Jump to content

ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது ; அகில இலங்கை இந்துமா மன்றம் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் சிவபூமியின் அறக்கட்டளைத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கருத்துத் தெரிவிக்கின்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும்தெரிவிக்கையில்,

தமிழர் பகுதிகளிலுள்ள ஆலயங்கள் தெய்வ விக்கிரகங்கள் அழிக்கப்படுவது சேதமாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது மனவேதனை வருகின்ற விடையமாகும் குறிப்பாக சைவ மக்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணமுள்ளது.

வெடுக்குநாறி மட்டுமன்றி கீரி மலையில் ஆதிச்சிவன்கோவில் இருந்த இடம் தெரியாது சிதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சைவ ஆலயங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி பௌத்த அடையாளங்களாக மாற்றி வருகின்றார்கள்.

இந்தவார அதிர்ச்சியான செய்தியாக வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் இடித்தழிப்பு முழு இந்து மக்களையும் சீற்றமடைய வைத்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி இந்த விடையத்தில் உரிய நடவடிக்கை எடுத்து யார் இதனை செய்தார்கள் என்பதை அறிந்து உரிய தண்டணை வழங்கவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை சமாளிப்பார்கள் என்றால் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறப்போகிறது என்ற சந்தேகமே எழுகின்றது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணை வழங்கவேண்டும் இது இந்து மக்களுக்கு ஆறுதல் தரும் விடையமாக இருக்கும் சமீபத்தில் குறுந்தூர் மலை விவகாரத்தில் நீதித்துறையை மக்கள் நம்பி இருந்தார்கள்.

ஆனால் நீதித்துறை நடவடிக்கை எடுத்தும் பௌத்த விகாரை கட்டப்பட்டமையானது இலங்கையில் நீதி நியாயம் இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிற்கின்றது.

உலக அரங்கில் இலங்கை எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் பொருளாதாரத்தில் வழிமை இழந்து பிற நாடுகளை நம்பியுள்ள நிலையில் இத்தகைய அசம்பாவிதங்கள் மதங்களை இனங்களை தூண்டி மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும். இடித்தழிக்கப்பட்ட ஆலயங்கள் உடனடியாக மீள்நிர்மாணம் செய்யப்பட்டு சைவமக்கள் வழிபடக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பொலிஸார் இதற்கு காவல் கடமையில் ஈடுபட்டு இத்தகைய சம்வங்கள் நடைபெறாது இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.  அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள் ஆளுநர்கள் இத்தகைய நடவடிக்கைகள் இனிமேல் இடம்பெறாத வகையிலும் ஆலயங்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

போர்க்காலத்தை காரணம் காட்டி பல ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளது சைவ மக்களின் வறுமையை அடையாளம் கண்டு மதமாற்றங்கள் இடம் பெற்றுள்ளது.

சைவ மக்கள் என்றுமில்லாத வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். சைவ மக்கள் விக்கிரகங்கள் ஏதாவது வைத்தால் அதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் பிற மதங்களின் அடையாளச் சின்னங்கள் வைத்தால் அது தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை.

நாவற்குழியில் காங்கேசன்துறையில் தையிட்டியில் எத்தனையே பௌத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கேட்பார் கிடையாது சைவ மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏதாவது வைத்தால் விதண்டாவாதமும் கேள்விகளும் எழுகின்றது.

சமயத்தலைவர்களைப் பொறுத்த வரையில் யாரும் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல சைவ மக்களுக்கு பிரச்சினைகள் வரும் போது ஒரு சில சைவ பாராளுமன்ற உறுப்பினரக்ள் குரல் கொடுக்கின்றார்கள். ஏனையவர்கள் பேசாதிருக்கின்றார்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரச்சினை என்றால் கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் இருவர் குரல் கொடுக்கின்றார்கள் ஆனால் ஒட்டுமொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுப்பதில்லை.

மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றுபோது அதனைத் தீர்த்து வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்துக் குரல் கொடுப்பதில்லை. இது கவலையான விடையமாகும். ஆலயங்கள் சேதமாக்கப்படுகின்றபோது இடித்தழிக்கும் போது குரல் கொடுப்பதும் ஊர்வலங்கள் செய்வதும் ஏற்புடையதல்ல அவை இனி இடம்பெறாது இருப்பதற்கான நடவடிக்கைகள் ஒருமித்து எடுக்கப்படவேண்டும்.

ஆணித்தரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மணித்தியலக்கணக்கில் பேசிப் பிரயோசம் இல்லை இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு ஏற்ற வகையில்; பாராளுமன்றத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

சத்திய வழியில் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் ஒற்றுமை இல்லாத நிலையில் காணப்படுகின்றீர்கள் இனியாவது இதனை கைவிட்டு இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் ஒருமித்து செயற்படுங்கள். இலங்கையில் எத்தனையோ ஆதிசிவன்கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன இதன் வலியை தற்போது இலங்கை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கின்றது.

இனியும் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுமேயானால் இந்த நாடு வறுமையையும் துன்பத்தையும் சந்திக்கப்போகும் இதிலிருந்து தப்புவதற்கு நீதி தேவன் நிமிர்ந்து நிற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் மௌனம் காக்கக்கூடாது இந்திய அரசாங்கம் இலங்கை விடையத்தில் அக்கறை இருப்பதென்றால் இந்த விடையத்தில் ஏன் மௌமாக இருக்கின்றீர்கள் என்பதை உங்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது ; அகில இலங்கை இந்துமா மன்றம் கேள்வி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தமும் இந்து மதத்தின் ஒரு அங்கம் என நினைக்கினம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்...

அண்ணன் தம்பிக்குள் இப்படி குடும்ப சண்டை வருவது சகஜம் என அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.....ஆனால் தமிழன் சிங்களவனை அடிச்சால் சிங்களவனுக்காக தமிழனை அழிக்க முன் நிற்பார்கள்....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைகள் கட்டுவதற்கும் புத்தத்தை வளர்ப்பதற்கும் ஆலோசனைகளையும் நிதியுதவியும் அளித்துக்கொண்டு தமிழரிடையே சைவ, கிறிஸ்தவ குரோதத்தையும் வளர்த்து குளிர் காய காத்திருக்கும் ஓணான் இந்தியாவை எதுக்கு அழைக்கிறீர்கள்? அது மவுனம் காக்கவில்லை ரசிக்க காத்திருக்கு தூண்டிவிட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் ஒரே இந்துமத நாடு .. நேப்பாள்காரணுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தால் அவனாவது குரல் கொடுத்து இருப்பான்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத கண்ணோட்டத்தை விட இன கண்ணோட்டம் வலிமையானது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 18:18, பிழம்பு said:

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை இந்துமாமன்றம் என்ற பெயர் வைத்தால் சரியா ? வட இந்திய பிராமணர்கள் தாங்கள் தான் பிராமணியத்தில் உயர் சாதி பஞ்ச கவுடா என்கிறார்கள் அதிலும் தென் இந்திய பிராமணியர் பஞ்ச திராவிட என்கிற சாதியாக பிரிகின்றனர் அதிலும் பஞ்ச திராவிட ஐந்தாக பிரிகின்றது அவை கர்நாடகர்கள், தெலுங்கர்கள், திராவிடர்கள், மகாராஷ்டிரர்கள் மற்றும் குர்ஜரர்கள்.

அதில் உயர் சாதிய பஞ்ச கவுடா சரஸ்வத், கண்யாகுப்ஜா, கவுடா, உத்கல, மைதில் என்று ஐந்து வகை இவர்கள் வட இந்தியர்கள் இந்த உயர் சாதி கூட்டம் தென்னிந்திய பஞ்ச திராவிட பிராமணரை தங்களுக்கு சரி சமமாக இருக்க விடமாட்டார்கள் இப்படியான அவங்கட உயர் சாதி என்கிற பிரமனர் கூட்டத்துக்குள் அவங்கடை நாட்டிலேயே பல பிரிவுகள் இந்த கேவலத்தில் இந்துமாமன்றம் நாங்களும் பிராமணர் என்று நீங்களே உங்களை சொன்னால் பஞ்ச கவுடா பிராமணன் ஒத்துகொள்வானா ?  வட இந்திய பிராமணரை பொறுத்தவரை இலன்கையில் இந்து என்பது இல்லை அப்படி ஒரு எண்ணம் இருந்து இருந்தால் மோடி யாழ் வந்தபோது நல்லூர் கோவிலுக்கு போகாமல்  ஏன் தட்டி கழித்தார் ?

சிலர் சொல்வது போல் மேல் சட்டை கழட்டனும் அதனால் போகவில்லை  என்ற கதை அல்ல கதை இங்கு வேறு 

ஆதாரம் https://archive.org/details/RajataranginiOfKalhana-English-JogeshChunderDuttVolumes12/Rajatarangini-JogeshChunderDuttVol1/page/n11/mode/2up

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2023 at 06:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உலகின் ஒரே இந்துமத நாடு .. நேப்பாள்காரணுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தால் அவனாவது குரல் கொடுத்து இருப்பான்..😢

இவங்கள் சிங்கள அரசு அங்கேயும் போய் கடன் வாங்கி எங்கட மானத்தை வித்திடுவாங்கள்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படும் போது அதை ஊக்குவித்த இந்தியா இந்து கடவுள்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று கேட்பது எதிர்பார்ப்பது மடமை. இந்து என்றால் அது வட இந்திய உயர் சாதியினர் தான் என்ற தெளிவு வட இந்திய ஆதிக்க வர்ககத்துக்கு உள்ளது.  இது கூட புரியாத அப்பிராணிகளாக இருக்கிறார்களே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்கும் ஆகாசவாணி..!

ஆகாசவாணி…

டெல்லியின் குரலாய்

தமிழ் ஈழ மண்ணில்

ஒளிவு மறைவு வாழ்வில்

சந்துபொந்தில்

நடந்த அந்த

ஓரிரு நிகழ்வுகள் கூட

ஒளிப்பு மறைப்பின்றிச்

சொன்னது ஓர் காலம்..!

 

காலை மதியம் மாலை என்று

முறுக்கிவிட்ட

வானொலிகள்

மத்திய மாநிலச் செய்திகள் காவி வர

களத்தில் நின்ற வீரனும்

நிகழ்வின் விளைவறிவது

அங்கு தான்..!

 

அமைதிப் படை என்று

அரக்கர் படை ஒன்று வந்து சேர

ஆகாசவாணியும்

அண்டப்புளுகிற்கு

அடிபணிந்து கொண்டது.

லங்காபுவத்தோடு

காதலொடு கூடலும் கண்டு கொண்டது..!

 

அன்று தொற்றிய வியாதி

இன்றும் ஆறவில்லை.

இத்தனை ஆயிரம்..

தமிழர் சாவுகள் கண்டும்

இரங்கவில்லை…

அண்டப்புளுகொடுதான்

அதன்

அந்தியக்காலம் என்று

அடம்பிடிக்குது..!

 

இந்தியாவின்

இந்துக்கள் கட்சியாம்

ஈழ மண்ணில்..

தமிழ் பேசும்

இந்துக்கள் அழிவை

சிங்களம் செய்தால்

மன்னிக்குமாம்.. மறக்குமாம்..!

ஹிந்தி பேசும்

இஸ்லாம் செய்தால்

கொலைக் கருவி ஏந்துமாம்…!

சரத்பவாராம்

அன்னை இந்திராவோடு

ஒட்டிய போது

ஈழத்தமிழருக்காய்

ஓர் விரதம்

அன்னை சோனியாவோடு

ஒட்டிய பிறகு

விரதமும் தாபமாச்சு..!

 

ஆகாசவாணிகளே

ஆகாயம் விட்டு வர வேண்டாம்

இடையில்

இனிப்பாய் அமைந்திட்ட

சிங்கள உறவுகள்

அறுக்க வேண்டாம்.

அண்டை அயலில்

நடந்த இன அழிப்புக்கு

ஓர் ஒப்பாரி…

மனிதாபிமானம்

இருந்தால்

காட்டுங்கள்..!

 

கலைஞரும்

கழன்றுவிட்ட பிறகு

கட்சிகள் சாட்டி

கழுத்தறுப்பது

தொடர வேண்டுமா..??!

ஆகாசவாணிக்கு

ஈழத்தமிழன் 

தந்த ஆதரவுக்கு

நன்றிக்கடன் வேண்டாமோ..??!

 

கொடுஞ் சிங்களத்திற்கு

கொடுத்தது போக..

நன்றி

மிச்ச சொச்சம்

எஞ்சி இருந்தால்……

பாரதத்தில் கீதை சொன்னபடி..

ஐநாவில் அதை

அழிந்து போன

தமிழருக்கு.. காட்டி நிற்க..!!!

 

2013 இல் எழுதியது.. அப்பவே இதுக்கு விடை சொல்லியாச்சு. 

https://kuruvikal.wordpress.com/page/16/

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.