Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை

 
ரொய்ட்டர்
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
sri_lanka_beach-300x169.jpg
ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் சர்வதேச நிதி வழங்குநர்களிடம் உதவிகளை கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அரிசி கோதுமைமா தானியங்கள் சீனி மருந்துபோன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான புதிய கடனுக்கான வேண்டுகோளை பூர்த்திசெய்ய தயார் என இந்தியா தெரிவித்துள்ளது என இந்த விடயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை கோரியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இந்தியா உறுதியளித்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவிக்கு மேலதிகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது என அவை தெரிவித்துள்ளன.
பேச்சுவார்த்தைகள் இரகசியமாக இடம்பெறுவதால் தகவலை தெரிவித்தவர்கள் தங்களை அடையாளம் காட்டமுன்வரவில்லை.
இலங்கையின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களும் இந்திய வெளிவிவகார அமைச்சும் இது குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கவில்லை.
முக்கிய இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் புதுடில்லியில் கைச்சாத்திட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் நிதியமைச்சரை திங்கள்கிழமை சந்தித்தார்.
பொருளாதார நிலைமைகுறித்தும் இந்தியாவின் ஆதரவும் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவது இயல்பான முறை ஆனால் இங்கோ வட்டி கட்ட பணம் கடனாக பெறப்படுகின்றது இலங்கை மீளுமா மீளாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவது இயல்பான முறை ஆனால் இங்கோ வட்டி கட்ட பணம் கடனாக பெறப்படுகின்றது இலங்கை மீளுமா மீளாதா ?

இலங்கை மீளுமா, மீளாதா…..? என்று,
இலங்கையின்… பொருளாதார மேதை பிள்ளையானிடம் தான் கேட்க வேண்டும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவது இயல்பான முறை ஆனால் இங்கோ வட்டி கட்ட பணம் கடனாக பெறப்படுகின்றது இலங்கை மீளுமா மீளாதா ?

இவர்கள் வெளி நாட்டிலிருந்து நேரடி கடன் மற்றும் கிரெடிட் லைன் அதை விட அரசால் நேரடியாக விற்கப்படும்  sovereign bond என்று வாங்கி தள்ளுகிறார்கள். 2019உம்  ஆண்டு 47% ஆக இருந்த interest to Revenue ratio, 2020உம்  ஆண்டு 72%ஆக உயர்ந்தது. இவர்களுது வருமானம் உயரவே இல்லை, அதற்கு பிறகு வாங்கிய கடன்களையும் வைத்து பார்த்தால், தற்பொழுது இது குறைந்தது 85% ஆக இருக்கலாம். அதாவது இலங்கை அரசின் வருமானம் 1 டாலர் ஆக இருந்தால், அதில் 85 சதம் வட்டி கட்ட போய்விடும். மிச்சம் இருக்கும் 15 சதத்தில்தான் அரசின்  மற்ற அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும், இது முடியாத காரியம். சும்மா Google இல் தட்டி பார்த்தால் வரும் ஜூலை மாதம் 1 பில்லியன் பெறுமதியான bond maturity அடைகிறது, அதற்கும் எங்காவது வாங்கி கட்ட வேண்டும். IMF தவிர வேறு வழியில்லை 

இவர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு செலவுகளை கட்டு படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்த ராணுவம், பென்ஷன், சுகாதாரம், கல்வி என்று கைவைக்க வேண்டும், தேவையற்ற ஊதாரித்தனமாக இறக்குமதியை குறைக்க வேண்டும், கொஞ்ச காலத்துக்கு முன் தேங்காய் எண்ணெய் கூட இறக்குமதி செய்தார்கள், அரிசியும் இறக்குமதி செய்கிறார்கள். வருமானத்தை கூட்ட, உல்லாச பயனத்துறை, தேயிலை ஏற்றுமதி என்று மீண்டும் பூஸ்ட் பண்ண வேண்டும். ஆனால் மின்வெட்டு, உரப்பாவனை தடை என்று தங்கள் காலில் சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும், நாடு இருக்கும் நிலையில் எவன் துணிந்து முதலிட வருவான் என்று தெரியவில்லை. இவர்களில் இதிலிருந்து மீளுவது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்குரிய ஒரு வேலை திட்டங்களையும் இன்னும் காணவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எந்தப் பக்கத்தாலை வித்தவை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் வெற்றி மமதை சோறு போடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

இவர்கள் வெளி நாட்டிலிருந்து நேரடி கடன் மற்றும் கிரெடிட் லைன் அதை விட அரசால் நேரடியாக விற்கப்படும்  sovereign bond என்று வாங்கி தள்ளுகிறார்கள். 2019உம்  ஆண்டு 47% ஆக இருந்த interest to Revenue ratio, 2020உம்  ஆண்டு 72%ஆக உயர்ந்தது. இவர்களுது வருமானம் உயரவே இல்லை, அதற்கு பிறகு வாங்கிய கடன்களையும் வைத்து பார்த்தால், தற்பொழுது இது குறைந்தது 85% ஆக இருக்கலாம். அதாவது இலங்கை அரசின் வருமானம் 1 டாலர் ஆக இருந்தால், அதில் 85 சதம் வட்டி கட்ட போய்விடும். மிச்சம் இருக்கும் 15 சதத்தில்தான் அரசின்  மற்ற அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும், இது முடியாத காரியம். சும்மா Google இல் தட்டி பார்த்தால் வரும் ஜூலை மாதம் 1 பில்லியன் பெறுமதியான bond maturity அடைகிறது, அதற்கும் எங்காவது வாங்கி கட்ட வேண்டும். IMF தவிர வேறு வழியில்லை 

இவர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு செலவுகளை கட்டு படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்த ராணுவம், பென்ஷன், சுகாதாரம், கல்வி என்று கைவைக்க வேண்டும், தேவையற்ற ஊதாரித்தனமாக இறக்குமதியை குறைக்க வேண்டும், கொஞ்ச காலத்துக்கு முன் தேங்காய் எண்ணெய் கூட இறக்குமதி செய்தார்கள், அரிசியும் இறக்குமதி செய்கிறார்கள். வருமானத்தை கூட்ட, உல்லாச பயனத்துறை, தேயிலை ஏற்றுமதி என்று மீண்டும் பூஸ்ட் பண்ண வேண்டும். ஆனால் மின்வெட்டு, உரப்பாவனை தடை என்று தங்கள் காலில் சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும், நாடு இருக்கும் நிலையில் எவன் துணிந்து முதலிட வருவான் என்று தெரியவில்லை. இவர்களில் இதிலிருந்து மீளுவது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்குரிய ஒரு வேலை திட்டங்களையும் இன்னும் காணவில்லை. 

நன்றி நேரத்துக்கும் விளக்கத்துக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சையெடுக்க வைக்காமல்  விடமாட்டாங்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தூங்க போகும்போது;  எழுந்தவுடன் கடன் வாங்கும் எண்ணத்துடனேயே போவார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நீர்வேலியான் said:

இவர்கள் வெளி நாட்டிலிருந்து நேரடி கடன் மற்றும் கிரெடிட் லைன் அதை விட அரசால் நேரடியாக விற்கப்படும்  sovereign bond என்று வாங்கி தள்ளுகிறார்கள். 2019உம்  ஆண்டு 47% ஆக இருந்த interest to Revenue ratio, 2020உம்  ஆண்டு 72%ஆக உயர்ந்தது. இவர்களுது வருமானம் உயரவே இல்லை, அதற்கு பிறகு வாங்கிய கடன்களையும் வைத்து பார்த்தால், தற்பொழுது இது குறைந்தது 85% ஆக இருக்கலாம். அதாவது இலங்கை அரசின் வருமானம் 1 டாலர் ஆக இருந்தால், அதில் 85 சதம் வட்டி கட்ட போய்விடும். மிச்சம் இருக்கும் 15 சதத்தில்தான் அரசின்  மற்ற அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும், இது முடியாத காரியம். சும்மா Google இல் தட்டி பார்த்தால் வரும் ஜூலை மாதம் 1 பில்லியன் பெறுமதியான bond maturity அடைகிறது, அதற்கும் எங்காவது வாங்கி கட்ட வேண்டும். IMF தவிர வேறு வழியில்லை 

இவர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு செலவுகளை கட்டு படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்த ராணுவம், பென்ஷன், சுகாதாரம், கல்வி என்று கைவைக்க வேண்டும், தேவையற்ற ஊதாரித்தனமாக இறக்குமதியை குறைக்க வேண்டும், கொஞ்ச காலத்துக்கு முன் தேங்காய் எண்ணெய் கூட இறக்குமதி செய்தார்கள், அரிசியும் இறக்குமதி செய்கிறார்கள். வருமானத்தை கூட்ட, உல்லாச பயனத்துறை, தேயிலை ஏற்றுமதி என்று மீண்டும் பூஸ்ட் பண்ண வேண்டும். ஆனால் மின்வெட்டு, உரப்பாவனை தடை என்று தங்கள் காலில் சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும், நாடு இருக்கும் நிலையில் எவன் துணிந்து முதலிட வருவான் என்று தெரியவில்லை. இவர்களில் இதிலிருந்து மீளுவது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்குரிய ஒரு வேலை திட்டங்களையும் இன்னும் காணவில்லை. 

இப்பவும் 3 மாதத்திற்கு ஒரு புதிய சப்பாத்து என்று கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இராணுவ செலவைக் கட்டுப்படுத்துவது. 

கொழும்பு விமான நிலையத்தில் 30 ற்கும் குறைவான அளவிலேயே வெள்ளைக்கார பயணிகளை கண்டேன் கடந்த இரண்டு வாரங்களில். ஆனால் கடந்த அக்டோபரில் வெள்ளயர்களினால் மூழ்கியிருந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

இப்பவும் 3 மாதத்திற்கு ஒரு புதிய சப்பாத்து என்று கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இராணுவ செலவைக் கட்டுப்படுத்துவது. 

கொழும்பு விமான நிலையத்தில் 30 ற்கும் குறைவான அளவிலேயே வெள்ளைக்கார பயணிகளை கண்டேன் கடந்த இரண்டு வாரங்களில். ஆனால் கடந்த அக்டோபரில் வெள்ளயர்களினால் மூழ்கியிருந்தது.

 

உக்ரேன் ரசிய போர் முடிந்ததும் மீண்டும் வருவார்கள்.

இப்ப கொஞ்சகாலமா இந்த இரு நாட்டவரும் தான் கூடுதலாக வருவதாக சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் ரசிய போர் முடிந்ததும் மீண்டும் வருவார்கள்.

இப்ப கொஞ்சகாலமா இந்த இரு நாட்டவரும் தான் கூடுதலாக வருவதாக சொன்னார்கள்.

இந்த இருநாட்டவரின் பயணங்கள் சிறீலங்கா தற்போது உள்ள நிலமையை மீட்டெடுக்குமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.