Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் - டயனா கமகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் -  டயனா கமகே

By DIGITAL DESK 2

02 JAN, 2023 | 08:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வீதி கடைகளில் விற்பதற்காகவும், அனைவரும் வாங்கி பயன் படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை. வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளேன்.

பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

தவறான மற்றும் முட்டாள்தனமான சிந்தனைகளில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டு கையிறுப்பு பற்றாக்குறையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வங்குரோத்து நிலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச தரப்பினர் அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாடு என்பதொன்று மிகுதியாக இருந்தால் தான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை.நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. எதிர்தரப்பினர் மாத்திரம் தேர்தலை கோருகிறார்கள்.

தூர நோக்கமற்ற கொள்கை இல்லாத காரணத்தினால் மின்சாரம்,சுகாதாரம், வலுத்துறை ஆகிய துறைகளில் பல பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், எரிபொருள் உள்ளிட்ட சேவைகளின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.

வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை, வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும்.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள். தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/144788

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மாவிற்கு இரண்டு கிலோ கஞ்சா பார்சல் பிளீஸ்.

ஓரே ஆய்கினையா இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரத்தையும் சட்டபூர்வமாக்கினால் இதைவிட அதிகம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியுமே 😏

🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் -  டயனா கமகே

அவர் கூறுவதில் உண்மை உள்ளதுதானே. 
1. குமுகாய அவலங்கள் கூடும்
2. குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும்.
3. சட்டரீதியான விற்பனை, எவரும் வாங்கலாம். இதன் வழியாக ஏற்படும் பக்கவிளவுகளால்
காவல்துறைக்கு, சிறைத்தறைக்கு, சட்டவாளர்களுக்கு, மருத்துவத்துறைக்கு மற்றும் வியாபாரிகளுக்கு என வேலைவாய்ப்புப் பெருகும்தானே.
அம்மணி முதலில் வடமாகாணத்தை இலக்குவைத்துத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயிர்ச்செய்கையை மீட்டெடுக்க முடியுமா என்று சிந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவாவுக்கு இந்த நாட்டின் குடியுரிமையே இல்லையாம், அப்படிப்பட்டவுக்கு அளிக்கப்பட்ட பதவியும் பறிப்பாம் பிறகு எதற்கு கூவுறா? ஏதோ பிரச்சனை இவாவுக்கு, அதை முதலில் ஆராய வேண்டும்! விபச்சாரம், கஞ்சா தரகரோ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

இவாவுக்கு இந்த நாட்டின் குடியுரிமையே இல்லையாம், அப்படிப்பட்டவுக்கு அளிக்கப்பட்ட பதவியும் பறிப்பாம் பிறகு எதற்கு கூவுறா? ஏதோ பிரச்சனை இவாவுக்கு, அதை முதலில் ஆராய வேண்டும்! விபச்சாரம், கஞ்சா தரகரோ?

இங்கு  லண்டனில் இருக்கும் சிங்களவரே கோத்தாவின் தோல்விக்கு பின் இரண்டாக உடைந்து ஓடுகின்றனர் பவுன்சி லோனில் நல்லா காசு பார்த்து விட்டனர் .

1 hour ago, Nathamuni said:

இந்தம்மாவிற்கு இரண்டு கிலோ கஞ்சா பார்சல் பிளீஸ்.

ஓரே ஆய்கினையா இருக்குது

கஞ்சா போதை பலவகையானது இந்த கிழவி எதை கேட்கிறா என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

கஞ்சா போதை பலவகையானது இந்த கிழவி எதை கேட்கிறா என்று தெரியவில்லை .

இவவின் கோரிக்கை சட்டபூர்வமாக்கியபின் வெளியிடுவா எது வேண்டுமென்று  என்று.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பும் பணம்.. வெள்ளைப் பணம்.. கமிசன்... தரகு.. கொலை பிறகு அதைக் கண்டுபிடிக்க பொலிஸ்.. சட்டத்தரணி.. நீதிபதி... பிறகு கஞ்சா பதுக்கலை தடுக்க இராணுவம்..  குறிப்பாக வடக்குக் கிழக்கில்... அப்புறம்.. கஞ்சா புகைப்பதால் வரும்.. வருத்தங்கள்.. அதற்கு டிஸ்பென்சரி.. வைத்தியசாலை.. தாதி.. மருந்தகம்.. மருத்துவர்.. இஸ்தியாதி இஸ்தியாதி.. தொழில்கள் வரும்.. வளரும். ஏன் ஒரு நாடே வல்லரசாகும். அது கஞ்சாவால்.. வல்லரசான சிங்கள தேசம்.. சொறீலங்காவா இருக்கும். ஆப்கானிஸ்தானும் தலிபான்களும் எங்க.. நாங்க எங்க. ஆ ஆ

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் -  டயனா கமகே

எதே.....என்ன கஞ்சாவிலையே குறியாய் நிக்கிறானுகள்....ஆடு மாடு கோழி வளர்க்கிற பிளான் ஏதும் இல்லையோ இல்லாட்டி தோட்டம் துரவு????????

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எதே.....என்ன கஞ்சாவிலையே குறியாய் நிக்கிறானுகள்....ஆடு மாடு கோழி வளர்க்கிற பிளான் ஏதும் இல்லையோ இல்லாட்டி தோட்டம் துரவு????????

அதெல்லாம் பழைய நடைமுறை சாமியோவ்! மக்கள் அதிகம் விரும்பி நுகர்வதை பயிர் செய்வதே வழமை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள். தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.

பட்டென்று  சொல்வதென்றால் ஆண்ட்டிக்கு இலங்கையை 
தாய்லாந்து போல தெற்காசியாவின் விபச்சார மையமாக ஆக்குவதுதான் இலக்கு அதற்காகத்தான் 
இரவு விடுதிகளையும் கஞ்சாவுடன் சேர்த்து  சட்டபூர்வமாக்கவேண்டும் என்று கூவினவா....

இலங்கை இருக்கும் நிலையில் இப்படி கேளிக்கை களியாட்ட நாடாகமாறி ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறினால் தான் உண்டு. மற்றைப்படிக்கு இந்த மொத்த தேசிய  உற்பத்தியை பெருக்கி பவர்புல் பொருளாதாரமாக மாறுவதெல்லாம் பேசவும் கேட்கவும் நல்லா இருக்கும். ஆனால் அதற்குரிய கேப்பபிலிட்டியை இந்த நாடு இழந்து வெகுகாலம்   

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230104-111827.jpg

On 2/1/2023 at 22:03, ஏராளன் said:

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில்.. 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.