Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://athavannews.com/2023/1320045

புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்!

க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது.

ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று
(வெள்ளிக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புலவர் said:

https://athavannews.com/2023/1320045

புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்!

க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது.

ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று
(வெள்ளிக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

புலவர் ஹப்பி அண்ணாச்சி🤣

பிஸ்கோத்து சின்னதில் போட்டியிடலாமே இவர்கள்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென பிசுபிசுத்து விட்டது. ஜனநாயகட்சி காரணமென ஒரு செய்தி சொல்கிறது. சாட்டுக்கு சாவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மானுக்கும் மீனுக்குமான பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் போட்டி !

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி உதயமானது!

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முடிவுக்கமைய ஒப்பந்தம் கைச்சாத்தானது.

அதன்படி எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.

சின்னம் தொடர்பாக ஏற்பட்ட இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

https://athavannews.com/2023/1320153

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு

ஐந்து கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு

 

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று (13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது.

தமிழரசு கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/

  • கருத்துக்கள உறவுகள்

பொது சின்னம், பொது பெயர் என்றால் - விக்கி+மணி விட்டு கொடுத்து நடந்திருக்கலாம்.

கஜே போல் அதே ஈகோ அரசியலை விக்கி+மணி செய்கிறார்கள்.

அடுத்த தேர்தலில் இந்த 5 கட்சிகளும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுமந்திரன் காலில் கிடப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நிர்வாகியாக செயற்பட்ட மணிவண்ணன் தனது  அரசியலில்  இப்படி ஆகிவிட்டாரே!  ஏமாற்றம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானர்களின் கூட்டணியில் எப்படி இணைய முடியும்.இவர்கள் உள்ளுராட்சித் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பேரம் பேசுவதற்காக இப்படி நாடகம் போடுகிறார்கள். ஆனால் பொதுத்தேர்தல் என்று வந்தால் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக வுpட்டுச்சின்னத்தில் போட்டியிடுவார்கள். தமிழரசுக்கட்சிக்கும் இதே நிலைதான் அவர்களும் பொதுத்தேர்தல் என்று வந்தால் கூட்டமைப்பாக  தேர்தலில்நிற்பதையே விரும்புவர். உள்ளுராட்சித்தேர்தல் வேட்பாளர்கள் அல்லக்கைகள் அவர்கள் வென்றாலும் தோற்றாலும் அவர்களக்கு கவலையில்லை. ஆனால் பொதுத்தேர்தலில் அவர்களின் தலையே உருண்டு விடும் என்பதால் அவர்கள் இந்த விஷப்பரிட்சைக்கு போகமாட்டார்கள். ஒற்றுமை தமிழ்த்தேசியம் என்ற வெற்றுக் கோசங்களோடு தேர்தலுக்கு கூட்டமைப்பாக முகம் கொடுப்பார்கள். அடுத்த பொதுத்தேர்தலில் தமித்தேசியக்கூட்டபை;பின் தலைமையும் தமிழரசுக்கட்சியின் தலைமையும் சுமத்திரனும் இருப்பதற்கே சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆகவே சுமத்திரனின் காலில் கிடப்பார்கள் என்பது சரியான கணிப்பு.வென்றாலும் தோற்றாலும் ஒரே நிலைப்பாடு.கஜேந்திரகுமாரின்நிலைப்பாடு உறுதியானது.

48 minutes ago, goshan_che said:

பொது சின்னம், பொது பெயர் என்றால் - விக்கி+மணி விட்டு கொடுத்து நடந்திருக்கலாம்.

கஜே போல் அதே ஈகோ அரசியலை விக்கி+மணி செய்கிறார்கள்.

அடுத்த தேர்தலில் இந்த 5 கட்சிகளும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுமந்திரன் காலில் கிடப்பார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தன்னிச்சையாக எடுத்தார்கள். மேலும் கூட்டணியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுத்திருந்தோம். எனினும் சின்னம், கூட்டணியின் செயலாளர் பதவியினை எமது கட்சிக்கு தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததார்கள். எம்மை பொம்மை போல் பாவிக்க முற்பட்டதால் நாம் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளோம். எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம்.
க.வி. விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி.
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

மான் சின்னத்தில்

 

6 hours ago, கிருபன் said:

குத்துவிளக்கு சின்னத்தில்

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வாழ்வு  தான்  இவர்களை நம்பி  இப்படி  போய்விட்டது

இனி  பிள்ளைகளாவது  உருப்படியாக்குவதை  இட்டு  புலம் பெயர்ந்த  மக்கள்  சிந்திக்க  முயலணும்

தாயகத்தில்  ஒருவரும் நாடு  என்று நினைக்கப்போவதில்லை☹️

  • கருத்துக்கள உறவுகள்

மணி மீது ஒர் எதிர்பார்ப்பு இருந்தது. வெற்றியோ தோல்வியோ சுயேட்சையாக கூட நின்றிருக்கலாம். விக்கியோட சேர்ந்து குட்டிச் சுவராகப் போகிறார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும்.

இவர்கள் முற்று முழுதாக இலங்கை இந்திய புலனாய்வாளர்களால் இயக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

அதனால்த் தான் புதுடில்லி வரை போய் குரல் கொடுக்க முடியுது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

மணி மீது ஒர் எதிர்பார்ப்பு இருந்தது. வெற்றியோ தோல்வியோ சுயேட்சையாக கூட நின்றிருக்கலாம். விக்கியோட சேர்ந்து குட்டிச் சுவராகப் போகிறார்.

 

 

உங்கள் சிச்சுவேசனுக்கு இதுதான் பொருத்தம்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

குத்துவிளக்கு சின்னத்தில்

சிகப்பு விளக்கு இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

சிகப்பு விளக்கு இல்லையோ?

பாட்டாவே பாடீடிங்களா…சரி இடையிடையே மானே, தேனே, மணியே, செல்வமே, சித்தமே இதுகளையும் போட்டு கொள்ளுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்னதுமேடையையே மாற்றி விட்டீர்களே, பாட்டுக்கு பாட்டு போகுது!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

என்னதுமேடையையே மாற்றி விட்டீர்களே, பாட்டுக்கு பாட்டு போகுது!

நம்ம அரசியலே அப்படித்தானே எசமான் போகுது🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

சுத்தம் 😂
மக்கள் நலன் முக்கியமா? சின்னம் முக்கியமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சுத்தம் 😂
மக்கள் நலன் முக்கியமா? சின்னம் முக்கியமா?

சொன்னது சின்னம்

சொல்லாதது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் இருப்பு, பதவி  முக்கியம். மக்களாவது மண்ணாங்கட்டியாவது. ஏற்கெனவே சொல்லிவிட்டேன் இவர்களது நிலைப்பாடு. வாக்குப்பிச்சை போட்டவர்கள் இவர்களது தவறை தட்டிக்கேட்டால் சுட்டிக்காட்டினால் அடிபொடிகளுக்கு கோவம் வருகுது. மரியாதை பாடம் எடுக்கிறார்கள். இருக்கிறவன் சரியாய் இருந்தால் சி ,,,,,, சரியாய் தன் வேலையை செய்வான். 

எல்லாம் ஒரே அரசியல் குட்டையில் ஊறின மட்டைகள்தான் வேறெதை எதிர்பார்க்கமுடியும் இவர்களிடமிருந்து? சிங்களம் எதை எதிர்பார்க்குதோ அதை இம்மியளவும் பிசகாமல் நிறைவேற்றிவிடும் சாமர்த்தியர்கள். தங்களது திட்டத்தை தமிழரசுக்கட்சி ஏற்கெனவே விளக்கி மற்றைய கட்சிகளை தயார் படுத்தியிருந்தால் இந்தளவு சிக்கல் வந்திராது. தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம், குறுகிய காலத்தில் தம்மை தயார்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கம் அவர்களுக்கு, மக்களை குழப்பியடித்து அதை சாதகமாக்கி தமது வெற்றியை நிட்சயப்படுத்தி மற்றைய கட்சிகளை அடக்கியாளும் தந்திரம் தமிழரசுக்கட்சியினுடையது. சில்லறை அரசியல் கட்சிகளை உருவாக்குவதும், மக்களை அவர்கள் பின்னே விரட்டுவதும் இவர்களது அரசியற் திறனின்மையை காட்டுகிறது ஆனால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. தங்களை ராஜதந்திரிகள் என்றும் மற்றவர்கள் முட்டாள்கள் என்றும் தங்கள் தகுதிக்கப்பால் கற்பனை செய்கிறார்கள். 

எங்கே தீர்வு வரும். தேர்தலில் பிரிந்து போட்டியிடுவது நோக்கம் சரி. அதை கையாளும் விதம், பின் விளைவு  அப்பட்டமான  போக்கிரித்தனம். தங்கள் தோல்வியோ வெற்றியோ நிட்சயிக்கப்பட்டபின் தங்கள் ராஜதந்திரத்தை புரிந்துகொள்ளவில்லை என்று குற்றம் வேறு சாட்டுவார்கள். செய்தது, செய்கிறது முழுக்க அயோக்கியத்தனம், சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலின்படி. பிறகு நாங்கள் ராஜதந்திரிகள் அதை புரிந்துகொள்ளவில்லை என்று அறிக்கையும்  விடுவார்கள். இதென்ன இரகசியமாய் செய்யிற வேலையா? மக்களுக்கு விளக்கி அவர்களை தயார்படுத்த வேண்டிய வேலையை ஏதோ வெளிநாட்டு ராஜதந்திரிகளை மூடிய அறைக்குள் சந்திக்கிறமாதிரி செய்தால் குழப்பம் வரத்தானே செய்யும். தாடியரை குழப்புகிறோம் என்று வெளிக்கிட்டு சும்மா இருந்த குட்டையை கலக்கி தாடி இலகுவாக வெற்றி பெற்று சிங்களத்தின் திட்டத்துக்கு மக்களை ஆணையிடும்படி செய்கிறார்கள்.           

  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.