Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினார் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினார் ஜனாதிபதி

spacer.png

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட்டிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், லோர்ட் உறுதியளித்தார்.

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023 இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
 

 

https://athavannews.com/2022/1262906

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம கோசான் ஐ அனுப்பி பார்ப்பம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நம்ம கோசான் ஐ அனுப்பி பார்ப்பம் 😀

என்னதான் இருந்தாலும் இன்றைய நிலமையை அவதானிக்கும்போது, சனாதிபதி வருவது காசைத் தேடி. கோசானிடம் அத்தனை காசிருக்கா...?? கோசானுக்கு 🙌😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023 இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

போன வாரந்தான் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள உறவுக்கு அறுபத்தைந்தாண்டு விழா கொண்டாடிச்சினம். வாற வருஷம் ஐக்கிய இராச்சியத்தோடு எழுபத்தைந்தாவது ஆண்டு விழா கொண்டடாடப்போகினம். ஒவ்வொரு வருஷம் ஒவ்வொரு நாட்டோடு கொண்டாடுங்கோ, அதோடு சேர்த்து  நாட்டின் பிரஜைகளை அழித்த விழாவையும் ஆண்டாண்டு  கொண்டாடுங்கோ.

2 hours ago, கிருபன் said:

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

 

2 hours ago, கிருபன் said:

ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாட்டிடமும் உதவி பெறும்போது, இந்த வாய்ப்பாட்டை சொல்லி கேக்கிறது, பெற்றபின் அதை அழித்து புலம் பெயர் புலிகள் பல்லவி பாட வேண்டியது. எதுக்கு இவர்களை கேட்டுக்கொண்டு,  பிரித்தானிய பேரவையில் இருக்கிற முக்கிய புள்ளி சுமந்திரனின் தோழரை கேட்டால் இல்லை என்றா சொல்வார்?

இலங்கையர்கள் என்று குறிப்பிட்டது பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களை; புலம்பெயர் தமிழர்களை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இலங்கையர்கள் என்று குறிப்பிட்டது பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களை; புலம்பெயர் தமிழர்களை அல்ல.

 

சிங்களவர்களுடன்  பேச அவருக்கு  பிரித்தானியாவின்  உதவி  தேவையா???

4 minutes ago, விசுகு said:

 

சிங்களவர்களுடன்  பேச அவருக்கு  பிரித்தானியாவின்  உதவி  தேவையா???

பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுடன் பேசுவதற்கு பிரித்தானிய அரசு தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுடன் பேசுவதற்கு பிரித்தானிய அரசு தேவையா?

பிரித்தானியா சில  அழுத்தங்களை  கொடுக்கலாம்  என்ற  எதிர்பார்ப்பு  இருக்கலாம்  என்று  நினைக்கின்றேன்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பிரித்தானியா சில  அழுத்தங்களை  கொடுக்கலாம்  என்ற  எதிர்பார்ப்பு  இருக்கலாம்  என்று  நினைக்கின்றேன்??

அங்கு உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பிரித்தானியா தமிழர்களின் வாக்கு தீர்மானக்கும்போது எப்படி அழுத்தம் கொடுக்க முடியும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

நம்ம கோசான் ஐ அனுப்பி பார்ப்பம் 

கோசானின் சிங்களத்தை கேட்டு கோத்தா அஞ்ச  மாட்டாரா?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இலங்கையர்கள் என்று குறிப்பிட்டது பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களை; புலம்பெயர் தமிழர்களை அல்ல.

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

5 hours ago, நிழலி said:

பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுடன் பேசுவதற்கு பிரித்தானிய அரசு தேவையா?

பிரித்தானியாவிலுள்ள சிங்களவர்களுடன் பேச ஏன் பிரித்தானிய அரசு தேவை?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இலங்கையர்கள் என்று குறிப்பிட்டது பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களை; புலம்பெயர் தமிழர்களை அல்ல.

அதெப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள்?

பிரித்தானியாவில் சிங்கள அடாவடிகளுக்கெதிராக  தமிழர்களால் எடுக்கப்படும் அறவழிப்போராட்டங்களை குழப்பும் இலங்கையர்களுடன் பேச பிரித்தானியா சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமாம், நகைச்சுவையாய் இல்லை?  அங்கே கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டியவருக்கும் பிரித்தானியாதான் சந்தர்ப்பம் கொடுத்ததோ? பிரித்தானியாவில் இருந்து வந்து கோத்தாவுக்கு வாக்கு போடவும் இலங்கையர்களுக்கு பிரித்தானியாதான் வசதி செய்து கொடுத்ததோ? சிங்களவன் ஒரு கோடு போட்டால் காணும், நாங்கள் வரைஞ்சே கொடுத்துடுவோம்.  சிங்களவனின் எழுச்சிக்கும், நமது வீழ்ச்சிக்கும் காரணம் நாமே தான். 

  • கருத்துக்கள உறவுகள்

இதே தாரிக் அஹமட்டிடம்  நம்ம சம்பந்தன் ஐயா ஒன்றாக்கி இலங்கையை தந்துவிட்டவர்கள் நீங்களே இதற்க்கு தீர்வு கானவும்  அது உங்கள் பொறுப்பு என்கிறார் .அப்படியே கோத்தாவிடம் போக கோத்தா இலங்கை புலம்பெயரிகளிடம் தீர்வு பற்றி கதைக்க பிரிட்டன்  உதவனும் என்று கோரிக்கை விட்டு இருக்கிறார் 

14 hours ago, கிருபன் said:

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.

 பிரச்சனை உள்ளவர்களுடன் கதைத்து தீர்வு என்றால் இலங்கையில் தமிழர்கள்தானே ? ஒவ்வொரு செய்தித்தளமும் ஒவ்வொன்றாய் சரடு விடுகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

இதே தாரிக் அஹமட்டிடம்  நம்ம சம்பந்தன் ஐயா ஒன்றாக்கி இலங்கையை தந்துவிட்டவர்கள் நீங்களே இதற்க்கு தீர்வு கானவும்  அது உங்கள் பொறுப்பு என்கிறார் .அப்படியே கோத்தாவிடம் போக கோத்தா இலங்கை புலம்பெயரிகளிடம் தீர்வு பற்றி கதைக்க பிரிட்டன்  உதவனும் என்று கோரிக்கை விட்டு இருக்கிறார் 

 பிரச்சனை உள்ளவர்களுடன் கதைத்து தீர்வு என்றால் இலங்கையில் தமிழர்கள்தானே ? ஒவ்வொரு செய்தித்தளமும் ஒவ்வொன்றாய் சரடு விடுகினம் .

வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம், நாட்டைவிட்டு போகும்போது இருந்தமாதிரி விட்டுச் சென்றிருக்க வேண்டும். இல்லை பிரச்சனை ஆரம்பித்தவுடன் தீர்த்திருக்க வேண்டும். அதுவுமில்லையா நம்ம தலைவர்கள் பிரச்சனையை ஆரம்பத்திலேயே பிரித்தானியாவிடம் கொண்டுபோய் நிஞாயம் நஷ்ட ஈடு கேட்டிருக்க வேண்டும். இப்ப இந்தியா தமிழரை தமது அடிமைகள் என சட்டம் வைத்தபின் இங்கு போய் ஏதாவது நடக்குமா? அவர்கள் சென்ற இடமெல்லாம் பிச்சை கேட்டு விழுகுது, பயங்கரவாதம் என்ற பிரச்சாரம் எடுபட்டது, இவர்கள் எல்லாம் முடிந்தபின் தட்ட தொடங்கியிருகிறார்கள், பாப்போம் கதவு திறக்கப்படுமா என்று. எந்த நாடும் தன்னை  விட்டு எந்த முடிவும் எடுக்க இந்தியா விடாது. நாம் இப்போ செய்ய வேண்டிய அவசர வேலை: இந்தியா பிரிவதற்கு,  தனிமைப்படுவதற்கு வேண்டிய முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். அது தன் பிரச்சனையை தீர்க்க திணறும்போது நாங்கள் காரியத்தில் இறங்கவேண்டும்.

சரக்கு ஒன்றுமில்லை, தாம் விரும்பியபடி கதை எழுதுவது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2022 at 08:32, பெருமாள் said:

நம்ம கோசான் ஐ அனுப்பி பார்ப்பம் 😀

கோசானுடன் சேர்த்து, நாதமுனியையும்…. அனுப்புவம், பெருமாள். 😂 🤣
நல்ல சோடிகள். வெற்றியுடன் திரும்பி வருவார்கள். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

கோசானுடன் சேர்த்து, நாதமுனியையும்…. அனுப்புவம், பெருமாள். 😂 🤣
நல்ல சோடிகள். வெற்றியுடன் திரும்பி வருவார்கள். 😁

இதை வாசிச்சவுடனை வேலியில போன ஓணானை வேட்டிக்குள்ளை விட்ட பீலிங் வருது.....   இது எனக்கும் மட்டும் தானோ?    :cool:

மக்களே உங்களுக்கு???????  😎

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இதை வாசிச்சவுடனை வேலியில போன ஓணானை வேட்டிக்குள்ளை விட்ட பீலிங் வருது.....   இது எனக்கும் மட்டும் தானோ?    :cool:

மக்களே உங்களுக்கு???????  😎

ஆர் குற்றினாலும் அரிசியாகட்டும்  ஐயா! ஏனென்றால் எங்களுக்கு இப்போ அரிசிமட்டுமே இலக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.