Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது

July 2, 2022
 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வந்த நிலையில், உள்ளூர் , வௌியூர் விமான சேவை நிறுவனங்களும் தமிழக விமான சேவைக்கான கோரிக்கையினை சமர்ப்பித்திருந்தன.

இந்த நிலையில், யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து இன்று முதல் தமிழகத்திற்கான விமான சேவையினை ஆரம்பிக்க துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், கடந்த மாதம் 15 ஆம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.

ஜூன் 18 ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜூலை முதலாம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவைகள்    பிற்போட நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/flight-service-from-balali-to-tamil-nadu-has-been-delayed-again/

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவைகள்    பிற்போட நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் விமான நிலையத்தில்... எரிபொருள் இல்லாவிடில்,
எந்த விமான நிறுவனம்தான்... பயணிகளின் உயிரை அடகு வைத்து சேவையை நடத்தும்.

அரசியல்வாதிகள்... எந்த வித, முன் ஏற்பாடுகளும் இல்லாமல்,
அவசர கதியில்... அறிக்கை விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

காங்கேசன் துறை... கப்பல் சேவைக்கும், அறிக்கை விளையாட்டுத்தான் நடந்தது. 
எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள், 
அரசியலுக்கு வந்தால்... இவற்றை அனுபவிக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

இனவாத சிக்கலாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

 

8 minutes ago, சுவைப்பிரியன் said:

இனவாத சிக்கலாகத்தான் இருக்கும்.

இலங்கை விமான நிலையத்திலாவது அவசர தேவைக்கு என்று...
விமான எரி பொருள் இருக்க வேண்டும். அது... பலாலியில் இல்லை என நினைக்கின்றேன்.

இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தை...
இனவாத வயித்தெரிச்சலால் மூடினால்...
மீண்டும் திறக்கும் போது... புதிதாக ஆரம்பிப்பதை போன்ற சிக்கல் எழும்.
ஒன்றை அழிப்பது எளிது. ஆக்குவது கடினம் என்று... இவர்களுக்கு தெரியாதா?

துவேசம் உள்ள நாட்டில், இவற்றை பார்க்க... சலிப்புத்தான் ஏற்படும். 😢

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

பிரச்சணை அதுவல்ல.....

அதிகாரிகள், ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்க, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, மாட்டு வண்டி, சைக்கிள்ள கிளம்பி இருக்கிறார்கள்.

பத்திரமா வந்து சேர்ந்ததும், உடனே ஆரம்பிப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

இதெல்லாம் முதலே எதிர்பார்த்தது தான்.

இனவாத சிங்களத்திற்கு பலாலி விமான நிலையம் மீது கரிசனை இருந்திருந்தால்  அண்மையில் புனருத்தாரணம்  செய்தலிருந்தே இயங்கியிருக்கும்.
சிங்களத்திற்கு இப்போது இனவாதத்தை விட தமிழர்கள் மீதான பயம்தான் அதிகம்.எனெனில் புலம்பெயர் தமிழர்களின் வலிமை அவர்களுக்குத்தான் தெரியும்.
எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமலே தனியரசை அமைத்து வாழ்ந்து காட்டியவர்கள் அல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்து பலாலி வருவதற்கு அரை மணித்தியாலம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் ஒரு முறை பெற்றோல் நிரப்பினால்  அது இருவழிப்பயணத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றே நினை;கிறேன். (விமானத்தின் அளவைப் பொறுத்து மாறுபடலாம்.)( புஆகவே எரி பொருள் பிர்சினை பெரிய பிரச்சினையாக இருக்காது. பலாலி விமானநிலையம் >காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி அடைவது இனவாத ப் போக்கில் சிறலங்கா அரசுக்குப் பிடிக்கவில்லை  என்பதுதான் உண்மையான காரணமாகும்.புலிகளின்  விமானங்கள் கொழும்புவரை சென்று கண்டு போட்டு விட்டு வன்னிக்குத் திரும்பியிருக்கின்றன. பயணிகள் விமானத்திற்கு  சிறிது அதிகளவு தேவைப்படவலாம்)

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அரசியல்வாதிகள்... எந்த வித, முன் ஏற்பாடுகளும் இல்லாமல்,
அவசர கதியில்... அறிக்கை விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பலாலி விமான நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் நீண்டகாலம் பணியின்றி இருந்ததால் எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள். அவர்கள் மீண்டும் பயிற்சி எடுத்து வருவதற்குக் காலதாமதமாகலாம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இரண்டு அரசியல் வாதிகளும் அவசர கதியில் அறிக்கை விட்டுள்ளனர். 😲

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

தமிழகத்தில் இருந்து பலாலி வருவதற்கு அரை மணித்தியாலம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் ஒரு முறை பெற்றோல் நிரப்பினால்  அது இருவழிப்பயணத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றே நினை;கிறேன். (விமானத்தின் அளவைப் பொறுத்து மாறுபடலாம்.)( புஆகவே எரி பொருள் பிர்சினை பெரிய பிரச்சினையாக இருக்காது. பலாலி விமானநிலையம் >காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி அடைவது இனவாத ப் போக்கில் சிறலங்கா அரசுக்குப் பிடிக்கவில்லை  என்பதுதான் உண்மையான காரணமாகும்.புலிகளின்  விமானங்கள் கொழும்புவரை சென்று கண்டு போட்டு விட்டு வன்னிக்குத் திரும்பியிருக்கின்றன. பயணிகள் விமானத்திற்கு  சிறிது அதிகளவு தேவைப்படவலாம்)

போட்ட கண்டு கொழும்பில் வளருகிறதா புலவர். 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள எரிபொருள் பிரச்சனை உட்பட பல பிரச்சனைக்கு அரசியல் (பதவியாசை.. ஊழல்.. கமிசன் அரசியல்) மற்றும் இனவாத முடிவுகளே தான் காரணம். 

பொருண்மியப் பிரச்சனை என்றால்.. இந்திய அல்லது பன்னாட்டு தனியார் கம்பனிகளூடான முதலீடுகள் மூலம்.. பிரச்சனைகளை எப்பவோ தீர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறந்து இயங்க வைப்பதில் பல நடைமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படலாம். JAF என்ற குறியீட்டுடன் சர்வதேச விமான நிலையமாக அழைக்கப்படுவதால் அதற்கென சில கெடுபிடிகள் உண்டு. உதாரணமாக  பயணிகளுக்கான குடிவரவு குடியகல்வு கண்காணிப்பு, அவர்களுக்கு வேண்டிய இதர வசதிகள், பயணிகள் பாதுகாப்பு என்பனவற்றுடன் விமான நிலைய தொழில்நுட்ப பணியாளர்கள், விமானங்களுக்கு 4-5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்புக்கு உத்தரவாதம் என்பனவும் அடங்கும்.

இருப்பினும் சிறிய தொலைவுகளுக்கு பறக்கும் விமானங்கள் தாம் செல்லும் இடங்களில் எரிபொருளை நிரப்புவதை தவிர்க்க வேண்டுமாயின் (உதாரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விநியோக தடங்கல், வேலை நிறுத்தம், அதிக விலை காரணமாக)  புறப்படும் இடத்திலிருந்தே மேலதிக எரிபொருளை ஏற்றிக்கொண்டு(fuel tankering) புறப்படவேண்டும்.  இதன் காரணமாக விமானங்கள் மேலதிக எடையுடன் பறந்து செல்லும்போது வழமையிலும் பார்க்க அதிகமான எரிபொருளை பயணத்தின்போது பயன்படுத்தவேண்டி ஏற்படும்.

நிர்வாக செலவீனத்தில் 25-40% வரை எரிபொருளுக்கே செலவாகின்றது என கணிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் fuel tankering செய்வதால் இச்செலவு மேலும் அதிகரிக்கும். தேவையில்லாத பாரத்தை ஏற்றிக்கொண்டு புறப்படும் விமானம் அதிக சுமை காரணமாக இன்னும் அதிக எரிபொருளை எரித்து வளிமண்டலத்தை அசுத்தம் செய்ய காரணமாக அமையும். இதனால் ஏற்படும் மேலதிக CO2 வெளியேற்றம் பல தொன் நிறைக்கு செல்ல வாய்ப்புண்டு.

சர்வதேச விமான கம்பனிகள் கடந்த காலங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமது விமானங்களில் தேவையற்ற மேலதிக சுமைகளை அனுமதிப்பதில்லை. இந்த விதிகளை மீறும் கம்பனிகள் சர்வதேச மட்டத்தில் மதிப்பை இழக்க நேரிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.