Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனையில் 3 இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு தலைமறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் 3 இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு தலைமறைவு

 

farook%20Sihan08.jpg
(பாறுக் ஷிஹான்)
மூன்று  இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) இறுதி பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்  தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக சட்ட வைத்திய அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கை பிரகாரம் செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டது.
 

இதற்கமைய செப்டம்பர் 06 ஆந் திகதி துஸ்பிரயோகம் காரணமாக பாதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று கல்முனை தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்று இருந்தனர்.

மேலும் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் ஆசன பின்துவாரத்தில் காயங்கள் மற்றும் தழும்புகளும் காணப்படுவதுடன் மூவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளமை வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08 , 13 , 14 , வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது குறித்த பௌத்த மதகுரு தலைமறைவாகி உள்ளதாகவும் விசேட பொலிஸ் குழுவினர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

இளம் பிக்குகளின் ஆசன பின்துவாரத்தில் காயங்கள் மற்றும் தழும்புகளும் காணப்படுவதுடன் மூவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளமை வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டன.


மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08 , 13 , 14 , வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது என்ன கோதாரியப்பா….. 🥸
பெரிய பிக்கு… மூன்று சின்ன பிக்குவுக்கும்…
ஆசன வாயிலில்… பாலியல் வன்முறை செய்திருக்கின்றான். 😮
பெரிய பிக்குவை… கைது செய்து, தெகிவளை மிருகக் காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் கூட்டில் அடைக்க வேண்டும். 🦁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது என்ன கோதாரியப்பா….. 🥸
பெரிய பிக்கு… மூன்று சின்ன பிக்குவுக்கும்…
ஆசன வாயிலில்… பாலியல் வன்முறை செய்திருக்கின்றான். 😮
பெரிய பிக்குவை… கைது செய்து, தெகிவளை மிருகக் காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் கூட்டில் அடைக்க வேண்டும். 🦁

பெரிய பிக்குகளும் என்னதான் செய்வானுகள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பெரிய பிக்குகளும் என்னதான் செய்வானுகள் 

அதற்காக... இளம் பிக்குகளின்,  ஆசன பின் துவாரத்தில்... 
காயங்கள் மற்றும் தழும்புகளும் ஏற்படும் அளவுக்கா... 
புத்த தர்மத்தை போதிக்கும்... பெரிய பிக்கு நடந்து கொள்வான்(ர்). 
சரியான... காட்டு மிராண்டியாய், இருப்பான்(ர்) போலிருக்கு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அதற்காக... இளம் பிக்குகளின்,  ஆசன பின் துவாரத்தில்... 
காயங்கள் மற்றும் தழும்புகளும் ஏற்படும் அளவுக்கா... 
புத்த தர்மத்தை போதிக்கும் பெரிய பிக்கு நடந்து கொள்வார். 
சரியான... காட்டு மிராண்டியாய், இருப்பான் போலிருக்கு. 

துறவிகள் எல்லோரும் எல்லா மதத்திலும் உள்ளவர்களில் இப்படியான ஆட் களும் உண்டு  நான் மத்திய கிழக்கில் இருக்கும் போது ஒரு பாகிஸ்த்தானியர் வங்காளி ஒருத்தனை இப்படி செய்ததில் அவன் இறந்தே போனான் தண்டனையும் வழங்கப்பட்டது  ஆனால் இங்கே பிக்கு  சித்த சுவாதீனம் அற்றவர் கேஸ் தள்ளுபடி ஆகும்  இது நம்ம நாட்டின் சட்ட டிசைன்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

துறவிகள் எல்லோரும் எல்லா மதத்திலும் உள்ளவர்களில் இப்படியான ஆட் களும் உண்டு  நான் மத்திய கிழக்கில் இருக்கும் போது ஒரு பாகிஸ்த்தானியர் வங்காளி ஒருத்தனை இப்படி செய்ததில் அவன் இறந்தே போனான் தண்டனையும் வழங்கப்பட்டது  ஆனால் இங்கே பிக்கு  சித்த சுவாதீனம் அற்றவர் கேஸ் தள்ளுபடி ஆகும்  இது நம்ம நாட்டின் சட்ட டிசைன்

ரணிலின் ஆட்சியில்...  இப்பிடி எல்லாம், நடக்குது என்றுதான்... கவலையாக இருக்கு. 😎

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்தி வைத்து, பிள்ளைகளை நம்பி ஒப்படைத்தால், இந்த கருமம் பிடிச்ச ஓநாய்கள் செய்யிற வேலை.....  🤦‍♂️

எல்லாத்துக்கும் முதல், ஓடி விளையாட வேண்டிய சின்னப் பயலுகளை, துறவறம் என்னும் புதைகுழியில் தள்ளும் பெற்றோர் குறித்து மனித உரிமைகள் குழு அப்பப்ப குரல் தந்தாலும், தடை சட்டமியற்ற முடியாதவாறு, மொட்டைகளின் அரசியல் செல்வாக்கு காரணமாக எதுவுமே செய்ய முடியாமல் உள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

அதற்காக... இளம் பிக்குகளின்,  ஆசன பின் துவாரத்தில்... 
காயங்கள் மற்றும் தழும்புகளும் ஏற்படும் அளவுக்கா... 
புத்த தர்மத்தை போதிக்கும்... பெரிய பிக்கு நடந்து கொள்வான்(ர்). 
சரியான... காட்டு மிராண்டியாய், இருப்பான்(ர்) போலிருக்கு. 

சாது மிரண்டால் காடு கொள்ளாதாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08 , 13 , 14 , வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அது சரி

தலைவன்  எவ்வழியோ ....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

தலைவன்  எவ்வழியோ ....???

😁

வெளியிலை தெரிய வந்ததே இவ்வளவு கொடுமை எண்டால்......
அதுசரி பிணங்களையே புணரும் இனத்திற்கு  இதெல்லாம் தூசிக்கு சமம்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

😁

வெளியிலை தெரிய வந்ததே இவ்வளவு கொடுமை எண்டால்......
அதுசரி பிணங்களையே புணரும் இனத்திற்கு  இதெல்லாம் தூசிக்கு சமம்

 

பிக்குகளுக்கு முன்னுரிமை  கொடுக்கப்படும்  நிலை  மாறும்வரை

சிறீலங்கா  உருப்படாது

(அவர்களுக்கு பின்னுரிமை  தான்  வேண்டும்  என்பதை அவர்கள் பலமுறை உணர்த்தி  வந்தும் கூட😂)

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இது என்ன கோதாரியப்பா….. 🥸
பெரிய பிக்கு… மூன்று சின்ன பிக்குவுக்கும்…
ஆசன வாயிலில்… பாலியல் வன்முறை செய்திருக்கின்றான். 😮
பெரிய பிக்குவை… கைது செய்து, தெகிவளை மிருகக் காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் கூட்டில் அடைக்க வேண்டும். 🦁

இது எல்லா சமயங்களிலும் (ஓரினச் சேர்க்கை) இருக்கிறது. குறிப்பாக , கிறீத்துவ பாதிரியார்களிடமும் உள்ளது. ஆனால் பாதிப்பின் அளவுதான் வேறுபடுகிறது.

(குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டதன் பாதிப்பு என நினைக்கிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

இது எல்லா சமயங்களிலும் (ஓரினச் சேர்க்கை) இருக்கிறது. குறிப்பாக , கிறீத்துவ பாதிரியார்களிடமும் உள்ளது. ஆனால் பாதிப்பின் அளவுதான் வேறுபடுகிறது.

(குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டதன் பாதிப்பு என நினைக்கிறேன்)

அபச்சாரம், அபச்சாரம்... அம்பி.  
நன்னா... வாயை கழுவுங்கோ....
ஐயர் மார்...  "தீட்டு" என்று,  உந்த வேலை செய்யிறதில்லை.  😎 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ரணிலின் ஆட்சியில்...  இப்பிடி எல்லாம், நடக்குது என்றுதான்... கவலையாக இருக்கு. 😎

என்னையா நீங்கள்...அந்தாள் இதை சட்டபூர்வமாக்க ஓடித்திரியுது....🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

என்னையா நீங்கள்...அந்தாள் இதை சட்டபூர்வமாக்க ஓடித்திரியுது....🙃

ரணிலின் மைன்ற் வொய்ஸ்;  "தனக்கு தனக்கு என வந்தால், சுழகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்"

🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அபச்சாரம், அபச்சாரம்... அம்பி.  
நன்னா... வாயை கழுவுங்கோ....
ஐயர் மார்...  "தீட்டு" என்று,  உந்த வேலை செய்யிறதில்லை.  😎 😂 🤣

அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மறுக்கப்படவில்லைய..😉

  • கருத்துக்கள உறவுகள்

8, 13, 14 😰

ஒரு பெடியைக் கூட விடேல்ல.....

ஊர், உலகத்து கிரிமினல் எல்லாம், காவி துண்டை சுத்திக் கொண்டு, நானும் சாது தான் எண்டு திரியிறாங்கள்...

ஞானசேரர் முதல் மட்டக்களப்பு தூசணப்பிக்கர் வரை இதே கேவலமா போட்டுது.

முந்தி விகாரைக்கு உதவி கேட்டு வார ஊர் பெண்களை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி பிடிபட்டு, அவர்கள் அலேட் ஆனபிறகு..... இந்த அப்பாவிப் பெடியளோட சேட்டை விடுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

8, 13, 14 😰

ஒரு பெடியைக் கூட விடேல்ல.....

ஊர், உலகத்து கிரிமினல் எல்லாம், காவி துண்டை சுத்திக் கொண்டு, நானும் சாது தான் எண்டு திரியிறாங்கள்...

ஞானசேரர் முதல் மட்டக்களப்பு தூசணப்பிக்கர் வரை இதே கேவலமா போட்டுது.

முந்தி விகாரைக்கு உதவி கேட்டு வார ஊர் பெண்களை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி பிடிபட்டு, அவர்கள் அலேட் ஆனபிறகு..... இந்த அப்பாவிப் பெடியளோட சேட்டை விடுறாங்கள்.

தாய், தகப்பனுக்கும்... மண்டை  பழுது.
எல்லா முட்டையையும், ஒரு கூடையில் வைக்கக் கூடாது என்பார்கள்.
மூன்று பிள்ளைகளையும், ஒரு பிக்குவிடமா... அனுப்பி வைப்பார்கள்.
இவர்கள்... முன்பு, பிக்குகளின் திருவிளையாடல்களை கேள்விப் பட்டிருக்கவில்லையா?

இலவச கல்வி கொடுக்கிறார்கள். நாலு எழுத்து படிக்க அனுப்பாமல்,
சமயம் படித்து, காவி உடுக்க... அதுகும், 
மூன்று பிள்ளைகளையும் அனுப்புவது எவ்வளவு மடமை.
எல்லாம்... லூசு, கூட்டங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2022 at 00:02, விசுகு said:

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08 , 13 , 14 , வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அது சரி

தலைவன்  எவ்வழியோ ....???

அப்போ நாட்டிலுள்ள எல்லா விகாரைகளும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவையே. தெரிந்தும் மீண்டும் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள் என்றால் பாருங்கோவன். நாளைக்கு பாதிக்கப்பட்ட இந்தப்பிள்ளைகளே தொடருங்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதை. தாங்கள் கற்றத்தைத்தானே மற்றவர்களுக்கு கற்பிக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.