Jump to content

விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல்.மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்
 

நஸீலா

 

படக்குறிப்பு,

சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 'காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்' இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு முன்பாக - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் தேதி - கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பொதுமக்களை - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆயுதமுனையில் கடத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர்.

ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுத் திரும்பியோர், தொழிலுக்காக வெளியூர் சென்று வந்தோர் உட்பட பலர் - இதன்போது கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையே, தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான ஆயுத மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக, காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் - பிசிசி தமிழிடம் கூறுகிறார்.

தமிழர்கள் வாழும் பிரதேசமான குருக்கள் மடத்தில், சம்பவ நாள் காலை தொடக்கம் மாலை வரையில், புலிகள் இயக்கத்தவர்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், வேறோர் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு - படுகொலை செய்யப்பட்டார்கள் என, அவர் தெரிவிக்கின்றார்.

இந்த படுகொலை நடைபெற்று 20 நாட்களுக்குப் பின்னர்தான் (03 ஆகஸ்ட் 1990), காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இரவு நேரம் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது, விடுதலைப் புலிகள் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், அதில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்றும் ரஊப் குறிப்பிட்டார்.

"சம்பவ தினம் - குருக்கள் மடம் பகுதி வீதி ஓரங்களில் அதிக அளவிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நிற்பதாக கேள்வியுற்றோம். அன்று காலையில் இருந்து, கல்முனை - மட்டக்களப்பு வீதியால் பயணித்த காத்தான்குடி முஸ்லிம்களை புலிகள் கடத்தியிருந்தனர். பிற்பகல் இரண்டரை மணியளவில்தான் எமக்கு அதனை உறுதிப்படுத்த முடிந்தது. மாலை 5.00 மணியளவில் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது” என, அன்றைய சம்பவம் குறித்து ரஊப் விவரித்தார்.

காத்தான்குடியிலிருந்து குருக்கள் மடம் சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

 

ரஊப்

 

படக்குறிப்பு,

இந்த சம்பவத்தில் தன்னுடைய தாய் மாமன் (தாயின் மூத்த சகோதரர்), மச்சான் (மாமியின் மகன்) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாக ரஊப் தெரிவித்தார்.

”கடத்தப்பட்டோரில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் இருந்தமையினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஊர் நம்பியது. இருந்தபோதும் மட்டக்களப்பிலுள்ள தேவாலயமொன்றின் அருட்தந்தை ஒருவர் ஊடாக, எமது மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்கு செய்தியனுப்பினோம். கடந்த காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது நல்லுறவை ஏற்படுத்துவதற்காக அருட்தந்தையர்கள் உதவியிருந்தனர்.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பில் புலிகளுடன் பேசுவதற்குச் சென்ற அருட்தந்தை பின்னர் எம்மை சந்திக்கவில்லை. கடத்தப்பட்டவர்களுக்கான இறுதிக் கடமைகளை எமது சமயப் பிரகாரம் மேற்கொள்ளுமாறு அருட்தந்தையிடமிருந்து மாலை 7.00 மணியளவில் சேதிதான் வந்தது” என்றார் ரஊப்.

இந்த சம்பவத்தில் தன்னுடைய தாய் மாமன் (தாயின் மூத்த சகோதரர்), மச்சான் (மாமியின் மகன்) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரஊப் தெரிவித்தார்.

 

முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்

 

படக்குறிப்பு,

முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்

மூன்று கோரிக்கைகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் மூன்று கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாக ரஊப் குறிப்பிட்டார்.

குருக்கள் மடத்தில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த உடல்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தப் படுகொலை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதை சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும்.

நாட்டில் நடந்த யுத்தத்தின் போது முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளமையை சர்வதேச சமூகத்துக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்பனவே தாம் முன்வைத்த - மூன்று கோரிக்கைகள் என', காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஊப் கூறினார்.

 

பள்ளிவாயல்கள் சம்மேளனம்

2 மாதங்களில் உடன் பிறந்தோர் இருவரை இழந்தவரின் கதை

குருக்கள் மடம் படுகொலைச் சம்பவத்தில் தனது தம்பியைப் பறிகொடுத்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த பௌசுல் ஹினாயா. அப்போது தனது தம்பிக்கு 22 வயது என்கிறார். அந்த இழப்புக் குறித்து பிபிசியிடம் பேசிய அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

”வீட்டில் நாங்கள் 06 பிள்ளைகள். ஆண்கள் நான்கு பேர், பெண்கள் இருவர். எனக்கு இளைய சகோதரரரான பௌசுல் அமீர் என்பவரைத்தான் குருக்கள் மடத்தில் புலிகள் கடத்திக் கொன்றார்கள்” என்கிறார்.

புடவை வியாபாரத்துக்காக அக்கரைப்பற்றுக்குச் சென்றிருந்த தனது தம்பி, ஊர் திரும்பியபோதுதான் அவர் கடத்தப்பட்டதாக ஹினாயா கூறுகின்றார்.

அந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களின் பின்னர், தனது இன்னொரு சகோதரரும் மட்டக்களப்பு - நாவக்குடா பகுதியில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாகவும் பௌசுல் ஹினாயா தெரிவித்தார்.

 

பௌசுல் ஹினாயா

 

படக்குறிப்பு,

இரண்டு மாதங்களுக்குள் சகோதரர்கள் இருவரை இழந்த பௌசுல் ஹினாயா.

”மற்றைய தம்பியின் பெயர் ரஊப். அவர் வீட்டில் நாலாவது பிள்ளை. அப்போது அவருக்கு 19 வயது. தொழிலுக்காக மட்டக்களப்பு சென்றிருந்தபோது கடத்திக் கொலை செய்யப்பட்டார்” என பௌசுல் ஹினாயா குறிப்பிட்டார்.

குருக்கள் மடம் படுகொலை நடந்த காலப்பகுதியில், அநேகமான தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்தது. ராணுவத்தினர் தலைகாட்டும் போது மறைந்துகொள்ளும் புலிகள் இயக்கத்தவர்கள், ராணுவம் சென்ற பின்னர் ஊர்களுக்குள் மீண்டும் நடமாடத் தொடங்குவர்.

சிலவேளைகளில், புலிகள் அமைப்பினரைக் கட்டுப்படுத்துவதற்காக படையினர் களமிறங்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் மோதல்கள் இடம்பெறுவதுமுண்டு.

இந்தக் காலப்பகுதியில் தமிழர் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் என்பதற்காகவே தனது சகோதரர்கள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டனர் என்கிறார் பௌசுல் ஹினாயா. குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தோண்டப்பட்டு இஸ்லாமிய முறைப்படை நல்லடக்கம் செய்யப்படுவது - தமக்கு திருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகின்றார்.

 

பௌசுல் அமீர் (குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்டவர்)

 

படக்குறிப்பு,

பௌசுல் அமீர் (குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்டவர்)

புலிகள் கடத்தியதை கண்டவர் தகவல் கூறினார்

சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. இவர் அரச தொழில் புரிகின்றார்.

”எங்கள் தந்தை குடும்பத்தை பராமரிக்கத் தவறியபோது, எங்களுக்காக எமது மூத்த சகோதரர்தான் உழைத்தார். அவரின் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது” என்று கூறியபோது நஸீலா கண்ணீர் விட்டார்.

தனது சகோதரர் பயணித்த லாரியை புலிகள் கடத்திச் சென்றதை, அந்த வழியினால் பயணித்த ஒருவர் கண்டு வந்து - தங்களிடம் கூறியதாகவும் நஸீலா இதன்போது குறிப்பிட்டார்.

அனைவரும் கடத்தப்படவில்லை

குருக்கள் மடத்தின் வழியாகப் பயணித்த அனைத்து முஸ்லிம்களும் அன்றைய தினம் கடத்தப்படவில்லை என, பிபிசி தமிழுடன் பேசியவர்கள் கூறுகின்றனர்.

"அவர்கள் (புலிகள்) அன்று எல்லோரையும் கடத்தவில்லை. சிலரை செல்லுமாறு அனுமதித்திருந்தனர், சிலரைக் கடத்தினார்கள். முஸ்லிம்களை புலிகள் கடத்துவதாக அன்றைய தினம் செய்தி கசியத் தொடங்கியபோது, அதனை சிலர் நம்பவில்லை. 'நாங்கள் அந்த வழியால்தான் வந்தோம், எங்களுக்கு அப்படியொன்றும் நடக்கவில்லை' என்று - பிரச்சினைகள் எவையுமின்றி அந்த வழியால் வந்தவர்கள் கூறினார்கள்.

 

முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்

 

படக்குறிப்பு,

முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்

இதன் காரணமாக முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அன்றைய தினம் முழுவதும் அந்த வழியாகப் பயணித்தனர் என்கிறார் - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஊப்.

முஸ்லிம்களுக்கு சந்தேகம் ஏற்படாமலிருக்க புலிகள் அவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.

1980களில் இருந்தே முஸ்லிம்கள் காணாமலாக்கப்படுதல், கடத்தப்படுதல், முஸ்லிம்களிடம் கப்பம் கோருதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இவற்றினை விடுதலைப் புலிகளும், தமிழ் ஆயுதக் குழுக்களுமே செய்து வந்ததாகவும் ரஊப் குறிப்பிடுகின்றார்.

குருக்கள் மடத்தில் ஒரு இடத்தை இந்த செய்தியாளரிடம் காட்டிய ரஊப், படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் அங்குதான் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடற்கரையை அண்டிய அந்த இடத்துக்கு அருகில், தற்போது ராணுவ முகாமொன்று அமைந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cy0n77krmzpo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு... இதே வேலையாய் போச்சு.
முஸ்லீம் ஊர்காவல்படை செய்த தமிழர் கொலைகளைப்  பற்றி எவனும் கதைக்க மாட்டார்கள்.
ஆனால்... இவர்களுக்கு, வக்காலத்து வாங்கவும், 
எருமைத் தோல் கொண்ட   தமிழர் நிறைய உள்ளார்கள்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏதும் வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் தமிழர் முஸ்லிம்களை ஒன்றுபடாமல் பிரித்துவைக்கும் முயற்சியா இது ? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை வைத்து இனி இவை காய் நகர்த்துவினம்...காணியும் பிடிப்பினம்...இவையால் கொல்லாப்பட்ட தமிழர் சடலங்களையும் அவர்களின் மதப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும்...பின்னாலை புல்லாதான் இருப்பார்..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குந்திக்கொண்டு இருப்பினம்...அதுவும் சிங்களவனுக்கு சாமரம் வீசிக்கொண்டு...ஏதாவது தீரிவு ..அல்லது காசுவருகுதென்றால் .. குத்தி முறிஞ்சு ..அதுக்குள்ளை உள்ளட்டு.குழப்பி தங்களுக்கும் பங்குபோட வருவினம்..

அரசியல் வாதி முதல்..அடிமட்ட முசுலிம்வரை...அப்பம் பிரித்த பரம்பரையல்லே😎

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கொல்லப்பட்ட அனைத்து இஸ்லாமியருக்கும் அவர்தம் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆனால் இந்த விடயத்தினை கையில் எடுத்து ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இழந்த தம்மீதான இரக்கத்தினை மீளவும் கட்டியெழுப்ப பயன்படுத்துகின்றார்கள் என அச்சம் கொள்ளவைக்கின்றது. நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை மீண்டும் கிளறுவதால் இனங்களுக்கிடையே நல்லெண்ணம் வரப்போவதில்லை. கொக்கட்டிச்சோலை படுகொலை போன்ற பல நிகழ்வுகளை தமிழர் தரப்பும் தூக்கிப்பிடித்துக்கொண்டு திரியலாம். 

எமது கண்மணியாம் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் கூட தமக்கு நஞ்சு கலந்த ஆட்டிறைச்சியை கொடுத்த பெண்ணை மன்னித்து விட்டிருக்கிறார்கள்👀

 

ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள். 

    பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் “நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?” அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்” என்றாள். அப்போது நபித்தோழர்கள் “அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறி மன்னித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் செய்த பழசுகளை மறந்திட்டு.. அடுத்தவன் முதுகை காட்டினம். 

இதில பிபிசி தமிழ் நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் வேடிக்கை. இதே குஜராத்தில் ஐயா மோடி செய்ததை விபரிப்பினமோ.. தோண்டிப் புதைப்பினமோ.. அதைக் கேட்டால்.. பிபிசி தமிழ் மூச். 

அதுசரி.. காத்தான்குடி எங்க சவுதியிலா இருக்குது. அரபு முன்னிற்கு நிற்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

பிணத்தை தோண்டி எடுப்பதா?

இதைத்தான் பிண அரசியல் என்பது.

 

அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எரித்த ஜனாசாக்களின் சாம்பலை..உரிய முறைப்படி அடக்கம்..செய்யக் கேளுங்கோ...அதுமுடிய ...இதைப்பாப்பம்...உங்களுக்கு தமிழன் என்றால் இழப்பம் அவ்வளவுதானே....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எரித்த ஜனாசாக்களின் சாம்பலை..உரிய முறைப்படி அடக்கம்..செய்யக் கேளுங்கோ...அதுமுடிய ...இதைப்பாப்பம்...உங்களுக்கு தமிழன் என்றால் இழப்பம் அவ்வளவுதானே....

இவங்களுக்கு... கண் மண் தெரியாமல்... மொங்கு, மொங்கு அடிக்க.. இஸ்ரேல்காரன் தான் சரி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாலி said:

நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்”

என்ன தொலையப்பா நபி அந்த பெண்ணுக்கு, வேறு பெண்களுக்கு கொடுத்தவர். 

எதை சொன்னாலும் கில்லாடி தான் நபி. 😃

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.