Jump to content

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

13 Feb, 2023 | 12:02 PM

image

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் தக்க சூழலில் பொதுமக்கள் முன் தோன்றுவார் என்றும் தமிழின உணர்வாளரும், உலக தமிழர் பேரமைப்பு  தலைவருமான பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

''விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன் தோன்றுவார்.

அதற்கான சூழல் விரைவில் கனியும் என எதிர்பார்க்கிறோம். விடுதலைப்புலி புலிகள் தலைவர் பிரபாகர் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது.

மேலும் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிக்க இயலாது. பிரபாகரனின் மனைவி மற்றும் மகளும் நலமாக உள்ளனர். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இதனை தற்போது அறிவிக்கிறோம்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இதுவரை அவரைப் பற்றி மக்களிடமிருந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்.'' என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பதால் இலங்கை அரசியலிலும், சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

https://www.virakesari.lk/article/148080

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்

நிழலி

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான்.  நெடுமாறன் எட

ரதி

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by கிருபன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா தமிழ்நாட்டில எல்லோரும் செல்போனோட சுத்தினம்.. கிச்சகத்தில் முதலிடத்திற்கு வரவேணாமா 😢

IMG-20230213-144606.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கெட்ட பிழைப்பு ...அவர் மேல் இருந்த கொஞ்ச,நஞ்ச மரியாதையும் இல்லாமல் செய்கிறார் 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

கேடு கெட்ட பிழைப்பு ...அவர் மேல் இருந்த கொஞ்ச,நஞ்ச மரியாதையும் இல்லாமல் செய்கிறார் 

அதே போல் தான் அக்கா
இவ‌ர் இந்த‌ புர‌ளிய‌ கில‌ப்ப‌ என்ன‌ கார‌ண‌ம்
இவ‌ரும் விலை போய் விட்டாரா 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ

குள‌த்தூர் ம‌ணி.............இவ‌ர்க‌ள் இட‌த்தில் இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன்

 

ப‌ச்சை ஜ‌ரோக்கிய‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்..............இவ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்வு வைத்து இருப்ப‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்து.........................

2 minutes ago, nunavilan said:

இந்தியாவின் சுயமுகம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

இவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கையும் போய் விட்ட‌து
எம்ம‌வ‌ர்க‌ள் ந‌ம்பின‌ ஆட்க‌ள் எல்லாம் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்த‌து தான் உண்மை வ‌ர‌லாறு

வைக்கோ திருமாள‌வ‌ன் குள‌த்தூர் ம‌னி இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன்

இப்ப‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் இராணுவ‌த்தை வெளி ஏற்றி காணிக‌ல‌ ம‌க்க‌ளிட‌ம் ஒப்ப‌டைச்சு ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாடின‌ம்.............இவ‌ரின் இந்த‌ அறிக்கையால் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து எங்க‌ட‌ ம‌க்க‌ள் தான்...............

இனி ஒரு ஆயுத‌ போராட்ட‌ம் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம்
அறிவாயுத‌ம் மூல‌ம் நாடு அடைவ‌து தான் சிற‌ப்பு
அத‌ற்க்கு எல்லாரும் ஒற்றுமையா செய‌ல் ப‌ட‌னும்................. ❤️🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக வெளியான கருத்தினை இலங்கை இராணுவம் முற்றாக மறுப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்போது, பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில், கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவம், இந்த கூற்றை முற்றாக மறுப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக" இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், "2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மரபணு ஆதாரங்களும் எம்வசம் உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2023/02/i_32.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

 

இனி ஒரு ஆயுத‌ போராட்ட‌ம் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம்
அறிவாயுத‌ம் மூல‌ம் நாடு அடைவ‌து தான் சிற‌ப்பு
அத‌ற்க்கு எல்லாரும் ஒற்றுமையா செய‌ல் ப‌ட‌னும்................. ❤️🙏

இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??

இனி ஆயுத‌ போராட்ட‌ம் தொட‌ங்க‌ப் ப‌ட்டால் யாழ்பாண‌த்தில் இருந்து கொழும்புவ‌ர‌ ர‌த்த‌ ஆறு ஓடும்

 த‌ர‌ ப‌டை , க‌ட‌ல் ப‌டை , வான் ப‌டை , ஆட்ல‌றி , சால்ஸ் அன்ர‌னி சிற‌ப்பு ப‌டை இப்ப‌டி இருந்தும் , எல்லாம் எம் க‌ண் முன்னே அழிக்க‌ப் ப‌ட்ட‌து

த‌லைவ‌ர் இருக்கிறார் என்று மீண்டும் புர‌ளிய‌ கில‌ப்பி காசை கொள்ளை அடிக்க‌ ந‌ல்ல‌ திட்ட‌ம் ந‌ட‌க்குது


த‌லைவ‌ரின் ஆன்மா கூட‌ இவ‌ர்க‌ளை ம‌ன்னிக்காது


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இனி ஆயுத‌ போராட்ட‌ம் தொட‌ங்க‌ப் ப‌ட்டால் யாழ்பாண‌த்தில் இருந்து கொழும்புவ‌ர‌ ர‌த்த‌ ஆறு ஓடும்

 த‌ர‌ ப‌டை , க‌ட‌ல் ப‌டை , வான் ப‌டை , ஆட்ல‌றி , சால்ஸ் அன்ர‌னி சிற‌ப்பு ப‌டை இப்ப‌டி இருந்தும் , எல்லாம் எம் க‌ண் முன்னே அழிக்க‌ப் ப‌ட்ட‌து

த‌லைவ‌ர் இருக்கிறார் என்று மீண்டும் புர‌ளிய‌ கில‌ப்பி காசை கொள்ளை அடிக்க‌ ந‌ல்ல‌ திட்ட‌ம் ந‌ட‌க்குது


த‌லைவ‌ரின் ஆன்மா கூட‌ இவ‌ர்க‌ளை ம‌ன்னிக்காது

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

பொது வாக்கெடுப்பு தான் த‌மிழீழ‌த்துக்கு இனி தீர்வு
அத‌ நோக்கி ப‌ய‌ணிப்ப‌து சிற‌ப்பு

 

த‌லைவ‌ர் வேண்டாம் என்று யாரும் சொல்ல‌ வில்லை
என் அள‌வுக்கு த‌லைவ‌ரை நினைத்து க‌ண் க‌ல‌ங்கின‌வை யாரும் இருக்க‌ மாட்டின‌ம்
நானும் த‌லைவ‌ர் பிற‌ந்த‌ கார்த்திகை மாத‌ம் 26இல் தான் பிற‌ந்தேன்

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்றால் காணொளிய‌ வெளியிட‌ வேண்டிய‌து தானே , ஏன் ப‌ல‌ க‌ட்டுக் க‌தைக‌ள்.............இந்தியாவில் த‌லைவ‌ர் ம‌ற்றும் பொட்டு அம்மான் தேட‌ப் ப‌டும் லிஸ்ரில் இருக்கின‌ம்.............அப்ப‌டி வ‌சிக்கும் நாட்டில் இருந்து கொண்டு ப‌ழ‌ நெடுமாற‌ன் அறிக்கை விடுவ‌து த‌மிழ‌ர்க‌ளை முட்டாள் ஆக்க‌வா அண்ணா 

ப‌ழ‌நெடுமாற‌ன் வ‌சிக்கும் நாட்டில் முத‌ல் புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்....................இந்த‌ அறிக்கையை சாட்டி புலிக‌ள் மீதான‌ த‌டையை ம‌த்திய‌ அர‌சு நீடிக்கும்

மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ப‌ழ‌ நெடுமாற‌ன‌ சும்மா விடாது
உத‌வி செய்யாட்டியும்  உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம்...........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்கள் அனைத்தும் இப்போது நடுவண் அரசில் இருக்கும் அமித் சா அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது தவிர இலங்கையில் வீரகேசரியும் அப்படியே காரணம் அதன் உரிமையாளர் ஒரு இந்தியராவார். உளவுத்துறையோ அல்லது உள்துறயோ நடப்பு அரசுக்குச் சார்பான எந்தச்செய்திகளையும் வெளியிடவேண்டுமெனில் உருட்டி மிரட்டிச் சாதிக்கலாம் ஆனால் மிச்சம் இருந்தது என் டி ரி டீவி தான் அதனையில் அவர்கள் அம்பானியிடம் வாங்கிய கடனை அதானி அடைத்துவிட்டு மிரட்டி அதனை அதானி தனதாக்கிக்கொண்டார் அதாவது இந்திய பா ஜ க அரசை விமர்சிக்கும் ஒரே ஒரு செய்தி நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டார் அமித் சா.

சரி விடையத்துக்கு வருகிறேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கூட்டம் காசி ஆனந்தரால் ஒழுங்குசெய்யப்பட்டதாகக் கூறினாலும் அதை ஒழுங்கு செய்தது மேற்குமாடம் அதாவது வெளியுறவுத்துறையும் ராவுமாகும். 

இதில் கலந்துகொண்டவர்களில் காசியுடன் நெடுமாறனும் ஆகும் இன்னும் பலர் கலந்துகொண்டாலும் இவர்கள் அதில் முக்கியமானவர்கள் அதில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பேசும்போது தனக்குமட்டும் காலத்தினூடே பயணம் செய்யும் வசதியிருந்தால் 2009 ல் பாஜகாவை பதவியில் இருக்கப்பண்ணியிருப்பேன் படுகொளையைத் தவிர்த்திருப்பேன் என ஆத்து ஆத்து என ஆத்தினவர். இக்கூட்டத்தின் பின் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என விமர்சித்தவர்களும் உண்டு

இப்போ பதின்மூன்றை நிறைவேற்றுகிறன் பேர்வளி என இந்தியா அடம்பிடிக்குது விவலும் வீரதுங்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கினம் இவர்களுக்குப் பின்னால் மகிந்த நிற்கிறார் 

தலைவரை அவிட்டு விடப்போறம் எனச்சொன்னால் கொஞ்சம் பின்வாங்குவினம் என நினைத்து இப்படி கதை விடுகினம் தவிர தமிழ் நாட்டில் பாஜக கால் ஊன்ற வேண்டும் ஈரோட்டில் மாற்றம் ஏற்படவேண்டும்  இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தினமும் ஏதாவது செய்யவேண்டியிருக்கு 

தலைவரது டீ என் ஏ அறிக்கை இருக்கு எனக்கூறுகிறார்கள் பாலச்சந்திரனது டீ என் ஏயை வைத்துக்கொண்டும் இவர்கள் சொல்லலாம் சரி டி என் ஏயை எவரது டீ என் ஏ மாதிரியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது? வேலுப்பிள்ளையரதுடனா சிலவேளை வேலுப்பிள்ளையரது டீ என் ஏயையே தலைவரது எனக்கூறினால் யார் கண்டது 

ஆனால் எங்கேயோ உதைக்குது யார் யாருக்காக இதைக் கொழுத்திப்போட்டது எனத் தெரியவில்லை ஆனால் இந்திய உளவுத்துறை மீண்டும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப்பாக்குது.

அண்மையில் சுவிசில் தலவரது மனைவிக்குச் சுகமில்லை வேற இடத்துக்கு மாத்தவேண்டும் சிகிச்சை செய்ய காசு தேவை என மில்லியன் கணக்கில சேர்த்ததாக அறிந்தேன் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன் .

பல்லாயிரக்கணக்கான பெடி பெட்டையளை போராட்டத்தில சாக விட்டுட்டு பதவிசா வெளிநாட்டுக்கு   உல்லாசம் அனுபவிக்க ஓடி வந்துவிட்டார் எனும் கதையை விட்டு பிரபாகர பிம்பத்தை உடைக்க செய்யப்படும் சதி எனவும் கூறுகிறார்கள்

அண்மையில் மாவீரர்கள் பெயருக்கு முன்னால் வரும் வீரவேங்கையை அப்புறப்படுத்துங்கோ எனவும் கனக்கபேர் வெளிக்கிட்டவையள் 

விடுதலைப்புலிகளதும் அவர்களது தலைமை மீதும் சேறு பூசவேண்டும் அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் என இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டு நிற்குது. பதுன்மூன்று கூழ்முட்டையுடன். 

22 minutes ago, விசுகு said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

ஓம் ஓம் எங்களுக்கு அறிவாயுதம்பற்றிய தெளிவு இருந்திடபோகுது

அதுதானே கடியே காறித்துப்பிப்போட்டுது 

தமிழ் தாலைமைகளிடம் ஒற்றுமை இல்லை என அதாவது வாசுதேவ நாணயக்காரா.

போதைப்பொருளை விழுங்கிவிட்டு பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில மயங்கி விழுந்துகிடக்கிற நாளைய சந்ததிகளை உருவாக்கும் ........ போலீஸ் அதிகாரம் கேட்டுக்கொண்டே வடமராட்சியில் பதிண்ம வயதுச் சிறுமியை இரண்டு வருடமாகப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் போலீஸ்காரன் வாழும் சூழலில் அறிவாயுதமும் உயிராயுதமும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

பொது வாக்கெடுப்பு தான் த‌மிழீழ‌த்துக்கு இனி தீர்வு
அத‌ நோக்கி ப‌ய‌ணிப்ப‌து சிற‌ப்பு

 

த‌லைவ‌ர் வேண்டாம் என்று யாரும் சொல்ல‌ வில்லை
என் அள‌வுக்கு த‌லைவ‌ரை நினைத்து க‌ண் க‌ல‌ங்கின‌வை யாரும் இருக்க‌ மாட்டின‌ம்
நானும் த‌லைவ‌ர் பிற‌ந்த‌ கார்த்திகை மாத‌ம் 26இல் தான் பிற‌ந்தேன்

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்றால் காணொளிய‌ வெளியிட‌ வேண்டிய‌து தானே , ஏன் ப‌ல‌ க‌ட்டுக் க‌தைக‌ள்.............இந்தியாவில் த‌லைவ‌ர் ம‌ற்றும் பொட்டு அம்மான் தேட‌ப் ப‌டும் லிஸ்ரில் இருக்கின‌ம்.............அப்ப‌டி வ‌சிக்கும் நாட்டில் இருந்து கொண்டு ப‌ழ‌ நெடுமாற‌ன் அறிக்கை விடுவ‌து த‌மிழ‌ர்க‌ளை முட்டாள் ஆக்க‌வா அண்ணா 

ப‌ழ‌நெடுமாற‌ன் வ‌சிக்கும் நாட்டில் முத‌ல் புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்....................இந்த‌ அறிக்கையை சாட்டி புலிக‌ள் மீதான‌ த‌டையை ம‌த்திய‌ அர‌சு நீடிக்கும்

மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ப‌ழ‌ நெடுமாற‌ன‌ சும்மா விடாது
உத‌வி செய்யாட்டியும்  உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம்...........

 

எனது கேள்விக்கான பதில் இது அல்ல. நன்றி 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Elugnajiru said:

இந்திய ஊடகங்கள் அனைத்தும் இப்போது நடுவண் அரசில் இருக்கும் அமித் சா அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது தவிர இலங்கையில் வீரகேசரியும் அப்படியே காரணம் அதன் உரிமையாளர் ஒரு இந்தியராவார். உளவுத்துறையோ அல்லது உள்துறயோ நடப்பு அரசுக்குச் சார்பான எந்தச்செய்திகளையும் வெளியிடவேண்டுமெனில் உருட்டி மிரட்டிச் சாதிக்கலாம் ஆனால் மிச்சம் இருந்தது என் டி ரி டீவி தான் அதனையில் அவர்கள் அம்பானியிடம் வாங்கிய கடனை அதானி அடைத்துவிட்டு மிரட்டி அதனை அதானி தனதாக்கிக்கொண்டார் அதாவது இந்திய பா ஜ க அரசை விமர்சிக்கும் ஒரே ஒரு செய்தி நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டார் அமித் சா.

சரி விடையத்துக்கு வருகிறேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கூட்டம் காசி ஆனந்தரால் ஒழுங்குசெய்யப்பட்டதாகக் கூறினாலும் அதை ஒழுங்கு செய்தது மேற்குமாடம் அதாவது வெளியுறவுத்துறையும் ராவுமாகும். 

இதில் கலந்துகொண்டவர்களில் காசியுடன் நெடுமாறனும் ஆகும் இன்னும் பலர் கலந்துகொண்டாலும் இவர்கள் அதில் முக்கியமானவர்கள் அதில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பேசும்போது தனக்குமட்டும் காலத்தினூடே பயணம் செய்யும் வசதியிருந்தால் 2009 ல் பாஜகாவை பதவியில் இருக்கப்பண்ணியிருப்பேன் படுகொளையைத் தவிர்த்திருப்பேன் என ஆத்து ஆத்து என ஆத்தினவர். இக்கூட்டத்தின் பின் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என விமர்சித்தவர்களும் உண்டு

இப்போ பதின்மூன்றை நிறைவேற்றுகிறன் பேர்வளி என இந்தியா அடம்பிடிக்குது விவலும் வீரதுங்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கினம் இவர்களுக்குப் பின்னால் மகிந்த நிற்கிறார் 

தலைவரை அவிட்டு விடப்போறம் எனச்சொன்னால் கொஞ்சம் பின்வாங்குவினம் என நினைத்து இப்படி கதை விடுகினம் தவிர தமிழ் நாட்டில் பாஜக கால் ஊன்ற வேண்டும் ஈரோட்டில் மாற்றம் ஏற்படவேண்டும்  இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தினமும் ஏதாவது செய்யவேண்டியிருக்கு 

தலைவரது டீ என் ஏ அறிக்கை இருக்கு எனக்கூறுகிறார்கள் பாலச்சந்திரனது டீ என் ஏயை வைத்துக்கொண்டும் இவர்கள் சொல்லலாம் சரி டி என் ஏயை எவரது டீ என் ஏ மாதிரியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது? வேலுப்பிள்ளையரதுடனா சிலவேளை வேலுப்பிள்ளையரது டீ என் ஏயையே தலைவரது எனக்கூறினால் யார் கண்டது 

ஆனால் எங்கேயோ உதைக்குது யார் யாருக்காக இதைக் கொழுத்திப்போட்டது எனத் தெரியவில்லை ஆனால் இந்திய உளவுத்துறை மீண்டும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப்பாக்குது.

அண்மையில் சுவிசில் தலவரது மனைவிக்குச் சுகமில்லை வேற இடத்துக்கு மாத்தவேண்டும் சிகிச்சை செய்ய காசு தேவை என மில்லியன் கணக்கில சேர்த்ததாக அறிந்தேன் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன் .

பல்லாயிரக்கணக்கான பெடி பெட்டையளை போராட்டத்தில சாக விட்டுட்டு பதவிசா வெளிநாட்டுக்கு   உல்லாசம் அனுபவிக்க ஓடி வந்துவிட்டார் எனும் கதையை விட்டு பிரபாகர பிம்பத்தை உடைக்க செய்யப்படும் சதி எனவும் கூறுகிறார்கள்

அண்மையில் மாவீரர்கள் பெயருக்கு முன்னால் வரும் வீரவேங்கையை அப்புறப்படுத்துங்கோ எனவும் கனக்கபேர் வெளிக்கிட்டவையள் 

விடுதலைப்புலிகளதும் அவர்களது தலைமை மீதும் சேறு பூசவேண்டும் அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் என இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டு நிற்குது. பதுன்மூன்று கூழ்முட்டையுடன். 

இதில் ப‌ல‌ உண்மைக‌ள் அட‌ங்கி இருக்கு

2009தில் அடிச்ச‌து ப‌த்தாது என்று புது க‌தை திரை வ‌ச‌ன‌த்துட‌ன் ஆர‌ம்பிச்சு இருக்கின‌ம்..............த‌லைவ‌ரும் த‌லைவ‌ரின் ம‌னைவி ம‌க‌ள் மூன்று பேரும் ஜ‌ரோப்பாவில் இருக்கின‌மாம்..............ம‌ருத்து சில‌வுக்கு காசு தேவையாம்..............இந்த‌ துரோக‌ செய‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் தூர‌ நோக்கு பார்வையுட‌ன் பார்த்தா யார் என்று புரியும்

 

 

க‌ட‌சி மக‌னை த‌ள‌ப‌திக‌ளை விட்டு விட்டு த‌லைவ‌ர் ம‌னைவியோடும் ம‌க‌ளோடும் த‌ம்பிச்சாராம்

 

யார் யாருக்கோ எல்லாம் த‌லேல‌ இடி விழுது மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவை கேவ‌ல‌ப் ப‌டுத்தி குளிர் காயும் த‌றுத‌லைக‌ளின் த‌லையில் இடி விழுதில்லை

 

விப‌ர‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ளிட‌ம் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது

 

 

ப‌ழ‌ நெடுமாறனும் இன்றில் இருந்து துரோகி என்று அழைக்க‌ப் ப‌டுவார்.................😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார்.

இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம்.

அடுத்தது, இந்திய ரோ....

எது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

உங்க‌ளுக்கான‌ கேள்விக்கு விள‌க்க‌ம் வ‌டிவாய் த‌ந்து விட்டேன்

ச‌ரி அதே கேள்விய‌ உங்க‌ளிட‌ம்  கேட்க்கிறேன் த‌லைவ‌ர் வ‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சாதிக்க‌ முடியாத‌தை இனி எதை சாதிப்பார்

குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் கேள்வி கேட்க்காதைங்கோ....................உங்க‌ளுக்கே தெரியும் 2009 மே 18 அந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌லைவ‌ர் இற‌ந்து விட்டார் என்று................

த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்ன‌ முடிவு எடுக்க‌ கூடிய‌வ‌ர் என்று த‌லைவ‌ரின் போராட்ட‌ கால‌ செய‌ல்க‌ள் வெளிச்ச‌ம் போட்டு காட்டும்


இந்திய‌ன் ஆமிக்கு எதிரா கொரிலா தாக்குத‌ல் செய்த‌ மாதிரி ஏதாவ‌து ஒன்றில் இற‌ங்கி இருப்பார்

நாம் செய்ய‌ வேண்டிய‌து ஒன்றே ஒன்று தான் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் செலுத்தி அவ‌ரின் தியாக‌த்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ப‌து...............அது தான் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு நாம் செய்யும் ந‌ன்றிக் க‌ட‌ன் 

14 minutes ago, Nathamuni said:

இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார்.

இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம்.

அடுத்தது, இந்திய ரோ....

எது?

அண்ண‌ன் சீமான் இந்த‌ வ‌லைக்குள் விழாம‌ தெளிவாய் இருக்கிறார்........................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இது குறித்து சீமானிடம் கேட்ட போது, கடந்த மாவீரர் நாளுக்கு முன்னர், லண்டனில் இருந்து ஒருவர், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்குமாறு கோரியதாகவும், தான், 'அப்படியா, அண்ணாவே என்னிடம் சொல்லட்டும், சொல்கிறேன்' என்று சொன்னதாக கூறினார்.

இரண்டு குரூப் இந்த விடயத்தில் நன்மை அடைய முயல்கின்றன. ஜேசு வருகிறார் என்பது போல தலைவர் வருகிறார். போராட்ட நிதி தாருங்கோ என்று கேட்க கூடிய ஒரு கூட்டம்.

அடுத்தது, இந்திய ரோ....

எது?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

 

1) ச‌ரி அதே கேள்விய‌ உங்க‌ளிட‌ம்  கேட்க்கிறேன் த‌லைவ‌ர் வ‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சாதிக்க‌ முடியாத‌தை இனி எதை சாதிப்பார்

2)குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் கேள்வி கேட்க்காதைங்கோ...................

1) அதைத்தான் கேட்டேன் 

(இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??)

நேரடியாக பதில் சொல்லுங்கள்

2) எனக்கு மரியாதை என்பது உயிர். நன்றி. வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

1) அதைத்தான் கேட்டேன் 

(இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??)

நேரடியாக பதில் சொல்லுங்கள்

2) எனக்கு மரியாதை என்பது உயிர். நன்றி. வணக்கம் 

யதார்தத்தினை பார்த்தால், அவர் இருந்து மீண்டும் வந்தாலும், முன்னர் போல இயங்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

1) அதைத்தான் கேட்டேன் 

(இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??)

நேரடியாக பதில் சொல்லுங்கள்

2) எனக்கு மரியாதை என்பது உயிர். நன்றி. வணக்கம் 

க‌ள‌ நில‌வ‌ர‌த்தை ப‌ற்றி க‌தையுங்கோ நான் எங்கு சொன்னேன் த‌லைவ‌ர் வேண்டாம் என்று

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கு என்று ஏன் அந்த‌ ம‌னுஷ‌னை கேவ‌ல‌ப் ப‌டுத்துர‌ கூட்ட‌த்தோடு நீங்க‌ளும் சேர்ந்து நின்று த‌லைவ‌ர் வேனுமா வேண்டாமா என்று கேட்ட‌தையே தொட‌ர்ந்து கேட்க்க‌ பையித்திய‌ம் பிடிக்குது

இப்ப‌டியான‌ கேலி கூத்துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தை விட‌ அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு த‌மிழீழ‌த்தை அடைந்து அதை த‌லைவ‌ருக்கு ச‌மர்பியுங்கோ............இனி த‌ய‌வு செய்து என்ன‌ட்டை த‌லைவ‌ர் வேனுமா வேண்டாம‌ என்று கேட்க்க‌ வேண்டாம்


த‌லைவ‌ரின் புக‌ழை திய‌காத்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ல‌ முய‌லுங்கோ

ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

க‌ள‌ நில‌வ‌ர‌த்தை ப‌ற்றி க‌தையுங்கோ நான் எங்கு சொன்னேன் த‌லைவ‌ர் வேண்டாம் என்று

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கு என்று ஏன் அந்த‌ ம‌னுஷ‌னை கேவ‌ல‌ப் ப‌டுத்துர‌ கூட்ட‌த்தோடு நீங்க‌ளும் சேர்ந்து நின்று த‌லைவ‌ர் வேனுமா வேண்டாமா என்று கேட்ட‌தையே தொட‌ர்ந்து கேட்க்க‌ பையித்திய‌ம் பிடிக்குது

இப்ப‌டியான‌ கேலி கூத்துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தை விட‌ அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு த‌மிழீழ‌த்தை அடைந்து அதை த‌லைவ‌ருக்கு ச‌மர்பியுங்கோ............இனி த‌ய‌வு செய்து என்ன‌ட்டை த‌லைவ‌ர் வேனுமா வேண்டாம‌ என்று கேட்க்க‌ வேண்டாம்


த‌லைவ‌ரின் புக‌ழை திய‌காத்தை அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு எடுத்து சொல்ல‌ முய‌லுங்கோ

ந‌ன்றி 

என்னைப்பற்றிய மிகத் தவறான புரிதலும் இங்கே என்னால் எழுதப்பட்ட விடயங்களை மிகத் தவறான வாசித்தலும் வகுப்பெடுப்பும். 

நன்றி வணக்கம் 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான். 

நெடுமாறன் எடுப்பார் கைப்பிள்ளை. அறளை வரும் வயதில் தானறியாமலேயே இந்த சதித்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருப்பார்.

RAW & RW இணைந்து நடாத்தும் சதி 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

யதார்தத்தினை பார்த்தால், அவர் இருந்து மீண்டும் வந்தாலும், முன்னர் போல இயங்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது கருத்து.

2009க்கு முத‌ல் ஒரு க‌ருணா ஒரு ட‌க்ள‌ஸ் தான் இருந்தாங்க‌ள்
இப்போது ப‌ல‌ க‌ருணாக்க‌ள் ப‌ல‌ ட‌க்ள‌ஸ்சுக‌ள்

என்ன‌ தான் பிலான்  போட்டு க‌ள‌த்தில் குதிச்சாலும் அழிவு எம‌க்கு தான்..............

அப்ப‌டி த‌மிழீழ‌ம் வேண்டி க‌ள‌த்தில் குதிச்சாலும் ஏதும் வல்ல‌ர‌சு நாட்டின் உத‌வியுட‌ன் தான் குதிக்க‌ முடியும்.............க‌ள‌த்தில் குதிக்க‌ முத‌ல் துரோகிய‌லை போட்டுத் த‌ள்ள‌னும்..................


ஆனால் என் ப‌தில் இனி த‌மிழீழ‌த்துக்கு அறிவாயுத‌ம் தான் சரி.................பொது வாக்கெடுப்பு ஏதும் வ‌ல்ல‌ர‌சு நாட்டின் துனையுட‌ன் ந‌ட‌ந்து த‌மிழீழ‌ம் அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி.................

15 minutes ago, நிழலி said:

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான். 

நெடுமாறன் எடுப்பார் கைப்பிள்ளை. அறளை வரும் வயதில் தானறியாமலேயே இந்த சதித்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருப்பார்.

RAW & RW இணைந்து நடாத்தும் சதி 

உங்க‌ளுக்கு இருக்கும் புரித‌ல் ப‌ல‌ கூ முட்டைக‌ளுக்கு இல்லை

யூடுப்பை எட்டியும் பார்க்க‌ முடிய‌ல‌................அவ‌ர்க‌ளின் எழுத்து மூல‌ம் அவ‌ர்க‌ளின் அறியாமையை தெரிந்து கொள்ள‌க் கூடிய‌தாய் இருக்கு.............. 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான். 

நெடுமாறன் எடுப்பார் கைப்பிள்ளை. அறளை வரும் வயதில் தானறியாமலேயே இந்த சதித்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருப்பார்.

RAW & RW இணைந்து நடாத்தும் சதி 

வணக்கம் நிழலி 
இந்த அறிக்கை; அதன் பின்னணி, நோக்கம் என்ன? RAW அல்லது இதர கட்டமைப்புகள் இப்படியான செய்திகளை பரப்பி எதை சாதிக்க நினைக்கிறார்கள்? இதை இன்னும் தெளிவாக எழுதுவீர்கள் என்றால் சிறப்பு.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁). இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது. கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது  தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம், இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில்  வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds). இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார். கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள். இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁). ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁). இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும். 2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு  மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁), 
    • வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா? - செல்வராசா கஜேந்திரன் ! By Shana     வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, எமது தமிழின தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன .ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான்,ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கான நீதியினைக்கோரும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரம் அனுஷ்டிப்பதும் அந்த இனப்படுகொலை,2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்சவும் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை .அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு உணவு,கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ''தன்சல் ''உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள் என்றார்.   https://www.battinews.com/2024/05/blog-post_160.html
    • முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு (புதியவன்) முல்லைத்தீவு, முத்தையன் கட்டில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொலி எடுத்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார்.  நேற்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டுக்கு சென்று, அவரின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டில்  நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர். சிறிது தூரம் சென்று மீண்டும் உந்துருளியில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை காணொலி எடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து காணொலி எடுத்துள்ளனர். இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார். உந்துருளியை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர். மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, உந்துருளியை செலுத்தி வந்தவர் எழுந்து உந்துருளியுடன் ஓடிவிட்டார். பின்னாலிருந்து காணொலி எடுத்தவரை மாணவிகள் பிடித்ததுடன், இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர். அவரது கையடக்க தொலைபேசியில் காணப்பட்ட மாணவிகள் குளித்த காணொலிகள் அனைத்தும்  அழிக்கப்பட்டதுடன்  இளைஞனின் மேலாடைகள் களையப்பட்டு, நையப்புடைக்கப்பட்டார். மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். (ஏ) https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_மாணவிகள்_குளிப்பதை_வீடியோ_எடுத்த_நபர்_நையப்புடைப்பு!!  
    • முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: அம்பிகா சற்குணநாதனின் அறிக்கை! தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர். எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.   http://www.samakalam.com/முள்ளிவாய்க்கால்-கஞ்சி-வ/    
    • யாழ்ப்பாணம்  சென்ற  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் adminMay 14, 2024 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ  பயணமாக யாழ் மாவட்டத்திற்கு   சென்றுள்ளார்.  இந்த பயணத்தின் போது யாழ் மாவட்ட பதில் செயலர்  மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.   https://globaltamilnews.net/2024/202846/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.