Jump to content

புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!

4RTWLRQ3ANCN7NKXYZUEKQ4IQQ-127-720x375.j

கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்களுடன் புடினின் தொடர்புகளை ஆராயும் பிபிசி ஆவணப்படத்தில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, கிரெம்ளினுடனான அசாதாரண தொலைபேசி அழைப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று புடின் தன்னிடம் கூறியதாக ஜோன்சன் கூறினார்.

முன்னாள் பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, அழைப்பின் போது போர் ஒரு முழு பேரழிவாக இருக்கும் என்று முன்னாள் எச்சரித்ததை அடுத்து புட்டினின் கருத்து வந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுப்பது மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் அதிக நேட்டோ துருப்புக்களுக்கு வழிவகுக்கும் என்று ஜோன்சன் புடினை எச்சரித்தார்.

உக்ரைன், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) எதிர்காலத்திற்கு சேராது என்று புடினிடம் கூறி ரஷ்ய இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் ஜோன்சன் முயன்றார்.

புடின், ‘நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், ஒரு ஏவுகணை மூலம் அதுவும் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்’ என கூறியதாக ஜோன்சன் கூறினார்.

 

 

https://athavannews.com/2023/1322388

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பதிவதற்கு நேரம் இல்லை என்றாலும், இது சொல்லப்படவேண்டியது. 

முதலில், போரிஸ் ஜோன்சன் ஐ ஏவுகணை தாக்குதல் மூலம்  தனிப்பட்ட முறையில் கொல்லப்படும்   எச்சரிக்கை என்றே செய்திகள் வந்தன.

இப்பொது, 1 நிமிட ஏவுகணை பொதுவான  தாக்குதல் என்று செய்திகள் வருகிறது, ருசியா தரப்பு மறுத்து விளக்கம் அளித்த பின்.

அனால், இவை பொதுவாக எந்த ராஜசதந்திர மட்டத்தில் பாவிக்கப்படும் மொழிகள் என்பது இங்கேப பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.


இத்தகைய நிலைமையில், uk  வழமையான அச்சுறுத்தல் நாம் SAS ஐ உங்களுக்கு அனுப்புவோம் என்பது.

அமெரிக்காவின் ராஜதந்திரிகள், உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள், உங்கள் சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்று  ஏனைய தரப்பின் ராஜதந்திரிகளை தனிப்பட்ட அடிப்படையில் அச்சுறுத்துவது தொடக்கி, உங்களின் ஒரு வேளை  உணவை எப்படி பெறுவீர்கள் என்பதில் தொடர்ந்து (ருசியாவுக்கு பொருளாதரத்தை ஒரே இரவில் உருக / குளிர வைக்கும் செயற்பாடு) ,    விமானந்தாங்கி கப்பல் (மிதக்கும் படைத்தளம்), மற்றைய நாடுகளில் அமெரிக்கா செய்தவை போன்றவையும் பாவிக்கப்பட்டு உள்ளது.

 மற்ற நாடுகளிடம் இது போன்ற பலம் இல்லாத வரைக்கும், இத்தகைய ராஜதந்திர மொழிகள் மேற்கிற்கு வசதியாக, உவப்பாக இருந்தது. மற்ற நாடுகள், பலத்தை கொண்டுள்ள போது , அத்தகைய மொழி செந்தணலான  நாரசமாக   காதுக்கும், மனதுக்கும் இருக்கிறது. 

(Huvawei தடையை ஐரோப்பிய நாடுகள் போடுவதற்கு, அமெரிக்கா அதட்டலுடன், நேட்டோ பாதுகாப்பய் பணயம் வைக்கும் பேரம்)  

ஆகவே, இவை ஒன்றும் புதிதல்ல. ஜோன்சன் ஒன்றும் அறியாதவர் போல சொல்வது தான் செய்தியாக உள்ளது.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிஸ் என்ன சொன்னார்?
1.
 He told the makers of Putin vs the West that he did not regard Putin’s comments as a threat.

2. “He sort of threatened me at one point and said, ‘Boris, I don’t want to hurt you, but with a missile, it would only take a minute’, or something like that,” Johnson said.

“I think from the very relaxed tone that he was taking, the sort of air of detachment that he seemed to have, he was just playing along with my attempts to get him to negotiate.”

பதிலாக பெஸ்கோவ் என்ன சொன்னார்?

3. Peskov said: “There were no threats of missiles. It is either a deliberate lie – so you have to ask Mr Johnson why he chose to put it that way – or it was an unconscious lie and he did not in fact understand what Putin was talking to him about.”

Peskov said Putin had explained to Johnson how, if Ukraine joined the Nato alliance, US or Nato missiles placed near Russia’s borders would mean any missile could reach Moscow in minutes, and suggested that there may have been a misunderstanding.

https://amp.theguardian.com/uk-news/2023/jan/30/boris-johnson-says-putin-claimed-he-could-send-missile-to-hit-uk-in-a-minute

பிகு

# lost in translation 

பெஸ்கோவ் சொன்னது போல, புட்டின் சொன்னதை மொழிமாற்றத்தினூடு கேட்ட ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டுள்ளார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஆனால் ஜோன்சன் கூட இதை ஒரு மிரட்டலாக அப்போதும், எப்போதும் கருதவில்லை என்பதை கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 31/1/2023 at 13:18, nunavilan said:

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

பதவியில் இருக்கும் போது வெளிப்படுத்துவது, மற்ற தரப்பை முற்றாக மூடிவிடும் பிரித்தானிய அரசிடம் இருந்து. 

இங்கே, (ஜோன்சன் (அல்லது எந்த மட்டத்தில்  உள்ள எந்த நாட்டின் ராஜதந்திரியோ, அதுவும் ஜோன்ஸனின் மட்டத்தில் உள்ள ராஜதந்திரி - அன்று ஜோன்ஸனின் நிலை பிரித்தானியாவின் எவரும் நிகரில்லாத, அதி உயர் ராஜதந்திரி) பொதுவாக எதிர்கொள்ளப்படலாம்  என்று நடந்த உரையாடலை )  ஏன் வெளிப்படுத்தி இருக்க  வேண்டும், அதுவும் இப்பொது, என்பதே நான் கேட்பது?

குறிப்பாக, ஜோன்சனின்  வெளிப்படுத்தல், செலன்ஸ்கியை சந்தித்த பின் வருவது.

மற்றும், உக்கிரேனிய படைபொறுப்பாளரின், ஓராண்டு முடிவில் , ருசியா நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்பும்.

இவை காரணகாரியமின்றி, எனது சதிக்கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டது என்றால், அப்படியே இருக்கட்டும்.

அனால், ஜோன்ஸனின் முனைப்பு, நேட்டோவை இழுப்பது, இறக்குவததற்கான, பொதுமக்கள் அபிப்பிராயம், அரசியல் அபிப்பிராயம் ... சிந்தனைவாதம் போன்றவற்றுக்கு  முதல் புகை.

இதை ஜோன்சன் தனித்து செய்கிறாரா அல்லது வேர் எவர்களுடனும் சேர்ந்து செய்கிறாரா என்பது தெளிவில்லாதது ஆயினும், தனித்து செய்யும் சாத்திய கூறு மிகவும் குறைவு. 

  • Like 1
Link to comment
Share on other sites

2007 இல் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த Nicolas Sarkozy யை புதின் பரிசில் சந்தித்தார். செய்தியாளர்க்களைச் சந்திப்பதற்கு முன் இருவரும் மூடிய அறையில் என்ன பேசுவதென்று ஆலோசனை செய்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். இருவரும் அறையை விட்டு வரும்போது சார்க்கோசி தடுமாற்றத்தோடு வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஏதோ உளறியுள்ளார். இருவரும் அறையில் இருந்து வொட்கா அருந்தியுள்ளனர் சார்க்கோசிக்குக் கொஞ்சம் வெறு அதிகமாகிவிட்டது என்றே அப்போது பேசப்பட்டது.

சார்கோசி பதவியை விட்டு விலகிய பின்னர்தான் உண்மை வெளிவர ஆரம்பித்தது. இருவரும் அறையில் பேசும்போது சார்க்கோசி பேசவேண்டிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போயுள்ளார். புதின் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக, நீ பேசி முடித்து விட்டாயா ? பிரான்ஸ் ஒரு சிறு துரும்பு. ரஸ்யா மிகப் பெரியது. உன்னை நசுக்கி விடுவேன் என்று கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சார்க்கோசி மிரண்டு விட்டார்.

தன்னைச் சுற்றி உள்ள நாடுகளை நட்புடன் அணைக்கத் தெரியாத இராஜதந்திரம் இல்லாத புதின் தனது சர்வாதிகாரத்துக்காக ரஸ்யாவின் பலத்தைத் துஸ்பிரயோகம் செய்கிறார்.

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 13:18, nunavilan said:

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது சரியான திசையில் இருக்கிறது (அதாவது  நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு), ஜோன்சன் போர்ர்விமான்களை வழங்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்து  உள்ளார். 

ஜோன்ஸோனுக்கு உழைப்பு, பணம் போன்ற வேறு நன்மைகள் இருக்கலாம்; ஆனால்  இதில் குறிப்பான நோக்கம் (அதாவது  நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு) இருக்கிறது என்பது.

UK, இதுவரையில், மறுத்துவிட்டது (மறுத்தாலும் ஜெர்மனி போல அறுதியான மறுத்தல் அல்ல என்பதும்   நோக்கப்பட வேண்டும். அல்லது, எதிர்மறை ராஜதந்திரத்தை UK பவிக்கிறது  என்பதற்க்கும் இடம் இருக்கிறது - அதாவது போர்விமானம் கொடுப்பது தாங்கி கொடுப்பதை விட இலகு - அதை மறுப்பதன் மூலம் UK, உக்கிரைன் அதன் தூரத்தை அறியவேண்டும், அதுபோல UK யும் எவ்வளவுபித்த தூரம்  இறங்கும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் உக்கிரனுக்கு அறிவிக்கிறது என்பது ). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 19:21, இணையவன் said:

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

காகம் கரிச்சட்டியை பார்த்து சிரிச்சுதாம்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 19:40, goshan_che said:

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

மாண்புமிகு புட்டின் ஐயா 😍🙏🏼 சொல்லியிருந்தாலும்  நாட்டுக்கு ஆபத்தான விசயத்தை உடனை சொல்லாமல்  இப்ப கம்பு சுத்தினால் என்ன அர்த்தம்???? :cool:

ஜோஞ்சனுக்கு காசாம் கட்டுரையாம் நேரமில்லையாம்.....இளம் பெட்டையாய் தேடி கலியாணம் கட்ட நேரமிருக்கு..அவங்கள்  ஒரு தரம் கம்பு சுத்தினால் தம்பியர் நூறு தரம் கம்பு சுத்துவாராம்.....:491: :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மாண்புமிகு புட்டின் ஐயா 😍🙏🏼 சொல்லியிருந்தாலும்  நாட்டுக்கு ஆபத்தான விசயத்தை உடனை சொல்லாமல்  இப்ப கம்பு சுத்தினால் என்ன அர்த்தம்???? :cool:

ஜோஞ்சனுக்கு காசாம் கட்டுரையாம் நேரமில்லையாம்.....இளம் பெட்டையாய் தேடி கலியாணம் கட்ட நேரமிருக்கு..அவங்கள்  ஒரு தரம் கம்பு சுத்தினால் தம்பியர் நூறு தரம் கம்பு சுத்துவாராம்.....:491: :face_with_tears_of_joy:

ஜோன்சன் அடிப்படையில் ஒரு வாடகை மேளம்.

யார் காசு கொடுத்தாலும், எங்கே தான் பதவியை அடையலாம் என்றாலும் அங்கே சமா வைப்பார்.

பிரித்தானிய பிரதமராக இருந்த போது - சிலதை அதிகாரிகள் சொல்லவிடாமல் கட்டுபடுத்தி இருப்பார்கள்.

இந்த விடயத்தில் நான் உண்மையில், பெஸ்கோ சொன்னதுடன் ரஸ்யாவுடன் உடன்படுகிறேன்.

எனது பார்வையில்,

புட்டின் இப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. 

பெஸ்கோ சொல்வதை போல் ஒன்றில் புட்டின் சொன்னதை ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டார், அல்லது கவனத்தை ஈர்பதற்க்காக வேணும் எண்டே பொய் சொல்கிறார்.

பொரிசை பொறுத்தவரை இரண்டுக்கும் 50:50 வாய்ப்பு உண்டு.

பிகு

பொரிஸ் தன்னை சர்சிலாக கற்பனை செய்பவர். சேர்சிலை போல தானும் 2ம் இனிங்ஸ் ஆடலாம் என கனவில் மிதப்பவர். 2ம் இனிங்ஸ்சுக்காகன இலகு வழியாக உக்ரேனை எடுத்துள்ளார்.

கிட்டதட்ட உக்ரேனின் தூதர் போலவே அண்மைய 2 நாளில் ஆளின் பேச்சு.

 இடையில் கொஞ்சம் காசும் பார்க்கலாம், நேட்டோ பதவி கிடைத்தால் சந்தோசாம்.

ஆனால் பொரிஸ் போல ஒரு வெறும் பயலை நேட்டோ எடுக்கும் என நான் நினைக்கவில்லை.

பொரிஸ் சொன்னதுக்கு இலகுவில் உணர்சிவசபடும் ஊடகங்கள்தான் (sensationalist media) அதிகம் எதிர்வினை காட்டின. 

ரஸ்யா, அமெரிக்கா, யூகே அரசுகள் பெரிதாக எதிர்வினை காட்டவில்லை.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

On 1/2/2023 at 13:40, goshan_che said:

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

 Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

 Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காரணம், நேட்டோ / மேற்கில் ஒரு பகுதி நேரடியாக இறங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறது,  இந்த நிலைப்பாடு உத்தியோகபூர்வம் இல்லாது இருப்பினும். 
      
தாங்கிகளும் முதலில் தாண்டப்படக்கூடாத செங்கோடு என்றே நேட்டோ சொன்னது; அதை அதுவாகவே பச்சை கோடாக  மாற்றி தாண்டியும் உள்ளது.

இது போலவே, போர்விமானம், மற்றும் நேரடி இறக்கத்தை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

பிரான்ஸ்; uk இன் போர்விமான மறுப்பு நேரடி அறுதியாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இதன் காரணம், நேட்டோ / மேற்கில் ஒரு பகுதி நேரடியாக இறங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறது,  இந்த நிலைப்பாடு உத்தியோகபூர்வம் இல்லாது இருப்பினும். 
      
தாங்கிகளும் முதலில் தாண்டப்படக்கூடாத செங்கோடு என்றே நேட்டோ சொன்னது; அதை அதுவாகவே பச்சை கோடாக  மாற்றி தாண்டியும் உள்ளது.

இது போலவே, போர்விமானம், மற்றும் நேரடி இறக்கத்தை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

பிரான்ஸ்; uk இன் போர்விமான மறுப்பு நேரடி அறுதியாக இல்லை.

இது சிந்திக்க வேண்டிய கோணம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

எங்கடை பேனைக்காரர் இங்கிலாந்திலை பிறந்திருந்தால் அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் அவருக்குத்தான் சொந்தமாகியிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

அவர் வல்லவனுக்கும் வல்லவன் எல்லோ...:grinning_face_with_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

எங்கடை பேனைக்காரர் இங்கிலாந்திலை பிறந்திருந்தால் அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் அவருக்குத்தான் சொந்தமாகியிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

அவர் வல்லவனுக்கும் வல்லவன் எல்லோ...:grinning_face_with_sweat:

உங்களுக்கு விளங்குது எசமான்…

இந்த ஊருக்கு விளங்கலியே…🤣

பேனைகாரார் = கருணாநிதிதானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.

ஜோன்சன் வாங்கிய 750 ஆயிரம் பவுண்ஸ்  எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
பவுண்ஸ் நல்லாக தானே இருக்கு 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜோன்சன் வாங்கிய 750 ஆயிரம் பவுண்ஸ்  எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
பவுண்ஸ் நல்லாக தானே இருக்கு 😄

ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்….

#பிரெக்சிற் அனுகூலங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் மிரட்டினார் பழிச்சார் என்று நேசறிப் பிள்ளைகள் போல சொல்ல வேண்டியதில்லையே. பதிலுக்கு இவரும் புட்டினைப் பார்த்து.. நானும் ஏவுகணை அனுப்புவன் என்று மிரட்டிட்டு போனை வைக்க வேண்டியது தானே.

எல்லாம்.. ஜோன்சனுக்கு கட்டின கோவணமும் கிழிஞ்சு தொங்கும் நிலையில்.. தன்னை முன்னிலைப்படுத்த ஒரு செய்தி தேவை. அதுக்குத்தான் இது இப்ப. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்….

#பிரெக்சிற் அனுகூலங்கள்🤣

வாக்களித்த குடிமக்களின் தவறான முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தனது மத்யத்தஸ்த்தில் உக்ரேன், ரஸ்யா போரை நிறுத்த வெளிக்கிட்டபோதும், மேற்கு அதை தடுத்தது என்கிறார் முன்னைநாள் இஸ்ரேலிய பிரதமர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 13:21, இணையவன் said:

2007 இல் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த Nicolas Sarkozy யை புதின் பரிசில் சந்தித்தார். செய்தியாளர்க்களைச் சந்திப்பதற்கு முன் இருவரும் மூடிய அறையில் என்ன பேசுவதென்று ஆலோசனை செய்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். இருவரும் அறையை விட்டு வரும்போது சார்க்கோசி தடுமாற்றத்தோடு வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஏதோ உளறியுள்ளார். இருவரும் அறையில் இருந்து வொட்கா அருந்தியுள்ளனர் சார்க்கோசிக்குக் கொஞ்சம் வெறு அதிகமாகிவிட்டது என்றே அப்போது பேசப்பட்டது.

சார்கோசி பதவியை விட்டு விலகிய பின்னர்தான் உண்மை வெளிவர ஆரம்பித்தது. இருவரும் அறையில் பேசும்போது சார்க்கோசி பேசவேண்டிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போயுள்ளார். புதின் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக, நீ பேசி முடித்து விட்டாயா ? பிரான்ஸ் ஒரு சிறு துரும்பு. ரஸ்யா மிகப் பெரியது. உன்னை நசுக்கி விடுவேன் என்று கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சார்க்கோசி மிரண்டு விட்டார்.

தன்னைச் சுற்றி உள்ள நாடுகளை நட்புடன் அணைக்கத் தெரியாத இராஜதந்திரம் இல்லாத புதின் தனது சர்வாதிகாரத்துக்காக ரஸ்யாவின் பலத்தைத் துஸ்பிரயோகம் செய்கிறார்.

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

உங்கள் கூற்றுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

 

தனது மத்யத்தஸ்த்தில் உக்ரேன், ரஸ்யா போரை நிறுத்த வெளிக்கிட்டபோதும், மேற்கு அதை தடுத்தது என்கிறார் முன்னைநாள் இஸ்ரேலிய பிரதமர்.

 

குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை அமோகமாக போகும் போது போரை நிறுத்த முன்வர மாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை அமோகமாக போகும் போது போரை நிறுத்த முன்வர மாட்டார்கள்.

ஓம் ஆயுத விற்பனை மட்டும் அல்ல,  எல்லாவகையிலும் லாபம் வருகிறது. அரசியல், பொருளாதார, இராணுவ, கேந்திர, ராஜதந்திர துறைகளிலும் கொள்ளை லாபம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.