Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட உக்ரைன் பகுதியில் பாரிய மனித புதைகுழி-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல இலட்சம் சீனா மக்களும்     பல இலட்சம் ரஷ்யா மக்களும்   ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய கனடா போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்  ஏன?. அவரகளே சொல்கிறார்கள் சீனா ரஷ்யா விட   மேற்படி நாடுகள் மிகவும் சிறந்தது    என்று   ரஷ்யாவிலும்  சீனாவிலும். உழைத்து அந்த நாட்டில் வாழ முடியாது என்று  சொந்த நாட்டு மக்களே சொல்வது பொய்யா? அங்கேயும்  விலையேற்றம் உண்டு   ஏன் விலையேற்றம்?.  அவர்களின் உற்பத்தி அவர்களின் மூலபொருள்கள்   அப்படி இருந்தும்  ஏன் விலை ஏறுமுகத்தில்? மலிவு என்பது ரஷ்யானுக்கு ரஷ்யாவில் இல்லை. அதேபோல மலிவு என்பது சீனானுக்கு சீனாவில் இல்லை  ஆனால் மேற்கு உலகுக்கு ரஷ்யாவிலும். சீனாவிலும். மலிவு தான்    அப்படி இருந்தும்கூட அங்கு போய் பல இலட்சக்கணக்கானவர்கள் குடியேறவில்லை.   மேற்கு உலகில் எல்லாம் விலையாக இருந்தபோதும்  பல இலட்சம் சீனானும் ரஷ்யானும் குடியேறி உள்ளார்கள்  ஏன்?.   இந்த நிகழ்வுகள் எந்த நாடுகள் சிறந்தவை என்று எடுத்து கூறுகின்றன 

  • Replies 73
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

 

சரியைச் சரி என்றும், பிழையைப் பிழை என்றும் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டும்.

பலர் தாங்கள் அசேலம் அடித்த நாடி என்ன செய்தாலும் அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனப் பயப்படுகிறார்கள். அடிமை மனநிலை. 

குறைந்த செலவில் டாக்குத்தருக்குப் படிக்க கியூபாவுக்கும் ரஸ்யாவுக்கும் போவினம். பிறகு, டொலரிலும் பவுண்சிலும் உழைப்பதற்காக வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் போவினம்.  

தங்கள் அலுவல் முடிஞ்சவுடன சனநாயகம், சர்வாதீகார்ம் என பீற்றத் தொடங்குவினம். எங்கள் ஆட்களைவிட இந்தியன் எவ்வளவோ மேல். 

 

விசுகர், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. 

கியூபாவிலும். ரஷ்யாவிலும்  பல நாடுகளை சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள் படித்து முடிந்ததும் அங்கேயே வேலைவாய்ப்பு இல்லாமையல்  வேலைவாய்ப்பு உள்ள இடங்களிலும் விரும்பும் இடத்தில் வேலை செய்வதில் என்ன பிழை உண்டு ?.     இவர்கள் படிக்கவிடில்  மேற்படி பல்கலைக்கழகம்கள்  பூட்டப்படலாம்.  பல கியூபாக்காரும் ரஷ்யாரும். வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

கியூபாவிலும். ரஷ்யாவிலும்  பல நாடுகளை சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள் படித்து முடிந்ததும் அங்கேயே வேலைவாய்ப்பு இல்லாமையல்  வேலைவாய்ப்பு உள்ள இடங்களிலும் விரும்பும் இடத்தில் வேலை செய்வதில் என்ன பிழை உண்டு ?.     இவர்கள் படிக்கவிடில்  மேற்படி பல்கலைக்கழகம்கள்  பூட்டப்படலாம்.  பல கியூபாக்காரும் ரஷ்யாரும். வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் 

அதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் இலங்கைத் தமிழ் அகதிகள் போய்ப் படிக்காவிட்டால் அந்தப் பல்கலைக் கழகங்கள் பூட்டப்படலாம் என கூறுகிறீர்கள் பாருங்கள். அங்கேதான் நாம் தமிழராக நிற்கிறோம். 😉

குறைந்த செலவு என்றவுடன் ரஸ்யாவும் கியூபனும் வேண்டும், படிப்பு முடிந்து நாடு திரும்பி டொலரிலும் பவுண்Sலும் உழைக்கத் தொடங்கியவுடன் அவன் கூடாதவனாகி விடுவான். 

இது முரண்நகையல்லவா ? 

அதைத்தான் சொன்னேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யனுக்கும் உக்கிரேனுக்கும் சண்டை முடிஞ்சாலும் எங்கட ஆட்களுக்குள்ளே இருக்கும் முரண் முடியாது போல 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

அதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் இலங்கைத் தமிழ் அகதிகள் போய்ப் படிக்காவிட்டால் அந்தப் பல்கலைக் கழகங்கள் பூட்டப்படலாம் என கூறுகிறீர்கள் பாருங்கள். அங்கேதான் நாம் தமிழராக நிற்கிறோம். 😉

குறைந்த செலவு என்றவுடன் ரஸ்யாவும் கியூபனும் வேண்டும், படிப்பு முடிந்து நாடு திரும்பி டொலரிலும் பவுண்Sலும் உழைக்கத் தொடங்கியவுடன் அவன் கூடாதவனாகி விடுவான். 

இது முரண்நகையல்லவா ? 

அதைத்தான் சொன்னேன். 🤣

அகதிகள் மட்டுமா?.   படிக்கிறார்கள்    இல்லையே    ஊரில் இருந்தும் வந்து சொந்த பணத்தை செலவு செய்து படிக்கிறார்கள் மேலும்  பல நாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள் பல பல்கலைக்கழகம்கள். வெளிநாட்டு மாணவர்களை குறி வைத்து விளம்பரங்கள் செய்கின்றன  உண்மையில் வெளிநாட்டு மாணவர்கள் இல்லை என்றால் பூட்டக்கூடிய  பல்கலைக்கழகங்கள் உண்டு   நீங்கள் அறியவில்லையா? மற்றபடி அங்கே படித்தோம் என்பதற்காக அவர்களை துதி பாட முடியாது  ரஷ்யான்காரன்  யூரோவில் உழைக்க விரும்பும் போது  அந்த மாணவர்கள் டொலரிலும்  பவுண்டுகளிலும். உழைக்க நினைப்பதில் என்ன தவறுகள் உண்டு?. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kandiah57 said:

பல இலட்சம் சீனா மக்களும்     பல இலட்சம் ரஷ்யா மக்களும்   ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய கனடா போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்  ஏன?. அவரகளே சொல்கிறார்கள் சீனா ரஷ்யா விட   மேற்படி நாடுகள் மிகவும் சிறந்தது    என்று   ரஷ்யாவிலும்  சீனாவிலும். உழைத்து அந்த நாட்டில் வாழ முடியாது என்று  சொந்த நாட்டு மக்களே சொல்வது பொய்யா? அங்கேயும்  விலையேற்றம் உண்டு   ஏன் விலையேற்றம்?.  அவர்களின் உற்பத்தி அவர்களின் மூலபொருள்கள்   அப்படி இருந்தும்  ஏன் விலை ஏறுமுகத்தில்? மலிவு என்பது ரஷ்யானுக்கு ரஷ்யாவில் இல்லை. அதேபோல மலிவு என்பது சீனானுக்கு சீனாவில் இல்லை  ஆனால் மேற்கு உலகுக்கு ரஷ்யாவிலும். சீனாவிலும். மலிவு தான்    அப்படி இருந்தும்கூட அங்கு போய் பல இலட்சக்கணக்கானவர்கள் குடியேறவில்லை.   மேற்கு உலகில் எல்லாம் விலையாக இருந்தபோதும்  பல இலட்சம் சீனானும் ரஷ்யானும் குடியேறி உள்ளார்கள்  ஏன்?.   இந்த நிகழ்வுகள் எந்த நாடுகள் சிறந்தவை என்று எடுத்து கூறுகின்றன 

 லட்சக்கணக்கான ஜேர்மனியர்கள் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வாழ்கின்றார்கள். அவர்களும் ஜேர்மனி வாழத்தகுதியில்லாத நாடென்றுதான் புறம் கூறுகின்றனர். இங்கிலாந்து வாசிகளே அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா என புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். கேட்டால் அவர்களுக்கு இங்கிலாந்து பிடிக்கவில்லை என்கிறார்கள்.

எம்மவர்களே ஜேர்மனி சரியில்லை என்று சொல்லிவிட்டு பெரிய பிரித்தானியாவிற்கும் கனடாவிற்கும் மீண்டும் புலம் பெயரவில்லையா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

பல இலட்சம் சீனா மக்களும்     பல இலட்சம் ரஷ்யா மக்களும்   ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய கனடா போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்  ஏன?. அவரகளே சொல்கிறார்கள் சீனா ரஷ்யா விட   மேற்படி நாடுகள் மிகவும் சிறந்தது    என்று   ரஷ்யாவிலும்  சீனாவிலும். உழைத்து அந்த நாட்டில் வாழ முடியாது என்று  சொந்த நாட்டு மக்களே சொல்வது பொய்யா? அங்கேயும்  விலையேற்றம் உண்டு   ஏன் விலையேற்றம்?.  அவர்களின் உற்பத்தி அவர்களின் மூலபொருள்கள்   அப்படி இருந்தும்  ஏன் விலை ஏறுமுகத்தில்? மலிவு என்பது ரஷ்யானுக்கு ரஷ்யாவில் இல்லை. அதேபோல மலிவு என்பது சீனானுக்கு சீனாவில் இல்லை  ஆனால் மேற்கு உலகுக்கு ரஷ்யாவிலும். சீனாவிலும். மலிவு தான்    அப்படி இருந்தும்கூட அங்கு போய் பல இலட்சக்கணக்கானவர்கள் குடியேறவில்லை.   மேற்கு உலகில் எல்லாம் விலையாக இருந்தபோதும்  பல இலட்சம் சீனானும் ரஷ்யானும் குடியேறி உள்ளார்கள்  ஏன்?.   இந்த நிகழ்வுகள் எந்த நாடுகள் சிறந்தவை என்று எடுத்து கூறுகின்றன 

நீங்கள் சொன்னது உண்மை .
நாங்கள் இலங்கை தமிழர்களாக இருப்பதினால் எங்களுக்கு சிறந்த நாடுகள் எவை என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி உள்ளது. ரஷ்யாவை நோக்கி பக்தியுடன் தேவாரம் பாடும் இலங்கை தமிழர்கள், எந்த நாடுகளில் குடியேறி வாழ்கிறார்களோ அவை உலகில் சிறந்த நாடுகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முதல்வன் said:

ரஷ்யனுக்கும் உக்கிரேனுக்கும் சண்டை முடிஞ்சாலும் எங்கட ஆட்களுக்குள்ளே இருக்கும் முரண் முடியாது போல 🤣

முதல்வரே,  ரஷ்யாவில் புரினுக்கு முடிவு வந்து ஒரு நல்ல ஜனநாயக ரஷ்ய தலைவர் ஆட்சிக்கு வந்து ரஷ்யாவை முனனேற்றி அயலவர்களுடன் நட்புடன் நடந்தாலும், மேற்குலகில் குடியேறி ரஷ்யாவை துதிபாடும் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்களே அவர்களின் ரஷ்யா தான் உலகை ஆளவேண்டும் என்ற பேராசை மறையாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

பல இலட்சம் சீனா மக்களும்     பல இலட்சம் ரஷ்யா மக்களும்   ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய கனடா போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்  ஏன?. அவரகளே சொல்கிறார்கள் சீனா ரஷ்யா விட   மேற்படி நாடுகள் மிகவும் சிறந்தது    என்று   ரஷ்யாவிலும்  சீனாவிலும். உழைத்து அந்த நாட்டில் வாழ முடியாது என்று  சொந்த நாட்டு மக்களே சொல்வது பொய்யா? அங்கேயும்  விலையேற்றம் உண்டு   ஏன் விலையேற்றம்?.  அவர்களின் உற்பத்தி அவர்களின் மூலபொருள்கள்   அப்படி இருந்தும்  ஏன் விலை ஏறுமுகத்தில்? மலிவு என்பது ரஷ்யானுக்கு ரஷ்யாவில் இல்லை. அதேபோல மலிவு என்பது சீனானுக்கு சீனாவில் இல்லை  ஆனால் மேற்கு உலகுக்கு ரஷ்யாவிலும். சீனாவிலும். மலிவு தான்    அப்படி இருந்தும்கூட அங்கு போய் பல இலட்சக்கணக்கானவர்கள் குடியேறவில்லை.   மேற்கு உலகில் எல்லாம் விலையாக இருந்தபோதும்  பல இலட்சம் சீனானும் ரஷ்யானும் குடியேறி உள்ளார்கள்  ஏன்?.   இந்த நிகழ்வுகள் எந்த நாடுகள் சிறந்தவை என்று எடுத்து கூறுகின்றன 

சீன நீந்கள் சொல்லும் பெரும் பகுத்தியில் விதிவிலக்கு ஆகி இருக்கிறது.


சீனாவில் இருந்து வந்தவர்கள், 2ம் உலகயுத்தத்தை அண்டி, உழைப்புக்குக்காக, அவர்களை நாடுகடத்தியவை பெரும் பாலும் மேற்கு நாடுகள்.

உங்களுக்கு தெரியுமா, அமெரிக்காவின் அணுகுண்டு, ஏவுககனைகளின் இரு தந்தையர்களில் ஒருவர் சீனர். இதுவரை வீணாக பாலி சுமத்தி அமெரிக்கா சிறை வைத்து, நீண்ட காலத்தின் பின் நாடுகடத்தியது.

பிநௌ வந்தவர்கள் கல்வி நிமித்தம், அவரகள் தங்கினார்கள, நீங்கள் சொல்லிய காரணமும், சீனாவின் அரசியல் இறுக்கமும்.

1991 இல் இருந்து நிலை மரிக்க கொண்டு வந்தது, சீனவில் இருந்து வெளி வந்து மீண்டும் திருமொப்புவார்கள், தங்கி இருப்பவர்களை காட்டிலும் அதிகம்.

சீனாவின் வளர்ச்சிக்கு இரு ஓர் முக்கிய கரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முதல்வன் said:

ரஷ்யனுக்கும் உக்கிரேனுக்கும் சண்டை முடிஞ்சாலும் எங்கட ஆட்களுக்குள்ளே இருக்கும் முரண் முடியாது போல 🤣

யாழும் ரன் பண்ண வேண்டும் தானே.😄

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2022 at 19:21, ரஞ்சித் said:

எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவமும் தான் ஆக்கிரமித்து நிற்கும் பகுதிகளில் உள்ள மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதில்லை. அவர்கள் அங்கே ஆக்கிரமித்து நிற்பது அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே. ஆகவே, அம்மக்களை எதிரிகளாகப் பாவித்து, அவர்களை கடுமையாக நடத்துவதைத்தவிர அவர்கள் வேறு எதையுமே செய்யப்போவதில்லை.

ஈழத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட, ஈடுபட்டு வருகின்ற இலங்கை ராணுவமாகட்டும், இந்திய ராணுவமாகட்டும் எம்மை எப்படி நடத்தினார்கள் என்பது எமக்குத் தெரியாதது அல்லவே? தாம் இருந்த பகுதிகளில் பாரிய மனிதப் புதைகுழிகள், பாலியல் வன்புணர்வுகளுடனான படுகொலைகள் என்பவை அவர்கள் தங்கிச் சென்ற இடமெல்லாம் இருந்ததை நாம் பார்த்தே இருக்கிறோம். நாம் ஒருபோதும் இப்புதைகுழிகள் புலிகளால் அமைக்கப்பட்டவை, இலங்கை ராணுவத்தின்மீதும், இந்திய ராணுவத்தின் மீது அபாண்டமாகப் பழிபோடுவதற்காக புலிகள் இப்படிச் செய்தார்கள் என்று எப்போதும் கூறியதில்லை. ஏனென்றால் எமக்கு இதைச் செய்தவர்கள் யாரென்பதில் ஒருபோதுமே சந்தேகம் இருந்ததில்லை. ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் அமெரிக்காவோ, நேட்டோவோ செய்ததுகூட ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் தான். ஆகவே ஆக்கிரமிப்பாளர்கள் எவரும் தாம் ஆக்கிரமிக்கும் மக்களை மக்களாகவே பார்ப்பதில்லை. இதற்கு அமெரிக்காவோ, ரஸ்ஸியாவோ, ஜேர்மனியோ, இலங்கையோ அல்லது இந்தியாவோ விதிவிலக்கல்ல. 

ஆனால், ரஸ்ஸியா உக்ரேனில் செய்துவருகின்ற ஆக்கிரமிப்பென்பது உக்ரேனியர்களால் விரும்பி வரவேற்கப்பட்டதென்றும், ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் உக்ரேனியர்களை மனிதாபிமானத்துடன் நடத்துகின்ரார்கள் என்றும், உக்ரேன் ராணுவத்தால் கொல்லப்பட்ட உக்ரேனியர்களை பூரண மரியாதைகளுடன் அடக்கம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறோம். இதைவிடவும், உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் போர் உக்ரேன் மக்களை உக்ரேனிய பாஸிஸ அரசிடமிருந்து மீட்கும் விசேட மனிதாபிமான  நடவடிக்கையே என்றும் கூறுகிறோம். 

ஏன் இந்த இரட்டை மனப்பான்மை? உக்ரேன் விமானிகள் இலங்கை விமானப்படையில்  பணிபுரிந்தார்கள் என்பதற்காகத்தானே? இதற்கான விளக்கம் பலதடவைகள் கொடுத்தாயிற்று. உக்ரேனை விடவும் ரஸ்ஸியா இன்றுவரை எமக்கெதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பட்டியல் போட்டாயிற்று.  மேற்கிற்கு எதிரான நிலைப்பாடு என்கிற பெயரில் ரஸ்ஸியாவின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பு யுத்தத்தினை இன்றுவரை ஆதரித்தே வருகிறோம். ஏனென்றால் நாம் தமிழர்கள் ! உக்ரேனின் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு அழித்தொழிப்புப் போரில் மட்டும்  அழிக்கப்படுபவனை விடவும், அழிப்பவன் மீதே எமக்கு என்றும் அபிமானம் இருந்துவருகிறது. 

மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள், என்னால் இப்பொழுது பச்சை போட முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை   

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நீர்வேலியான் said:

மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள், என்னால் இப்பொழுது பச்சை போட முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை   

எனக்கு தெரியும் ஆனால் நான் சொல்லமாட்டேன்  😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியும் ஆனால் நான் சொல்லமாட்டேன்  😂

ஏன் ஏன் ஏன்??

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நீர்வேலியான் said:

ஏன் ஏன் ஏன்??

நான் நினைக்கிறேன் நீங்கள் அதிக நாட்கள் யாழ்களத்திற்கு வரதது என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நீர்வேலியான் said:

ஏன் ஏன் ஏன்??

இப்படி சொன்ன நீங்கள் எழுதுவீர்கள் என்பது எனக்கு தெரியும்    நீங்கள் தொடர்ந்து எழுதினால் பச்சை குத்துவதில் பிரச்சனையில்லை  அதாவது இரண்டு கிழமைகள்  எழுதவில்லை என்றால்    பச்சை குத்தும் வாய்ப்பை இழந்து விடுவியுங்கள்   😂 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இப்படி சொன்ன நீங்கள் எழுதுவீர்கள் என்பது எனக்கு தெரியும்    நீங்கள் தொடர்ந்து எழுதினால் பச்சை குத்துவதில் பிரச்சனையில்லை  அதாவது இரண்டு கிழமைகள்  எழுதவில்லை என்றால்    பச்சை குத்தும் வாய்ப்பை இழந்து விடுவியுங்கள்   😂 

😀நன்றி,  உங்களுக்கே குத்தி பார்த்தேன், ஆகா உடனடியாக குத்தும் உரிமை கிடைத்துவிட்டது, இந்த திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியும் ஆனால் நான் சொல்லமாட்டேன்  😂

கந்தையர் கஞ்சல்பையல் என்று @குமாரசாமி சொன்னது சரியா தான் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் கஞ்சல்பையல் என்று @குமாரசாமி சொன்னது சரியா தான் இருக்கு.

நான் ஒரு ஆளை கணிச்சு வைச்சனெண்டால் குறி தப்பாது.... 😂

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியப் படைகளால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட பின் உக்ரைன் ஆமியால் பிடிக்கப்பட்டு.. மேற்கு ஊடகங்களின் முன் ரஷ்சிய படைகளை பற்றி குற்றம் சாட்ட விடப்பட்டிருக்கும் இலங்கையர் 7 வரில் பலர் தமிழர்களாவர். இவர்கள் படிக்கவும்.. வேலைக்கும் உக்ரைனுக்கு வந்தவர்களாம்.

The liberated Sri Lankans with Ukrainian police in Kharkiv, 18 Sep 22

The liberated Sri Lankans with Ukrainian police in Kharkiv

இவையை பார்த்தா சித்திரவதைக்கு உள்ளானது போலவும் பட்டினி கிடந்தவை போலவுமா இருக்குது..??!

https://www.bbc.co.uk/news/world-europe-62948148

 

Russia has denied targeting civilians or committing war crimes, but the Sri Lankans allegations come alongside many other reports of atrocities committed by Russian occupying forces.

ரஷ்சியப் படைகள் செய்ததை குற்றமாக கருதும் பிபிசி.. சொறீலங்கா படைகள் பல தசாப்தங்களாக செய்த சித்திரவதைகள் பற்றியும்.. அதில் பிரிட்டனால் உருவாக்கப்பட்ட சிங்கள அதிரடிப்படை ஆற்றிய பங்களிப்பு பற்றியும் மூச்சும் விடத் தயாரில்லை.

 

Mary Edit Uthajkumar

Mary Edit Uthajkumar, 50, said months of solitary confinement had taken a toll

"They locked us in a room," she said "They used to beat us when we went to take a shower. They didn't even allow me to meet the others. We were stuck inside for three months."

Mary, her face already scarred by a car bomb in Sri Lanka, has a heart condition, but didn't receive any medicine for it.

But it was the impact of the solitude which really took its toll.

"Being alone, I was so tense," she says. "They said I was having mental health issues and gave me tablets. But I didn't take them."

இதய நோய்க்கு மருந்து கொடுக்காத ரஷ்சியப் படை.. மனநோய்க்கு கொடுத்ததாம்... எங்கேயோ உதைக்குதே..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நீர்வேலியான் said:

😀நன்றி,  உங்களுக்கே குத்தி பார்த்தேன், ஆகா உடனடியாக குத்தும் உரிமை கிடைத்துவிட்டது, இந்த திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை


@நீர்வேலியான்   நீங்கள் ஒரு கிரிக்கட் யாம்பவான் இருந்தும் அந்தப்பக்கம் காணலையே?

போட்டி பற்றிய விபரங்களும் அனுப்பினேன்.

காய் கல்லோ ஒண்ணையும் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கொடுமை என்னவென்றால் தமது இராணுவம் செய்யும் கொடுமைகளை அந்த மக்களால் நம்ப முடிவதில்லை, அதனை ஓரளவு புரிந்து கொள்ளலாம், தேசப்பற்று.

நாங்கள் ஏன் அவர்களின் தவறுகளை நியாப்படுத்தவேண்டும், உண்மையில் இரஸ்சியா உக்கிரேன் குற்றம் சாட்டுவதுபோல எந்த குற்றங்களில் ஈடுபடாவிட்டாலும் ஆக்கிரமிப்பின் விளைவாக வரும் இந்த குற்றசாட்டுக்களை அவர்கள் விரும்பாவிட்டாலும் முகம் கொடுத்தே ஆகவேண்டும்.

அதனால் உக்கிரேனின் அனைத்து குற்றசாட்டுக்களுக்கும் அந்த நாட்டை ஆக்கிரமித்த இரஸ்சியா தகுதியானதுதான்.

இதனை சொல்வதால் நான் இரஸ்சியாவிற்கெதிரான அல்லது உக்கிரேனிற்கு ஆதரவு என்றெல்லாம் கிடையாது, இதுதான் நடைமுறை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

இதில் கொடுமை என்னவென்றால் தமது இராணுவம் செய்யும் கொடுமைகளை அந்த மக்களால் நம்ப முடிவதில்லை, அதனை ஓரளவு புரிந்து கொள்ளலாம், தேசப்பற்று.

நாங்கள் ஏன் அவர்களின் தவறுகளை நியாப்படுத்தவேண்டும்,

👍

இவர்கள் எதற்காக  பதறியடித்து ஓடி வந்து குத்துகரணம் அடித்து ரஷ்யாவை காப்பாற்றுகிறார்கள் 🤦‍♂️

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இதில் கொடுமை என்னவென்றால் தமது இராணுவம் செய்யும் கொடுமைகளை அந்த மக்களால் நம்ப முடிவதில்லை, அதனை ஓரளவு புரிந்து கொள்ளலாம், தேசப்பற்று.

நாங்கள் ஏன் அவர்களின் தவறுகளை நியாப்படுத்தவேண்டும், உண்மையில் இரஸ்சியா உக்கிரேன் குற்றம் சாட்டுவதுபோல எந்த குற்றங்களில் ஈடுபடாவிட்டாலும் ஆக்கிரமிப்பின் விளைவாக வரும் இந்த குற்றசாட்டுக்களை அவர்கள் விரும்பாவிட்டாலும் முகம் கொடுத்தே ஆகவேண்டும்.

அதனால் உக்கிரேனின் அனைத்து குற்றசாட்டுக்களுக்கும் அந்த நாட்டை ஆக்கிரமித்த இரஸ்சியா தகுதியானதுதான்.

இதனை சொல்வதால் நான் இரஸ்சியாவிற்கெதிரான அல்லது உக்கிரேனிற்கு ஆதரவு என்றெல்லாம் கிடையாது, இதுதான் நடைமுறை.

இவர்கள் சட்டரீதியற்ற குடியேறிகள் என இலங்கை அரசு கூறியுள்ளது. 

45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

இவர்கள் எதற்காக  பதறியடித்து ஓடி வந்து குத்துகரணம் அடித்து ரஷ்யாவை காப்பாற்றுகிறார்கள் 🤦‍♂️

நீங்கள் எதற்காக மேற்கைக் பதறி அடித்துக்கொண்டுவந்து பாதுகாக்க நினைக்கிறீர்கள் ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2022 at 22:47, குமாரசாமி said:

நான் ஒரு ஆளை கணிச்சு வைச்சனெண்டால் குறி தப்பாது.... 😂

சபாஷ்  இதை தான் தன்னம்பிக்கை என்பது   நான் புதிய வீடு வேண்டுவேன்.  புதிய கார் வேண்டுவேன்.   நான் நினைத்ததை செய்து முடிப்பேன்.   இது எல்லாம் தன்னம்பிக்கையின்  அடையாளங்கள்     எனக்கும் ஒரு நம்பிக்கை உண்டு”   இந்த குமாரசாமி அண்ணைக்கு. அரை கொத்துரொட்டியும் 🤣கால் போத்தல் விக்கியும் கொடுத்து. 😂கந்தையா பணத்தை தண்ணீர் போல் செலவு செய்கிறான் 🥲என்று சொல்ல வைக்க முடியும்   பத்து யூரோ  செலவு ஆகும் ஏன? தேவையில்லாமல் பத்து யூரோ  செலவு செய்ய வேண்டும்  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.