Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் வேலையில் ஓய்வெடுத்தவர்கள் மெக்சிக்கோ, ஜமேக்கா போன்ற இடங்களிற்கு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். (சிலர்). வரும் ஓய்வூதிய பணத்தில் இங்கு வாழ்வதை விட அங்கு வாழ போதுமானது என கூறுகிறார்கள். 

  • Replies 122
  • Views 8.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையை பொறுத்தவரை  தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂 ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார். ✅ 1) திருகோணமலையில் நீ

  • நியாயம்
    நியாயம்

    நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும். 

  • என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2023 at 02:14, ரதி said:

நீங்கள் அவுசில் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் ...ஊரில் இருந்து அவுசுக்கு ஹொலிடே வந்த ஒருவர் உங்களிடம் அப்படி செய்யாதே ,இப்படி செய்யாதே என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
விடுமுறைக்கு வந்து இருக்கின்ற இவர் ,இங்கு இருக்க போவதுமில்லை இவர் யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று தான் நினைப்பீர்கள் ...அங்கிருப்பார்களது மனநிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது ,செய்வது சரி .
மருந்துக்கள் ,பொருட்கள் தட்டுப்பாடு , இல்லா விட்டாலும் அங்குள்ளவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்...அவர்களும் மனிதர்கள் தானே 

ஊருக்கு விடுமுறையில் போவதற்கும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது ரதி!!

விடுமுறையில் போகும் பொழுது நாங்கள் தேவையில்லாதவற்றைப் பேசியோ ஒப்பிட்டோ கதைப்பதில்லை. தேவையில்லாமல் அறிவுரை கூறவும் மாட்டோம். இடம், உறவுகளின் தன்மைக்கேற்பவே, அங்கே உள்ளவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்பவே நடப்போம். 

ஆனால் நிரந்தரமாக அங்கே வசிக்க நினைத்தால், காலப்போக்கில் சட்டங்கள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் என பலவற்றை ஒப்பிடத் தொடங்குவோம். நல்ல விடயங்கள் என சிலவற்றை அங்கே நடைமுறைப்படுத்த நினைப்போம். விதிமுறைகள் பிழையாகத் தெரியும். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர் நோக்குவோம். 

மற்றப்படி அங்கே உள்ளவர்களுக்கு பிரச்சனைகளைத் கொடுக்காமல் நான் ஒரு foreign return என்று பந்தா காட்டாமல், காசு இருக்குது அதனால் என்னவும் செய்யலாம் என இல்லாமல் அங்கே உள்ளவர்களைப் போல(பெரும்பாலான) சாதாரன வாழ்க்கையை நடத்த இயலும் என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. 

ஆனால் அங்கே அப்படியில்லலை(விதி விலக்குகளும் இருக்கலாம்). அநாவசியமான ஆடம்பர வீடுகளும், கொண்டாட்டங்களும் இவற்றையெல்லாம் பார்க்கும் இன்னொரு பிரிவினர் அந்த நிலைக்கு தாங்களும் வரவேண்டும் என்பதற்காக, பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கான வழியில் போய் சீரழிகிறார்கள். 

என்னைப்பொறுத்தவரை முன்னரைவிட வர்க்க வேறுபாடுகள் அதிகரித்தே உள்ளது. இது எப்படி உருவானது? 

நான் கண்ட கேட்ட விடயங்களை வைத்து நிறையக் கூறலாம் ஆனால் அங்கே போய் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதுபோல உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகளுக்குள்ளும் இந்த விடயம் வரக்கூடாது. 

ஆகையால்தான் புலம்பெயர்ந்தோர் அங்கே போகும் பொழுது யோசித்து நடக்கவேண்டும் என நினைப்பது. 

நீங்கள் என்னைப் பற்றி தெரியாமல் நீங்களாகவே ஒரு முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். இது தேவையற்ற ஒன்று. 

நன்றி.. 

On 12/2/2023 at 00:39, goshan_che said:

இலங்கை திரும்பி போனவர்கள் யாராவது G7 + Aus+ NZ கடவுச்சீட்டை, அல்லது நிரந்தர வதிவிட உரிமையை விட்டெறிந்து விட்டு போனார்களா?

இல்லவே இல்லை.

உண்மை

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 15:03, ரதி said:

இங்க பாருடா குயின் எலிசபெத் பேரன் இங்கிலீசில எல்லாம் திட்டுறார் ...உங்கட பெரிய படிப்பிக்கும்,பணத்திற்கும் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்கட காசை கொண்டு போய் பிச்சைகார நாட்டில கொண்டு போய் கொட்டுகிறீர்கள் ...போய் அமெரிக்காவில் கொட்டலாமே?...உங்களை தங்க தாம்பாளம் வைச்சு கூப்பிடினம்.
அங்க போய் இருக்க போவதுமில்லை .அங்கிருங்ப்பவர்களுக்காய் ஒரு மண்ணாங்கட்டியும் புடுங்க போவதுமில்லை ..ஆனால் இங்கிருந்து கொண்டு உங்களுக்கு தமிழீழமும் ,சுயாட்சியும்,மண்ணாங்கட்டியும் வேண்டும் 
நீங்கள் அங்கே போய் வீடுகள் ,காணிகள் வாங்கேலை என்று யார் அழுதா?...உங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவதற்காய் அங்கே போய் வீடுகள் ,காணிகள் அறா விலைக்கு வாங்கிப் போட்டு ,அங்கேயிருப்பவர்களை  இவற்றை வாங்க முடியாத நிலைக்கு  தள்ளுவது உங்களை போல ஆட்கள் தான்....சிங்களவன் இனவாதி தான் அதில் எந்த மாற்றுக கருத்துமில்லை ...அவர்கள் ஒரு காலத்தில் திருந்த வாய்ப்புண்டு ...ஆனால் உங்களை மாதிரி பண திமிர் பிடித்த ஆட்களால் தமிழருக்கு அழிவு...உங்களை போன்றவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லை ...நாடு நல்ல கீழ் நிலைக்கு போகோணும் அதை விஸ்கியை குடித்து கொண்டு உங்களை மாதிரி ஆட்கள் ரசிக்கோணும்  
நீங்கள் எழுதினது தான் அதே உங்களுக்கே திரும்பி சொல்கிறேன் ...உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாம்...உங்கள் பணக்கார மேற் தட்டு வர்க்கத்தை வைத்து மற்றவரை எடை போட வேண்டாம்   

ஐ…நான் என்ன எழுதி இருக்கிறன் நீங்கள் என்ன பதில் போட்டிருக்கிறியள்🤣.

நான் காணியை வாங்கி போட்டேன் எண்டு எங்கே எழுதினேன்🤣

ஓணாண்டி என்னிடம் பணம் இல்லை என்கிறார்.

நீங்கள் பணத்திமிர் என்கிறீர்கள்🤣.

என்னை யாரும் தங்க தாம்பாளம் வைத்து அழைக்கவில்லை, எனக்கு மனதுக்கு பிடித்ததாக இருந்ததால் போய் எனக்கு ஏலவே இருந்த இடத்தில், அதன் ஏனைய பங்குதாரர் அதை வித்து தொலைப்போம் என்பதை தடுத்து, ஒரு திட்டத்தை செய்ய முனைந்தேன்.

அப்புறம் நான் ஒரு போதும் தனி நாடு கேட்டவன் அல்ல. யாழில் பலருடன் மோதுபட்டுள்ளேன், எனது பதினமவயதிலேயே தனிநாடு சரிவராது என நான் அறிந்து கொண்டேன் என்பதை எழுதி.

சுயாட்சி இப்போ எனக்கு தேவையில்லை. ஆனால் இலங்கையில் இருக்கும் போது தேவைபட்டது. அந்த மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதால் எனக்கு தேவையில்லை எனிலும் அவர்கள் கோரிக்கையை நான் ஆதரிப்பேன்.

நான் இலவசகல்விக்கு நன்றி கடனுடன் இருக்க தேவையில்லை என்பதை என் நிலைகொண்டு விளக்கியுள்ளேன். அதில் திமிர் ஏதும் இல்லை. 

 

On 11/2/2023 at 15:03, ரதி said:

அதை விஸ்கியை குடித்து கொண்டு உங்களை மாதிரி ஆட்கள் ரசிக்கோணும்  

அடேங்கப்பா பியர், பிராண்டி எல்லாம் இல்லை விஸ்கி எண்டு எப்படி கண்டு பிடிச்சனிங்கள்?

ஊத்தி கொடுப்பவர்களுக்குதான் இந்த விபரம் எல்லாம் நினைவில் இருக்கும். 

எனக்கு கல்யாணம் பல கட்டி வைத்தது போதாது என்று இதை வேறு செய்கிறீர்கள். நன்றி 🤣.

பிகு

சாணாக்கியனை நீங்கள் மத ரீதியில் எதிர்க்க என்ன காரணம் என்பதை இன்னொரு திரியில் புட்டு, புட்டு வைத்ததால் இனிமேல் என்னை மேற்கோள் காட்டி எழுதவேண்டாம் என்று கோபப்பட்டவர் நீங்கள்.

இப்போ அதற்கு அரிவரி பிள்ளையள் மாரி கணக்கு தீர்கிறீர்கள் என்பது எனக்கும் வாசிப்போருக்கும் புரியும்.

ஆனால் இன்னொருவரின் 25 ம் ஆண்டு திரியை நாம் சந்தை போல் ஆக்ககூடாது என்பதால் அமைகிறேன்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஊருக்கு விடுமுறையில் போவதற்கும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது ரதி!!

விடுமுறையில் போகும் பொழுது நாங்கள் தேவையில்லாதவற்றைப் பேசியோ ஒப்பிட்டோ கதைப்பதில்லை. தேவையில்லாமல் அறிவுரை கூறவும் மாட்டோம். இடம், உறவுகளின் தன்மைக்கேற்பவே, அங்கே உள்ளவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்பவே நடப்போம். 

ஆனால் நிரந்தரமாக அங்கே வசிக்க நினைத்தால், காலப்போக்கில் சட்டங்கள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் என பலவற்றை ஒப்பிடத் தொடங்குவோம். நல்ல விடயங்கள் என சிலவற்றை அங்கே நடைமுறைப்படுத்த நினைப்போம். விதிமுறைகள் பிழையாகத் தெரியும். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர் நோக்குவோம். 

மற்றப்படி அங்கே உள்ளவர்களுக்கு பிரச்சனைகளைத் கொடுக்காமல் நான் ஒரு foreign return என்று பந்தா காட்டாமல், காசு இருக்குது அதனால் என்னவும் செய்யலாம் என இல்லாமல் அங்கே உள்ளவர்களைப் போல(பெரும்பாலான) சாதாரன வாழ்க்கையை நடத்த இயலும் என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. 

ஆனால் அங்கே அப்படியில்லலை(விதி விலக்குகளும் இருக்கலாம்). அநாவசியமான ஆடம்பர வீடுகளும், கொண்டாட்டங்களும் இவற்றையெல்லாம் பார்க்கும் இன்னொரு பிரிவினர் அந்த நிலைக்கு தாங்களும் வரவேண்டும் என்பதற்காக, பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கான வழியில் போய் சீரழிகிறார்கள். 

என்னைப்பொறுத்தவரை முன்னரைவிட வர்க்க வேறுபாடுகள் அதிகரித்தே உள்ளது. இது எப்படி உருவானது? 

நான் கண்ட கேட்ட விடயங்களை வைத்து நிறையக் கூறலாம் ஆனால் அங்கே போய் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதுபோல உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகளுக்குள்ளும் இந்த விடயம் வரக்கூடாது. 

ஆகையால்தான் புலம்பெயர்ந்தோர் அங்கே போகும் பொழுது யோசித்து நடக்கவேண்டும் என நினைப்பது. 

நீங்கள் என்னைப் பற்றி தெரியாமல் நீங்களாகவே ஒரு முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். இது தேவையற்ற ஒன்று. 

நன்றி.. 

 

உங்கள் கருத்தில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை ...நான் கண்டது ,கேட்டதை தான் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்  ...அவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் ...அடிபட்டு திருந்த கொஞ்ச காலம் எடுக்கும்...புலம் பேர்ந்தவர்கள்  கண்டபாட்டுக்கு காசு அனுப்பி அவர்களை பழுதாக்கமால் இருந்தால் அவர்கள் சீக்கிரம் திருந்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு..புலம் பேர் பணக்காரர்கள் , அவர்களை சார்ந்து ஊரில் இருப்பவர்களால் தான் இந்த வர்க்க வேறுபாடுகள் உருவாகின. மற்றப்படி  உங்களை ஜஜ் பண்ண வேண்டிய தேவை எனக்கில்லை....நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஐ…நான் என்ன எழுதி இருக்கிறன் நீங்கள் என்ன பதில் போட்டிருக்கிறியள்🤣.

நான் காணியை வாங்கி போட்டேன் எண்டு எங்கே எழுதினேன்🤣

ஓணாண்டி என்னிடம் பணம் இல்லை என்கிறார்.

நீங்கள் பணத்திமிர் என்கிறீர்கள்🤣.

என்னை யாரும் தங்க தாம்பாளம் வைத்து அழைக்கவில்லை, எனக்கு மனதுக்கு பிடித்ததாக இருந்ததால் போய் எனக்கு ஏலவே இருந்த இடத்தில், அதன் ஏனைய பங்குதாரர் அதை வித்து தொலைப்போம் என்பதை தடுத்து, ஒரு திட்டத்தை செய்ய முனைந்தேன்.

அப்புறம் நான் ஒரு போதும் தனி நாடு கேட்டவன் அல்ல. யாழில் பலருடன் மோதுபட்டுள்ளேன், எனது பதினமவயதிலேயே தனிநாடு சரிவராது என நான் அறிந்து கொண்டேன் என்பதை எழுதி.

சுயாட்சி இப்போ எனக்கு தேவையில்லை. ஆனால் இலங்கையில் இருக்கும் போது தேவைபட்டது. அந்த மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதால் எனக்கு தேவையில்லை எனிலும் அவர்கள் கோரிக்கையை நான் ஆதரிப்பேன்.

நான் இலவசகல்விக்கு நன்றி கடனுடன் இருக்க தேவையில்லை என்பதை என் நிலைகொண்டு விளக்கியுள்ளேன். அதில் திமிர் ஏதும் இல்லை. 

 

அடேங்கப்பா பியர், பிராண்டி எல்லாம் இல்லை விஸ்கி எண்டு எப்படி கண்டு பிடிச்சனிங்கள்?

ஊத்தி கொடுப்பவர்களுக்குதான் இந்த விபரம் எல்லாம் நினைவில் இருக்கும். 

எனக்கு கல்யாணம் பல கட்டி வைத்தது போதாது என்று இதை வேறு செய்கிறீர்கள். நன்றி 🤣.

பிகு

சாணாக்கியனை நீங்கள் மத ரீதியில் எதிர்க்க என்ன காரணம் என்பதை இன்னொரு திரியில் புட்டு, புட்டு வைத்ததால் இனிமேல் என்னை மேற்கோள் காட்டி எழுதவேண்டாம் என்று கோபப்பட்டவர் நீங்கள்.

இப்போ அதற்கு அரிவரி பிள்ளையள் மாரி கணக்கு தீர்கிறீர்கள் என்பது எனக்கும் வாசிப்போருக்கும் புரியும்.

ஆனால் இன்னொருவரின் 25 ம் ஆண்டு திரியை நாம் சந்தை போல் ஆக்ககூடாது என்பதால் அமைகிறேன்

கருத்துக்கு பதில் எழுத முடியா விட்டால் ஒதுங்கி இருப்பது உங்களுக்கு மரியாதையை தரும்...அந்தந்த திரிகளில் பதில் கருத்து எழுத முடியாமல் ஓடி விட்டு கள உறவு எழுதிய சுய ஆக்கத்தில் தேவையில்லாமல் சாணக்கியனையும்,,பிள்ளையானையும்  இழுத்து எழுதி இருப்பது கருத்து வறுமையை காட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கருத்துக்கு பதில் எழுத முடியா விட்டால் ஒதுங்கி இருப்பது உங்களுக்கு மரியாதையை தரும்...அந்தந்த திரிகளில் பதில் கருத்து எழுத முடியாமல் ஓடி விட்டு கள உறவு எழுதிய சுய ஆக்கத்தில் தேவையில்லாமல் சாணக்கியனையும்,,பிள்ளையானையும்  இழுத்து எழுதி இருப்பது கருத்து வறுமையை காட்டுது 

நல்லது அக்கா.

இலங்கையில் திரும்பி போய் வாழ்வது பற்றிய சுய ஆக்க திரியோடு ஒட்டி நான் பொதுப்படையாக எழுதிய பதிலுக்கு என்னை தனிப்பட்டு இழுத்து கருத்து எழுதியது யார் என்பது திரியை வாசிப்பவருக்கு புரியும். 

அந்த திரியிலும் உங்களுக்கு தக்க பதில் அளிக்பட்டே இருந்தது. அந்த பதிலின் வெப்பம்தான் இங்கே உங்களை என்னை இழுத்து எழுத வைத்தது என்பதும் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிறியின் ஆக்கத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.மற்றது இங்கு விவாதிக்கப்பட்ட ஊருக்கு போய் வாழ்வது பற்றியது.நான் அறிய பலா; அங்கு வந்து வாழ்கிறார்கள் நான் உட்ப்பட.அதில் வெளி நாட்டு வதிவிடத்தைஅறுதியாக விட்டவர்களும் அடக்கம்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே.பெரும் பணக்காரர்கள் பந்தாவுடன் வாழ்ந்தால் மேலதிக ஆபத்து உண்டுதான்.எந்த வாழ்க்கை முறை பிடிக்கும் என்னறதைப் பொறுத்துத் தான் எங்கு வாழ்வது என்பது அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது.. 

குளிருக்கு ஏற்றவாறு எமது பொன்னுடல் இசைவாக்கம் பெற்று விட்டது.இனி நுளம்பு குத்தினாலும் பூவுடல் தாங்காது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது.. 

நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குளிருக்கு ஏற்றவாறு எமது பொன்னுடல் இசைவாக்கம் பெற்று விட்டது.இனி நுளம்பு குத்தினாலும் பூவுடல் தாங்காது. :cool:

கவனம் இல்லாமல் வெளியில் நின்றால் நுளம்பு உடம்பில் டிசைன் போட்டுவிடும்.  பிறகு கடிபட்ட இடத்தை சொறிவது ஒரு தனி சுகம். 

இப்போது நல்ல நுளம்புவலைகள் உள்ளன. நிம்மதியாக தூங்கலாம். பயம் வேண்டாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கடிபட்ட இடத்தை சொறிவது ஒரு தனி சுகம். 

சொறியிறது சொகம் எண்டால்....:cool:

கனடாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :grinning_face:
அமெரிக்காவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :grinning_face_with_big_eyes:
பெரிய பிரித்தானியாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :grinning_face_with_smiling_eyes:
பிரான்ஸ்லை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :beaming_face_with_smiling_eyes:
ஜேர்மனியிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :grinning_face_with_sweat:
டென்மார்க்கிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...?  :rolling_on_the_floor_laughing:
நோர்வேயிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :face_with_tears_of_joy:
அவுஸ்ரேலியாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? :smiling_face_with_smiling_eyes:

ஏன்....கியூபாவிலை நிண்டு சொறிஞ்சால்த்தான் என்ன? :nerd_face:

எல்லாம் ஒண்டு தானே? :face_with_medical_mask:

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 01:09, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது.. 

இது சரியாக புரியவில்லை .......
ஒத்துவராத காரணத்தினால்தானே மொழி இனம் தெரியாத நாடுகளுக்கு கூட ஓடி வேண்டி வந்தது 
இப்போதும் கூட ஆயிரக்கணக்கான சிங்களவர்களே வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் 

குடிசையில் பிறந்து வளர்ந்தால் ?
குடிசையிலேயே வாழ்ந்து இறக்கவும் வேண்டுமா? 

ஒரு மனிதன் முன்னேறவே கூடாது என்கிறீர்களா?
அல்லது எங்கு எப்படி பிறந்தார்களோ அங்கே அப்படியே வாழ வேண்டும் என்கிறீர்களா?

உண்மையில் சரியாக புரியவில்லை! 

உங்களிடம் இருக்கும் எண்ணத்தை கொஞ்சம் விளக்கமாக தருவீர்களா? 

எந்த நிலையிலும் சிங்களபேரினவாதம் ஆட்ச்சி  வைத்திருக்கும் நாடு 
பெரும்பன்மை தமிழர்களுக்கு ஒதட்டுவந்ததே இல்லையே ?

உயிரை கூட விடுவோம் 
மண்டியிட்டு வாழோம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருந்துகூட இருக்கிறார்களே ?

On 10/2/2023 at 20:02, பாலபத்ர ஓணாண்டி said:

 

  
 

இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்..  ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..

காசு இருந்தாலும் சமையல்  எரி  வாயுவுக்கு  நீண்ட வரிசையில்இ பெற்றோலுக்கு நீண்ட வரிசையில்இ 
உங்கள் கையில கேஷ் இருக்கு ஆனால் பிள்ளைக்கு வருத்தம் வரும் போது மருந்து எங்கு தேடியும் கிடைக்கவில்லை அப்போது உங்களுக்கு வரும் பாருங்கள் ஒரு விரக்தி  அது எல்லாம் அனுபவித்தால்  மட்டுமே புரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 01:15, goshan_che said:

நல்லது அக்கா.

இலங்கையில் திரும்பி போய் வாழ்வது பற்றிய சுய ஆக்க திரியோடு ஒட்டி நான் பொதுப்படையாக எழுதிய பதிலுக்கு என்னை தனிப்பட்டு இழுத்து கருத்து எழுதியது யார் என்பது திரியை வாசிப்பவருக்கு புரியும். 

அந்த திரியிலும் உங்களுக்கு தக்க பதில் அளிக்பட்டே இருந்தது. அந்த பதிலின் வெப்பம்தான் இங்கே உங்களை என்னை இழுத்து எழுத வைத்தது என்பதும் புரிகிறது.

இந்த திரியில் நீங்கள் எழுதிய கருத்தில் பிழை இருந்ததால் அதை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை எனக்கிருக்கிறது....நீங்கள் எழுதிய எல்லா கருத்தையும் ஆமோதிக்க நான் உங்கள் வால் இல்லை ...அதான் இரண்டு ,மூன்று பேர் இருக்கினமே நீங்கள் என்ன எழுதினாலும் பின்னால் வெட்கமே இல்லாமல்  வால்பிடித்து  கொண்டு இருப்பினமே அவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் எழுதுவது எல்லாம் சரியாய் இருக்கும் ...உங்களை போன்றவர்களுக்கு ஆமா சாமி போடுவர்களைத் தானை பிடிக்கும் 

அந்த திரியில் எனக்கு பதில் கொடுத்தீர்களா?...சுட்ட  தோசையையே திருப்பி ,திருப்பி நீங்கள் சுட்டதையா சொல்கிறீர்கள் ...உங்களுக்கு உலக அரசியல் தெரிந்தளவிற்கு உள்ளூர் அரசியல் தெரியவில்லை ...நன்றி . வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 22:40, Maruthankerny said:

இது சரியாக புரியவில்லை .......
ஒத்துவராத காரணத்தினால்தானே மொழி இனம் தெரியாத நாடுகளுக்கு கூட ஓடி வேண்டி வந்தது 
இப்போதும் கூட ஆயிரக்கணக்கான சிங்களவர்களே வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் 

குடிசையில் பிறந்து வளர்ந்தால் ?
குடிசையிலேயே வாழ்ந்து இறக்கவும் வேண்டுமா? 

ஒரு மனிதன் முன்னேறவே கூடாது என்கிறீர்களா?
அல்லது எங்கு எப்படி பிறந்தார்களோ அங்கே அப்படியே வாழ வேண்டும் என்கிறீர்களா?

உண்மையில் சரியாக புரியவில்லை! 

உங்களிடம் இருக்கும் எண்ணத்தை கொஞ்சம் விளக்கமாக தருவீர்களா? 

எந்த நிலையிலும் சிங்களபேரினவாதம் ஆட்ச்சி  வைத்திருக்கும் நாடு 
பெரும்பன்மை தமிழர்களுக்கு ஒதட்டுவந்ததே இல்லையே ?

உயிரை கூட விடுவோம் 
மண்டியிட்டு வாழோம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருந்துகூட இருக்கிறார்களே ?

நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் ...அமெரிக்காவில் இருந்து எத்தனையோ பேர் பல வித காரணங்களுக்காய் வேறு நாடுகளில் போய் குடியிருக்கிறார்கள் ...அதற்காய் அமெரிக்கா வாழ தகுதியில்லாத நாடு என்றாகிவிடுமா?..எல்லோரும் தங்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப வாழ்க்கையை தெரிவு செய்கிறார்கள்...அது பிழையில்லை ...ஆனால் அதற்கு பிறகு தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் மாறி எழுதுகிறார்கள் பாருங்கோ அதைத் தான் நான் உட்பட பலர் பிழை என்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த திரியில் நீங்கள் எழுதிய கருத்தில் பிழை இருந்ததால் அதை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை எனக்கிருக்கிறது....நீங்கள் எழுதிய எல்லா கருத்தையும் ஆமோதிக்க நான் உங்கள் வால் இல்லை ...அதான் இரண்டு ,மூன்று பேர் இருக்கினமே நீங்கள் என்ன எழுதினாலும் பின்னால் வெட்கமே இல்லாமல்  வால்பிடித்து  கொண்டு இருப்பினமே அவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் எழுதுவது எல்லாம் சரியாய் இருக்கும் ...உங்களை போன்றவர்களுக்கு ஆமா சாமி போடுவர்களைத் தானை பிடிக்கும் 

அந்த திரியில் எனக்கு பதில் கொடுத்தீர்களா?...சுட்ட  தோசையையே திருப்பி ,திருப்பி நீங்கள் சுட்டதையா சொல்கிறீர்கள் ...உங்களுக்கு உலக அரசியல் தெரிந்தளவிற்கு உள்ளூர் அரசியல் தெரியவில்லை ...நன்றி . வணக்கம் 

நல்லது அக்கா. சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 07:09, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது.. 

நாங்கள் இலங்கையில் வாழவே முடியாது. 

உயிராபத்து.

இனவாத ஒடுக்கல்.

ஆமியும் கொடுமை.

புலியும் ஆள்பிடிக்குது.

என்று வெளிநாட்டில் வந்து கையை தூக்குவம்.

பிறகு ஒரு இருபது வருசம் வெளிநாட்டில் தும்படிச்சு காசை சேர்தபின், இரெட்டை குடியுரிமை யும் எடுத்து கொண்டு, 

அதே இனவாதம் கொஞ்சமும் மாறாத இலங்கையில் போய் நிண்டு…

இதுவல்லவோ பூலோக சொர்க்கம் என்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாங்கள் இலங்கையில் வாழவே முடியாது. 

உயிராபத்து.

இனவாத ஒடுக்கல்.

ஆமியும் கொடுமை.

புலியும் ஆள்பிடிக்குது.

என்று வெளிநாட்டில் வந்து கையை தூக்குவம்.

பிறகு ஒரு இருபது வருசம் வெளிநாட்டில் தும்படிச்சு காசை சேர்தபின், இரெட்டை குடியுரிமை யும் எடுத்து கொண்டு, 

அதே இனவாதம் கொஞ்சமும் மாறாத இலங்கையில் போய் நிண்டு…

இதுவல்லவோ பூலோக சொர்க்கம் என்போம்.

நீங்கள் same side goal போடுகிறீர்கள்.

இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள்.

காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது.

இது தான் வேறுபாடு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

நீங்கள் same side goal போடுகிறீர்கள்.

இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள்.

காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது.

இது தான் வேறுபாடு

இரெண்டுமே பிரச்சனைதான் மீரா.

1.  நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும்.  இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை.  இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது.

போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார்.  இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். 

இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது.

இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள்.

நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம்.

இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான்.

2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர்.

இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும்.  

முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣.

அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣?

நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும்.

நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣.

வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள்.

அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது.

ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். 

ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான கருத்து. கோசான் நிறைய பேர் இப்பொழுது நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். படிக்கவோ, வேலை வாய்ப்புக்னெவோ. பணம் உள்ளவர்களும் வசதியாக சொத்துக்களுடன் வாழ்பவர்களும் நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். பலர் நல்ல தகவல்களுடன் யூ ரிப் வீடியோக்களை வெளியிடுகின்றார்கள். இங்கிலந்தில் இப்பொழுது வேலை அனுமதி இலகுவாக நிறைய கிடைக்கின்றது, சாதரண கடை வைதிருப்பவர்கள் கூட தங்களுக்கு விருபமானவர்களை எடுக்கலாம் என இந்த வீடியோவில் கூறுகின்றார்கள். 
என்னுடைய நண்பர்கள் 4 அல்லது 5 பேர் வ்ரை இந்த‌ 2  வருடங்ளில் (50 வயதில்) கனடா சென்றவர்கள்.
திழர்கள் இந்த நாட்டை விட்டு போவதே நல்லது. 

On 12/2/2023 at 21:14, nunavilan said:

அமெரிக்காவில் வேலையில் ஓய்வெடுத்தவர்கள் மெக்சிக்கோ, ஜமேக்கா போன்ற இடங்களிற்கு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். (சிலர்). வரும் ஓய்வூதிய பணத்தில் இங்கு வாழ்வதை விட அங்கு வாழ போதுமானது என கூறுகிறார்கள். 

ஆம் மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக இலகுவாக குடியுரிமயும்  எடுக்கலாம். இலங்கை போலாவே இந்த நாடுகளின் கால நிலையும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இரெண்டுமே பிரச்சனைதான் மீரா.

1.  நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும்.  இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை.  இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது.

போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார்.  இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். 

இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது.

இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள்.

நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம்.

இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான்.

2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர்.

இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும்.  

முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣.

அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣?

நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும்.

நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣.

வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள்.

அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது.

ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். 

ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.

👏👏👏👏

பத்தரமுல்ல வில் மட்டுந்தான் “வெளிநாட்டுக் கடவுச்சீட்டிற்கு”ஓரளவுக்கு மனிதாபிமானம் காட்டுவார்கள். அங்கும் வெள்ளை வந்தால் அவர்களுக்கே முன்னுரிமை சலுகைகள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

நிதர்சனமான கருத்து. கோசான் நிறைய பேர் இப்பொழுது நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். படிக்கவோ, வேலை வாய்ப்புக்னெவோ. பணம் உள்ளவர்களும் வசதியாக சொத்துக்களுடன் வாழ்பவர்களும் நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். பலர் நல்ல தகவல்களுடன் யூ ரிப் வீடியோக்களை வெளியிடுகின்றார்கள். இங்கிலந்தில் இப்பொழுது வேலை அனுமதி இலகுவாக நிறைய கிடைக்கின்றது, சாதரண கடை வைதிருப்பவர்கள் கூட தங்களுக்கு விருபமானவர்களை எடுக்கலாம் என இந்த வீடியோவில் கூறுகின்றார்கள். 
என்னுடைய நண்பர்கள் 4 அல்லது 5 பேர் வ்ரை இந்த‌ 2  வருடங்ளில் (50 வயதில்) கனடா சென்றவர்கள்.
திழர்கள் இந்த நாட்டை விட்டு போவதே நல்லது. 

ஆம் மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக இலகுவாக குடியுரிமயும்  எடுக்கலாம். இலங்கை போலாவே இந்த நாடுகளின் கால நிலையும் இருக்கின்றது.

நன்றி கொழும்பான். இப்ப சுகங்கள் எப்படி?

25 minutes ago, MEERA said:

👏👏👏👏

பத்தரமுல்ல வில் மட்டுந்தான் “வெளிநாட்டுக் கடவுச்சீட்டிற்கு”ஓரளவுக்கு மனிதாபிமானம் காட்டுவார்கள். அங்கும் வெள்ளை வந்தால் அவர்களுக்கே முன்னுரிமை சலுகைகள்.

🤣 சில சமயம் இவனெல்லாம் இந்த பெயருடன் இந்த பாஸ்போர்ட்டில் இருக்கிறானே என்ற கடுப்பையும் காண முடியும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இரெண்டுமே பிரச்சனைதான் மீரா.

1.  நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும்.  இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை.  இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது.

போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார்.  இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். 

இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது.

இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள்.

நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம்.

இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான்.

2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர்.

இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும்.  

முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣.

அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣?

நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும்.

நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣.

வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள்.

அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது.

ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். 

ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.

 

நாங்க அதிலும் விண்ணர்கள்

அதனால் தான் 

புலத்தின்  கடவுச்சீட்டையும்  அத்துடன்  மிகமிக முக்கியமாக  மெடிக்கல்  காட்டையும் எறிவதில்லை

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.