Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

காணிகள் பற்றையாக. காடு போல் இருக்குமாயின் மாநகரசபை தண்டப்பணம் அறவிடுமில்லையா  ?? அப்படி சட்டம் இருப்பதாக அறிந்தேன்   ....பிழையா??

யாருமே இல்ல எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அண்ண ஆனால்  பொது சுகாதார பரிசோதகர் வந்து மேலோட்டமாக பார்த்து செல்வார் . சொந்தக்காரர் இருந்தால் கொஞம் சுத்தம் செய்ய சொல்லுங்க என்று சொல்லி போய் விடுவார் தண்டப்பணம் என்பது அறவிடப்படுவது இல்லை எங்க ஊரில் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 378
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இலங்கையில் ஆறு மாதங்கள்    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி ந

மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

மெசொபொத்தேமியா சுமேரியர்

பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

போனதுக்கு பிரியோசனமான நல்ல விடையம்.ஓரளவுக்கு பிரியோசனம் தரும் மரம், செடி, கொடிகளை, அழிக்காமல் பாதுகாப்பது மிகவும் நன்று..மற்றப்படி பொது வெளியில் சிலவற்றை தவிர்த்து எழுதுவது நன்று..நான் அனுபவபட்டு இருக்கிறேன்.நன்றி🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்கிறியள். 😀

 

இல்லை.  அவர்களின் மனநிலை மற்றும் இழுத்தடிப்பு பற்றி கூற வந்தேன்.  நாங்கள் விடையங்களை நேரடியாக கதைத்து செய்ய நினைப்போம் ஆனால் அங்கிருப்பவர்கள் அப்படியல்ல.  ஒரு விடையத்தை நேரடியாக சொல்ல கூட மாட்டார்கள்.  அவர்கள் சூட்சமமாக காய் நகர்த்துவார்கள்.  அப்பாவித்தனமாக இருக்கிறார்கள் போல வெளிப்பார்வைக்கு தெரியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காணியும் விடும் வாங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லை சுற்றி மதில் கட்டா விட்டாலும், இடைக்கிடை எல்லை நேருக்கு தூண் போடுங்கோ.  இல்லை என்றால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பக்கத்தாலும் அரை அடி குறைந்து கொண்டே போகும்.  அனுபவம்.  திரும்ப முதலில் இருந்து அளக்க காசு கொடுக்க வேண்டும்.  வீண் முரன்பாடுகள்.  
இனி 6 மாதத்திற்கு பராமரிப்பது ஆர் என்பதில் புதிய பிரச்சனை வருமே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sabesh said:

 காணியும் விடும் வாங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லை சுற்றி மதில் கட்டா விட்டாலும், இடைக்கிடை எல்லை நேருக்கு தூண் போடுங்கோ.  இல்லை என்றால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பக்கத்தாலும் அரை அடி குறைந்து கொண்டே போகும்.  அனுபவம்.  திரும்ப முதலில் இருந்து அளக்க காசு கொடுக்க வேண்டும்.  வீண் முரன்பாடுகள்.  
இனி 6 மாதத்திற்கு பராமரிப்பது ஆர் என்பதில் புதிய பிரச்சனை வருமே :)

ம்ம் நான் மறந்து போனேன்.செலவோடு செலவாக மதில் கட்டுறது கூடுதல் பாதுகாப்பு.எனக்கு அவர் வன்னிக்கு வரவில்லை என்பது ஒரு சின்ன ஏமாற்றம்.(சுயநலம்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அப்ப வீடு கட்டவில்லை, வீடும் வளவும் வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
புரோக்கர்மார் கொமிசனுக்கு ஆக்களைக் கூட்டுவாங்கள், அவ்வளவு ஒற்றுமை.

ஆட்களை மட்டுமல்ல வீட்டு விலையைக் கூட்டுவதும் அவர்கள்தான்.

9 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துகள்.சுமே.

நன்றி

9 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் சகோதரி.......ரெம்பப் பிரயாசைப் பட்டு விரும்பியதுபோல் வாங்கி இருக்கிறீங்கள் ......!எல்லைகளை சரியாக அடைக்கவும் அதுதான் முக்கியம்.....!  💐

அதே பெரிய வேலை.

8 hours ago, Kandiah57 said:

வாழ்த்துக்கள்....நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளின் ஒன்றாயினும். அங்கே போய் வாழ்வதாகயிருந்தால.  சிறந்ததொரு முயற்சிகள்      எங்களுக்கு முரசுமோட்டை இல் 2..5 ஏக்கர் வயல் காணி இருந்தது   நாங்கள் போய் பார்பதில்லை  ...குத்தகைக்கு விடப்பட்டுள்ளது     அதாவது நெல் மூட்டையாக தாருவார்கள்.     இப்போது வயல் 2 ஏக்கர் ஆகி விட்டது    பக்கத்து வயல்காரர்.   வரம்புகளை. அரக்கி   அரக்கி கட்டி விட்டார்கள்.....எனவேதான் எல்லைகள் முக்கியம்  சுவி அண்ணா சொன்னது போல் வேலிகள் வடிவாக அடைத்து வையுங்கள் 

இங்கும் கணவரின் காணிக்கு அதுவும் நடந்தது.

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிஞ்சவரைக்கும் மதில் வேலி கட்டுங்கள் அதுவே பல பிரச்சினைகளை தவிர்க்கும் 

அப்பாடா காணி வாங்கியாச்சு என பெருமூச்சு விட்ட தருணம் மக்களே அக்கா கோடி கொடுத்து காணி வாங்கு இருக்காவு இருக்காவு இருக்காவு என அறியத்தருகிறோம் 

அதை வாங்கிவிட்டுப் படுற பாடு இருக்கே

4 hours ago, யாயினி said:

போனதுக்கு பிரியோசனமான நல்ல விடையம்.ஓரளவுக்கு பிரியோசனம் தரும் மரம், செடி, கொடிகளை, அழிக்காமல் பாதுகாப்பது மிகவும் நன்று..மற்றப்படி பொது வெளியில் சிலவற்றை தவிர்த்து எழுதுவது நன்று..நான் அனுபவபட்டு இருக்கிறேன்.நன்றி🖐️

எழுதினபிறகு சொல்லுறியள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sabesh said:

இல்லை.  அவர்களின் மனநிலை மற்றும் இழுத்தடிப்பு பற்றி கூற வந்தேன்.  நாங்கள் விடையங்களை நேரடியாக கதைத்து செய்ய நினைப்போம் ஆனால் அங்கிருப்பவர்கள் அப்படியல்ல.  ஒரு விடையத்தை நேரடியாக சொல்ல கூட மாட்டார்கள்.  அவர்கள் சூட்சமமாக காய் நகர்த்துவார்கள்.  அப்பாவித்தனமாக இருக்கிறார்கள் போல வெளிப்பார்வைக்கு தெரியும்.

உண்மைதான் பலரிடம் உண்மைத்தன்மை இல்லை. எமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பதுதான் கொடுமை.

56 minutes ago, நந்தன் said:

மகிழ்ச்சி,அந்த ஸ்கூட்டிய மறந்திடாதீங்க😁

அது இனிவரும் 😀

3 hours ago, Sabesh said:

 காணியும் விடும் வாங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லை சுற்றி மதில் கட்டா விட்டாலும், இடைக்கிடை எல்லை நேருக்கு தூண் போடுங்கோ.  இல்லை என்றால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பக்கத்தாலும் அரை அடி குறைந்து கொண்டே போகும்.  அனுபவம்.  திரும்ப முதலில் இருந்து அளக்க காசு கொடுக்க வேண்டும்.  வீண் முரன்பாடுகள்.  
இனி 6 மாதத்திற்கு பராமரிப்பது ஆர் என்பதில் புதிய பிரச்சனை வருமே :)

எழுதுறன் அதுபற்றியும்

36 minutes ago, சுவைப்பிரியன் said:

ம்ம் நான் மறந்து போனேன்.செலவோடு செலவாக மதில் கட்டுறது கூடுதல் பாதுகாப்பு.எனக்கு அவர் வன்னிக்கு வரவில்லை என்பது ஒரு சின்ன ஏமாற்றம்.(சுயநலம்)

😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதுவரை உங்களின் பதிவில் இருந்து நீங்கள் நினைத்து   சென்ற விடயங்கள் 60 % முடிவுற்று இருக்கிறது என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி இனி மேற்கொண்டு அதை சீரமைப்பதிலும் இடையிடை போய் பார்ப்பதிலும் செலவிடவேண்டும்." உடையவன் பாரா வேலை ஒருமுழம் கடடை" என்பார்கள் . உரியவர்கள் அங்கு நின்று அலுவல பார்ப்பது தான் மிகவும் சிறந்தது. சுமேரியிடம் எல்லாத்தையும்   சொல்லும் கள்ளமில்லாத ,இரக்க,மனசு ஒன்று 
உண்டு. அது சில சமயம் உங்களுக்கே " பூமறாங்க் " மாதிரி திருப்பி தாக்க கூடும். சொந்த உறவுகளின் பிரச்சினைப்பற்றி சொல்லும் போது  அவதானமாக இருங்கள்.  .யாரையும் நம்பாதீர்கள்.  வீட்டுக் காரன் பென்ஷன் வயதை எடட இருந்தால் , முடிந்தால் அங்கு சென்று   இருப்பது நன்று. நாடு தொடர்ந்து நல்ல நிலைமையில் (?)  இருக்கவேண்டும். உடமைகளுக்குப் பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ளுங்கள்

Edited by நிலாமதி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

எழுதினபிறகு சொல்லுறியள் 😀

ஆ..இனிமேலாவது கண்டதையும் எழுதாதீங்கோ..✍️🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

 இதுவரை உங்களின் பதிவில் இருந்து நீங்கள் நினைத்து   சென்ற விடயங்கள் 60 % முடிவுற்று இருக்கிறது என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி இனி மேற்கொண்டு அதை சீரமைப்பதிலும் இடையிடை போய் பார்ப்பதிலும் செலவிடவேண்டும்." உடையவன் பாரா வேலை ஒருமுழம் கடடை" என்பார்கள் . உரியவர்கள் அங்கு நின்று அலுவல பார்ப்பது தான் மிகவும் சிறந்தது. சுமேரியிடம் எல்லாத்தையும்   சொல்லும் கள்ளமில்லாத ,இரக்க,மனசு ஒன்று 
உண்டு. அது சில சமயம் உங்களுக்கே " பூமறாங்க் " மாதிரி திருப்பி தாக்க கூடும். சொந்த உறவுகளின் பிரச்சினைப்பற்றி சொல்லும் போது  அவதானமாக இருங்கள்.  .யாரையும் நம்பாதீர்கள்.  வீட்டுக் காரன் பென்ஷன் வயதை எடட இருந்தால் , முடிந்தால் அங்கு சென்று   இருப்பது நன்று. நாடு தொடர்ந்து நல்ல நிலைமையில் (?)  இருக்கவேண்டும். உடமைகளுக்குப் பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ளுங்கள்

அவர்கள் யாரும் யாழுக்கு வந்து நான் எழுதுவதைப் பார்க்கமாட்டார்கள் என்ற துணிவுதான் அக்கா. லண்டனில் 68 இல் தான் பென்ஷன். வீட்டுக்காரர் பென்ஷன் எடுத்த பிறகு போய் என்ன பயன். இன்னும் ஆறு ஆண்டுகள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. போதும் என்ற மனம் வந்துவிட்டபடியாலும் பிள்ளைகள் படித்து முடித்து வேலை பார்ப்பதாலும் அவர்களுடனேயே இருக்கவேண்டும் என்பதில்லையே அக்கா. ஆறு மாதங்கள் தான் தொடந்து அங்கு இருக்கலாம். எனவே ஆறுமாததுக்கு ஒருதடவை வந்து வந்து போகவேண்டியதுதான்.

8 hours ago, யாயினி said:

ஆ..இனிமேலாவது கண்டதையும் எழுதாதீங்கோ..✍️🖐️

அதெப்படி ???😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

BEBC75-A0-CCBE-48-C1-8314-31-BE8-C369-E6

ஊரில் உடனடித்தேவைகளுக்கு வேண்டாத பொருட்களை அறைக்குள் வைத்து பூட்டி வைப்பார்கள்..அது போல் பூட்டி வைக்கலாம் பிரச்சனை இல்லை...நல்ல வாகன சாரதிகளுக்கு பொருந்தும் புமுதி பறக்க ஓடுறவைக்கு ............✍️😆

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அதெப்படி ???😀

அச்சச்சோ இது பெரிய வம்பா போச்சே..பேசமா இருங்க...🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்கள் யாரும் யாழுக்கு வந்து நான் எழுதுவதைப் பார்க்கமாட்டார்கள் என்ற துணிவுதான்

இஞ்சை உங்களுக்கு/உங்களை தெரிஞ்ச யாழ்கள துரோகிகள்  காட்டிக்கொடுக்க மாட்டார்களா? :379: :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இஞ்சை உங்களுக்கு/உங்களை தெரிஞ்ச யாழ்கள துரோகிகள்  காட்டிக்கொடுக்க மாட்டார்களா? :379: :rolling_on_the_floor_laughing:

போட்டுக்கொடுக்கற பிளான் போல😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

BEBC75-A0-CCBE-48-C1-8314-31-BE8-C369-E6

ஓகே ஓகே நன்றி அண்ணா

6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை உங்களுக்கு/உங்களை தெரிஞ்ச யாழ்கள துரோகிகள்  காட்டிக்கொடுக்க மாட்டார்களா? :379: :rolling_on_the_floor_laughing:

நான் என்ன ஆயுத விற்பனையா செய்யிறன் காட்டிக்கொடுக்க.

7 hours ago, யாயினி said:

ஊரில் உடனடித்தேவைகளுக்கு வேண்டாத பொருட்களை அறைக்குள் வைத்து பூட்டி வைப்பார்கள்..அது போல் பூட்டி வைக்கலாம் பிரச்சனை இல்லை...நல்ல வாகன சாரதிகளுக்கு பொருந்தும் புமுதி பறக்க ஓடுறவைக்கு ............✍️😆

அச்சச்சோ இது பெரிய வம்பா போச்சே..பேசமா இருங்க...🖐️

😀😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

போட்டுக்கொடுக்கற பிளான் போல😎😎

சீச்சீ...உந்த வேலையெல்லாம் நான் பாக்கிறேல்ல ராசன் :rolling_on_the_floor_laughing:

Top 30 Senthil GIFs | Find the best GIF on Gfycat

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் என்ன ஆயுத விற்பனையா செய்யிறன் காட்டிக்கொடுக்க.

அய்யே.......யாழ்ப்பாண பக்கம் ஆயுத கடத்தலை விட வேலி, வரம்பு, வாய்க்கால்,காணி உறுதி பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு தெரியாதாக்கும்.:face_with_tears_of_joy:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினேழு 


 

இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான். 

 

நான் 34 ஆண்டுகளாகக் கார்  ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு. 

 

நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு. 

 

மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார்.

 

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை  வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு.  

 

முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி. 

 

இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். 

 

நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின்  இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது. 

 

மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன.

 

சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. 

 

ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. 

 

அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய்  இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என்  கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார். 

   

 

  343943738_1568860820277081_2812663570234


 

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புழுதி பறந்தது என்று சொன்னது நீங்கள் விழுந்ததையா? இங்க ஒழுங்கையளுக்கையே 50-60ல போறாங்கள். குழந்தையள் உள்ள வீட்டுச் சனம் படலையை பூட்டி வைச்சிருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும்"  வேலையாட்களுக்கு சாப்பாடு போய் சேர்ந்திச்சுதா இல்லையா......!  😁

"முயற்சி திருவினையாக்கும்" தொடருங்கோ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

புழுதி பறந்தது என்று சொன்னது நீங்கள் விழுந்ததையா? இங்க ஒழுங்கையளுக்கையே 50-60ல போறாங்கள். குழந்தையள் உள்ள வீட்டுச் சனம் படலையை பூட்டி வைச்சிருக்கினம்.

தண்டவாளத்தில புழுதி கிளப்பியாச்சு...சும்மா பகிடியாக எழுத அக்கா உண்மையாவே செய்துட்டா............✍️.🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பதினேழு 


 

இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான். 

 

நான் 34 ஆண்டுகளாகக் கார்  ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு. 

 

நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு. 

 

மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார்.

 

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை  வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு.  

 

முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி. 

 

இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். 

 

நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின்  இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது. 

 

மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன.

 

சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. 

 

ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. 

 

அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய்  இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என்  கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார். 

   

 

  343943738_1568860820277081_2812663570234


 

இவ்வளவு சோதனையா... அங்கு போக முதல் ஓடுவது என்று போய், அங்கை நிலைமையை பார்த்து விட்டு ஒரு போதும் ஓடியதில்லை. நல்ல வேளை ஐந்து இலட்ச்சத்துக்கு அவ்வளவு சேதம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

  • Like 2
  • Haha 6
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” - ஜாமீனில் விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம் 11 MAY, 2024 | 09:29 AM   புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார். திஹார் சிறையின் 4-வது கேட் வழியாக சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வந்தபோது அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் குழு ஒன்று கையில் கொடியுடன் கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களுடன் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான அதிஷி, சவுரப் பரத்வாஜ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இருந்தனர். 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கேஜ்ரிவால், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களின் ஆசிர்வாதங்களை வழங்கினீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இன்று உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இதோ உங்கள் முன்பு நிற்கிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அதன் பிறகு மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திப்போம்" என்றார். முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும். அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/183209
    • பட மூலாதாரம்,GETTY IMAGES/TEZUKA PRODUCTIONS CO., LTD. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 11 மே 2024, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "பள்ளி முடிந்து மாலை வீடு வந்தவுடன், கை, கால் கழுவிவிட்டு டிவியின் முன்பாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுக்கொண்டு இமை மூடாமல் டிராகன் பால் ஸி, போகிமான் ஆகிய தொடர்களை கார்ட்டூன் நெட்வொர்க்கில் பார்க்காமல் நாள் ஓடாது. ஒருநாள், ஒரு எபிசோட் பார்க்காதபோது, பலநாள் காத்திருந்த முக்கியக் காட்சிகள் அன்றெனப் பார்த்து ஒளிபரப்பாகிவிடவே, அவற்றை அடுத்த நாள் பள்ளியில் வகுப்புத் தோழர்கள் விவரித்துப் பெருமிதம் கொள்ளும்போது மனதுக்குள்ளேயே பொருமிக்கொள்வோம்." இந்த அனுபவத்தைப் பகிராத 90ஸ் கிட்ஸ்களை அரிதாகவே காண முடியும் என்னும் அளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி, இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கின அனிமேக்கள். அப்படிப்பட்ட அனிமேக்களும் அவற்றின் உருவாக்கத்தில் கணிசமான பங்கு வகிக்கும் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான மாங்காக்களும் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகள் குறித்த ஜப்பான் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாகவே செயல்பட்டதாகவும் அதன் வரலாறு கூறுகிறது. ஜப்பான் மட்டுமின்றி இன்று உலகம் முழுக்கவே பலரின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட அனிமேக்களும் மாங்காக்களும் அணுகுண்டுக்குப் பிந்தைய ஜப்பானில் வகித்த பங்கு என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   அணுகுண்டுகள் ஜப்பானியர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES அணுகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்பே ஜப்பான் தோற்றுவிட்டது, ஆனால் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பசிபிக் பெருங்கடலில் முழு ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு, அமெரிக்காவிடம் வீழ்ந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக சரணடையவில்லை. அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை ஜப்பானிடம் கோரியபோது, தங்கள் பேரரசருக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளுடன் மட்டுமே சரணடைய முடியும் என்று ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சூழ்நிலையில், ஜப்பானை அணுகுண்டு குறித்து அமெரிக்கா எச்சரித்தபோதும் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று ஜப்பான் ராணுவம் நினைத்தது. இவற்றைத் தொடர்ந்தே ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுப் பேரழிவு நடத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நிலையில், இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். நாம் வாழும் ஊருக்கு அருகிலேயே இருக்கும் - அதாவது சுமார் 100கி.மீட்டருக்கு உள்ளாக இருக்கும் ஓர் ஊரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் வானுயர் எழும் காளான் புகைத் திரளைக் காணும்போது நாம் எப்படி உணர்வோம்! அத்தகைய பேரழிவைக் கண்முன் காணும்போது ஏற்படும் கலக்கம், அச்சுறுதல், நடுக்கம், வேதனை, வெறுப்பு அத்தனையும் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைக் கண்ட மக்களை ஆட்கொண்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆகஸ்ட் 9, 1945 அன்று அமெந்ரிக்கா நாகசாகி மீது அணுகுண்டை வீசிய பிறகான நிலை ஜப்பானிய மாங்கா கலைஞரான கட்சுஹிரோ ஒட்டோமோ எழுத்தில் உருவான அகிரா என்ற அனிமேவின் இறுதிக்காட்சிகளில் எழும் பிரமாண்ட புகைத்திரளால், நியோ-டோக்கியோ என்ற நகரமே வெறும் எலும்புக்கூடாய்க் காட்சியளிப்பதைப் பார்த்தால், உங்களுக்கு ஓரளவுக்கு அந்த உணர்வின் தாக்கம் கிடைக்கும். ஒரு வெடிகுண்டு! ஒரேயொரு முறை வெடித்து, மொத்த நகரத்தையும் விழுங்கிச் செரித்து, அதன் எலும்புக்கூட்டை மட்டும் துப்பும்போது, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அனாதையான குழந்தைகள், இந்தக் கொடூரங்களைக் கண்ணால் பார்த்தவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு வகையில் பாதித்தது. “இவையனைத்துமே ஜப்பானியர்களுக்கு பேரதிர்ச்சிகரமான அனுபவங்கள். பல ஆண்டுகளாக, பேரழிவு அவர்களின் மனக்கண்ணில் இருந்து நீங்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. இத்தகைய கொடுமையான நிலையில் இருந்து தாங்கள் மீண்டுவர, இலக்கியம், இசை, கலை ஆகியவற்றில் அந்தத் தாக்கத்தின் உருவகத்தைக் கொண்டு வருவதை, குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகச் செய்ததாக” தி கான்வர்சேஷன் இதழில் வெளியான அனிமே குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகிரா அத்தகைய உருவகங்களுக்கான ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியாகப் பல மாங்காக்கள் மற்றும் அனிமேக்களில் அணுகுண்டு வெடிப்பின் உருவகங்களையும் குறியீட்டையும் காண முடியும். இன்று வரை பல அனிமேக்களில் அந்த பிரமாண்ட புகைத்திரளின் உருவகம் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் நருட்டோ அனிமேவில் வரும் பெயின் (Pain) என்ற கதாபாத்திரம், கொனோஹா கிராமத்தின் மேலே வானில் நின்றுகொண்டு தனது 'ஷின்ரா டென்சேய்' என்ற சக்தியைப் பயன்படுத்துவார். அது அந்தக் கிராமம் முழுவதையும் மிகப் பிரகாசமான ஒளியால் மூடிப் பிறகு பெருவெடிப்பை ஏற்படுத்தும். அணுகுண்டை நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும் இதை ஒத்தே இருக்கின்றன. இதேபோல் ஒன் பீஸ் தொடரிலும் வேகாபங்க் என்ற விஞ்ஞானி உருவாக்கிய மதர் ஃப்ளேம் என்ற ஆயுதமாகவும் பயன்படுத்தவல்ல ஆற்றலும் அணு ஆற்றலையே மையாமக் கொண்டுள்ளது.   அனிமே, மாங்கா என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அனிமேக்களின் வரலாறு 1907ஆம் ஆண்டில் இருந்தே தொடங்குகிறது. இருப்பினும், அவற்றுக்கு அனிமே என்ற குறிப்பிட்ட சுருக்கம் பயன்படுத்தப்பட்டது 1960களில் இருந்துதான் என்கிறார் ஜோனாதன் க்ளிமென்ட்ஸ். முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் எய்கா ஹ்யோரான் என்ற திரைப்படங்களை விமர்சிக்கும் இதழில் இவை குறித்து கட்டுரை எழுதிய மோரி டகுயாதான் அனிமே என்ற அனிமேஷனுக்கான சுருக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாகவும் 2013 வெளியான தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனிமே என்பது ஏதோ உருவாக்கப்பட்ட பதம் அல்ல, அது அனிமேஷன் என்ற ஆங்கில சொல்லின் சுருக்கப்பட்ட வடிவமே என்கிறார் அனிமே சார்ந்த வணிகப்பொருட்களுக்கான அனிசிங்க் என்ற நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அனிமேக்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவருமான நிகில் ரவிக்குமார். அதே கூற்றை அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய படிப்புகள் துறையின் பேராசிரியர் சூசன் ஜே.நேப்பியர் தனது ‘அனிமே ஃப்ரம் அகிரா டூ பிரின்சஸ் மோனோனோகே’ என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “அனிமேஷன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமான அனிமே, இப்போது அமெரிக்க சொல்லகராதியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் குறுக்கெழுத்துப் புதிர்களில் இடம்பெறும் அளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது.” அடிப்படையில், ஜப்பானியர்களை பொறுத்தவரை மேற்கத்திய படைப்பாக இருந்தாலும் சரி, ஜப்பானிய படைப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே அனிமேதான். ஆனால், ஜப்பானிய அனிமேக்களின் கதைக்களம், சண்டை, அதிரடி, காமெடி போன்றவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கதைக்களத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் சூழலை உணர்வுபூர்வமாகக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதை மாங்காக்கள் மிக ஆழமாகச் செய்வதாகக் கூறுகிறார் நிகில். மாங்கா என்பது மேற்கத்திய, இந்திய காமிக்ஸ் புத்தகங்களைப் போன்றது. அதுவும் காமிக்ஸ் புத்தகம்தான். ஆனால், கதை மீதான மாங்காவின் அணுகுமுறை காமிக்ஸில் இருந்து அதைத் தனித்துவமாக்குகிறது. நிகிலின் கூற்றின்படி, காமிக்ஸ்களை பொறுத்தவரை அதிரடியில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் மாங்காக்கள் “ஒவ்வொரு தருணத்தின்மீதும் அதிக கவனம் செலுத்தும். ஒரு திறந்திருக்கும் கதவு, சூரிய உதயம், ஒருவரின் கண்ணீர், பசி, மகிழ்ச்சி என அனைத்தையும் மாங்காக்களில் வரும் ஓவியங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துல்லியமாகக் கடத்தும். அதுதான் அவற்றின் தனித்துவம்.”   காட்ஸில்லா – உயிருள்ள அணுகுண்டு உருவாக்கப்பட்டதன் பிண்ணனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஷிரோ ஹோண்டாவின் இயக்கத்தில் 1954ஆம் ஆண்டு வெளியான கோஜிரா படத்தில் வரும் காட்சி ஜப்பான் இரு அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிடம் சரணடைந்த பிறகு, அந்நாடு மீண்டும் தன்னை கட்டமைத்துக்கொள்ள அமெரிக்கா உதவியது. அதைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கா தனது அணுகுண்டுகளை சோதிக்கத் தொடங்கியது. இப்படியாக மார்ச் 1, 1954 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அடோல் என்ற சிறிய தீவில் ஓர் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் கடந்து சென்ற ஒரு மீன்பிடிப் படகு அந்த அணுகுண்டு வெடிப்பில் வெளியான கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது. அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்டதைவிட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தது. இதன் பாதிப்புகளால், அந்த மீன்பிடிப் படகில் இருந்த ஐகிச்சி குபோயாமா உயிரிழந்தார். இது ஜப்பான் மக்களிடையே அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் கொந்தளிக்க வைத்தது. ஐகிச்சி குபோயாமாவின் கடைசி விருப்பமாக இருந்தது ஒன்று மட்டுமே, “அணுகுண்டுக்குப் பலியான கடைசி உயிர் தனதாக இருக்க வேண்டும்.” இதைத் தொடர்ந்துதான் ஜப்பானில் அணுகுண்டுக்கு எதிரான இயக்கமே உருவானது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக ஜப்பான் மக்கள், ஹிரோஷிமா, நாகசாகியை தொடர்ந்தும் அணுகுண்டுகளின் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அதன் விளைவாக உருவானதே ஜப்பானிய மொழியில் கோஜிரா என்றழைக்கப்படும் காட்ஸில்லா. காட்ஸில்லா என்பது அணுகுண்டின் பண்புகளை உருவகப்படுத்திய ஓர் உயிருள்ள கதாபாத்திரம்தான் என்கிறார் அனிசிங்க் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நிகில். காட்ஸில்லா கதையில் அதன் அறிமுகமே கடலில் ஒரு மீன்பிடிப் படகைத் தாக்குவதில் இருந்துதான் தொடங்கும். ஐகிச்சி குபோயாமா இருந்த மீன்பிடிப்படகு அணுகுண்டு வெடிப்பில் சிக்கியதைக் குறிக்கும் குறியீடுதான் அந்தக் காட்சி. கலை எப்படி ஜப்பானிய மக்கள் தங்கள் வலிகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுதான் காட்ஸில்லா. இப்படியாக, பேர்ஃபூட் ஜென், பிரின்சஸ் மோனோனொகே, கிரேவ் ஆஃப் ஃபயர்ஃப்ளைஸ் போன்ற கதைகளின் மூலம், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை உருவகப்படுத்தி, ஜப்பான் மக்களின் உணர்ச்சியைக் கடத்துவதற்கான ஓர் ஊடகமாக அனிமேக்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.   அனிமே மற்றும் மாங்காக்களில் அணுகுண்டின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES “அனிமே உட்பட ஜப்பான் இலக்கியங்கள் போரின் ஆயுதங்களைப் பற்றிப் பேசியதைவிட, அந்த ஆயுதங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையே பேசின. அவ்வளவு கொடூரமான ஆயுதங்களை நாம் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தன” என்கிறார் நிகில். “எவ்வளவு பெரிய போர்வீரனாக இருந்தாலும், முழுவதும் எரிந்து கருகிப்போன ஒரு குழந்தையின் சட்டையையும் கடைசியில் மிச்சமிருந்த அந்தக் குழந்தையின் ஒற்றைச் செருப்பையும் காட்டினால், போர் குறித்த அவனது வெறி சலனப்படும்.” அதைத்தான் மாங்காக்களும் அனிமேக்களும் உருவகப்படுத்த முயன்றன என்று கூறும் நிகில், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற அனிமே திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அனிமே துறை மிகவும் இளம் கட்டத்தில் இருந்தது. ஆகவே, அனிமேவை ஒரு முக்கிய ஊடகமாக வைத்து அணுகுண்டின் தாக்கத்தில் இருந்து ஜப்பான் மக்கள் விடுபட்டனர், அல்லது அதையே முற்றிலும் வடிகாலாகப் பயன்படுத்தினர் என்று கூற இயலாது என்பது நிகிலின் கூற்று. ஆனால், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ போன்ற அனிமே திரைப்படங்கள் ஜீரணிக்கவே முடியாத அணுகுண்டின் விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு வடிகாலாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. மேலும், இந்தக் குறிப்பிட்ட படத்தை ஜப்பான் அரசாங்கமே காட்சிப்படுத்தி, மக்களிடையே விளம்பரப்படுத்தும் அளவுக்கு, அது இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைப் பற்றியும் மீண்டு வருதல் குறித்தும் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.   அனிமேக்களில் அணுகுண்டு தாக்கத்தை தொடக்கி வைத்த முன்னோடிகள் பட மூலாதாரம்,TEZUKA PRODUCTIONS CO., LTD. நவீன அனிமேக்களின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமு டெசுகா மற்றும் மியாசாகி ஹயாவோ ஆகியோர்தான் அணுகுண்டின் தாக்கத்தைத் தங்கள் அனிமேக்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ஒசாமு டெசுகாவின் மாங்கா படைப்புகளில் விவரிக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பின் காட்சி, அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு மனதில் அழுத்தமாகப் பதிந்தன. அவரது படைப்புகள் தாங்கவொண்ணா துக்கத்தைக் கையாள்வது, இயற்கையின் அத்தனை அழகையும் அதை அடக்கி ஆள வேண்டுமென்ற மனிதனின் ஆசையால் அழித்துவிட முடியும் என்பன போன்றவற்றைப் பேசின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒசாமு டெசுகாவின் ஆஸ்ட்ரோபாய் அவரது பெரும்பாலான படைப்புகள், அனாதையாக்கப்பட்ட ஓர் இளம் கதாபாத்திரம் தன்னந்தனியாக உயிர் பிழைக்கப் போராடுவதைச் சுற்றியிருக்கும். அவரது ஆஸ்ட்ரோபாய் என்ற மாங்காவில், தனது மகனின் இழப்பை ஈடுகட்ட ஒரு விஞ்ஞானி ஆண்ட்ராய்டு சிறுவனை உருவாக்குகிறார். பின்னர், அதனால் மகனின் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றுணர்ந்து கைவிடுகிறார். அநாதையாக்கப்படும் அந்த ஆஸ்ட்ரோபாய் பிறகு போராடி ஒரு சூப்பர் ஹீரோ ஆகிறார். அவரைப் போலவே, அணுகுண்டு வெடிப்பை நேரில் கண்டு உயிர் பிழைத்த கெய்ஜி நகாஸாவா உருவாக்கிய பேர்ஃபூட் ஜென் அணுகுண்டால் அழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் கதையைப் பேசியது. “நகாஸாவா தனது தங்கை பிறந்து சில வாரங்களிலேயே கதிர்வீச்சு பாதிப்பால் உயிரிழந்தைக் கண்முன் கண்டவர். அவரது தாயும் அதே பிரச்னையால் காலப்போக்கில் மரணித்தார்,” என்று தி கான்வர்சேஷன் இதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பேர்ஃபூட் ஜென்னின் கதையும் அத்தகைய ஒன்றுதான்.   மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கெய்ஜி நகாஸாவா இந்த முன்னோடிகளின் படைப்புகள் அதிகம் பேசியது ஒரு பேரழிவின் விளைவுகள், மரணங்கள், இழப்புகள் மற்றும் அதன் பிறகும் நீடிக்கும் இந்த வாழ்வில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் அந்தச் சிறிய ஒளி. அனைத்தையும் இழந்த பிறகும், ஒருவன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும், வாழ்வைப் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதை இவர்களது கதைகள் வலியுறுத்தின. பட மூலாதாரம்,GETTY IMAGES டெசுகாவின் ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது. முற்றிலும் அழிந்த பிறகும் அதன் அத்தியாயம் முடிந்துவிடாமல், மீண்டும் உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறந்து வரும். அவை அனைத்துமே அப்போதைய ஜப்பான் மக்களின் போருக்குப் பிறகு, அதனால் விளைந்த ஒரு பேரழிவுக்குப் பிறகான மீட்சியை, எழுச்சியை உருவகப்படுத்தின. போருக்கு முன்பு மேற்கத்திய வடிவங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அனிமே கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய சகாப்தம் அனிமே மற்றும் மாங்காக்களில் தொடங்கியது. ஒசாமு டெசுகா, மியாசாகி ஹயாவோ, கட்சுஹிரோ ஒட்டோமோ, கெய்ஜி நகாஸாவாவை தொடர்ந்து அடுத்து வந்த மாங்கா, அனிமே கலைஞர்களும் அவர்களைப் பின்பற்றி மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி அதாவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மையமாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார்கள். அதன்மூலம், ஜப்பான் மக்கள் எப்படி அது சந்தித்த வரலாற்றின் மிகப்பெரும் அழிவில் இருந்து, அது தந்த வலியில் இருந்து தன்னைக் குணப்படுத்திக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது. https://www.bbc.com/tamil/articles/cz5dj6rlr8ro
    • போன வருடம்தான் கேரளா, மூனார் & பல  இடங்களுக்கு போய் வந்தோம், படத்தை பார்க்கும்போது, அந்த இடங்கள் மீண்டும் மனதில் வந்து போச்சு. அப்படியே எடுத்தைள்ளார்கள், போகும்போது ஒரு பாதையோரக்கடையில் உடன் பெரித்த நன்னீர் மீனும் பிளேன்ரியும் குடித்த ஞாபகம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை, குளிருக்கு, அந்த மாதிரி👍
    • பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பரப்புவது வெளிநாடுகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், "இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத்தனமாக உள்ளது. இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்று கூறினார். 'இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல' மும்பை கலவரத்திற்குப் (1993) பிறகு அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மும்பையின் சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் பொறியாளர் இர்பானின் கூற்றுப்படி, ``இதுபோன்ற தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல.” என்கிறார். ”இதற்கு முன்பு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் `ஊழல் எதிர்ப்பு’, `இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது (அச்சே தின்)’, `தேசியவாதம்’ உள்ளிட்ட வாக்கியங்களின் அடிப்படையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2024 தேர்தல் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளை முன்வைத்து நடத்தப்படுகின்றன,” என்றார். அமெரிக்காவில் இயங்கி வரும் வில்சன் மையத்தின் தெற்காசியா பிரிவின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார். ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பிரதமர் மோதி ஆற்றிய பிரசார உரை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருந்தது , இந்தக் கட்டுரையின் தலைப்பு - "No, Prime Minister". ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்று குறிப்பிட்டார்.   அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள் பட மூலாதாரம்,ANI இந்த பிரசார விவகாரம் இத்துடன் முடியவில்லை. கர்நாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட், 'முஸ்லிம்களுக்கு எதிரான' தேர்தல் விளம்பரம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள் தவறானவை என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறி வருகின்றனர். இது தவிர, ‘‘தனிப்பட்ட சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பாஜக தலைவர் ஜேபி நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தபோது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு,அமித் மாளவியா தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், "காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்," என்றார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்று கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஷரியா, தாலிபன் போன்ற வார்த்தைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை. பிரதமர் மோதி, பன்ஸ்வாராவில் ஆற்றிய உரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விடவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்தான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.   வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்களின் கருத்து என்ன? பாஜகவின் பிரசாரம் மீதான விமர்சனங்கள் குறித்து வலதுசாரி சுவ்ரோகமல் தத்தா பேசுகையில், "இந்த நாட்டில் உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டது இல்லையா? கஜ்வா-இ-ஹிந்த் என்ற சித்தாந்தம் இந்த நாட்டிற்குள் வரவில்லையா? ஓட்டு ஜிகாத் இந்த நாட்டிற்கு வரவில்லையா? இந்த உண்மைகளை பிரதமர் அம்பலப்படுத்துகிறார், அவர் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்?” என்றார். பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் மோதியின் பிரசாரம் மீதான விமர்சனங்களை ஏற்கவில்லை. ஜமால் சித்திக் பேசுகையில், “மோதி ஜி எப்போதும் முஸ்லிம்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் ஊடுருவியவர்கள் என்றால் முஸ்லிம் என்று அர்த்தம் இல்லை. அதை ஏன் முஸ்லிம்கள் மீது திணிக்கிறோம்? பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நாட்டை உடைக்க முயல்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகிறார்கள். ஆம், இந்து, முஸ்லிம் என இரு தரப்பிலும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்," என்றார்.   தேர்தல் ஆணையம் 'மௌனம்' காப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ``விஷமத்தனமான கருத்துகளை” உள்ளடக்கிய தேர்தல் பிரசாரங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆளும் பாஜக தலைவர்கள் மீது காட்டும் கடுமையை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் காட்டுவதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னர், பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் இந்து மத சின்னங்களைப் பயன்படுத்தியதற்காக தேர்தல் ஆணையம் பாஜக மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையம் ஒரு "பாகுபாடான நடுவர்" போல் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பிரதமரின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிபிசியிடம் பேசுகையில், "சாதி, மதம், சமூகம் குறித்த கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் கூறுகையில், ``கடந்த காலங்களில் சர்ச்சையான பிரசார உரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமை காட்டியிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.,’ என்றார். தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரி நடத்தை விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தின்போது மத சின்னங்களை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது. மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடாது. தேர்தல் நடத்தை நெறிகளின்படி, எந்தவொரு மத அல்லது இன சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைக் காரணம் காட்டி, பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசாரப் பேச்சுக்கான நோட்டீஸ் பிரதமருக்கு அனுப்பப்படாமல், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பப்பட்டது கேள்விகளின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இதேபோன்று, ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இப்படி நடப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் , “பிரதமரின் தரக்குறைவான கருத்துகளால் சாமானிய மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. சமமாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியின் கருத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்? தேர்தல் ஆணையத்திற்கு இது அவசியமா? பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை விதித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது,” என்று குறிப்பிட்டார்.   அழுத்தமான பேச்சுகளுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசார உரை, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பாகப் பேசப்பட்டது. வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோதி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோதியே மயானம் மற்றும் சுடுகாடு பற்றிக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார். ``கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்னையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார். மேலும் பேசிய அவர், ``தேர்தலுக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது, பாஜக கட்சியினர் மத்தியில், இது ஹிட்-விக்கெட் (hit-wicket) என்று ஒருதரப்பும் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று மற்றொரு தரப்பும் நம்பியது. இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்தது.” பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,அரவிந்த் கெஜ்ரிவால் கேஜ்ரிவாலின் கைது பாஜகவின் அதீத நம்பிக்கையின் விளைவு என்று அவர் கருதுகிறார். ``ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவின் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் கட்சிகள் உடைந்ததால் பலர் பாஜகவில் இருந்து விலகிச் சென்றனர்,’’ என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தியை தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோதி, அதானி மற்றும் அம்பானி பற்றிக் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பேசிய நூருதீன் ``பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் என நம்பப்படும் நபர்களை பிரசாரத்தில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் நம்பும்படி இல்லை,” என்கிறார். மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதி தேர்தலில் தானும் தனது கட்சியும் சிறப்பாகச் செயல்படுவதாக நம்புகிறார். அவர் தனது முக்கிய ஆதரவாளர்களைத் தாண்டி மேலும் பலரை கட்சியில் இணைக்க முயல்கிறார்.” " இது புத்திசாலித்தனமான கொள்கை அல்ல. கட்சியில் மக்களைs சேர்க்க விரும்பினால், அவர்கள் முஸ்லிம் வாக்காளர்களை நல்ல முறையில் அணுக வேண்டும், சுதந்திர எண்ணம் கொண்ட வாக்காளர்களிடம் பேச வேண்டும், பாஜகவை சார்ந்த வாக்காளர்களை அணுக வேண்டும். நீங்கள் அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறீர்கள் என்றால், பயன்படுத்தும் கடுமையான மொழியைத் தவிர்ப்பது நல்லது. தற்போதைய பிரசார பாணி துரதிர்ஷ்டவசமானது,” என்று மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். பாஜகவின் கொள்கைகளை ஆதரிப்பவரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகையில், "பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் அல்ல, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது." ” பிரிவினை ஏற்படுத்தும் செயல்கள் செய்தது காங்கிரஸ்தான் என்று பிரதமர் மோதி தொடர்ந்து கூறி வருகிறார், இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இதைப் பார்த்து நாடும், சமுதாயமும் உஷாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நம்மை எச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் இருக்கிறார்." "மேலும், நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது வரலாற்று ரீதியாக உண்மை கிடையாது,” என்றார். விமர்சகர்களின் கருத்துப்படி, மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது என்கின்றனர்.   அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இதை எப்படிப் பார்க்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் செய்திகள் நல்ல தொணியில் இல்லை. இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் இந்த விவகாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.” ``செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு எந்தப் பதிவாக இருந்தாலும், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நிலை சரியில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்கிறார். பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், "தற்போது உலகின் கவனம் இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்மறை அம்சங்களை நோக்கியே உள்ளது. நிஜ்ஜார் கொலை வழக்கில் வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கை மற்றும் இந்திய உளவாளிகள் என்று குறிப்பிட்டு ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தி அறிக்கை ஆகியவை இதற்கு சான்று’’ என்று சுட்டிக்காட்டுகிறார். நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா மறுத்து வருகிறது. பேராசிரியர் நூருதீன் மேலும் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூ ரிசர்ச் நடத்திய ஆய்வறிக்கையின்படி ஐரோப்பாவில் காலப்போக்கில் இந்தியா மீதான எதிர்மறை எண்ணம் அதிகரித்துள்ளது,” என்றார். மைக்கேல் குகல்மேன் கூறுகையில், "பிரதமராக நரேந்திர மோதியின் பேச்சுகளையும், தேர்தல் பிரசாரங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், பாஜகவின் கொள்கைகள் குறித்து பல முஸ்லிம்கள் கவலைப்பட்டாலும், பிரதமர் மோதியின் ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா உடனான மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகள் வலுப்பெற்றுள்ளதால் இந்திய நிலைமைகள் பற்றி அவை எதுவும் கூறாது, இது தவிர ஏராளமான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்,” என்றார். மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, ”பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர, வேறு எந்த நாட்டின் தலைவரும் தேர்தல் பிரசாரங்களைக் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெளிநாட்டு மண்ணில் நிஜார் படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வரும்போது இந்த நிலைமை மாறுகிறது." "இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 'வெறுக்கத்தக்க பேச்சு' என்றே சொல்லத் தோன்றுகிறது” என்றும் அவர் கூறுகிறார்.   குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜக தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். வலதுசாரி சர்வதேச விவகாரங்களின் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா கருத்துப்படி, இந்தியாவை பற்றி சர்வதேச நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை.” அவர்கள் முதலில் அவர்கள் பிரச்னைகளைப் பார்க்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் ஸ்வீடன், பிரான்ஸில் போராட்டங்கள் நடத்தினர், பாரிஸிலும் தாக்குதல் நடந்தது, லண்டனில் வெடிகுண்டு தாக்குதல்கள், மாஸ்கோ தியேட்டர்களில் ஐ.எஸ் தாக்குதலில் மக்கள் இறந்தது எனப் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் மற்றும் ஸ்பானியர்களுக்கு செய்யப்படும் பாகுபாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதலில் சரி செய்ய வேண்டும்,” என்றார். பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், "பிரதமருக்கு முன் கேள்விகள் வரும்போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, காங்கிரஸ் இளவரசர் ராகுல் பையா தனது கருத்தைத் தெரிவிக்கும்போது, மோதியை தாக்கும்போது, மோதிஜி உங்கள் கருத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்." சமீபத்தில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோதி, முஸ்லிம்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "சுயபரிசோதனை செய்து, சிந்தித்துப் பாருங்கள், நாடு முன்னேறி வருகிறது. குறை என்று உங்கள் சமூகத்தில் உணரப்பட்டால், அது காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு செய்த செயல்பாடுகளின் விளைவுதான்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c72pg37gvngo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.