்த அபூர்வ செய்தியை….  பசிலுக்கு, பக்கத்தில்  நின்று… 
சேகரித்துக் தந்த…. “தமிழ்மிரருக்கு” நன்றி. 😁🤪

வேற எங்குட்டும் தப்பிச்சி போயிராம பின்னாடியே மைக் ஓட ஓடி இருக்குரார்கள்… சம்பந்தரயும் பசிலையும் கொண்டு போயி வீட்டுல ஒப்படிசிட்டுதான் வந்திருப்பார்கள் போல..😂

5 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தருக்கு…. கோபம் வந்திட்டுது. 🧐
இனி… நாலுகால் பாய்ச்சலில், எல்லாரையும் கடிச்சு… குதறப் போறார். 🤪

 

இந்தப் பாய்ச்சலில், பசில் ராஜபக்ச…. நிலை குலைந்து போனது, அதிசயம்.
இப்பவாவது…. மகிந்த சகோதரருக்கு,
சம்பந்தனின் கோபம் எப்படிப் பட்டது என்று புரிந்திருக்கும்.😂 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

. நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை.

போச்சே போச்சு தேத்தண்ணி, வடை, வம்பு. "சாது மிரண்டால் காடு கொள்ளாது." என்ன நடக்கபோகுதோ? நினைச்சா  நெஞ்சு பக்கு பக்கெண்ணுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு வந்த கோவத்துல, தேத்தண்ணியையே வேண்டாம் என்று உதறிற்றார். ஐயா யாரு? மானஸ்தன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.