Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்

By VISHNU

28 DEC, 2022 | 07:06 PM
image

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை.

இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/144386

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா…. சீனன் பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, யாழ். கோட்டையை சுற்றிப் பார்க்கிறான்.
இங்கிருந்து… இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்கப் போறானே.
இந்தியாவுக்கு… பிரசர், ஏறப் போகுதே…. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆகா…. சீனன் பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, யாழ். கோட்டையை சுற்றிப் பார்க்கிறான்.
இங்கிருந்து… இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்கப் போறானே.
இந்தியாவுக்கு… பிரசர், ஏறப் போகுதே…. 🤣

சீனன் அடிக்கடி பட்டு வேட்டி கட்டிக்காட்டி ஆருக்கோ சிக்னல் குடுக்கிறான் எண்டு நினைக்கிறன்😁

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் வரவு நல்வரவாகுக 😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Kapithan said:

தங்கள் வரவு நல்வரவாகுக 😉

தங்கள் வரவு நல்வரவாகுக..😃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சீனன் அடிக்கடி பட்டு வேட்டி கட்டிக்காட்டி ஆருக்கோ சிக்னல் குடுக்கிறான் எண்டு நினைக்கிறன்😁

ஆருக்கோ இல்லை, கணபதி ஐயருக்குத்தான் கடுப்பேத்துறான். 🤣

1 minute ago, Kapithan said:

தங்கள் வரவு நல்வரவாகுக 😉

வருக, வருக என தங்களை வரவேற்கின்றோம். 🙏 🙂

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

தங்கள் வரவு நல்வரவாகுக..😃

 

57 minutes ago, தமிழ் சிறி said:

வருக, வருக என தங்களை வரவேற்கின்றோம். 🙏 🙂

நன்றி  உரித்தாகுக. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தங்கள் வரவு நல்வரவாகுக 😉

தங்கள் வரவு நல்வரவாகுக 😁

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை அரசியல்வாதிகள் ஒருத்தனும் மறந்தும் ரோட்டுக்கு  வர மாட்ட்டாங்களே ...😀

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வேட்டியுடன் வருவதற்கு அவர்களுக்கு பல மாலைகள் போட்டு வரவேற்கலாம். யாழ்ப்பாணத்தில்.  தமிழர்கள் ஒருவருமில்லையா.  ?😆. அடுத்த முறை தமிழில் கதைத்துக்கொண்டு வருவார்கள்’’........நாங்கள் சுயாட்சி தமிழருக்கு வழங்குவதை ஆதரிக்கிறோம்.   என்று சீனா சொன்னால் இந்தியா என்ன சொல்லும்?.   இலங்கை என்ன செய்யும்   ?. 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் யாழ்ப்பாண கோட்டையில் கொடியேற்றப்போகிறார்களாம் சுதந்திர தினத்துக்கு! எந்த இடத்தில ஏற்றுவது என்று நோட்டமிட வந்தாரோ? இலங்கையை, தமிழரை தன் கைக்குள் வைத்திருக்க இந்தியா படாத பாடு படுகுது, கடைசியில யாரும் எதிர்பார்க்காத முடிவை சீனா எடுத்து எல்லோரையும் திகைக்க வைக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இப்படி வேட்டியுடன் வருவதற்கு அவர்களுக்கு பல மாலைகள் போட்டு வரவேற்கலாம். யாழ்ப்பாணத்தில்.  தமிழர்கள் ஒருவருமில்லையா.  ?😆. அடுத்த முறை தமிழில் கதைத்துக்கொண்டு வருவார்கள்’’........நாங்கள் சுயாட்சி தமிழருக்கு வழங்குவதை ஆதரிக்கிறோம்.   என்று சீனா சொன்னால் இந்தியா என்ன சொல்லும்?.   இலங்கை என்ன செய்யும்   ?. 

இப்படி அடிக்கடி யாழ் வந்து பெற்றோல் காசை வீணாக்குவதை விட்டு நிரந்தரமாய் யாழ் இந்தியன் எம்பசிக்கு பக்கத்தில் சைனா எம்பசியை திறப்பது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இப்படி அடிக்கடி யாழ் வந்து பெற்றோல் காசை வீணாக்குவதை விட்டு நிரந்தரமாய் யாழ் இந்தியன் எம்பசிக்கு பக்கத்தில் சைனா எம்பசியை திறப்பது நல்லது .

திறக்காது என்றா நினைக்கிறீர்கள்? அதற்குத்தான் அடிக்கல் நாட்டுவதற்கு அடிக்கடி வந்து இடம் தேடுகிறார்கள். எங்கே போட்டால் இந்தியாவுக்கு பத்தியெரியும் என்று ஆராய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

தங்கள் வரவு நல்வரவாகுக 😉

தங்களைக் கண்டது சந்தோசம்.

3 hours ago, பெருமாள் said:

எங்கடை அரசியல்வாதிகள் ஒருத்தனும் மறந்தும் ரோட்டுக்கு  வர மாட்ட்டாங்களே ...😀

இந்தியா பச்சைக்கொடி காட்டணுமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இப்படி வேட்டியுடன் வருவதற்கு அவர்களுக்கு பல மாலைகள் போட்டு வரவேற்கலாம். யாழ்ப்பாணத்தில்.  தமிழர்கள் ஒருவருமில்லையா.  ?😆. அடுத்த முறை தமிழில் கதைத்துக்கொண்டு வருவார்கள்’’........நாங்கள் சுயாட்சி தமிழருக்கு வழங்குவதை ஆதரிக்கிறோம்.   என்று சீனா சொன்னால் இந்தியா என்ன சொல்லும்?.   இலங்கை என்ன செய்யும்   ?. 

அவர்ளுக்கு மாலை போட்டால் இந்திய புலனாய்வு இவர்களுக்கு மாலை போட்டுடுமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

தங்கள் வரவு நல்வரவாகுக 😉

அந்தா.. வந்திட்டார், சீனப்பிரதிநிதியை வரவேற்க, இனியென்ன அமோகந்தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தங்கள் வரவு நல்வரவாகுக 😁

 

50 minutes ago, ஈழப்பிரியன் said:

தங்களைக் கண்டது சந்தோசம்.

42 minutes ago, satan said:

அந்தா.. வந்திட்டார், சீனப்பிரதிநிதியை வரவேற்க, இனியென்ன அமோகந்தான்! 

 

 வரவேற்புக்கு நன்றிகள்  பல. 🙏

சாத், இப்ப நான் நிக்கிறதா விட்டுவிட்டுப் போறதா ? 🤣

 

3 hours ago, Kandiah57 said:

 சுயாட்சி தமிழருக்கு வழங்குவதை ஆதரிக்கிறோம்.   என்று சீனா சொன்னால் இந்தியா என்ன சொல்லும்?.   இலங்கை என்ன செய்யும்   ?. 

1) இந்தியா தமிழீழம் பிடிச்சுத்தாறன் எண்டு சொல்லிக்கொண்டு ஓடி வரும்/திரும்பவும் JVP யை  தூண்டிவிடும்

2) புத்தியுள்ளவன் என்றால், பிளவுபடாத நாட்டிற்குள் சுயாட்சியை ஏற்றுக்கொள்வான். அவனுக்கு, நாடும் பிளவுபடாது. இந்தியாவின் செல்வாக்கும் எடுபடாது என விரும்புவான். 

அதுசரி, நாங்கள் என்ன செய்வோம்? 😉

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வருகிறது, இந்தியா வருகிறது தற்போது சீனாவும் வருகிறது ஆனால் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பான தமிழர்களை தீர்வு என வரும்ப்போது மட்டும் புறக்கணித்து விடுகிறார்கள்.

வேட்டி உடுத்து  உங்களில் ஒருவன் என  காட்டுவதை விடுத்து, தீர்வில் காட்டலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

வேட்டி உடுத்து  உங்களில் ஒருவன் என  காட்டுவதை விடுத்து, தீர்வில் காட்டலாமே ?

இளிச்சவாயன் தமிழனை ஏமாற்ற போடும் வேஷம் அது, நம்பாதீங்கோ! அப்படியொன்றிருந்தால்; ஐ. நா. வாக்கெடுப்பில் பொத்திக்கொண்டு இருந்திருப்பினம்.

5 minutes ago, vasee said:

பிரச்சினையில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பான தமிழர்களை தீர்வு என வரும்ப்போது மட்டும் புறக்கணித்து விடுகிறார்கள்.

அது அவர்களின் பிறவிக்குணம்! ஓடி ஒளிந்து, தனித்து குசு குசு மந்திரந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்ப நான் நிக்கிறதா விட்டுவிட்டுப் போறதா

ஏன் விட்டுடுட்டுப் போக வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் விட்டுடுட்டுப் போக வேண்டும்?

தான் கூட்டி வந்தவர்களோடு கூட நின்று இடம் காட்டுறதா? அல்லது அவர்களை விட்டிட்டு போறதா என்கிறார். என்னவோ நாங்கள் கேட்டு அவர்களை தான்  கூட்டிவந்த மாதிரியல்லோ இருக்கு இவரின் கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் விட்டுடுட்டுப் போக வேண்டும்?

சும்மா  கேட்டனான் 😀

10 minutes ago, satan said:

1) தான் கூட்டி வந்தவர்களோடு கூட நின்று

2) இடம் காட்டுறதா?

3) அல்லது அவர்களை விட்டிட்டு போறதா என்கிறார். என்னவோ நாங்கள் கேட்டு அவர்களை தான்  கூட்டிவந்த மாதிரியல்லோ இருக்கு இவரின் கேள்வி?

 

1) யாரை யார் கூட்டி வந்தது?

2) எந்த இடம் ? 

3) யாரை விட்டுப் போவது, யாரைக் கூட்டிக்கொண்டு போவது? 

கொஞ்சம் விரிவாக, விளக்கமாக எழுதலாமே ?

😉

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, satan said:

தான் கூட்டி வந்தவர்களோடு கூட நின்று இடம் காட்டுறதா? அல்லது அவர்களை விட்டிட்டு போறதா என்கிறார். என்னவோ நாங்கள் கேட்டு அவர்களை தான்  கூட்டிவந்த மாதிரியல்லோ இருக்கு இவரின் கேள்வி?

இனி யாராவது இடம் காட்ட “இடம் எங்க இருக்கு”?

ஆனபடியால் அவரை இவரை விரல் காட்டி பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இனி யாராவது இடம் காட்ட “இடம் எங்க இருக்கு”?

ஆனபடியால் அவரை இவரை விரல் காட்டி பிரயோசனமில்லை.

உண்மையில் எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் புரியும்படி எழுதலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

சீன மக்களின் நன்கொடை யாழ். மக்களுக்கு வழங்கப்பட்டது!

சீன மக்களின் நன்கொடை யாழ். மக்களுக்கு வழங்கப்பட்டது!

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் கே.பாலகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1317803

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.