Jump to content

32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள்

By T. SARANYA

17 OCT, 2022 | 01:26 PM
image

அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின்  தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்பரவு செய்து வருகின்றனர். 

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (16)  சர்வதேச உணவு தினமாகும்.  சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு மேற்படி   கிராமத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளில் தானியச் செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.  

WhatsApp_Image_2022-10-16_at_10.20.58_AM

தமது பூர்வீக காணிகளை துப்பரவு செய்துள்ள 25 பயனாளிகள் தானியச் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயறு,சோளன்,கச்சான் ஆகிய தானிய வகைகள் வழங்கப்பட்டது.

இதேவேளை  அம்மக்களின் காணிகளில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி அரச திணைக்களங்களுக்கும் பரிந்துரை செய்யும் செயற்பாடு திட்டமிடப்பட்டது.

இருந்தபோதிலும் அரசதிணைக்களங்கள் மக்கள் மீளக்குடியேறுவதற்கு எதிர்ப்பாக உள்ளமையால் மக்களாகவே முன் வந்து குடியேறியுள்ளனர்.

இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கு பக்க பலமாக உள்ள சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்ததோடு தமது பூர்வீக காணிகளை இனி எந்த சந்தரப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக்கொண்டனர்.

இவ்வாறான நிலையில் இதற்கு மறுபுறம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு வேளை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை தமக்கான சரியான அரசியல் தீர்வு கிடைக்காத நிலையில் மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நிலைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக அமைந்தாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு தரப்பினரால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் முக்கிய காரணமாகும். 

கிழக்கைப் பொறுத்த வரையில் சுமார் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக தமக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

பல்வேறு வழிகளிலும் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுமாயின் அவர்களின் வீட்டுத் தேவைக்கான உணவையேனும் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியான விடயமாகும்.

http://fe.virakesari.lk/article/137829

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி. மகிழ்ச்சி . மிக்க மகிழ்ச்சி. 👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்தி தரும் செய்தி........!   👍

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

கிழக்கைப் பொறுத்த வரையில் சுமார் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக தமக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

அந்த பல்வேறு தரப்பினர் முஸ்லிம்களும், இராணுவத்தினரும் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

இதே மாதிரி சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் எமது மக்களையும் மீள குடியமர்த்தணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனகர் தங்கடை காணிபோட்டுது என்று ..கிழக்கில் கூட்டம் போட்டு ..சத்தம் போடுகினம்..அதுவு ம் அம்பாற  முசுலிம் வரிந்து கட்டிக்கொண்டு நிக்கினம்....அது வந்து தமிழரிட்டை பறிச்ச காணியை ...தன்களட்டை சிங்களவன் பறிச்சுபோட்டான் என்றபடியாலோ..இவை அப்பம் பிரிச்சு ஆதாயம் தேடின ஆக்களல்லோ..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கு பக்க பலமாக உள்ள சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்ததோடு

இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள், மீண்டும் அச்சுறுத்தல் பறித்தல் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள், மீண்டும் அச்சுறுத்தல் பறித்தல் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கவும்!

 

On 17/10/2022 at 21:46, Kapithan said:

மகிழ்ச்சி. மகிழ்ச்சி . மிக்க மகிழ்ச்சி. 👏

 

 

On 17/10/2022 at 22:28, suvy said:

திருப்தி தரும் செய்தி........!   👍

ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄

  • Sad 1
Link to comment
Share on other sites

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄

என்ன தனி குண்டைதூக்கி போடுகிறீர்கள். யானைகளை விரட்ட காவல்துறையை அணுக முடியாதா? வெட்டியாக தானே திரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄

எல்லைகளில், தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால், யானைகள் அண்டாது. (தேனீ வளர்ப்பு)

சில வகையான மரங்களை வளர்த்தாலும் யானைகள் அந்தப் பகுதிகளில் தலை வைத்தும் படுக்காது என்று அறிந்தேன. அந்த மரங்கள் பற்றிய விபரங்களை அறிய மினைகிறேன். இதுவரை வெற்றி கிட்டவில்லை. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பகுதியிலும் முன்பு யானைகள் அறுவடைக்காலத்தில் வரும்போது மக்கள் கூட்டமாக காவலிருந்து பறை அடித்து, நெருப்புகொழுத்தி கலைத்தார்கள். தொடர்ந்து செய்தால் யானைகள் வேறிடம் தேடி போகலாம், சில அடங்காததுகள் தொடர்ந்துவரும். இப்படி பல கஷ்ரங்களின் மத்தியிலேயே நாம் அரிசியில் தன்னிறைவு கண்டோம் ஒரு காலத்தில்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2022 at 22:53, nunavilan said:

என்ன தனி குண்டைதூக்கி போடுகிறீர்கள். யானைகளை விரட்ட காவல்துறையை அணுக முடியாதா? வெட்டியாக தானே திரிகிறார்கள்.

காவல்துறை செய்யாது வனத்துறையினர் அவர்கள் வெடிக்கொழுத்தி புதினம் மட்டும்மே காட்டுவார்கள்.

எங்க ஊர்ல வயல்காணிகளில் எருமை மாடுகள் போல மேய்கிறது யானைகள் சுமார் எண்பது நூறு யானைகள் இருக்கம் இரவு வேளைகளில் ஊரில புகுந்து பயன்தரு மரங்களை உடைத்து நாசம் பண்ணுகிறது அரசாங்கம் வேடிக்கை மட்டும் பார்க்கும். 

மட்டக்களப்பில யானைத்தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது உயிர் இழப்புக்களுடன்

On 19/10/2022 at 00:07, Kapithan said:

எல்லைகளில், தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால், யானைகள் அண்டாது. (தேனீ வளர்ப்பு)

சில வகையான மரங்களை வளர்த்தாலும் யானைகள் அந்தப் பகுதிகளில் தலை வைத்தும் படுக்காது என்று அறிந்தேன. அந்த மரங்கள் பற்றிய விபரங்களை அறிய மினைகிறேன். இதுவரை வெற்றி கிட்டவில்லை. 

பல யானைகள் பழக்கப்பட்ட யானைகள் அதாவது வளர்த்து காட்டில் (பன்சாலைகள், சரணாலயங்கள்,) விடப்பட்டவை அது விரட்டினாலும் போகிறது இல்லை . உணவை கண்டதும் ஓடி வரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காவல்துறை செய்யாது வனத்துறையினர் அவர்கள் வெடிக்கொழுத்தி புதினம் மட்டும்மே காட்டுவார்கள்.

எங்க ஊர்ல வயல்காணிகளில் எருமை மாடுகள் போல மேய்கிறது யானைகள் சுமார் எண்பது நூறு யானைகள் இருக்கம் இரவு வேளைகளில் ஊரில புகுந்து பயன்தரு மரங்களை உடைத்து நாசம் பண்ணுகிறது அரசாங்கம் வேடிக்கை மட்டும் பார்க்கும். 

மட்டக்களப்பில யானைத்தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது உயிர் இழப்புக்களுடன்

பல யானைகள் பழக்கப்பட்ட யானைகள் அதாவது வளர்த்து காட்டில் (பன்சாலைகள், சரணாலயங்கள்,) விடப்பட்டவை அது விரட்டினாலும் போகிறது இல்லை . உணவை கண்டதும் ஓடி வரும்

 

இந்த யானைகளின் தொல்லை, சிங்களப் பகுதிகளில் நடந்தால்…
அரசாங்கம் இதே போல்… அசட்டையாக இருக்குமா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கூட்டங்களில் இருந்து பிரிந்த யானைகளை, அந்த யானைகள் கண்டறியப்பட்ட சிங்கள ஊர்களின் காட்டுப் பகுதியில் இருந்து தமிழர் பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில்    வேண்டும் என்றே வனத்துறை படித்து வந்து விடுகிறது.

யானைகள் தனிக்கும் போது, அதுவும் புதிய இடத்தில், (அல்லது எந்த மிருகத்தினதும்) பாதுகாப்பு, பயம் உணர்வு காரணமாக மதம், கோபம் கொள்ளும். 

இதுவே தமிழர் பகுதியில் யானைகளின் அத்துமீறல், தாக்குதல் மிகவும் அதிகமாக இருப்பதற்கு காரணம்.

ஓர் பிரதேசத்தில் வழமையாக இருக்கும் யானைகல், மிருகங்களுடன், , ஓர் வகையில் எதோ ஓர் உறவு வளரும், அத்துமீறல்கழும்  குறைவு. 

இது தமிழர்களை விரட்டும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கை, திட்டமிட்டு செய்யப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இந்த யானைகளின் தொல்லை, சிங்களப் பகுதிகளில் நடந்தால்…
அரசாங்கம் இதே போல்… அசட்டையாக இருக்குமா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பார்களா?

தமிழர் யானைக்கு பயந்து வெளியேறியபின் சிங்களவரை குடியேற்ற மாற்று நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் அதை தவிர்த்து நாம் நிலைத்து இருப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நமது தலைவர்கள் என தம்மை அழைத்துக்கொள்பவர்கள் செய்து நமது மக்களையும், நிலங்களையும் காக்கும் கடமைப்பாடுடையவர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2022 at 20:44, தமிழ் சிறி said:

இந்த யானைகளின் தொல்லை, சிங்களப் பகுதிகளில் நடந்தால்…
அரசாங்கம் இதே போல்… அசட்டையாக இருக்குமா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பார்களா?

மாற்று நடவடிக்கையாக அதை பிடித்து தமிழர்கள் பகுதிகளில் விட்டு விடுவார்கள்😏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன் , @Kapithan, @suvy@nunavilan, @ஈழப்பிரியன், @alvayan,

@satan, @தனிக்காட்டு ராஜா, @சுவைப்பிரியன், @Kadancha

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் குடும்ப பெண்ணொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை படு காயமடைந்து உயிரிழந்த நிலையில் இரு வீடுகளும் சேதமாக்கப்பட்டன.

மேலும் யானையின் தாக்குதலுக்கு உள்ளான உயிரிழந்தவரின் தாயாரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரு பிள்ளைகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர் கண்ணகிகிராமம் 01 இல் வசித்துவந்த 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான நாகராசா சுலசுனா என தெரியவருவதுடன் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்த யானையொன்று வீடொன்றை முற்றாக சேதமாக்கிய பின்னர் வீதி அருகில் இருந்த இன்னுமொரு வீட்டினுள் நுழைந்து வீட்டை சேமாக்கியுள்ளது.

சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்த குறித்த பெண் யானையை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் யானையை விரட்டி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் மூத்த பிள்ளை அடிபட்டு வீழ்ந்த தாயை காப்பாற்ற முயற்சித்தபோதும் பயனளிக்காத நிலையில் தாயின் உத்தரவிற்கு அமைய வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில் இளைய பிள்ளையினை தும்பி கையால் யானை தூக்கியபோதும் அதிலிருந்து குறித்த பிள்ளை அதிஷ்டவசமாக தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் அயலவர்களும் உயிரிழந்த பெண்ணின் தாயும் கூக்குரலிட்டு யானையை விரட்ட முயற்சித்தபோதும் மீண்டும் யானை பெண்ணை தாக்கிவிட்டு வெளியேறி சென்றுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பெண்ணை கிராமத்தவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றபோது தம்மை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பதுடன் அருகில் இருந்த இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் தாய் அழுது புலம்பினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர் குறித்த இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டதுடன் உயர் அதிகாரிகளுக்கும் அறிய கொடுத்துள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நட்ட ஈட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் யானை தொல்லையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் இதனால் அங்கு வாழும் மக்களும் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309881

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

@ஏராளன் , @Kapithan, @suvy@nunavilan, @ஈழப்பிரியன், @alvayan,

@satan, @தனிக்காட்டு ராஜா, @சுவைப்பிரியன், @Kadancha

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் குடும்ப பெண்ணொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை படு காயமடைந்து உயிரிழந்த நிலையில் இரு வீடுகளும் சேதமாக்கப்பட்டன.

மேலும் யானையின் தாக்குதலுக்கு உள்ளான உயிரிழந்தவரின் தாயாரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரு பிள்ளைகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர் கண்ணகிகிராமம் 01 இல் வசித்துவந்த 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான நாகராசா சுலசுனா என தெரியவருவதுடன் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்த யானையொன்று வீடொன்றை முற்றாக சேதமாக்கிய பின்னர் வீதி அருகில் இருந்த இன்னுமொரு வீட்டினுள் நுழைந்து வீட்டை சேமாக்கியுள்ளது.

சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்த குறித்த பெண் யானையை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் யானையை விரட்டி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் மூத்த பிள்ளை அடிபட்டு வீழ்ந்த தாயை காப்பாற்ற முயற்சித்தபோதும் பயனளிக்காத நிலையில் தாயின் உத்தரவிற்கு அமைய வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில் இளைய பிள்ளையினை தும்பி கையால் யானை தூக்கியபோதும் அதிலிருந்து குறித்த பிள்ளை அதிஷ்டவசமாக தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் அயலவர்களும் உயிரிழந்த பெண்ணின் தாயும் கூக்குரலிட்டு யானையை விரட்ட முயற்சித்தபோதும் மீண்டும் யானை பெண்ணை தாக்கிவிட்டு வெளியேறி சென்றுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பெண்ணை கிராமத்தவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றபோது தம்மை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பதுடன் அருகில் இருந்த இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் தாய் அழுது புலம்பினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர் குறித்த இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டதுடன் உயர் அதிகாரிகளுக்கும் அறிய கொடுத்துள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நட்ட ஈட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் யானை தொல்லையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் இதனால் அங்கு வாழும் மக்களும் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309881

முன்மாதிரி திட்டம்

 

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் ஹபரண பகுதியில் பெந்திவெவ என்ற பிரதேசத்தில் ஒரு முன்மாதிரி யானை - மனித மோதலை தடுப்பதற்கான செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றியளித்த திட்டமாக கருதப்படுகிறது. அதாவது இந்த கிராமத்தில் யானை -மனித மோதலை தடுப்பதற்காக சமூகமட்டத்திலான மின்சார வேலி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் ஆய்வு தொடர்பான விஞ்ஞானி மற்றும் யானைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

HEC_-_Fence.png

அதாவது ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு அந்த கிராமத்தை சுற்றி ஒரு யானைகள் வராத முறையில் மின்சார வேலியை அமைக்காமல் அதற்கு மாறாக வீடுகளை சுற்றி மின்சார 3 வேலி அமைத்தல், மக்களின் பயிர் செய்கைகள் இருக்கின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல், மக்கள் அடிக்கடி நடமாடுகின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல் என்ற அடிப்படையில் சமூகமட்ட மின்சார வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

புதிய திட்டம் பயனுள்ளது போல் தெரிகிறது, ஆனால் செலவு கூடியது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றி மின்வேலி என நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி, மக்கள் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

புதிய திட்டம் பயனுள்ளது போல் தெரிகிறது, ஆனால் செலவு கூடியது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றி மின்வேலி என நினைக்கிறேன்.

இப்போதுள்ள நிலையில் வீடுகளுக்கே மின்சாரம் இல்லை.

அப்புறம் வேலிக்கு எப்படி மின்சாரம் கொடுப்பது?

1 hour ago, தமிழ் சிறி said:

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

தகவலுக்கு நன்றி சிறி.

வாழ வேண்டிய பிள்ளை அநிஞாயமாக இறந்துவிட்டது.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு முன்னர் இரவு 12 மணியளவில் அம்மாவின் வீட்டுப் பகுதி அதாவது மெயின் வீதியில் வந்து போனது  @தமிழ் சிறி அண்ண அது மட்டுமல்லாமல் கரண்ட் கொடுத்த மின்கம்பங்களை விழுந்த அல்லது கரண்ட் அடிக்காத பட்ட மரத்தை இழுத்து வந்து அந்த கரண்ட் வேலியில் சாத்தி உடைத்து விட்டு உள்ளே வருகிறது இதை நீங்க நம்புவீர்களா? யானைகள் பழக்கப்பட்டு விட்டன 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போதுள்ள நிலையில் வீடுகளுக்கே மின்சாரம் இல்லை.

அப்புறம் வேலிக்கு எப்படி மின்சாரம் கொடுப்பது?

இரவில் ஓரளவு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது!
220வோல்ற் மின்சாரம் எனில் உயிராபத்து மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும், 110வோல்ற் எனின் ஆபத்து குறைவு என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவை எங்கோ வாசித்த நினைவு, மின்சாரவேலியில் தாக்குண்டு யானை இறந்ததால் வனவள திணைக்களம் விவசாயிக்கு நீதிமன்ற அழைப்பாணை விட்டதாக.  மின்சார வேலியில் வீட்டு மிருகங்களும், ஏன் மனிதரும் சிக்க வாய்ப்புண்டு, எச்சரிக்கையோடு திட்டம் முன்னெடுக்கப்படுமானால் வரவேற்கத்தக்கதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வவுனியா நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மரங்களை அழித்த யானைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்தினுள் உள்நுழைந்த யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட  சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை முறித்து அழித்துள்ளது.

இதேவேளை அருகாமையில் உள்ள காணிக்குள் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் அழித்துள்ளது.

மேலும் யானை வேலி அமைக்கப்பட்டு இருந்தும் தமக்கு பிரியோசனம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் வருவதால் இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1310184

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.