Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் நான்தான் | தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் நான்தான் | தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி

IMG-20230414-110731.jpg

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி, ஆளுநர்கள் தமிழிசை மற்றும் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். “இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும்கூட. இதற்குப் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு முக்கியமான குறிப்பு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட் 1,100-1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பு போன்றது. இதில் பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சமீபத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை குறிப்பிடும் விதமாக பேசினார்.

தொடர்ந்து, “ஒரு நாடாக, இந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு, ஆனால் இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இப்போது எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை என உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்களை காணலாம். எந்த நாடுகளுக்குச் சென்றாலும், தமிழர்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், தமிழ் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பலமுறை பல சாதனை செய்த தமிழர்களை பற்றி பேசி இருக்கிறேன். ஐ.நா. சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்கு பல படைப்புகளை வழங்கி உள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர், எங்கள் அரசாங்கம் அவர்களுக்காக நிறைய செய்தது. நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கபட்டன. வீட்டில் நுழையும் முன் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கு, அதில் நானும் கலந்துகொண்டேன். அதன் வீடியோக்கள் தமிழ்நாட்டில் வெளியானபோது தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றேன்.

எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற “காசி-தமிழ் சங்கமம்” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. காசிக்கும் தமிழகத்துக்கும் பழமையான வரலாற்று தொடர்புகள் உள்ளன. காசி நகரத்தில் உள்ள எந்தப் படகோட்டியிடம் பேசினாலும், அவருக்கு பல தமிழ் வாக்கியங்கள் தெரியும். காசி தமிழ் சங்கமத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழ் புத்தகங்கள் வாங்கப்பட்டதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தமிழகம் மற்றும் தமிழர்கள் குறித்தும் பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்

https://vanakkamlondon.com/world/srilanka/2023/04/190919/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்

என்ன புரட்சியர்? மோடி ஏதோ சொல்ல வாறாப்போல :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

என்ன புரட்சியர்? மோடி ஏதோ சொல்ல வாறாப்போல :cool:

தமிழகத்தில் இருந்து குறைந்தது பாஜவுக்கென 9 எம்பிமார் வந்தாக வேண்டும் என உத்தரவு போட்டுள்ளாராம்..😊

சில பல சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று..👌

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழகத்தில் இருந்து குறைந்தது பாஜவுக்கென 9 எம்பிமார் வந்தாக வேண்டும் என உத்தரவு போட்டுள்ளாராம்..😊

சில பல சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று..👌

9 என்ன, 9?

39 ஐயும் எடுக்கலாம்.

கொஞ்சம், காசு செலவழிக்க வேணும். திமுக, அதிமுக கொடுப்பதை தடுக்கவேண்டும்.😜

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி யாழ்ப்பாண விஜயம் மேற்கொண்டவர். அத்தருணம் அவர் பிரதமாக இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார்  வந்து போனதா பிரச்சனை? 

நீங்கள் வந்து என்னத்தைக் கிழிச்சனீங்க ? அதச் சொல்லுங்கோ? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வந்ததிற்காக சீனாவுக்கு சிங்களம் கொடுக்கும் பரிசு, இதானல் சிங்களம் சொல்ல வருவது உங்களுக்கு & RAO வுக்கும் புரியுமா😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான்.

ஒரு நாட்டின் பிரதமராக இந்தக் கருத்து, ஏதோ பெரிய சாதனை செய்ததுபோல் காட்டும்முயற்சியாக இருக்கிறது. யாழ்ப்பாணம் சென்றதற்கான உண்மையான வெளிப்பாடாகத் தமிழர்கள் வீடுகளில் தேனும் பாலும் ஓடத்தேவையில்லை. அந்த மக்கள் தமது சொந்தவளவில், ஆக்கிரமிப்புப் படைகளின் அச்சுறுத்தலின்றி இருப்பதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பின் இந்தக் கூற்றுப் பெருமைபெற்றிருக்கும். ஒரு உல்லாசப்பயணியின் பயணம்போல் அமைந்ததேயென்றி தமிழருக்கு ஏதும் நன்மைகள் விளைந்தனவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை அடுத்த இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணத்தொகுதியில் களமிறங்க யோசித்து சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் நான்தான் | தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி

யாழ்ப்பாணம் வந்தும் நல்லூருக்கு போகாமல் போனதும் நீங்க தானே.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழ்ப்பாணம் வந்தும் நல்லூருக்கு போகாமல் போனதும் நீங்க தானே.

நெஞ்சில் இந்த மனுஷனுக்கு சத்தியராஜ்ஜை விட உரோமம் கூட.. கழட்டினா புறா கூடு கட்டி விடும் என்று பயம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

நெஞ்சில் இந்த மனுஷனுக்கு சத்தியராஜ்ஜை விட உரோமம் கூட.. கழட்டினா புறா கூடு கட்டி விடும் என்று பயம் 

நல்லூர் கோயில் கோபுரத்தில் நிறைய புறா நிற்கிறது.
நீங்கள் சொன்னது நடந்து விடும் என்று, 
சட்டையை கழட்ட வேண்டாம் என்று,  மோடிக்கு...   "றோ"    எச்சரித்து இருக்கலாம். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.