Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 378
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இலங்கையில் ஆறு மாதங்கள்    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி ந

மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

மெசொபொத்தேமியா சுமேரியர்

பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

சா.....அன்ரியின் கதையில்தான் உங்களின் ஓவியமும் கற்பனையும் சிறகடித்துப் பறக்கிறது கவி........சூப்பர் .......!  💐

2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆

வேலை செய்திட்டு பார்த்திருப்பவர்களுக்கு இன்று பானும் சம்பலும்தான்......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

அந்த றேஞ்சில தான் தண்டவாளத்தில போய் இருக்கிறா போலும்...அவ்வைசண்முகி புறம் யூகே.😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2023 at 08:31, ஏராளன் said:

புழுதி பறந்தது என்று சொன்னது நீங்கள் விழுந்ததையா? இங்க ஒழுங்கையளுக்கையே 50-60ல போறாங்கள். குழந்தையள் உள்ள வீட்டுச் சனம் படலையை பூட்டி வைச்சிருக்கினம்.

😂😂

On 5/5/2023 at 09:36, suvy said:

"சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும்"  வேலையாட்களுக்கு சாப்பாடு போய் சேர்ந்திச்சுதா இல்லையா......!  😁

"முயற்சி திருவினையாக்கும்" தொடருங்கோ......!

சேர்க்காமல் விடுவமா ???

23 hours ago, யாயினி said:

தண்டவாளத்தில புழுதி கிளப்பியாச்சு...சும்மா பகிடியாக எழுத அக்கா உண்மையாவே செய்துட்டா............✍️.🤭

😃😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2023 at 15:29, Sabesh said:

இவ்வளவு சோதனையா... அங்கு போக முதல் ஓடுவது என்று போய், அங்கை நிலைமையை பார்த்து விட்டு ஒரு போதும் ஓடியதில்லை. நல்ல வேளை ஐந்து இலட்ச்சத்துக்கு அவ்வளவு சேதம் இல்லை.

அந்த ஸ்கூட்டி பாரம் என்றபடியால்தான் கனதூரம் போய் சேதப்படாமல் கீறலுடன் நின்றுவிட்டது. நான் இப்பதான் ஏன் உவவளவு பணத்தை அதில் முடக்கினேன் என்று கவலைப்படுறன். ஆனாலும் வாங்காது இருந்திருந்தாலும் வாங்கி ஓடியிருக்கலாம் என்று மனம் அலைபாய்ந்திருக்கும். 

14 hours ago, Kavi arunasalam said:

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

என் பயணக் கட்டுரைக்கு அழகுசேர்ப்பதே உங்கள் ஓவியங்கள் தான். மிக்கநன்றி அண்ணா.

13 hours ago, நந்தன் said:

அப்ப ஸ்கூட்டிக்கு மாலை போட்டிருவமா😪

மாலை போடாமலே இத்தனை நாள் ஓடினது. குடுத்த விலைக்கு அசரவில்லை அது. 

13 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆

உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுமை இல்லை 😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஸ்கூட்டி பாரம் என்றபடியால்தான் கனதூரம் போய் சேதப்படாமல் கீறலுடன் நின்றுவிட்டது. நான் இப்பதான் ஏன் உவவளவு பணத்தை அதில் முடக்கினேன் என்று கவலைப்படுறன். ஆனாலும் வாங்காது இருந்திருந்தாலும் வாங்கி ஓடியிருக்கலாம் என்று மனம் அலைபாய்ந்திருக்கும். 

அக்கா உங்கள் தேவைக்கு நீங்களே மோட்டார் சைக்கிள் ஓடுவது நேரம் மிச்சம், காசும் மிச்சம், இன்னொருவருக்கு கடமைப்பட தேவையில்லை.

7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என பயனாக கட்டுரைக்கு அழகுசேர்ப்பதே உங்கள் ஓவியங்கள் தான். மிக்கநன்றி அண்ணா.

என் பயணக் கட்டுரை தானே?! திருத்தி விடுங்கோ அக்கா.
 

Link to comment
Share on other sites

கட்டுரைக்கு நன்றி அக்கா.

நேரமின்மையால் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை. மேலோட்டமாகத்தான் வாசித்தேன். ஆறுதலாக வாசிக்க வேண்டும்.

நீங்கள் 6 மாதம் நின்றுள்ளீர்கள், நான் 6 நாட்கள். உங்கள் அனுபவங்கள் என்போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுமை இல்லை 😀

நீங்கள் நத்தை வேகத்தில் வந்தால்...🐌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அக்கா உங்கள் தேவைக்கு நீங்களே மோட்டார் சைக்கிள் ஓடுவது நேரம் மிச்சம், காசும் மிச்சம், இன்னொருவருக்கு கடமைப்பட தேவையில்லை.

என் பயணக் கட்டுரை தானே?! திருத்தி விடுங்கோ அக்கா.
 

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

1 minute ago, யாயினி said:

நீங்கள் நத்தை வேகத்தில் வந்தால்...🐌

ம்க்கும்

20 minutes ago, இணையவன் said:

கட்டுரைக்கு நன்றி அக்கா.

நேரமின்மையால் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை. மேலோட்டமாகத்தான் வாசித்தேன். ஆறுதலாக வாசிக்க வேண்டும்.

நீங்கள் 6 மாதம் நின்றுள்ளீர்கள், நான் 6 நாட்கள். உங்கள் அனுபவங்கள் என்போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

 

 பட்ஜெட் அனுமதித்தால்.  அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க  தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2023 at 09:09, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன.

 

சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. 

இவ்வளவு ரகளைகள் நடந்திருக்கா? :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 பட்ஜெட் அனுமதித்தால்.  அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க  தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.  

என்னாது ஆட்டோவோ??????? 

நான் சொந்த பிளைட் வாங்கிறன்..
அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்....
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..:cool:

Neelambari Ramya Krishnan Ramyakrishnan GIF - Neelambari Ramya Krishnan  Ramyakrishnan Ramya - Discover & Share GIFs

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

அது சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

 

 பட்ஜெட் அனுமதித்தால்.  அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க  தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.  

May be an image of car and text that says 'VENUE Hyundai Venue LKR 1,253,000 View Details'

May be an image of scooter, golf cart, segway and text that says 'Bajaj RE Bajaj RE is the leading and basic model for the three-wheele three- highly compact, easy to parkand and maneuver on any terrain, whilst carrying three passengers and. Price LKR 931,200.00 po Request Quotation'

 

சின்னக் காரே வாங்கி ஓடலாம். அதுதான் அதிக பாதுகாப்பு.

13 hours ago, குமாரசாமி said:

என்னாது ஆட்டோவோ??????? 

நான் சொந்த பிளைட் வாங்கிறன்..
அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்....
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..:cool:

சொந்த பிளைட் வாங்கிற வசதி இருந்தால் பிறகேன் ஒரு இடத்தில போய் இருக்கவேணும் ????😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டு 

 

ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன். 

 

அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன்.  எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும்.  தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது. 

 

ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு. 

 

அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார். 

 

நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா. 

 

அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல்  மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார். 

 

அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. 

 

என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. 

 

நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். 

 

அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது. 

 

அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க,  அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச்  சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன்.  

 

அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்.  

 

மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. 

 

மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை.  கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு  போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். 

 

அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர்  இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும்.  நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. 

 

உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என்  பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன்.

 

நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து  தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார்.

 

அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். 

 

நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது.  போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள்  கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. 

 

அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். 

 

அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.      







 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@மெசொபொத்தேமியா சுமேரியர்

 பல விடயங்களை நேரம் எடுத்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்.

ஊர்வலம் சென்றது போல் இருக்கின்றது.
தொடருங்கள். வாசிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகத் தமிழர்கள் தான் வேலையில் விளையாட்டில் காட்டுவார்கள் என்றால், சிங்களவர்கள் படு சோம்பேறிகள் போல கிடக்குது..! எல்லோராலும் காசு கொடுக்க முடியாது தானே..! சனம் மிகவும் கஷ்டப் படுகுது போல கிடக்கு..!ஆபிரிக்க நாடுகளில் கூட, ஆஸ்பத்திரிகள் இவ்வளவு மோசமில்லையே..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் உங்களுடன்  பக்கத்தில் இருந்து கேட்பதுபோல இருக்கிறது . தொடருங்கள் உங்களனுபவம் பலருக்கு அனுபவ பாடமாக  இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா எழுதும் விடையஙகளைப் பார்க்கும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருக்கா ஊர் போய் வர வேணும் என்ற எண்ணமே இல்லாது போய் விடுகிறது..பொதுவாக மல சல; கூட வசதிகள் அற்ற இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்படும் இடையுறுகளை நினைக்கும் போது ஏன் வீணாக சிரமப்படுவான் என்று தோணுது..பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு கண்டத்தில் இருந்து மீண்டு விட்டீர்கள்......அந்த நிலைமையிலும் வேலையாட்களுக்கு சாப்பாடு அனுப்பி வைத்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பதினெட்டு 

 

ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன். 

 

அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன்.  எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும்.  தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது. 

 

ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு. 

 

அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார். 

 

நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா. 

 

அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல்  மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார். 

 

அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. 

 

என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. 

 

நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். 

 

அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது. 

 

அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க,  அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச்  சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன்.  

 

அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்.  

 

மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. 

 

மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை.  கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு  போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். 

 

அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர்  இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும்.  நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. 

 

உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என்  பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன்.

 

நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து  தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார்.

 

அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். 

 

நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது.  போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள்  கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. 

 

அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். 

 

அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.      

அரச மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் காத்திருப்பு, அலைக்கழிப்பு, நேரமுகாமைத்துவம் இன்மை என பல குறைபாடுகள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் அவற்றையே நாடுகின்றனர்.
இப்ப வசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளையே நாடுகின்றனர். அங்கே சிறந்த வைத்திய நிபுணர்களை இலகுவில் சந்தித்து வைத்தியம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

FA7485-E2-C940-4-BCD-82-BA-B34-EB49-C36-

பத்து கே பார்வையாளர்களை தொட்டதும் கால் வழைந்துட்டு ..😆👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

 பல விடயங்களை நேரம் எடுத்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்.

ஊர்வலம் சென்றது போல் இருக்கின்றது.
தொடருங்கள். வாசிக்கின்றோம்.

நான் எழுதிக் களைத்துவிட்டேன். இன்னும் ஓரிரு பகுதிகளுடன் நிறுத்தப்போகிறேன்.

13 hours ago, புங்கையூரன் said:

பொதுவாகத் தமிழர்கள் தான் வேலையில் விளையாட்டில் காட்டுவார்கள் என்றால், சிங்களவர்கள் படு சோம்பேறிகள் போல கிடக்குது..! எல்லோராலும் காசு கொடுக்க முடியாது தானே..! சனம் மிகவும் கஷ்டப் படுகுது போல கிடக்கு..!ஆபிரிக்க நாடுகளில் கூட, ஆஸ்பத்திரிகள் இவ்வளவு மோசமில்லையே..!

என்னையே இவர்கள் இந்த ஆடு ஆட்டுகிறார்கள் என்றால் கொஞ்சம் வாய் பேசத் தெரியாத சனங்களை என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். தமிழர் வாழும் பகுதிகளில் தமிள வைத்தியர் இல்லை என்றால் எப்படி சரியான சிகிச்சை கொடுக்கமுடியும் என்று கேட்டதற்கு உங்கள் ஆட்கள் எல்லாம் நல்ல சம்பளம் வேண்டும் என்று வெளிநாடு போனால் வேறு யாரை அனுப்பமுடியும் என்றார் ஒருவர்.

12 hours ago, நிலாமதி said:

நாங்களும் உங்களுடன்  பக்கத்தில் இருந்து கேட்பதுபோல இருக்கிறது . தொடருங்கள் உங்களனுபவம் பலருக்கு அனுபவ பாடமாக  இருக்கும். 

நன்றி அக்கா

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, யாயினி said:

அக்கா எழுதும் விடையஙகளைப் பார்க்கும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருக்கா ஊர் போய் வர வேணும் என்ற எண்ணமே இல்லாது போய் விடுகிறது..பொதுவாக மல சல; கூட வசதிகள் அற்ற இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்படும் இடையுறுகளை நினைக்கும் போது ஏன் வீணாக சிரமப்படுவான் என்று தோணுது..பார்க்கலாம்.

எனக்கு ஏற்பட்டதுதான் உங்களுக்கும் என்று இல்லை. யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் இல் மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். நான் எங்காவது செல்லும்போது டாய்லெட் டிசு கொண்டுதான் திரிந்தேன். என் எழுத்தைப் பார்த்துப் போகாது விடாமல் நீக்கள் போய் உங்கள் அனுபவங்களையும் இங்கு வந்து எழுதுங்கள்.

8 hours ago, Kavi arunasalam said:

FA7485-E2-C940-4-BCD-82-BA-B34-EB49-C36-

இந்தப் படம் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அண்ணா. நன்றி

6 hours ago, ஏராளன் said:

அரச மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் காத்திருப்பு, அலைக்கழிப்பு, நேரமுகாமைத்துவம் இன்மை என பல குறைபாடுகள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் அவற்றையே நாடுகின்றனர்.
இப்ப வசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளையே நாடுகின்றனர். அங்கே சிறந்த வைத்திய நிபுணர்களை இலகுவில் சந்தித்து வைத்தியம் செய்யலாம்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் அன்றுதொட்டு வறுமை. ஆனாலும் அவர்கள் கூட தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். வீண் பண விரயம் தானே என்றதற்கு காசு போனாலும் கெதியாப் பாத்துப்போடுவினை என்றார். அவருக்கு சித்தி மாதாமாதம் 3000 ரூபாய்கள் கொடுக்கிறார். 

7 hours ago, suvy said:

ஏதோ ஒரு கண்டத்தில் இருந்து மீண்டு விட்டீர்கள்......அந்த நிலைமையிலும் வேலையாட்களுக்கு சாப்பாடு அனுப்பி வைத்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.......!  😁 

உண்மைதான் அண்ணா விழுந்த விழுகைக்கு நடக்கவே முடியாமல் இருக்கப்போகிறேன் என்றுதான் எண்ணினேன். கடவுள்தான் காத்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது பக்கத்திலும்(பொதுமக்கள் தரப்பில்) யுத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை சமாதானத்திற்குக்/பேச்சுவார்த்தைக்குக் கொடுக்கவில்லை எனத் தோன்றுகிறது.  2005 பேச்சுவார்த்தை முறிவடைந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்திற்கு முன்னுரிமை கொடுக்கும்படி இருபகுதிப்  பொதுமக்களும் போராடியிருந்தால் நாட்டின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.  🥲😥😥
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 10:59 AM   தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின்  இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பிரிட்டன் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரமான வெளிப்படையான ஜனநாயக சமூகத்தில் மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடமுடியாது சுதந்திரமான நியாயமான ஜனநாயகத்தில் நீங்க்ள இதனை செய்யவேண்டும் என கொல்பேர்ன் தெரிவித்துள்ளார். ஓவ்வொருவருடமும் நாங்கள் இதனை கேள்விப்படுகின்றோம் நினைவேந்தல் குழப்ப்படுவது குறித்த கதைகளை கேட்கின்றோம் மக்கள் காரணமில்லாமல் கைதுசெய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இதனை நிறுத்தவேண்டும் என்ற வலுவான செய்தியை பிரிட்டன் தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2009 இல் இடம்பெற்ற சம்பவங்களை இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்வதற்கான தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதற்கான முயற்சிகளில்  தானும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். tamil guardian https://www.virakesari.lk/article/183220
    • கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்   11 MAY, 2024 | 06:56 PM   கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.  வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர். இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.  https://www.virakesari.lk/article/183271
    • 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில்  இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 03.00 மணி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் நினைவேந்தல் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி நடைபெறும் குருதிக்கொடையில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/blood-donation-jaffna-uni-mullivaikal-memorial-1715440182
    • இரானில் இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராளியை பூட்டிய வேனுக்குள் காவல்படை என்ன செய்தது? பிபிசி புலனாய்வு பட மூலாதாரம்,ATASH SHAKARAMI படக்குறிப்பு,இரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் போது நிக்கா காணாமல் போன போது அவருக்கு வயது 16. கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ட்ரம் ஹில், ஐடா மில்லர் & மைக்கேல் சிம்கின் பதவி, பிபிசி ஐ இன்வஸ்டிகேஷன்ஸ் 11 மே 2024, 13:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இரானின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் மூன்று ஆண்களால் பதின்பருவ பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் இரான் பாதுகாப்புப் படையினரால் எழுதப்பட்டதாகக் கசிந்த ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 இல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது காணாமல் போன 16 வயது பெண் நிக்கா ஷகராமிக்கு என்ன நடந்தது என்பது இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நிக்கா தற்கொலை செய்து கொண்டதாக அரசாங்கம் கூறியது. இந்த ஆவண அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை குறித்து இரானின் அரசாங்கம் மற்றும் அதன் புரட்சிகர காவல் படையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. "மிகவும் ரகசியமானது" எனக் குறிப்பிடப்பட்ட இந்த ஆவண அறிக்கையில் நிக்கா ஷகராமி வழக்கில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) மேற்கொண்ட விசாரணை குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நிக்காவை கொன்றவர்களின் பெயர்களும் உண்மையை மறைக்க முயன்ற மூத்த தளபதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அன்று என்ன நடந்தது, நிக்கா எப்படி கொல்லப்பட்டார் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்ட தகவல்கள் மனதை உலுக்குகிறது. போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் நிக்காவை தடுத்து நிறுத்தி, ரகசிய வேனுக்கு இழுத்துச் சென்றனர். காவலர்களில் ஒருவர் நிக்காவை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார். நிக்காவுக்கு கைவிலங்கிடப்பட்டு இருந்தாலும், காவலர்களுக்கு எதிராக கால்களை உதைத்தும் கூச்சலிட்டும் தன் எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை எதிர்த்துப் போராடியதால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் நிக்காவை தடியால் அடித்துள்ளனர். நிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்து துன்புறுத்தினோம் என காவலர்கள் விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் நம்பகத்தன்மை உடையதா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. காரணம், ஏராளமான போலியான இரானிய ஆவணங்கள் புழக்கத்தில் உள்ளன. எனவே பிபிசி, இந்த ஆவணத்தில் இருக்கும் தகவல்களை, பல ஆதாரங்களை ஒப்பிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் பல மாதங்கள் சரிபார்த்தது. எங்கள் விரிவான விசாரணைகளுக்குப் பிறகு எங்கள் கைக்குக் கிடைத்துள்ள இந்த ஆவணங்கள் பதின்பருவ பெண் நிக்காவுக்கு நடந்தவற்றை விவரிக்கின்றன என்பதை உறுதி செய்தோம்.   நிக்காவை கண்காணித்த பாதுகாப்புப் படை பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,நிக்கா தனது சகோதரி ஐடா உடன் இருந்த புகைப்படம். நிக்கா ஷகராமி காணாமல் போனது முதல் மரணித்த தகவல் வரை பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அவரது புகைப்படம் இரானில் சுதந்திரத்திற்காக பெண்கள் நடத்திய போராட்டத்தின் முகமாக மாறியது. 2022 இல் இலையுதிர் காலத்தில் இரான் முழுவதும் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். ”கட்டாய ஹிஜாப்” தொடர்பான கடுமையான விதிகளால் கோபமடைந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். `பெண், வாழ்க்கை, சுதந்திரம்’ என்ற இயக்கம் சில நாட்களுக்கு முன்பு 22 வயது பெண் மாசா அமினியின் மரணத்தால் வெகுண்டெழுந்தது. 'மாசா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி, போலீஸ் காவலில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.’ என்று ஐ.நா உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. நிக்காவின் வழக்கில், போராட்டத்திலிருந்து காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது உடல் சவக்கிடங்கில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், இரான் அதிகாரிகள் நிக்காவின் மரணம் போராட்டத்தின் போது ஏற்பட்டது என்று கூறி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்தனர். செப்டம்பர் 20 அன்று மாலை, நிக்கா காணாமல் போவதற்கு சற்று முன்பு, மத்திய தெஹ்ரானில் உள்ள லாலே பூங்காவிற்கு அருகில், குப்பைத்தொட்டி பக்கத்தில் நின்றபடி ஹிஜாப்களுக்கு தீ வைத்துப் போராட்டம் நடத்தியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரைச் சுற்றியிருந்த மற்றவர்கள் இரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி-யைக் குறிப்பிட்டு "சர்வாதிகாரி ஒழிக" என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில் நிக்கா தான் கண்காணிக்கப்படுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. போராட்டம் தொடங்கியதில் இருந்தே பாதுகாப்புப் படையினர் நிக்காவை கண்காணித்ததாக ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது.   அறிக்கையில் இருப்பது என்ன? இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைமைத் தளபதியின் கூற்றுப்படி, போராட்டத்தை பல ரகசிய பாதுகாப்புப் பிரிவுகள் கண்காணித்தன. அந்த குழுக்களுடனான விரிவான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஆவணத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரகசிய பாதுகாப்பு குழுக்களில் ஒன்றுதான் டீம் 12. நிக்காவின் வழக்கத்திற்கு மாறான நடத்தை, அவரது மொபைல் ஃபோனுக்கு திரும்பத் திரும்ப வந்த அழைப்புகள் என அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, `இந்த பதின்வயது பெண் தான் போராட்டத்தைத் தலைமை தாங்குகிறார்’ என பாதுகாப்புப் படை எண்ணியது. நிக்கா உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களில் ஒருவரா என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவரை போராட்டக் களத்துக்குள் அனுப்பி, போராளியாக நடிக்க வைத்தனர். பின்னர், அறிக்கையின்படி, அந்த காவலர் அவரை கைது செய்ய தனது குழுவை அழைத்தார். ஆனால் நிக்கா அந்த சமயத்தில் தப்பி விட்டார். பாதுகாப்புப் படையினரால் தான் துரத்தப்படுவதாக நிக்கா அன்றிரவு தனது நண்பருக்கு அலைபேசியில் தெரிவித்ததாக அவரது அத்தை பிபிசி பாரசீகத்திடம் கூறியிருந்தார். ஒரு மணிநேர தீவிரத் தேடுதல் பணிக்கு பின்னர், நிக்காவை அவர்கள் கைது செய்ததாக அறிக்கை கூறுகிறது. அவர் அக்குழுவின் ஃப்ரீசர் பொருந்திய ஒரு வாகனத்துக்குள் அடைக்கப்பட்டார். வாகனத்துக்கு முன்புறம் ஓட்டுநருடன் ”டீம் 12” குழுவின் தலைவர் மோர்டேசா ஜலீல் அமர்ந்து கொண்டார். அராஷ் கல்ஹோர், சதேக் மொன்ஜாசி மற்றும் பெஹ்ரூஸ் சதேகி ஆகிய அக்குழுவின் காவலாளிகள் மூன்று பேருடன் நிக்கா வாகனத்தின் பின்பகுதியில் இருந்தார். ”டீம் 12” குழு நிக்காவை எங்கு அழைத்துச் செல்வது என்று தெரியாமல் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு தற்காலிக போலீஸ் முகாமில் விட முயற்சித்தார்கள். ஆனால் அங்கு போராளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனவே அவர்கள் 35 நிமிட பயண தூரத்தில் உள்ள போராட்ட தடுப்பு மையத்திற்குத் கொண்டு செல்ல திட்டமிட்டனர், அந்த தடுப்பு நிலைய தளபதி ஆரம்பத்தில் நிக்காவை அனுமதிக்க ஒப்புக்கொண்டாலும் பின்னர் மறுத்துவிட்டார். அந்த தளபதி புலனாய்வு விசாரணையின் போது கூறிய தகவல்களாக அறிக்கையில் , `நிக்கா என்ற பெண் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டார். தடுப்பு நிலையத்தில் ஏற்கனவே பல பெண் போராளிகளை பிடித்து வைத்திருக்கிறோம். நிக்கா இங்கு அழைத்து வரப்பட்டால் போராளிகளை தூண்டி, கோஷமிட வைப்பார், எனவே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.   ’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’ பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை - கோப்புப்படம் தலைவர் மோர்டேசா ஜலீல் மீண்டும் தனது IRGC தலைமையகத்தை ஆலோசனைக்காக தொடர்பு கொண்டதாக அறிக்கை கூறுகிறது. நிக்காவை தெஹ்ரானின் மோசமான எவின் சிறைச்சாலைக்கு அனுப்புமாறு உத்தரவு கிடைத்துள்ளது. அங்கு பயணிக்கும் சமயத்தில், வழியில், வாகனத்தின் இருண்ட பின்புறப் பெட்டியிலிருந்து சத்தம் கேட்கத் தொடங்கியது என்கிறார் மோர்டேசா. அவர் கேட்ட சத்தம் எதனால் வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நிக்காவைக் காவலில் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து ஆவணம் செய்யப்பட்ட தகவல்கள் வாயிலாக அங்கு நடந்தது விவரிக்கப்பட்டது. மூவரில் ஒருவரான பெஹ்ரூஸ் சதேகி விசாரணையில் கொடுத்த தகவலின்படி, “தடுப்பு மையத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன், நிக்கா திட்டவும் கத்தவும் தொடங்கினார். அராஷ் கல்ஹோர் தன் காலுறைகளால் அவளது வாயை அடைத்தார், ஆனால் அவர் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். பிறகு சதேக் [மோன்ஜாசி] அவரை வாகனத்தில் இருந்த ஃப்ரீஸர் பெட்டி மீது கிடத்தி, அவர் மீது ஏறி அமர்ந்தார். நிக்கா அமைதியானார்" என்று அவர் புலனாய்வாளர்களிடம் கூறினார். "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் திட்ட ஆரம்பித்தார், அங்கு இருட்டாக இருந்ததால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை, எனக்கு தாக்கிக் கொள்ளும் சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது." என்றார். அதன் பின்னர் அராஷ் கல்ஹோர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. படக்குறிப்பு,இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து) அராஷ் கல்ஹோர் ”எனது ஃபோன் டார்ச்சை ஆன் செய்து பார்த்த போது, சதேக் மொன்ஜாசி ’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’. அதன் பிறகு நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம்” என்று விவரித்தார். "அதன் பின்னர் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை... ஆனால் நிக்காவை தாக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் கைகளால் அடிக்கவும், கால்களால் உதைக்கவும் தொடங்கினேன், நான் எங்கள் குழுவினரைத் தாக்குகிறேனா அல்லது நிக்காவை தாக்குகிறேனா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது.” என்றார். ஆனால் அராஷ் கல்ஹோரின் கூற்றுக்கு சதேக் மோன்ஜாசி முரண்பட்டார். “தொழில்முறை பொறாமையால் அவர் அப்படி சொல்கிறார். நிக்கா கால்சட்டைக்குள் நான் கை வைக்கவில்லை.” என்றார். ஆனால் நிக்கா மீது அமர்ந்து அவரின் பின்புறத்தை தொட்டபோது அவர் "பாலியல் உணர்வு" அடைந்ததை மறுக்க முடியாது என்று புலனாய்வு விசாரணையில் ஒப்புக்கொண்டார். நிக்கா எரிச்சல் ஆகி, அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த போதிலும் - தன் மீது அமர்ந்திருந்த காவலாளியை நகங்களால் கீறியிருக்கிறார். தன் உடலை உலுக்கி காவலாளியை கீழே விழ செய்திருக்கிறார்.   படக்குறிப்பு,இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து) நிக்காவுக்கு நடந்தது என்ன? "நிக்கா என் முகத்தின் மீது எட்டி உதைத்தார், அதனால் நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது." என்று சதேக் மோன்ஜாசி கூறியுள்ளார். வாகனத்தின் கேபினில் இருந்து, மோர்டேசா ஜலீல் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார். வாகனத்தை நிறுத்தி பின்பக்கக் கதவை திறந்து பார்த்த போது, நிக்காவின் உயிரற்ற உடல் கிடந்தது. அவரின் முகம் மற்றும் தலையில் இருந்து ரத்தத்தை சுத்தம் செய்ததாக மோர்டேசா கூறினார். நிக்காவின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நிக்காவின் தாய் தனது மகளை சவக்கிடங்கில் பார்த்தபோது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக சொன்னதும் மோர்டேசா சொன்னதும் ஒத்துப் போகிறது. மேலும் நிக்காவின் இறப்புச் சான்றிதழ் - அக்டோபர் 2022 இல் பிபிசி பெர்சியனால் பெறப்பட்டது - அதில் "கடினமான பொருளால் தாக்கப்பட்ட பல காயங்கள்" அவர் உடலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ”டீம் 12” தலைவர் மோர்டேசா ஜலீல், ”வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை நடத்த முயற்சிக்கவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். "நான் நிக்காவின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன், யாரிடமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் கேட்டது ஒரே கேள்வி தான் . `அவள் மூச்சுவிடுகிறாளா’ என்றேன், அதற்கு 'இல்லை, அவள் இறந்துவிட்டாள்' என்று பெஹ்ரூஸ் சதேகி பதிலளித்தார் என்று நினைக்கிறேன்." என மோர்டேசா ஜலீல் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சடலத்துடன், ஜலீல் மூன்றாவது முறையாக IRGC இன் தலைமையகத்தை அழைத்தார். இம்முறை, "நயீம் 16" என்ற குறியீட்டுப் பெயருடன் கூடிய மூத்த அதிகாரியிடம் பேசினார். நயீம் 16 விசாரணையில், "எங்கள் நிலையங்களில் ஏற்கனவே இறப்புகள் ஏற்பட்டிருந்தன, மேலும் அந்த இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயருவதை நான் விரும்பவில்லை. எனவே இங்கு நிக்காவின் சடலத்தைக் கொண்டு வர நான் ஒப்புக் கொள்ளவில்லை” என்றார். அவர் ஜலீலிடம் "அந்த சடலத்தை தெருவில் தூக்கி எறிந்து விடுங்கள்" என்று கூறியிருக்கிறார். தெஹ்ரானின் யாதேகர்-இ-எமாம் நெடுஞ்சாலையின் கீழ் ஒரு அமைதியான தெருவில் நிக்காவின் உடலை விட்டுச் சென்றதாக ஜலீல் குறிப்பிட்டிருக்கிறார். `வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதால் அடிதடி சூழல் ஏற்பட்டது. டீம் 12 குழுவின் தாக்குதல்கள் நிகாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது” என்று இந்த விசாரணை முடிவில் கூறப்பட்டுள்ளது. "மூன்று தடிகள் மற்றும் மூன்று டேசர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் எந்த ஆயுதத்தின் அடி அவளை மரணிக்க வைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று அந்த அறிக்கை கூறுகிறது. நிக்காவிற்கு என்ன நடந்தது என்ற அரசாங்கத்தின் கூற்றுடன் இந்த அறிக்கை முரண்படுகிறது. அவரின் இறுதிச் சடங்கிற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவுகளை ஒளிபரப்பியது. நிக்கா ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து இறந்ததாக செய்தி வெளியிட்டது. நிக்கா ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதை போன்ற சிசிடிவி காட்சி அடங்கிய காணொளி செய்தியில் காட்டப்பட்டது, ஆனால் நிக்காவின் தாயார் பிபிசி பெர்ஷியனுக்கு ஒரு தொலைபேசி பேட்டியில் " அந்த நபர் நிக்கா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை" என்று கூறினார். பிபிசி ஆவணப்படத்தில் போராளிகளின் மரணங்கள் குறித்து அதிகாரிகள் கூற்றுகளை பற்றி விவாதிக்கையில் நஸ்ரின் ஷகராமி "அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்," என்று கூறினார்.   சகோதரி கைது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெஸ்பொல்லா அமைப்பு: கோப்புப்படம் பிபிசி ஐ (BBC Eye), இந்த விசாரணை அறிக்கையின் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்தது. சில சமயங்களில், அதிகாரப்பூர்வ இரானிய ஆவணங்கள் மற்றும் இணையத்தில் புழக்கத்தில் உள்ள பிற ஆவணங்கள் கூட போலியானவை என்று கண்டறியப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த போலி ஆவணங்களில் பெரும்பாலானவை எளிதில் பொய்யானது என கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த அறிக்கைகள் அதிகாரப்பூர்வ வடிவமைப்பில் இருந்து வேறுபடுகின்றன - பிழையான தலைப்பு, அல்லது குறிப்பிடத்தக்க இலக்கண அல்லது எழுத்துப் பிழைகளை கொண்டிருக்கின்றன. எங்கள் விசாரணையை மையப்படுத்திய ஆவணத்திலும் இதுபோன்ற சில முரண்பாடுகள் இருந்தன. உதாரணமாக, அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட "நஜா" போலீஸ் படை அந்த காலகட்டத்தில் "ஃபராஜா" என்று அழைக்கப்பட்டது. எனவே, ஆவணத்தின் உண்மைத்தன்மையை மேலும் சோதிக்க, நூற்றுக்கணக்கான முறையான ஆவணங்களை கையாண்ட அனுபவம் மிக்க முன்னாள் இரானிய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தோம். அவர் IRGC நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். இரானில் உள்ள மூத்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ குறியீட்டைப் பயன்படுத்தி - இந்த அறிக்கை உண்மையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கை பற்றியதா என்பதை சரிபார்க்க சொன்னார். அந்த ரகசிய அறிக்கை, 2022 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான 322 பக்க வழக்கு கோப்பின் ஒரு பகுதி என்று அறிக்கையின் எண் காட்டியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 100% உறுதியாக இருக்க முடியாது என்றாலும், இது உண்மையானது என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது. IRGC-ஐ அவர் தனிப்பட்ட முறையில் அணுகியது மற்றொரு மர்மத்தை விலக்கவும் எங்களுக்கு உதவியது. நிக்காவின் உடலைத் தூக்கி எறியுமாறு குழுவிடம் கூறிய அந்த "நயீம் 16" இன் அடையாளம் தெரியவந்தது. அந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றொரு அழைப்பு மேற்கொண்டு நயீம் 16 யாரின் குறியீடு என்பதை கேட்டறிந்தார். இந்த முறை இரானின் இராணுவ அமைப்பில் உள்ள ஒருவருக்கு அழைப்பு விடுத்து. நயீம் 16 ஐஆர்ஜிசியில் பணிபுரியும் கேப்டன் முகமது ஜமானிக்கான அழைப்பு அடையாளம் என்ற தகவலை எங்களுக்கு சொன்னார். நிக்காவின் மரணம் தொடர்பான ஐந்து மணி நேர விசாரணையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராக அந்தப் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையை குறிப்பிட்டு, நாங்கள் ஐஆர்ஜிசி மற்றும் இரான் அரசாங்கத்திடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். அவர்கள் பதிலளிக்கவில்லை. எங்களுக்குத் தெரிந்தவரை, நிக்காவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை, அது ஏன் என்று அந்த ரகசிய ஆவணத்தை பார்த்தாலே யூகிக்க முடியும். விசாரணைக்கு வந்த டீம் 12 குழு உட்பட அனைவரின் பெயர்களும் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் பெயருக்கு அருகே, வலதுபுறம் அவர்கள் சேர்ந்த குழு: "ஹெஸ்பொலா" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரானிய துணை இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவைக் குறிக்கிறது. இது அதேபெயரில் உள்ள லெபனான் குழுவுடன் தொடர்பில்லாதது. அதன் உறுப்பினர்கள் ஐஆர்ஜிசி- ஆல் பயன்படுத்தப்படுகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அதன் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படுகிறார்கள், இதனை அறிக்கை ஒப்புக் கொள்வது போல் தெரிகிறது: "மேற்கண்ட நபர்கள் ஹெஸ்பொலாவின் படைகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேவையான பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதற்கு அப்பால் இந்த வழக்கைப் பின்தொடர்வது சாத்தியமில்லை" என்று அது கூறுகிறது. மறுபுறம், IRGC அதிகாரி நயீம் 16, எழுத்துப்பூர்வமாக கண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் அறிக்கை கூறுகிறது. 551 எதிர்ப்பாளர்கள் இரானின் ’பெண், வாழ்க்கை, சுதந்திர’ இயக்கத்தின் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஐநாவின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் கொடூரமான ஒடுக்குமுறை காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு போராட்டங்கள் தணிந்தன. இரானின் அறநெறிப் படையின் நடவடிக்கைகளில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது, ஆனால் இஸ்லாமிய ஆடைக் குறியீட்டின் மீறல்கள் மீதான புதிய ஒடுக்குமுறை கடந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் நிக்காவின் மூத்த சகோதரி ஐடாவும் ஒருவர். https://www.bbc.com/tamil/articles/c97z9609pv9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.