Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அந்தக் கண்கள்

***************************

அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன

அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது

அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன.

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது,

நாசிகளில் மரணத்தின் வாசனை.
.

*************************

எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது  தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு.

மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக.

மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும்.

பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது.

ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன்.

அன்றும் அப்படித்தான்

டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது.

இரவு 8 மணி.

சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது.
பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது.

தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார்.

ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். 

அந்த முட்டைகளின் ருசி தனி ருசி!

மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்....

தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர்.

நான் தொடர்து காரை செலுத்துகின்றேன்.

திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார்.

85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன்.

என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன.

அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். 

வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக
வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக
மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக
நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார்.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன...
அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன..
அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன..

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன.

என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன...

அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம்.

ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது

நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது.

என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன.

அழ வேண்டும் போலவும் இருந்தது. 

நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது.

சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. 

"மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார்.

"இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன்.

அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார்.

என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது.

பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு
 "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன்.

அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார்

மீண்டும் அவ் வழியால்  திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன்.

அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன.

நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன்.

"பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார்.

"இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள்.

நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன்.

அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர்.

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம்.

யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார்.

இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும்

இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். 

இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!

  • நிழலி changed the title to அந்தக் கண்கள்- நிழலி
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார்.

இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.

பரவாயில்லை.

இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான்.

31 minutes ago, நிழலி said:

மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும்

எனது மனைவி 95இல் சாரதி அனுமதிபத்திரம் எடுக்கும் வரை காரில் ஏறினால் தன்பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருப்பா.

எப்ப சாரதி அனுமதிபத்திரம் எடுத்தாவோ அப்ப இருந்து இப்போது வரை எப்படி எப்படி எல்லாம் ஓட வேண்டுமென்று பாடமெடுத்தபடியே இருப்பா.

முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......!  🙏

பகிர்வுக்கு நன்றி நிழலி......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.

அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்......
கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான் :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்......
கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான் :beaming_face_with_smiling_eyes:

கார் கொம்பனிக்காரனுக்கு முன் ஸீட் எப்பவுமே பின் பக்கமாய் பார்ப்பது போல் இருந்தால் நல்லது என்று சொல்லி செய்விக்கணும் .விபத்துக்கள் ஒரேயடியாய் குறைந்து விடும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அந்தக் கண்கள்

***************************

அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன

அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது

அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன.

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது,

நாசிகளில் மரணத்தின் வாசனை.
.

*************************

எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது  தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு.

மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக.

மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும்.

பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது.

ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன்.

அன்றும் அப்படித்தான்

டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது.

இரவு 8 மணி.

சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது.
பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது.

தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார்.

ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். 

அந்த முட்டைகளின் ருசி தனி ருசி!

மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்....

தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர்.

நான் தொடர்து காரை செலுத்துகின்றேன்.

திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார்.

85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன்.

என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன.

அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். 

வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக
வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக
மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக
நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார்.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன...
அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன..
அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன..

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன.

என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன...

அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம்.

ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது

நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது.

என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன.

அழ வேண்டும் போலவும் இருந்தது. 

நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது.

சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. 

"மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார்.

"இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன்.

அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார்.

என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது.

பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு
 "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன்.

அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார்

மீண்டும் அவ் வழியால்  திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன்.

அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன.

நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன்.

"பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார்.

"இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள்.

நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன்.

அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர்.

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம்.

யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார்.

இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும்

இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். 

இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!

அருமையாய் எழுதியுள்ளீர்கள் நிழலி, அருமை.

முந்தநாள் கிட்டத்தட்ட இதை ஒத்த சம்பவம் எனக்கு.

வேலை விசயமாக 70 மைல் வேக தடை உள்ள இரெட்டை லேன் வீதியில், வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறேன். 

தூரத்தே ஒரு நடை மேம்பாலம். அதற்கு கீழ் ஏதோ ஒரு பொருள் தெரிகிறது, வேகத்தை மட்டுப்படுத்தி அடுத்த லேனுக்கு மாறி என்ன என்று பார்த்தால்….

குழந்தைகளை காவும் carrycot ! ஒரு கணம் ஈரக்குலை நடுங்கி விட்டது. வீதியோ அருகில் hard shoulder உள்ள மோட்டர் வே அல்ல, உடனடியாக நிறுத்த முடியாத A ரோட். ஒரு வழியாக அடுத்த உள்ளோட்டில் வாகனத்தை போட்டு விட்டு 999 க்கு அடித்தால் - விடயம் தெரியும் பொலிஸ் போகிறது என அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே எதிர் திசையில் இரெண்டு பொலீஸ் கார்கள் கூவிக்கொண்டு பறந்தன.

கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளிக்கிட்டு வந்து விட்டேன்.

அது வெறும் கூடையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் எனது திசையில் அம்பூலன்ஸ் என்னை முந்தி ஓடி இருக்கும். நியூசிலிம் வந்திருக்கும்.

 

34 minutes ago, பெருமாள் said:

கார் கொம்பனிக்காரனுக்கு முன் ஸீட் எப்பவுமே பின் பக்கமாய் பார்ப்பது போல் இருந்தால் நல்லது என்று சொல்லி செய்விக்கணும் .விபத்துக்கள் ஒரேயடியாய் குறைந்து விடும் .

அவங்கள ஓட விட்டு நீங்கள் பசன்சர் சீட்டில் இருந்து பாருங்கோ….

காரில் டிரைவர் சீட் மட்டும் போதும் என்றாகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!

இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!

நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!

அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நிழலி said:

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! :beaming_face_with_smiling_eyes:

உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்......
கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான் :beaming_face_with_smiling_eyes:

கார் ஓட தொடங்க முதல் எதுவுமே இல்லை.

இதுக்காகவே அம்மா தாயே பின்னாடி உட்காரம்மா என்று ஒரு மாதிரி பின்னாடி அனுப்பிவிடுவேன்.

49 minutes ago, குமாரசாமி said:
4 hours ago, நிழலி said:

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! :beaming_face_with_smiling_eyes:

உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி

நானும் கவனிச்சனான்.

பிறகு எரிச்சல் அது இது என்று விட்டுட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

அந்தக் கண்கள்

***************************

அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன

அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது

அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன.

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது,

நாசிகளில் மரணத்தின் வாசனை.
.

*************************

எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது  தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு.

மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக.

மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும்.

பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது.

ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன்.

அன்றும் அப்படித்தான்

டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது.

இரவு 8 மணி.

சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது.
பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது.

தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார்.

ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். 

அந்த முட்டைகளின் ருசி தனி ருசி!

மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்....

தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர்.

நான் தொடர்து காரை செலுத்துகின்றேன்.

திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார்.

85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன்.

என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன.

அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். 

வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக
வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக
மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக
நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார்.

எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன...
அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன..
அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன..

அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன்.

அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன.

அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன.

என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன...

அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம்.

ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது

நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது.

என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன.

அழ வேண்டும் போலவும் இருந்தது. 

நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது.

சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. 

"மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார்.

"இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன்.

அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார்.

என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது.

பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு
 "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன்.

அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார்

மீண்டும் அவ் வழியால்  திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன்.

அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன.

நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன்.

"பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார்.

"இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள்.

நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன்.

அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர்.

அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார்.

என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம்.

யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார்.

இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும்

இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். 

இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!

Warndreieck: Test & Empfehlungen (03/23) - AUTOBIBEL

தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போறதெண்டு இதைத்தான் சொல்லுறது.
ஆனால்... இப்படியான இடங்களில்.. வாகனத்தை நிறுத்தி நாம் கீழே இறங்கும் போது,
எமது பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும்.
இல்லையேல்... பின்னால் வரும்  வாகனங்கள் எம் மீதும்  மோதி  விபத்தை பெரிதாக்கி விடும்.
இப்படியான சம்பவங்கள்... இங்கு நிறையவே நடந்துள்ளது.
முக்கோண எச்சரிக்கை பலகையையோ, விளக்கையோ தாமதிக்காது போட்டு விட வேண்டும்.
நல்ல அனுபவ கதை நிழலி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்காகவே அம்மா தாயே பின்னாடி உட்காரம்மா என்று ஒரு மாதிரி பின்னாடி அனுப்பிவிடுவேன்.

பின்னுக்கு போய் இருங்கோ எண்டு சொல்லுற சேட்டை எல்லாரிட்டையும் சரிவராது கண்டியளோ...:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அவங்கள ஓட விட்டு நீங்கள் பசன்சர் சீட்டில் இருந்து பாருங்கோ….

காரில் டிரைவர் சீட் மட்டும் போதும் என்றாகும்🤣

வயது போன நேரம் கீழே படத்தில  உள்ள காரை வாங்கிவிடுவம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

வயது போன நேரம் கீழே படத்தில  உள்ள காரை வாங்கிவிடுவம்.

 

இனி இதுதான் சரிவரும், கூடுதலாக நாலுபேரை ஏற்ற அனுமதிக்குமோ தெரியாது........!  😂

நன்றி பெருமாள்......!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வயது போன நேரம் கீழே படத்தில  உள்ள காரை வாங்கிவிடுவம்.

 

🤣

கடவுளே எண்டு ஒரு 70, 75 இல இந்த வசதி பரவலா வந்துடவேணும்.

இளம் பராயத்தில் இருந்து நாமே ஓடி…ஓடி…எல்லாம் செய்து போட்டு…அந்த வயதில் ஆஸ்பத்திரி போக ஊபரோ, அல்லது உறவுகளையோ நம்பி இருக்க தேவையில்லை. 

ஏறி இருந்து…

ஹலோ சிரி….டேக் மி டு த ஹொஸ்பிடல் பிளீஸ்😎

 

  • தொடங்கியவர்
19 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.

பரவாயில்லை.

இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான்.

 

உண்மை அண்ணா. பதட்டத்தில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அத்துடன் அவர் வீதியை கடக்க முயன்று வாகனத்தை கண்டவுடன் ஸ்தம்பித்து நின்றரா அல்லது தற்கொலைக்கு முயன்றவரா என்ற கேள்விகளும் எனக்கு இருந்தன.

யோசித்துப் பார்க்கும் போது இப்படி எத்தனை தவறுகளை நாம் வாழ்க்கையில் புரிந்து இருப்போம் என யோசிக்க தோன்றுகின்றது.

சரியாக அடுத்த வாரமே இந்த தவறைத் திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்புக் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விடயமே.

சரியாக ஒரு வாரம் கழிய, இரவு 8 மணிக்கு என் மகளை அவள் தோழி வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தேன்.

ஒரு வீதியில் இருந்து மறு வீதிக்கு திரும்ப எத்தனித்த போது,  25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பாதசாரிக் கடவையில் நடந்து தெருவைக் கடந்து வந்து கொண்டு இருந்தான்.

உடலில் மேற்சட்டை எதுவும் இல்லை.

பிஜாமாவுக்கு வரும் காற்சட்டை மட்டும் அணிந்து இருந்தான்.

குளிர் -20 C (மறை 20)

ஆள் தள்ளாடி தள்ளாடித்தான் தெருவைக் கடக்க முயன்றான். அவன் பாதசாரிக் கடவையை கடக்காமல் நடு வீதியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தான்.

போதையில் இருக்கின்றான் எனப் புரிந்தது. இங்கு கஞ்சாவை சட்ட ரீதியாக்கிய பின் இவ்வாறு தள்ளாடும் பல இளைஞய வயதினரை அடிக்கடி காண்கின்றேன். 

நான் Bluetooth இன் மூலம்  காரை connect பண்ணி இருந்தமையால், உடனடியாக Call emergency என்று கூறி, 911 இற்கு அழைத்து "இந்தக் குளிரில் ஒரு இளைஞன் மேற்சட்டை இல்லாமல் வீதியில் நிற்கின்றான் " என்ற தகவலை கூற, அவர்கள் தாம் உடனடியாக அங்கு ஆட்களை அனுப்புவதாக உத்தரவாதம் தந்து, என் நம்பரையும் வாங்கி குறித்து கொண்டார்கள்.

மனசு கொஞ்சம் ஆறுதலடைந்தது.
 

19 hours ago, ஈழப்பிரியன் said:

 

முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.

இந்தப் பழக்கம் எனக்கும் உள்ளது. முக்கியமாக என் 17 வயது மகன் காரை ஓட்டும் போது.
 

  • தொடங்கியவர்
18 hours ago, suvy said:

ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......!  🙏

பகிர்வுக்கு நன்றி நிழலி......!

ஓம் அண்ணா.

சரி பிழைகளுக்கு அப்பால், ஒரு மனித உயிர் என்னால் ஒரு வினாடியில் பறிக்கப்பட்டதே என்ற குற்றவுணர்வில் மிச்ச வாழ்வு கழிந்திருக்கும்.

என் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 

இது நிகழ்ந்த பின் "எனக்கு படிப்பிக்காதையும்" என்ற மாதிரி கதைப்பதை நிறுத்தி விட்டேன். 😄

16 hours ago, புங்கையூரன் said:

என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!

இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!

நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!

அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!

எனக்கு புனைவு சரிவராது. என் அனுபவத்தை தான் கொஞ்சம் நீட்டி முழக்கி எழுத முடிகின்றது. இன்னொருவரின் அனுபவத்தை கூட என்னால் கேட்டு அப்படியே எழுத முடியாது.

என் அனுபவங்களில் மரணம் ஒரு சக பயணியாக, நிழலைப் போன்று வரும் போது, அதைப் பற்றி அதிகம் எழுத்தில் கொண்டு வராமல் இருக்க முடியவில்லை.

தனிப்பட்ட ரீதியில் எந்த stress சும் அதிகம் இல்லாத, அந்தந்த கணங்களுக்காக வாழ்வது என் இயல்பு. இது உங்களுக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இப்படி வாழ்வதே மரணம் பற்றிய பிரக்ஞை எப்போதும் இருப்பதால்

அத்துடன் நாம் ஒரு காலத்தில் 'மரணத்துள் வாழ்ந்தோம்'

  • தொடங்கியவர்
17 hours ago, goshan_che said:

அருமையாய் எழுதியுள்ளீர்கள் நிழலி, அருமை.

முந்தநாள் கிட்டத்தட்ட இதை ஒத்த சம்பவம் எனக்கு.

வேலை விசயமாக 70 மைல் வேக தடை உள்ள இரெட்டை லேன் வீதியில், வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறேன். 

தூரத்தே ஒரு நடை மேம்பாலம். அதற்கு கீழ் ஏதோ ஒரு பொருள் தெரிகிறது, வேகத்தை மட்டுப்படுத்தி அடுத்த லேனுக்கு மாறி என்ன என்று பார்த்தால்….

குழந்தைகளை காவும் carrycot ! ஒரு கணம் ஈரக்குலை நடுங்கி விட்டது. வீதியோ அருகில் hard shoulder உள்ள மோட்டர் வே அல்ல, உடனடியாக நிறுத்த முடியாத A ரோட். ஒரு வழியாக அடுத்த உள்ளோட்டில் வாகனத்தை போட்டு விட்டு 999 க்கு அடித்தால் - விடயம் தெரியும் பொலிஸ் போகிறது என அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே எதிர் திசையில் இரெண்டு பொலீஸ் கார்கள் கூவிக்கொண்டு பறந்தன.

கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளிக்கிட்டு வந்து விட்டேன்.

அது வெறும் கூடையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் எனது திசையில் அம்பூலன்ஸ் என்னை முந்தி ஓடி இருக்கும். நியூசிலிம் வந்திருக்கும்.

 

வாசிக்கும் போதே நெஞ்சு பக் என்றது....அதுவும் ஒரு குழந்தையின் carrycot . அதற்குள் குழந்தை இருக்கின்றதா இல்லையா என்று எந்தளவுக்கு பதட்டப்பட்டு இருப்பீர்கள்...! 

நீங்கள் ஊகிப்பது போல்,வெறும் carrycot  ஆகத்தான் இருக்கும்.

16 hours ago, குமாரசாமி said:

ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! :beaming_face_with_smiling_eyes:

உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி. 

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

 

நானும் கவனிச்சனான்.

பிறகு எரிச்சல் அது இது என்று விட்டுட்டேன்.

அது என் ராசி 😀

பொதுவாக வேலைக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் போது, நேர்முகத்தேர்வு வைப்பவர் பெண் என்றால் எனக்கு வேலை கிடைக்கும். மேலதிகாரி பெண் என்றால், அந்த வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த இடத்திலாவது பெண் ஒருவர் இருந்தால், அவரது உதவி எனக்கு கிடைக்கும்.

என் வாழ்வில் வந்த அனைத்து பெண் உறவுகளும் நல்ல தோழிகளாகவே இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

அது என் ராசி 😀

மீனராசியோ எதுவோ ஒன்றில் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு ஈர்ப்பு இருப்பதாக சொல்வார்கள்.

அதுசரி நீங்கள் என்ன ராசி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

வாசிக்கும் போதே நெஞ்சு பக் என்றது....அதுவும் ஒரு குழந்தையின் carrycot . அதற்குள் குழந்தை இருக்கின்றதா இல்லையா என்று எந்தளவுக்கு பதட்டப்பட்டு இருப்பீர்கள்...! 

நீங்கள் ஊகிப்பது போல்,வெறும் carrycot  ஆகத்தான் இருக்கும்.

ஒரு கணம் - அரண்டு விட்டேன் 

நானும் அப்படியே நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 20:12, நிழலி said:

தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது.

தற்கொலைக்கு முயன்றவர் எதற்காக எமர்ஜென்சி விளக்குகளைப் போட்டிருந்தார். “மோட்டு மனுசன்” என்று உங்கள் மனைவி சொன்னது சரிதான்.

அடுத்தநாள்  ஊசிக்கணவாய் ருசித்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வக்கணையாய் ஆயிரம் கதைகள் கதைத்தாலும் பக்கத்தில் உடன் வரும் துணைதான் ஆபத்பாந்தவர். வீட்டுக்குப் போன பின்னால் நிழலி கவிதாவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்ததாக காற்று வாக்கில் கதை அடிபட்டது நான் தான் நம்பேல்லை. பட் இப்ப நம்புறேன். கிலியை உண்டாக்கும் எழுத்தென்றாலும் அந்த நீட்டி முழங்கல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விடுகிறது. பாராட்டுகள் வெட்டுக்கிளி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2023 at 07:50, suvy said:

ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......!  🙏

பகிர்வுக்கு நன்றி நிழலி......!

உண்மையான கருத்து, நிழலி உங்களுக்கு whiplash ஏற்படவில்லையா?

பொதுவாக வாகனவிபத்தில் ஈடுபடுவர்கள் அதிர்ச்சியில் என்ன நடந்தது என்பதனை மறந்துவிடுவார்கள், எனது காரில் மோதியவர்கள் பெரும்பாலும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்ததை அவதானித்துள்ளேன்.

அவர்களை முதலில் அணுகி அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்வதும் பின்னர் அவர்களை மனரீதியாக தேற்றுவதும் உண்டு, அதில் பெரும்பாலும் தாம் தவறு செய்துவிட்டோம் என்பதாக தேவையில்லாமல் கவலைப்படுவதனை அவதானித்திறுக்கிறேன்(வாகனத்தினை தவிர மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலேயே).

நிட்சய்மாக இந்த சம்பவத்தில் நீங்கள் செயற்பட்ட விதத்தில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, அவசர எண்ணிற்கு நீங்கள் அழைக்கவில்லை என்று வருந்த வேண்டிய அவசியமில்லை, உங்களது கார் முன்னால் சென்றதாலேயே அந்த இளைஞ்சன் தற்போது உயிருடன் உள்ளான் என்ற உண்மையினை நினைத்து பாருங்கள்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.