Jump to content

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெ3டுக்கரின் கருத்துடன் உடன்படுகிறேன்.தலைவர் உயிரோடு இருக்கிக்றார் என்றால் அது தமிழர்களுக்கு மகிழ்ச்சியழக் கூடிய செய்திதான். ஆனால் இந்தச் அறிவிப்பு வெளிவந்த சூழ்நிலை நேரம் உள்நோக்கம் கொண்டது. சில அரசியல் தேவைகளுக்காக இந்திய உளவுத்துறையால் செய்யப்பட்டிருக்கிறது எனச்சந்தேகிப்பதற்கு 99 வீதமான சாத்தியம் இருக்கிறது.தலைவர் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசால் காண்பிக்கப்பட்ட உடலை யாரும் நம்ப வில்லை. ஆனால் போர் முடிந்து விஜட்டது என்பதை அறிவிக்க சிறலங்கா அரசுக்கு அப்படி உடலைக்காண்பிக்க வேண்டிய தேவை இருப்பதை மறுக்க முடியாது. அடுத்து இந்திய இராணுவத்துடனான போரில் தனக்கு ஏதாவது நடந்தால்  தனது உடலை பெற்றோல் ஊற்றிக் கொளுத்தும்படி தலைவர்கட்டளையிட்டதாகவும் அப்போதைய தலைவரின் மெய்க்காப்பாளரான தமிழ்செல்வன'; பெற்நறால்கானுடன் திரிந்ததாகவும் செய்திகள் இருக்கின்றன். அப்படிப்பட்ட தலைவர் போரின் இறுதிக்கணங்களில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது உடல' சிறலங்காவின் இராணுவத்துக்கு  கிடைக்க விட்டீக்க மாட்டார். அதே வேளை பல ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்களும்தான் மட்டும் உயிர் தப்ப வேண்டும் நினக்கின்ற மனிதரும் அல்ல. ஆனால் ஒரு சாத்தியக் கூறும் இருக்கிறது. போராட்டததை ஏதாவது ஒரு வழியிலேனும் தக்க வைக்கவும் தமழ்மக்களள்  தமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கவும் தலைவர் உயிருடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என தலைவரின் மெயக்காப்பாளர்களும் புலிகளின் உளவுத்துறையும் முடிவெடுத்திருந்தால் மயக்கம் வரவழைக்கக் கூடிய வாயுவைப் பிரயோகித்து தலைவரின் அனுமதியில்லாமலே அவரைக்காப்பாற்றியிருக்கலாம் என்கபதையும் மறுக்க முடியாது..மிக்குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அண்ணாமலையின் இலங்கைப் பயணமும் ஆதுலுவும் இடைத்தேர்தல் நேரத்தில் அதைத் தொடந்த அண்ணமலைய முள்ளிவாய்கால் முற்றத்திற்கு சென்றது; நெடுமாறன் ஐயாவின் அறிவிபு;பும் அவர் அறிவித்தால்தான் தமிழர்கள் நம்புவார்கள் என்ற கோணத்தில் நடந்திருக்கிறது. இந்திய உளவுத்துறையின் சதிக்கு நெடுமாறன் ஐயா தெரிந்தோ தெரியாமலோ பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கடுமையான அழுத்தங்கள் கூட மேலிடத்திலிருந்து வந்திருக்கலாம்.ஆனால் இந்த அறிவிப்பு இப்போது வந்திருப்பது தமிழ்களுக்கு ஆமலும் சங்கடத்தையே கொடுக்கும். தலைவர் தானாக வெளிப்பட்டு அறிககை விட்டால் ஒழிய இதை யாரும் நம்ப முடியாது. இப்பவே தலைவரை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கnhண்டு சென்ற சீமானை இதை வைத்து கிண்டலடிக்கின்றன திமுகவின் ஊடகங்கள். இது தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்வதை தடுக்கும் ஒரு முயற்சியாவும் இருக்கலாம். அதேவேளை இந்தியாவின் உப்புச்சப்பற்ற 13 ஐ எதிர்க்கும் சிங்களவர்களை அச்சுறுத்தி தனது நல்களை அடைந்து கொள்ளும் இந்திய உளவுத்துறையின் முயற்சியாகவே கருதவேண்டி உள்ளது. 
எது எபபடியோ தலை இருந்தால் பொட்டு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்

நிழலி

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான்.  நெடுமாறன் எட

ரதி

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரி

12 hours ago, பையன்26 said:

வைக்கோ

குள‌த்தூர் ம‌ணி.............இவ‌ர்க‌ள் இட‌த்தில் இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன்

 

 

வைக்கோ திருமாள‌வ‌ன் குள‌த்தூர் ம‌னி இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன்

 

2009 மே 18 இற்கு பிறகு தலைவர் இறந்து விட்டார் என்று சொன்னவர்களை அப்பொழுது துரோகி என்றார்கள்.  தலைவர் வருவார் என்றார்கள்.  இப்பொழுது தலைவர் இருக்கிறார் என்று சொன்னதால் துரோகி என்று நீங்கள் சொல்கிறீர்கள்?  . 


"பிரபாகரன் உயிரோடிருப்பதாக என்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை!" - வைகோ  சொல்கிறார். நெடுமாறன் அவர்கள் தலைவர் இருக்கிறார் என்று சொல்கிறார்.  ஆனால் வைக்கோ,குள‌த்தூர் ம‌ணி.............இவ‌ர்க‌ள் இட‌த்தில் இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  

இதைத்தான் சிங்களம் விரும்பியது.  

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

 

வைகோ குளிர் காய்வார் என்று சொல்கிறார்.  வைகோ செய்த குற்றமென்ன?  திமுகவுடன் கூட்டணி வைத்ததா? அப்படியானால் மண்டையன் குழுவினை உருவாக்கிய சுரேஸ் பிரேமச்சந்திரனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, sivakumaran said:

2009 மே 18 இற்கு பிறகு தலைவர் இறந்து விட்டார் என்று சொன்னவர்களை அப்பொழுது துரோகி என்றார்கள்.  தலைவர் வருவார் என்றார்கள்.  இப்பொழுது தலைவர் இருக்கிறார் என்று சொன்னதால் துரோகி என்று நீங்கள் சொல்கிறீர்கள்?  . 


"பிரபாகரன் உயிரோடிருப்பதாக என்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை!" - வைகோ  சொல்கிறார். நெடுமாறன் அவர்கள் தலைவர் இருக்கிறார் என்று சொல்கிறார்.  ஆனால் வைக்கோ,குள‌த்தூர் ம‌ணி.............இவ‌ர்க‌ள் இட‌த்தில் இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  

இதைத்தான் சிங்களம் விரும்பியது.  

நான் என்ர‌ ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதுப‌வ‌ன்
இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்குறார் என்று சொல்ப‌வ‌ர்களை என்ன‌ என்று சொல்ல‌

நான் மேல‌ எழுதின‌ ஆட்க‌ளில் ப‌ழ‌நெடுமாற‌ன் அவ‌ர் மேல் இருந்த‌ நம்பிக்கையும் போய் விட்ட‌து

த‌லைவ‌ர் த‌ப்ப‌ வ‌ழி இருந்து இருந்தா ஏன் க‌ட‌ல் ப‌டை த‌ள‌ப‌தி சூசை அண்ணாவால‌ த‌ப்பிக்க‌ முடிய‌ வில்லை

க‌ருணாவுட‌ன் என‌க்கு ப‌ல‌ முர‌ன் இருக்கு ஒரு வ‌ரியில் சொல்ல‌ போனால் அவ‌ன் ம‌கா துரோகி

பின்னைய‌ கால‌ங்க‌ளில் ப‌ல‌ உண்மைக‌ளை வெளிப்ப‌டையா பேசின‌வ‌ன்

த‌லைவ‌ர் சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ம‌க‌னை விட்டுட்டு த‌ப்பி ஓடும் கோழை கிடையாது

ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா பொல்லை கொடுத்து அடி வாங்கின‌ மாதிரி தெரியுது...............

மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு நான் ஒரு போதும் விளையாடின‌து கிடையாது
அதே போல் தான் த‌லைவ‌ரின் ம‌றைவை கொச்சை ப‌டுத்தும் ம‌னித‌ர்க‌ளை முற்றிலுமா வெறுக்கிறேன் 

14ஆண்டுக‌ள் ஆக‌ போகுது இதுவ‌ரை த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கும் காணொளியோ ஆடியோவோ வெளியில் வ‌ர‌ வில்லை சும்மா ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ அல்ல‌து வேறு ப‌ல‌ அர‌சிய‌ல் காய் ந‌க‌ர்த்த‌லுக்கு இப்ப‌டியான‌ அறிக்கைக‌ள் விட‌ப் ப‌டுதோ ஒன்னு யோசிக்க‌ தோனுது

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ் கூட‌ இருப்ப‌வ‌ர்க‌ளை தான் துரோகியென‌ அழைக்கிறேன் அதில் உங்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லை என்றால் அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட விருப்ப‌ம்

  • Like 2
Link to comment
Share on other sites

18 minutes ago, பையன்26 said:

 

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ் கூட‌ இருப்ப‌வ‌ர்க‌ளை தான் துரோகியென‌ அழைக்கிறேன் அதில் உங்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லை என்றால் அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட விருப்ப‌ம்

2009 பிறகுநடந்த தேர்தலில் மகிந்தாவும் பொன்சேக்காவும் போட்டியிட்டபோது யாழில் பொன்சேவ்க்காவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. மகிந்தாவும் பொன்சேக்காவும்  எம்மை அழித்தவர்கள்.   அப்படியானால் யாழ் மக்கள் துரோகிகளா?   மகிந்தாவை விட பொன்சேகா பரவாயில்லை என நினைத்திருக்கலாம்.  (நான் இருவருக்கும் வாக்களித்திருக்க மாட்டேன்)

வை கோ முதலில் இலங்கைத் தமிழர்களுக்காக கட்சி நடத்தவில்லை.  தனித்துநின்று போட்டியிட்டு படு தோல்விகளை சந்தித்தவர். தமிழகத்தில் கிந்தி மொழி திணிக்கப்படுகிறது. அவரது பார்வையில் மோடி வந்தால் ஆபத்து என்றுநினைக்கலாம்.  (நான் ஈழத்தமிழன் , எனது இனத்தினை அழித்த காங்கிரஸ் தோற்க்கும் போது மகிழ்வேன். )   

ஊரில் இருந்து போரிடாமல் வெளினாடு சென்று இணையத்தில் கருத்து எமுதும் நாங்களும் துரோகிகள்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள்,

 குழம்ப வேண்டாம்..

 அண்ணை  தோன்றப் போவது உறுதி.

வேண்டியது ஆகக்கூடியது  15,000 டொலர் மட்டுமே!!

 சைனாக்காரனிடம் கொடுத்தாலே கொண்டு வந்து காட்டுவான்.

 இதுக்கு ஏனய்யா இவ்வளவு சவுண்டு……

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிருக்கும் நிலையில் ஆதாயம் தேடி குழப்பாமல், மக்களை நிம்மதியாக  அரசியல்வாதிகள்  வாழ விட்டாலே பெரிய உதவி.  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இறந்த பொழுது அவர் சாகவில்லை தப்பி விட்டார் என்ற செய்தியை பரப்பி விட்டதில் இந்திய ரோவின் பங்கு அதிகம். அப்படி அவர்கள் செய்ததில் சில கணக்குகள் இருந்தன

1 ) ஒன்று ஈழத்தமிழர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்திக்க விடாமல் நாட்களைக் கடத்துவது, அப்படியே போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது.. இதில் பூரண வெற்றி கிடைத்து விட்டது இந்தியாவுக்கு

2) அடுத்தது பிரபாகரனைக் காட்டி இலங்கையின் சிங்களவரின் ஆதிக்கத்தை இயலுமானவரை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது

 

3) தமிழ் நாட்டில் உள்ள,புலத்தில் உள்ள பிரபாகரனின் விசுவாசிகளை  அடையாளம் கண்டு அவர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது

 

4) பிரபாகரன் ஒரு கோழை என சித்தரித்து  நூறு வருடங்கள் கழித்து வரும் தமிழ் தலைமுறையை சிந்தனை ரீதியில் சிதைப்பது

 

5) சிங்களவரும் கொடுக்கத் தயங்கும் அதே நேரம் தமிழர்களும் விரும்பாத ஒரு தீர்வை தமிழர்கள் மேல் திணிக்கச் செய்வது

 

மேல எல்லோரும் சொன்னது போல யானை வாழ்ந்தாலும் பொன் வீழ்ந்தாலும் பொன். 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

 

பிரபாகரன் இருக்கிறார்  என்றவுடன்

இலங்கைக்கோ இந்தியாவுக்கோ  ஏன்  சர்வதேசத்துக்கோ 

அவர்  வந்தால்  போர்  வரும்  என்ற எண்ணம்  வரலாம்

ஆனால்  எமது  மக்களுக்கே  அதுவும்  அவரை நேசிக்கும் பிள்ளைகளுக்கே அவ்வாறான ஒரு  எண்ணம்  வரலாமா?

அவர்  மீண்டும்  வந்தால்  ரத்த ஆறு  தான்  ஓடும்  என்பதும்

வலுவாக  இருந்தபோதே சாதிக்கமுடியாததை  இனியா சாதிப்போறார்  என்பதும் 

இனி  அவர்  உயிருடன்  இருந்தாலும் வரவேண்டாம்  என்பதைக்குறிக்கிறதா?

என்பதே  எனது கேள்வி?

அவர் உயிருடன் இருந்தால் சந்தோசமே. ஆனால் அவரை கூட்டிவந்து தமிழீழ பகுதியை இன்னொரு உக்கிரேனாகவோ அல்லது சிரியாவாகவோ மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. அங்குள்ள மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

ஒரு பிரபாகரன் போனால்.. ஆயிரம் பிரபாகரன்கள் உருவாவார்கள் என்று முழங்கின இனத்தில் இருந்து இன்று வரை இன்னொரு பிரபாகரனை அடையாளம் காணவே முடியவில்லை.. ஏன் பிரபாகரன் தன் மக்களுக்காக சுமந்த இலச்சியத்தைக் கூட சுமக்க ஒருவரும் இதய சுத்தியோடு இல்லை. இதுதான் தமிழர்களின் நிலை.

ஆனால்.. இலங்கையில் பிரபாகரன் உருவாக முன்னிருந்த அதே அரசியல் இராணுவச் சூழல் தான் இப்பவும் இருக்கிறது. அது தமிழீழ மண்ணிலும் நிலவுகிறது. அடிமைத்தனமும்.. ஆக்கிரமிப்பும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க அரசியல்.. மத வெறி தான் நாட்டை ஆளுகிறது. அடிமைத்தனமும் ஆக்கிரமிப்புத் திமிரும் தலைவிரித்தாடுகிறது.

இந்தச் சூழலில்.. பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பைக் கூட சகிக்க முடியவில்லை.. தமிழினத் துரோகிகளாலும்.. தமிழினப்படுகொலையாளர்களாலும். 

செத்துப் போன 13ம் தூக்கி வைச்சுக் காவடியாடும் ஹிந்தியாவும்.. ரணிலும்.. அதற்கு எதிர்ப்புக்காட்டுவதாகப் பாசாங்கு செய்யும்.. சிங்கள பெளத்த பேரினவாதமும் ஆடும் ஆட்டத்துக்கு ஒரு வேளை.. இந்த அறிவிப்பு.. ஒரு சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் என்ற தோறணையில் கூட இது அறிவிக்கப்பட்டிருக்கக் கூடும்.

நிச்சயமாக.. ஏதோ ஒரு அரசியல் தேவைக்காவே தான் இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டுள்ளது. இது ஹிந்திய உளவுத்துறை சார்ந்து அதன் இரட்டை நோக்கிற்காகக் கூட வெளிவந்திருக்கலாம். 

ஆனாலும்.. எம்மவர்களில் கூட  பலரும்.. பிரபாகரன் என்றால்.. போர் என்று நினைக்கிற அளவுக்கு எம்மவர்களின் மனநிலை இருப்பது மிகக் கேவலம். பிரபாகரன் போரை செய்யவில்லை. தமிழ் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதத்தால்.. திணிக்கப்பட்ட இனக்கலவரங்களும் படுகொலைகளும் இன ஒடுக்குமுறைகளும் கண்டு அதற்கு எதிராக செயற்பட்டது தான் பிரபாகரன். மாறாக அதைச் செய்தவர்களுக்கு வால்பிடிச்சு அமைச்சர் பதவியோ.. அரச பதவியோ வகித்து இனத்தை காட்டிகொடுக்கவோ.. அழிக்கவோ இல்லை.

இன்று 13 ஐ சாட்டி.. சிங்கள பெளத்த பேரினவாதம் ஒரு இனக் கலவரத்துக்கு தூபமிடும் வகையில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கும் சமயத்தில்.. இந்த அறிவிப்பு வந்திருப்பது.. நிச்சயம் சில பிராந்திய அரசியலுக்காக தேவைகளுக்காக இருக்கலாம். உண்மையாக இருந்தால் கூட சொந்த இனத்துக்காக இதய சுத்தியோடு போராடிய தலைவர் நீடுழி வாழ வாழ்த்தவே வேண்டும். அதற்காக தலைவர் போர் படை பீரங்கியோடு வருவதாக ஏன் கற்பனை செய்கிறீர்கள்...??!

சிறைக்குச் சென்ற பயங்கரவாதி நெல்சன் மண்டேலா... சிறையில் இருந்து வந்த போது.. உலகம் மெச்சும் சனநாயகவாதியாகவே வெளியே வந்தார். ஆனால்.. தனது இலச்சியத்தை கைவிடவில்லை. காப்பாற்றி அதனை சாத்தியப்படுத்தினார். 

ஆனால்.. தலைவரை நேசிக்கிறோம் என்ற போர்வையில்.. அவரின் இருப்புப் பற்றிய அறிவிப்பை.. போர் வரவாகக் காட்டி கதறுபவர்களை நினைக்கையில்.. எப்படியான ஒரு சனக்கூட்டத்துக்காகவா இவ்வளவு ஈகங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியே எழுகிறது. அதேவேளை தமிழின அடக்குமுறைக்கு உந்தப்பட்ட ஒவ்வொரு சிங்களப் படைவீரனையும் சிங்களவர்கள் இப்பவும் போர்.. இழப்பு.. இவற்றுக்கு அப்பால் நேசிப்பதை காண்கையில்.. தமிழர்கள் சிங்களவனின் உச்சாவை தான் குடிக்கனும். இன மான ரோசம் வருவதற்கு. 

அதே....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மரணம்: இதற்கு முன் எத்தனை சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டுள்ளது?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். இவரது கூற்றை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. ஆனால், பிரபாகரனின் மரணம் மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மே 18-19ஆம் தேதிகளில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த உடனேயும் அதற்குப் பிறகும் பல தருணங்களில் அவர் மரணமடையவில்லை என்று கூறி வந்துள்ளனர்.

1. பிரபாகரன் கொல்லப்பட்ட சில நாட்களில் அதாவது 2009ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி பேசிய பழ. நெடுமாறன், அந்தச் செய்தியைக் கடுமையாக மறுத்தார். "பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஏற்கெனவே மூன்று முறை இலங்கை ராணுவம் பொய்ச் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான "ரா' இருக்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. அவரது மண்ணில் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார்," என்று கூறினார் நெடுமாறன்.

2. இதற்கு அடுத்த நாள், அதாவது 2009 மே 22ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன், "பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக - நலமாக இருக்கிறார்" என்று அறிக்கை வெளியிட்டார். (ஆனால், இதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு பிபிசியிடம் பேசிய அவர் பிரபாகரன் மரணம் அடைந்ததாகக் கூறினார்).

3. மே 24, 2009: பிரபாகரன் மரணமடைந்த தருணத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அதை ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருப்பதாகவே பல காலம் தெரிவித்து வந்தார். 2009ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பேசிய வைகோ, "தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும் உலகத் தமிழர்களின் இதய நாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார். தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார்" என்று கூறினார்.

4. ஜனவரி 20, 2010: பிரபாகரனுடைய தந்தை வேலுப்பிள்ளை இறந்தபோது, அதில் பங்கேற்க இலங்கை சென்று திரும்பினார் திருமாவளவன். அப்போது பேசிய அவர், "எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார்" என்று தெரிவித்தார் திருமாவளவன். ஆனால், 2021 டிசம்பரில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தான் நம்பவில்லை என்று தெரிவித்தார்.

5. ஜூன் 11, 2009: அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வைகோ கூறினார். "புலிகளுக்கு நிகராகப் போர் நடத்தியவர்கள் யாரும் இல்லை. பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்" என்று கூறினார்.

6. 2014 ஜனவரி 16: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியி்ல நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரன் மீண்டும் வந்து தமிழீழத்தை மீட்பார் என்று தெரிவித்தார். "வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதேபோல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்ச கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்தக் காலம் வெகுவிரைவில் வரும்" என்று கூறினார்.

செய்தித்தாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7. 2018 அக்டோபர் 13: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததில் இருந்து இப்போதுவரை, பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருபவர் பழ. நெடுமாறன் மட்டும்தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போதுவரை, தொடர்ந்து அந்த நிலைப்பாட்டிலேயே அவர் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், "இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார்" என்று தெரிவித்தார்.

8. 2018 டிசம்பர்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வைகோ, "பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். கோடியக்கரை கடலில் இறங்கி பிரபாகரனின் கனவை நனவாக்குவேன் என்று சபதமிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் பிரபாகரன் மரணமடையவில்ல; அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே கூறி வந்தனர். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல அந்தக் கருத்துகளை அவர்கள் மாற்றிக்கொண்டனர். ஆனால், பழ. நெடுமாறன் தொடர்ச்சியாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறி வருகிறார்.

https://www.bbc.com/tamil/india-64629710

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

அவர் உயிருடன் இருந்தால் சந்தோசமே. ஆனால் அவரை கூட்டிவந்து தமிழீழ பகுதியை இன்னொரு உக்கிரேனாகவோ அல்லது சிரியாவாகவோ மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. அங்குள்ள மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும்.

இத‌ தான் நான் 
இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்திலே எழுதி நான்..............க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி நாடு அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி..............அது க‌ண்டிப்பாய் முடியும் அதுக்கு ந‌ல்ல‌ அறிவாற்ற‌ல் தேவை ந‌ண்பா
புல‌ம்பெய‌ர் நாட்டில் எம‌து அர‌சிய‌லை ப‌ல‌ப் ப‌ட‌டுத்த‌னும்..........தொட‌ர்ந்து ச‌ர்வ‌தேச‌த்திட‌ம் பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌ சொல்லி வற்புறுத்தனும்............த‌மிழ் நாட்டிலும் ந‌ம‌க்கு சாத‌க‌மான‌ நிலையை உருவாக்கினா எல்லாம் கை கூடும்

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளில் இருந்து பொது ம‌க்க‌ள் வ‌ரை பாவ‌ங்க‌ள்
 , எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் ப‌ல‌ர் சொல்லில் அட‌ங்கா க‌ஸ்ர‌த்தை அனுப‌விக்கின‌ம் அவை ப‌ற்றிய‌ காணொளிய‌ யாழில் இணைத்தா எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம் , ஆனால் அவ‌ர்க‌ள் க‌ம்பிர‌மாய் ச‌ண்டை பிடிச்ச‌ போது இதே யாழில் புலி அடிக்கு புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது கூத்து பாட்டு எழுதின‌வை ,

ஊரில‌ பொது ம‌க்க‌ள் ஒரு வேல‌ சோறுக்கு ப‌டும் க‌ஸ்ர‌ம்  இங்கு ப‌ல‌ருக்கு தெரிவ‌தில்லை , சின்ன‌ பிள்ளைக‌ள் ப‌ள்ளிக் கூட‌த்துக்கு காலை உண‌வு சாப்பிடாம‌ தான் பாட‌சாலை போகுதுக‌ள் அவ‌ள‌வ‌த்துக்கு வ‌றுமை.............ஆனால் ஒன்று ந‌ண்பா 2009க்கு முத‌ல் த‌லைவ‌ர் த‌லைமையில் த‌மிழீழ‌ம் அமைந்து இருந்தா எம‌து ம‌க்க‌ள் ஒரு குறையும் இல்லாம‌ ந‌ல்ல‌ வாழ்க்கை  வாழ்ந்து இருப்பின‌ம்...............


 

Edited by பையன்26
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

பிரபாகரன் இறந்த பொழுது அவர் சாகவில்லை தப்பி விட்டார் என்ற செய்தியை பரப்பி விட்டதில் இந்திய ரோவின் பங்கு அதிகம். அப்படி அவர்கள் செய்ததில் சில கணக்குகள் இருந்தன

1 ) ஒன்று ஈழத்தமிழர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்திக்க விடாமல் நாட்களைக் கடத்துவது, அப்படியே போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது.. இதில் பூரண வெற்றி கிடைத்து விட்டது இந்தியாவுக்கு

2) அடுத்தது பிரபாகரனைக் காட்டி இலங்கையின் சிங்களவரின் ஆதிக்கத்தை இயலுமானவரை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது

 

3) தமிழ் நாட்டில் உள்ள,புலத்தில் உள்ள பிரபாகரனின் விசுவாசிகளை  அடையாளம் கண்டு அவர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது

 

4) பிரபாகரன் ஒரு கோழை என சித்தரித்து  நூறு வருடங்கள் கழித்து வரும் தமிழ் தலைமுறையை சிந்தனை ரீதியில் சிதைப்பது

 

5) சிங்களவரும் கொடுக்கத் தயங்கும் அதே நேரம் தமிழர்களும் விரும்பாத ஒரு தீர்வை தமிழர்கள் மேல் திணிக்கச் செய்வது

 

மேல எல்லோரும் சொன்னது போல யானை வாழ்ந்தாலும் பொன் வீழ்ந்தாலும் பொன். 

உண்மை

எங்களை ஆள அல்லது தமது அபிலாஷைகளை திணிக்க முயல்வோர் சார்ந்த தெளிவும் தலைவர் செய்ய அதிஉயர் தியாகவேள்வியினை தோல்வியடைய செய்யப்பட்ட அதர்மயுத்தத்தையும் நாம் புரிந்து கொள்ளவோமாயின் தலைவர் தான் வரணும் என்ற நிலையில் நாம் இருக்கமாட்டோம். 

அப்படி தலைவர் தான் வரணும் என்றால் 2009க்குப்பின் அவர் விட்ட இடத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நாம் நகர்ந்து விட்டு கூப்பிடவேண்டும். ஆனால் அவர் விட்ட இடம் எங்கே? நாம் நிற்கும் இடம் எங்கே என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும் தலைவரை வைத்து தான் அல்லது அவரது இருப்பை வைத்து தான் தமிழருக்கு ஏதாவது கேட்கவேண்டிய நிலையில் தான் தமிழினம்  இன்னும் தாயகத்திலும் புலத்திலும் ஏன் இந்தியாவிலும் இருக்கிறது என்பதையே அவரது வருகை குறித்தான விவாதங்கள் காட்டுகின்றன. 

நான் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழுதும்போது  எங்கிருந்தாலும் வாழ்க நலமுடன் என்று தான் எழுதுவேன். இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரே என் தலைவர். இறந்து இருந்தால் இறைவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசால‌ன் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு ந‌ல்ல‌ ப‌தில் அளித்துள்ளார்

எல்லாரும் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி

சின்ன‌ வ‌ய‌தில் ந‌ல்ல‌ அறிவாற்ற‌ல் சிந்த‌னை உள்ள‌ பாரி ❤️🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று வந்த பழநெடுமாறன் ஐயா அவர்களின் அறிக்கைக்கு முன்பாக நேற்றே இந்நிகழ்வு சம்பந்தமாக வந்த ஒலிப்பதிவு ஒன்று.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

 

இன்று வந்த பழநெடுமாறன் ஐயா அவர்களின் அறிக்கைக்கு முன்பாக நேற்றே இந்நிகழ்வு சம்பந்தமாக வந்த ஒலிப்பதிவு ஒன்று.

ப‌ழ‌நெடுமாற‌னின் மீதான‌ ந‌ம்பிக்கை என்னை விட்டு போய் விட்ட‌து தாத்தா...........

நான் பாரிசால‌னின் காணொளியும் இணைத்து இருக்கிறேன் நேர‌ம் இருந்தா பாருங்கோ

ம‌ற்றும் எக‌ல‌வ‌ன் அவ‌ரின் காணொளியும் ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லுது

யாரோ போட்ட‌ ச‌தி வ‌லைக்குள் தெரிந்து விழுந்தாரா அல்ல‌து தெரியாம‌ விழுந்தாரா என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்

காசி ஆன‌ந்த‌னை நான் க‌ண்டு கொள்வ‌து இல்லை....................இவ‌ர்க‌ளால் ந‌ம‌க்கு ச‌ல்லி பிரொச‌ன‌மும் இல்லை...............இவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு தேவை இல்லா ஆணிக‌ள்...............

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: 'அண்ணன் உயிருடன் இல்லை'' - யுத்தத்தின் இறுதி நாள் வரை போராடிய போராளி பேட்டி

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
28 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழீழ விடுதலை புலிகள்
 
படக்குறிப்பு,

அரவிந்தன், முன்னாள் போராளி

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் சண்டையிட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து குறித்து, முன்னாள் போராளியான வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தனிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை இறுதி யுத்தத்தில் தான் சண்டையிட்டதாக அவர் கூறுகின்றார்.

''13 வருடங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம். இப்போது 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்" என அரவிந்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான அரவிந்தன், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப் பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் நேரடியாகவே சண்டையிட்ட ஒருவராவார்.

பிரபாகரனின் தளபதிகளில் ஒருவரான ரத்னம் மாஸ்டருடன் இணைந்து கடமையாற்றிய போராளியாக இருந்தவர் அரவிந்தன்.

தமிழ்நாட்டின் பழ. நெடுமாறனின் சமீபத்திய கூற்று தொடர்பாக அரவிந்தனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என அரவிந்தன் தெரிவிக்கின்றார்.

''அண்ணனை பற்றி தற்போது ஒரு அறிவிப்பு வந்திருக்கின்றது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய உண்மை அறிவிப்பு என்று நெடுமாறன் ஐயாவின் கையெழுத்தோடு, ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணன் இருக்கின்றாரா?, இல்லையா? என்று 13 வருடங்கள் பேசிக் கொண்டு, 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்.

இதைத் தவிர மேலதிக தகவல்களை பேச முடியாத நிலைமையில் இருக்கின்றோம். இதைப்பற்றி பேச விளைகின்றவர்கள், இறுதிச் சண்டை களத்திலே நின்றவர்களாகவோ, அல்லது அண்ணனினுடைய பாதுகாப்பில் நின்றவர்களாகவோ அல்லது குறைந்த பட்சம் நந்திக்கடல் சண்டை களத்தில் கலந்து கொண்டவர்களாகவோ இருந்து, இதற்கு பதிலளிப்பது, உகந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றேன்." என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை வழங்கும் தருணத்தில், இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டமையானது, ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளி அரவிந்தன் கூறுகின்றார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

''போராளிகள் என்ற விதத்தில் இதை நாங்கள் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம். தற்போது இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை வழங்குகின்ற நிலைமையிலேயே, அதனை குழப்பி விடுகின்ற ஒரு தரப்பினுடைய வேலையாக இது இருக்கலாம். 13வது திருத்தச் சட்டத்தை வழங்க போகின்றார்கள், போலீஸ், காணி அதிகாரங்களை வழங்க போகின்றார்கள். என்ற நிலையிலேயே இதனை செய்கின்றார்கள்.

அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் 'ரா' உளவுப்பிரிவின் திட்டமாக நாங்கள் பார்க்கின்றோம்.

காரணம், அண்ணன் என்றால் யார் என்று எங்களுக்குத் தெரியும். அண்ணனுடன் மிக நெருங்கிய அளவு தூரத்திலே நந்திக்கடலுக்குள் நாங்கள் இருந்தோம்.

நாங்கள் 800 வரையான போராளிகள் அன்னளவாக இருந்தோம். வெளியில் 400 பேர் அளவில் இருந்தோம். சண்டை களத்தில் 1200 பேர் வரை மாத்திரமே இருந்தோம். அந்த சண்டை களத்தில் எத்தனை பேர் உயிருடன் வந்திருக்கின்றார்கள். எத்தனை பேருடைய உடல்களை ராணுவம், போலீஸ் எங்களிடம் அடையாளம் காட்டும் படி கோரியிருந்தது போன்ற விடயங்கள் இருக்கின்றன.

பலர் தப்பி வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்துக்கள் தான் இங்கே முக்கியத்துவம் பெற வேண்டுமே தவிர, இதில் வேறு நாட்டவர்கள் கருத்துக்களை கூறுவது கண்டிக்க வேண்டியது. தமிழ் மக்களுக்கு இது எந்தவிதத்திலும் தீர்வை வழங்காது.

இது தமிழ் மக்களுக்கு இழைக்கக்கூடிய ஒரு துரோகமாகும். அண்ணனுடைய பாதுகாப்பில் நின்றவர்கள் எல்லோரும் வெடித்து சிதறி இறந்து போனார்கள். அவர்களுடைய உடல் பாகங்களையும், உடல் அங்கங்களையும் கொண்டு வந்து அடையாளம் காட்டினார்கள். அண்ணன் அவருடைய முடிவை அவரே தேடிக் கொண்டார் என்பது தான் என்னுடைய கருத்து. நேரடியாக நான் பார்க்காத சந்தர்ப்பத்தில் அதை பற்றி கருத்து கூற முடியாத நிலையில் உள்ளேன்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் அங்கே என்ன நடந்தது என்பது தொடர்பில் கருத்து சொல்லக்கூடியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். தமிழீழத்திற்கு மீண்டும் ஒரு தலைவன் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக இந்த கூற்றை பார்க்கிறோம். யாருக்கு தேவையோ, அவர்களுக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என நாங்கள் காண்கின்றோம். ஈழ கனவுக்காக போராடியவர்கள் அல்லது அவர்களுக்கு துணை நின்றவர்கள் இந்தியாவிலிருந்து பேசுகின்றார்களா என்பதை இன்று ஏற்படுத்தியிருக்கின்றது. அண்ணன் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்." என அவர் குறிப்பிடுகின்றார்.

இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது?

இலங்கையில் தொடர்ச்சியாக காணப்பட்ட இனப் பிரச்னை காரணமாக, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது.

சுமார் 3 தசாப்தங்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள நந்திக்கடல் பகுதியிலேயே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பல்லாயிரக்காணக்கான உயிர்களை காவு கொண்ட இந்த யுத்தம், முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், யுத்தத்தில் கொலை செய்யப்பட்டதாக 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நந்திக்கடல் பகுதியின் கரையோரத்திலிருந்து தலையில் காயங்களுடன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்த நிலையிலேயே, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

https://www.bbc.com/tamil/sri-lanka-64633823

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் தலைவன் பிரபாகரன். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால் ஒன்று சொல்வேன் தமிழ் தேசியம் என்பது பிரபாகரனை விட முக்கியமானது. தமிழ் தேசியத்தை பிரபாகரன் அவர்களை வைத்து சுத்துமாத்துக் காட்டுவதை எந்த சுய புத்தி உள்ளவரும் ஏற்க மாட்டினம் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

மாபெரும் தலைவன் பிரபாகரன். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால் ஒன்று சொல்வேன் தமிழ் தேசியம் என்பது பிரபாகரனை விட முக்கியமானது. தமிழ் தேசியத்தை பிரபாகரன் அவர்களை வைத்து சுத்துமாத்துக் காட்டுவதை எந்த சுய புத்தி உள்ளவரும் ஏற்க மாட்டினம் 

வ‌ண‌க்க‌ம் ப‌கிடி
உங்க‌ளின் இந்த‌ க‌ருத்துட‌ன் நூற்றுக்கு நூறு உட‌ன் ப‌டுகிறேன்

ம‌ண்ணோடு ம‌ண்ணாக‌ புதைக்க‌ப் ப‌ட்ட‌  த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌வ‌தும் 
ம‌ட்டும் அல்லாம‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து காசை ஆட்டைய‌ போட‌ பிலான் ப‌ண்ணி ப‌ல‌ திரைக் க‌தை வ‌ச‌ன‌ம் எழுதி அதில் ந‌டிக்க‌ ப‌ல‌ரை அழைத்தும் சில‌ர் அத‌ த‌விர்த்து விட்டின‌ம்...............சிக்கின‌து வீனா போன‌ காசி ஆன‌ந்த‌னும்
ப‌ழ‌ நெடுமாற‌னும்...............இது தொழிட்நுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் ப‌ல‌ குள‌றுப‌டிக‌ள் செய்ய‌லாம் இந்த‌ வ‌ய‌தாகியும் இது ப‌ற்றி ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு தெரியாம‌ல் இருப்ப‌து வேத‌னைக்கு உரிய‌ விடைய‌ம்

2009தில் கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ம் தீந்து விட்டுடிருக்குமோ அல்ல‌து இந்திய‌ அர‌சுக்கு வேவு  வேலை பார்க்கும் கூட்ட‌த்தின் ச‌திக்குள் ப‌ழ‌ நெடுமாற‌ன் சிக்கி விட்டாரோ  தெரியாது...........

ஆயிர‌ம் தான் இருந்தாலும் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவின் செய‌ல் ப‌ல‌ரை வெறுப்ப‌டைய‌ செய்து இருக்கு..............இந்த‌ முறை செய்த‌ த‌வ‌றை மீண்டும் செய்யாம‌ இருந்தா அது  இவ‌ர் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கும் மாவீர‌ர்க‌ளுக்கும்  செய்யும் பெரிய‌ ம‌ரியாதையா இருக்கும்................

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புலவர் said:

நெ3டுக்கரின் கருத்துடன் உடன்படுகிறேன்.தலைவர் உயிரோடு இருக்கிக்றார் என்றால் அது தமிழர்களுக்கு மகிழ்ச்சியழக் கூடிய செய்திதான். ஆனால் இந்தச் அறிவிப்பு வெளிவந்த சூழ்நிலை நேரம் உள்நோக்கம் கொண்டது. சில அரசியல் தேவைகளுக்காக இந்திய உளவுத்துறையால் செய்யப்பட்டிருக்கிறது எனச்சந்தேகிப்பதற்கு 99 வீதமான சாத்தியம் இருக்கிறது.தலைவர் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசால் காண்பிக்கப்பட்ட உடலை யாரும் நம்ப வில்லை. ஆனால் போர் முடிந்து விஜட்டது என்பதை அறிவிக்க சிறலங்கா அரசுக்கு அப்படி உடலைக்காண்பிக்க வேண்டிய தேவை இருப்பதை மறுக்க முடியாது. அடுத்து இந்திய இராணுவத்துடனான போரில் தனக்கு ஏதாவது நடந்தால்  தனது உடலை பெற்றோல் ஊற்றிக் கொளுத்தும்படி தலைவர்கட்டளையிட்டதாகவும் அப்போதைய தலைவரின் மெய்க்காப்பாளரான தமிழ்செல்வன'; பெற்நறால்கானுடன் திரிந்ததாகவும் செய்திகள் இருக்கின்றன். அப்படிப்பட்ட தலைவர் போரின் இறுதிக்கணங்களில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது உடல' சிறலங்காவின் இராணுவத்துக்கு  கிடைக்க விட்டீக்க மாட்டார். அதே வேளை பல ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்களும்தான் மட்டும் உயிர் தப்ப வேண்டும் நினக்கின்ற மனிதரும் அல்ல. ஆனால் ஒரு சாத்தியக் கூறும் இருக்கிறது. போராட்டததை ஏதாவது ஒரு வழியிலேனும் தக்க வைக்கவும் தமழ்மக்களள்  தமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கவும் தலைவர் உயிருடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என தலைவரின் மெயக்காப்பாளர்களும் புலிகளின் உளவுத்துறையும் முடிவெடுத்திருந்தால் மயக்கம் வரவழைக்கக் கூடிய வாயுவைப் பிரயோகித்து தலைவரின் அனுமதியில்லாமலே அவரைக்காப்பாற்றியிருக்கலாம் என்கபதையும் மறுக்க முடியாது..மிக்குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அண்ணாமலையின் இலங்கைப் பயணமும் ஆதுலுவும் இடைத்தேர்தல் நேரத்தில் அதைத் தொடந்த அண்ணமலைய முள்ளிவாய்கால் முற்றத்திற்கு சென்றது; நெடுமாறன் ஐயாவின் அறிவிபு;பும் அவர் அறிவித்தால்தான் தமிழர்கள் நம்புவார்கள் என்ற கோணத்தில் நடந்திருக்கிறது. இந்திய உளவுத்துறையின் சதிக்கு நெடுமாறன் ஐயா தெரிந்தோ தெரியாமலோ பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கடுமையான அழுத்தங்கள் கூட மேலிடத்திலிருந்து வந்திருக்கலாம்.ஆனால் இந்த அறிவிப்பு இப்போது வந்திருப்பது தமிழ்களுக்கு ஆமலும் சங்கடத்தையே கொடுக்கும். தலைவர் தானாக வெளிப்பட்டு அறிககை விட்டால் ஒழிய இதை யாரும் நம்ப முடியாது. இப்பவே தலைவரை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கnhண்டு சென்ற சீமானை இதை வைத்து கிண்டலடிக்கின்றன திமுகவின் ஊடகங்கள். இது தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்வதை தடுக்கும் ஒரு முயற்சியாவும் இருக்கலாம். அதேவேளை இந்தியாவின் உப்புச்சப்பற்ற 13 ஐ எதிர்க்கும் சிங்களவர்களை அச்சுறுத்தி தனது நல்களை அடைந்து கொள்ளும் இந்திய உளவுத்துறையின் முயற்சியாகவே கருதவேண்டி உள்ளது. 
எது எபபடியோ தலை இருந்தால் பொட்டு இருக்கும்.

புல‌வ‌ர் அண்ணா

த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இந்தியாவில் இருந்த‌ ப‌டி யூடுப்பில் அல்ல‌து முக‌ நூலில் போட்டால் இர‌ண்டும் முட‌க்க‌ப் ப‌டும்............த‌லைவ‌ர் விடைய‌த்தில் இந்தியா விழிப்புன‌ர்வோடு தான் இருக்குது............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளின் வீடுக‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் இருக்கு.................சொச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ர் விடைய‌த்தில் ப‌ல‌ த‌டைக‌ள் போட்ட‌து இதே இந்தியா அர‌சு தான்.................ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ம்மை வ‌ந்து சேரும் இந்த‌ நிலையில் எரியிர‌ வீட்டுக்கு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவும் காசி ஆன‌ந்த‌னும் கூட‌ எண்ணை ஊத்தின‌ மாதிரி இருக்கு..............வாள் போய் கத்தி வ‌ந்த‌ க‌தை போல் க‌ருணாநிதி போய் இப்போது ப‌ழ‌நெடுமாற‌னும் காசி ஆன‌ந்த‌னும் வ‌ந்த‌ க‌தை ஆகி இருக்கு 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியத்துவா காசி ஆனந்தன் , நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை - பெ. மணியரசன்.


spacer.png

நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை! 

தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன் அவர்களும் நேற்று (13.2.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி “தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர் துணைவியார் மதிவதனி அவர்களும் மகள் துவாரகா அவர்களும் உயிருடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

“தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார். தமிழ் ஈழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

“தலைமறைவிலிருந்து” வெளி வந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கட்கு, அவரது இந்த இலட்சியத் திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்திலும், அது செயல்படாத பிற்காலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள் - நிலைபாடுகள் - முடிவுகள் முதலியவற்றை வெளியிடும் அதிகாரத்தை இவ்விருவருக்கும் அவ்வமைப்பு வழங்கியதில்லை. 

கவிஞர் காசி ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ்., பாசகவின் ஆரியத்துவா, அதாவது அவர்களின் இந்துத்துவா கொள்கையை ஆதரித்து, பாசக ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமிழீழத் தமிழர்களின் அரசியல், இறையாண்மை மற்றும் உரிமைகளை மீட்கப் போவதாக அறிவித்துச் செயல்பட்டு வருபவர். கவிஞரின் இந்நிலைபாட்டை எள்ளளவும் ஆதரிக்காத தமிழ்நாட்டு தமிழீழ ஆதரவு அமைப்புகள் பல உள்ளன. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கவிஞரின் இந்நிலைபாட்டைத் தொடக்கத்திலிருந்து மறுத்து வருகிறது. 

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் குரலுக்கு இப்போது தமிழ் ஈழமக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது முதன்மையான வினாக்குறி! அவரைத் தமது பேச்சாளராக (Spokesperson) தலைவர் பிரபாகரன் தேர்வு செய்தாரா என்பது அடுத்த வினாக்குறி. 

ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் 2009 மே 18 லிருந்து பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று உயிரோடிருக்கிறார் என்று கூறிவருகிறார். 

2009 மே 18 அன்று தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு படம் போட்டுக் காட்டி அறிவித்தது. அப்போது கொந்தளித்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் - நான் உட்பட - தமிழ்நாட்டில் முழுக்கடையடைப்பு நடத்த கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். அடுத்த நிமிடமே பிரபாகரன் உயிரோடு தப்பிச் சென்றுவிட்டார் என்று நெடுமாறன் ஐயா அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு காசி ஆனந்தன் மூலம்தான் எனக்குத் தெரிந்தது. 

மறு ஆண்டு 2010 நவம்பர் 27 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கு - சிற்றரங்கில் நடந்த மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ஐயா நெடுமாறன், “அடுத்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வைத் தலைவர் பிரபாகரன் வெளிவந்து நடத்துவார்” என்று அறிவித்தார். அதன் பிறகு இன்றுவரை தலைவர் வரவில்லை. 

ஈழத்தமிழர் இனப்படுகொலையில் பல வடிவங்களில் பங்கெடுத்த இந்திய அரசுக்கு எதிராக கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆவேசம் கொண்ட அந்த வேளையில், அந்த ஆவேசத்தை ஓரளவு தணிப்பதற்கே நெடுமாறன் அவர்களின் “தலைவர் உயிரோடு இருக்கிறார்” என்ற அறிவிப்பு பயன்பட்டது. 

இப்பொழுது நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது. 

“விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை, இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்” என்று பழ. நெடுமாறன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். சீனா இலங்கையில் காலூன்றுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க்காலத்திலும் அதன் பிறகும் இன்று வரை இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்குத் துணையாகவே செயல்பட்டு வருகிறது. காங்கிரசு ஆட்சியிலும் பாசக ஆட்சியிலும் இதுதான் உண்மை நிலை! 

“இலங்கை வழியாக சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றும் நெடுமாறன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேற்கண்ட அறிக்கை மற்றும் பழ. நெடுமாறன் அவர்களின் கூற்று ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஏற்கெனவே கவிஞர் காசி ஆனந்தன் குழுவினர், பாசகவை ஆதரித்து ஈழ மக்கள் உரிமைகளை மீட்கலாம் என்று கூறிய திட்டத்தை பழ. நெடுமாறன் அவர்கள் வலியுறுத்துகிறார் என்று தெரிகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றம்- சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க முன்வந்த போதெல்லாம் அதற்கு எதிராகச் செயல்பட்டது இந்திய அரசு என்பதே வரலாறு. காங்கிரஸ் ஆட்சியும், பாசக ஆட்சியும் இதில் ஒரே நிலைதான் எடுத்தது. 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாசக ஆரியத்துவா ஆட்சியை ஆதரித்து பாதாளப் படுகுழியில் விழக் கூடாது என்பதை நாம் எச்சரித்துக் கூறுகிறோம். கவிஞரும் ஐயா பழ. நெடுமாறனும் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை. 

இது மூன்று வகையில் ஆபத்தானது. 

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தி ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் தமிழின உணர்வை, தமிழ்த்தேசிய உணர்வை மடைமாற்றி, பாசகவின் பக்கவாத்தியமாக திசைமாற்றும் உத்தி இரண்டாவதாகத் தெரிகிறது.

மூன்றாவதாக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆர். அரிகரன், “நெடுமாறன் அறிக்கை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியர்களை உசுப்பிவிட்டு, பிரபாகரன் ஆதரவைப் பெருக்கிவிட வாய்ப்பளிக்கும்” என்கிறார். அதாவது இதன் மூலம் தமிழின உணர்வாளர்கள் மீது அரசு அடக்கு முறையை ஏவிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது. இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்க நெடுமாறன் அவர்கள் அறிக்கை வாய்ப்பளிக்கும்.  

இன்னொரு கெடுவாய்ப்பும் இருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் இல்லாத 13-வது சட்ட திருத்தத்தை இந்தியாவின் அழுத்தத்தோடு ஈழத் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களுக்குத் தன்னாட்சி கொடுத்துவிட்டதாக சிங்கள அரசு பசப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது. 

தக்க சான்றுகள் இல்லாமல், தலைவர் பிரபாகரன் வரப்போகிறார் என்று நெடுமாறன் அவர்களும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் கூறுவதை அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை. தமிழ் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இன உணர்வாளர்கள் - உரிமை மீட்பாளர்கள் தங்கள் சிந்தனையைச் சிதறவிடாமல் பணிகளைத் தொடர்வதே சரியாக இருக்கும். 

 

-தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 

https://www.thaarakam.com/news/c75c1f00-6c69-4627-a118-9e02357f63ec

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.